மேஷம்

மேஷ ராசிநாதன் இம்மாதம் முழுவதும் 4-ல் நீசமாக இருக்கிறார். கடந்த மாதம் 15-ஆம் தேதிமுதல் 2-ல் உள்ள குருவும் வக்ரமாக செயல் படுகிறார். எனவே, எதிர்பாராத திடீர்செலவுகள் ஏற்படலாம். செய்முறைச் செலவு, மொய்ச் செலவு போன்றவற்றை சந்திக்கலாம். 2-ஆமிடத்தில் இருக்கும் குரு வக்ரமாக இயங்குவதால் குடும்பத்தில் சிலநேரம் வாக்குவாதங்களும், குழப்பங்களும், எதிர்காலம் பற்றிய கவலையும் தோன்றும். ராசிநாதன் செவ்வாய் நீசமாக இருந்தாலும் சனியின் சாரமான பூச நட்சத்திரத்தில் சஞ்சாரம்; சனியையும் பார்க்கிறார். பொதுவாக "மந்தன் சேய் பார்த்திடவும் தீது- சேர்ந்திடவும் தீது' என்பது பலதீபிகையின் விதி. நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் வண்டி திடீரென "பிரேக்' டவுனாகி நின்றுவிடுவது போல உங்கள் செயல்பாடுகளில் தேக்கம், மந்தம் போன்ற பலன்கள் ஏற்படும். அதை உடனடியாக சரிசெய்ய முடியாமல் இழுபறி நிலையும் உருவாகும். 13-ஆம் தேதிமுதல் 3, 6-க்குடைய புதன் வக்ரம் ஆரம்பம். சகோதரவகையில் மனக்கிலேசம் அல்லது வருத்தம் தரும் நிகழ்வுகள் உண்டாகும். தாய்மாமன் சம்பந்தப்பட்ட வகையிலும் சங்கடங்கள் தோன்றும். 5-க்குடைய சூரியன் 16-ஆம் தேதிமுதல் 8-ல் மறைவு. பிள்ளைகள்வகையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும், குரு 5-க்குடையவரைப் பார்ப்பதால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பதுபோல் தப்பிக்கலாம். செவ்வாய்க்கிழமை துர்க்கையம்மனுக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாதத்தின் முதல் வாரத்தில் 8-ல் மறைகிறார். கேதுவின் சாரமும், பிறகு சுயசாரமும் பெறுகிறார். ஜென்மத்தில் குரு வக்ரமாக இயங்கி 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எந்த செயல்பாட்டிலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் ஆமை வேகத்தில் செயல்படுவதால், முடிக்கமுடியாமல் திணறவேண்டிய நிலை. களத்திரகாரகன் மறைவதால் கணவன் அல்லது மனைவிவகையில் சில சங்கடங்கள் ஏற்படலாம். அல்லது கணவன்வழி உறவினர், மனைவிவழி உறவினர்களால் மனவருத்தமும், பொருளாதாரத் தொந்தரவுகளும் ஏற்படும். "காலைச் சுற்றிய பாம்பு கடித்த பாடுமில்லை; கழன்றுவிட்ட பாடுமில்லை' என்ற கதையாக ஓடு கிறது வாழ்க்கை. ஜென்மத்தில் வக்ரமாக குரு இருப்பதால் ஒருசிலருக்கு தேகநலனில் அல்லது குடும்பத்தினர்கள் உடல்நலனில் வைத்தியச் செலவுகள் உண்டாகும். பிள்ளைகள்வகையிலும் நல்லவை தள்ளிப்போகும். "எல்லா தெய்வங்களையும் வழிபட்டாச்சு; பிரார்த்தனைகளையும் நிறைவேற்றியாச்சு. இருந்தும் நன்மைகள் பெரிதளவில் அமையவில்லையே' என்ற விரக்தியும் பலநேரம் ஏற்படும். ஜனன ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால், வக்ரத்தில் உக்ரபலம் என்பதுபோல் எதிர்பாராத நன்மைகளும் உண்டாகும். பூர்வீக பூமி சம்பந்தமான சாதகப் பலனும் இம்மாதம் நல்ல தகவலாக வந்துசேரும். வெள்ளிக்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு நெய்தீபமேற்றி வழிபடவும். மதுரையில் திருப்பரங்குன்றம் அருகில் திருக்கூடல் மலையிலுள்ள சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

ss

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 6-ல் மறைவு. மற்ற கிரகங்களைப்போல் புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. என்றாலும் ஸ்தானபலன் என்று உண்டல்லவா? அதன்படி 6-ஆமிடம் என்பது ரோகம், ருணம், சத்ரு ஸ்தானமாகும். அங்கு சஞ்சரிக்கும் புதன் 13-ஆம் தேதிமுதல் வக்ரம் பெறுகி றார். வக்ரத்தில் உக்ர பலம். போட்டி, பொறாமையிலிருந்து சற்று நிவாரணம் பெறலாம். தேகநலத்தில் நீண்டநாள் இருந்துவந்த தொந்தரவுகள் குறையும். ஒருசிலர் கண் சம்பந்தப்பட்ட வகையில் லேசர் சிகிச்சைகளை சந்திக்கலாம். 4-ல் உள்ள கேது தாயாதிவழி உறவினர் களால் சங்கடங்களை ஏற்படுத்தலாம். 12-ல் வக்ரகதியில் இயங்கும் குரு வீண் அலைச்சலைத் தரலாம். ஒருசிலர் குடியிருப்பில் இடமாற்றத் தைச் சந்திக்கலாம். பூமி, வீடு வாங்குவது சம்பந்த மாகவோ அல்லது வாகன வகைக்காகவோ கடன் வாங்கும் அமைப்புகள் உருவாகும். 2-ஆமிடத்தில் சகோதரகாரகன் நீசம். பூர்வீக சொத்து சம்பந்தமாக உடன்பிறப்புகளுக்குள் ஒற்றுமையில்லாத சூழல் உருவாகும். ஒருவருக் கொருவர் வீட்டுக்கொடுக்க மனமில்லாமல் பிரச்சினைகள் உண்டாகும். பாக்கிய ஸ்தானாதிபதி சனி ஆட்சி. நியாயம் இருக்கும் பக்கத்தில் சாதகப்பலனை எதிர்பார்க்க லாம். பொன்னமராவதி- புதுக்கோட்டை பாதையில் செவலூரில் பூமிநாதசுவாமி கோவில் சென்று வழிபடவும். சிங்கம்புணரியில் வாத்தியாரய்யா ஜீவசமாதி சென்றுவழிபடவும்.

Advertisment

கடகம்

கடக ராசிக்கு அட்டமத்துச் சனி நடக்கி றது. இதில் சந்திர தசையோ, சந்திர புக்தியோ நடந்தால் பொருட்சேதம் அல்லது உயிர்ச்சேதத்திற்கு சமமான தொல்லை களை சந்திக்க நேரும். என்றாலும் குரு 11-ல் வக்ரமாக செயல்படுவதால் தொழில்வகை யிலோ, உத்தியோகத்தினருக்கோ முன்னேற்றகர மான அமைப்புகள் உருவாகும். 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் தைரியம், துணிச்சல் ஏற்பட்டாலும், உடன்பிறப்புகள் வகையில் மனநிம்மதியைக் குலைப்பார். சொத்துப் பிரச்சினை, அதனால் கௌரவப் பிரச்சினைகளை சந்திக்கும் நிலை. 5-ஆமிடத்தை குரு வக்ரகதியில் பார்ப்பதால் ஒருசிலருக்கு பிள்ளைகள்வகையில் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். 10-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் நீசம்பெறுகிறார். ஒருசில நேரம் தொழில் துறையில் மந்தப்போக்கு தென்படலாம்; ஆனால் தொய்வடையாது. ஜனன ஜாதகரீதியாக பாதகமான தசாபுக்திகள் நடந்தால் தந்தைக்கு கண்டங்கள் அல்லது வைத்தியச் செலவுகள் ஏற்படும். 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு கணவன்- மனைவி வகையில் ஒற்றுமையையும் ஆதரவையும் அதிகமாக்குவார். திருமண வயதையொட்டியவர்களுக்கு திருமண முயற்சி கைகூடும். ஜென்ம செவ்வாய் சனியின் சாரம் பெற்று சனியைப் பார்ப்பதால், காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் உண்டாகும். திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

சிம்மம்

Advertisment

சிம்ம ராசிநாதன் சூரியன் மாதமுற்பாதிவரை 3-ல் மறைவு. நீசம். ராசிநாதன் மறைவதால் உங்களது காரியங்கள், முயற்சிகளை முழுமையாகப் பூர்த்திசெய்ய இயலாத நிலை! 2-ஆமிடத்துக் கேதுவால் குடும்பத்தில் நிம்மதியற்ற சூழல், கருத்து வேறுபாடு அல்லது கணவர்- மனைவிக்கு உடல்நலக் குறைவு போன்றவற்றை சந்திக்கலாம். 9-க்குடைய செவ்வாய் 12-ல் நீசம் பெறுவதுடன் மறைவும் பெறுகிறார். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக ஒருசிலர் வழக்கு வியாஜ்ஜியங் களை எதிர்கொள்ள நேரிடும். வேறு சிலர் உற்றார்- உறவினர்களால் ஒதுக்கப்பட்டு யாருமில்லாத அனாதைபோல் செயல் படும் நிலை! "எல்லாம் இருந்தும் எதுவுமில்லாததுபோல்' என்று சொல்வார்களே, அதுமாதிரிதான்! 10-ல் குரு வக்ரம். தொழில்துறையில் பின்னடைவு அல்லது வேறொருவரை நம்பி பொறுப்புகளைக் கொடுத்து ஏமாறும் நிலை போன்றவற்றைச் சந்திக்க நேரும். மாதப் பிற்பாதியில் தகப்பனார் காரகனும், ராசிநாதனுமான சூரியனை குரு வக்ரகதியில் பார்ப்பதால், தந்தை வழியிலும் ஒத்துழைப்பில்லா மல் ஒதுங்குவார்கள். திடீர் திடீரென்று வைத்தியச் செலவுகள் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் தேவை! அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். சித்தர்கள் கிரகத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எனவே சித்தர்களின் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

கன்னி

கன்னி ராசிக்கு ஜென்ம கேது, சப்தம ராகு. "தவளை தன் வாயால் கெடும்' என்ற பழமொழிக்கேற்ப, உங்கள் வாய்தான் உங்களுக்கு எதிரி. உங்கள் வார்த்தைகள் அடுத்தவரை காயப்படுத்தும்படியான சூழ்நிலைகளை உருவாக்கும். எனவே நாவடக்கம் மிக முக்கியம். அதேபோல நல்லது சொன்னாலும் பொல்லாப்பாக முடியும் என்பதுபோல, அதுவும் உங்களுக்கு எதிராகத் தான் அமையும். மௌனமே சிறந்த மருந்து! 12-க்குடைய சூரியன் 2-ல் நீசம். பொருளாதாரத் தட்டுபாடு உண்டாகும். வரவு வரும்; செலவு அதைமீறி வரும். 5-ஆமிடத்தை குரு வக்ரகதியில் நின்று பார்ப்பதால் உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த முடியாது. பிள்ளைகள் பற்றிய கவலையும் மனதை வருத்தத்தில் ஆழ்த்தும், நாம் அனுபவிக்கும் பலன்கள் பூர்வ ஜென்ம வினையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. அதுதான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற மொழியாக அமைகிறது. ராசிநாதன் 3-ல் வக்ரகதியில் 13-ஆம் தேதிமுதல் செயல்படுகிறார். குருவும் வக்ர கதியில் பார்க்கிறார். ராகு தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் ஏற்படலாம். கணவர் அல்லது மனைவிவழி உறவினர்களால் இழப்புகள் உண்டாகலாம். முன்ஜென்ம வினை தீர, திருவாரூர்- மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையம்மனுக்கு நெய்தீபமேற்றவும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் வாரத்தொடக்கத்தில் 2-ல் புதன் சாரத்தில் சஞ்சாரம். புதன் 12-க்குடையவர். ஆக நூறு ரூபாய் வரவு வந்தால் இருநூறு ரூபாய் செலவு தயாராக உள்ளது. சேமிப்பு என்பது கானல் நீராக செயல்படுகிறது. 9-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 3-ஆமிடமான தனுசு ராசிக்கு மாறுகிறார். சுக்கிரனும் குருவும் பரிவர்த்தனை. சகோதரவகையில் சகாயமும் இல்லை. அனுகூலமும் இல்லை. அதேநேரம் மனைவி வழியில் உதவி ஒத்தாசைக்கு இடமுண்டு. 11-க்குடைய சூரியன் 16-ஆம் தேதிமுதல் நீசம் விலகி 2-ஆமிடத் துக்கு மாறி வக்ரம்பெற்ற குருவின் பார்வையைப் பெறுகிறார். தொழில்வகையில் நம்பி செயல்பட்ட காரியங்கள் திருப்தியளிக்கும் சாதகமான சூழல் உருவாகும். 12-ல் உள்ள கேது அதிக அலைச்சலைத் தந்தாலும், ஆதாயமாவது முழுப்பலனைத் தருமா என்றால் அது கேள்விக்குறிதான். 8-ல் வக்ரம்பெற்ற குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதால், சிலநேரம் வரவேண்டிய பாக்கிசாக்கிகள் இழுபறியாக இருக்கும். 5-ஆமிடத்து சனி திட்டங்களில் வெற்றியைத் தருவார். 4-ஆம் தேதிமுதல் சனி வக்ரநிவர்த்தி பெறுவதால் நற்பலன் தருவார். சிலநேரம் தேகநலம் பாதிக்கப்படலாம். குரு 4-ஆமிடத்தைப் பார்ப்பதும் பலம்! வெள்ளிக்கிழமை சக்கரத்தாழ்வாரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபடவும். கரூர் அருகில் நெரூரில் சதாசிவப் பிரம்மேந்திராள் ஜீவசமாதியை வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீசம். சனியின் சாரத்தில் சஞ்சாரம். 10-க்குடைய சூரியனும் 12-ல் மறைவு, நீசம். எனவே நாம் நினைத்த காரியம் நடைபெறாமல் தள்ளிப்போகும். தேகநலத்தில் பாதிப்புகள் உண்டாகும். ஒரு நேரம் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும், ஒரு நேரம் மந்தமாக செயல்படும் சூழ்நிலை அமையும். 7-ல் குரு வக்ரமாக இருக்கிறார். திருமணமான தம்பதிகளுக்குள் ஒற்றுமை இருந்தாலும் சச்சரவு ஓயாது. கணவன் அல்லது மனைவிக்கு காரண காரியமில்லாத மருத்துவச் செலவுகள் ஏற்படும். திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும். ஆண்- பெண்களுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். ராசிநாதன் செவ்வாய் நீசமடைந்து 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். சிலர் உத்தியோகரீதியாக இடமாற்றத்தை மேற்கொண்டால் அது பலன் தரும். அல்லது குடியிருப்பு மாற்றம் உண்டாகும். மாதப் பிற்பாதியில் 10-க்குடைய சூரியன் ஜென்மத்தில் மாறி குருபார்வையைப் பெறும் காலகட்டம், புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். 4-ஆமிடத்து சனி அஷ்டமத்தில் பாதி என்பதால், அஷ்டமச்சனி தொந்தரவுகளில் பாதி அளவாவது உண்டாக்கும். தேகநலம் பெற பேராவூரணி (பட்டுக்கோட்டை) அருகில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் மருந்துப்பள்ளம் சென்று வழிபடலாம். அல்லது ஐந்து திங்கட்கிழமை சோமவார பூஜைக்கு கட்டணம் செலுத்தலாம். தொடர்புக்கு சிவமணி குருக்கள்: 94451 52424.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 6-ல் மறைவு; வக்ரம். பொதுவாக வக்ரம்பெறும் கிரகங்கள் நிற்கும் இடத்தையோ அல்லது பார்க்கும் இடத்தையோ பாதிக்கச் செய்யும் என்பது ஜோதிடவிதி. இங்கு 6-ல் வக்ரமாக இருப்பதால் போட்டி, பொறாமை களை வலுவிழக்கச் செய்வார். 2-ஆமிடத் தைப் பார்ப்பதால் தனவரவும் தாராள மாக இருக்கும். 12-ஆமிடத்தைப் பார்ப்ப தால் செலவும் தாராளமாக அமையும். ஜனன ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் ஒருசிலருக்கு மருத்துவச் செலவு அல்லது அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாக லாம். 3-ஆமிடத்து சனி தைரியத்தைக் குறைவில்லாமல் தருவார். 9-க்குடைய சூரியன் 11-ல் இருந்தாலும் நீசமாக சஞ்சரிப்பதால் தந்தைவழிச் சொத்து சம்பந்தமாக எந்த முடிவெடுத்தாலும் பலன் தராமல் இழுபறிநிலை உண்டாகும். அதேசமயம் நியாயம் எந்தப்பக்கம் உள்ளதோ அதன்படி நடந்துகொள்வதே உங்களுக்கும் நன்மை தரும். கேட்பார் பேச்சைக் கேட்டுத் தெளிவில்லாமல் செயல்படுவதைவிட சிந்தித்து செயல்படுவது நற்பலனை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒருசிலருக்கு கால் அல்லது இடுப்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். 5-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவு, நீசம். உங்கள் திட்டத்தின்மீது உங்களுக்கே சந்தேகமும் திருப்தியற்ற சூழ்நிலையும் உருவாகும். வியாழக்கிழமை நவகிரக குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும். சவனம் பட்டியில் ஜோதி மௌன குருசுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.

மகரம்

மகர ராசிக்கு ஏழரைச்சனி ஒருபுறம்; 5-ல் நிற்கும் குரு வக்ரம் ஒருபுறம். 7-ல் உள்ள செவ்வாய் நீசம்; 10-ல் சூரியன் நீசம். ஆக, "எந்தப்பக்கம் திரும்பினாலும் அணைக்கட்டுகிறார்களே' என்று நடிகர் வடிவேலு சொன்னதுபோல கிரகங்கள் உங்களை எல்லா பக்கமும் சுழற்றியடிக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். 2-ல் சனி ஆட்சி என்றாலும், வாக்கு சனி கோப்பைக் குலைக்குமல்லவா! கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராடவேண்டிய நிலை! சில சமயம் நல்லதற்காக சொன்னாலும் அதிலும் குற்றம் குறை ஏற்படும் நிலை. தன்னைமீறி கோபத்தையும் டென்ஷனையும் சந்திக்க வேண்டிய காலகட்டம். எடுக்கும் முயற்சிகள், போடும் திட்டங்களில் தோல்விகளை எதிர்கொள்ளும் சூழல். இவையெல்லாம் சேர்ந்து நம்மீது நமக்கே வெறுப்பை உண்டாக்கும். வக்ர குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் திடீர் திடீரென வைத்தியச் செலவுகளை சந்திக்க நேரும். நீச செவ்வாய் நீச சூரியனைப் பார்ப்பதால் நீசபங்க ராஜயோகம் ஏற்படும். மனைவிவழியில் உதவி ஒத்தாசை உண்டாகும். மாதப் பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பது ஒரு ஆறுதல். திடீர் தனவரவு ஏற்படவும் வாய்ப்புண்டு. கடைசி நேரத்தில் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். ஏழரைச்சனியின் கடைசிக்கூறு நன்மை- தீமை இரண்டையும் கலந்து தரும். சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றியும், ஆஞ்சனேயருக்கு நெய்தீபமேற்றியும் வழிபடவும்.

குடும்பம்

கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. 4-ஆம் தேதிமுதல் சனி வக்ர நிவர்த்தியாகி றார். அது பாதிக்கிணறு தாண்டிய நிலை! என்றாலும் கடந்த மாதம் 15-ஆம் தேதிமுதல் 2-க்குடைய குரு 4-ல் வக்ரம் பெற்றார். 4-ஆமிடம் வீடு, வாகனம், தேகசுகம், தாயார் ஸ்தானம். அங்கு வக்ரமாகும் குரு அந்த ஸ்தானப் பலன்களில் பாதிப்பை ஏற்படுத்துவார். தாயார் சுகம் பாதிக்கப்படலாம். நீங்கள் வைத்தியச்செலவுகளை சந்திக்கலாம். சிலருக்கு கால் சம்பந்தமான சங்கடங்கள் ஏற்படும். சிலருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகும். ஏழரைச்சனியில் சந்திர தசையோ, சந்திர புக்தியோ நடந்தால் கவனமுடன் இருப்பது அவசியம். 3-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்தாலும் நீசமும் பெறுகிறார். ஜென்ம ராசியிலுள்ள சனியைப் பார்க்கிறார். உடன்பிறந்த சகோதர- சகோதரி களால் மனவருத்தம் உண்டாகும். கொடுக்கல்- வாங்க-லும் சிக்கல், சிரமங்கள் ஏற்படும். 9-ல் சூரியன் நீசம். தகப்பனார்காரகன் தகப்பனார் ஸ்தானத்தில் இருப்பது தோஷம். தந்தைக்கு உடல்நலம் பாதித்தாலும் பிரச்சினைக்கு இடமிருக்காது. 2-ஆமிடத்து ராகு குடும்பத்திலும் நிம்மதியற்ற சூழ்நிலைகளை உருவாக்கும். சிலர் கண் சம்பந்தமான உபாதைகளில் தொல்லைகளை அனுபவிக்க நேரும். திருவள்ளூர்- திருத்தணி பாதையில் ஆற்காடுகுப்பம் பகுதியில் அனுமந்தராய சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. அங்கு சென்று வழிபடவும்.

மீனம்

மீன ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி. ஜென்ம ராகு- சப்தம கேது. ராசிநாதன் குரு 3-ல் வக்ரம். 2-க்குடைய செவ்வாய் 5-ல் நீசம். 8-ல் சூரியன் நீசம். இத்தனை விஷயங்களைத் தாண்டி நன்மைகள் நடந்தால் அது இறைவனின் அனுக் கிரகம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். என்றாலும் குரு வக்ரகதியில் 11-ஆமிடத்தைப் பார்ப்பதால், ஒருசில செயல்பாடுகளில் உங்களை யறியாமலேயே சாதக நிலை ஏற்படும். ராகு- கேது கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, வாக்குவாதம் உண்டாக்கலாம். 12-ல் சனி. விரயஸ்தானம் என்பதால் திடீர் விரயம் உண்டாகும். 6-க்குடைய சூரியன் 8-ல் மறைவு, நீசம். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்திகள் நடந்தால் தந்தைக்கு கண்டம் போன்ற பலன்கள் ஏற்படலாம். 4-க்குடைய புதன் 9-ல் வக்ரம்; அவருக்கு வக்ரகுருவின் பார்வை. வாகன மாற்றம் அல்லது குடியிருப்பில் புதிய வீடு வாங்கும் அமைப்பும் ஏற்படலாம். 10-க்குடைய வர் 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். 9-க்குடையவர் 5-ல் திரிகோணம் ஏறுவதால் பிள்ளைகள்வகையில் நல்லவை நடக்கும். அதனால் மனதிலும் திருப்தி நிலவும். எதிர்பாராத தனவரவுக்கு இடமுண்டு. வீண் அலைச்சலுக்கும் இடமுண்டு. காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் மிளகு தீபமேற்றி வழிபடவும். நாமக்கல் அருகே சேந்தமங்கலம் சென்று ஸ்வயம்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதியையும், சனீஸ்வரர் மற்றும் ஆஞ்சனேயரையும் வழிபடவும்.

செல்: 99440 02365