மேஷம்
மேஷ ராசிக்கு கடந்த மாதம் ஜென்ம ராசியில் நின்ற ராகு 12-ல் மாறியது ஒருவகையில் நன்மைதான் என்றாலும் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரமாக இயங்குகிறார். மழைவிட்டும் தூறல்விடவில்லை என்பது பிரச்சினைகள் முழுமையாக விலகவில்லை என்பதுதான் உண்மை. உடல்நலத்திலும் மருத்துவச் செலவுகள் முழுமையாக விலகவுமில்லை. ராசிநாதன் செவ்வாய் 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது ஒரு ஆறுதல். 17-ஆம் தேதிக்குப்பிறகு சூரியனும் நீச கதியிலிருந்து விலகுவதால் கணவன்- மனைவிவகையில் ஒற்றுமைகள் அதிகரிக்கும். தகப்பனார் வழியிலுமிருந்த மனக்கசப்புகள் விலகும். 2-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவு, நீசம். எனவே பொருளாதார நிலையில் சிறுசிறு சங்கடங்களையும் பற்றாக்குறைகளையும் சந்தித்தாலும் கடைசி நேரத்தில் தேவைகள் பூர்த்தியாகும். 12-லுள்ள ராகு வெளியூர் அல்லது வெளிமாநில உத்தியோகத்திற்கு வழிவகுப்பார். வெளிநாட்டு முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கும் பலன் தரும்வகையில் அமையும். வேலையில் சுமைகள் அதிகமாக இருந்தாலும் நன்மதிப்பும் பாராட்டும் உண்டாகும். போட்டி, பொறாமை கள் விலகும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் 5-ல் திரிகோணம் பெற்றாலும் நீசமாக இருக்கிறார். ராகுவின் பார்வையையும் பெறுகிறார். உங்களது எண்ணங்களிலும் திட்டங்களிலும் நிறைவேற்ற முயற்சித்த செயல்பாடுகளில் சற்று தாமத நிலைகளைச் சந்திக்கலாம். 12-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்தாலும் 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் செலவுக்கு குறைவில்லை. குரு 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் கடன் வாங்குவதிலும் பஞ்சமில்லை. என்றாலும் 10-க்குடைய சனி 9-ல் நிற்பதால் தர்மகர்மாதிபதி யோகத்தின்மூலம் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய சூழ்நிலை! கணவர்வழி உறவுகளால் சுபச் செலவுகளுக்கு இடமுண்டு. தம்பதிகளுக்கிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைகள் பாதிக்காது. இது 7-ஆமிடத்தைக் கேது பார்ப்பதன் பலன். அதேசமயம் திருமண முயற்சிகள் செய்யும் ஆண்- பெண்களுக்கு முயற்சிகள் கைகூடும். தகப்பனார்காரகன் சூரியன் 6-ல் மறைவு, நீசம். தந்தைக்கு உடல்நலக்குறைவும் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். குருபார்வையால் கண்டங்களுக்கு இடமில்லை. 3-ஆமிடத்தைப் பார்க்கும் கேது தைரியம் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவார்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 6-ல் மறைவு. மறைந்த புதன் நிறைந்த தனம் என்பது பழமொழி. ஆனாலும் இங்கு ராசிநாதன் என்பதால் சற்று காரிய தாமதம், முயற்சியில் பின்னடைவு போன்றவற்றை
மேஷம்
மேஷ ராசிக்கு கடந்த மாதம் ஜென்ம ராசியில் நின்ற ராகு 12-ல் மாறியது ஒருவகையில் நன்மைதான் என்றாலும் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரமாக இயங்குகிறார். மழைவிட்டும் தூறல்விடவில்லை என்பது பிரச்சினைகள் முழுமையாக விலகவில்லை என்பதுதான் உண்மை. உடல்நலத்திலும் மருத்துவச் செலவுகள் முழுமையாக விலகவுமில்லை. ராசிநாதன் செவ்வாய் 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது ஒரு ஆறுதல். 17-ஆம் தேதிக்குப்பிறகு சூரியனும் நீச கதியிலிருந்து விலகுவதால் கணவன்- மனைவிவகையில் ஒற்றுமைகள் அதிகரிக்கும். தகப்பனார் வழியிலுமிருந்த மனக்கசப்புகள் விலகும். 2-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவு, நீசம். எனவே பொருளாதார நிலையில் சிறுசிறு சங்கடங்களையும் பற்றாக்குறைகளையும் சந்தித்தாலும் கடைசி நேரத்தில் தேவைகள் பூர்த்தியாகும். 12-லுள்ள ராகு வெளியூர் அல்லது வெளிமாநில உத்தியோகத்திற்கு வழிவகுப்பார். வெளிநாட்டு முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கும் பலன் தரும்வகையில் அமையும். வேலையில் சுமைகள் அதிகமாக இருந்தாலும் நன்மதிப்பும் பாராட்டும் உண்டாகும். போட்டி, பொறாமை கள் விலகும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் 5-ல் திரிகோணம் பெற்றாலும் நீசமாக இருக்கிறார். ராகுவின் பார்வையையும் பெறுகிறார். உங்களது எண்ணங்களிலும் திட்டங்களிலும் நிறைவேற்ற முயற்சித்த செயல்பாடுகளில் சற்று தாமத நிலைகளைச் சந்திக்கலாம். 12-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்தாலும் 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் செலவுக்கு குறைவில்லை. குரு 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் கடன் வாங்குவதிலும் பஞ்சமில்லை. என்றாலும் 10-க்குடைய சனி 9-ல் நிற்பதால் தர்மகர்மாதிபதி யோகத்தின்மூலம் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய சூழ்நிலை! கணவர்வழி உறவுகளால் சுபச் செலவுகளுக்கு இடமுண்டு. தம்பதிகளுக்கிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைகள் பாதிக்காது. இது 7-ஆமிடத்தைக் கேது பார்ப்பதன் பலன். அதேசமயம் திருமண முயற்சிகள் செய்யும் ஆண்- பெண்களுக்கு முயற்சிகள் கைகூடும். தகப்பனார்காரகன் சூரியன் 6-ல் மறைவு, நீசம். தந்தைக்கு உடல்நலக்குறைவும் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். குருபார்வையால் கண்டங்களுக்கு இடமில்லை. 3-ஆமிடத்தைப் பார்க்கும் கேது தைரியம் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவார்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 6-ல் மறைவு. மறைந்த புதன் நிறைந்த தனம் என்பது பழமொழி. ஆனாலும் இங்கு ராசிநாதன் என்பதால் சற்று காரிய தாமதம், முயற்சியில் பின்னடைவு போன்றவற்றை சந்திக்க வேண்டிய நிலை. 3-க்குடைய சூரியன் 5-ல் நீசம். குருவின் பார்வையும் அவருக்கு கிடைப்பதால் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இழுபறி சூழல் ஏற்பட்டு பிறகு நிறைவேறும். 3-ஆமிடத்தைக் குரு வக்ரகதியில் நின்று பார்ப்பதால் உடன்பிறந்தவழியில் மங்களச் செலவுகள் வரும். அதேசமயம் மனவருத்தங்களும் உண்டாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் விட்டுக்கொடுத்து முடிவெடுப்பது, உறவுவகையிலும் விரிசல்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமைக்கும் அன்புக்கும் குறைவு வராது. 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆண் அல்லது பெண்களுக்கு திருமண வாய்ப்பு கூடும். திருமணமான தம்பதிகளுக்கு 5-ஆமிடத்தை குரு பார்ப்பதால் புத்திர யோகம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டத்திற்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
கடகம்
கடக ராசிக்கு குரு வக்ரமாக 10-ல் சஞ்சாரம். அவர் 9-க்கும் உடையவராதலால் 10-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். உத்தியோகம், வேலையில் புதிய வாய்ப்புகள் வந்துசேரும். 2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தனவரவையும் உண்டாக்குவார். 2-க்குடையவர் 4-ல் நீசம் பெறுவதால் வாகனவகையில் செலவுகள் ஏற்படும். 4-ல் உள்ள செவ்வாயைக் குரு பார்ப்பதால் கட்டடம், வீடு போன்றவற்றில் சீர்திருத்த வேலைபாடுகள் தோன்றும். வரவும் செலவும் சரிசமமாக நிகழும் என்பதால் சேமிப்புக்கு இடமில்லையே என்ற மனவருத்தம் உண்டாகும். என்றாலும் தொழில்துறையினருக்குத் தொழில் இயக்கம் தடைப்படாது. 4, 11-க்குடைய சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் கன்னி (3-ஆமிடம்) நீசம் பெறுகிறார். ஒருசில காரியங்களை போராடித்தான் முடிக்கவேண்டியதிருக்கும். 7-ல் சனி நிற்பதாலும் ராகு அவரைப் பார்ப்பதாலும் கணவன் அல்லது மனைவிக்கு மருத்துவச் செலவுகள் உண்டானாலும் பெரிய பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது. 9-ஆமிடத்து ராகு ஆன்மிக ஞான உபதேசத்திற்கு வழிவகுப்பார்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் நீசம். 3-ஆமிடம் மறைவு ஸ்தானம். உங்கள் முயற்சிகளில் தேக்கம். எந்தச் செயல்பாடும் முழுமை பெறாத நிலைபோன்ற பலன்களால் சங்கடங்கள் நேரும். இம்மாதம் 17-ஆம் தேதிமுதல் சூரியன் நீசம் தெளிந்து கேந்திரத்தில் (4-ஆமிடம்) மாறுவார். அதன்பிறகு படிப்படியான ஏற்றங்கள் ஏற்படும். அதுவரை சாண் ஏற முழும் வழுக்கிய நிலையைத்தான் சந்திக்க வேண்டியதிருக்கும். 9-ல் குரு நின்று ராசியைப் பார்த்தாலும் வக்ரகதியில் செயல்படுவதால் ஒருசில நேரம் வேகத்துடனும் ஒருசில நேரம் மந்தமாகவும் இருக்க நேரிடும். 10-க்குடைய சுக்கிரனும் இம்மாதத் தொடக்கத்திலேயே 2-ல் நீசம்பெறுகிறார். உத்தியோகம், வேலை இவற்றில் எதிர்பாராத நெருக்கடியைச் சந்தித்தாலும் குரு ராசியைப் பார்ப்பதால் சமாளித்துவிடலாம். 2-ல் உள்ள கேது குடும்பத்தில் சில சச்சரவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தினாலும் ராகுவும் 2-ஆமிடத்தைப் பார்க்கும் காரணத்தால் தீர்வும் உண்டாகும். கேது ஏற்படுத்தும் காயத்துக்கு ராகு மருந்து போடுவார். மாதக் கடைசியில் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் இம்மாதம் முழுவதும் 3-ல் சஞ்சாரம். 12-க்குடைய சூரியன் 2-ல் நீசம் பெறுகிறார். நவம்பர் 17 வரை 2-ல் சஞ்சாரம். 8-ல் வக்ர கதியில் இருக்கும் குரு 12-ஆமிடத்தையும் பார்க்கிறார். 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். எனவே தனவரவுக்கும் இடமுண்டு. தாராள செலவுக்கும் இடமுண்டு. ஜென்மத்திலுள்ள கேது அலைச்சல், திரிச்சல்களைத் தருவார். உடல்நலத்திலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். 7-ல் உள்ள ராகு திருமணத்தடையை ஏற்படுத்துவார். கணவன்- மனைவிக்குள் ளும் ஒற்றுமைக் குறைவை உண்டாக்குவார். விட்டுக் கொடுத்து அமைதி காத்து அனுசரித்துச் சென்றால் வாக்குவாதம் வராமல் தடுக்கலாம். 5-ஆமிடத்துச் சனி பிள்ளைகள்வகையில் கவலைகளையும் சங்கடங்களையும் தந்தாலும் 5-ஆமிடத்தை ராகு பார்ப்பதால் அதற்கு தீர்வும் உண்டாகும். சகோதரகாரகன் செவ்வாயைப் பார்க்கும் குரு உடன்பிறந்தவகையில் சுபமங்களச் செலவுகளை தருவார். அவர்களுக்கு நன்மையான பலன்கள் ஏற்படுவதால் மனதுக்கும் ஒரு ஆறுதல் உண்டாகும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் இம்மாதத் தொடக்கத்திலேயே 12-ல் மாறுகிறார். மறைவு பெறுவதோடு நீசமும் அடைகிறார். கடந்த மாதம் ராகு- கேது பெயர்ச்சியினால் ஜென்மத்தில் இருந்த கேது 12-ல் மாறியதால் ஏற்படும் நற்பலன்களை உணர்வதற்குள் ராசிநாதன் 12-ல் மறைவதால் நன்மையின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. முயற்சிகளில் தோல்வி, காரியங்களில் தாமதம் இவற்றால் மன தைரியமும் நம்பிக்கையும் படிப்படியாகக் குறைகிறது. 7-ல் குரு நின்று ராசியைப் பார்ப்பதால் இறைநம்பிக்கையும் வழிபாடும் உங்களை வழிநடத்துகிறது. 6-ல் உள்ள ராகு சத்ருவகையில் ஏற்படும் சங்கடங்களைப் போக்குவார். 2-க்குடைய செவ்வாயை குரு பார்ப்பதால் தனவரவு ஏற்படும். 12-ஆமிடத்துக் கேது ஒருசிலருக்கு வெளியூர் வேலை இடமாற்றங்களைத் தருவார். அது நன்மை தரும் மாற்றமாகவும் அமையும். வெளிநாடு உத்தியோகரீதியாக முயற்சிப்பவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 11-ல் உள்ள செவ்வாயையும் 2-க்குடைய குரு 6-ல் நின்று பார்க்கி றார். பொருளாதாரப் பற்றாக்குறை ஒருபுறம், வீண் விரயம் ஒருபுறம், காரியத் தடைகள் ஒருபுறம், தொழில்துறையில் பிரச்சினைகள் ஒருபுறம் என்று நாலாபுறமும் நின்று சுற்றி சுற்றி அடிக்கிறது. ஆனாலும் ராசிநாதனை குரு பார்ப்பதாலும், 3-ல் சனி நிற்பதாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் தன்னம்பிக்கையும் குறையவில்லை. 5-ஆமிடத்து ராகு மனதில் சிலநேரம் எண்ணங்களில் சந்தேகத்தை எழுப்பலாம். கேது பார்ப்பதால் அவற்றை ஈடேற்றுவார். 5-க்குடைய குரு 6-ல் வக்ரமாக இருப்பதால் பிள்ளைகள்வகையில் நடைபெறவேண்டிய நல்ல காரியங்கள் தள்ளிப்போகலாம். உத்தியோகம் அல்லது வேலையில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளினால் சங்கடங்கள் உருவாகும். மனைவி யின் தேகநலனில் அக்கறை காட்டுவது அவசியம்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 5-ல் திரிகோணமாக நின்றாலும் வக்ரமாக இருக்கிறார். ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடக்கிறது. இந்த ஏழரைச் சனியில் முற்கூறில் கவலை, பிரச்சினை, ஏமாற்றம், இழப்பு போன்றவற்றை சந்தித்தவர்களுக்கு பிற் கூறில் சனி நலன்களையும் வளங்களை யும் தருவார். முற்கூறில் வசதி வாய்ப்பு களோடு ஆடம்பரமாகத் திரிந்தவர்களுக்கு பிற்கூறு ஏழரைச்சனி வாட்டி வதைத்துக் கொண்டிருப்பார். இதில் ஜனன ஜாதக தசாபுக்திகளும் நன்மை- தீமைகளுக்கு ஒரு காரணமாக அமைகிறது. 4-ல் ராகு, 10-ல் கேது நன்மைதான் என்றாலும், ராசிநாதன் வக்ரம் பெற்று ராசியைப் பார்ப்பதால் அசதி, மந்தம், மருத்துவச் செலவு போன்றவற்றைச் சந்திக்க நேரும். சூரியன் 11-ல் நீசம் என்றாலும் குரு வக்ரம் பெற்று பார்ப்பதால் பூர்வீகச் சொத்து சம்பந்தமாக நற்பலன்கள் ஏற்படும். ஒருசிலருக்கு உத்தியோக ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும்.
மகரம்
மகர ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. என்னதான் அவர் ராசிநாதன் என்றாலும் ஏழரைச்சனி நடக்கிற தல்லவா! பெரிய நன்மைகளைத் தரவில்லை யென்றாலும் பெரியதளவு கெடு பலன் களையும் தரமாட்டார் என்பதே உண்மை! ஒருசிலருக்கு சனி 2-ல் மாறும்போது இடமாற்றம் அல்லது ஊர்மாற்றத்தை ஏற்படுத்தலாம். 3-ல் வந்திருக்கும் ராகுவும் அவரைப் பார்க்கும் கேதுவும் தைரியம், தன்னம்பிக்கை, நண்பர்களினால் ஆதரவு போன்ற பலன்களைத் தருவார்கள். ஆன்மிகச் சுற்றுலா அல்லது குரு உபதேசம் போன்ற ஞான சிந்தனைகள் கிடைக்கபெறலாம். 8-க்குடையவர் சூரியன் 10-ல் நீசம் பெற்றாலும் குரு பார்வையைப் பெறுகிறார். அது வேலையில் ஆறுதலையும் தேறுதலையும் தரும். 10-க்குடைய சுக்கிரன் 9-ல் மாறியது தர்மகர்மாதிபதி யோகம் என்றாலும் அவர் நீசத் தன்மை அடைவதால் வாழ்க்கை, தொழில் இரண்டடிலும் சிற்சில சங்கடங்களை சந்திக்கநேரும். 17-ஆம் தேதிமுதல் சூரியன் 11-ல் மாறுவார். அதன்பிறகு லாபம், முன்னேற்றம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைவு. ஆட்சியும்கூட! ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங் களுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. ஆனால் அவர் விரயாதிபதியுமாகிறார் அல்லவா! அங்கு தான் கும்ப ராசிக்காரர்களில் நிலை அனுதாபத்திற் குரியதாக அமைகிறது. தற்போது 2-ல் வந்திருக்கும் ராகுவும் குடும்பத்தில் அமைதிக்குறைவை உண்டுபண்ணும். 3-ல் குரு வக்ரம். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளால் மன வருந்தும்படியான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். 3-ல் குரு நின்று 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் திருமண முயற்சிகள் செய்யும் ஆடவர்க்கும் பெண்களுக்கும் முயற்சிகள் கைகூடும். 7-க்குடையவரையும் குரு பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் அன்பு குறையாது. 12-ல் உள்ள சனி 2-ஆமிடத் தைப் பார்ப்பதால் தனவரவுக்கும் வழி யுண்டு; தாராள செலவுக்கும் வாய்ப்புண்டு. 8-ஆமிடத்துக் கேது திடீர் அதிர்ஷ்டத்தை தரலாம். வண்டி, வாகனங்களில் சற்று எச்சரிக்கை யுடன் செயல்படுவது நல்லது. தந்தை உடல்நலனில் கவனம் தேவை.
மீனம்
மீன ராசியில் ஜென்மத்தில் ராகுவும் 7-ல் கேதுவும் கடந்தகாலம் மாறியிருக்கிறார் கள். தேவையற்ற அலைச்சல், ஆதாயமற்ற திடீர் பயணம் போன்றவை ஏற்படலாம். 2-ல் குரு வக்ரம் பெற்று 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் ஓட்டம் பாதிக்காது. அதேநேரம் சொல்-க்கொள்ளும்படியான வருவாயும் இல்லை. களஸ்திரகாரகன் சுக்கிரன் 7-ல் நீசம் பெறுவதாலும், 7-ல் கேது இருப்பதாலும் திருமணத்தடை அல்லது தாமதங்களை சந்திக்க நேரும். கணவன்- மனைவிக்கிடையேயும் வாக்குவாதம், சச்சரவு உண்டாகும். 6-க்குடைய சூரியன் 8-ல் மறைவது நல்லதுதான். "கெட்டவன் கெட்டிடில் கிட்டும் யோகம்' என்பதற்கிணங்க கடன் சுமைகள் சற்று குறையும். புதிய கடனும் உருவாகும். குரு 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் மேற்கண்ட பலன். 11-ல் சனி நின்று ஜென்ம ராசியைப் பார்ப்பதால் திறம்படச் செயல்படும் வாய்ப்புகள் அமையும். உங்கள் நேர்மையும் வெளிப்படும்.
அலைபேசி: 99440 02365