மீனாட்சியின் திருவருள் பெற்ற நீலகண்ட தீட்சிதர்! -மும்பை ராமகிருஷ்ணன்

/idhalgal/om/neelakanda-dixithar-who-was-blessed-by-meenakshi

தீட்சிதர் என்றாலே நால்வர் ஞாபகத்திற்கு வருவர். முதலாமாவர்கள் சிதம்பரம் நடராஜரைப் பூஜிக்க சிவனே அனுப்பியதாகச் சொல்லப்படும் 3,000 தீட்சிதர்கள். இன்றும் அவர்களின் வம்சத்தினரே பூஜை செய்கின்றனர்.

அடுத்தவர் கோவிந்த தீட்சிதர். மிகப்பெரிய சாஸ்திர வித்தகர். இன்றும் அவர் ஆரம்பித்து நடத்திய வேதசாலை கும்பகோணத்தில் உள்ளது. அவர் பெயராலேயே கோவிந்தபுரம் கிராமம், ஐயன்பேட்டை என, கும்பகோணம் கோவில்கள் சீர்திருத்தம், மாசிமகம் என சீர்திருத்தம் செய்தவர். நினைத்து வணங்கப்பட வேண்டியவர்.

அடுத்தவர் சிவபக்தர் அப்பைய தீட்சிதர். அத்வைதத் திற்கு பல கிரந்தங்கள், துதிகள் செய்து, சிதம்பரம் நடராஜரி லேயே ஐக்கியமானவர். அவரது காலம் 1520- 1598.

சங்கீதம் அறிந்தவர்கள் முத்துசாமி தீட்சிதரை அறிவார்கள். அவர் காலம் 1775- 1825. அவர் ஸ்ரீவித்யா உபாசகர்.

meenakshi

நாம் இப்போது சிந்திப்பது அப்பைய தீட்சிதரின் வம்சாவளியான நீலகண்ட தீட்சிதர் பற்றி. சிவ- சக்தி துதிப் பிரியர். இவரது காலம் 1582 முதல் 1638 வரை என சொல்லப் படுகிறது. சரியாகத் தெரியவில்லை. அவரது வம்சாவளிகள் எல்லாரும் மகான்கள். கௌரவமாக அரசர்களால் மதிக்கப்பட்டவர்கள்.

அப்பைய தீட்சிதர் சிவபக்தர். சிவ அவதாரமாகவே மதிக்கப்பட்டவர். வேலூர் பெனுகொண்ட மன்னர்களால் கௌரவிக்கப்பட்டவர். 100 துதிகளுக்குமேல் எழுதியவர். மன்னரால் கனகாபிஷேகம் செய்யப்பட்டவர். சிதம்பர நடராஜரில் மறைந்தவர்.

அவரது தம்பி ஆச்சான் தீட்சிதர். அவரது பேரனே பாரத் வாஜ கோத்ர, சாமவேத, வைகாசி அனுஷ நட்சத்திரத்தில், 23-5-1582 அன்று பிறந்த நீலகண்ட தீட்சிதர்.

இவரது சிறு வயதிலேயே தந்தை காலமானதால் அப்பைய தீட்சிதர் குருவாய் அமர்ந்து சிவபக்தி, அத்வைதம் போன்றவற்றை போதித்தார். நீலகண்ட தீட்சிதரின் 12-ஆவது வயதில் அப்பைய தீட்சிதர் மறைந்தார். கோவிந்த தீட்சிதரின் மகன் வேங்கடமகியிடமும் கல்வி கற்றார். கிருஷ்ணானந்தயதி, கீர்வாணேந்திர சரஸ்வதி போன்றோரிடம் சாஸ்திரம், அத்வைதம் கற்றார். தேவி மகாத்மியம், ரகுவம்சம் போன்றவற்றை அவருக்களித்த அப்பைய தீட்சிதர், "ஸ்ரீத

தீட்சிதர் என்றாலே நால்வர் ஞாபகத்திற்கு வருவர். முதலாமாவர்கள் சிதம்பரம் நடராஜரைப் பூஜிக்க சிவனே அனுப்பியதாகச் சொல்லப்படும் 3,000 தீட்சிதர்கள். இன்றும் அவர்களின் வம்சத்தினரே பூஜை செய்கின்றனர்.

அடுத்தவர் கோவிந்த தீட்சிதர். மிகப்பெரிய சாஸ்திர வித்தகர். இன்றும் அவர் ஆரம்பித்து நடத்திய வேதசாலை கும்பகோணத்தில் உள்ளது. அவர் பெயராலேயே கோவிந்தபுரம் கிராமம், ஐயன்பேட்டை என, கும்பகோணம் கோவில்கள் சீர்திருத்தம், மாசிமகம் என சீர்திருத்தம் செய்தவர். நினைத்து வணங்கப்பட வேண்டியவர்.

அடுத்தவர் சிவபக்தர் அப்பைய தீட்சிதர். அத்வைதத் திற்கு பல கிரந்தங்கள், துதிகள் செய்து, சிதம்பரம் நடராஜரி லேயே ஐக்கியமானவர். அவரது காலம் 1520- 1598.

சங்கீதம் அறிந்தவர்கள் முத்துசாமி தீட்சிதரை அறிவார்கள். அவர் காலம் 1775- 1825. அவர் ஸ்ரீவித்யா உபாசகர்.

meenakshi

நாம் இப்போது சிந்திப்பது அப்பைய தீட்சிதரின் வம்சாவளியான நீலகண்ட தீட்சிதர் பற்றி. சிவ- சக்தி துதிப் பிரியர். இவரது காலம் 1582 முதல் 1638 வரை என சொல்லப் படுகிறது. சரியாகத் தெரியவில்லை. அவரது வம்சாவளிகள் எல்லாரும் மகான்கள். கௌரவமாக அரசர்களால் மதிக்கப்பட்டவர்கள்.

அப்பைய தீட்சிதர் சிவபக்தர். சிவ அவதாரமாகவே மதிக்கப்பட்டவர். வேலூர் பெனுகொண்ட மன்னர்களால் கௌரவிக்கப்பட்டவர். 100 துதிகளுக்குமேல் எழுதியவர். மன்னரால் கனகாபிஷேகம் செய்யப்பட்டவர். சிதம்பர நடராஜரில் மறைந்தவர்.

அவரது தம்பி ஆச்சான் தீட்சிதர். அவரது பேரனே பாரத் வாஜ கோத்ர, சாமவேத, வைகாசி அனுஷ நட்சத்திரத்தில், 23-5-1582 அன்று பிறந்த நீலகண்ட தீட்சிதர்.

இவரது சிறு வயதிலேயே தந்தை காலமானதால் அப்பைய தீட்சிதர் குருவாய் அமர்ந்து சிவபக்தி, அத்வைதம் போன்றவற்றை போதித்தார். நீலகண்ட தீட்சிதரின் 12-ஆவது வயதில் அப்பைய தீட்சிதர் மறைந்தார். கோவிந்த தீட்சிதரின் மகன் வேங்கடமகியிடமும் கல்வி கற்றார். கிருஷ்ணானந்தயதி, கீர்வாணேந்திர சரஸ்வதி போன்றோரிடம் சாஸ்திரம், அத்வைதம் கற்றார். தேவி மகாத்மியம், ரகுவம்சம் போன்றவற்றை அவருக்களித்த அப்பைய தீட்சிதர், "ஸ்ரீதேவியின் அருளால் மிகப்பெரிய கவி ஆவாய்' என்று ஆசீர்வதித்தாராம். அவரது ஆசிகள் நிலைத்தது.

இவரது பிரசித்திபெற்ற காவியம் சிவ லீலார்ணவம். ஹாலாஸ்ய மகாத்மியத்தை ஒட்டி 64 சிவ லீலைகள், 2,000 சுலோகங்கள், 22 காண்டங்கள். கங்காவதரணம் என்று, பகீரதப் பிரார்த்தனையால் கங்கை வந்த கதை எட்டு காண்டங்கள் இயற்றினார். காசி செல்ல விரும்பினார். அது இயலாததால் இந்த காவியம். அவர் பெயர் நீலகண்டன் என்பதால், நீலகண்ட விஜய சம்பு என்று, திருப்பாற்கடலைக் கடைய, அச்சமயம் சிவன் ஆலகால விஷம் அருந்தி நீலகண்டனான கதையை எழுதினார்.

கலி விடம்பனம் என்று 102 பாடல்கள், இந்த கலிகாலத்தில் நடக்கும் தோஷங்கள் பற்றியது. என்னே தூர திருஷ்டி! பர்த்ருஹரிபோல் 108 துதிகளில் வைராக்கிய சதகம்.

சிவோத்கர்ஷ மஞ்சரி, சிவதத்துவ ரகசியம், சிவபக்தி லீலைகளை அள்ளித் தரும். சர்வம் சிவமயம்.

சண்டி ரகசியம், குரு தத்துவ மாலிகா, சௌபாக்கிய சந்திரதபா என்று சாக்த தத்துவங்கள், ரகசியங்கள்! ஸ்ரீவித்யா உபாசகராயிற்றே. அவர் பக்தியுடன் அம்பாளை உபாசித்தால் முக்தியடையலாம் என்பார். இதனில் ஆகமம், தந்திர முறைகளை விவரிக்கிறார். தந்த்ர ராஜ, காரண, காமிக, தட்சிணாமூர்த்தி சம்ஹிதா, பிரம்மயாமளை, மேரு தந்த்ரா, ஸ்வாயம்புவ என பலவற்றைக் கையாள்வதிலிருந்து சாக்த வழிபாட்டு நிபுணர் என தெளிவாகிறது.

முகுந்த விலாசம் என்று கண்ணனைப் போற்றியுள்ளார். இராமர்மீது ரகுவீர ஸ்தவம், இராமாயண சார சங்கிரகம் எனவும் பாடியுள்ளார்.

அவர் ஒருசமயம் மதுரையில் வைகைக் கரையில் தேவி மகாத்மியம் பிரவசனம் செய்துகொண்டிருந்தாராம். அச்சமயம் மதுரை அரசர் திருமலை நாயக்கர் மறைந்திருந்து கேட்டு வியந்து மகிழ்ந்து, மறுநாள் ஒரு புலவர் சபையைக் கூட்டினார். நீலகண்ட தீட்சிதரும் (இளம் வயது) வந்திருந்தார். அரசர், "காக்கைக்கு ஏன் "காக' என்று பெயர் வந்தது?'' என்று கேட்டார். எவரும் வாய் திறக்கவில்லை. ஆனால் நீலகண்ட தீட்சிதர் எழுந்து பேசினார்.

dd

"இந்திர குமாரன் ஜெயந்தன் காக்கை உருவில் சென்று சீதையைக் கொத்தியபோது இராமர் வெகுண்டார். சீதை பொறுமையுடன் மன்னிக்க, இராமரும் கருணையுடன் மன்னித்தார். அதைக்கண்டு சுற்றியிருந்த காகங்கள், "சீதைக்கு நிகர் யார் (கா), இராமனுக்கு ஒத்தவர் யார் (க)' என கத்தினவாம். அதுவே "காக' என ஆயிற்று'' என்றார்.

அரசர் வியந்து அவரைத் தனது மந்திரியாக்கினார். 40 வருடங்கள் மந்திரி பதவியில் இருந்தார். பல சீர்திருத்தங்கள் செய்தார். மதுரை மீனாட்சி கோவிலில் நித்திய பூஜை, அனுஷ்டானங்கள், வார, மாத, வருட உற்சவங்கள் போன்றவற்றை சீர்படுத்தினார். அந்த வழிகள்தான் இன்றும் பின்பற்றப்படுவதாகக் கூறுகிறார்கள். குளத்தை அகழ்ந்தபோது, அதில் அமிழ்ந்து கிடந்த முக்குறுணிப் பிள்ளையாரை கோவிலில் ஸ்தாபித்தவர் இவரே. இவர் ஸ்ரீவித்யா உபாசகரானதால் அங்கெல்லாம் முதல் மரியாதை மீனாட்சிக்கே!

அலுவல்களுக்கு இடையேதான் மேற்சொன்ன கிரந்தங்கள், துதிகள் செய்தார். ஆக மதுரை, சிவன் திருவிளையாடல்கள், மீனாட்சி என்றால் நீலகண்ட தீட்சிதரை மறக்கமுடியாது. தஞ்சை பங்காரு காமாட்சி என்றால் சியாமாவை மறக்க முடியாதது போல எனலாம்.

மதுரைக் கோவிலில் (1626-1633) புது வசந்த மண்டபம் கட்டப்பட்டது. சுந்தரமூர்த்தி ஆசாரி என்பவர் தலைமை யில் இது நடந்தது. திருமலை நாயக்கர் தன் பத்தினிகளுடன் இருக்கும் சிலையும் வடிக்கப்பட்டது. பட்டமகிஷி சிலையைச் செய்தபோது இடது தொடையில் சிறு பள்ளம் ஏற்பட்டுவிட்டது. ஆக, ஆசாரி மீண்டுமொரு சிலை செய்தார். அந்த சிலையிலும் அவ்வாறே ஆக, தகவல் நீலகண்ட தீட்சிதரிடம் தெரிவிக்கப்பட்டது. தீட்சிதர் சில நிமிடம் கண்மூடி யோசித்து, "அது அவ்வாறே இருக்கட்டும்; ராணியின் தொடையில் மச்சம் உள்ளது' என்றாராம்.

இந்த விஷயம் அரசரின் காதுக்கு எட்டி யது. அவர் ராணியின் இடது தொடையில் மச்சம் இருப்பது அறியார். இரவு அது உண்மையென்பதைப் பார்த்தபின் அரசர் திடுக்கிட்டார். மகிமை பொருந்தியவரின் தூர திருஷ்டியை மதிப்பதா அல்லது அவரது நடத்தையில் சந்தேகம் கொள்வதா? அரசர் மறுநாள் காலை சேவகர்களை அனுப்பி தீட்சிதரை அரண்மனைக்கு வரவழைத்தார்.

அரசரின் சேவகர்கள் வந்தபோது தீட்சிதர் அம்பாள் பூஜையில் இருந்தார். வந்தவர்கள் அரசர் அழைக்கிறார் என்று கூறியதும், அவர் சில நிமிடங்கள் தியானத்தில் ஆழ்ந்தார். பின்னர் அரசரின் மனதை உணர்ந்தார். அம்பாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து, அந்த சுடரைத் தன் கண்களில் வைத்துப் பொசுக்கிக்கொண்டார். "அரசர் செய்ய விரும்பியதை நானே செய்துகொண்டேன் என்று அவரிடம் கூறுங்கள்'' என்று சேவகர்களிடம் கூறினார். அவர்கள் வியந்து பயந்தனர். அரசரிடம் சென்று பகர்ந்தனர்.

அந்த நிலையில் தீட்சிதரிடமிருந்து உதித்தவையே மீனாட்சிமீது "ஆனந்த சாகர ஸ்தவம்' என்னும் 102 துதிகள். பக்தனின் கூக்குரல்கள்போல அவை இருக்கும். அம்பாளின் உன்னதம் கூறும் சில துதிகள் ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரிபோல் மிளிரும். ஒருசில துதிகளைப் பொருளுடன் சிந்திப்போமா... மனதைக் கவரும் துதிகள்.

* உன்னுடைய பாதாரவிந்தங்களில் தவிர வேறெதிலும் என் மனம் செல்லாது. (என்னே சரணாகதி!)

* பிரம்மம் என்றும், சக்தி என்றும், பந்தம் விடுவிப்பவள் என்றும், மாயாரூபினி என்றும், காமனை எரித்த சிவனுக்கு அன்பானவள் என்றும் இந்த நாமங் களைச் சொல்லச் சொல்ல ஞானம் பெருகுகிறது.

* ஜகத்தில் பிரகாசிக்கும் எந்த ஜீவனும் உன்னைத் தவிர வேறில்லையென்ற ஞானம் ஏற்பட்டு உன்னிடம் ப்ரீத்திவைப்பது பக்தியென்றால், அந்த ஞானமே பக்திக்குக் காரணம்.

* எனக்கு இதம் தெரியாது; உபாயம் தெரியாது. நான் மிகவும் எளியவன். சக்தியற்றவன். வேறு கதியற்றவனாக உலக மாதாவான உன்னையே சரணமடைகிறேன்.

* சரணாகதி செய்தவனின் பிராரப்த கர்மாக்களை, மாந்திரீகன் விஷம் எடுத்து விடுவதுபோல விலக்கி மோட்சமளிப்பாய் தாயே!

* நாம சங்கீர்த்தனம், அர்ச்சனை செய்தல் போன்றவற்றைச் செய்ய வசதி உண்டானால் மோட்சம் வரட்டும். இல்லையேல் மோட்சம் வேண்டாம். (பகவன் நாம ருசியே போதும்; மோட்சம்கூட தேவையில்லை என்கிறார்.)

* என் மனதை உன் சரணத்தில் அர்ப்பணிக்கிறேன். அது மிருதுவாய் இருந்தால் உன் பாதுகை ஆகட்டும். கடினமாக இருந்தால் விவாகத்தில் மிதிக்கும் கல்லாகட்டும். எவ்வாறாயினும் உன் சரண ஸ்பரிசம் தேவை.

* தியானிப்பவர்கள் சகல துக்கங் களையும் போக்கும் உன் புன்சிரிப்பு எனக்கு நலமளிக்கட்டும்.

* சூரிய சந்திரர்கள் அஸ்தமிக்கும் நேரத்தில் ஆனந்தமானது, அத்வைத ஞானமென உன் பாதாரவிந்தம் என் மனதில் ஆழட்டும்.

* உனக்கொரு கோவிலில்லாத ஊரில் இருக்க விரும்பேன். உன்னைப் புகழாத உயர்ந்த வித்தையை நான் வேண்டேன். உந்தன் பொன்னடி போற்றாத குழாமை நான் வேண்டேன். உன்னைப் பற்றிய நினைவில்லாத வாழ்க்கையும் வேண்டேன். உன்னருளால் நிர்மல சுகம் பெறுவது சத்தியமே.

இந்த துதிகள் முடிந்ததும் அவரது கண்கள் இயல்பான நிலைக்கு வந்ததாம். அது மீனாட்சியின் கருணை!

இதனையறிந்த அரசர் பேதலித்தார்; நடுங்கினார். தீட்சிதரைப் பணிந்து மன்னிக்க வேண்டினார்.

தீட்சிதர், தன்னை சந்தேகக் கண் கொண்டு பார்த்த அரசரின் மந்திரிப் பதவியைத் துறந்தார். தான் தவம் செய்யவேண்டிய காலம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார். அரசரோ, "பரிசுத்தமான நீங்கள் இந்த நாட்டைவிட்டுப் போனால் நாடு என்னாகும்?'' என வேண்டினார்.

தீட்சிதர், மங்களாங்குடிஸ்வரர், மங்களேஸ்வரி, மங்கள தீர்த்தம் அமைந்திருக்கும் தாமிரபரணி நதி தீரத்தில், பாலமடை பகுதியில் தான் தவம்செய்ய விரும்புவதாகக் கூற, அந்த கிராமத்தையே அரசர் தீட்சிதருக்கு அளித்தார். அங்கு பல நாட்கள் தவம்புரிந்து 1688-ஆம் ஆண்டு, மார்கழி மாத வளர்பிறை அஷ்டமி நாளில் சமாதியடைந்தார்.

அவரது 11-ஆவது வம்சாவளியினர் இன்றும் உள்ளனர். தீட்சிதரின் துதிகள், கிரந்தங்களை விளக்கவுரையுடன் பிரசுரித்து வருகின்றனர். இதுவொரு சிறப்பான விஷயம்.

தீட்சிதரின் ஜெயந்தியை வைகாசி மாத அனுஷ நட்சத்திரம், ருத்ர ஏகாதசியன்று அபிஷேக ஆராதனைகள், அன்னதானத்துடன் நடத்துகிறார்கள்.

அவரது ஆராதனை மார்கழி மாத வளர்பிறை அஷ்டமி தொடங்கி நான்கு நாட்கள் ரிக், யஜுர், சாம வேதங்கள், இந்திராக்ஷி சிவ கவசம், விஷ்ணு சஹஸ்ரநாமம், ருத்ர ஏகாதசி ஹோமங்களுடன், அன்னதானமென சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். நீலகண்ட தீட்சிதர்மீது ஒரு துதியுடன் நிறைவுசெய்வோம்.

"சிவ நாம பிரேம விலாஸ சதுரம்

சாக்த ஆகம தந்த்ரவிதி ஸ்துதி க்ருதம்

மீனாட்சி பிரிய ஆனந்த சாகர ஸ்தவ நிதிம்

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷித சத்குரும் நமாமி.'

ப்

om010722
இதையும் படியுங்கள்
Subscribe