பங்குனி உத்திரம் * மார்ச் 25 * 2024
பங்குனி மாதத்தில் சூரியபகவானின் இடம் மீன ராசியாகும். மீன ராசிக்கு என ஒரு சிறப்புண்டு. காலபுருஷனின் கடைசி ராசி. கடலைக் குறிக்கும் ராசி. ஞானகாரகன் குருவின் சொந்த ராசி.
இந்த மீன ராசியில் சூரியன் சஞ்சரிக் கும்போது, சந்திரன் அவருக்கு நேரெதி ரில்லி அதாவது கன்னியில் உத்திர நட்சத் திரத்தில் செல்லும் நாளை பங்குனி உத்திரம் என சிறப்பிக்கிறார்கள். சூரியனும், சந்திரனும் எதிரெதிரே அமைவதால், அது பௌர்ணமியாகி விடுகிறது.
ஆக இந்த பங்குனி பௌர்ணமியில் குலதெய்வ வழிபாட்டை முக்கியமாக கருதுகிறார்கள். அன்று சூரிய பகவான் மீனம் எனும் குருவின் வீட்டில் அமர்ந் துள்ளார். சந்திரன் செல்லும் உத்திர நட்சத்திரத்தின் சாரநாதர் சூரியன் ஆவார்.
அது, சரி, 27 நட்சத்திரம் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு, ஏன் உத்திரம் நட்சத்திரத்தில் சந்திரன் செல்லும் நாளை, குலதெய்வ வழிபாட்டுக்கு என ஏன் ஒதுக்கினார் கள். ஏனெனில் காலபுருஷ தத்துவப்படி சூரியனின் சிம்ம ராசி 5-ஆம் வீடு ஆகும். 5-ஆம் வீடு என்பது பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் எனில், போன ஜென்மத்திலிருந்து தொடர்ந்து வரும் செயல்களைச் செய்யும் இடமாகும்.
குரு என்பவர் காலபுருஷனின் 9, 12-ஆம் அதிபதி. அந்த குருவின் வீட்டில் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் நிற்க, அவரை சந்திரன், அதே சூரியனின் நட்சத்திரத்தில் நின்று நோக்க, அங்கு பௌர்ணமியும், குலதெய்வ வழிபாடும் கைகோர்த்துக் கொள்கிறது.
உத்திர நட்சத்திரம் சிம்மத்தில் ஒரு பாதமும், கன்னியில் 2, 3, 4-ஆம் பாதமுமாக பரவியுள்ளது. உடனே உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றும். அப்படியானால் மாசி பௌர்ணமியில் தானே குலதெய்வ வழிபாடு இருந்திருக்க வேண்டும். இதென்ன பங்குனி பௌர்ணமியில் குலதெய்வ வழிபாடு. கணக்கு இடிக்கிறதே என்பீர்கள். பங்குனியில்தான் சூரியன், குருவின் வீட்டிற்குள் இருப்பார். அவரை, சந்திரன் பார்க்கும் நேரம்தான் சரியாகும். மேலும் சூரியன் 5-ஆம் அதிபதி. குரு 9-ஆம் அதிபதி. இவர்கள் இணையும் நேரம்தான் குல தெய்வ வழிபாட்டிற்கு உகந்தது ஆகும்.
குலதெய்வ வழிபாட்டு முறைகள் உங்கள் ஜாதகத்தில் 5-ஆமிடம் உங்கள் குலதெய்வத்தைக் கூறும். 5-ஆமிடத்திலுள்ள பெண் கிரகங்கள், குலதெய்வம் அம்பாள் போன்று இருப்பதைக் குறிக்கும். 5-ஆமிடத் தில் ஆண் கிரகங்கள் இருப்பின், குலதெய்வம் ஆண் தெய்வமாக அமையும்.
5-ஆமிடம், 5-ஆம் அதிபதி சுப சேர்க்கைபெறின், குரு பார்வையும் இருப்பின், குலதெய்வ கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
குலதெய்வ வழிபாட்டை மட்டும் ஒரு கட்டுக்குள் சொல்ல இயலாது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வணங்குவர். சிலர் சர்க்கரைப்பொங்கல், வஸ்திரங்கள், மாலையுடன் பூஜை செய்வர்.
சிலர் கிடா வெட்டி, பூஜை போட்டு வணங்குவர்.
எது எப்படி இருப்பினும், குலதெய்வ வழிபாடு முக்கியம். கூடியமட்டும் குடும்ப அங்கத்தினர் அனைவரும் சென்று வணங்குங் கள். எத்தனை கஷ்டப்பட்டாலும் குலதெய்வ கோவில் மண்ணை மிதித்துவிடுங்கள்.
குலதெய்வ வழிபாட்டு நுணுக்கங்கள்
உங்கள் குலதெய்வம் என்பது நீங்கள் மட்டுமல்ல, உங்கள் தந்தை, பாட்டனார், பூட்டனார், அவரின் முப்பாட்டனார் என ஒரு வம்ச வழியாக வணங்கி இருப்பர். அவர்களின் பாதம் அந்த இடங்களில் பதிந்திருக்கும். அவர்களின் பிரார்த்தனைகள் அங்கு நிறைந்திருக்கும். அவர்களின் ஆசீர்வாதம் உங்களை தேடிச் சென்று அரவணைக்கும். ஆக, நீங்கள் குலதெய்வத்துக்கு முன்னிற்கும் போது, உங்கள் வம்ச உறுப்பினர் அனைவருடனும் நிற்பதாக அர்த்தம். அதனால்தான் நம் முன்னோர் கள் வருடத்தில் ஒருநாளை குறிப்பிட்டு, இந்தநாளில் குலதெய்வத்தை கும்பிட்டால்தான் ஆச்சு என அடம் பிடித்திருக்கிறார்கள்.
இதில் ஜோதிட ரகசியம் ஒன்று உள்ளது. காலபுருஷனின் 6-ஆமிடத்தில் சந்திரனும், 12-ஆமிடத்தில் சூரியனும் நிற்கும்போது, அப்போது செய்யும் வழிபாட்டில் உங்கள் நோய் நொடிகள் நீங்கும். கடன்கள் கரையும். எதிரிகள் விலகுவர். உங்களுக்கு சுபச்செலவு நிறைய வரும். அதனால்தான் குலதெய்வ கோவிலுக்கு சென்றபின், நிறைய வீட்டில் கல்யாணம் நிச்சயமாகும். புதுத்தொழில் ஆரம்பிக்க இயலும். வெளிநாட்டுக்கு செல்ல விரும்புவோர், அது கைகூட பெறுவர். நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இதுவும் தரும். இன்னமும் தரும். நிறைய சொந்தங்களை சந்தித்து மகிழும் நாளாகும்.
எனவே, குலதெய்வ வழிபாட்டை மிக சிரத்தையுடன் கொண்டாடுங்கள். குலதெய்வ வழிபாடு என்பது Past tense+Present tense+Futureஎனும் கலவை தான்.
முன்னோர்களின் பிரார்த்தனையும், நமது வேண்டுதலும், நமது பேரப் பிள்ளைகளின் ஆவலும் சேர்ந்ததுதான் குலதெய்வம். சரிதானே.
2024- ஆம் வருடம் பங்குனி மாதம் 11, 12-ஆம் தேதிகள், மார்ச் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் பௌர்ணமி உள்ளது. மார்ச் 25-ஆம் தேதிதான் பங்குனி உத்திரம் என்று போட்டிருந்தாலும், முதல் நாளும் வணங்கலாம்.
-மகா