ள்ளிப்படை பரிணாம மாற்றங்களில், சங்க காலத்தில் இயற்கை மரணமுற்ற வேந்தர்களை அடக்கம்செய்து, அதன்மீது "கந்து' என்ற கல்தூணையும், அதற்கு முன் பக்கம் "வல்லகம்' என்ற கற்பலகையையும் வைத்து பள்ளிப்படை மேடைகளை அமைத்ததை இதுவரை பார்த்தோம்.

பெருங்கானகத்துப் புலிக்குட்டியுடன் விளையாட்டு!

நம் இளவல், அரண்மனை நோக்கி யானையின் அம்பாரியில் அமர்ந்து, தனது பரிவாரங்களுடன் அசைந்து அசைந்து வரும்போது, தொலைதூரத் தில் பெரிய வில்வ மரத்தடியில், தனது தந்தையும் இப்பேரரசில் மிகுந்த ஆற்றலுடன் கோலோச்சிய வனுமான பேரரசனின் பள்ளிப்படைக் கந்து தென்படத் தொடங்கியது.

அனுபவத்தின் பெட்டகம், மனிதப் பேராற்றலின் சிகரம், மண்ணகத்து மக்களின் தெய்வமாக விளங்கிய வேந்தன் விழிமூடித் துயில்கொள்ளுமிடம் நெருங்கி வரவர, இளவலின் நெஞ்சிற்குள் இனம்புரியா ஏக்கம் விம்மலுறத் தொடங்கியது. போர்முடித்த கையோடு, புன்னகை சிந்தி, தன்னைத் தூக்கி ஆரத்தழுவி நெஞ்சோடு அணைத்து, உச்சி முகர்ந்து, தன் உயிரே இதுதான் என தன்னை மார்பில் தவழவிட்ட மணிமுடி மண்ணிற்குள் இருப்பதை உணரக்கூட தைரிய மற்றவனாய் அவன் மாறத் தொடங்கினான்.

Advertisment

சிறுதேர் உருட்டி விளையாடியதிலிருந்து பெருந்தேர் ஓட்டிப் பழகியதுவரை பெருமிதத்தோடு ரசித்தவன். பேராற்றலின் தான் பெட்டகமாய் விளங்கவேண்டும் என்பதற்காக, பெருங்கானகத்துப் புலிக்குட்டியைத் தன்னோடு விளையாடி வளரவைத்தவன். தனது ஆற்றலுடன், தனக்கு இணையான ஆற்றலுடைய மன்னனின் மகளை மணந்து, இருபெரும் ஆற்றல்களின் சங்கமம்தான் தனது மகவு என தன்னையே பார்த்துப் பார்த்துப் பூரித்தவன். குதிரையேற்ற பயிற்சியின்போது, தனது இருதொடைகளும் கன்னிப்போனதைக் கண்டு ரசித்தவன். போர்க்கலைப் பயிற்சிதரும் பணிக்க குருமார்களிடம் பணிவுடன் நடந்துகொள்ளவேண்டுமென பயிற்சி தந்தவன். பண்பாடு வளரவேண்டுமென, அவைக்களத்தில் புரவலர்களுக்கு அள்ளித் தரும் தான தர்மங்களை, தனது சிறு கைகளால் அள்ளித்தரச் செய்தவன்.

விழுப்புண் ஆற்ற பண்டுதனான தந்தை!

தன் பதினைந்தாம் அகவையிலிருந்தே, அந்தப்புரத்துக் குயில்களின் கானங்களைக் கேட்டு கோழையாகிவிடக் கூடாதென, வேட்டைக்குச் செல்லும்போதெல்லாம் தன்னோடு அழைத்துச்சென்று, கானகங்களின் கடுஞ்சூழல்களையும், கரடி, சிங்கங்களின் கடும் கர்ஜனைகளையும் கண்ணுறச் செய்தவன். தன் நாட்டிலிருந்து செல்லும் பெருவணிகர் கூட்டங்களோடு தன்னையும் அனுப்பிவைத்து, "சங்கிராமச் சாலை' என்றழைக்கப்படும் மலைவழி மற்றும் பாலைநிலப் பாதைகளில் பயணிக்கச் செய்தவன். போர் நடந்து முடிந்தபின் செய்யும் பொருளாதாரச் சீர்திருத்த உத்தி களை, சீராள குருமார்களோடு சேர்ந்து செய்யும் களப்பணிகளை சீர்படச் செய்யக் கற்றுக்கொடுத்தவன். பண்டுதச் சாலைகளில் பெருமருத்துவர் களோடு இருந்து உறுப்ப மைவு, உடற்கூறாய்வு, நோய் நிமித்திகம், கற்ப மருந்துகளறிவு போன்றவற்றின் செயலறிவுத் திறனை வளர்த்தெடுத்தவன்.

Advertisment

sss

தன் பதினாறாவது அகவையில், குரு குலத்தில் கற்றுணர்ந்த தமிழ் இலக்கண, இலக்கியங்களை வாழ்வில் தெளிவுற நுகர, பெரும் புலவர்கள் கூடும் அவைக்களத்தில் தனக்கு இணையாக அமரச்செய்தவன். தனது 17-ஆவது அகவையில், இல்லாள குரு மார்கள் இருக்கும் கலைக் கூடத்திற்குச் சென்று யாழியம், குழலியம், ஒலிதம், ஓவியம் போன்றவற்றை அறியச் செய்தவன். தங்கம் செய்யும் அக்கசாலை களில் பொன் மணிகள் நோட்டம் (appraising- தரம் அறிதல்), இதளியம் என்ற உலோக வேதியலை வாழ்வியலில் பயன்படுத்தக் கற்றுக் கொடுத்தவன். காராள குருமார்களிடம் வான் வனப்பு, கார் வனப்பு, வேள் வனப்பு, நீர் வனப்பு, வேளாண் நிமித்திகம், மடை, அணை வனப்பு, கால்வாய் வனப்பு போன்றவற்றில் பயிற்சிபெறச் செய்தவன். தன் 18-ஆவது அகவையில், அவைக்களத்தில் பிறநாட்டு அறிஞர்களோடு அளவளாவச் செய்தவன். தன் 19-ஆவது அகவையில், தளபதி களோடு சேர்ந்து சிறுபோர் நிகழ்வுகளில் போர் உத்திகளை உபதேசித்தவன். தனது 20-ஆவது வயதில், படைத்தளபதியாக்கி வெற்றிகளைப் பெறச்செய்து, தான் பெற்ற விழுப்புண்களுக்குத் தந்தையைப் பண்டுத னாக்கி, நெய்ப்பந்து தோய்த்தவன்.

தாயிடம் சத்திய வாக்கு!

தந்தையான பேரரசன் நோயுற்று இயற்கை எய்தும் தறுவாயில், தன் மனைவி யின் கைகளில் மகனான இளவலின் கைகளைக் கொடுத்து, "என் உயிரும் ஆற்றலும் இங்கிருக்கிறது. ஆகவே, இவனுக்குத் துணையாக நீ உயிர் வாழ்ந்தாகவேண்டும்...' என விடுத்த வேண்டுகோளின்படி, தன் 21-ஆவது அகவையில், தாயிடம் சத்தியவாக்கு பெற்றவன். குருவுக்கு குருவாக இருந்து, தன் வாழ்நாளைச் செப்பனிட்டுச் செதுக்கிய சிற்பியாக, தன் தந்தை தன்னை அனைத்துத் துறைகளிலும் பாண்டியத்துவம் அடைந்த பாண்டியனாக்கிய, கடந்தகால தந்தையின் அரவணைப்பைக் கருதி கண்கலங்கிப் பார்த்தபோது, தந்தையின் பள்ளிப்படைக்கு மிகுந்த நெருக்கத்தில் யானை வந்துவிட்டது.

யானையின்மீதிருந்து பள்ளிப்படையை இளவல் நோக்கியபோது, தன் வாழ்நாளில் அனைத்துத் துறைகளிலும் பங்கெடுத்துக் கொண்ட உறவுகள் அனைவரும் பள்ளிப் படையைச் சூழ்ந்து நின்றுகொண்டிருப்ப தைப் பார்த்தான். அவர்கள் கைகளில் அழகிய மலர்மாலைகள், தன் தந்தையின் பள்ளிப்படையை அலங்கரிக்கவும், மரியாதை செய்வதற்கும் காத்திருந்தன. பட்டத்து யானையின் மாவூத்து செய்த சமிக்ஞையினால், மன்னனின் பள்ளிப்படையை வணங்கிய வாறு யானை தரையில் படுத்தது. அம்பாரி யிலிருந்து இளவரசன் இறங்கிவர பொற்படிக் கட்டுகள் பொருத்தப்பட்டன.

மீள்பிறப்பை உருவாக்கும் மாமருந்து!

மங்கள இசைமுழங்க, தன் கைகளில் கொடுக்கப்பட்ட பட்டாடையை இளவல் தன் தந்தையின் பள்ளிப்படை கந்துவிற்குச் சூட்டினான். பெரிய அலங்கரிக்கப்பட்ட மலர்மாலையை, தன் அன்னை கந்துவின் காலடியில் சமர்ப்பித்தவுடன், உறவினர் அனைவரும் தங்கள் மாலைகளை மன்னனின் பள்ளிப்படைக்குக் காணிக்கையாக்கினர்.

உறவினர்களுக்கு நடுவே இளவலின் "அம்மான்' ஒரு அலங்கரிக்கப்பட்ட பொற்பேழையை, பேரரசியும் இளவலின் தாயுமான பட்ட மகராசியிடம் நீட்டினார்.

அதனுள் இருக்கும் மாமருந்து மிகுந்த சிறப் பம்சம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. பள்ளிப்படையில் துஞ்சுகின்ற பேரரசனின் பேராற்றலைப் பொதித்திருக்கும் பொக்கிஷமாகத் திகழ்ந்தது. பேரரசனின் வாழ்நாள் சாதனைகளின் மூலமாகவும் அது இருந்தது. அப்படிப்பட்ட அரிய பொருளிருக்கும் பெட்டகத்தை மகாராணி யார் வாங்கித் திறந்தார். அதன் நடுவே நவரத்தினங்கள் பொதியப்பெற்ற பெரிய பொன்தாயத்து இருந்தது.

இதுகுறித்த விளக்கம் என்னவென்றால்- சங்க காலத்தில் அரச மகவு பிறக்கும்போது அதனுடைய தொப்புள் கொடியை அரசப் பண்டுதர்கள், அவனை மகப்பேறு பார்த்த மருத்துவச்சியிடமிருந்து பெற்றுக்கொண்டு, பத்திரமாக அதனை எடுத்து, கருஞ்சீரகம் அல்லது கடுகுக் குழித்தைலத்தில் போட்டெடுத்து, அதன்மீது உப்பையும் கஸ்தூரி மஞ்சள் பொடியையும் தூவி உலரவைப்பர். நன்றாக உலர்ந்தபின் அரண் மனைப் பொற்கொல்லர்களால் பிரத்யேக மாக செய்து தரப்பட்ட தங்கத் தாயத்திற் குள் வைத்து பத்திரமாகப் பூட்டி குழந்தை யின் கழுத்தில் அணிவிப்பார்கள். அது ஒன்றுமட்டுமே அரச குழந்தைக்கு மாறாத அணிகலனாக, அவனது இறுதி வாழ்நாள் வரை இருக்கும்.

இதுதான் பேரரசன் இயற்கை எய்திய போது, அவனது மைத்துனரால் பத்திர மாகப் பாதுகாக்கப்பட்டு, இப்போது கொண்டு வரப்பட்டது. இதற்குள் பேரரசனின் தொப்புள்கொடி இருந்தது. அன்றைய தமிழர்கள் இதனைக்கொண்டு, இறந்த பேரரசனை மீண்டும் பிறக்கவைக்கும் தந்திர உத்திகளைக் கையாண்டார்கள். இதனைத் தான், "மீள் பிறப்பை உருவாக்கும் மாமருந்து' எனக் கூறினர்.

இவ்வாறு அவர்களால் செய்யப்பட்ட தந்திர உத்திகளிலிருந்து, எவ்வாறு இறந்த பேரரசன் மீண்டும் பிறந்துவருவான் என்பதை வரும் இதழில் காண்போம்!

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்