நட்சத்திர விழாக்களின் பயன்கள்!

/idhalgal/om/natacatataira-vailaakakalaina-payanakala

vinayagar

டந்த இதழ்களில் ஆலய உற்சவ விதிகள் சிலவற்றைக் கண்டோம். மேலும் சில விவரங்களை இங்கு காணலாம்.

சப்த தசாஹ உற்சவம்

(17 நாள் விழா)

பதினேழு நாளில் செய்யப்படும் இதனை உத்தர காரணாகமம், "சாந்திரம் ஸப்த தசாஹகம்' எனும் வசனத்தால் சாந்திரோற்சவம் என்கிறது. இதற்கு முதலில் தீர்த்தோற்சவ தினத்தை நிச்சயித்து, இவ்விழாவை மாலையில் துவங்கி, முப்பத்து நான்கு காலம் 34 முறை பலியிட்டு, பின்பு பதினெட்டாம் நாள் காலையில் தீர்த்தோற்சவத்தைச் செய்க. இதன் பயனாக தேசமக்கள் செல்வச் செழிப்பாகிய வளத்தைப் பெறுவார்கள். இதன் செய்முறை- முதல்நாள் மாலையில் துவக்கி 4-ஆம் நாள் காலைவரையில் கணேசருக்கு ஆறுகால யாகத்தையும், 4-ஆம் நாள் மாலைமுதல் 6-ஆம் நாள் காலைவரையில் ஸ்கந்தருக்கு நான்கு கால யாகத்தையும், 6-ஆம் நாள் மாலைமுதல் 7-ஆம் நாள் காலைவரை சம்பந்த வாசீகர் முதலான சிவபக்தர்களுக்கு இரண்டு கால யாகத்தையும், ஆக ஏழு நாளில் 12 காலத்தில் யாகத்தைச் செய்துமுடித்து, பிறகு யாககலச அபிஷேகத்தையும் செய்துமுடித்துவிட்டு, அன்று மாலையே தொடர்ச்சியாக 7-ஆம் நாள் மாலைமுதல் 16-ஆம் நாள் காலை தீர்த்த உற்சவம்வரை சிவனுக்கு நவதின சிவோற்சவத்தைச் செய்து, பின்பு 16-ஆம் நாள் மாலைமுதல் 18-ஆம் நாள் காலைவரையில் அஸ்திரதேவருக்கு நான்கு கால யாகத்தையும், அஸ்திரேச கலசாபிஷேகத்தையும் செய்துமுடித்திட வேண்டும். இந்த உற்சவத்தின் தொடக்கத்தில் அல்லது நடுவில் அல்லது இறுதியில் பக்த உற்சவத்தையும், அதன்பிறகு தொடர்ந்து சக்தி உற்சவம், சண்டேச உற்சவமும் செய்து பூர்த்திசெய்யவேண்டும்.

ஏகோனவிம்சதி தின உற்சவம்

(19 நாள் விழா, சிரத்தோற்சவம்)

காமிகாகமம் 19 நாளில் செய்யப்படுகிற உற்சவத்தை மோட்சம் தருகிற உற்சவமாக, உத்தமத்தில் மத்யமாகக் கூறுகிறது. இதனை 17 நாள் உற்சவத்திற்குக் கூறியதுபோலவே மாலையில் துவக்கி, 38 காலம் தொடர்ந்து இருவேளையாக தினமும் பலியிட்டு, 20-ஆம் நாள் காலை தீர்த்தோற்சவத்தைச் செய்க. இதில் கணேசர், கந்தர், பக்தர், அஸ்திரதேவர் ஆகிய நால்வருக்கும் ஒன்பது நாளில் உற்சவத்தை முதலில் செய்துமுடித்து, பிறகு அன்று மாலை (9-ஆம் நாள் மாலை) முதலாகத் தொடர்ந்து ஒன்பது நாள் மகோற்சவத்தைச் சிவனுக்கும் தேவிக்கும் செய்துமுடிப்பது இந்த உற்சவத

vinayagar

டந்த இதழ்களில் ஆலய உற்சவ விதிகள் சிலவற்றைக் கண்டோம். மேலும் சில விவரங்களை இங்கு காணலாம்.

சப்த தசாஹ உற்சவம்

(17 நாள் விழா)

பதினேழு நாளில் செய்யப்படும் இதனை உத்தர காரணாகமம், "சாந்திரம் ஸப்த தசாஹகம்' எனும் வசனத்தால் சாந்திரோற்சவம் என்கிறது. இதற்கு முதலில் தீர்த்தோற்சவ தினத்தை நிச்சயித்து, இவ்விழாவை மாலையில் துவங்கி, முப்பத்து நான்கு காலம் 34 முறை பலியிட்டு, பின்பு பதினெட்டாம் நாள் காலையில் தீர்த்தோற்சவத்தைச் செய்க. இதன் பயனாக தேசமக்கள் செல்வச் செழிப்பாகிய வளத்தைப் பெறுவார்கள். இதன் செய்முறை- முதல்நாள் மாலையில் துவக்கி 4-ஆம் நாள் காலைவரையில் கணேசருக்கு ஆறுகால யாகத்தையும், 4-ஆம் நாள் மாலைமுதல் 6-ஆம் நாள் காலைவரையில் ஸ்கந்தருக்கு நான்கு கால யாகத்தையும், 6-ஆம் நாள் மாலைமுதல் 7-ஆம் நாள் காலைவரை சம்பந்த வாசீகர் முதலான சிவபக்தர்களுக்கு இரண்டு கால யாகத்தையும், ஆக ஏழு நாளில் 12 காலத்தில் யாகத்தைச் செய்துமுடித்து, பிறகு யாககலச அபிஷேகத்தையும் செய்துமுடித்துவிட்டு, அன்று மாலையே தொடர்ச்சியாக 7-ஆம் நாள் மாலைமுதல் 16-ஆம் நாள் காலை தீர்த்த உற்சவம்வரை சிவனுக்கு நவதின சிவோற்சவத்தைச் செய்து, பின்பு 16-ஆம் நாள் மாலைமுதல் 18-ஆம் நாள் காலைவரையில் அஸ்திரதேவருக்கு நான்கு கால யாகத்தையும், அஸ்திரேச கலசாபிஷேகத்தையும் செய்துமுடித்திட வேண்டும். இந்த உற்சவத்தின் தொடக்கத்தில் அல்லது நடுவில் அல்லது இறுதியில் பக்த உற்சவத்தையும், அதன்பிறகு தொடர்ந்து சக்தி உற்சவம், சண்டேச உற்சவமும் செய்து பூர்த்திசெய்யவேண்டும்.

ஏகோனவிம்சதி தின உற்சவம்

(19 நாள் விழா, சிரத்தோற்சவம்)

காமிகாகமம் 19 நாளில் செய்யப்படுகிற உற்சவத்தை மோட்சம் தருகிற உற்சவமாக, உத்தமத்தில் மத்யமாகக் கூறுகிறது. இதனை 17 நாள் உற்சவத்திற்குக் கூறியதுபோலவே மாலையில் துவக்கி, 38 காலம் தொடர்ந்து இருவேளையாக தினமும் பலியிட்டு, 20-ஆம் நாள் காலை தீர்த்தோற்சவத்தைச் செய்க. இதில் கணேசர், கந்தர், பக்தர், அஸ்திரதேவர் ஆகிய நால்வருக்கும் ஒன்பது நாளில் உற்சவத்தை முதலில் செய்துமுடித்து, பிறகு அன்று மாலை (9-ஆம் நாள் மாலை) முதலாகத் தொடர்ந்து ஒன்பது நாள் மகோற்சவத்தைச் சிவனுக்கும் தேவிக்கும் செய்துமுடிப்பது இந்த உற்சவத்தின் செய்முறையாகும்.

ஏகவிம்சதி தின உற்சவம் (21 நாள் விழா, சார்வகாமிக முக்தி உற்சவம்)

காமிகாகமமானது 21 நாளில் செய்யப்படுகிற உற்சவத்தை உத்தமோத்தமமாக, அனைத்து தேவர்களுக்கும் பிரியத்தைச் செய்யக்கூடியதாக விளக்கியுள்ளது. இதனை மாலையில் துவக்கி, தொடர்ந்து இருவேளையிலுமாக 42 காலம் பலியிட்டு, முடிவில் 22-ஆம் நாள் காலையில் தீர்த்தோற்சவத்தைச் செய்துமுடிப்பது விதிமுறையாகும்.

சப்தவிம்சதி தின உற்சவம் (27 நாள் விழா, சௌர உற்சவம்)

27 நாளில் தொடர்ந்து செய்யப்படும் பெருவிழாவானது, ஸ்ரீமத்காரணாகமாகிய பிரதிஷ்டாமகா தந்திரமாகிய உத்தரகாரணத்தில், "சௌரோத்ஸவம் து பிரதமம்' என்றும், "ஸப்தவிம்சத் தினம் சௌரம்' என்றும் கூறப்பட்டு, இருபத்தியேழுநாள் தொடர்ந்து செய்யப்படுகிற சிவோற்சவம் மிகவும் சிறப்பாகவும் விரிவாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பெருவிழாவானது, கொடியேற்றம் முதலாக மூவகையான அங்குராரப்பணங்களோடும், இதில் சிறப்பாக 44 அங்குரபாலிகைகளின் பூசையுடனும், ஒன்பது கொடியேற்றத்துடனும், ஒன்பது ஹோமகுண்டங்களுடனும், ஏழு வகையான மூர்த்தியாகங்களுடனும் செய்யத்தக்கது.

இவ்விழாவை முதல் நாள் மாலையில் துவஜாங்குரத்துடன் துவக்கி, துவஜஸ்தம்ப, விருஷபட- பிரதிஷ்டைக்கான அதிவாச யாகத்தையும், மறுநாள் காலை யாகமுடிவில் இவற்றைச்சேர்த்து உற்சவமூர்த்திகளின் முன்னிலையில் கொடியேற்றத்தைச்செய்து, அஸ்திரதேவரில் பேரீதாடனத்துடன் தேவதா ஆவாஹநாதிகளைச் செய்தபின்பு, மாலையில் யாகத்திற்கான யாகாங்குரார்ப் பணத்தைச் செய்து, 8-ஆம் நாள் காலைவரை ஏழு நாளில் சப்தாஹமாக 14 பலியுடன் கணேச யாக உற்சவத்தைச் செய்து, கணேசருக்கு அந்த யாக கலசாபிஷேகத்தைச் செய்து முடித்து, அன்றே (8-ஆம் நாள் மாலையே) ஸ்கந்த யாகத்தைத் துவங்கி பஞ்சாஹவிதிப்படி, பத்து கால பலியுடன் செய்து, பதின்மூன்றாம்நாள் காலையில் ஷண்முகருக்கு அவரது யாகத்தின் கலசாபிஷேகத்தைச் செய்து கந்தர் யாகத்தை முடிக்கவேண்டும். தொடர்ந்து அன்றே 13-ஆம் நாள் மாலை தொடங்கி, ஐந்து நாட்களுக்கு அஸ்திரதேவருக்கு யாகத்தைச் செய்து, 18-ஆம் நாள் காலை அஸ்திரதேவருக்கு யாக கலசாபிஷேகத்தைச் செய்து முடித்து, 18-ஆம் நாள் மாலையே சிவனுக்கு பிரதான மகாயாகத்தை தீர்த்தாங்குரத்துடன் துவக்கி, ஒன்பது நாள் விழாவை நவாஹ விதிமுறைப்படி ஒன்பது நாட்களில் முறையே 18 கால பலியிட்டுத் தொடர்ந்துசெய்து, 27-ஆம் நாள் காலை தீர்த்தோற்சவத்தைச் செய்க. பின்பு கொடியிறக்கமான அவரோஹணத்தைச் செய்துமுடித்தல் சப்தவிம்சதி தின உற்சவத்தின் செய்முறையாகும். இதில் இடம்பெற்றுள்ள சிவோற்சவத்தையே சிவனுக்கு மட்டும் தனியாக 27 நாளில் செய்யத்தக்கதாக உத்தரகாரணாகமம் விரிவாகவும் கூறியுள்ளது.

பஞ்சதிரிம்சத் தின உற்சவம் (35 நாள் விழா)

காரணாகமம் சௌரோற்சவமாக நட்சத்திர எண்ணிக்கையில் 27 நாட்களுக்கு சிவனுக்கு மட்டுமே பிரம்மோற்சவத்தை விரிவாகக் கூறுகிறது. இதில் தனித்தனியாக 27 நாட்களுக்கு, 27 வகையில் உரிய தின ராத்திரியின் 27 பெயர், தினங்களின் 27 அதிதேவதை, 27 கௌதுகபேர வகை, 27 யானகிரமம் (27 வாகன வகை), 27 வகையில் பலிதிரவியம், 27 தீர்த்த திரவியவகை, 27 ஆடைவகை, 27 சந்தன வகை, 27 புஷ்ப வகை, 27 அலங்கார வகை, 27 ரத்தின வகை, 27 காய்வகை, 27 கனி வகை, 27 அன்ன வகை, 27 ஜலதீர்த்த வகை, 27 தூபப் பொருள் வகை, 27 தீப வகை, 27 ஹோமதிரவிய வகை, 27 சமித்து வகை, 27 குண்ட வகை, 27 கொடி வகை, 27 ராக வகை, 27 தாள வகை, 27 நிருத்த வகை, 27 வாத்ய வகை, 27 மாகேசமூர்த்த கௌதுபேர வகை முதலான அனைத்தையும், 27 வகையான தின வரிசை முறைப்படி காரணாகம் கூறி விளக்கியுள்ளது.

27 நாள் உற்சவத்தைத் தொடர்ந்து மேலும் தொடர்ச்சியாக 30-ஆம் நாள் வரை பிக்ஷாடனோற்சவம், தொடர்ந்து 33-ஆம் நாள் வரை சக்தி உற்சவம், 35-ஆம் நாள் காலை வரையில் சண்டோற்சவம் ஆகியவற்றையும் சேர்த்து, 35 நாள் வரை மகோற்சவம் விளக்கப்பட்டுள்ளது. இதனை விளக்கிடில் இக்கட்டுரை விரியுமென்று இங்கு தவிர்க்கப்படுகிறது. இவற்றுள் முக்கியமான சிலவற்றைக் காண்போம்.

திரிபட்ச மண்டல உற்சவம் (45 நாள் மண்டலப் பெருவிழா)

மேற்கண்டவாறு 27 நாட்களுக்கு சிவனுக்கு மகோற்சவத்தைச் செய்து, அதனைத் தொடர்ந்து பார்வதி தேவிக்கு ஒன்பதுநாள் உற்சவத்தை 36-ஆம் நாள் காலை வரையிலும் செய்து முடித்து, அன்று மாலையே தொடங்கி சண்டேசரருக்கும், 64 பக்தாதிகளுக்கும் 45-ஆம் நாள் வரையிலாக ஒன்பது நாள் விழா விதிமுறையில் செய்து, 45-ஆம் நாள் காலை உற்சவத்தை தீர்த்தத்துடன் செய்துமுடிப்பது திரிபட்ச மண்டலோற்சவம் எனப்படுகிற 45 நாள் விழாவாகும். இதுவே மூன்று பட்ச காலம் 3 ஷ் 15 = 45 நாள் ஒரு மண்டலம் எனப்படுகிற 45 நாட்களாகும். இதில் ஒரே கும்பத்தில் தொடர்ந்து 27 நாளைக்குமேல் யாகத்தில் சிவன் பூசிக்கப்படுவதில்லை என்பது உற்று நோக்கத்தக்கது. இவ்விழாவானது கணபதி, முருகன், அஸ்திரதேவர், சிவன், பார்வதி, பிக்ஷாடனர், பக்தர்கள் ஆகியோருக்கு ஏழு வகை யாகத்தையும் உள்ளடக்கிச் செய்யத்தக்கதாகும்.

உற்சவ வகைகளின் உன்னதப் பயன்கள்

சைவாகமங்கள் யாவும் உற்சவ வகைகளுக்கு முதலிலும், முடிவிலும் சிறந்த பயன்களைக்கூறி, உற்சவத்தைச் செய்திடுமாறு வலியுறுத்துகின்றன. "சந்திரஞானம்' முதலான ஆகமங்கள் பலவற்றுள் வருஷம், மாதம், திதி, நட்சத்திரம் இவற்றில் உற்சவம் செய்யாவிட்டால் அரசனுக்கும், கிராமத்திற்கும், மக்களுக்கும் நன்மை கிடைக்காது என்றும், ஆதலால் தவறாமல் உற்சவத்தைச் செய்யுமாறும் கூறப்பட்டுள்ளன.

மகோற்சவ மஹத்பலாநி (ஆலய பிரம்மோற்சவ வகைகளில் பயன்கள்)

சூட்சும ஆகமமானது உற்சவ தின வகைக்கு ஏற்ப பயனைக் கூறுகிறது. அதன்படி ஒருநாள் உற்சவத்திற்கு ராஜவிருத்தியும், மூன்றுநாள் உற்சவத்திற்கு சிவனை மகிழ்வித்தலும், ஐந்துநாள் உற்சவத்திற்கு போகமும், ஏழு நாள் விழாவிற்கு சிவப்பிரியமும், ஒன்பது தினோற்சவத்திற்கு சாந்தியும், பதினோரு நாள் உற்சவத்திற்கு புஷ்டியும், 12 நாள் உற்சவத்திற்கு முக்தியும், 13 நாள் உற்சவத்திற்கு சர்வசித்தியும், 15 நாள் உற்சவத்திற்கு ஜனங்களுக்கு சுகமும், 17 நாள் உற்சவத்திற்கு புண்ணியப்பிரதமும், 19 நாள் உற்சவத்திற்கு சர்வபாவம் நீங்குதலும், 21 நாள் உற்சவத்திற்கு லோகரசைஷயும் பயனாகக் கூறப்படுகிறது. காமிகாகமம் கூறும் உற்சவத்தின் பயன்கள் முறையே நாள் கணக்கில் நாள் 1-க்கு சிவப்பிரீதியும், மூன்று நாளுக்கு கிராமரக்ஷையும், ஐந்து நாளைக்கு பூதரக்ஷையும், நாள் ஏழுக்கு கிரிஜாபிரியமும், நாள் ஒன்பதுக்கு லோகரக்ஷையும், நாள் 11-க்கு சுரருக்கும், சகலருக்கும் பிரீதியும், நாள் 13-க்கு தெய்வ சாந்தித்தியமும், நாள் 15-க்கு மனிதருக்கு சௌக்கியமும், நாள் 17-க்கு மக்களுக்கு வளமும் (ஜனபுஷ்டி), நாள் 19-க்கு புபுக்ஷுக்களுக்கு முக்தியும், நாள் 21-க்கு சர்வதேவர்களுக்குப் பிரியமும் பயனாக ஏற்படும் என்று கூறியுள்ளது.

27 நட்சத்திர உற்சவங்களின் பயன்கள்

சிவாலயத்தில் மாதந்தோறும் உரிய நட்சத்திரத்தில், விரதகால விசேஷ சிவபூஜையுடன் உற்சவத்தைச் செய்வதால், யாவரும் விரும்பும் பயனைப் பெறலாம். நட்சத்திரத்தின் அடிப்படையில் அந்த 27 நட்சத்திர உற்சவங்களின் சிறப்புப்பயனாக முறையே கிருத்திகையில் சௌக்கியத்தையும், ரோகிணியில் அபத்யதோஷம் நீங்கி நல்ல மகனையும், மிருகசீரிடத்தில் (தேஜஸ், ஒஜஸ்) தேகப்பெரும்பொலிவையும், திருவாதிரையில் சகல செல்வத்தையும், புனர்பூசத்தில் க்ஷத்ராதிசித்தி எனும் அரசின் பாதுகாப்பையும், பூசத்தில் புஷ்டியையும் (வளம்), ஆயில்யத்தில் நினைத்த வரத்தையும், சிறந்த சத்புத்திரர்களையும், மகத்தில் (சுஜந சிரேஷ்டராகுதல்) விழாவைச் செய்வதால் தம் மக்களிடத்தில் மேன்மையையும், பூரத்தில் சௌபாக்கியத்தையும், உத்திரத்தில் முக்கிய சீலமான நல்லொழுக்கமுடைமையையும், ஹஸ்தத்தில் உயர்நிலையையும் (ஸத் சிரேஷ்டராதல்), சித்திரையில் அழகையும், ரூபலாவண்யமுள்ள அழகிய மனைவியையும், சுவாதியில் (வர்த்தக) வியாபார லாபத்தையும், விசாகத்தில் விசேஷமான தனாவாப்தி விருப்பங்களை அடைதலும், அனுஷத்தில் (சக்ரவர்த்தியாதல்) இந்திர பதவியையும் பகையின்மையையும், கேட்டையில் குதிரை லாபத்தையும் பணச்சேர்க்கையும், மூலத்தில் ஆரோக்கியத்தையும், பூராடத்தில் புகழையும், உத்திராடத்தில் சிறப்புமிக்க புகழ்ச்சி நிலையையும் திருவோணத்தில் சுகபோகங்களையும், அவிட்டத்தில் பெருஞ்செல்வத்தையும் அபிஜித் நட்சத்திரத்தில் வேதவித்தை ஞானத்தையும், சதயத்தில் மருத்துவ சித்தியையும், பூரட்டாதியில் (அஜாவிகம்) ஆடுமுதலான செல்வ யோகத்தையும், உத்திரட்டாதியில் பசுமுதலான கால்நடைச் செல்வங்களையும், ரேவதியில் சாபவிமோசனத்தையும், அஸ்வினியில் குதிரைகளின் போகவளத்தையும், பரணியில் உத்தமமான நீண்ட ஆயுளையும் நட்சத்திர பூசை மகிமையால் பெறுவார்கள் என்று சிவாகமங்கள் கூறியுள்ளன.

ஆகையினால் இந்த நட்சத்திரங்களில் விரதாதிகளை அனுஷ்டித்து, தெய்வத்திற்கு அபிஷேகம், நைவேத்தியம், அலங்காரம், தூபம், தீபம் முதலான விசேஷங்களுடன் உற்சவமும் செய்க. சிவனுடைய திதி மற்றும் நட்சத்திரம் இரண்டிலும் இரு நாட்களிலும் சிவோத்சவத்தைச் செய்யவேண்டும். இதனால் பயன்கள் யாவும் கோடி மடங்கு உயர்ந்ததாகப் பெறுவர்.

இதையும் படியுங்கள்
Subscribe