மகாவிஷ்ணு நான்காவது அவதாரமாக எடுத்தது நரசிம்ம அவதாரம். அந்த அவதாரத்தால், சிங்கிரிகுடியில் லட்சுமி நரசிம்மப் பெருமாள் அருளாட்சி நடத்துகிறார்.

அவரது அருமை பெருமைகளை உணர்வுப் பூர்வமாக அறிந்துகொள்வோம்.

நரசிங்கப் பெருமாள் கோவில்கள் இந்தியா வில், தமிழகத்தில் பல இடங்களில் அமைந்துள் ளன. அவற்றில் இரண்டு இடங்களில் மட்டுமே பதினாறு கரங்களுடன் அகோர மூர்த்தியாக தோன்றி காட்சிதருகிறார். அதில் ஒன்று ராஜஸ்தானில் உள்ளது. இரண்டாவது தமிழகத்தில், புதுச்சேரியை ஒட்டி, கடலூர் மாவட்ட எல்லையில் சிங்கிரிகுடியில் உள்ளது.

ss

Advertisment

மகாவிஷ்ணு நரசிங்க மூர்த்தியாகத் தோன்றி இரணியகசிபுவை வதம்செய்தார். தான் ஒரு அரசன் மட்டுமல்ல; அனைத்து உலகங்களுக்கும் தானே இறைவன். எனவே அனைத்து மக்களும் தன் பெயரை மட்டுமே கூறவேண்டுமென்று கட்டளையிட்டான் இரணியன். ஆனால் அவனது மகனான சிறுவன் பிரகலாதனோ, "நாராயணரே முழுமுதல் கடவுள்; அவரது பெயரை மட்டுமே உச்சரிப்பேன். என்று, சதா நேரமும் "நமோ நாராயணா' என்ற திருநாமத்தை மட்டுமே உச்சரித்தபடி இருந்தான். தனக்குப் பிறந்த மகன் தன் பெயரைக் கூறாமல் நாராயணன் பெயரை மட்டுமே கூறுவதைக் கேட்டு கோபமுற்ற இரண்யகசிபு, சிறுவன் என்றும் பாராமல் பிரகலாதனுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தினான். பிரகலாதனுக்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும் நாராயணர் பிரகலாதனைப் பாதுகாத்து அருள்புரிந்து வந்தார்.

ஒரு கட்டத்தில் மகனைக் கொலைசெய்யும் செய-ல் இரணியன் இறங்கும்போது, "உன் தந்தையான நான் மட்டுமே உயர்ந்த கடவுள். எனவே எனது பெயரை மட்டுமே வணங்கு' என்று கூற, அப்போதும், பிரகலாதன் "எந்த சூழ்நிலையிலும் நாராயணர் என்னைக் கைவிட மாட்டார். அவரது திருநாமத்தை மட்டுமே கூறுவேன்' என்று சிறிதும் அச்சமின்றிக் கூற, கோபமுற்ற இரணியகசிபு "எங்கே இருக்கிறான் நீ சொல்லும் நாராயணன்' என்று கேட்க "அவர் எங்கும் நிறைந்துள்ள பரம்பொருள். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்' என்று கூறினான். கோபத்தின் உச்சகட்டத்தில் இருந்த இரண்யகசிபு, "இதோ, இந்த தூணில் இருக்கிறானா உன் நாராயணன்' என்றபடி அருகி-ருந்த தூணை தனது கதாயுதத்தால் ஓங்கி அடிக்க, தூணைப் பிளந்துகொண்டு சிங்கமுகமும் மனித உடலுமாக அகோர நரசிங்க மூர்த்தியாக கர்ஜித்தபடி வெளியே வந்தார். தனது கூரிய நகங்களைக் கொண்டு இரணியனை வதம்செய்தார். அந்த உக்கிர தோற்றத் தில் நரசிங்கப் பெருமாள் இவ்வாலயத்தில் பக்தர்களுக்கு மேற்குநோக்கி அருள்பா-க்கிறார்.

இவருக்கு 16 கரங்கள் உள்ளன அவற்றில் பதாக கிஷ்டம், பிரயோக சக்கரம், சீரிக்கா, எனும் குத்துக் கத்தி, காணம், ராட்சசனின் தலையறுத்தல், கத்தியால் அசுரனைக் கொல்லுதல், இரணியன் காலை அழுத்திப் பிடிக்கும் ஒரு கை, சங்கம், வில், கதை, கேடயம், வெட் டப்பட்ட தலை, இரணியன் தலையை அழுத் திப் பிடிக்கும் கை, குடலைக் கிழிக்கும் கரங்கள் என இப்படிப் பட்ட காட்சிகளுடன் நரசிம்மர் மூலவராக அமர்ந்துள்ளார். இவருக்குக் கீழே இடது புறம் சுக்கிரன், பிரகலாதன், இரணியன் மனைவி நீலாவதி ஆகியோர் உள்ளனர்.

Advertisment

உற்சவ மூர்த்தியாக ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத லட்சுமி நரசிம்மர் அருகிலேயே அருள்பா-க்கிறார், இந்த ஆலயம் பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் காலத்திலும், 16-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்திலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என கல் வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின் றன. நரசிங்க அனுஷ்டிப்பு மந்திரத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு இந்த கோவில் அமைக்கப்பட் டுள்ளது. அதன் காரணமாக திருமணத் தடை உள்ளவர்கள், கடனில் தத்தளிப்பவர்கள், அரசிய-ல் ஆட்சியில் உயர்பதவிகள்பெற விரும்புகிறவர்கள் இவ்வாலய இறைவனை வழிபட்டு பலன்பெற்று வருகிறார்கள்.

dd

திருமணத்தடை விலகும். எதிரிகள் தொல்லை நீங்கி சரணாகதி அடைவார்கள். இவரை வழிபடுவதால் பில்-, சூனியம் அண்டாது. நவகிரக தோஷம் .உள்ளவர்கள் இவ்வாலய .இறைவனை தரிசித்து அவை களில் இருந்து பரிகாரம் பெறுகிறார்கள். இவ்வளவு சிறப்பு களையும் பெருமை களையும் பெற்றுள்ள இறைவனை பல முனிவர்கள், ரிஷிகள் வழிபட் டுள்ளனர். நரசிங்கர் தோன்றி குடியிருப்பதால் நரசிங்கர்குடி என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் சிங்கிரிக்குடி என்ற பெயர் உருவானது. பக்தர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறார் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர்.

இவ்வாலய இறைவன் குறித்து மார்க்கண்டே புராணத்தில் கூறப்பட் டுள்ளது. அதில் ஜைமினி என்னும் ரிஷி பிருகு முனிவரிடம் சென்று அவரை வணங்கி, தமக்கு நற்கதி அடைய வழிகூறுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், முற்காலத்தில் நாரத மாமுனிவர் இதே கேள்வியை பிரம்ம தேவனிடம் கேட்டுள்ளார். அதற்குரிய பதிலை நான் உமக்குக் கூறுகிறேன். பாரத கண்டத் திலுள்ள பாலாற்றுக்கு ஐந்து யோஜனை தூரம் தெற்கிலும், கிழக்குக் கடலுக்கு மேற்கே ஒரு யோஜனை தூரத்திலும், பென்னை யாற்றின் வடகரையிலும், திருவந்திபுரத்தில் இருந்து ஒரு யோஜனை வடக்கிலும் நரசிம்ம வனம் அமைந்துள்ளது. அங்குள்ள நரசிம்ம மூர்த்தியை தவமிருந்து வழிபட்டால் உமக்கு நற்கதி கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதன்படி ஜைமினி ரிஷி இங்குவந்து நரசிங்கப் பெருமாளை வழிபட்டு நற்கதி அடைந்துள்ளார்.

அயோத்திக்கு அரசனாக இருந்தவர் நிமி என்னும் அரசன். அவர் தனது தந்தை இறந்த பிறகு சிரார்த்தம் செய்துகொடுப்பதற்காக வசிஷ்ட முனிவரை அழைத்துள்ளார். அந்த அரசனின் அரண்மனைக்குச் சென்று காரியங் களை முடித்தபிறகு உணவருந்துவதற்காக இலையில் முன்பு அமர்ந்துள்ளார்.

அப்போது அரசன்மீது பொறாமைகொண்ட ஒரு அசுரன் சமையல்காரன் வடிவில் உள்ளே புகுந்து வசிஷ்டருடைய இலையில் மாமிச உணவைப் பரிமாறினான். இதனால் கோபமடைந்த வசிஷ்டர் அரசனைப் பார்த்து, "எனக்கு மாமிச உணவு பரிமாறியதால் நீ மாமிசத்தை சாப்பிடும் அரக்கனாகக் கடவது' என்று சாபம்விட்டார். பிறகு வனத்திற்குச் சென்று ஒரு குகையில் தங்கித் தவமிருந்தார். அவருடைய தவம் இடையில் கலைந்தது.

அதன்பிறகு பல்வேறு இடங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்துள்ளார்.

ஒருமுறை ஒரு அசரீரி குரல் ஒ-த்தது. "உனது தவம் தடைப்பட்டது. மீண்டும் தவம்செய்து அதன் பயனை அடையவேண்டுமானால் நரசிம்ம வனத்திற்குச் சென்று தவம் செய். அங்கே மகாவிஷ்ணுவானவர் நரசிம்ம மூர்த்தியாக கோ-ல்கொண்டுள்ளார்.

அவருடைய அருளால் பலர் தவம்செய்து சித்தியடைந்திருக்கிறார்கள். அதன்படி நீயும் அங்குசென்று தவம் செய்' என்று உத்தரவிட்டது.

dd

அதன்படி இங்குள்ள நரசிம்ம வனத்திற்கு வந்து சிங்கப் பெருமாளை தரிசித்து கடுமையான தவத்தை செய்து நரசிங்கப் பெருமாளின் பூரண ஆசியைப் பெற்றார் வசிஷ்டர். அதன்காரணமாகவே மூலவருக்கு அருகில் அவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

அதேபோல் இந்திரன் இவ்வாலயத்திற்கு வந்து இறைவனை தரிசித்ததன் அடையாள மாக இந்திர தீர்த்தம் உள்ளது. ஜமதக்னி முனிவர் இறைவனுக்கு அபிஷேகம் செய்து தவம் செய்ததால் ஜமத்க்னி தீர்த்தம் உள்ளது.

பரசுராமர் இங்குவந்து இறைவனை வழி பட்டு, தனது தந்தையைக் கொன்ற கார்த்த வீரியனையும் அவனை ஒத்த துஷ்டர்களையும் அழிப்பதற்காக நரசிம்ம வனத்தில் தவம் செய்ய, அவருக்கு நரசிங்கப் பெருமாள் வில்லையும் அம்பையும் கொடுத்து, அதன்மூலம் அவர் எதிரிகளை அழித்துள் ளார். அதன்காரணமாக பரசுராம தீர்த்தம் இங்கு அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் எட்டுவிதமான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேற்குநோக்கி அமைந்துள்ள நரசிங்கப் பெருமாள் ஆலயத் தில் ஐந்துநிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றவுடன் அங்குள்ள வேப்ப மரத்தடியில் துர்க்கை சந்நிதியும், அதனை ஒட்டி கோவில் தீர்த்தக் குளமும் அமைந்துள்ளன. இங்குள்ள விநாயகர் நெற்றியில் நாமத்தோடு காட்சிதருகிறார். அவருக்கு தோப்புக்கரணம் போட்டுவிட்டு உள்ளே சென்றால் ப-பீடமும் கொடி மரமும் நம்மை வரவேற்கின்றன. அதை அடுத்தாற்போல் பழங்கால கருங்கல் தூண்களோடுகூடிய முன்மண்டபம்.

அங்கே பெரிய திருவடி என்ற பெயர் கொண்ட கருடாழ்வார் காட்சிதருகிறார். அவரை தரிசித்து, பிறகு மூலவர் நரசிங்க பெருமாளை தரிசனம் செய்துபிறகு, ஆலயத்தின் வடக்கு சுற்றுப் பகுதியில் அமைந்துள்ள ஆண்டாள் நாச்சியார் தனிச் சந்நிதியும், தெற்குச் சுற்றில் கிழக்கு பார்த்தவாறு கனகவல்- தாயாரின் சந்நிதியும் அமைந்துள்ளன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின்போதும் மாலை 5.00 மணி அளவில் தாயாருக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. தாயார் சந்நிதியை அடுத்து சீதா, இராமர், லட்சுமணர், ஆஞ்சனேயர் சூழ ஐம்பொன்னாலான திருமேனியை தரிசிக்கவேண்டும்.

மேலும் இவ்வாலயத்தில் விருட்சமாக உள்ளது வில்வமரம். இதன் வடமேற்கு மூலையில் ஒரு இடத்தில் நின்றபடி, ராஜகோபுரம், கருவறை, விமானம், கொடிமரம் ஆகியவற்றை தரிசிக்கமுடியும்.

இவ்வாலயத்தில் மூலவராக அமர்ந்து அருளாட்சி செய்யும் நரசிங்கமூர்த்தியின் தோற்றம் பார்ப்பவர்களுக்கு அச்ச உணர்வு ஏற்படும். அந்த அளவில் தோன்றினாலும்கூட தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு கருணையை மட்டுமே வாரிவழங்குகிறார்.

இரண்யனை வதம் செய்தபிறகு உக்கிர கோபத்துடன் அக்கினி போன்று நரசிம்மரின் தோற்றம் இருந்ததால், அவரை அணுகுவதற்கு தேவர்களும், முனிவர்களும் பயந்து நடுங்கினர். தயார் மகாலட்சுமி கூட பெருமாளின் அருகே செல்ல தயங்கினார்.

ஆனால் கும்பிட்ட கரங்களுடன் பக்தன் சிறுவன் பிரகலாதன் எந்தவித பயமுமின்றி அருகில் சென்றபோது, அவனை வாரி அணைத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டார் நரசிங்கர். இதன்மூலம் பெருமாள் எந்த கோபத்தில் இருந்தாலும் தன்னை வணங்கும் பக்தர்களிடம் கருணை யைக் காட்ட தயங்கமாட்டார் என்பதையே உணர்த்துகிறது.

இரணியனுக்கு அஞ்சி அவன் துன்புறுத் தலைத் தாங்கமுடியாமல் முனிவர்களும் ரிஷிகளும், தவயோகிகளும் காட்டிற்குச் சென்று மறைந்து வாழ்ந்தார்கள். நரசிங்கப் பெருமாள் இரண்யனை வதம்செய்து முடித்தபிறகு அவரைத் தேடிவந்த முனிவர்கள், ரிஷிகள் தங்களுக்கும் நரசிம்ம அவதார கோலத்தைக் காட்டியருளுமாறு வேண்டினர். அவர்களது வேண்டுகோளை ஏற்ற நரசிங்கப் பெருமாள் தமிழகத்தில் சிங்கிரி கோவில், பூவரசன் குப்பம், பரிக்கல், சோளிங்கர், நாமக்கல், அந்தி-, சிங்கப்பெருமாள் கோவில், சித்தனவாடி ஆகிய எட்டு இடங்களில் தனது நரசிம்மர் கோலத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் முதல் கோவிலாக சிங்கிரி நரசிங்கப் பெருமாள் கோவில் விளங்கிவருகிறது.

இவரை தரிசிக்க முடிவெடுத்து விட்டீர்கள் அல்லவா? புறப்பட்டு வாருங்கள்.

அமைவிடம்: கடலூர்- புதுச்சேரி சாலையில், கடலூரி-ருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியி-ருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது தவளக்குப்பம். இங்கிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அபிஷேகப்பாக்கம் பகுதியில் அமைந் துள்ளது சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம்.

காலை 7.30 மணிமுதல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும். தொடர்புக்கு 0413- 2199774.

இவரை தரிசித்து முடித்ததும், இவருக்கு நேர்மேற்கே ஒரே நேர்க்கோட்டில் புராணங்கள் வழிகாட்டிய பாதையில் 18 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணத்தைத் தொடங்குவோம். அங்கே பூவரசன் குப்பத்தில் இவரை நோக்கி கிழக்குமுகமாக அமர்ந்துள்ள லட்சுமி நரசிம்மரையும் அவசியம் வணங்கவேண்டும். அதற்குரிய காரணங்கள், புராணவரலாறுகள் நிறைய உள்ளன. அதுகுறித்து அடுத்த இதழில் தொடர்வோம்.