"காடு வரச் சொல்லுகிற காலமாகிய, எமன் பாசக்கயிற்றை கழுத்திலிட்டு சுருக்கும் நேரத்திலா முருகப்பெருமானின் பெருமைப் பாடல்களை கற்பது?' என கேள்வியெழுப்பும் அருணகிரியார், எப்போதும் முருகன் பாடல் களைக் கற்க வேண்டும் என்பதையும் சொல்லி யிருக்கிறார்.
பாடல்: 2
அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.
பொருள்: நம்முடைய தீவினைகளை அழித்து, மீண்டும் அத்தீவினைகள் உண்டாகாதபடி; கூர்மை குன்றா வேலாயு தத்தை கையில் பிடித்திருக்கும் கந்தவேலனின் சிறப்புகளைச் சொல்லும் பாடல்களை அன்புடன் மனம் விரும்பி, எழுத்துப் பிழை, பொருட் பிழை இல்லாதபடி இன்னும் கற்றுக் கொள்ளாதவர் களே; நெருப்பு கனன்று எரிகிறது போல, கங்குபோல் இருக்கும் விழி களை விரித்து, புகை கிளம்பும்படி சீறுகிற கொடிய எமன், பாசக் கயிற்றை வீசி, கழுத்திலே சுருக் கிட்டு இழுக்கின்ற அந்த நாளிலேயா முருகப்பிரானின் பெருமைப் பாடல்களை கற்க ஆரம்பிப்பது?
பாடியவனின் பிழை!
சுவாமி மலையில் முருகனின் பக்தர் ஒருவருக்கு தீராத வயிற்று வலி. அருணகிரி யார் பாடிய "திருப்புகழை' தினமும் பாடினால் வயிற்றுவலி தீரும் என ஆன்மிக அனுபவஸ்தர் கள் சொல்ல, சுவாமிமலையில் முருகன் சன்னதியில் நின்று திருப்புகழைப் பாடி வந்தார் அந்த பக்தர். ஆனால் தினமும் தப்பும், தவறுமாக பாடிவந்தார். ஒருநாள் முருகன் அந்த பக்தனின் கனவில் சென்று "இனி உனக்கு வயிற்றுவலி வராது. ஆனால் என் தொண்டன் அருணகிரி பாடியதை என் முன்னால் தப்புத்தப்பாக பாடினாயே, பிழையின்றி கற்றுக்கொள்' என்றாராம்.
பிழைச் சொற்களுடன் திருப்புகழை பாடியதற்கே முருகப்பெருமானின் ஆசியைப் பெற்றார் அந்த பக்தர்.
உரிய முறையில் தினமும் முருகனின் புகழ்கூறும் பாடல்களைப் பாடிவந்தால் எவ்வளவு நன்மை. உரிய காலத்திலேயே பிழையின்றி கசடறக் கற்று பாடுதல் வேண்டும்.
அதைவிடுத்து, எமன் அழைக்கும் நேரத்தில் பாடுவதால் பயனில்லை.
பக்தர்களுக்கு விரைந்து உதவும் கடவுளாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.
பக்தர்களை எமன் அணுகும்போது, முருகன் எமன் முதுகில் ஓங்கி ஒரு அறை வைப்பாராம். அந்த அடியில் எமனின் முதுகு இரண்டாக பிளந்ததுபோல் ஆகிவிடுமாம்.
பாண மலர்... எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலின் இறுதியில்...
...காண அ
"காடு வரச் சொல்லுகிற காலமாகிய, எமன் பாசக்கயிற்றை கழுத்திலிட்டு சுருக்கும் நேரத்திலா முருகப்பெருமானின் பெருமைப் பாடல்களை கற்பது?' என கேள்வியெழுப்பும் அருணகிரியார், எப்போதும் முருகன் பாடல் களைக் கற்க வேண்டும் என்பதையும் சொல்லி யிருக்கிறார்.
பாடல்: 2
அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.
பொருள்: நம்முடைய தீவினைகளை அழித்து, மீண்டும் அத்தீவினைகள் உண்டாகாதபடி; கூர்மை குன்றா வேலாயு தத்தை கையில் பிடித்திருக்கும் கந்தவேலனின் சிறப்புகளைச் சொல்லும் பாடல்களை அன்புடன் மனம் விரும்பி, எழுத்துப் பிழை, பொருட் பிழை இல்லாதபடி இன்னும் கற்றுக் கொள்ளாதவர் களே; நெருப்பு கனன்று எரிகிறது போல, கங்குபோல் இருக்கும் விழி களை விரித்து, புகை கிளம்பும்படி சீறுகிற கொடிய எமன், பாசக் கயிற்றை வீசி, கழுத்திலே சுருக் கிட்டு இழுக்கின்ற அந்த நாளிலேயா முருகப்பிரானின் பெருமைப் பாடல்களை கற்க ஆரம்பிப்பது?
பாடியவனின் பிழை!
சுவாமி மலையில் முருகனின் பக்தர் ஒருவருக்கு தீராத வயிற்று வலி. அருணகிரி யார் பாடிய "திருப்புகழை' தினமும் பாடினால் வயிற்றுவலி தீரும் என ஆன்மிக அனுபவஸ்தர் கள் சொல்ல, சுவாமிமலையில் முருகன் சன்னதியில் நின்று திருப்புகழைப் பாடி வந்தார் அந்த பக்தர். ஆனால் தினமும் தப்பும், தவறுமாக பாடிவந்தார். ஒருநாள் முருகன் அந்த பக்தனின் கனவில் சென்று "இனி உனக்கு வயிற்றுவலி வராது. ஆனால் என் தொண்டன் அருணகிரி பாடியதை என் முன்னால் தப்புத்தப்பாக பாடினாயே, பிழையின்றி கற்றுக்கொள்' என்றாராம்.
பிழைச் சொற்களுடன் திருப்புகழை பாடியதற்கே முருகப்பெருமானின் ஆசியைப் பெற்றார் அந்த பக்தர்.
உரிய முறையில் தினமும் முருகனின் புகழ்கூறும் பாடல்களைப் பாடிவந்தால் எவ்வளவு நன்மை. உரிய காலத்திலேயே பிழையின்றி கசடறக் கற்று பாடுதல் வேண்டும்.
அதைவிடுத்து, எமன் அழைக்கும் நேரத்தில் பாடுவதால் பயனில்லை.
பக்தர்களுக்கு விரைந்து உதவும் கடவுளாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.
பக்தர்களை எமன் அணுகும்போது, முருகன் எமன் முதுகில் ஓங்கி ஒரு அறை வைப்பாராம். அந்த அடியில் எமனின் முதுகு இரண்டாக பிளந்ததுபோல் ஆகிவிடுமாம்.
பாண மலர்... எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலின் இறுதியில்...
...காண அருணையில் நிற்கும் கதிர் வேலா
காலன் முதுகை விரிக்கும் பெருமாளே
-என அருணகிரியார் பாடியுள்ளார்.
தன் பக்தர்களின் உயிரை எடுக்கவரும் எம தூதர்களையும், எமனையும் மிரட்டி பக்தரை காப்பாற்றி விடுவாராம் முருகன். இதனல் பிறப்பு- இறப்பு சமநிலை பாதிக்கப்படுமே என நினைக்கலாம். ஆனால் தன் பக்தர்களை பிறவித் துன்பக் கடலிருந்து கரையேற்றி, பிறப்பறுத்து, தன் பக்தனை தன்னுள் ஆட்கொண்டுவிடுவாராம் முருகப்பெருமான். ஞானக் கடவுளான முருகனிடம் சீடனைப் போல் தங்களை பாவித்துக்கொள்ளும் பக்தர்கள் எதிர்பார்ப்பதே "பிறவித்துயர் நீக்கப்பா' என்பதுதானே.
முருகனின் முதல் வெற்றி!
முருகன் ஞானத்தின் கடவுள் மட்டுமல்ல; வெற்றியின் கடவுளுமாவார். வெற்றிவீரனாக தேவலோகம் கொண்டாடிய முருகப்பிரானின் முதல் வெற்றி என்பது, தேவர்களுக்கு ஆதரவாக நடத்திய யுத்தம். இந்த யுத்தத்தில் தன் வேல் வீச்சால் மலையையே பிளந்தார்.
பாடல்: 3
தேரணி யிட்டு புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்ததுசூர்ப்
பேரணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே.
பொருள்: திரிபுரத்தை அழித்த அந்தப் போரில் அசுரப்போரில் சிவன் மட்டுமே களத்தில் நின்ற வீரன். அவரின் தேர் முன்னே செல்ல, அதன் பின்னால் வானவர்களாகிய தேவர்கள்- முனிவர்களின் தேர்கள் அணி வகுத்துச் சென்றன. ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்த அசுரர்களின் திரிபுரம் எனும் முப்புரம் ஆகிய மூன்று நகரங்களை யும் எரித்தவனாகிய சிவனின் மகன் முருகப் பெருமான்; தன் சிவந்த கைகளினால் கூர்மை யான வேலை வீசி கிரௌஞ்ச மலையைத் தாக்கினார். இதில் தூள் தூளாகச் சிதறியது அந்த அரக்க மலை. நீண்ட நேர்வரிசையில் யுத்தக் களத்தில் நின்றிருந்த அரக்கர் படைகள் முருகனின் வேல் பாய்ச்சலில் நெளிந்து ஓடியதால், அரக்கர்களின் வலுவான படை யின் அணிவகுப்பு குலைந்தது. அரக்கப்படை சிதறி ஓடியதால் தேவேந்திர உலகம் அரக் கப் படைகளிடமிருந்து முருகப்பிரானால் காப்பாற்றப்பட்டது.
பெண் வயிற்றில் பிறக்காதவன்!
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடப்பது என்பது, ரத்தம் சிவப்பு நிறம் என்பதைப்போல இயல்பானது.
அடிக்கடி மல்லுக்கட்டுவார்கள். தேவர்களின் உலகமான இந்திரலோகத்தைக் கைப்பற்றுவது தான் அசுரகுலத்தின் பிரிவினரான தானவர்கள் மற்றும் தைத்தியர்களின் நோக்கமாக இருந்தது.
பிரம்மாவுக்கு படைப்புத் தொழிலில் உதவியாக இருந்த பிரஜாபதிகளில் ஒருவர் தட்சன். இவருடைய 13 மகள்களையும் மணந்தவர் சப்தரிஷிகளில் ஒருவரான காசியபர். இவருக்கும் தனுவிற்கும், பிறந்த; அசுரர்களில் ஒருவகையினர்தான் இந்த தானவர்கள்.
காசியப முனிவருக்கும் தனுவின் சகோதரி திதிக்கும் பிறந்தவர்கள் அரக்கர்கர்களின் இன்னொரு வகையினரான தைத்தியர்கள்.
கடும் தவம் இருந்து பிரம்மனிடம் அரிய வரங்களைப் பெற்றவர்கள் இவர்கள்.
இரணியகசிபு, இரணியாட்சன், பிரகலாதன், மகாபலி, இராவணன் போன்ற புகழ்பெற்ற அரசர்கள் அசுரர் இனத்தைச் சேர்ந்தவர்களே என்கிறது புராணங்கள்.
இந்த அசுரர்குலத்தைச் சேர்ந்த தாரகனின் மகன்களான தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூவரும் திரிபுரங்களை ஆட்சிசெய்து வந்தனர்.
முப்புரம் எனப்படும் திரிபுரம் என்பது அசுரர்களுக்கு அழகிய கட்டடங்களை கட்டித் தரும் மயன் நிர்மாணித்த; கோட்டைகளுடன் கூடிய மூன்று அழகிய நகரங்களாகும். இவை அந்தரத்தில் வானத்தில் மிதந்தபடி இருக்கும். தேவர்களுக்குப் போட்டியாக ஆகாயத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள் அசுரர் கள். ஒரு வீட்டை விலைக்கி வாங்குபவர்கள், நாளடைவில் தங்களது சாம பேத தண்டங்களை உபயோகித்து பக்கத்து வீட்டையும் விலைக்கு வாங்குவதுபோல, தேவலோகத்தைக் குறிவைத்து, தேவர்களுக்கு கடும் தொல்லைகள் கொடுத்துவந்தனர்.
இதற்கு முடிவுகட்டும்படி தேவர்களின் அரசனான இந்திரன், தேவர்களின் தலைவ னான சிவனிடம் கேட்டுக்கொள்ள, அவரும் சம்மதித்தார்.
மகாபாரத இதிகாசத்தில் கர்ண பருவம் பகுதியில் சிவன் திரிபுரம் எரித்த கதை சொல்லப்பட்டுள்ளது.
தேவர்கள் ஒரு விசேஷமான தேரை உண்டாக்கினர்.
நான்கு வேதங்களையும், நான்கு குதிரை களாக்கினர். பூமியே தேர் தட்டாய் அமைந்தது.
தேரில் வான நட்சத்திரங்கள் பதிக்கப்பட்டி ருந்தன. சந்திரனும், சூரியனும் தேர்ச் சக்கரங் களாயினர்.
"இவ்வளவு சிறப்புமிக்க தேரில் வீரனாக அந்த மகாதேவனே செல்லவிருக்கிறார்.
அவருக்கு தேரோட்டியாக இருக்க தகுதியானவர் நீங்களே' என தேவர்கள் பிரம்மனிடம் சொள்ள, அவரும் சம்மதித்து, சிவனுக்கு தேரோட்டினார்.
திரிபுரத்தை நோக்கிச் சென்றது தேர்.
தன் சக்தியால் முதலில் மூன்று நகரங்களை யும் நெருங்கச் செய்தார் சிவன். பின் தனது அனல் கக்கும் அம்பை ஏவினார். மூன்று நகரங் களும், அதிலிருந்த அரக்கர்களும் தீக்கீரை யாகினர். பூமியை நோக்கி எரிந்துகொண்டே வந்த திரிபுரத்தை கடலில் விழும்படிச் செய்தார் சிவன்.
அதைத்தான் "தேரணியிட்டு புரமெரித் தான்' எனப் பாடியுள்ளார்.
"தேரணியிட்டு புரமெரித்தவனின் மகன்' முருகன் பெற்ற முதல் வெற்றிக் கதைக்கு வருவோம்.
மகாபாரதத்தில் சல்லிய பர்வம் பகுதியில் முருகப்பெருமான் கிரௌஞ்ச மலையைப் பிளந்த கதை சொல்லப்பட்டுள்ளது. கந்த புராணத்திலும் உள்ளது.
இன்றைய கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் இருக்கிறது கிரௌஞ்சகிரி எனப்படும் கிரௌஞ்ச மலை. அரக்கன் கிரௌஞ்சன் பிரம்மாண்ட வடிவ கொக்காக (கிரௌஞ்ச பறவை) உருமாறி அவ்வழியே வரும் மனிதர்களை வேட்டையாடி உண்பான். பிறகு மலையாக மாறி அசையாமல் இருப்பான். அதனால்தான் அந்த மலைக்கு கிரௌஞ்ச மலை எனப் பெயர் வந்தது. இந்திரன் உள்ளிட்ட தேவர் களுக்கு மிகவும் இம்சை கொடுத்துவந்தான் கிரௌஞ்ச அரக்கன்.
இமயத்திலிருந்து பொதிகை மலைக்கு வந்துகொண்டிருந்தார் அகத்திய முனி. வழியில் கிரௌஞ்சன் பார்த்தான். மாய வடிவம் எடுத்து திகைக்க வைப்பதில் வல்லவ னான அவன், அகத்தியரைச் சீண்ட, ஒரு அழகிய மலைபோல் அசையாது நின்றான்.
அந்த மலைக்குள் குகைப் பாதை ஒன்றும் தெரிந்தது. இதன் வழியே போனால் பொதிகையின் தூரம் குறையும் என எண்ணி நுழைந்தார் அகத்தியர். ஆனால் அந்த மாயப் பாதை ஓரிடத்தில் அடைபட்டது. வேறொரு பாதை தெரியவும் அதன் வழியே போனார். அதுவும் சிறிது தூரம் சென்றதும் அடைபட்டது. இப்படி மாயப் பாதைகள் அகத்தியரை அவதியுறச் செய்தது. தன் ஞானத்தால் "இது அரக்கன் கிரௌஞ்சனின் மாயை' எனக் கண்டுகொண்டு கோபமான அகத்தியர், "கொடிய அரக்கா! நீ உன் உண்மை உருவான அசுர வடிவத்தை இழந்து, இந்த மலையாகவே நின்றிடுவாயாக. மலையான நீ அசுரர்கள் தங்குமிடம் ஆவாய். தேவர்களுக்குத் தொடர்ந்து தீங்கிழைக்கும் நீ சிவனின் குமாரருடைய வேல் படையால் அழிவாய்' என சாபமிட்டுவிட்டுச் சென்றார்.
கிரௌஞ்சன் வேறு உருவம் எடுக்க முடியாமல் மலையாகவே நின்றான். மலையாகிவிட்ட போதிலும் அவனது மனம் மாறவில்லை. கொடுஞ்செயல் புரிவதைத் தொடர்ந்தான். தன் பக்கமாக வருகிறவர்களை விழுங்கி வந்தான்.
அரக்கன் தாரகனிடம் நட்புகொண்டதால் தாரகன் கிரௌஞ்ச மலையில் அரண்மனை அமைத்து, பெரும் படையுடன் அங்கே இருந்தான். கிரௌஞ்ச மலை கடலோரத்தில் அமைந்திருந்தது. கடலுக்குள் இருக்கும் தீவில் இருந்த மகேந்திர மலையில் சூரபத்மன் அரண்மனை இருந்தது. சூரபத்மன் அரண் மனைக்கு பாதுகாப்பு அரணாக கிரௌஞ்ச மலை இருந்தது. தேவர்களை சூரபத்மனும் துன்புறுத்தி வந்த நிலையில், அவனை அழிக்க வேண்டுமென முருகப் பெருமானி டம் கோரிக்கை வைத்தனர் தேவர்கள். முருகப் பெருமானும் முன்வந்தார்.
இதற்கு ஒரு காரணம் உண்டு.
காசியப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்தவனான சூரபத்மன், கடும்தவம் செய்து சிவபெருமானிடம் சில சக்திவாய்ந்த வரங்களைப் பெற்றான். அதில் முக்கியமானது இந்திர ஞாலம் எனும் தேர். அத்துடன் "பெண்ணின் வயிற்றில் பிறக்காதவனால்தான் எனக்கு மரணம் ஏற்பட வேண்டும்' என்கிற வரத்தையும் வாங்கிக் கொண்டான். இதனால் அதீத சக்திகள் மிக்கவனாக தேவர்களையும், நல்ல பெருமக்களையும் துன்புறுத்தினான். இவனின் கொடுமைகள் உச்சத்தை எட்டிக் கொண்டிருந்த நேரத்தில்...
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த ஆறு நெருப்புப் பொறிகள் வந்தன. அதனை வாயுபகவானையும், அக்னி தேவனையும் அழைத்து கங்கை நதியிடம் விடச் சொல்லி, அந்த மிக வெப்பமான நெருப்புப் பொறிகளை எடுத்துச்செல்லும் வலிமையையும் கொடுத்தார் சிவன். அவர்கள் கங்கையில் விட்டனர். கடும் வெப்பத்தால் வற்றிய கங்கை தன்னிடம் விட்ட ஆறு பொறிகளையும் எடுத்துப் போய்ச் சரவணப் பொய்கையில் விட்டது. அதன்பின் கங்கை வழக்கமான நிலைக்கு வந்தது. சரவணப் பொய்கையில் விடப்பட்ட அவை ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகைப் பெண்களிடம் ஒப்படைத்தனர் விஷ்ணுவும், பிரம்மாவும் மற்றும் தேவர்களும். பார்வதி ஒருநாள் குழந்தைகள் ஆறு பேரையும் தழுவும்போது அவர்கள் ஒன்றாய் "சண்முகன்' ஆனார்கள். (ஷண்முகம் எனும் சொல்லுக்கு ஆறு என்று பொருள்).
சூரபத்மன்மீது முருகன் படையெடுத்து வருவதை அறிந்த தாரகன், அவரை எதிர்த்தான். முருகனோ தன் படைத் தளபதி வீரபாகுவைத் தூதாக அனுப்பினார். அவர் தனது தம்பிகளுடன் கிரௌஞ்ச மலையை அடைந்தார்.
கிரௌஞ்சன் பல குகைகளை உருவாக்கி வீரபாகுவையும் அவனுடைய தம்பிகளையும், படை வீரர்களையும் குகைக்குள் தந்திரமாக வரவழைத்து, அவர்கள் உள் நுழைந்ததும் குகைகளை மூடிவிட்டான். காற்றோட்டமில் லாததால் எல்லோரும் மயங்கி விழுந்தனர்.
இதையறிந்த முருகப் பெருமான், தனது வேலாயுதத்தைக் கிரௌஞ்சகிரிமீது ஏவினார்.
அது அந்த மலையைத் தூள்தூளாக்கியது. மலையாக இருந்த கிரௌஞ்சனும் அழிந் தான்; தாரகனும் அழிந்தான். குகையில் அகப் பட்டிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
இதுவே முருகப் பெருமானின்; முருகப் பெருமானுடைய வேலாயுதத்தின் முதல் வெற்றியாகும். அதன்பின் அவர் தொடர்ந்து வெற்றிவேலன்தான்.
(பாட்டு வரும்)