வ்வொரு மனிதரும் தங்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள், அவர்களின் முன்னோர் செய்த பாவங்களால் பல்வேறு இடையூறுகளையும், தடைகளையும், குடும் பக் கஷ்டங்களையும் இந்த ஜென்மத்தில் அனுபவித்துவருகிறோம். எப்படிப்பட்ட பாவத்திற்கும் பிராயச்சித்தம் தரக்கூடியவர் பரம்பொருளான இறைவன் அப்படிப் பட்ட இறைவன் பாவங்களுக்குப் பிராயச் சித்தம் தரக்கூடிய ஒரு கோவிலைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

ee

உறையூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிசெய்து வந்தான். பராந்தக சோழ மன் னன். அவனது ஆட்சிக்காலத்தில் உருவானது செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில். அப்போது கடம்பவனப் பகுதியாக இருந்த இந்த நடுநாட்டுப் பகுதியில் ஒரு வியாபாரி, வியாபார விஷயமாக இந்தப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருட்டிவிட்டது. காட்டு விலங்குகளால் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்த அந்த வியாபாரி, அன்றிரவை காட்டிலேயே கழிக்கத் தீர்மானித்தார்.

ஒரு மரத்தின்மீது ஏறி வாகாக இருந்த ஒரு கிளையில் அமர்ந்து கொண்டார். அப்போது ஒரு காட்சி.

Advertisment

பந்துபோன்ற உருவம் ஒரு தீப்பிழம் பாக ஆகாயத்திலிருந்து வந்தது. அது இரண்டாகப் பிளந்து, அதிலிருந்து ஒரு சிவலிங்கம் தரையில் அமர்ந்து ஜொலித்தது. அதேநேரம் வானிலிருந்து தேவர்கள் அங்கே இறங்கிவந்தனர். தீப்பிழம்பாக இருந்த சிவலிங்கத்தைச் சுற்றி அமர்ந்த தேவர்கள், வேத மந்திரங்களைக் கூறி, பூக்களைத் தூவி பூஜைசெய்தனர்.

இந்தக் காட்சிகளை மரத்தில் அமர்ந்தி ருந்த வியாபாரி பார்த்து மெய்சிலிர்த் துப் போனார். தான் காண்பது கனவா? நனவா? இதைக் கண்ட படியே உடல் அசதியினால் மரக்கிளை யிலேயே தூங்கிப்போனார்.

காலையில் பறவைகள் ஒலிகேட்டு எழுந்து பார்த்தார். சிவலிங்கம் மட்டும் அங்கே இருந்தது. அதற்குப் பூஜைசெய்த தேவர்கள் யாரும் தென்படவில்லை. இதை மனதில் அசைபோட்டபடி காட்டைவிட்டு வெளியே வந்த வியாபாரி, அக்கம்பக்கம் கிராமத்தினருக்கு இதைத் தெரிவித்ததோடு, பராந்தக சோழன் அரண் மனைக்குச் சென்று, ஒளிப்பிழம்பான பந்திலிருந்து சிவலிங்கம் உருவானதையும், தேவர்கள் பூஜை செய்ததையும் தெரிவித்தார். அப்போது அங்கு விருந் தினராக வந்திருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனும் இந்த அதிசயத்தைக் கேட்டு, அவனும் சோழ மன்னருடன், படை பரிவாரங்களுடன் வியாபாரி கூரிய அந்த இடத்திற்கு விரைதுவந்தனர்.

Advertisment

சிவலிங்கம் தோன்றிய இடத்தைப் பலரும் தேடினர். அப்போது அங்கு ஒரு முதியவர் சிவப்புநிற கரும்பைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்து செல்வதைப் பார்த்த வியாபாரியும் மன்னனும், "இங்கே பந்து போன்று ஒளிப் பிரவாகமாகத் தோன்றி இரண்டாகப் பிளந்து அதில் சிவலிங்கம் தோன்றியது. அது எந்த இடத்தில் உள்ளது?' என்று கேட்டனர்.

அந்த முதியவர் சிவலிங்கம் இருந்த இடத்தைக் காண்பித் தார். பிறகு முதியவர் கிழக்குநோக்கி மறைந்தார்.

ee

அந்த திசையைப் பார்த்தபோது, அங்கிருந்த மலையின்மீது முருகப்பெருமான் தண்டாயுதபாணி யாக, கையில் கரும்புடன் நிற்பதைக் கண்டனர். சிவலிங் கம் இருக்கும் இடத்தை முதியவர் வடிவத்தில் வந்து அடையாளம் காட்டியது அந்த முருகப்பெருமானே என்பதை உணர்ந்து பரவசமடைந்தனர். அதன்பிறகு மன்னன் ஏகாம்பரேஸ்வரருக்கும், மலையில் தோன்றிய முருகன் தண்டபாணிக்கும் கோவில் எழுப்பினான்.

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அம்பாள் காமாட்சி என்ற பெயருடன் அருளாட்சி செய்துவருகிறாள்.

இவளுக்கு எதிரே குபேரன் பக்தர்களுக்கு செல்வத்தை வாரிவழங்கி வருகிறார். இவ்வாலயத் தில் குபேரன் தன் மனைவி சித்ரலேகா வுடன் தாமரை மலர்மேல் அமர்ந்து, தனிச்சந்நிதி கொண்டுள்ளார். குபேரன் சந்நிதியில் ஒவ்வொரு மாதமும் அவரது ஜென்ம நட்சத்திர மான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர ஹோமம் நடத்தப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் அதில் கலந்துகொண்டு குபேரனின் அருளாசியினால் செல்வவரம் பெற்று வாழ்கிறார்கள்.

இங்கு குபேரன் சந்நிதி எப்படி உருவானது? பிரம்மா வின் பேரன் விஸ்வரன். இவருக்கும் சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாச முனிவ ரின் மகளான இளவிதை என்பவளுக்கும் திருமண மானது. அவர்களுக்கு பிறந்த வர்தான் குபேரன். அடுத்து, அசுரகுலத் தலைவரான விஸ்வரன் சுமாலியின் மகள் கேகசியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குப் பிறந்தவர்கள்தான் இராவ ணன், கும்பகர்ணன், வீபீஷணன், சூர்ப்பநகை. குபேரன்- சித்ரலேகா தம்பதிகளுக்கு நளகூபன், மணிக்ரீவன் என இரண்டு பிள்ளைகள்.

சிவபக்தரான குபேரன் சிவபெருமானை வேண்டி 800 வருடங்களுக்குமேல் தவமிருந்தார். குபேரனின் தவம் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தியது அதன் பயனாக சிவபெருமான் குபேரனுக்கு செல்வத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை வரமாகத் தந்தார். சிவனிடம் வரம்பெற்று செல்வ அதிபதி யாகிய குபேரன் திருப்பதி ஏழுமலையானுக்குக் கடன் கொடுத்ததாக கதை உண்டு. தற்போதும் திருப்பதி வேங்கடேசப் பெருமாளுக்கு பக்தர்கள் அளிக்கும் காணிக் கையில் ஒரு பகுதியை குபேரனுக்குக் கொடுத்து வருவதாக ஒரு ஐதீகம் உள்ளது.

அதேபோல் பிரம்ம தேவரை வேண்டி குபேரன் தவமிருந்தார். தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் குபேரனுக்குக் காட்சி யளித்தார். அவரிடம் வடதிசையின் பாலக னாக வரம்பெற்றார்.

(எட்டுத்திக்கு பாலகர் களில் ஒருவர்.) பல மதங்களிலும் குபே ரனை வெவ்வேறு பெயர் களில் வணங்கி வருகி றார்கள். உதாரணத் திற்கு புத்த மதத்தில் வைஷ்ரணவா என்றும், ஜைன மதத்தில் சர்வானு பூதி என்றும், வழிபட்டு வருகிறார்கள்.

இவ்வாலயத்தில் விநாயகப் பெருமான் வரகுண கணபதி என்ற பெயரில் உள்ளார். வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மூலவரான ஏகாம்பரேஸ்வரருக்கு இடப்புறம் அருளாட்சி செய்கிறார். மேலும் இவ்வாலயத்தில் 12 ராசிகள், அதற் குரிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, குபேரன் 12 தூண்களில் மீன் ஆசனத்தில் அமர்ந்து அவர்களின் வறுமையைப் போக்கிவருகிறார். பக்தர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில், அவரவர் ராசிக்குரிய தூண்களிலுள்ள குபேர பகவானுக்கு பச்சை வண்ண ஆடை உடுத்தி விளக்கேற்றி வழிபடுகிறார்கள். "பக்தர்களுக்கு குபேரன் சந்நிதியில் பச்சைநிறக் குங்குமம் வழங்கப்படுகிறது. இது செல்வச் செழிப்பு தரகூடியது'' என்கிறார் ஆலய அர்ச்சகர் ராஜேஷ்குமார். "பச்சைநிறக் குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொண்டால் வறுமையிலிருந்து விடுபடலாம். அதை இட்டுக்கொண்டு செல்பவர்களுக்கு அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும் என்ற பலமான நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது'' என்கிறார் பெரம்பலூர் பக்தர் கார்த்திகேயன்.

திருமணம் சம்பந்தமான பேச்சுகளை இந்த ஆலயத்தில் துவங்கினால், ஈசன் ஏகாம்பரேஸ் வரர்- அம்பாள் காமாட்சி கருணையினால் சுபமாக முடிகிறது. அதேபோல் குழந்தை வரம், உடல்நலம், வழக்குகளில் வெற்றி, இழந்த பொருட்களை மீட்பது, வியாபாரத்தில் வெற்றி, இப்படி அனைத்துவிதமான காரியங்களிலும் தடையின்றி நடக்க இறைவனை வழிபடுகிறார் கள் பக்தர்கள். பால், தயிர், எலுமிச்சம் சாறு, சந்தனம், எண்ணெய், தேங்காய் ஆகியவற்றைக் காணிக்கையாக வழங்குகிறார்கள்.

அம்மையும் அப்பனும், எதிரே குன்றின்மீது கையில் கரும்புடன் அமர்ந்திருக்கும் மகன் தண்டபாணியைப் பார்த்தபடி அமர்ந்துள்ள னர். செட்டிக்குளம் மலை காவடி வடிவத்தில் உள்ளது. முருகப்பெருமானுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு செய்வது அனைவரும் அறிந்தது. அந்த காவடியின் ஒரு முனையில் இடும்பனும், இன்னொரு முனையில் கடம்பனும் இருப்பதாக ஐதீகம். அதன்படி இந்த மலையும் காவடி வடிவத்தில் இடும்ப னும் கடம்பனும் இருப்பதுபோன்று காட்சி தருகிறது. இந்த மலையில் அமர்ந்துள்ள தண்டபாணி மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் எல்லா ஆலயங்களி லும் முருகன் கையில் வேலுடன் இருப்பார். இங்கு மட்டும் கரும்புடன் நிற்கிறார். இதற்குக் காரணம் அசுரன் சூரபத்மனை வதம் செய்து விட்டு கோபத்துடன் திரும்பி வந்தார்.

அந்த சினத்தோடு இந்த மலைமீது அமர்ந்து கொண்டாராம்.

அப்போது சிவபெருமானும், உமாதேவி யாரும் இங்குவந்து தங்கள் இளைய மகன் முருகனின் கோபத்தை சாந்தப்படுத்தி னார்கள். அப்போது உமாதேவியார் தன் கையிலிருந்த கரும்பை முருகனிடம் தர, அதை ஏந்தியபிறகு முருகன் கோபம் மறைந்து சாந்தமானார். கரும்பு வெற்றியின் சின்னம் என்கிறார்கள் ஆலய அர்ச்சகர்கள்.

முருகப்பெருமான் கையில் கரும்புடன் முதியவர் வேடத்தில் சென்று சோழ மன்னன் பராந்தகனுக்கு சிவலிங்கம் இருக்குமிடத்தை அடையாளம் காட்டினார். மன்னருக்கு மட்டுமா? சாதாரண மனிதருக்கும் அடை யாளம் காட்டியுள்ளார். எப்படி? சில ஆண்டு களுக்கு முன்பு நடந்த சம்பவம். இந்தப் பகுதியை ஒட்டி உள்ளது நாட்டார்மங்கலம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அஞ்சலக அதிகாரி முத்துசாமி, முருகனுக்கு நிவேதனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டுதல் செய்தார். அதன்படி பத்துப்படி அரிசியை சமைத்து சாம்பார், பொரியல், கூட்டுவகைகளுடன் ஆலயத்தில் அன்னதானம் வழங்க கொண்டு வந்திருந்தார்.

எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள அந்த மலைக்கோவிலில் அந்த நேரம் பார்த்து யாரையும் காணவில்லை. இது என்ன சோதனை என்று தண்டபாணியை வேண்டி நின்றார் முத்துசாமி. அந்தநேரம் ஒரு முதியவர் அங்குவந்து, "ஐயா, பசிக்கிறது; சாப்பாடு போடுங்கள்'' என்றார். பத்துப்படி அரிசி சோற்றுக்கு ஒருவராவது வந்தாரே என்று, அந்த முதியவருக்கு உணவைப் பரிமாறினார். இவர் பரிமாறப் பரிமாற- முதியவர் தொடர்ந்து சாப்பிட, முத்துசாமி கொண்டு வந்திருந்த பாத்திரங்கள் அனைத் தும் காலியாகிவிட்டன. அதேநேரம் அங்கே சாப்பிட்ட முதியவர் மாயமாகிவிட்டார்.

அப்போதுதான் முத்துசாமி இது முருகனின் திருவிளையாடல் என்று உணர்ந்தார்.

இதுமட்டுமல்ல; இப்பகுதியிலுள்ள கிராம மக்கள் தங்கள் நிலங்களில் விளையும் தானியங்களை உணவாக்கி இந்த தண்ட பாணி கோவிலுக்குக் கொண்டுவந்து படைப்பது வழக்கம். அதேபோல் செட்டிக் குளம் கிராமத்தைச் சேர்ந்த இராமையா என்ற விவசாயி தன் நிலத்தில் விளைந்த கேழ்வரகு தானியத்தை சேமித் தார். அதில் முதன் முதலாக களி தயார் செய்து படைப்பதாக வேண்டிக்கொண் டார். அதன்படி அவர் மனைவி களி சமைக்க, அதைக் கூழாக்கி தண்டபாணிக்குப் படையலிட்டு, "அப்பனே முருகா! உனக்காக களியைக் கரைத்து கூழாக்கிப் படையில் போட்டுள் ளேன். வந்து குடிக்க வேண்டும்'' என்று சத்தம் போட்டு இரு கரம்கூப்பி அழைத்தார். அன்று பங்குனி உத்திரத் திருநாள். முருகப்பெருமான் தேரில் வீதியுலா வந்துகொண்டிருந்தார். அந்தத் தேர் ஓரிடத்தில் அப்படியே அசையாமல் நின்றுவிட்டது.

பக்தர்கள் தேர் சக்கரத்தில் ஏதோ தடுக்கிவிட்டதோ என்று சுற்றிலும் வந்து பார்த்தனர். எந்தத் தடையும் இல்லை. தேர் எப்படி தானாக நின்றது என்று புரியாமல் அனைவரும் திகைத்தனர். எவ்வளவோ முயற்சிசெய்து தேரை இழுத்துப் பார்த்தும் தேர் அசையவில்லை. அப்போது அசரீரீயாக ஒரு குரல், "பக்தர்களே, உங்களைப்போன்ற என்னுடைய பக்தன் இராமையா எனக்காக கூழ் செய்து படையல் போட்டுள்ளார். நீங்கள் அனைவரும் அவரது வீட்டுக்குச் சென்று அவர் கொடுக்கும் கூழைக் குடித்துவிட்டு வந்து தேரை இழுங்கள்' என்றது. அதன் படி பக்தர்கள் இராமையா வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கே கூழ் படையல் போடப்பட்டிருந்தது. அங்கு வந்த அனைவருக்கும் இராமையா தம்பதிகள் கூழ்கொடுத்து உபசரித்தனர். அனைவரும் கூழைக் குடித்துவிட்டு மீண்டும் வந்து தேரை இழுத்தனர். எந்தத் தடையும் இல்லாமல் தேர் மிக எளிதாக ஓடியது.

எல்லா சிவன் கோவில்களிலும் சிவனுக்கு முன்பாக உள்ள நந்தி தலையை இடப்புறமாகத் திரும்பிய நிலையில் இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நந்தி வலப்புறமாகத் திரும்பிய நிலையில் உள்ளது. இதற்குக் காரணம், சிவபெருமானுக்கு எதிரே மலையிலுள்ள முருகன் தனது தாய்- தந்தையரை வணங்குகிறார்.

அப்போது நந்தியின் தலை மறைக்கக்கூடாது என்பதற்காக அது தன் தலையைத் திருப்பிக் கொண்டதாம்.

இந்த ஆலயத்தில் அனைத்து விழாக்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

பூர்வ ஜென்ம பாவங்களையும் வறுமையையும் போக்கி பெருவாழ்வு தரும் இவ்வாலய இறைவனையும் குபேரணையும் மலைமீதுள்ள தண்டபாணியையும் தரிசிக்கவேண்டும் அல்லவா? பெரம்பலூர் மாவட்டத்தில், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிருந்து தெற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஆலத்தூர் உள்ளது. அங்கிருந்து மேற்கே எட்டு கிலோமீட்டர் தூரத்தில் செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர், தண்டாயுதபாணி ஆலயங்கள் உள்ளன.

காலை 7.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் கோவில் திறந்திருக் கும் ஆலத்தூர், பெரம்பலூர் பகுதிகளிலிருந்து செட்டிக்குளம் சென்றுவர அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.