ஒரு மனிதன் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர்முதல் மூன்று லிட்டர்வரை தண்ணீர் குடிக்க வேண்டுமென நமது முன்னோர் சொல்லிக் கொடுத் துள்ளனர். நவீன மருத்துவம் அதை இன்று உறுதிசெய்கிறது. இவ்வாறு தண்ணீர் குடிக்கும் நாம் உயிர்வாழ பிராணவாயு தேவைப் படுகிறது. அதற்கு இயற்கை வளங்கள் நன்றாக இருக்க வேண்டும். குறிப்பாக செடி, கொடிகளும், மரங்களும், வனங் களும் நலமாக இருக்கவேண்டும். பாதுகாக்கப்படவேண்டும்.
அப்படி பிராண வாயுவை இலவசமாக நமக்கு வழங்கிக்கொண்டிருக்கும் செடி, கொடிகளும், மரங்களும் தண்ணீர் குடிக்கவேண்டாமா? "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று வாழ்ந்த வள்ளல்பெருமான் பிறந்த மண்ணல்லவா?
ஆனால் இன்று என்ன நடக்கிறது? இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நம்மிடம் உள்ளதா? பெரும்பாலும் இல்லையென்றே சொல்ல வேண்டும். காரணம் தாய்வழிக் கல்வியை மறந்துபோனதே. தாய்வழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வி யென்பது சாதாரண விஷயமல்ல. திருவள்ளுவர் குறளைப் பார்ப்போம்.
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைந்து.'
ஒரு பிறப்பில் கற்ற கல்வி, ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தொடர்ந்து பாதுகாவலனாக நின்று உதவும் தன்மையுடையது. பின்வரும் குறள் கூறுவதையும் பார்ப்போம்.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.'
எண்ணென்று சொல்வதும், எழுத்தென்று சொல்வதுமாகிய இருவகை நூல்களையும், இவ்வுலகில் சிறப்பாக வாழ விரும்பும் மக்களுக்கு கண்ணென்று கூறுவர்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்வழிக் கல்வியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கல்வியென்பது பாரம்பரிய வழிபாடுகளி லிருந்து ஆரம்பிக்கிறது. இதற்கு நமது தாய்வழி முன்னோடிகளான 18 சித்தர்களே காரணமாக இருக்கின்றனர். இன்று நவீன அறிவியலைப் பற்றி புகழ்ந்து பேசும் நாம், அடிப்படை அறிவிய லின் தத்துவத்தை உணரவுமில்லை; புர
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர்முதல் மூன்று லிட்டர்வரை தண்ணீர் குடிக்க வேண்டுமென நமது முன்னோர் சொல்லிக் கொடுத் துள்ளனர். நவீன மருத்துவம் அதை இன்று உறுதிசெய்கிறது. இவ்வாறு தண்ணீர் குடிக்கும் நாம் உயிர்வாழ பிராணவாயு தேவைப் படுகிறது. அதற்கு இயற்கை வளங்கள் நன்றாக இருக்க வேண்டும். குறிப்பாக செடி, கொடிகளும், மரங்களும், வனங் களும் நலமாக இருக்கவேண்டும். பாதுகாக்கப்படவேண்டும்.
அப்படி பிராண வாயுவை இலவசமாக நமக்கு வழங்கிக்கொண்டிருக்கும் செடி, கொடிகளும், மரங்களும் தண்ணீர் குடிக்கவேண்டாமா? "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று வாழ்ந்த வள்ளல்பெருமான் பிறந்த மண்ணல்லவா?
ஆனால் இன்று என்ன நடக்கிறது? இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நம்மிடம் உள்ளதா? பெரும்பாலும் இல்லையென்றே சொல்ல வேண்டும். காரணம் தாய்வழிக் கல்வியை மறந்துபோனதே. தாய்வழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வி யென்பது சாதாரண விஷயமல்ல. திருவள்ளுவர் குறளைப் பார்ப்போம்.
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைந்து.'
ஒரு பிறப்பில் கற்ற கல்வி, ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தொடர்ந்து பாதுகாவலனாக நின்று உதவும் தன்மையுடையது. பின்வரும் குறள் கூறுவதையும் பார்ப்போம்.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.'
எண்ணென்று சொல்வதும், எழுத்தென்று சொல்வதுமாகிய இருவகை நூல்களையும், இவ்வுலகில் சிறப்பாக வாழ விரும்பும் மக்களுக்கு கண்ணென்று கூறுவர்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்வழிக் கல்வியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கல்வியென்பது பாரம்பரிய வழிபாடுகளி லிருந்து ஆரம்பிக்கிறது. இதற்கு நமது தாய்வழி முன்னோடிகளான 18 சித்தர்களே காரணமாக இருக்கின்றனர். இன்று நவீன அறிவியலைப் பற்றி புகழ்ந்து பேசும் நாம், அடிப்படை அறிவிய லின் தத்துவத்தை உணரவுமில்லை; புரிந்துகொள்ள மில்லை. ஆனால் நாம் அறிந்துகொள்ள முயற்சிக்காத பல்வேறு ரகசியங்கள் அடங்கிய நமது கல்விமுறையை அறிந்துகொள்ள முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. சீனாவிலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் தமிழ்வழிக் கல்விக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் தனியாக ஒரு துறையை உருவாக்கியுள்ளனர். ஜப்பானிலும் நமது தமிழ்வழிக் கல்வி மிகவும் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. இங்கே 18 சித்தர் பெருமக்கள் இயற்றியளித்துள்ள விஷயங்கள் வெறும் செய்யுள்கள் என்றும், இறை வணக்கப் பாடல்கள் என்றும் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது.
கட்டடக்கலை (Architecture) மற்றும் கட்டுமானம் (Construction)ஆகியவற்றின் முன்னோடியான நமது தஞ்சை பெரியகோவிலின் வயது 1,020 ஆண்டு களைக் கடந்து உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்தக் கோவிலைக் கட்டியவன் இராஜராஜ சோழன். இந்தக் கோவில் இப்படித்தான் உருவாகவேண்டுமென்று வழிகாட்டியவர் கருவூரார் எனும் சித்தராவார்.
அதைப்போல பிரபஞ்சத்தின் மையப் புள்ளி, புவியீர்ப்பு சக்தி சிதம்பரம் (தில்லை) நடராஜர் கோவில்தான் என்றால் மிகையாகாது. அணுவை உலகிற்கு உணர்த்தியவர், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துப் பேணிவளர்க்க வழி கூறியவர், கருவுறுதலின் மகத்துவத்தை முதலில் உலகிற்குக் கூறிய மருத்துவ மாமேதை பிரபஞ்ச விஞ்ஞானி திருமூலர் என்றால் நாம் எத்தகைய அறிவுக்கு சொந்தக்காரர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
அதுமட்டுமல்லாமல் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பதை உலகுக்கு முதலில் சொல்லியவரும் திருமந்திரச் சிற்பி திருமூலரே.
மேலும் மனிதர்கள் 4,448 வியாதிகளால் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கண்டறிந்து அத்தனை நோய்களையும் குணப்படுத்தும் வைத்திய (சிகிச்சை) முறைகளையும் கண்டறிந்து நமக்குக் கொடையாக வழங்கியவர்கள் சித்தர் பெருமக்களே ஆவர். அவர்களில் முன்னோடி குறுமுனி என்றழைக்கப் படும் அகத்தியர் பெருமானே ஆவார்.
இவ்வாறு கட்டடக்கலை, மருத்து வம், வானியல் ஆராய்ச்சி என்று சிறந்து விளங்கிய நமது முன்னோடிகள், ஆன்மிகம் என்றால் என்ன? இறைவழிபாடு எப்படி இருக்கவேண்டுமென்று பகுத்தறிந்து நமக்கு வழங்கியுள்ளனர்.
இந்தியாவிலுள்ள அனைத்து சமயங்களும் கி.பி. எட்டாம் நூற்றாண் டில் தொகுக்கப்பட்டவை என்று கருதப் படுகிறது. கி.மு. என்பது சுமார் இரண்டா யிரம் வருடங்களுக்கு முந்தையது. சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முந்தையதே நமது கலாச்சாரம், பண்பாடாகும். உதாரணமாக சைவ சித்தாந்தக் குறிப்புகள்மூலம், சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவானதே நமது இறைவழிபாடுகள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்தியாவில்- குறிப்பாக தமிழ்நாடு தான் நாம் வணங்கும், போற்றும் அனைத்து கடவுளர்களின் தாய்வீடு, பூர்வீக வீடு, சொந்தவீடு என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அதுதான் நமது எதிர்கால சந்ததிகள் வாழ்வதற்கும் வளர்வதற்கும் உதவும் ஒன்றாக இருக்கும். பொதுவாக ஆறு பிரிவுகளில் நாம் இறைவழிபாடு செய்துவருகிறோம். அதில் சைவம்- சிவனை முழுமுதற் கடவுளாகக்கொண்ட சமயப்பிரிவு. வைணவம்- விஷ்ணுவையும் அவரது அவதாரங்களையும் வணங்கும் சமயப்பிரிவு. சாக்தம்- சக்தியை (அம்பாள்) வணங்கும் சமயப்பிரிவு. கௌமாரம்- முருகப்பெருமானை வணங்கும் சமயப்பிரிவு. சௌரம்- சூரியனை கடவுளாக வணங்கும் சமயப்பிரிவு. காணாபத்யம்- விநாயகரை (கணபதி) வணங்கும் சமயப்பிரிவு. இந்த ஆறு பிரிவுகளையும் உள்ளடக்கியதே ஸ்மார்த்தம் எனப்படுகிறது.
இந்த ஆறு பிரிவுகளின் தாய்வீடு தமிழ்நாடாகும். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. வரலாற்று உண்மையை யாராலும் மறைக்க முடியாது. இந்த ஆறு பிரிவுகளையும் இப்போதுள்ளவர்கள் சொல்லியதல்ல. காலத்தால் கணிக்கமுடியாத, ஞானத்தால் உணரக்கூடிய மகாசித்தர் திருமூலர் கூறியதாகும். அவரது திருமந்திரப் பாடலைப் பார்ப்போம்.
"ஆறங்கமாய் வரும் மாமறை ஓதியைக்
கூறங்கம் ஆகக் குணம்பயில்வார் இல்லை
வேறங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்
பேறங்கம் ஆகப் பெருக்கு கின்றனரே.'
ஆறு பிரிவுகளாக- ஆறு அங்கங்களாக இருக்கும் ஆறுவகை சமயங்கள் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், சௌரம், கௌமாரம் எனப்படுகிறது. இத்தகைய பேதத்தை ஓதி அருளிய சிவபெருமானை- உமையம்மைக்குத் தன் உடலின் ஒரு பாகத்தை இடமாகத் தந்த பரசிவப் பொருளின் அருளாற்றலைப் போற்றிப் புகழ்பவர் இல்லை. இப்படிப் புகழாதவர்கள் வேறு சமய சாத்திரங்களைப் பயின்று கடைப் பிடித்து, அந்த வேறானவற்றையே பெரிதாகப் போற்றி செய்து வாழ்நாளை வீண்நாள் ஆக்குகின்றனர். இவர்கள் அறியாமை அகலட்டும்.
அருணாகிரிநாதர் தனது பாடல்களில் "அறுசமயச் சாத்திரப் பொருளோனே' என்றே குறிப்பிடுகிறார்.
திருமூலர் மேலும் சிவத்தை விளக்குவதைப் பார்ப்போம்.
"ஒன்றவன் தானே இரண்டவன் இன்அருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பபர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந்து எட்டே.'
ஒன்றாயிருப்பவன் அவனே. சிவனும் சக்தியுமாக இரண்டாகவும் இருக்கிறான். அவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரியும் பிரம்மன், திருமால், உருத்திரன் என மூன்றாகவும் உள்ளான். அவன் நான் மறை வடிவானவன். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலுக்கும் அவனே தலைவன். சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், சௌரம், கௌமாரம் எனும் ஆறு சமயப் பிரிவுகளாக இருப்பவனும் அவனே.
ஏழு உலகங்களிலும் இருப்பவனும், அதை இயக்குபவனும் அவனே. தன்வயமாதல், தூய உடலினன் ஆதல், இயற்கை உணர்வடைதல், முற்றும் உணர்தல், பற்றற்றிருத்தல், பேரருள் நோக்கு, முடிவில்லாமை, எல்லையில்லாமை எனும் எட்டு குணங்களுடன் எண் குணத்தான் என்பவனும் அந்த சிவப்பரம்பொருளே.
"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முள்தோன்றி மூத்தகுடி' எனும் வரிகள் நமது பழமையை, பண்பாட்டை, பாரம்பரியத்தை உணர்த்துகிறது. இவற்றை ஏன் இங்கே நினைவுகூர்கிறோம் என்பது முக்கியம். இவையனைத்தையும் நமது 18 சித்தர்கள் பாடத்திட்டங்களாக செய்யுள் வடிவில் வழங்கியருளிச் சென்றுள்ளனர். திருமந்திரமும், திருக்குறளும் சமகாலத்தவை என்னும் கருத்து இருந்தபோதும், திரு வள்ளுவர் தனது மானசீக குருவாக திரு மூலரையே குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் முக்கியமாகவுள்ள 280 பழமையான சிவன் கோவில்களில், 274 கோவில்கள் இருப்பது, 108 திவ்ய தேசங்களில் 96 வைணவக் கோவில்கள் இருப்பது, சைவம் வளர்த்த 63 நாயன்மார்கள் பிறந் தது, வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்கள் பிறந்தது, பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது, நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக் கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பது, பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்தது, சித்தர்களின் ஜீவசமாதிகள் இருப்பது, பழந்தமிழர்களின் ஐந்தினைக் கடவுள் கள் இருப்பது என்று அனைத்து பாரம்பரியங் களுக்கும் தமிழ்நாடே பூர்வீகமாகும். தமிழகம் ஆன்மிக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடி யார்களின் பூமி என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை.
இங்கே சிந்திக்கவேண்டியது மதங்கள் பற்றியல்ல. மனித மனங்களில் அறம் நிரம்பி யிருக்க வேண்டுமென்பதே இறைத் தத்துவம். எம்பெருமான் சிவப் பரம்பொருளின் தத்துவம். எம்பெருமாளின் இறைவழிபாட் டின் சூட்சுமம் சமத்துவம், சமாதானம், சமூக நீதி, சமதர்மம், அன்பு, கருணை, ஒழுக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் வேண்டும். "எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பதுவேயன்றி வேறோன்றும் அறியேன் பராபரமே' எனும் தாயுமானவர் கூற்று நம் ஒவ்வொருவர் நெஞ்சத்திலும் உணர்வாக மாறும்போது போட்டி, பொறாமை, துரோகம், வஞ்சகம், சூழ்ச்சி என அனைத்தும் சம்ஹாரமாகிவிடும்.
தர்மம் ஒன்றே கர்மப்பலனை சீராக்கும் அருமருந்து. அறம் செய்வோம். ஈசனின் கருணைக்கு சொந்தக்காரர்களாவோம்!