காபாரதத்தில் அரக்கு மாளிகை என தனி அத்தியாயமே உள்ளது. பாண்டவர்களை கௌரவர்கள் அந்த அரக்கு மாளிகையில் அடைத்து வைத்து தீயிட்டு கொல்வதற்கு முயற்சி செய்ததையும் பீமன் என்ற சக்திவாய்ந்த தெய்வத்தால் அவர்கள் குகை வழியாக காப்பாற்றப்பட்ட தாகவும் புராணம் சொல்கிறது. பழங்காலம் முதலே சிறப்பு பெற்றிருந்த அரக்கு விவசாயத்தை ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்து தெய்வீக அருளாலும் தனது திறமை யினாலும் அரக்குப்பூச்சி வளர்ப் பில் பல்வேறு சாதனைகளைச் செய்து வரும் வேளாண் விஞ்ஞானி டாக்டர் ந. முத்துக்குமார் அவர்களோடு ஒரு சந்திப்பு....

gg

நீங்கள் பிறந்த ஊர், பெற்றோர், படிப்பு பற்றி கூறுங்களேன்?

என்னுடைய பிறந்த ஊர் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை தாலுகாவிலுள்ள பாலத்தொழுவு என்னும் குக்கிராமம். என்னுடைய தந்தையின் பெயர் சுப்பிரமணியம், தாயார் பெயர் சரஸ்வதி. எங்களுடைய பரம்பரை தொழிலே விவசாயம்தான். அதிலும் குறிப்பாக நெற்பயிர்தான் எங்களுடைய விவசாயத்தில் முக்கிய பயிராகும். நான் ஐந்தாம் வகுப்பு வரை அதே தாலுகாவில் அமைந்துள்ள காசிப்பாளையம் என்ற ஊரிலுள்ள அரசு ஆரம்ப பள்ளியில் படித்தேன்.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கோபிச்செட்டிபாளையத் திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை பி.எஸ்.சி விலங்கியல் மற்றும் எம்.எஸ்.சி விலங்கியலை திருப்பூரிலுள்ள சிக்கனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்தேன். எம்.பில் மற்றும் பி.எச்.டி-யை கோயம்புத்தூரி லுள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தில் படித்தேன். பி.எச்.டி ஆராய்ச்சியை மீன்வளத்துறையில் மீன்களை எப்படி வளர்ப்பது என்னென்ன உணவுகள் கொடுத்தால் மீன்கள் நன்றாக வளரும் என்பதை பற்றிய ஆராய்ச்சிசெய்து வெற்றிகரமாக என்னுடைய ஆராய்ச்சியை செய்து முடித்தேன். இப்போது கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்திலுள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஏழு வருடங்களாக பணிபுரிந்துவருகிறேன்.

உங்களுடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம் எது?

எங்களுடைய குலதெய்வம் பாலத்தொழுவு கருப்புச்சாமி. இஷ்ட தெய்வம் முருகன். குறிப்பாக பழனி மலை முருகன்.

உங்களுக்கு கஷ்டம் வரும்போது எந்தத் தெய்வத்தை மனமார நினைத்து வணங்குவீர்கள்?

கஷ்டம் என்றதும் முதலில் கும்பிடுவது என்னுடைய குலதெய்வத்தைதான். கருணை காட்டு கருப்பசாமி என்று நினைத்து வணங்குவேன். ஏனென்றால் குல தெய்வம் என்பது வழிவழியாக பாட்டன்முப்பாட்டன் என எல்லாரும் வணங்கிவரும் முக்கிய கடவுள் ஒவ்வொருவருக்கும் குலதெய்வம்தான். எனவே என்னுடைய குலதெய்வமான கருப்பசாமியை தான்மனமார நினைத்துவணங்கி கஷ்டம் தீர்க்க வேண்டுவேன். அவர் என்னுடைய கனவில் வந்திருக்கி றார். குதிரை வாகனத்தில் கையில் அரிவாளை தூக்கிக் கொண்டு கம்பீரமாக காட்சியளிப்பார். பரம்பரை பூசாரியான என்னுடைய தாத்தா வேலை முடிந்து வீட்டிற்கு வரும்பொழுதில் இரவு நேரத்தில் நேரில் பார்த்ததாக கூறியிருக்கிறார். இரவு நேரத்தில் காவலுக் காக கருப்பசாமி ஊரை சுற்றிவருவதால் அந்த நேரத்தில் பார்த்திருக்கிறேன் என தாத்தா கூறியிருக் கிறார்.

ff

Advertisment

உங்களின் உயிரைக் காப்பாற்றிய தெய்வம் எது?

என் உடம்பில் கொழுப்பு அதிகமாக சேர்ந்ததால் மூச்சுவிடுவதில் சிரமமாகி இதய பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர பிரிவில் அட்மிட் ஆகியிருந்த நேரம் நான் முருகனை வேண்டினேன், திருப்பதி ஆண்டவரை வேண்டினேன். கடைசியாக என் னுடைய உறவினர்கள் கூறினார்கள் நம்முடைய மூதாதையர்கள் ஆந்திர பிரதேசத்திலுள்ள ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வழிபட்டுவந்தனர். அந்தத் தெய்வத்தை வணங்குங்கள். உங்களைக் காப்பாற்றி கொடுப்பார் என்று கூறினார்கள். நானும் உன்னுடைய பெயர் எனக்குத் தெரியாது. என்னுடைய பெற்றோர் இப்போது உயிருடன் இல்லை. என்னை நம்பி என் குடும்பம் உள்ளது. என்னையும் கொண்டுபோய் விடாதே. இந்த ஒருமுறை மட்டும் என் உயிரைக் காப்பாற்றி கொடு என்று மனமார வேண்டினேன். என் வேண்டுதலை ஏற்று அந்தத் தெய்வம் என் உயிரை காப்பாற்றி கொடுத் தது. நான் இப்போது பல சாதனைகள் புரிவதும், பேட்டிகள் பல கொடுப்பதற்கும் முக்கிய காரணம் அன்று அந்தத் தெய்வம் என்னை அந்தச் சமயத்தில் காப்பாற்றி கொடுத்ததுதான்.

அரக்கு விவசாயம் பற்றி கூறுங்களேன்?

மகாபாரதத்தில் அரக்கு மாளிகை என தனி அத்தியாயமே உள்ளது. பாண்டவர்களை கௌரவர் கள் அந்த அரக்கு மாளிகையில் அடைத்து வைத்து தீயிட்டு கொல்வதற்கு முயற்சி செய்ததையும் பீமன் என்ற சக்திவாய்ந்த தெய்வத்தால் அவர்கள் குகை வழியாக காப்பாற்றப்பட்டதாகவும் புராணம் சொல்கிறது. பழங்காலம் முதலே சிறப்பு பெற்றிருந்த அரக்கு விவசாயத்தை வளரச்செய்வதே என்னுடைய முக்கிய நோக்கமாகும். ஆனால் நெல்லைவிட அரக்கு விவசாயம் அதிக லாபத்தை கொடுத்தாலும் மனிதர் களுக்கு உணவளிக்கும் நெல் விவசாயத்தை விட்டுவிட்டு அதற்கு மாற்று பயிராக அரக்கு விவசாயம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே நெல் பயிரிடு வதையும் விட்டுவிடாமல் அதே நேரம் நம் அன்றாட உபயோகங்களான டேபிள், சேர், கட்டில் இவற்றிற்கு வார்னிஷ் தயாரிக்கவும், ஜப்தி செய்வதற்கு சீல் செய்வதற்கும் பர்பியூம், சென்ட் தயாரிக்கவும் மின்சார பல்புக்கு சாக்கெட் எனப்படும் பொருள் தயாரிப்பதற்கு என பல முக்கிய பொருட்களைத் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக இந்த அரக்கு பயன்பட்டு வரும் முக்கியத்துவம் வாய்ந்த அரக்கு விவசாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து விவசாயம் செய்துவருகிறேன்.

எங்கள் ஊரில் காலம் காலமாக சாதி, மத பேதமின்றி வழிபாடு செய்து வரும் அம்மன் மாரியம்மன். அந்த மாரியம்மனே இப்போது என் அரக்கு விவசாயத்தை காக்கும் அரக்கு அம்மனாக இருந்து காத்துவரும் காவல்தெய்வமாக இருந்துவருகிறது.

சிறுவயதில் இருந்தே நீங்கள் போகவேண்டும் என்று ஆசைப்பட்டு இதுவரை போகமுடியாத கோவில் என்று ஏதேனும் உள்ளதா?

வட இந்தியாவிலுள்ள பொற்கோவில் செல்ல வேண்டும் என்று மிகுந்த ஆசை. வட இந்திய மக்களின் வழிபாடு பற்றி தெரிந்துகொள்ளவும் ஆசைப் பட்டிருக்கிறேன். எந்த மாநிலத்தில் இருந்தாலும் நம் தெய்வங்கள் ஒன்றுதானே. வழிபாடு மட்டுமே மாறுபட்டதாக இருக்கும். பொன்னால்கூரை வேயப் பட்ட அத்தகைய சிறப்புவாய்ந்த பொற்கோவிலை காண வேண்டும் என்பதும் அங்குள்ள வழிபாட்டு முறைகளை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே என்னுடைய ஆசை ஆகும். பொற்கோவிலை காண்பதற்கான பொற்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

இப்போது கேரளாவில் வேலை செய்துவருவதால் கேரள மக்களின் வழிபாட்டு முறைகளையும் தெரிந்து கொள்ளமுடிகிறது. அவர்களின் வழிபாட்டு முறைகளுக்கும் நம்மு டைய வழிபாட்டு முறைக்கும் பெரிதான வேறுபாடு ஒன்றும் இல்லை. சில வழிபாட்டு முறைகள் மட்டும் வேறுபட்டு இருக்கும். உதாரணமாக தங்கத்தை உரசி பிறந்த குழந்தைகளின் நாக்கில் வைப்பார்கள். அந்த முறை நம் ஊரில் கிடையாது. பூஜைமுறைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. தமிழ் தெய்வங்களைபோலவே குருவாயூரப் பாவும் எனக்கு பிடித்த தெய்வம்.

பேட்டி படங்கள்: விஜயாகண்ணன்

செல்-வாட்சப் : 88257 29455