பகவதியம்மன் வழிபாடு, குறிப்பாக கேரள மாநிலத்தில் முக்கிய வழிபாடாகக் கருதப்படுகிறது. இந்த மாநிலத்தில் பரவலாக சிறிய, பெரிய அளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பகவதியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சோற்றாணிக் கரை, ஆற்றுக்கால், பரமேக்காவு, கொடுங்கல்லூர் போன்ற இடங்களிலுள்ள பகவதியம்மன் கோவில்கள் மிகப்பிரபலமானவை. எந்த பகவதியம்மன் கோவிலுக்குச் சென்றாலும்-
"அம்மே நாராயணா
லட்சுமி நாராயணா
பத்ரே நாராயணா
தேவி நாராயணா'
என்னும் பக்தி கோஷமும், செண்டை வாத்திய கோஷமும், சீவே- வழிபாடும் செவிக்கும் கண்ணுக்கும் விருந்தாகும். பகவதி (அம்பிகை) அருள்பா-க்கும் கோவில்கள் மற்றும் அம்மன் வழிபாட்டை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை ஒன்று, காட்டு அம்மன் வழிபாடு, இரண்டாவது நாட்டு- நகர அம்மன் வழிபாடு, மூன்றாவது பாடல்பெற்ற தலங்களில் வழிபாடு, நான்காவது வீட்டு அம்மன் வழிபாடு (சில வீடுகளில் பெண் முன்னோர்கள் வழிபாடு) என்பனவாகும்.
மதுரையில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சி தமிழகத்தில் மட்டுமின்றி, கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே பல்லசேனா கிராமத்தில் மீன் குத்தி (மீன்குளத்தி) பகவதியம்மன் எனும் பெயரில் பிரபலமாக விளங்கிவருகிறாள். கேரளா வில் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் இருந்து அருள்பா-த்து வருகிறாள்.
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி, சுந்தரேசராக வந்த சிவபெருமானை மணந்த இடம்தான் திருவாலவாய் எனப்படும் மதுரை மீனாட்சி திருக்கோவில். அங்கயற்கண் நாயகியான மீனாட்சிக்குதான் இங்கு முதல் வழிபாடு மற்றும் பக்தர்களுக்கு தரிசனம் எல்லாம்! (மீனாட்சி ஆட்சி!). இந்த தலத்தின் பெருமையைப் பற்றி திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர்
பகவதியம்மன் வழிபாடு, குறிப்பாக கேரள மாநிலத்தில் முக்கிய வழிபாடாகக் கருதப்படுகிறது. இந்த மாநிலத்தில் பரவலாக சிறிய, பெரிய அளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பகவதியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சோற்றாணிக் கரை, ஆற்றுக்கால், பரமேக்காவு, கொடுங்கல்லூர் போன்ற இடங்களிலுள்ள பகவதியம்மன் கோவில்கள் மிகப்பிரபலமானவை. எந்த பகவதியம்மன் கோவிலுக்குச் சென்றாலும்-
"அம்மே நாராயணா
லட்சுமி நாராயணா
பத்ரே நாராயணா
தேவி நாராயணா'
என்னும் பக்தி கோஷமும், செண்டை வாத்திய கோஷமும், சீவே- வழிபாடும் செவிக்கும் கண்ணுக்கும் விருந்தாகும். பகவதி (அம்பிகை) அருள்பா-க்கும் கோவில்கள் மற்றும் அம்மன் வழிபாட்டை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை ஒன்று, காட்டு அம்மன் வழிபாடு, இரண்டாவது நாட்டு- நகர அம்மன் வழிபாடு, மூன்றாவது பாடல்பெற்ற தலங்களில் வழிபாடு, நான்காவது வீட்டு அம்மன் வழிபாடு (சில வீடுகளில் பெண் முன்னோர்கள் வழிபாடு) என்பனவாகும்.
மதுரையில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சி தமிழகத்தில் மட்டுமின்றி, கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே பல்லசேனா கிராமத்தில் மீன் குத்தி (மீன்குளத்தி) பகவதியம்மன் எனும் பெயரில் பிரபலமாக விளங்கிவருகிறாள். கேரளா வில் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் இருந்து அருள்பா-த்து வருகிறாள்.
பாண்டிய மன்னனின் ராஜகுமாரி, சுந்தரேசராக வந்த சிவபெருமானை மணந்த இடம்தான் திருவாலவாய் எனப்படும் மதுரை மீனாட்சி திருக்கோவில். அங்கயற்கண் நாயகியான மீனாட்சிக்குதான் இங்கு முதல் வழிபாடு மற்றும் பக்தர்களுக்கு தரிசனம் எல்லாம்! (மீனாட்சி ஆட்சி!). இந்த தலத்தின் பெருமையைப் பற்றி திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் நேரில் தரிசனம் செய்து பதிகம் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் வாழ்வின் ஒரு பகுதி இத்தலத்தை சார்ந்தே நடந்துள்ளது.
பாண்டிய நாட்டுத் தலைநகரமான மதுரை மாநகரைப் பற்றியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் (ஆலவாய் சொக்கர்) பற்றியும் திருஞான சம்பந்தரின் தேவராத்திலும், திருநீற்றுப் பதிகத்திலும், திருநாவுக்கரசரின் தேவாரத்திலும், திருத்தாண்டகத்திலும், மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திலும், சிதம்பர சுவாமிகளின் மதுரை மீனாட்சியம்மை க-வெண்பாவிலும், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழிலும், குமரகுருபரர் இயற்றிய மதுரைக் கலம்பத்திலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும் என பல்வேறு தமிழ்ப் பாடல்கள்மூலம் அறியலாம். பொதுவாக, "கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி' என மூன்று தலங்களில் உறைந்திருக்கும் அம்பிகையைப் பற்றி சிறப்பாகக் கூறுவார்கள்.
தமிழகத்தில் பண்டைய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் அரசியல் காரணங்களாலும், வியாபார விஷயமாகவும் மற்றும் சமூக காரணங்களாலும் சில குடும்பங்கள் தங்களது சொந்த இடத்தைவிட்டு வெவ்வெறு இடங்களுக்குச் சென்று வாழத் தொடங்கினார்கள்.
அப்படித்தான் பல ஆண்டுகளுக்குமுன்பு தமிழ்நாட்டில் சிதம்பரம், மதுரை, தஞ்சாவூர் போன்ற பகுதில் வசித்த வெள்ளார்கள் பிரிவில், மந்தாடியார் (மன்றாடி யார்) என்னும் உட்பிரிவினர் தங்களது வியாபாரத்தைப் பெருக்கவும், நல்ல விளைச்சல் நிலத்தைத் தேடியும் கேரள மாநிலத்துக்குச் சென்றனர்.
இச்சமூகத்தினர் பாலக்காட்டைச் சுற்றியிருந்த பல்லசேனா, குந்தனூர், மூலங்கோடு, கல்லூர் போன்ற கிராமங்களில் படிப்படியாகக் குடியேறத் தொடங்கினார்கள்.
அந்தவகையில் மந்தாடியார் பிரிவின் சில குடும்பங்கள் பசுமை நிறைந்த, வளம் கொழிக்கும் பாலக்காடு பகுதியில் கூட்டுக் குடும்பங்களாக குடியேறி தங்களிடமிருந்த பணத்தைக்கொண்டு விளைநிலங்களை வாங்கி விவசாயம் செய்தனர். இதைத் தொடர்ந்து மேலும் பலர் தமிழ்நாட்டி-ருந்து பாலக்காட்டில் குடியேறத் தொடங்கினார்கள்.
இந்த மந்தாடியார் சமூகத்தினர் மதுரை மீனாட்சியம்மனைத் தங்களது குலதெய்வமாக வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்ததால், குலதெய்வ வழிபாட்டிற்காக பாலக்காட்டி-ருந்து மதுரைக்குக் கால்நடையாகச் சென்று வந்துள்ளனர். இச்சமூகத்தினர் தங்களுக்குள் மூத்த உறுப்பினர் ஒருவரை- ஆன்மிகப் பெரியவரை குருவாக ஏற்றுக்கொண்டு, அவருடைய வழிகாட்டுதல்படி ஆன்மிகப் பணிகளைச் செய்துவந்துள்ளனர். அவரது தலைமையில்தான் மதுரைக்குச் சென்று மீனாட்சியம்மனை வழிபட்டு வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஆன்மிகப் பெரியவருக்கு வயதாகிவிட்ட காரணத்தால், இனி தொடர்ந்து தன்னால் மதுரைக்கு எப்படி செல்லமுடியும் என வருந்தினார். ஒருமுறை மதுரைக்கு யாத்திரை சென்ற சமயத்தில் மீனாட்சியம்மனிடம் இதற்கு ஒரு வழி செய்யுமாறு வேண்டினார்.
தனது மதுரை யாத்திரையை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும்போது, தற்சமயம் மீன்குத்தி கோவில் முன்பிருக்கும் "கொடமன்னு குளம்' எனும் பெயர் கொண்ட குளத்தில் குளிக்கச் சென்றார். அப்போது தான் கொண்டு வந்த பூஜைப் பொருட்களை தனது பலையோலைக் குடையின்கீழ் வைத்துவிட்டுச் சென்றார். குளித்து முடிந்தபிறகு ஓலைக் குடையையும், பூஜைப் பொருட்களையும் எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை. ஆச்சரியத்துடன் எவ்வளவு முயன்றும் முடியாமல் போனதால், குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களிடம் இப்பொருட்களை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு, இந்த செய்தியை ஊர்மக்களிடம் தெரிவிக்க ஊருக்குள் ஓடினார்.
ஊர்மக்கள் வந்து எவ்வளவு முயன்றும் பொருட்களை எடுக்கமுடியாமல் போனது.
தேவப்பிரசன்னம் எனும் ஜோதிடம் பார்த்தபோது, இவ்விடத்தில் தேவியின் கோவில் உருவாக இருப்பதாக ஜோதிடர் கள் கூறினார்கள். அதற்குத் தகுந்தவண்ணம் குடை இருந்த இடத்தைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் ஏற்பட்டது. மேலும் மீனாட்சி யம்மன் இங்கு வாசம்செய்ய இருப்ப தாக வானி-ருந்து ஒரு அசரீரி வரவே, ஊர்மக்கள் இந்த அதிசய காட்சியைக்கண்டு பக்திப் பரவசத்துடன் வணங்கினார்கள். குடை இருந்த இடத்தில் கோவில்கட்ட தீர்மானிக்கப்பட்டது.
அந்த இடமே இன்றைய மூலஸ்தானம்.
கோவில் கட்டிய பின்புதான் ஓலைக் குடை மற்றும் பூஜைப் பொருட்களை நகர்த்த முடிந்தது.
காலப்போக்கில் பெரியளவில் கோவில் உருவாக்கப்பட்டது. எதிரே இருக்கும் கொடமன்னு குளம் என்னும் பெரிய குளத்தில் மீன்கள் நிறைய வாழ்கின்றன. அவற்றை இறைவனின் அம்சமாகக் கருதுவதால் யாரும் பிடிப்பதில்லை.
மூலவர் பகவதியம்மனைத் தவிர கணபதி, ஐயப்பன், பைரவர், நாகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
தங்களின் தொழில் அபிவிருத்தி யாகவும், திருமண பாக்கியம், நோய் நிவாரணம் போன்றவற்றை வேண்டியும் இக்கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலத்தி-ருந்து பக்தர்கள் அதிகளவு வருகை தருகிறார்கள். கேரள தாந்திரீக ஆகம முறைப்படி தினமும் பூஜைகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. நவராத்திரி சமயத்தில் ஒன்பது நாட்களுக்கும் அம்மனுக்கு சிறப்புப் பூஜையும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த நாட்களில் கோவில் அறங்காவலர் குடும்பத்தினர் ஒன்றுசேர்ந்து கோவிலைச் சுற்றி விளக்கேற்றி அழகுபடுத்துவார்கள்.
இக்கோவி-ன் வரலாற்றைத் தொகுத்து தமிழில் வெளியிட்டவரும், கோவில் குழுவின் உறுப்பினருமான 90 வயது நிறைந்த சி. அப்புண்ணி மந்தாடியார் (செல்: 86678 17359) பகவதி அம்மனைப் பற்றி குறிப்பிடுகையில், "கேட்பவர்களுக்கு கேட்ட வரம் தரும் மீன்குளத்தியம்மனை நாடி தினமும் பல பக்தர்கள் வந்து, அம்மனின் அருளைப்பெற்றுச் செல்கிறார்கள். தங்களின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை இந்த மீன்குளத்தியம்மனை வழிபடுவதன்மூலம் போக்கிக் கொள்ளமுடியும். பகவதியம்மன் என்று சொல்வதால் உக்கிர தெய்வம், பயத்தைத் தருபவள் என நினைக்கவேண்டாம். கொடியோரை அழித்து, நல்லோரைக் காக்கவேண்டி அம்பிகை எடுத்த வடிவமே பகவதி அவதாரம். தீமைகளையும், நம் மனதில் ஏற்படும் தீய எண்ணங்களையும் அழிக்க மீனாட்சியம்மனை வழிபட பக்தர்கள் இங்கு வரவேண்டும்'' என அழைப்பு விடுத்தார்.
இக்கோவி-ல் சத்ரு தோஷ நிவாரணத்திற்கு சக்கரை பறை வழிபாடும், மனக் கஷ்டங்கள் தீர்க்க அவில் (அவல்) பறை வழிபாடும், திருமண பாக்கியம் கிடைக்க மஞ்சள் பறை வழிபாடும், நினைத்த காரியங்கள் நிறைவேற அரிசி பறை வழிபாடும், நோய் நிவாரணம் பெற பொரி பறை வழிபாடும், ஐஸ்வரியம் கிடைக்க நெல்பறை வழிபாடும் என பலவகை வழிபாடுகள் இருக்கின்றன.
மீனொத்த கண்கொண்ட மீனாட்சியம்மனை- புனித நவராத்திரி சமயத்தில் பல்லசேனாவில் வீற்றிருக்கும் மீன்குத்தி பகவதியம்மனை பக்தியுடன் வணங்கி நம் வாழ்வில் எல்லா வளங்களையும் செல்வங்களையும் பெற்று இன்புற்றிருப்போமாக.
கோவில் முகவரி: மீன்குளத்தி பகவதியம்மன் திருக்கோவில், பல்லசேனா (அஞ்சல்), பாலக்காடு மாவட்டம், கேரளா- 678505.
போன்: 04923- 268495.