மேஷம்
மேஷ ராசிநாதன் சூரியன் 11-ல் இருக்கிறார். உங்களது முயற்சி களில் காரிய ஜெயம் உண்டாகும். உத்தியோகம், தொழில்ரீதியாக லாபகரமான சூழல் உருவாகும். 2-க்குடைய சுக்கிரன் 12-ல் உச்சம் பெறுகிறார். எனவே, பொருளாதார ரீதியாக அவ்வப்போது தேவையற்ற செலவுகள், விரயங்கள் ஏற்படும். 12-ல் குரு ஆட்சி பெற்று 4-ஆமிடத் தைப் பார்க்கிறார். தேக நலனில் ஆரோக்கியம் உண்டாகும். வைத்தி யச் செலவுகள் விலகும். பழைய அல்லது புதிய வாகனங்கள் வாங்கு வதற்கான முயற்சிகள் கைகூடும். மேற்கூறிய தேவையற்ற விரயங்களை சுபவிரயமாக மாற்றும் முயற்சியை மேற்கொள்ளலாம். ஜென்ம ராகு- சப்தம கேது தாமதத் திருமணத்தை ஏற்படுத்தலாம். ஜனன ஜாதகத்தில் குருபார்வை இருந்தால் திருமணம் நல்லமுறையில் நடந்தேறும். பழநிமலையில் போகர் ஜீவ சமாதியை வழிபடலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் 24-ஆம் தேதிவரை 11-ல் உச்சமாக இருக்கிறார். அவரு டன் 11-க்குடைய குருவும் ஆட்சி பெறுகிறார். பொதுவாக குருவும் சுக்கிரனும் பகை என்பார்கள். ஆனால் குரு வீட்டில் சுக்கிரன் உச்சம் பெறுவதால் பகைமைத் தன்மைக்கு அங்கு இடமில்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கு இருவரும் 11-ல் இருப்பதால் தொழில் முன்னேற்றம், திட்டமிட்ட காரியங்களில் வெற்றி, அனுகூலம் உண்டாகும். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆகவே தொய்வுக்கும், தோல்விக்கும் இடமில்லை. சகோதரவழியில் சில சங்கடங்கள் தோன்றும். என்றா லும் உறவுக்குள் பிரிவு ஏற்படாது. குரு 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கருதியவை கைகூடும். தொழில் வகையில் சில முதலீட்டுச் செலவு கள் உருவாகும். மதுரை- திருப்பரங் குன்றம் அருகில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதியை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 4-ஆம் தேதிமுதல் 11-ல் சூரியனோடு இணைகிறார். அட்டமத்துச் சனி ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும் 10-ல் குரு ஆட்சி, 9-ல் செவ்வாய் திரிகோணம் பெற்றிருப்பதால் சனியின் வேகம் குறைந்து நன்மை யான பலன்களை எதிர்பார்க்கலாம். 12-க்குடைய சுக்கிரன் 10-ல் உச்சம். உத்தியோகவகையில் நல்ல மாற்றங் கள் உண்டாகும். அது விரும்பிய இடப்பெயர்ச்சியாகவும் அமைய லாம். சுயதொழில் புரிகிறவர்களுக்கு கூடுதல் முதலீட்டுக்கும் வாய்ப்புண்டு. 11-ல் உள்ள ராகு லாபத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பொருளாதார நெருக்கடி தீரும். தேகசுகம் நலம்பெறும். தொழில் துறைக்காக எதிர்பார்த்த கடனுதவி யும் கிடைக்கும். ராசிநாதன் புதனும் 11-ல் இருப்பது பலம்தான். அலைச் சல் அதிகமாகக் காணப்பட்டா லும் ஆதாயமும் ஏற்படும். பழநி செல்லும் வழியில் கணக்கன்பட்டி யிலுள்ள பழநி சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் 10-ல் உச்சம் பெறுவது ஒருவகையில் பலம். புதிய தொழில் முயற்சிசள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசுத் துறை சார்ந்த அலுவலங்களுக்கு நன்மையான பலன்கள் உண்டாகும். அரசுவகையில் இழுபறியாக இருந்த உதவிகள் கிடைக்கப்பெறும். 9-ல் உள்ள குரு ராசியைப் பார்ப்பதால் திறமையும் கீர்த்தி யும் பளிச்சிடும். இதுவரை உழைப்பிற்கேற்ற ஊதியமும் இல்லை; அதிக அலைச்சலும் இருந்து மனஉளைச்சலைச் சந்தித்தவர்களுக்கு அந்த நிலை மாறும். பொருளாதார வளர்ச்சி, காரிய சித்தி, மனநிம்மதி போன்ற பலன்களைச் சந்திக்க நேரும். கவலைகள் விலகும். 10-ல் ராகு கேந்திரம் பெறுகிறார். 10-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்தாலும் 17-ஆம் தேதிமுதல் 9-ல் குருவுடன் இணைகி றார். அதன்பிறகு தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்தும். தொழி-லும் உன்னத நிலை உண்டாகும். மதுரை- திருப்பரங்குன்றத் தில் சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் 9-ல் உச்சமாக இருப்பது ஒரு ப்ளஸ். திரிகோணமாக இருக்கி றார். ராசிநாதன் திரிகோணம் பெறுவது நன்மைதான். குலதெய்வ- இஷ்டதெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றலாம். அங்கு இருக்கும் ராகுவும் அதற்குத் துணைநின்று செயல்படுத்தித் தருவார். 5, 8-க்குடைய குரு 8-ல் மறைந்தாலும் ஆட்சி என்பதால் கெடுதலிலும் ஒரு நன்மை என்பதுபோல செயல்படும் 8-ஆமிடம் சஞ்சலம், விபத்து, அபகீர்த்தி, கண்டம் ஆகிய வற்றைக் குறிக்கும். உதாரணமாக வாகனவகையில் சிறு விபத்து ஏற்பட்டாலும், உங்களுக்கு காயமோ வைத்தியச் செலவோ ஏற்படாமல் தப்பிப்பது நன்மை. என்றா லும் வாகனத்திற்கு செலவு ஏற்படுவது கெடுதல்தானே! இதுதான் கெட்டதிலும் ஒரு நல்லது! குரு 12-ஆமிடத்தையும் பார்க்கிறார். 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். விரயத்துக்கும் இடமுண்டு. வரவுக்கும் இடமுண்டு. 4-க்குடைய செவ்வாய் 7-ல் இருப்பதால் பூமிவகையில் சிறு நன்மை உண்டாகும். திருவெள்ளறை சிவப்ரகாச சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 4-ஆம் தேதிமுதல் 8-ல் மறைகிறார். மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதால் கவலை வேண்டாம். 12-க்குடைய சூரியனும் 8-ல் மறைவு. ஆக, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்பதுபோல அனுகூலமும் நன்மையும். உண்டாகும். 7-க்குடைய குரு 7-ல் ஆட்சி பெற்று ராசியைப் பார்க்கிறார். 2-க்குடைய சுக்கிரன் 7-ல் குருவுடன் கூடி உச்சம் பெறுகிறார். பொருளாதாரத்தில் தேக்கநிலை விலகும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும். கணவரால் ஏற்பட்ட நிம்மதிக் குறைவும் மாறி ஒற்றுமையும் அன்யோன்யமும் உண்டாகும். 3-க்குடைய செவ்வாய் 6-ல் இருப்பது ஒரு பலம்தான். சகோதரி- சகோதரவகையில் உதவியும் ஒத்தாசையும் கிடைக்கும். கடன்கள் குறைய வழிவகைகள் பிறக்கும். ஒருசில நேரம் அலைக்கழிப்பு ஏற்படலாம். பின் உங்களுக்கு நற்பலன்கள் அமையும். திருவாரூர்- மடப்புரம் பகுதியில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீசமாதியை வழிபடவும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் உச்சம். அவருடன் 6-க்குடைய குரு சேர்க்கை. 6-ல் சுக்கிரன் மறைந்தாலும் அந்த மறைவு தோஷம் பாதிக்காது என்று நம்பலாம். ஜென்ம கேது அவ்வப்போது சில அலைச்சல்களைக் கொடுக்கலாம். காரிய தாமதங்களை சந்திக்க நேரும். 7-ல் உள்ள ராகு மனைவிக்கு அல்லது கணவனுக்கு தேக நலத்தில் வைத்தியச் செலவுகளை உண்டாக்கலாம். திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமண முயற்சிகள் தாமதமாகலாம். 2-க்குடைய செவ்வாய் 11-ஆமிடத்தையும், 12-ஆமிடத்தையும் பார்க்கிறார். விரயமும் உண்டு. தொழில்துறையில் முதலீடு செலவும் உண்டு. விரயம் வேறு; முதலீட்டுச் செலவு என்பது வேறு. 4-ல் உள்ள சனி ஒரு சிலருக்கு வேலையிலோ அல்லது குடியிருப்புவகையிலோ இடமாற்றத்தை உண்டு பண்ணலாம். ஒரு சிலருக்கு வேலையில் திருப்தி இருக்காது. 6-ல் மாறியிருக்கும் குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் அந்தநிலை விலகி நல்ல வேலை அமையும். அருப்புக்கோட்டை அருகில் புலியூரான் சித்தகுருநாத சுவாமியை வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 2, 5-க்குடைய குரு 5-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். கடந்த மாதம்வரை நிலவிய இன்னல்களும் இடைஞ்சல்களும் அலைக்கழிப்புகளும் மாறும். குரு, ஜென்மம், 11-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். எனவே, உங்களுடைய மதிப்பு, மரியாதை கூடும். திறமைகள் வெளிவரும். முயற்சிகள் கைகூடும். தொழில்துறையில் முன்னேற்றம் தென்படும். பூர்வபுண்ணியமும் சிறப்பாக விளங்கும். ராசிநாதன் செவ்வாய் 4-ல் கேந்திர பலம் பெறுகிறார். 10-ஆமிடம், 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். எனவே மேலே கூறியபடி தொழில், உத்தியோகம் இவற்றில் நற்பலன்கள் உண்டாகும். வாழ்க்கையிலும் திருப்திரகமான செயல்பாடுகள் ஏற்படும். 3-ல் சனி ஆட்சி. அவர் எந்த ஒரு காரியத்திலும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தருவார். விடாமுயற்சியுடன் நீங்கள் செயல்படுவது அவசியம். கடன் சார்ந்த நெருக்கடி குறைய லாம் என்றாலும் முழுமையான தீர்வு தற்போது கிடைக்காது. தாயார் வழியில் சில இழப்புகளைச் சந்திக்கலாம். பழைய வாகனத் தைப் பரிமாற்றம் செய்யலாம். கரூர் அருகில் நெரூர் சென்று சதாசிவ ப்ரமேந்திராள் ஜீவசமாதியை வழிபடவும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 4-ல் ஆட்சி பலம் பெறுகிறார். 6, 11-க்குடைய சுக்கிரன் 4-ல் உச்சமாக இருக்கிறார். குரு, சுக்கிரன் சேர்க்கை நற்பலன்களைத் தரும். வாகனப் பரிமாற்றம், தேகநலம், தாயார் சுகம் தெளிவு பெறுதல், பூமி, மனை சம்பந்தான சுபநிகழ்வுகள் ஏற்படும். 12-ஆமிடத்தை குரு பார்ப்பதால் மேற்கண்டவகையில் சுபவிரயங்கள் ஏற்படும். ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடக்கிறது. இதுவரை இந்த ஏழரைச்சனியில் சங்கடம், சஞ்சலம், மனக்கிலேசம், பொருளாதார நெருக்கடி போன்றவற்றைச் சந்தித்தவர்களுக்கு, சனி விடுபடுகிற நேரத்தில் நற்பலன்களைத் தந்துவிட்டுச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை. 3-ல் உள்ள செவ்வாய் தைரியம், தன்னம்பிக்கையையும் தரும். சகோதரவகையில் தாமரை இலை தண்ணீர்போல உறவுகள் செயல்படும். நீங்களும் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்வது உத்தமம். திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி சென்று ஜோதி மௌனகுரு சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி ஜென்மத்தில் ஆட்சி. ஏழரைச்சனியில் ஜென்மச் சனி. ஒருசிலருக்கு உத்தியோகவகையில் இடமாற்றங்கள் உண்டாகும். குரு 3-ல் ஆட்சி. சுக்கிரன் 3-ல் உச்சம். இவர்களுக்கு சனியின் பார்வை. 3-ஆமிடம் தைரிய- வீரிய- பராக்கிரம ஸ்தானம். அங்கு குரு இருப்பதால் 3-ஆமிடம் சம்பந்தப்பட்ட பலன்கள் நன்மையாகவே நடக்கும். 4-க்குடைய செவ்வாய் 2-ல் இருக்கிறார். ஒருசிலருக்கு வீடு அல்லது மனை விற்பனையாகாமல் இழுபறியாக இருந்த நிலை மாறும். விற்பனையாவதன்மூலம் சுமைகள் குறையும். அதற்கு நண்பர்கள்வகையிலோ அல்லது சகோதரவகையிலோ சகாயம் கிடைக்கலாம். அவர்களினால் ஒத்துழைப்பும் உண்டாகும். 4-ல் உள்ள ராகு தேகநலனில் அவ்வப்போது சிறுசிறு உபாதைகளைக் கொடுத்தாலும் பாதிப்புகளுக்கு இடமிருக்காது. பயம் வேண்டாம். தொழில்துறையில் காரிய சித்திக்கு இடமுண்டு. திருச்சி அருகில் திரு வெள்ளறை பகுதியில் சிவப்பிரகாச சுவாமி கள் ஜீவசமாதிக்குச் சென்று வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி 12-ல் விரயஸ்தானத்தில் நின்றாலும் ஆட்சியாக இருக்கிறார். 3-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் நின்று. 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். பூமி, வீடு, மனை போன்றவற்றில் சுபவிரயம்- அதாவது புதிய மனை வாங்குவது அல்லது புதுவீடு கிரக பிரவேசம் செய்வது ஆகிய நற்பலன்கள் உண்டாகும். 4-க்குடைய சுக்கிரன் 2-ல் உச்சம். 2-க்குடைய குரு ஆட்சி. குடும்பத்தில் நிம்மதி, கணவன்- மனைவி ஒற்றுமை போன்ற பலன்களைச் சந்திக்கலாம். சுயதொழில் புரிகிறவர்களுக்கு தொழில்வகையில் புதிய கூட்டாளி அமைப்பும், தொழிலுக்கான முதலீட்டு யோகமும் ஏற்படும். அதற்குண்டான வங்கிக்கடன் அல்லது தனியார் கடனும் கிடைக்கும். சகோதர- சகோதரிவகையில் ஒற்றுமையில் கருத்து வேறுபாடு நிலவும். எண்ணங்கள் நன்றாக இருந்தால் செயலும் நன்றாக இருக்கும். ஆக எண்ணத்தை நல்லெண்ணமாக மாற்ற முயற்சியுங்கள். பொன்னமராவதி- புதுக்கோட்டை பாதையில் பனையூர் ஒடுக்கம்- சாது புல்லான் சுவாமி ஜீவசமாதியை வழிபடவும்.
மீனம்
மீன ராசிநாதன் குரு ஜென்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். "ஜென்ம ராமர் வனத் திலே சீதையை சிறை வைத்தது' என்பது பாடல். அதனால் ஜென்மத்தில் குரு வருவோர்க்கு எல்லாம் துன்பம், கஷ்டம் என்பதில்லை. மேலும் இங்கு குரு ஆட்சியாக வருவதனால் துயரத்திற்கும் துன்பத்திற்கும் இடமில்லை. அவர் 5, 7, 9 ஆகிய நல்ல ஸ்தானங்களைப் பார்க்கிறார். உங்கள் திட்டம் செயல்வடிவம் பெறும். ஜனன ஜாதகத்தில் ராகு தசையோ அல்லது செவ்வாய், சனி, ராகு சம்பந்தமிருந்தாலோ உங்கள் செயலில் தேக்கம், தாமதம், மந்தமான சூழல் ஏற்படலாம். வீண் அலைச்சல்கள், வாக்கு நாணயத்தைக் காப்பாற்ற இயலாத நிலையையும் சந்திக்கலாம். சாதக மான தசாபுக்திகள் நடந்தால் சாதகமான பலன் கள் உண்டாகும். 2-க்குடைய செவ்வாய் 12-ல் இருப்பதால் பொருளாதாரத்தில் சிறு குழப் பங்கள் உண்டாகலாம். மனைவிவழியில் அவற் றைச் சமாளிக்கும் சூழலும் உருவாகலாம். திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடலாம்.