மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் மாதத் தொடக்கத்தில் 3-ல் இருக்கிறார். 12-க்குடைய குரு ஜென்ம ராசியில் சஞ்சாரம். ராகுவும் சேர்க்கை வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் போன்ற பலன்களை சந்திக்க நேரும். தேக நலத்தில் வைத்தியச் செலவுகள் உண்டாகும். ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைவு என்றாலும், 3-க்குடைய புதனும், செவ்வாயும் பரிவர்த்தனை. சகோதரவழியில் சகாயம் எதிர்பார்க்கலாம். அல்லது உங்களுக்கு சகோதரர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகலாம். 5-க்குடைய சூரியன் ராசியின் உச்சம் பெறுவது ஒருவகையில் நன்மையே- அரசு காரியங் களில் எதிர்பார்த்த உதவிகள் நிறைவேறும். காரியங்கள் கைகூடும். 11-ல் சனி தொழிலில் மேன்மையும் முன்னேற்றத்தையும் தருவார். 3-ல் சுக்கிரன். பொருளாதாரத்தில் பற்றாக் குறை நிலவலாம். கணவர் அல்லது மனைவி வகையில் சிறு வைத்தியச் செலவுகள் ஏற்பட்டு விலகும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிநாதன் சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் இரண்டில் மாறுகிறார். 2-க்குடைய புதன் 12-ல் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் பொருளாதாரவகையில் பற்றாக்குறைக்கு இடம் ஏற்படலாம். 11-க்குடைய குருவும் 12-ல் மறைவு. பிள்ளைகள் அல்லது பிள்ளைகள் சார்ந்தளவில் செலவினங்கள் உண்டாகும். அதேசமயம் உடன்பிறந்த சகோதர- சகோதரிகள்வழியில் உதவிக்கும் ஒத்தாசைக்கும் இடமுண்டு. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்கு இருமுறை செய்வதுபோல அமைவது மனதில் வருத்தத்தை உண்டாக்கும். 4-ஆமிடத்தை 12-ல் இருக்கும் குரு பார்ப்பதால் குடியிருப்புரீதியாக செலவினங்கள் அல்லது குடியிருப்பு மாற்றங் கள் ஏற்படலாம். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்கும் முயற்சியும் செய்யலாம். தேக சுகத்தில் அக்கறை காட்டுவது அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அல்லது இடமாற்றம் உண்டாகலாம்.
மிதுனம்
மதுன ராசிக்கு அதிசாரமாக சனி மாறியதால் தற்காலிக அட்டமத்துச் சனி நிவர்த்தியானதுபோல் ஒரு கணக்கு! 10-க்குடைய குரு 11-ஆமிடமான ஜெய ஸ்தானத்தில் இருப்பது மேலும் ஒரு பலம். தடைப்பட்ட காரியங்கள் செயல்படத் துவங்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குரு 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் சகாயம், ஆதரவு, அனுகூ
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் மாதத் தொடக்கத்தில் 3-ல் இருக்கிறார். 12-க்குடைய குரு ஜென்ம ராசியில் சஞ்சாரம். ராகுவும் சேர்க்கை வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் போன்ற பலன்களை சந்திக்க நேரும். தேக நலத்தில் வைத்தியச் செலவுகள் உண்டாகும். ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைவு என்றாலும், 3-க்குடைய புதனும், செவ்வாயும் பரிவர்த்தனை. சகோதரவழியில் சகாயம் எதிர்பார்க்கலாம். அல்லது உங்களுக்கு சகோதரர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகலாம். 5-க்குடைய சூரியன் ராசியின் உச்சம் பெறுவது ஒருவகையில் நன்மையே- அரசு காரியங் களில் எதிர்பார்த்த உதவிகள் நிறைவேறும். காரியங்கள் கைகூடும். 11-ல் சனி தொழிலில் மேன்மையும் முன்னேற்றத்தையும் தருவார். 3-ல் சுக்கிரன். பொருளாதாரத்தில் பற்றாக் குறை நிலவலாம். கணவர் அல்லது மனைவி வகையில் சிறு வைத்தியச் செலவுகள் ஏற்பட்டு விலகும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிநாதன் சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் இரண்டில் மாறுகிறார். 2-க்குடைய புதன் 12-ல் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் பொருளாதாரவகையில் பற்றாக்குறைக்கு இடம் ஏற்படலாம். 11-க்குடைய குருவும் 12-ல் மறைவு. பிள்ளைகள் அல்லது பிள்ளைகள் சார்ந்தளவில் செலவினங்கள் உண்டாகும். அதேசமயம் உடன்பிறந்த சகோதர- சகோதரிகள்வழியில் உதவிக்கும் ஒத்தாசைக்கும் இடமுண்டு. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்கு இருமுறை செய்வதுபோல அமைவது மனதில் வருத்தத்தை உண்டாக்கும். 4-ஆமிடத்தை 12-ல் இருக்கும் குரு பார்ப்பதால் குடியிருப்புரீதியாக செலவினங்கள் அல்லது குடியிருப்பு மாற்றங் கள் ஏற்படலாம். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்கும் முயற்சியும் செய்யலாம். தேக சுகத்தில் அக்கறை காட்டுவது அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அல்லது இடமாற்றம் உண்டாகலாம்.
மிதுனம்
மதுன ராசிக்கு அதிசாரமாக சனி மாறியதால் தற்காலிக அட்டமத்துச் சனி நிவர்த்தியானதுபோல் ஒரு கணக்கு! 10-க்குடைய குரு 11-ஆமிடமான ஜெய ஸ்தானத்தில் இருப்பது மேலும் ஒரு பலம். தடைப்பட்ட காரியங்கள் செயல்படத் துவங்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குரு 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் சகாயம், ஆதரவு, அனுகூலம் போன்றவை உண்டாகும் 7-ஆமிடத்தைப் பார்க்கும் குரு நண்பர்கள் அல்லது கூட்டாளிகள் வகையில் ஒத்துழைப்பும் ஏற்படலாம். 11-க்குடைய சுக்கிரனும், ராசிநாதன் புதனும் பரிவர்த்தனையாவதால் காரியத் தடைகள் உடையும், செய்தொழின் முயற்சிகள் வெற்றியடையும். நீண்டகாலமாக இழு பறியாக இருந்த நற்காரியம் இம்மாதம் நிறைவேறும். உற்றார்- உறவினர்களால் மகிழ்வும் மனநிறைவும் ஏற்படும். சுபவிரயச் செலவுகள் ஏற்படும். உடன்பிறந்த சகோதரவழியில் சங்கடங்களும் தாமரை இலை தண்ணீர் போலவும் உறவுகள் செயல்படும்.
கடகம்
கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் 10-ல் உச்சம். இம்மாதம் 15-ஆம் தேதிவரை மேஷத்தில் சஞ்சாரம். குருவும் 10-ல் சேர்க்கை. தொழில், வேலை, உத்தியோகத்தில் நிலவி வந்த மந்தநிலை மாறும். வேலை வாய்ப்புகள் கைகூடும். வெற்றியாகும். கேட்ட இடத்தில் பணத் தேவைகளும் பூர்த்தியாகும். அதேசமயம் அலைச்சல்களும் அலைக்கழிப்பு களும் இன்றிய மையாத ஒன்றாக அமையும். 10-க்குடைய செவ்வாய் 12-ல் மறைவது ஒரு குற்றமாகும். என்றாலும் 9-க்குடைய குரு. 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அது வழி நடத்தும். 4-ல் உள்ள கேது சிலநேரம் உடல் உபாதைகளை உண்டாக்கினாலும் குரு பார்வையால் அது நிவர்த்தியாகும். பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதிசார அட்டமத்துச் சனி நடப்பதால் ஒருசில விஷயங்களில் இரட்டிப்புச் செலவு செய்யவேண்டிய சூழல் உண்டாகலாம். வெளியூர் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும்.
சிம்மம்
கடந்த மாதம் சிம்ம ராசிக்கு 9-ல் குரு மாறி ராசியைப் பார்க்கத் துவங்கிவிட்டார். அது ஒரு ப்ளஸ் பாயிண்ட். 5-க்குடையவர் 9-ல் திரிகோணம் ஏறுவது சிறப்பு. ராசிநாதன் சூரியன் அங்கு உச்சம். இது மேலும் ஒரு ப்ளஸ் பாயிண்ட். நீங்கள் முயற்சி செய்து முடியாமல்போன காரியம் மீண்டும் முயற்சித்து முடித்தும் காட்டுவீர்கள். அதன்மூலம் உங்களது திறமையை நீரூபிக்கலாம். பிள்ளைகள்வகையில் எண்ணியவை ஈடேறும். கருதியவை கைகூடும். சகோதரர்களால் ஒற்றுமையும் உதவியும். உண்டாகும். பெரு முயற்சிகளில் தலையிட்டு சாதிக்கும் அமைப்புகளும் ஏற்படும். 9-க்குடைய செவ்வாய் 11-ல் இருப்பதால் பூர்வீகச் சொத்து விற்பனைமூலம் தனவரவுக்கு இடமுண்டு. 7-க்குடைய சனி 7-ல் ஆட்சி. கணவன் அல்லது மனைவிக்கு தேக சுகத்தில் வைத்தியச்செலவுகள் ஏற்பட்டு விலகும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 8-ல் மறைவு. 12-க்குயை சூரியனும் 8-ல் மறைவு. உச்சம். குடும்பத்துவகையில் பொருளாதாரப் பற்றாக்குறை, சேமிப்பு கரைவது போன்ற பலன்களை சந்திக்க நேரும். 7-க்குடைய குரு 8-ல் மறைவு. கணவருக்கோ அல்லது மனைவிக்கோ மருத்துவச் செலவுகள் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் பாதிப்புகளுக்கும் இடமுண்டு, அறுவை சிகிச்சை போன்ற தொல்லைகள் ஏற்படலாம். 6-ல் சனி ஆட்சி என்பதால் போட்டி பொறாமைகள் விலகும். கடன் தொந்தரவுகள் காணப்படும். 2-ல் உள்ள கேது குடும்பக் குழப்பம் மனதில் நிம்மதியற்ற நிலை போன்றவற்றை ஏற்படுத்தலாம். வாகனத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பணியிட மாற்றத் திற்கு இடமுண்டு. 12-ஆம் தேதிமுதல் சகோதரகாரகன் 11-ல் நீச்சமடைவதால் கருத்து வேற்றுமைக்கும் வாக்குவாதத்திற்கும் இடமுண்டாகும். அமைதிகாப்பது நலம்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் மாதத் தொடக்கத்திலேயே 9-ல் திரிகோணம் பெறுகிறார். 9-க்குயை புதன் 7-ல் குருவுடன் சேர்க்கை. 11-க்குடைய சூரியனும் 7-ல் உச்சம் 7-ல் நிற்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைக்கிறது. எனவே பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரியான சூழலும் அமைப்பும் ஏற்படும். இதுவரை மனதை வாட்டிய நிகழ்வுகளுக்கு சாதகமான தீர்வு உண்டாகும். வேலை உத்தியோகத்தில் நிலவிய மனச்சங்கடங்களும் மனக்கசப்புகளும் தீரும். உத்தியோகத்தினருக்கு உயரதிகாரிகளால் உதாசீனப்படுத்திய நிலை மாறி மதிப்பும் மரியாதையும் ஏற்படும். கருதிய காரியத்தையும், எண்ணிய எண்ணங்களையும் நிறைவேற்றுவார். ஜென்ம கேது சில நேரம் அசதி, சோர்வு களைத் தரலாம். குரு பார்ப்பதால் அதை சமாளித்து எதிர்கொள்ளலாம். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 2-க்குடைய குரு 6-ல் மறைவு, தொழில்வகையில் போட்டி பொறாமைகளுக்கு இடம் உண்டு. அதே சமயம் 10-ஆமிடத்துக்கு பாக்கிய ஸ்தானத் தில் குரு இருந்து 10-ஆமிடத்தையே பார்ப்பதால் தொழில் இயக்கம் தடைப் படாது. 12-ஆமிடத்தைப் பார்க்கும் குரு- தொழில்ரீதியான விரயத்தையும் கட்டுப் படுத்த முடியாது. 12-ஆம் தேதிமுதல் ராசி நாதன் செவ்வாய் 9-ல் நீசம். 4-ல் உள்ள சனிக்கு செவ்வாய் பார்வை கிடைப்பது சற்று கடினமான செயல்களை ஏற்படுத்தித் தரும். தகப்பனார் உறவுகளால் மன நிம்மதிக்குறைவு, உடன்பிறந்த சகோதர- சகோதரிகளிடையே கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகலாம். தாயாருக்கு மருத்துவச் செலவு போன்றவை ஏற்படலாம். 12-ல் உள்ள கேது வேலைரீதியாக வெளியூர் பயணத்தைத் தரும். குரு பார்ப்பதால் பயணம் ஆதாயமும் தரும். 2-ஆமிடத்தை குரு பார்ப்பதால் ஏதேனும் ஒருவழியில் தனவரவுக்கு இடமுண்டு.
தனுசு
தனுசு ரசிக்கு அதிசாரமாக ஏழரைச் சனி விலகியிருக்கிறது. என்றாலும் டிசம்பர் 20-ஆம் தேதி சனிப்பெயர்ச்சியின் போதுதான் முழுமையாக ஏழரைச்சனி விலகும். ராசிநாதன் குரு 5-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்ப்பது ஒரு பலம், முடங்கிக் கிடந்த செயல்பாடுகள் யாவும் மீண்டும். தொடங்கும் நிலையை அடையலாம். வெற்றியும் உண்டாகும். 9-ஆமிடத்தை குரு பார்ப்பதால் ஆன்மிக சிந்தனைகள் மேலோங்கும். மந்திர உபதேசம், தீட்சை போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். 3-ல் உள்ள சனி எதையும் சாதிக்கும் வல்லமையையும் ஆற்றலை யும் தரும். எண்ணிய எண்ணங்களை செய்து முடிக்கலாம். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக நிலுவையில் இருந்த செயல் கள் நல்ல முடிவுக்கு வரும். அதேசமயம். நீங்களும் நேர்மையுடனும் மனிதாபிமானத் துடனும் நடந்துகொள்வது அவசியம். எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை.
மகரம்
மகர ராசிநாதன் சனி 3-ல் ஆட்சி. (அதிசாரமாக 2-ல் சஞ்சாரம்). குடும்பம், பொருளாதாரத்தில் முன்பிருந்ததைவிட தற்போது சுமூகமான சூழ்நிலை உண்டாகும். 3-ஆமிடத்துக்கு குரு 4-ல் இருக்கிறார். தேக நலனில் முன்னேற்றம் ஏற்படும். புதிய மனை அல்லது புதிய வாகனயோகம் உண்டாகும். அதற்குண்டான வகையில் வங்கிக்கடன் அல்லறு தனியார் கடனும் அமையும். 8-ஆமிடத்தைப் பார்க்கும் குரு திடீர் அதிர்ஷ்டத்தையும் தருவார். 8-ஆமிடத்திற்கு 5-க்குடையவர் குரு. எனவே மேற்கண்ட யோகத்தை எதிர் பார்க்கலாம் தொழில்வகையில் இடமாற்றம் உண்டாகும். அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமாகவும் அமையும் தாயார் உள்ளோருக்கு தாய்வழியில் மருத்துவச் செலவுக்கு இடமுண்டு. அதனால் சற்று அலைச்சலும் உண்டாகும். மேற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி யோகம் சிறக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கு ஏழரைச் சனி நடக்கிறது. அதிசாரமாக ஜென்மச் சனி நடக்கிறது. 3-ஆமிடம், 7-ஆமிடம், 10-ஆமிடங்களுக்கு பார்வை கிடைக்கிறது. சகோதர- சகோதரிவழியில் சங்கடங்கள் ஏற்பட இடமுண்டு. விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்ற தத்துவப்படி அனுசரித்துச் செல்ல பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். வீண் சங்கடங்களைத் தவிர்க்கலாம். கணவர் அல்லது மனைவி ஸ்தானத்தைப் பார்க்கும் சனி அவர்களுக்கு தேக நலக்குறைவை உண்டாக்கலாம். என்றாலும் பாதிப்புகளுக்கு இடமில்லை. ஜனன ஜாதகத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணியிட மாற்றம் அல்லது வேறு உத்தியோக மாற்றம் ஏற்படலாம். திருமண வயதை ஒட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமண வாய்ப்பு உண்டாகும். குரு பார்வையால் தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 2-ல் சஞ்சாரம். கடந்த ஒரு வருடம் ஜென்மத்தில் இருந்த குரு தயவு தாட்சண்யம் பாராமல் அலைக்கழிப்பு அலைச்சல். பொருளாதாரப் பற்றாக் குறை போன்றவற்றை வாரி வழங்கினார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை 2-ல் வந்திருக்கும் குரு தன ஸ்தானத்தில் இருப்பதால் தனவரவு. குடுமபத்தில் நிம்மதி போன்றவற்றைத் தருவார். 2-க்குடைய செவ்வாய் 12-ஆம் தேதிமுதல் 5-ல் நீசம் பெறுவதால் அக்காலகட்டம் தனவரவில் சிறு தடுமாற்றம் ஏற்படும். 12-ல் உள்ள சனி விரயஸ்தானத்தில் ஆட்சியாக விளங்குகிறார். அதிசாரமாக ஏழரைச்சனி ஆரம்பமானாலும் டிசம்பர் 20-ஆம் தேதிதான் மீன ராசிக்கு ஏழரை தொடங்குகிறது. வண்டி வாகனவகையில் பழுது செலவுகள் ஏற்படலாம். 10-ஆமிடத்தை 10-க்குடைய குருவே பார்ப்பதால் வேலை, உத்தியோகத்தில் சலனத்திற்கும் சங்கடத்திற்கும் இடமில்லை. பிள்ளைகள்வழியில் செலவினங்கள் உண்டாகும்.