மே மாத எண்ணியல் பலன்கள் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

/idhalgal/om/may-month-numbers-palans

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சூரியனின் ஆதிக்கத் தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் எந்த காரி யத்தைச் செய்தா லும் நன்மை யாகவும் லாபமாகவும் அமையும். தந்தைவழி உறவினர் களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வழக்கு வரும் வாய்ப்புள்ளது. எனவே பொறுமை யைக் கடைப்பிடிக்கவேண்டும். இதுவரை தடைப் பட்டு வந்த சுபகாரியம் இந்த மாதம் நல்ல முடிவுக்கு வரும். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும். பணவரவுகளில் ஏமாற்றமில்லை. உழைப்புக்கேற்ற பலன் உடனே கிடைக்கும். செய்துவரும் தொழிலை அப்படியே செய்து வரவேண்டும். விரிவு படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் வராது. அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு எதிர் பார்த்தபடி மாறுதல் கிடைக்கும். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்தபடி மேற்படிப்பு அமையும். ஒருசிலர் இராணுவத்துறையில் பணியாற்றச் செல்வார்கள். வியாபாரிகள் கொள்முதலில் அதிகம் முதலீடு செய்யக் கூடாது. மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பப் பெண்களால் கணவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். மாமன், மைத்துனர் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வரும். அயல்நாட்டுப் பயணம் உயர்வைத் தரும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 4, 13, 22, 31; 8, 17, 26. வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எந்த காரியத்தையும் ஆர்வமுடன் செய்வீர்கள். அதனால் உற்றார்- உறவினர் மற்றும் வெளியிடத் திலும் மதிப்பு கூடும். இது வரை வாட்டி வதைத்த கடன் தொந்தரவு குறையும். உழைக் கும் நோக்கம் இருந்து சரியான வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் வந்து சேரும். வீட்டில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு கள் நீங்கும். பிள்ளைகள் தாய்- தந்தை பேச்சைக்கேட்டு நடப்பார்கள். தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் பொறுமையாக செயல்படவேண்டும். பொதுமக்கள் எதிர்ப்புகள் வரும். இதனால் மேலதிகாரிகள் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உடன்பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும். வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவார்கள்; இதுவரை வசூலாகாமலிருந்த பாக்கிகள் வசூலாகும். மாணவர்களின் உயர்படிப்பு எண்ணம் நிறைவேறும். அரசியலில் உள்ளவர்கள் எதிர் பாராத பதவிகளை தலைமையி

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சூரியனின் ஆதிக்கத் தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் எந்த காரி யத்தைச் செய்தா லும் நன்மை யாகவும் லாபமாகவும் அமையும். தந்தைவழி உறவினர் களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வழக்கு வரும் வாய்ப்புள்ளது. எனவே பொறுமை யைக் கடைப்பிடிக்கவேண்டும். இதுவரை தடைப் பட்டு வந்த சுபகாரியம் இந்த மாதம் நல்ல முடிவுக்கு வரும். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும். பணவரவுகளில் ஏமாற்றமில்லை. உழைப்புக்கேற்ற பலன் உடனே கிடைக்கும். செய்துவரும் தொழிலை அப்படியே செய்து வரவேண்டும். விரிவு படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் வராது. அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு எதிர் பார்த்தபடி மாறுதல் கிடைக்கும். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்தபடி மேற்படிப்பு அமையும். ஒருசிலர் இராணுவத்துறையில் பணியாற்றச் செல்வார்கள். வியாபாரிகள் கொள்முதலில் அதிகம் முதலீடு செய்யக் கூடாது. மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பப் பெண்களால் கணவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். மாமன், மைத்துனர் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வரும். அயல்நாட்டுப் பயணம் உயர்வைத் தரும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 4, 13, 22, 31; 8, 17, 26. வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எந்த காரியத்தையும் ஆர்வமுடன் செய்வீர்கள். அதனால் உற்றார்- உறவினர் மற்றும் வெளியிடத் திலும் மதிப்பு கூடும். இது வரை வாட்டி வதைத்த கடன் தொந்தரவு குறையும். உழைக் கும் நோக்கம் இருந்து சரியான வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் வந்து சேரும். வீட்டில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு கள் நீங்கும். பிள்ளைகள் தாய்- தந்தை பேச்சைக்கேட்டு நடப்பார்கள். தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் பொறுமையாக செயல்படவேண்டும். பொதுமக்கள் எதிர்ப்புகள் வரும். இதனால் மேலதிகாரிகள் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உடன்பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும். வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவார்கள்; இதுவரை வசூலாகாமலிருந்த பாக்கிகள் வசூலாகும். மாணவர்களின் உயர்படிப்பு எண்ணம் நிறைவேறும். அரசியலில் உள்ளவர்கள் எதிர் பாராத பதவிகளை தலைமையின் பாராட்டு டன் பெறுவார்கள். ஒருசிலருக்கு இருந்து வந்த நோய் நீங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 8, 26; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.


3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எப்போதும் சிந்தித்து செயல்படுவீர்கள். இந்த மாதம் உங்களது சிந்தனைகளை செயலாக்கிக் காட்டுவீர்கள். கலைத்துறையில் பணி யாற்றுபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வாய்ப்புகள் வந்துசேரும். எல்லா தரப்பு தொழில் புரிவோருக்கும் இந்த மாதம் கூடுதல் வரவுகள் வரும். அதே போல் கூடுதல் செலவுகளும் வந்துசேரும். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு கடன் எளிதாகக் கிடைக்கும். இதுவரை உங்களை விட்டுப் பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்து சேர்வார்கள். பிள்ளைகளால் பெற்றோர் கள் மனமகிழ்ச்சி அடையும் மாதம். குடும்பத்தில் சுபகாரியங்கள் திட்டமிட்டபடி தடையில்லாமல் நடக்கும். தொழிலதிபர்கள்- தொழிலாளர்கள் உழைப்பாலும், தங்கள் உழைப்பாலும் புதிய தொழில்களைத் தொடங்குவார்கள். எதிர்பார்த்தபடி வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். உடல்நிலை தெம்பாக இருக்கும். சிலருக்கு சிறு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகனப்பயணங்களில் நிதானத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் அதிகாரி களின் பாராட்டைப் பெறுவார்கள். வேலைப் பளு கூடும். ஒருசிலருக்கு கட்டாய மாறுதல் திடீரென வரும். அது உங்களுக்குப் பிடிக்கா விட்டாலும் வேலையில் சேர்வது நல்லது. அந்த மாறுதல் சிறப்பானதாக இருக்கும். ஒருசிலருக்கு வீடு கட்டும் திட்டம் நிறைவேறும்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 8, 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

ராகு பகவான் ஆதிக்கம் பெற்ற நீங்கள் மனவுறுதி அதிகம் கொண்டவர். இந்த மாதம் நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத் திலும் வெற்றியே காண்பீர்கள். இந்த எண்ணில் பிறந்த மாணவர்கள் சிலர் தேர்வில் முதல் மதிப்பெண்களைப் பெற்று தமிழகம் முழுவதும் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி உயர்படிப் பும் கைகூடும். பெற்றோர் கள் ஆதரவு எப்போதும் உண்டு. உடல்நிலையை சற்று கவனித்துக்கொள்ள வேண்டும். தகுந்த மருத்துவ சிகிச்சை நல்ல பலன் தரும். பணவரவுகள் எதிர்பார்த்ததைவிட கூடுதலா கக் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு வர வேண்டிய சலுகைகள் கேட்காமலேயே கிட்டும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். மருத்துவத்துறையைச் சேர்ந்த வர்கள் கவனத்துடன் செயல்படவேண்டும். சிலருக்கு காவல்துறை வழக்கு வரும் வாய்ப் புள்ளது. வீட்டில் இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியம் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்வார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பெண்கள் உயர்படிப்பு கைகூடும். இதுவரை விலகியிருந்த சொந்தம் உங்கள் வீட்டில் பெண்ணெடுக்க அல்லது கொடுக்க சம்மதித்தால் யோசித்து செய்யுங் கள். சில பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. தொழிலாளர்கள் கோரிக்கைகளை முதலாளி கள் ஏற்று, உரிய வசதியும் செய்வார்கள். ஒருசிலருக்கு வாகனம் வாங்கும் யோகமும் உள்ளது.

srஅதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கை.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சமயோசிதமாகப் பேசும் திறமை உள்ள வர்கள். இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியம் இனிதே நடைபெறும். உடல் நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பமான சூழ்நிலைகள் மாறி, நல்ல நிலைக்கு வரும். பிள்ளைகளின் உயர்கல்வி திட்டமிட்டபடி நடக்கும். திருமணமாகாமல் உள்ள இளைஞர்களுக்கு திடீர் திருமணம் நடக்கலாம். வெளிநாடு செல்ல நினைத்தவர்கள் திட்டமிட்டபடி செல்வார்கள். உடன்பிறந்த மூத்த சகோதரி உங்களுக்கு எதிராக வரக்கூடும். பூர்வீக சொத்துகளில் பிரச்சினைகள் வந்து நீங்கும். மாணவர்கள் பிடிவாத குணம் அதிகரித்து பெற்றோருக்கு சிரமத்தைக் கொடுக்கலாம். வியாபாரிகள் கொள்முதல் கூடுதலாக செய்துகொண்டால் நல்ல லாபம் வரும். தொழிலதிபர்கள் சிலர் தங்கள் தொழிற்சாலையை நினைத்தபடி விரிவுபடுத்திக்கொள்ளலாம். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலைப்பளு கூடும். கலைத்துறையினர் ஏற்றம் பெறும் மாதம். ஒருசிலர் வாகனத் தில் விபத்துகளை சந்திக்கும் மாதம். பொறுமையாகச் செல்லவேண்டும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி, .

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்த உங்களால் மற்றவர்கள் பயன்பெறுவார்கள். இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள். ஹோட்டல் பணி செய்வோர் தனியாகத் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். இதுவரை தடைப்பட்டு வந்த தெய்வ தரிசனப் பயணம் நல்லமுறையில் நடக்கும். பெற்றோர் உடல்நிலையில் மருத்துவச் செலவுகள் வரலாம். உங்களை நேசித்த நண்பரைப் பிரியநேரலாம். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். தொழிலாளர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். வெளியூர்ப் பயணம் செல்லும்போது கைப்பொருளை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். களவுபோக வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு தொழிலாளர் பிரச்சினை வந்து சுமுகமாக நீங்கும். லாபம் குறையாது. புதிய யுக்திகளைக் கையாண்டு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வீர்கள். கலைத்துறை யினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றுகூடுவீர்கள். மாணவர்களுக்கு உயர்படிப்பு திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்களின் மனதுக்கு தெம்பளிக்கும் வகையில் மாறுதல் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.



7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் கேது ஆதிக்கம் உள்ளவர்கள். உங்கள் செயலால் மற்றவர்கள் பயன் பெறும் மாதம். பணப்புழக்கம் அதிகரிக் கும். எனினும் சிலர் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக- கௌரவத்துக்காக கடன் வாங்கி செலவு செய்து, அதனால் சிரமத்தை அடைவார்கள். தொழிலதிபர்கள் நினைத்தபடி தொழிலை விருத்தி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு மறைமுக எதிரிகளால் லாபம் குறையும். நிதானமான வியாபாரம் நன்மையைத் தரும். கணவன்- மனைவி ஒற்றுமைக்குறைவு வரக்கூடும். பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். வெளிவட்டாரத் தொடர்புள்ளவர் களின் காரியம் வெற்றிபெறும். அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டபடி வேலைகளைச் செய்து பொதுமக்கள் பாராட்டைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் தற்காலிலிக மாக வேறு ஊருக்கு மாறுதலில் சென்று, மீண்டும் நினைத்த இடத்திற்கு வருவார்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். காவல்துறையில் பணிபுரிவோர் கூடுதல் வேலைப்பளுவை சந்திப்பார்கள். புதிதாகத் திருமணமான தம்பதியர் இருவீட்டாராலும் போற்றப்படுவார்கள். இதுவரை பெற்றோருக்கு அடங்காமல் இருந்து வந்த பிள்ளைகள், பெற்றோர் சொல்லைக் கேட்டு நடப்பார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சனி பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எப்போதுமே வேலைகளை சுணக்கமின்றி செய்வீர்கள். இந்த மாதம் முழுவதும் பொருளாதாரம் உயரும். தடைப்பட்டு வந்த சுபகாரியம் நடைபெறும். விலகிச் சென்றவர்கள் வந்து சேர்வார்கள். மற்றவர்களுக்காக செலவு செய்யும் நீங்கள் இந்த மாதம் குடும்பத்தாரையும் நினைப் பீர்கள். தொழிற்சாலைகளில் தொழிலாளிகள் உண்மையோடு உழைப்பார்கள். எனவே தொழிலாளி பிரச்சினை மாறும். வியாபாரிகள், எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். இதுவரை இருந்துவந்த நோய் உபாதைகள் குறையும். உங்கள் பேச்சைக் கேட்காமல் இருந்துவந்த குழந்தைகள் நல்லபடியாக பேச்சைக் கேட்டு நடப்பார்கள். வியாபாரிகள் அலைச்சலை சந்தித்தாலும், அதற்கேற்றவாறு வருமானம் கூடும். அரசு ஊழியர்கள் உடன்பணிபுரிவோரின் ஒத்துழைப்பைப் பெறுவதோடு அதிகாரிகளின் பாராட் டை யும் பெறுவார்கள். தற்காலிலிகப் பணி நீக்கத்திலுள்ள அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கிட்டும்; வரவேண்டிய பாக்கிகளும் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்வியை அடைவார்கள். குழந்தை இல்லையே என்று ஏங்கும் தம்பதி யருக்கு இறைவன் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். பெண்களுக்கு வரவேண்டிய பூர்வீக சொத்துகள் வந்து சேரும். அரசியல் பிரமுகர்கள் சமூகத்தில் மதிப்பு பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடா சலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். இதுவரை உங்களை வாட்டி வதைத்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறந்த சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டம் இனிதே நிறைவேறும். படித்து விட்டு வேலையில்லாமல் உள்ள சில இளைஞர்கள் இராணுவம் போன்ற அரசுத் துறைகளுக்குச் செல்வார்கள். பெண்கள் குடும்பத்தாரால் பாராட்டப்படுவார்கள். பணவரவுகள் கூடுதலாக இருக்கும். பிள்ளைகளுக்கான சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். மகான்களின் தரிசனம் கிட்டும். அரசியல் செல்வாக்கு கூடும். ஆன்மிக சுற்றுலா செல்லலாம். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து கூடுதல் லாபம் பெறுவார்கள். வியாபாரிகளும் நல்ல லாபம் பெறுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசு ஊழியர்கள் பணியை சிறப் பாக- மகிழ்ச்சியோடு செய்வார்கள். அரசாங் கத்தில் வரவேண்டிய நிலுவைகள் (அரியர்ஸ்) தாமதமின்றிக் கிடைக்கும். புதிய வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். மனைவி, கணவரின் அன்பைப் பெறுவார். மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்விக்குச் செல்வார்கள். ஒருசிலருக்கு வெளிநாட்டுப் படிப்பு கைகூடும்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.

செல்: 94871 68174

om010519
இதையும் படியுங்கள்
Subscribe