1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்ணில் பிறந்தவர்கள், இந்த மாசி மாதம் நிலம் சம்பந்தமான வெகு லாபம் பெறுவர். வீடு வாங்கும் திட்டம் உள்ளோருக்கு, அதற்கான கடன் கிடைத்து, வீடு வாங்கும் பத்திரத்தில் கையெழுத்து போடுவீர்கள். மனை வாங்குவோர் அதற்கான முயற்சியில் வெற்றிபெறுவீர்கள். வாகனம் வாங்கும் எண்ணம்கொண்ட இளைஞர்கள், உங்கள் பெற்றோர்வழி கடன்மூலம் கனவை நினைவாக்குவீர்கள். இந்த மாதம் திருமண நிகழ்வு உண்டு. என்னவொன்று, வரும் வரன் சற்று நிறம் கம்மியாக அமைவார். மறுமணம் வேண்டுவோர், அது நிகழக் காண்பர். வெளிவட்டாரத் தொடர்புகள், ஏனோ எரிச்சல் தரும்விதமாக அமையும். தம்பதிகள், ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க பிடிக்காத அளவிற்கு சண்டை இடுவர். இதற்கு பண விஷயம் முக்கியமான காரணமாகும். சிலரின் சண்டைக்கு மூத்த கோதரனும் காரணமாவார்கள். வியாபாரம் கடுகடுவென்று இருப்பினும் லாப பணவரவு வந்துகொண்டே இருக்கும். உங்களின் சில வாரிசுகள், உயர்கல்வி அல்லது வேலையின் பொருட்டு, இடம் மாறுவர். இந்த எண்ணில் பிறந்த குழந்தைகளின் தாய்- தந்தை சீருடை பணி கிடைக்கப்பெறுவர். வேலை தேடுவோருக்கு, சீருடைப் பணி அல்லது தகவல் தொடர்பு வேலை கிடைக்கும். அடுக்குமாடி கட்டும் ஒப்பந்தத்தில், கையெழுத்து போடுவீர்கள். சிலர் வீட்டை லீசுக்கு எடுப்பீர்கள். உங்களில் சிலருக்கு, உங்களின் வாழ்க்கைத்துணையும், மறைவான இணையும், ஒருங்கே சந்திக்கும் வாய்ப்பும், சூழ்நிலையும் உண்டாகும். உங்களின் நிலை சற்று சிக்கல்தான்; கவனம் தேவை. மறைவான நட்புகளால், வெகு அவமானம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.
பரிகாரம்: சுவாமிமலை முருகரை வணங்கவும். அருகிலுள்ள வள்ளி- தெய்வானையுடன் உள்ள முருகருக்கு, தீபமேற்றி, நெய் வாங்கியும் கொடுங்கள். இளைஞர்களுக்கு, வேலை விஷயமாக முடிந்த உதவியைச் செய்யுங்கள்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம், உங்கள் வேலை கிடைக்க அல்லது சொந்த வியாபாரம் தொடங்க என, தெரிந்த நபர் ஒருவர் உதவிசெய்வார். வேறு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்க, உதவிகள் தேடிவரும். சொந்தத் தொழிலில் கிடைக்கும் லாபம், உங்களை மனை வாங்கச் செய்யும். எதிர் பாரதவிதத்தில், அரசு டெண்டர் கிடைக்கும். இந்த மாதம் பண சுழற்சி என்பது ஒரே இடத்தில் நின்று மக்கர் பண்ணும். பண வரவு, லாபம் எல்லாம் கணக்கில் இருக்குமேயொழிய, கையில் தென்படாது. உங்கள் பிறந்த வீட்டு மனிதர்களுக்கும், வாழ்க்கைத் துணையின் இல்ல ஆட்களுக்கும் இடையே வெட்டுப்பழி, குத்துப்பழி ஏற்பட்டு, போலீஸ் வரை செல்ல நேரிடும். கூடியமட்டும் இரு குடும்ப ஆட்களையும் ஒன்றுசேர விடாமல் பார்த்துக்கொள்ளவும். காதல் விஷயம் பட்டொளி வீசி பறந்து, இஷ்ட திருமணத்தில் முடியும். சிலரின் மூத்த சகோதரியின் திருமணம் நடக்கும். உங்களைப் பற்றிய வதந்தி ஒன்று தலை விரித்தாடும். அரசியலில் பெண் பிரபலம் ஒருவர் மிக மேன்மை பெறுவார். அவருக்கு மிகப்பெரிய பதவி ஒன்று தேடிவரும் இந்த எண்ணில் பிறந்த கலைஞர்கள், விளையாட்டு, வீரர்கள் போன்றோர் வெகு வெகுமதி பெறுவர். பங்கு வர்த்தகம் ஓஹோவென லாபம் தரும். உங்கள் மருமகளின் ஆக்கப்பூர்வமான யோசனைகள், உங்கள் தொழிலை மிக விருத்தி செய்யும். எதிர்பாரத லாபமும், நஷ்டமும் உண்டு. சிறு பயணத்தில் கவனமாக இருக்கவும். திருமண விஷயமாக குலதெய்வ வழிபாடு உண்டு. வாரிசுகள் கலை சம்பந்த வர்த்தகம் தொடங்குவர்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகர் வழிபாடு நல்லது. அருகிலுள்ள வள்ளி, தெய்வானையுடன்கூடிய முருகரை அபிஷேகப் பொருட்களுடன் வணங்கவும். இளைஞர்கள் குடிப்பதற்கு சத்துபானம் வாங்கிக் கொடுங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும். அதனை கலைத்தொழில், பங்கு வர்த்தகம், பூர்வீக தொழில், மனை வாங்குதல் என முதலீடு செய்வீர்கள். வேலையில் பதவி உயர்வும், பணபெருக்கமும் கிடைக்கும். வாரிசுகள், வேலை விஷயமாக வெளிநாடு செல்வர். அரசியல்வாதிகள், பதவி மாற்றமும், பண ஏற்றமும் பெறுவர். உங்கள் இளைய சகோதரனுக்கும் உங்கள் தந்தைக்கும் கடுமையான வாய், வரப்புத் தகராறு உண்டு. அது அவரது திருமண விஷயம் அல்லது பண விஷயமாக இருக்கும். பங்குதாரரின் வியாபார ஒப்பந்தம், கவலை, கலக்கம் தரும். அரசு குத்தகை, ஒப்பந்தங்களில தகராறு ஏற்படும். உங்கள் வீட்டு வேலை செய்பவருக்கும், உங்கள் தந்தைக்கும் இடையே பெரும் வாக்குவாதம் உண்டாகும். வேலையின் பொருட்டு, வெளியிடம் நகரக்கூடும். திருமண சம்பந்தமான தகவல் எட்டிப்பார்க்கும். உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம், பேசு பொருளாகும். உங்களுக்கு வாரிசு யோகம் கிடைக்கும். உங்கள் வேலையில் கிடைக்கும் பதவி உயர்வு உங்களை குலதெய்வ வழிபாட்டைச் செய்ய செய்யும். கலைஞர்கள் பயணத்தின்மூலம் நிறைய பணவரவு பெறுவர். அரசியல்வாதிகள், வாக்கினால் மேன்மை பெறுவர்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: வைத்தீஸ்வரன் கோவில் முருகரை வழிபடவும். அருகிலுள்ள வள்ளி- தெய்வானை முருகரை, முல்லை மலர்கொண்டு வணங்கவும். இளைஞர்களுக்கு, கல்வி சம்பந்தமான புத்தகம் வாங்கிக் கொடுக்கவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் கல்வி, தொழில் விஷயமான அலைச்சல் மேற்கொள்வீர்கள். வீடு மாற்றும் விஷயம் அல்லல் தரும். சிலருக்கு வாடகைக்கு இருக்கும், குடித்தனக்காரர்களுடன் சண்டை ஏற்படும். இது விஷயமாக, உங்கள் தாயாருக்கும், வாழ்க்கைத் துணைக்கும் இடையே பெரும் சண்டை உண்டாகும். பணவரவு ஜொலிக்கும். அதிலும், ரகசிய பண கொடுக்கல்- வாங்கல் மிக அதிகரிக்கும். கலாட்டா கல்யாணம் பண விரயம் தரும். வெளியூர், வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் அமையும். உங்கள் அரசியல் அல்லது குடும்பத்தில், ஒரு இளம் பெண்ணால் இடையூறு ஏற்படும். தொழிலில், ஒரு பெண் உங்களை ஏமாற்றிவிடக்கூடும். சில அரசியல்வாதிகள், பதவி இழப்புக்கு ஆளாவார்கள். பங்கு வர்த்தகம், பாதிக்கும். கலைஞர்கள், லாபத்தில் நஷ்டம், நஷ்டத்தில் லாபம் பெறுவர். நிறைய அரசு அலுவலர்கள் பணியிட மாற்றம் பெறுவர். சீருடை பணி அதிகாரிகள், ஒரு மேன்மையான நன்மையும், மோசமான வதந்தி செய்தியையும் ஒருசேர கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் படித்ததை மறந்துவிடுவர்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 7, 14, 25.
பரிகாரம்: நாக சுப்பிரமணியரை வணங்கவும். அருகிலுள்ள வள்ளி- தெய்வானை சமேத முருகரை தீபமேற்றி வணங்கவும். உங்களால் முடிந்தால், இளைஞர்களுக்கு அசைவ உணவு கொடுக்கலாம்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம், உங்களுக்கு தைரியம், விரம், துணிச்சல் இவையெல்லாம் சேர்ந்து தலை விரித்தாடும். எனவே வேண்டாத சண்டை, வில்லங்களை இழுத்து வைத்து, சண்டையிட்டு கொண்டாடி மகிழ்வீர்கள். உங்கள் எதிரிகளுடன் வலுச்சண்டை இழுத்து, அதில் எதிர்பாரத நன்மையும் பெறுவீர்கள். வெளி ஆட்களிடம் வில்லங்கம் செய்து அலுத்து போய், தொழில் செய்யும் இடத்திலும், சொந்தக் குடும்பத்தினருடன் வம்பு வளர்ப்பீர்கள். இந்த மாதம் பாதிவரை, எல்லாரும் பொறுமையாக, பல்லைக் கடித்துக்கொண்டு இருப்பர். மாத பின்பாதியில், அனைத்திற்கும் சேர்த்துவைத்து உங்களை பின்னி, பெடலெடுத்து, பீஸ் பீஸாக்கிவிடுவர்; கவனம் தேவை. கேட்ட இடத்தில் எல்லாம் கடன் கிடைக்கிறதே என கடனை வாங்கி குவித்துவிடுவீர்கள். உங்கள் தாய் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் கருத்து மோதல் உண்டு. இந்த மாதம் வீடு விற்க நேர்ந்தால், நல்ல விலை கிடைக்கும். அதில் பாதி, கருப்பு பணமாக அமையும். பணியாட்களை, திறமையை நம்பி வேலைக்கு அமர்த்த வேண்டாம். அவர்களை நன்கு விசாரிக்கவேண்டும். ஒப்பந்தங்கள் நல்ல பலன் தரும். கைபேசி செய்திகள் தீமையை ஒளித்து, நன்மையாக மட்டும் தெரியவரும்; கவனம் தேவை. காதல் விஷயம், சண்டை மற்றும் ஓடுவது என அமையும். பெற்றோர் நலன் கவனிக்கப்படவேண்டும். கலப்பு மணம் அமையக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: திருத்தணி முருகரை வணங்கவும். அருகிலுள்ள வள்ளி, தெய்வானையுடன்கூடிய முருகருக்கு பச்சை ஆடை சார்த்தி வணங்கவும். விளையாட்டுத் துறையில், குறிப்பாக குஸ்தி சண்டை விளையாட்டில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு முடிந்த உதவிச் செய்யவும்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்கள் திருமணம் மிக, மிக மேன்மையாக, தடபுடலாக, ஊரே மெச்சும்படி நடக்கும். வரும் வரன் மிக செல்வமான குடும்பத்தைச் சேர்ந்தவராக அமைவார். இவ்வளவு பெரிய சம்பந்தம் அமையும்போது, நீங்களும் கொஞ்சம் தில்லாங்கடி வேலை செய்வீர்கள்; வேறு வழியில்லை. பணவரவு நிறைவாக வந்துகொண்டே இருக்கும். நிறைந்த பணவரவு, மனை வீடு, வாகனம் வாங்க தூண்டும். காதல் செம சண்டை கொண்டுவரும். உங்கள் தந்தையும், மூத்த சகோதரனும், பூர்வீக சொத்து, வீடு விஷயமாக பெரிய சண்டையிடுவர். உங்களில் சிலர் கண்டதையும், சாப்பிட்டு, வயிறு கோளாறுக்கு ஆளாவீர்கள். அரசியல்வாதிகள் பூர்வீக இடத்தில், அடி வாங்குவர். சில கலைஞர்கள், மக்களின் வெறுப்புக்கு உட்படுவர். பங்குச் சந்தை பக்கம் போகக்கூடாது. விளையாட்டு, பொழுதுபோக்கு துறையில் உள்ளோர், உடல்நல குறைபாட்டால், சிறிய விடுப்பு ஏற்க வேண்டிவரும். உங்கள் தந்தையின் உடல்நலம் கவனிக்கப்படவேண்டும். உங்கள் மாமனார், சற்று வம்பு, குசம்பு செய்து வீட்டில் கலகம் மூட்டுவார். சில வியாபாரிகள், தங்களின் இடத்தை, மாற்ற வேண்டிவரும். வாழ்க்கைத்துணை சற்று சிறாய்ப்பு கொள்வார்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: திருப்பங்குன்றம் முருகனை வணங்கவும். அருகிலுள்ள வள்ளி- தெய்வானை சமேதர முருகரை, குங்குமம் கொண்டு வணங்கவும். இளைஞர்களுக்கு இனிப்பு வாங்கிக் கொடுக்கவும்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்கள் திருமணம் நடக்கும். அது உங்கள் வேலை அல்லது தொழில் சம்பந்தமான, கலப்பு சம்பந்தமாக அமையும். பணப்புழக்கம் சீராக இருக்கும். சிலருக்கு, மனை விற்ற காசு கையில் புழங்கும். பூர்வீகத்தில் இருந்து, பணியாளர்களை அழைத்துவருவீர்கள். வீட்டில் சிலபல பழுதுபார்க்கும் வேலை நடைபெறும். அனேக வீடுகளில் தண்ணீர் சம்பந்த வேலைகள் இருக்கும். வாரிசுகள் வேலை கிடைத்து, வெளியூர் செல்வர். இது விஷயமாக, உங்களுக்கும், உங்கள் வாரிசுகளுக்குமிடையே பெரிய கருத்து, வேற்றுமை உண்டாகும். வாழ்க்கைத்துணை, அவர் பங்குக்கும், உங்களை நோகடிப்பார். பூர்வீக நிலம், சற்று தொல்லை தரும். அரசு வேலைக்காக பணம் கொடுத்திருந்தால், அது பற்றிய கவலை ஏற்படும். அரசியல்வாதிகள் வழக்குகளை சந்திப்பர். கலைஞர்கள் புகழைப் பெறும் நேரம். கூடவே சற்று எரிச்சலும் அடையும்படி சூழ்நிலை அமையும். கால்வலி அதிகரிக்கும். பாதத்தில் நரம்பு இழுப்பதுபோல், எரிச்சல் உண்டாகும். வலி ஆரம்பித்தவுடன், சித்தா, ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.
பரிகாரம்: வெளியூர் முருகரை வணங்கவும். வள்ளி- தெய்வானையுடன் உள்ள முருகரை, செவ்வரளி மலர்கொண்டு வணங்கவும். இளைஞர்களுக்கு, பல வண்ணம்கொண்ட, கைக்குட்டை போன்றவற்றை வாங்கிக்கொடுங்கள்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு, இந்த மாதம் பணவரவு என்பது நேர்மையான வழியில் குறைவாகவும், மறைமுக வருமானம் அதிகமாகவும் வரும். இந்த அழகில், சில அரசு அதிகாரிகளுக்குள், லஞ்சப் பணம் குறைவாக வருவதை சுட்டிக்காட்டி, அடிதடி நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த மாதம் கையூட்டு தொகை நிறைய கேட்டார் என்பதற்காக, கைகலப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. அதுபோல், குறைவாக லஞ்சப்பணம் கொடுத்துவிட்டார் என கோபத்தில், லத்தியால் பின்னி எடுக்கவும் சான்ஸ் உள்ளது. ஆக இந்த எண்ணில் பிறந்தவர்கள், இந்த மாதம் முழுவதும் லஞ்ச பணம் கொடுக்கல்- வாங்கலில் சண்டையிடவே நேரம் சரியாக இருக்கும். இதற்கு அடிப்படை காரணம், இவர்களுக்கு உண்டாகும் ஒருவித, அசட்டுத் தைரியம் ஆகும். ஒருசிலர், மறைமுக தொடர்புக்கு மனை வாங்கிக்கொடுத்து மகிழ்வர். பதவி உயர்வை, கொடுக்க வேண்டியதை கொடுத்து, வாங்கிவிடுவர். வாரிசு பெயரில் சிலர் வீடு, அடுக்குமாடி வாங்குவர். வேலை கிடைக்கும். வீட்டில் பேச்சு பேச்சாக இருக்கும்போதே, மனைவி உங்களை சட்டென்று ஒரு அப்பு, அப்ப வாய்ப்புண்டு; கவனம் தேவை. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள், தங்கள் சொந்தத் தொகுதியில், கௌரவம், புகழ்பெறுவர். சினிமா கலைஞர்கள், கலைச்சேவையில் நல்ல லாபம் பெறுவர். பங்கு வர்த்தகம் மேன்மை தரும். விளையாட்டு வீரர்கள் வெற்றியை தக்க வைத்துக்கொள்வர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.
பரிகாரம்: மருதமலை முருகரை வணங்கவும். வள்ளி- தெய்வானையுடன்கூடிய கந்தனுக்கு விளக்கேற்றுவதும், அபிஷேகத்திற்கு அல்லது விளக்கேற்ற எண்ணெய் வாங்கிக் கொடுப்பதும் நன்று. இளைஞர்களுக்கு, எவர்சில்வர் சார்ந்தப் பொருட்களை தேவையறிந்து வாங்கிக்கொடுங்கள்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களின் கௌரவமும், புகழும் சும்மா பாரெங்கும் பட்டொளி வீசி பறக்கும். சும்மாவா? எவனாவது உங்களைப்பற்றி, புகழ்ந்து பேசாவிட்டால், அவனை மறைவாக கூட்டிப்போய், நாலு மிதி மிதித்து, புகழ்ந்து பேச வைத்துவிடுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் நிச்சயமாகும். உங்கள் வாரிசும், அவரின் இல்வாழ்க்கை துணையும் பயங்கரமாக மோதிக்கொள்வார்கள். இதில் உங்கள் இளைய சகோதரர் அல்லது உங்களின் தாய்மாமன் இடையில் தலையிட்டு, செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்டு வருவர். உங்களின் சில வாரிசுகளின் திருமணத்தில், செம கலாட்டா வந்துவிடும். இந்த எண்ணில் பிறந்தவர்களின் வாரிசுகளுக்கு, இந்த மாதம் திருமணம் வைத்திருந்தால், அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இந்த மாதம் உங்களில் யாருக்காவது திருமணம் நடந்தால், அந்த வரன் வீடு வெகு பிரபல்யமாக இருக்கும். இந்த மாதம் நிறைய நிழல் நிகழ்ச்சிகள் நடக்கும். ஆன்மிகப் பயணத்தை தம்பதிகள் சகிதமாக சென்று தரிசனம் செய்வீர்கள்.உயர்கல்வியின் பொருட்டு வெளிநாட்டு பயணம் ஏற்படும். சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். உங்களில் சிலரின் மறைமுக தொடர்பு உங்களைவிட்டு நீங்கிவிடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: பழனி முருகரை வணங்கவும். வள்ளி- தெய்வானையுடன்கூடிய முருகரை, மாலையுடன் வணங்கவும். இளைஞர்களுக்கு, செம்பு சம்பந்தமான வஸ்துக்களை, தேவை கேட்டறிந்து வழங்கவும்.
செல்: 94449 61845