1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
நீங்கள் சூரியனை எண் நாயகராகக் கொண்டவர்கள். இந்த மாதம் உங்களில் தகுதியுடைய பலருக்குத் திருமணம் நடக்கும். வரும் வாழ்க்கைத்துணை செழிப்பாக அமைவார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மாதம் யார் யாருடைய பணத்தையும் நீங்கள் புழக்கத்தில் விடும் வாய்ப்பு கிட்டும். உங்கள் குடும்ப நபர் ஒருவர் அரசியல் ஜோதியில் கலக்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல பணப் புழக்கமும் நிறைய நபர்களை சந்திக் கும் நல்ல வாய்ப்பும் பெறுவார்கள். உங்கள் தொழிலில் ஒரு புகழ்மிக்க நிகழ்வு நடக்கும். ஒப்பந்தத் தொழில் செய்வோர் மறைமுகப் பணப்பரிமாற் றம், கொடுக்கல்- வாங்கல்மூலம் நினைத்ததை சாதிக்க இயலும். சிலரது இளைய சகோதரி சம்பந்தமாக தொழில் அல்லது அவரது விருப்பம் பொருட்டு எதிர்மறைச் செயலை செய்ய நேரலாம். திறமையான- சற்றே குயுக்தியான பணிப்பெண் கிடைப்பார். வாரிசுகள் சிறிது சிரமம் தருவர். திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்கள் பெரும் புகழடைவார்கள். தம்பதி களுக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடு வந்து விலகும். ஏற்று மதி- இறக்குமதி தொழில் செய் வோர் தொழிலில் ஏற்றமும் மேன்மை யும், கூடவே ஒரு வெற்றிப் பதக்க மும் பெறுவார்கள். சிலருக்கு பாம்புக் கனவு வரும். எதிர்மறைச் செயல் களில் ஆர்வமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். வீடு விற்க பெரும் பாடுபட்டுக் கொண்டிருந்தவர்கள், இந்த மாதம் விளம்பரம் அல்லது ஏதோவொரு எதிர் மறை சிந்தனையைக் கைக்கொண்டு விற்றுவிடுவீர்கள். கவனம் தேவை: இந்த மாதம் உங்களுக்கு வரும் புகழ், வெற்றி, தொழில் மேன்மை என அனைத்திலும் ஒரு சிறு அவப்பெயரும் ஒளிந்துகொண்டிருக்கும். பெண் பணியாளர்களை நியமிக்கும்போது சற்று கவனம் தேவை. தொழில் செய்யுமிடத்தில் சிலருக்கு தீப்புண் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலரது காதல் விஷயத்தில் வம்பு, வதந்தி வந்து குழப்பமேற்படும். மாசி மாதம் 13, 14, 15-ஆம் தேதிகளில் நன்மை நடக்கும். 5, 14, 23-ஆம் எண்கள் நன்மையும், 7, 16, 25-ஆம் எண்கள் தீமையும் தரும்.
பரிகாரம்: இந்த மாதம் சங்கரன்கோவில் சங்கர நாராயணரை வணங்குவது சிறப்பு. உள்ளூர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கும் சிவனுக்கும் வில்வம் அல்லது தாமரைப் பூக்களால் அர்ச்சனைசெய்வது நன்று. உங்கள் வீட்டில் அல்லது தொழில் செய்யுமிடத்தில் அடிபட்டு காயம்பட்ட பெண் பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவிசெய்யுங்கள்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
நீங்கள் சந்திரனை எண்ணின் நாயகராகக் கொண்டவர்கள். இந்த மாதம் வீடுவாங்கும் திட்டம் பலிதமாகும். இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தாய் அல்லது தந்தைக்கு வேலை கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையினர் நல்ல லாபம் பெறமுடியும். உங்களுக்கு ஏற்படவிருந்த வீண் செலவொன்று நன்மை தருவதாக மாறும். உங்களைப் பற்றிய வதந்தி மறையும். உங்கள் வீட்டில் கிணறு, போர் சார்ந்த வேலைகள் மகிழ்ச்சிதரும் விதத்தில் முடியும். சில பங்குகள் லாபம் தரும். கலைஞர்கள் அதிக வேலைவாய்ப்பும், நல்ல அதிர்ஷ்டமும் பெறுவர். அடுக்குமாடி கட்டும் நிறுவனங்களில் சிலருக்கு வேலை கிடைக்கும். சிலரது இளைய சகோதரனின் பணத்தேவையின் பொருட்டு தம்பதிகள் கருத்து வேறுபாடு கொள்வார்கள். ஆன்மிகப் பயணமுண்டு அல்லது பேரன், பேத்தியின் பொருட்டு வெளிநாட்டுப் பயணம் அமையும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலரது வாரிசுகளுக்குத் திருமணம் நடக்கும். அரசியல்வாதிகள் சிலர்- குறிப்பாக பெண் அரசியல்வாதிகள் பெருமைமிக்க உயர்பதவியில் அமரும் பாக்கியமுண்டு. வேலைசெய்யும் பெண்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். கருவுறுதல் சம்பந்தமான நற்செய்திகள் உண்டு. வாரிசுகளால் லாபம் கிடைக்கும். படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும். கவனம் தேவை: பண விஷயம் குளறுபடியாகும். பணியாளர்களால் இன்னல் உண்டாகும். சிலரது மருமகன் கோபித்துக்கொண்டு செல்வார். தோள்பட்டை அல்லது கணுக்கால் வலி ஏற்படும். சிலர் தங்களின் பெற்றோரின் வருத்தத்துக்கு ஆளாக நேரிடும். தொழில் செய்யுமிடப் பிரச்சினை ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். செய்தி சேகரிப் பாளர்கள் பணி அலைச்சலின்போது இடர்களை சந்திக்க நேரலாம். மாசி மாதம் 15, 16, 17-ஆம் தேதிகள் நற்செய்தி தரும். 6, 15, 24-ஆம் எண்கள் நன்மை தரும். 1, 10, 19, 28-ஆம் எண்கள் தீமை தரும்.
பரிகாரம்: திருக்கடையூர் அபிராமி அம்மனை வணங்கலாம். அருகிலுள்ள அம்மன் சந்நிதிக்குத் தேவையறிந்து வெளிச்சம் தரும் பொருட்களை வாங்கிக் கொடுங்கள். உங்களிடம் பணிபுரிவோரின் தகவல் தொடர்பு சம்பந்தமான செலவை முடிந்த வரையில் நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
நீங்கள் குருவின் எண்ணை நாயகராகக் கொண்டவர்கள். இந்த மாதம் வேலை தேடுவோருக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும். அந்த வேலை நீங்கள் எண்ணியபடியே மனநிறைவு தரும் வேலை யாக அமையும். சிலர் வேலை கிடைத்து வெளிநாடு செல்வர். வீடு கட்டுவதற்காக, கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். மூத்த சகோதரி வீடுகட்ட ஆரம்பிப்பார். விவசாயிகள் தண்ணீர் சம்பந்தமான அணுகூலக் கடன் பெறுவார்கள். உங்களில் சிலர் அரசுவேலை கிடைக்கப் பெறுவீர்கள். அல்லது வரி கட்டுவது சம்பந் தமாக அரசு அதிகாரிகளை சந்திக்கக்கூடும். இளைய சகோதர னின் திருமணம் நடக்கும். பங்கு வர்த்தகம் நீங்கள் சற்றும் நினைத்தறி யாத இனங்களில் லாபம் தரும். கலைஞர்கள் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி பெறுவர். நாட்டுப்புறக் கலைஞர்கள் நிறைய வேலை வாய்ப்பும் லாபமும் கிடைக்கப்பெறுவர். உங்களில் சிலர் செய்தி, தகவல்தொடர்பு போன்ற இனங்களில் வேலை பெறுவீர்கள். அதில் அறிவு சார்ந்த விஷயம் பொதிந்திருக்கும். அரசியல்வாதிகள் தாங்கள் பிறந்த மண்ணில் வெகு ஆர்வமாக சேவை செய்வார்கள். அதன்மூலம் நல்ல பெயரும் புகழும் அடைவார்கள். சிலர் தொழிலில் இடமாற்றம் செய்வர். பதிப்புத்துறை, அச்சகம் போன்றவை தொடர்பான தொழில் விஷயங்களை அரசு உதவியுடன் தொடங்க இயலும். கவனம் தேவை: தொழிலில் முதலீடு செய்யும்போது வயதில் மூத்த அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும். மருமகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். இந்த மாதம் உங்களில் சிலரது எதிரிகளின் கரங்கள் பலமாக ஓங்கியிருக்கும். எனவே முடிந்தவரை எவரிடமும் இணக்க மாக- சமாதானமாகப் போவது நல்லது. அவ்வப்போது மார்பில் நீர் இறுகி சளி கட்டிக்கொள்ளும். இந்த மாதம் நடக்கும் மறுமணங்களிலும் பெண் சற்று அதிக மதிப்பெண் வாங்கி முன்னணியில் இருப்பார். மாசி மாதம் 19, 20, 27-ஆம் தேதிகளில் நன்மையை எதிர்பார்க்கலாம். 1, 10, 19, 28-ஆம் எண்கள் நன்மையும், 9, 18, 27-ஆம் எண்கள் தீமையும் தரும்.
பரிகாரம்: கிருஷ்ண ரை வணங்கவும். அதிலும் குருவாயூரப்பனை வணங்கு வது சாலச் சிறந்தது. யாராவது இருவர் சண்டை யிட்டால் நீங்கள் தயவு செய்து தலையிடாமல் ஒதுங்கிச் செல்லுங்கள். இதுவே உங்களுக்கான இந்த மாதப் பரிகார மாகும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
ராகு பகவானே உங்களின் எண் நாயகனா வார். இந்த மாதம் திருமணம் நடக்கும். ஒன்று, திருமணம் சற்று கலப்பாக இருக்கும் அல்லது வெளியூர், வெளிநாடாக அமையும். விவசாயிகள் மனை, வயல், விளைச்சல் சார்ந்த விஷயங்களில் லாபம் பெறுவர். அறிவுசார்ந்த லாபம் கிடைக்கும். அரசு அனுகூலமுண்டு. அரசியல்வாதிகள் தாங்கள் நினைத்ததை சாமர்த்தியமாக நிறைவேற்றிக்கொள்வார்கள். இந்த மாதம் கடினமான வேலைகளை மேற் கொள்ளவேண்டி வரும். சீருடைப் பணியாளர் களின் பணியில் நிறைய கீழ்மட்ட மனிதர் களைத் தேடவேண்டி இருக்கும். ஆன்மிகம் சம்பந்தமாக சற்று ஏறுக்குமாறான சந்தேகம் வரும். உங்கள் வாரிசுகள்- அதிலும் குறிப்பாக படிக்கும் பிள்ளைகள் இடம்பெயர்வார்கள். கலைஞர்கள் தொழிலின் பொருட்டு வெளிநாடு செல்வார்கள். சிலருக்கு கடன் அடைபடும். சிலரது கடனை அரசு தள்ளுபடி செய்யும். சில தம்பதிகளிடையே சந்தேகம் ஊசலாடும். உங்களில் சிலர் இராணுவம், காவல்துறை சார்ந்த வேலைக்குத் தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். உங்களுக்கு நிறைய வருமானம் வர, உங்கள் மனைவி அதற்கு இருமடங்காக செலவுசெய்வார். அரசு சார்ந்த ஒப்பந்தம் கிடைக்கும். கவனம் தேவை: தம்பதி களின் சந்தேகத்தைப் பேசித் தீர்க்காவிடில் அது பெரிய பிரச்சினையாகிவிடும். சொற் களில் கவனம் தேவை. பிறர் பெருமைக்காக பணத்தை செலவிடவேண்டாம். திரு மணத்தை மிக ஆடம்பரமாக நடத்தவேண்டிய சூழல் ஏற்படும். சற்று கட்டுப்படுத்துவது நன்று. கணுக்காலில் நரம்பு பிடித்திழுப்பது போன்ற வலி ஏற்படலாம். மாசி மாதம் 8-ஆம் தேதி நன்மை நடக்கும். 6, 15, 24-ஆம் எண்கள் நன்மை தரும். 8, 17, 26-ஆம் எண்கள் தீமை தரும்.
பரிகாரம்: திருவேற்காடு கருமாரியம்மனை வணங்கவும். அருகிலுள்ள, ராகு- கேது இணை வுள்ள அரச மரத்தடி விநாயகரை வணங்கவும். பிற இன, மதத்தினரின் திருமணத்திற்கு உதவிசெய்யுங்கள்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகர் புதனாவார். இந்த மாதம் திருமண ஏற்பாடுகள் மிக வேக மெடுக்கும். பெரும்பாலும் வரன் உங்கள் குடும்ப சொந்தமாக அமைவார். திருமணம் நிறைய பணப்புழக்கத்துடன் நடக்கும். வியாபாரத்தில் நல்ல மேன்மையுண்டு. வாக்குமூலம் தொழில் நடத்தும் வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்கள், பட்டிமன்றத்தினர் என இவர்கள் நிறைய மனிதர்களை சந்திக்கவும், அது சார்ந்த வசதியும் அதிர்ஷ்டமும் பெறுவர். கைபேசி பழுதாகி புதிய ஒன்றை வாங்கச் செய்யும். சிலர் பிளாட் வாங்குவீர்கள். சிலரது பெற்றோர் ஏதோவொரு வகையில் மேன்மையடைவார்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். காதல் பிரிவைத் தரும். பங்கு வர்த்தகம், சாலையின் சிறு போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் போன்றவை சார்ந்த இனங்களின் நல்ல வரவு கிட்ட வாய்ப்புண்டு. சில கலைஞர்கள் விருப்பத் திருமணம் செய்துகொள்வார்கள். மற்ற கலைஞர்கள் நிறைய வேலைவாய்ப்பு பெறுவார்கள். சில செலவுகள் யோகம் தரும்; சில அலைச்சல், அதிர்ஷ்டம் சேர்க்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கக்கூடும். தொழில் சார்ந்த சிலர் அரசுக்கு வரிசெலுத்த வேண்டி இருக்கும். முதலீடு செய்வதற்குரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வீர்கள். விவசாயப் பெருமக்கள் சில நஷ்டங்களிலிருந்து மீட்சி பெறுவார்கள். சில மாணவர்கள் கல்வியின் பொருட்டு வெளிநாடு செல்வார்கள். அரசியல்வாதிகள் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள். வாரிசுகள் புதிய தொழில் தொடங்க அல்லது வேலையில்சேர கடன் வாங்க நேரிடும். கவனம் தேவை: வார்த்தைகளில் கடுமை, குதர்க்கம், சந்தேகம் போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழிற்சாலையில் ஏதேனும் காணாமல்போக நேரிடலாம். சில சொற்கள் உங்களையே திரும்ப அவமதிக்கும். சில சொற்கள் உங்களைத் தாக்கக்கூடும். எனவே சொற்களில் கவனம் தேவை. மாசி மாதம் 24, 25, 26-ஆம் தேதிகள் நன்மை தரும். 1, 10, 19, 28-ஆம் எண்கள் நன்மை தரும். 7 16, 25-ஆம் எண்கள் தீமை தரும்.
பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபட வும். அருகிலுள்ள பெருமாள் கோவிலில் நெய் தீபமேற்றவும். வாய்பேச முடியாத- காதுகேளாத சிறுவர்களுக்கு உதவிசெய்யுங்கள்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு;
சுக்கிரனின் எண்ணை நாயகராகக் கொண்டவர்கள் நீங்கள். இந்த மாதம் உங்கள் எண்ணங்கள் பெரும்பாலும் நிறைவேறிவிடும். கூடவே எதிர்பாராத நன்மைகளும் நடக்கும். பணப்புழக்கம் சற்று பற்றாக்குறைபோல தோன்றினாலும் உடனிருப்பவர்கள் தகுந்த சமயத்தில் உதவுவார்கள். கேட்ட இடத்தில் கேட்டவுடன் கடன் கிடைக்கும். உங்களில் சிலர் ஒப்பந்தம் அமைய அல்லது அடுக்குமாடி வாங்க, திருமண சம்பந்தம் அல்லது குழந்தை களின் வேலை என இவை சம்பந்தமான நன்மை தரும் சுபக்கடனையே வாங்குவீர்கள். சிலரது சேவைகள் பாராட்டும் பதக்கமும் பெற்றுத்தரும். சிலருக்கு மருமகன் வரும் வாய்ப்புண்டு. வெளிநாட்டிலிருக்கும் வாரிசுகள் பிறந்த இடம் வந்து சில நாட்கள் தங்கக்கூடும். இளைய சகோதரிக்கு வேலை கிடைக்கும். உங்களில் சிலர் தகவல் தொடர்புத் துறை சார்ந்த பணியில் ஈடுபடலாம். மனை வாங்கும்போது சற்று இழுபறி ஏற்பட்டு, பின்னர் வாங்க இயலும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். கலைஞர்களின் வாய்ப்பு- பயணமும் லாபமும் சார்ந்ததாக அமையும். பழமையான கலைத்திறன் கொண்டவர்கள் வேறிடம் சென்று தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். வேலையில் இடமாற்றம் உண்டு. இப்போது நடக்கும் திருமணங்களில் சற்று கலப்பிருக்கும். உங்களுக்கு வரவிருந்த அவமானம், விபத்து சிறு நொடிப்பொழுதில் தவிர்க்கப்படும். குலதெய்வப் பிரார்த்தனை செய்வீர்கள். சிலருக்கு பேரன்- பேத்தி பிராப்தம் கிடைக்கும். சில மாணவர்கள் கல்வி மாற்றம் செய்வர். மந்திரிகள் சிலரின் இலாகா மாற்றப்படும். கவனம் தேவை: பயணங்களில் கவனமாக இருக்கவேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருந்து, மாத்திரைகளை ஒழுங்காக உட்கொள்ள வேண்டும். அவ்வப்போது நீர்கோர்த்து சிரமம் ஏற்படும். பிற மதத்தினரிடம் தொடர்புகொள்ளும்போது சற்று பொறுமையாக இருத்தல் அவசியம். மாசி மாதம் 10, 11, 12-ஆம் தேதிகள் நன்மை தரும். 1, 10, 19, 28-ஆம் எண்கள் நன்மையும், 9, 18, 27-ஆம் எண்கள் தீமையும் தரும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை சேவிப்பது நன்று. உங்கள் அருகிலுள்ள கோவிலில் பள்ளிகொண்ட நாராயணரை வணங்கலாம். சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் அசைவ உணவு சாப்பிட ஆசைப்பட்டால் அதற்குரிய பணம் கொடுத்து உதவுங்கள்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் கேது. உங்களது சீரிய சிந்தனைகள் சிக்கலைத் தரக்கூடும். எனினும் எப்படியாவது போராடி செயலில் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். இந்த மாதம் எதிரில் உள்ளவர்களைக் குழப்பிவிடுவீர்கள். உங்கள் வாழ்க் கைத் துணை, "இவர் எப்போது என்ன சொல்கிறார் என்றே தெரியவில்லையே' என விழிப்பார். அவ்வளவு வித்தியாசமாக நடந்துகொள்வீர்கள். சிலர் பழைய வீட்டுக்குக் குடிபோவீர் கள் அல்லது கிரயத்துக்கு முடிப்பீர்கள். உங்கள் வாரிசுகள் கல்வியில் சிறப்படைவார்கள். சில குழந்தைகள் கல்வியின் பொருட்டு இடம் மாறுவார்கள். சில வாரிசுகள் திருமணம் முடிந்து வேறிடம் செல்வர். உங்கள் வியாபாரத்தில் இந்த மாதம் பழமையான பொருட்கள் இடம்பெறும். சிலருக்கு இளைய சகோதரனுடன் சற்று மனத்தாங்கல் ஏற்படும். வீட்டுக் கடன் வாங்கக்கூடும். மனைவாங்க முயற்சி செய்வீர்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வேலை கிடைத்து வேறிடம் செல்வீர்கள். வேலையில் இருக்கும் பெண்கள் புகழ்பெறுவர். வேலைதேடும் பெண்கள் இந்த மாசி மாதத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். சிறு முயற்சி செய்தாலே நல்ல வேலை கிடைத்துவிடும். ஆண்களும் இப்போதிருக்கும் வேலையைவிட வேறு சிறப் பான வேலையில் அமர இயலும். முயற்சி மட்டுமே முக்கியமாகும். கவனம் தேவை: பேச்சில் கவனமாக இருக்கவும். வீண் சண்டைக்குச் செல்லவேண்டாம். பாதத்தில் நரம்பு பிடித்துக்கொள்வதுபோல வலி தோன்றலாம் அல்லது வாயுக் கோளாறு உண்டாகலாம். மாசி மாதம் 11-ஆம் தேதி நன்மை தரும். 6, 15, 24-ஆம் எண்கள் நன்மையும், 4, 13, 22, 31-ஆம் எண்கள் தீமையும் தரும்.
பரிகாரம்: கற்பக விநாயகரை வணங்கவும். அருகிலுள்ள விநாயகருக்கு அறுகம்புல் சாற்றி வழிபடவும். முடிந்தால் சேவல் தானம் செய்யலாம். அல்லது சேவல், கோழிகளுக்கு தீவனம் தரலாம்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சனிபகவான் ஆவார். இந்த மாதம் குலதெய்வ வழிபாடுண்டு. புதிய மருமகன் வரும் நேரமிது. ஏற்கெனவே உள்ள மருமகனோடு சற்று மனக்கசப்பு ஏற்படும். அது பணம் சார்ந்த விஷயமாக அமையும். பணப்புழக்கம் ஏற்ற- இறக்கமாக இருக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்காமல் போகும். சிலருக்கு அரசுப்பணி கிடைத்தும், அதில் சேர்வதற்குத் தடையுண்டாகும். அரசுப் பணியில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு சங்கடம் அல்லது அதிக வேலைச் சுமையை சுமக்கநேரிடும். சிலரது குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். இளைய சகோதரி இடம் மாறுவார். சிலர் வெளிநாடு செல்வார்கள். கலைத்துறையில் உள்ளவர்கள் பேரும் புகழும் பெறும் நேரமிது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். உங்களில் சிலரது வாரிசுகளால் மேன்மையுண்டாகும். சிலர் சொந்தத் தொழில் செய்ய முற்படுவார்கள். பங்கு வர்த்தகம் வெற்றி தரும். உங்களது சில முயற்சிகள் நிறைய அலைச்சலுக்குப் பின் வெற்றியைக் கொடுக்கும். இந்த மாதத்தை முயற்சி, முன்னெடுப்பு, சோதனையோட்ட மாதமென்றே வைத்துக்கொள்ளலாம். இவ்வளவு நாளும் செய்யலாமா வேண்டாமா- சரியாக வருமா வராதா என மன ஊசலாட்டத்தில் இருப்பவர்கள் இறங்கி அடித்துப் பாருங்கள். உங்கள் முயற்சிகள் வெகு பிரயாசைகளுக்குப்பின் வெற்றியைத் தேடித்தரும். இந்த மாசி மாதத்தை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முயற்சிகளில் சற்று பழமைத்தனம் மிகுந்திருக்கும். பெண் அரசியல்வாதி பெரிய பதவி பெறுவார். கவனம் தேவை: கடுமையான முயற்சி, பிரயாசைகளினால் சோர்வடையும் நிலை ஏற்படும். அதனால் சிலருக்கு வாய்ப்புண், தொண்டை கட்டுதல், உஷ்ண பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். மாசி மாதம் 1, 2, 3-ஆம் தேதிகளில் நற்செய்தி கிடைக்கக்கூடும். 6, 15, 24-ஆம் எண்கள் நன்மை தரும். 1, 10, 19, 28-ஆம் எண்களில் கவனம் தேவைப்படும்.
பரிகாரம்: சனீஸ்வர பகவானை வணங்கவும். வீடு கட்டுமானப் பணியாளர்களுக்கு உதவவும்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகர் செவ்வாய் பகவானாவார். இந்த மாதம் உங்கள் சொற்களே உங்களுக்கு எதிரியாக மாறக்கூடும். அதற்குக் காரணம் உங்கள் மனதில் தோன்றும் சந்தேக எண்ணமாகும். பணவரவு அதிகமாக இருக்குமென்றாலும், செலவு அதைவிட அதிகமாக அமையும். இளைய சகோதரரின் திருமணத்திற்காக நீண்டதூரப் பயணமும் அதிக பணச் செலவும் ஏற்படும். கைபேசி நல்ல தகவல் தரும். சிலரது வாரிசுகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். பழமையான அரசியல் வாதிகள் சிலர் மந்திரி பதவியில் அமர்வார்கள். பல அரசியல்வாதிகள் வட்டம், மாவட்டம், சதுரம் என ஏதோவொரு நாற்காலியில் அமர இடம்பிடித்து விடுவார்கள். இதனால் வேலைச்சுமை அதிகரிக்கும். கூடவே பெயரும் புகழும் அதிகரிக்கும். சிலரது வாழ்க்கைத் துணை இடமாற்றம் பெறுவார். இதன் காரணமாக சில குடும்பங்களும் இடம் மாற வேண்டியிருக்கும் மிகச் சிலர் வெளிநாட்டுக் கும் செல்லவேண்டி வரும். ஆன்மிகப் பயண முண்டு. வெளிநாடு சுற்றுலா செல்லக்கூடும். வேலையில்லாதவர்கள் வேலையில் அமர்வார் கள். தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் அதற்கான முன்னெடுப்பில் இறங்குவர். முயற்சி திருவினையாக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். திருமணத்தில் வெளியூர், வெளிநாடு சம்பந்தமிருக்கும். திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்கள் மிகவும் மேன்மை காண்பார்கள். கவனம் தேவை: இந்த மாசி மாதத்தில் வாயைத் திறக்கும்போதும், மணிபர்சைத் திறக்கும்போதும் கவனம் தேவை. இரண்டுமே உங்களுக்கு வரும் யோகத்தைக் குலைக்கக்கூடும். சொற்களின் கட்டுப்பாடு வீண் அபவாதத்தைத் தடுக்கும். பணக் கட்டுப் பாடு வீண் செலவுகளைக் குறைக்கும். மாசி மாதம் 6, 7, 8-ஆம் தேதிகளில் நன்மை கள் நடக்கக்கூடும். 4, 13, 22, 31-ஆம் எண்கள் தீமை தரும். 1, 10, 19, 28-ஆம் எண்கள் நன்மை தரும்.
பரிகாரம்: திருப்பரங்குன்றம் முருகனை வணங்கலாம். அருகிலுள்ள வள்ளி, தெய்வானை யுடன்கூடிய முருகனை தரிசிக்கலாம். பயணம் சார்ந்த வேலை, தொழில் கொண்டவருக்கு சீசன் டிக்கெட் வாங்கிக்கொடுக்கலாம்.
செல்: 94449 61845