மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 2-ல் இருக்கிறார். ஜென்ம ராகு, சப்தம கேது தேக சுகத்தில் சிறுசிறு வைத்தியச் செலவு களைத் தரலாம். அல்லது கணவருக்கோ மனைவிக்கோ ஆரோக்கியப் பிரச்சினைகள் உண்டாகலாம். 14-ஆம் தேதிமுதல் 3-ஆமிடத்துக்கு செவ்வாய் மாறுகிறார். சகோதரவழியில் சகாயம், ஒற்றுமையுணர்வு ஏற்படும். தைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். 13-ஆம் தேதிவரை 2-க்குடைய சுக்கிரன் 12-ல் உச்சம் பெறுவதால் வீண் விரயங்களைத் தவிர்க்கமுடியாது. ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும்போது செலவுகள் சற்று கட்டுப்படும். 5-க்குடைய சூரியன் மாத முற்பாதிவரை 11-ல் இருப்பது ஒரு பலம். உங்களுடைய திட்டங்களிலும் முயற்சிகளிலும் அனுகூலமான முடிவுகள் ஏற்படும். 10-ஆமிடத்துச் சனி 12-ஆமிடத்தைப் பார்ப்ப தால் உத்தியோகத்தினருக்கு இடமாற்றம் உண்டாகலாம். திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு சௌந்திர ராஜப் பெருமாள் கோவிலில் உள்ள தன்வந்திரி பகவானை வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 2-க்குடைய புதன் 11-ல் நீசம். அங்கு ராசிநாதன் சுக்கிரன் உச்சம். எனவே புதனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. பொருளா தாரவகையில் தட்டுப்பாடு நிலவாது. 12-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் நின்று 4, 7, 8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். பூமி, வீடு, மனை சம்பந்தப்பட்டவகையில் முன்னேற்றகரமான பலன்கள் உண்டாகும். புதிய வாகன அமைப்புகளும் ஏற்படும். திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இளைஞர்- இளைஞிகளுக்கு திருமண முயற்சியில் தாமதம் ஏற்படலாம். என்றா லும் ராசிநாதன் உச்சம்பெற்று 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் ஒருபுறம் அமையும். 4-க்குடைய சூரியன் 15-ஆம் தேதிமுதல் 11-ல் பலம் பெறுகிறார். அரசு முயற்சிகள் அனுகூலமாகும். 9-ல் உள்ள சனி 11-ஆமிடத் தைப் பார்ப்பது காரிய வெற்றியைத் தரும். கணவன்- மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமிக்கு தீபமேற்றி வழிபாடு செய்யவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 9-ஆம் தேதிமுதல் மீன ராசியில் 10-ஆமிடத்தில் நீசம் பெறுகிறார். 13-ஆம் தேதிவரை அங்கு 12-க்குடைய சுக்கிரன் உச்சம். ஆகவே புதனுக்கு, உச்சம்பெற்ற சுக்கிர னோடு இணைவதால் நீசபங்க ராஜயோகம் கிடைக்கிறது. தொழில்துறையினருக்கு தொழில் இயக்கம் தடைப்படாது. உத்தியோகத் தினர்களுக்கு வெளியூர் அலைச்சல்கள் ஏற்படலாம். ஒருசிலருக்கு இடமாற்றமும் உண்டாகலாம். இது அட்டமத்துச்சனியின் வேலை. இம்மாதம் 29-ஆம் தேதிமுதல் சனி அதிசாரப் ப
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 2-ல் இருக்கிறார். ஜென்ம ராகு, சப்தம கேது தேக சுகத்தில் சிறுசிறு வைத்தியச் செலவு களைத் தரலாம். அல்லது கணவருக்கோ மனைவிக்கோ ஆரோக்கியப் பிரச்சினைகள் உண்டாகலாம். 14-ஆம் தேதிமுதல் 3-ஆமிடத்துக்கு செவ்வாய் மாறுகிறார். சகோதரவழியில் சகாயம், ஒற்றுமையுணர்வு ஏற்படும். தைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். 13-ஆம் தேதிவரை 2-க்குடைய சுக்கிரன் 12-ல் உச்சம் பெறுவதால் வீண் விரயங்களைத் தவிர்க்கமுடியாது. ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும்போது செலவுகள் சற்று கட்டுப்படும். 5-க்குடைய சூரியன் மாத முற்பாதிவரை 11-ல் இருப்பது ஒரு பலம். உங்களுடைய திட்டங்களிலும் முயற்சிகளிலும் அனுகூலமான முடிவுகள் ஏற்படும். 10-ஆமிடத்துச் சனி 12-ஆமிடத்தைப் பார்ப்ப தால் உத்தியோகத்தினருக்கு இடமாற்றம் உண்டாகலாம். திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு சௌந்திர ராஜப் பெருமாள் கோவிலில் உள்ள தன்வந்திரி பகவானை வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 2-க்குடைய புதன் 11-ல் நீசம். அங்கு ராசிநாதன் சுக்கிரன் உச்சம். எனவே புதனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. பொருளா தாரவகையில் தட்டுப்பாடு நிலவாது. 12-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் நின்று 4, 7, 8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். பூமி, வீடு, மனை சம்பந்தப்பட்டவகையில் முன்னேற்றகரமான பலன்கள் உண்டாகும். புதிய வாகன அமைப்புகளும் ஏற்படும். திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இளைஞர்- இளைஞிகளுக்கு திருமண முயற்சியில் தாமதம் ஏற்படலாம். என்றா லும் ராசிநாதன் உச்சம்பெற்று 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் ஒருபுறம் அமையும். 4-க்குடைய சூரியன் 15-ஆம் தேதிமுதல் 11-ல் பலம் பெறுகிறார். அரசு முயற்சிகள் அனுகூலமாகும். 9-ல் உள்ள சனி 11-ஆமிடத் தைப் பார்ப்பது காரிய வெற்றியைத் தரும். கணவன்- மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமிக்கு தீபமேற்றி வழிபாடு செய்யவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 9-ஆம் தேதிமுதல் மீன ராசியில் 10-ஆமிடத்தில் நீசம் பெறுகிறார். 13-ஆம் தேதிவரை அங்கு 12-க்குடைய சுக்கிரன் உச்சம். ஆகவே புதனுக்கு, உச்சம்பெற்ற சுக்கிர னோடு இணைவதால் நீசபங்க ராஜயோகம் கிடைக்கிறது. தொழில்துறையினருக்கு தொழில் இயக்கம் தடைப்படாது. உத்தியோகத் தினர்களுக்கு வெளியூர் அலைச்சல்கள் ஏற்படலாம். ஒருசிலருக்கு இடமாற்றமும் உண்டாகலாம். இது அட்டமத்துச்சனியின் வேலை. இம்மாதம் 29-ஆம் தேதிமுதல் சனி அதிசாரப் பெயர்ச்சியாக கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். ஆகஸ்ட் மாதம்வரை கும்பத்தி லும் பிறகு மீண்டும் மகர ராசிக்கு மாறுவார். இது அதிசாரமாக மாறுவதால் சனிப்பெயர்ச்சி என்று கூறிவிடமுடியாது. இந்த வருடம் டிசம்பர் மாதம் வருவதுதான் சனிப்பெயர்ச்சி. என்றாலும் தற்காலிகமாக மாறும் சனி நல்லது செய்வார். சகோதர- சகோதரிவகையில் சச்சரவுக்கு இடமுண்டு! புதன்கிழமை சக்கரத் தாழ்வாருக்கு நெய் தீபமேற்றி வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் 9-ல், 15-ஆம் தேதிமுதல் திரிகோணம் பெறுகிறார். அவருடன் 9-க்குடைய குரு ஆட்சியாக இருக்கிறார். குரு தனகாரகன். சூரியன்- தனஸ்தானாதிபதி. இருவரின் சேர்க்கை தனவரவை திருப்திகரமானதாக ஏற்படுத்தும். 15-ஆம் தேதிவரை 8-ல் மறையும் சூரியன் பொருளாதாரத்தில் சற்று நிம்மதியற்ற சூழ்நிலையை உருவாக்கினாலும் 9-ல் நிற்கும் குரு ராசியையும் 3-ஆமிடத்தையும் பார்ப்பதால் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளலாம். 11-க்குடைய சுக்கிரன் 9-ல் உச்சம். தெய்வ கைங்கரியங்களில் ஈடுபாடு, மதிப்பு, மரியாதை எல்லாம் சிறப்பாக விளங்கும். 10-க்குடைய செவ்வாய் 11-ல் இருப்பதால் செய்தொழில் முயற்சிகள் கைகூடும். சிப்பந்திகள்வகையில் நிலவிய தொந்தரவுகள் விலகும். இம்மாதம் 29-ஆம் தேதிமுதல் மகரச்சனி அதிசாரமாக கும்ப ராசிக்கு மாறுகிறார். 8-ல் சனி. அட்டமச்சனி பாதிக்குமோ என்று அச்சப்படத் தேவை யில்லை. அது சனியின் ஆட்சிவீடு. கெடுதல் பண்ணமாட்டார். நாகப்பட்டினம் அருகில் வடக்குப் பொய்கை நல்லூரி லுள்ள கோரக்கர் சித்தர் ஜீவசமாதியை வழிபடவும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதி வரை 7-ல் நின்று ராசியைப் பார்க்கி றார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது பலம்தானே! உங்கள் திறமைகளையும் முயற்சிகளையும் செயல்வடிவம் ஆக்கலாம். 10-க்குடைய சுக்கிரன் 8-ல் உச்சம். ஆகையால் மறைவு தோஷம் பாதிக்காது. ஆடை, அலங்காரப் பொருட்கள் சம்பந்தமாக தொழில்புரிவோருக்கு வருமானம் திருப்தி தரும். 9-ஆமிடத்து ராகுவும் அவரைப் பார்க்கும் கேதுவும் ஆன்மிக வழிபாடுகளில் ஆர்வத்தையும், பிரார்த்தனைகளையும் நிறைவேற்றித் தருவார்கள். 9-ஆம் தேதிமுதல் 2-க்கு டைய புதன் 8-ல் நீசம் மறைவு. "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்ற பழமொழிக்கு ஏற்ப தனவரவு உண்டு. அந்நிய தனமா வது உங்கள் கையில் புரளும். 3-ஆமிடத் துக் கேது இவை எல்லாவற்றையும் சமாளிக்கும் ஆற்றலைத் தருவார். 9-க்குடைய செவ்வாய் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். வாழ்க்கை, தொழில் இரண்டிலும் வறுமைக்கு இடமில்லை. ஏதோ ஒருவழியில் பணம் புரளும். தஞ்சாவூர் அருகில் பரிதியப் பர் கோவில் சென்று வழிபட வும். சூரியதோஷம் நிவாரணமான தலம்.
கன்னி
கன்னி ராசி நாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 6-ல் மறைவு. என்றாலும் சூரியனோடு இணைந்து புதன் பயணிப்பதால் அவருக்கு மறைவு தோஷம் பாதிக்காது என்பது ஜோதிடப் பாடம். 12-க்குடைய சூரியன் 6-ல் மறைவு என்பதும் நன்மையே- "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதுபோல. 7-ல் நின்று குரு ராசியைப் பார்க்கிறார். இவையெல்லாம் ப்ளஸ் பாயின்ட்டுகளாக இருந்தாலும் நன்மைகனை முழுமையாக அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் மனக்குமுறலும் கன்னி ராசிக்காரர்களுக்கு இருப்பதை மறுக்கமுடியாது. 2-ல் உள்ள கேது குடும்பத்தில் நிம்மதிக்குறைவைத் தருகிறது. 8-ஆமிடத்து ராகு அலைச்சல் களையும் அலைக்கழிப்புகளையும் தருகிறது. 3-ஆமிடத்தை குரு பார்ப்பதால் இதையெல்லாம் எப்படியோ ஒரு தைரியத்துடன் சமாளித்துச் செல்கிறீர்கள் என்பதுதான் உண்மை. 2-க்குடைய சுக்கிரன் 7-ல் உச்சம்பெற்று ராசியைப் பார்க்கிறார். கணவரால் சங்கடமும் உண்டு; மகிழ்ச்சியும் உண்டு. மதுரை- திருப்பரங்குன்றம் அருகில் திருக்கூடல் மலையில் சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
துலாம்
துலா ராசிக்கு 11-க்குடைய சூரியன் 5-ல் திரிகோணமாக இருக்கிறார். தடைப் பட்ட பணிகளை நிறைவேற்றலாம். பகுதிநேர வேலை பார்த்தவர்களுக்கு முழுநேர வேலைபார்க்கும் அமைப்புகளும் உருவாகும். அதன்மூலம் ஊதிய உயர்வும் உண்டாகும். 3-க்குடைய குரு 6-ல் மறைந் தாலும் ஆட்சிபெறுகிறார். சுபக்கடன்கள் ஏற்படலாம். ராசிநாதன் சுக்கிரன் 6-ல் உச்சம். இருவரின் பார்வையும் 12-ஆமிடத்துக்குக் கிடைக்கிறது. அவ்வப் போது விரயங்களைத் தவிர்க்க முடியாது. திடீர் பயணங்களும் உண்டாகும். ஒரு சிலருக்கு உத்தியோகவகையில் தற்காலிக இடப்பெயர்ச்சியும் ஏற்படும். ஜென்ம கேது சிலநேரம் தேகசுகத்தில் குறைவை ஏற்படுத்தினாலும் பாதிப்புகள் உண்டாகாது. 4-ஆமிடத்துச் சனியும் அதற்கு ஒரு காரணமாக அமைகிறது. 2-க்குடைய செவ்வாயும் தனகாரகன் குருவும் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தனப்ராப்திக்கு இடமுண்டு! ஜென்ம கேதுவுக்காக வெள்ளக்கிழமைதோறும் விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலைச் சாற்றி தீபமேற்றி வழிபடவும்.
விருச்சிகம்
மாத முற்பாதியில் விருச்சிக ராசிக்கு 10-க்குடைய சூரியன் 4-ல் இருப்பது நன்மை தரும். 11-க்குடைய புதனும் சேர்க்கை. உத்தியோகம், வேலை, தொழில் இவற்றில் முன்னேற்றகரமான பலன்களைச் சந்திக்கலாம். 3-ல் உள்ள சனியும் அதற்கு உற்ற துணையாக நிற்கும். 5-ல் குரு ஆட்சி. ராசிக்கு குரு பார்வை. குரு நின்ற இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கு பலன்கள் அதிகம். அதுதான் குரு பார்க்கக் கோடி நன்மை! உங்கள் திறமைகள் பலர் அறியும் வண்ணம் செயல் அமையும். 12-க்குடைய சுக்கிரன் 5-ல் உச்சம்பெறுகிறார். (13-ம் தேதிவரை). மனதில் எண்ணிய திட்டங்களை நிறைவேற்றலாம். 9-ஆம் தேதிமுதல் புதன் 5-ல் நீசம்பெற் றாலும் நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. புதிய வாகன அமைப்புகள் உருவாகும். 7-ல் உள்ள செவ்வாயால் கணவன் அல்லது மனைவி யின் உத்தியோகத்தில் பணி உயர்வை எதிர்பார்க்கலாம். ராசியையும் பார்ப்பதால் நன்மை ஏற்படும். மதுரை- திருப்பரங்குன்றம் அருகில் கட்டிக் குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதிசென்து வழிபடவும். கேட்டை நட்சத்திரத்தில் குருபூஜை.
தனுசு
இந்த மாதக் கடைசியில் மார்ச் 29-ல் சனி அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். மார்ச்முதல் ஆகஸ்ட்வரை கும்ப ராசியில் சஞ்சாரம். என்றாலும் இதை முழுமையான சனிப் பெயர்ச்சியாக எடுத்துக்கொள்ளமுடியாது. டிசம்பர் 2023-ல்தான் சனிப்பெயாச்சி. அதன் பிறகுதான் தனுசு ராசிக்கு ஏழரைச்சனி முடிவடையும். இதனிடையில் தற்காலிகமாக மாறும் சனி 3-ல் ஆட்சிபெறுகிறார். தைரியம், தன்னம்பிக்கை, சகோதர வகை ஒற்றுமை, நண்பர்களினால் சகாயம் போன்ற பலன்களைச் சந்திக்கலாம், 4-ல் ஆட்சிபெற்ற குரு ஏற்கெனவே கூறியதுபோல் வீடு, வாகனவகையில் நற்பலன்களைச் சந்திக்க லாம். 5-ல் உள்ள ராகுவும் அத்திட்டத்தை செயலாக்கம் செய்துதருவார். 10-ஆமிடத்தை குரு பார்க்கிறார். 10-க்குடைய புதன் 4-ல் நீசபங்கம். ஆகவே, உத்தியோக உயர்வையும் எதிர்பார்க்கலாம். தாயாருக்கு தேகநலனில் சற்று அக்கறை தேவைப்படும். சனிக்கிழமைதோறும் பைரவர் சந்நிதியில் மிளகு தீபமேற்றி வழிபடவும்.
மகரம்
மகர ராசிக்கு 6-க்குடைய புதன் 2-ல் இருக்கிறார். 2-க்குடையவர் 6-ல் நின்றால் நம் தனம் அந்நியர் வசமாகும். 6-க்குடையவர். 2-ல் நின்றால் அந்நியர் தனம் நம் கையில் புரளும். இது ஜோதிட அனுபவப் பாடம். 9-ஆம் தேதிமுதல் புதன் 3-ல் நீசபங்கம் அடைகிறார். அவருடன் 5-க்குடைய சுக்கிரனும் 3-ல் உச்சம். நண்பர்களினால் உதவி உண்டாகும். 4-க்குடைய செவ்வாய் 5-ல் திரிகோணம். பழைய வாகனத்தை விற்கும் அமைப்புகளும் புதிய வாகனத்தை வாங்கும் யோகமும் ஏற்படும். 13-ஆம் தேதிக்குமேல் சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறுகிறார். சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை யோகம் அடைகிறார்கள். தேக சுகம் தெளிவுபெறும். ஆன்மிக ஞானத் தில் ஈடுபாடு உண்டாகும். புதிய மனை அல்லது வீடு வாங்கும் யோகமும் அதன்மூலம் சுபக்கடனும் உருவாகும். மார்ச் 29 முதல் சனி அதிசாரமாக 2-ஆமிடத்துக்கு மாறுகிறார். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியையும் ராசிநாதன் என்ற அடிப்படையில் அவர் தருவார். சனிக்கிழமைதோறும் ஆஞ்சனேயருக்கு நெய்தீபமும் வெற்றிலை மாலையும் சாற்றி வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிக்கு 7-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் நிற்கிறார். 7-ஆமிடத்தையும் பார்க்கிறார். 7-ஆமிடம் களஸ்திர ஸ்தானம். அந்த இடத்திற்கு உரியவரே அந்த இடத்தைப் பார்ப்பது சிறப்பு எனலாம். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையில் பாதிப்புக்கு இடமில்லை. 9-ஆம் தேதிமுதல் 5, 8-க்குடைய புதன் 2-ல் நீசம். நீசபங்கம். 2-ல் குரு ஆட்சி பெறுவதாலும் சுக்கிரன் அங்கு உச்சம்பெறுவதாலும் புதனுக்கு நீசபங்க ராஜயோகம் அமைகிறது. தாராளமான தனவரவு, குடும்பத்தில் நிம்மதி போன்றவை உண்டாகும். 13-ஆம் தேதிமுதல் 4-க்குடைய சுக்கிரன் 3-ல் மாறுகிறார். செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை. உடன்பிறந்தவர்கள்வகையில் சுப நிகழ்வுகள், சுபச்செய்திகள் உருவாகும். இம்மாதம் 29-ல் சனி ஜென்ம ராசிக்கு அதிசாரமாக மாறுகிறார். ஐந்து மாதம் அதிசார சனி ஓரளவு நன்மை களைத் தருவார் என எதிர்பார்க்கலாம். ஜனன ஜாதக தசாபுக்திகளையும் அனுசரித்து தெரிந்துகொள்ளவும். சனிக்கிழமை கால பைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.
மீனம்
மீன ராசியில் 3, 8-க்குடைய சுக்கிரன் உச்சம். குருவும் சுக்கிரனும் உச்சம். குருவும் சுக்கிரனும் சேர்க்கை. பொதுவாக குருவும் சுக்கிரனும் பகை என்பார்கள். குருவின் வீட்டில் சுக்கிரன் உச்சமடைவதால் அது எப்படி பகைத் தன்மையில் சேரும்? எனவே குரு சுக்கிரன் பகைத்தன்மையை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்திகள் நடைபெற்றவர்களுக்கு இக்காலகட்டம் மிகுந்த சோதனை, வேதனை, அவமானம், ஊரைவிட்டு ஒளிந்து வாழும் நிலை போன்றவற்றை சந்தித்த நிலையும். 3-க்குடைய சுக்கிரன் 2-ல் மாறியபிறகு செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை அடைவதால் பொருளாதாரத்தில் ஓரளவு வரவுகளை எதிர்பார்க்கலாம். இம்மாதக் கடைசியில் 11-க்குடைய சனி 12-ல் விரயம், ஆட்சி. இது அதிசாரம் என்பதால் ஏழரைச்சனியாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. 4, 7-க்குடைய புதன் நீசபங்கம் அடைகிறார். மனைவியால் கணவனுக்கு உதவி ஒத்தாசையும் அமையும். திருச்செந்தூர் குரு ஸ்தலம். அங்குசென்று கடல்நீராடி குருவை வழிபடவும்.
அலைபேசி: 99440 02365.