மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சமாக சஞ்சரிக்கிறார். 10-க்குடைய சனி 11-ல் லாப ஸ்தானத்தில் ஆட்சிபெறுகிறார். ஜென்ம ராசியை ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். தொழில்துறையில் உயர்வும் முன்னேற் றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்போருக்கு ஊதிய உயர்வும் கிடைக்கும். பூமி, மனை, கட்டடம் சம்பந்தப்பட்ட துறையினருக்கு நன்மதிப்பும் பாராட்டும் உண்டாகும். ராசிநாதன் 4-ஆமிடத்தைப் பார்ப்பத்தால் வீடு விற்பது சம்பந்தமான முயற்சிகள் எடுப்போருக்கு விற்பனையும் ஆகும். புதிய மனையோகமும் ஏற்படும். 2-க்குடைய சுக்கிரன் தொடக்கத்திலும் 10-லும், பிறகு 11-லும் சஞ்சாரம். தொழி-ல் கூடுதல் வளர்ச்சி காணலாம். 5-க்குடைய சூரியன் 11-ல் மாத முற்பாதிவரை சஞ்சரிப்பதால் எண்ணங்களை செயல்படுத்தலாம். அரசு சம்பந்தபட்ட முயற்சிகளில் இழுபறியாக இருந்த நிலைமாறி காரிய அனுகூலம் உண்டாகும். புதனும் 12-ல் நீசம்பெறுகிறார். அவர் 3, 6-க்குடையவர் என்பதால் சில நன்மைகளை சந்திக்கலாம். பழைய கடன்களை அடைக்கும் வழிவகைகளும் உண்டாகும். உடல்நலத்தில் மருத்துவம் கைகொடுக்கும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இம்மாத முதல் வாரத்தில் 9-ஆமிடத்திலும், பிறகு 10-ஆமிடத்திலும் சஞ்சரிக்கிறார். 10-ல் சூரியன், சனி சேர்க்கை. 4-க்குடையவர் சனியுடன் இணைவதால் தேக சுகம் பாதிக்கப்படலாம். தொழில்துறையிலும் அல்லது உத்தியோகத்திலும் அவ்வளவு சிறப்பான பலன்கள் நடைபெறும் என்று சொல்-விட முடியாது. காரிய தாமதம், ஒரு சிலருக்கு விரும்பத்தகாத இடப்பெயர்ச்சி போன்றவை உண்டாகலாம். அதிகப் பிரயாசையுடன் போராடினால்தான் ஆதாயம் ஏற்படும். மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் பலம் பெறுவதால் தொடக்கத்தில் குரு சாரத்தில் இருப்பதாலும் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சுவிடலாம். 2-க்குடைய புதன் 11-ல் நீசம்பெற்றாலும் குருசாரம் பெறுவதால் சமாளிக்கலாம். என்றாலும் பொருளாதாரச் சிக்கல்களும் வந்தவண்ணம் இருக்கும். 9-க்குடைய சனி 10-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதியின் யோகத்தால் மரியாதையைக் காப்பாற்றலாம். ஜீவனமும் ஏதோ செயல்படும். 12-க்குடைய செவ்வாய் 9-ல் உச்சம். உடன்பிறந்தவர்களால் தேவையற்ற விரயங்கள் ஏற்படும். 8-ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் ஓரளவு உத்தியோகத்தில் வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

Advertisment

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் இம்மாதத் தொடக்கத்தில் 10-ல் நீசம்பெறுகிறார். ராசி நாதன் நீசம்பெறுவதால் தேவைகளை பூர்த்திசெய்வதில் சிக்கல், சிரமங்கள் ஏற்படலாம். அவர் 4-க்கும் உடையவர் என்பதால் உடல் நலத்திலும் மருத்துவச் செலவுக்கு இடமுண்டு. மனதில் குழப்பமும் கலக்கமும் சூழ்ந்துகொள்ளும். 3-க்குடைய சூரியன் 14-ஆம் தேதிவரை 9-ல் சஞ்சரிப்பதால் தகப்பனாரி டையே சங்கடம். "ஒன்று நினைக்கின் ஒன்று வரும். அது ஒழிந்து மற்றொன்று வரும். ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும் எனையாளும் ஈசன் செயல்'' என்ற பாடலுக்கேற்ப நினைத்த காரியத்தை முடிக்க முடியாமலும், எடுத்த செயல்பாட்டை தொடர்ந்து நடத்த முடியாமலும் திண்டாடலாம். 14-ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் 10-ல் மாறியவுடன் நினைத்ததையும், பாதியில் தடைப்பட்ட காரியத்தையும் இறைவன் ஆசியோடு முடிக்கலாம். அதற்கு 11-ஆமிடத்துக் குருவும் ஆதரவு தருவார். திடீர் வரவுக்கு இடமுண்டு. 4-ல் உள்ள கேதுவும் அவரைப் பார்க்கும் ராகுவும் தாய்சுகம் அல்லது தன் சுகத்தைப் பாதித்தாலும் மருந்து மாத்திரைகளோடு நிவர்த்திசெய்யும். மேலும் நண்பர்களினால் சகாயமும் ஏற்படும்.

கடகம்

Advertisment

கடக ராசிக்கு 10-க்குடைய செவ்வாய் உச்சம்பெற்று 10-ஆமிடத்தையே பார்த்ததும் 10-ல் குரு நிற்பதும் ஒருவகையில் நன்மைதான். உத்தியோகத்தில் மாற்றம் வந்தாலும் அது நன்மை தரும் மாற்றமாகவே அமையும். விரயங்கள் சற்று அதிக மாகவே காணப்படும். ஒரு வேலையை இருமுறை செய்வதாலும் காலதாமதமாகச் செய்வதாலும் நேரவிரயத்தையும் சந்திக்க வேண்டிய நிலை! வரும் விரயங்களை சுபவிரயமாக மாற்றும் யுக்திகள் ஏதும் கையாளலாம். அட்டமத்துச்சனியால் பெரிய பாதிப்புக்கு இடமில்லை என்றாலும் ஒரு சில காரியங்களில் இழுபறி நிலைகள் மனதை வருத்தமடையச் செய்யும். 2-க்குடைய சூரியன் 8-ல் மறைவதால் பொருளாதாரத்திலும் சேமிப்புக்கு இடமிருக்காது. மாறாக சிரமங்களை சந்திக்க நேரும். என்றால் 9-க்குடைய குரு 10-ல் நின்று தர்மகர்மாதிபதி யோகம் பெற்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் செலவு ஏற்படுவதுபோல வரவுக்கும் இடமுண்டு. அட்டமத்துச் சனி நடைபெறுவதால் வேலையில் அல்லது உத்தியோகத்தில் அல்லது குடியிருப்பில் இடமாற்றத்தைச் சந்திக்க நேரும். ஒருசிலர் கடன்மூலம் சொந்தமாக மனை வாங்கலாம்.

சிம்மம்

இம்மாத முற்பாதிவரை சிம்ம ராசிநாதன் சூரியன் 7-ல் சனியுடன் சஞ்சாரம். ஒருபுறம் சூரியன், சனி சேர்க்கை அவ்வளவு சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் குரு உங்கள் ராசியைப் பார்க்கும் பலம் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். 3, 10-க்குடைய சுக்கிரன் 6-ல் மறையும் காலம் தொழி-ல் சில மந்தமான செயல்பாடுகள் ஏற்படும். 8-ஆம் தேதிமுதல் சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் வருவதால் தொழில் வளம் சிறக்கும். படித்துமுடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உத்தியோகரீதியாக நல்ல தகவல்கள் வந்துசேரும். 2-ல் உள்ள கேது சில நேரம் குடும்பத்தில் வாக்குவாதத்தைத் தோற்றுவித்தாலும் 8-ல் நிற்கும் ராகு அவற்றை மாற்றும் வழிகளையும் ஏற்படுத்தித் தருவார். 2-க்குடைய புதன் 8-ல் நீசம்பெறுவதால் வருமானத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் பிள்ளைகளின் உதவியால் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம். இளைய சகோதர- சகோதரிகள்மூலம் ஆதாயமும் ஆதரவும் கிடைக்கும். அதேசமயம் திடீர் தனவரவுக்கும் இடமுண்டு. தாய்மாமன் வழியில் சுபநிகழ்வுகளும் அமையலாம்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் இம்மாதத் தொடக்கத்தில் 7-ல் நீசம்பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த குரு 8-ல் மறைகிறார். எச்சரிக்கையும் மிகுந்த கவனமும் தேவைப்படும். மேலும் 12-ஆமிடத்தைப் பார்க்கும் குரு கணவர்வழியிலோ அல்லது கணவர் உறவினர்கள்வழியிலோ வீண் விரயங்களை ஏற்படுத்தித் தருவார். அதனால் மனதில் நிம்மதியற்ற நிலை காணப்படும். ஜென்ம கேதுவும், சப்தம ராகுவும் அதிக அலைச்சலையும், கணவர்- மனைவிக்குள் ஒற்றுமையில்லாத வாக்குவாதத்தையும் தருவார். 12-க்கு அதிபதியான சூரியன் 6-ல் மறைவது விபரீத ராஜயோகத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் உள்ளோருக்கு போட்டி, பொறாமையை ஏற்படுத்தும். 2-க்குடைய சுக்கிரன் 6-ல் மார்ச் 8 முதல் மறைகிறார். இக்காலகட்டம் போட்டி, பொறாமைகள் சற்று அதிகமாகக் காணப்படும். கடன்சுமை முழுவதும் விலகாது என்றாலும் சுமை குறைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். புதுமண தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் தொடக்கத்தில் 2-க்குடைய செவ்வாயுடன் 4-ல் சஞ்சாரம். அதன்பிறகு 5-ல் திரிகோணம் பெறுகிறார். மாத ஆரம்பத்தில் பொருளா தாரத்தில் சற்று தாராள வரவு- செலவுகள் ஏற்படும். 12-க்குடைய புதன் 6-ல் மறைவதுடன் நீசம்பெறுவதால் மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதற்கிணங்க நன்மைகள் உண்டாகும். மாத பிற்பாதியில் 11-க்குடைய சூரியன் 6-ல் மறைவதால் காரிய அனுகூலத்தில் தாமதம் உண்டாகும். 2-க்குடைய செவ்வாயும் கும்பத்திற்கு 14-ஆம் தேதிமுதல் மாறி சனியுடன் இணைகிறார். பொதுவாக "மந்தன் சேய் பார்த்திடவும் தீது சேர்ந்திடவும் தீது'' என்பது ஜோதிடமொழி. பிள்ளைகள்வகையில் தொல்லைகளையும் சங்கடங்களையும் சந்திக்க நேரும். பூமி, வீடு சம்பந்தப்பட்ட சிக்கல்களும் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடையே கருத்துவேறுபாடு, வாக்குவாதம், பிரச்சினை போன்றவற்றையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வில்லங்க, விவகாரங்களையும் சந்திக்கலாம் என்றாலும் 6-ஆமிடத்து ராகுவும் அவரைப் பார்க்கும் பிரச்சினைகளை சமாளிக்கும் ஆற்றலையும் திறமையையும் தருவார்கள். எதிராளி இல்லாமல் ஜெயிப்பதை எதிராளியை சமாளித்து வெற்றிபெற்றால்தானே திறமை யும் மதிப்பும் உயரும். குரு ராசியைப் பார்ப்பதால் மரியாதை அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் மாத முற்பாதிவரை 3-ல் உச்சம்பெற்று 6-ல் சஞ்சரிக்கும் குருவைப் பார்க்கிறார். 6-ஆமிடத்தையும் பார்க்கிறார். 6-ஆமிடம், ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம். ராசிநாதன் உச்சம்பெற்று அந்த ஸ்தானத்தைப் பார்ப்பதால் போட்டி, பொறாமைகள் வலுப்பெறும். மறைமுக சத்ருக்களினால் சங்கடமும் உண்டாகும். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் 4-ல் சனியுடன் சேர்ந்திருப்பதால் தொழில்துறையிலும் முயற்சிகளில் முன்பின் முரணாக செயல்படவேண்டிய நிலை! நினைத்தக் காரியத்தையும் செய்யமுடியாத அவஸ்தைகளை சந்திக்கநேரும். ஒருசிலர் தொழில் செய்ய வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக்கொடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். ஒருசிலருக்கு தேக ஆரோக்கியத்திலும் தொந்தரவுகளை உண்டாக்கும். 14-ஆம் தேதிமுதல் செவ்வாய், சனியுடன் சேர்க்கிறார். இது மேலும் நிம்மதியின்மையைத் தரும். அதேசமயம் செவ்வாய் 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் ஒருசில விஷயங்களில் அனுகூலம் தென்படும். 2-க்குடைய குரு 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். 12-ஆமிடத்தையும் பார்க்கிறார். ஆகவே வரவுக்கு நிகர் செலவும் ஏற்படும். 5-ல் உள்ள ராகு பிள்ளைகள்வகையில் மனவருத்தத்தையும் சங்கடத்தையும் தருவார்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 5-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அது ஒரு பலம். 11-க்குடைய சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிக்கிறார். அது மேலும் பலம். என்ன பலம் பெற்று என்ன செய்வது? ஏழரைச்சனியில் இருந்ததைவிட இப்போது தொல்லைகளும் பிரச்சினைகளும் அதிகமாகத்தான் இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லையே என்பது சிலரது அனுபவமாக நிகழ்கிறது. என்றா லும் ராசியை ராசிநாதன் பார்த்த காரணத்தால் எப்படியோ சமாளிக்கிறீர்கள். 12-க்குடைய செவ்வாய் 2-ல் உச்சமாக இருக்கிறார். தனவரவுக்கு இடமுண்டு. அது சேமிப்புக்கு இடமில்லாமல் விரயமாகிறது. 14-ஆம் தேதிமுதல் செவ்வாய் 3-ல் உள்ள சனியுடன் சேர்க்கை. எனவே அதன் பிறகும் உங்கள் செய-யல் மந்தத்தன்மை இருக்கத்தான் செய்யும். 10-க்குடைய புதன் 4-ல் நீசம்பெற்றாலும் குருவின் சாரத்தில் (பூரட்டாதி) சஞ்சரிப்பதால் வேலை, உத்தியோகத்தில் பிரச்சினைக்கு இடமில்லை. ஓய்வுக்கும் நேரமில்லை. 14-ஆம் தேதிமுதல் 9-க்குடைய சூரியனும் 10-க்குடைய புதனும் சேர்வதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. மாத பிற்பாதி வாழ்க்கை, தொழில் இரண்டிலும் பிரச்சினைகள் குறையும். பிரச்சினைகளையும் சமாளித்து நற்பெயர் எடுக்கலாம்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 2-ல் சஞ்சரிக்கிறார். ஏழரைச்சனியின் கடைசிக்கூறு பாதச்சனி நடக்கிறது. 8-க்குடைய சூரியன் சனியுடன் சேர்க்கை. ஏற்கெனவே ஏழரைச்சனியின் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபட முடியாமல் தவிக்கும்போது அட்டமாதிபதி சூரியன், சனியுடன் சேர்ந்ததால் கஷ்டம் கஷ்டம் என்று நொந்து அழுது புலம்பும் நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். வருமா னம் வருகிறதோ- இல்லையோ செலவு மட்டும் முன்னால் வந்து நிற்கிறது. அதை சமாளிக்க கடன்மேல் கடன் வாங்கும் நிலை. 11-க்குடைய செவ்வாய் ராசியில் உச்சம்தொழில்துறையில் விரயங்களைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டிய அவசியம்! என்றாலும் 3-ல் உள்ள ராகு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தருவதால் குருட்டுத் தைரியத்தில் வாழ்க்கையை நடத்துறீர்கள். 10-க்குடைய சுக்கிரன் 8-ஆம் தேதிமுதல் 2-ல் சஞ்சரிக்கிறார். தேங்கிய காரியங்கள் நடைபெறும். திடீர் திருப்பங்கள் நன்மையாக முடியும். உத்தியோகத் தினருக்கு சம்பள உயர்வு சம்பந்தமான முயற்சிகள் செய்பவர்களுக்கு வளர்ச்சிக்கான முயற்சி கைகூடும். பிள்ளைகள்வழியில் சிறுசிறு பூசல்கள் வந்துவிலகும்.

கும்பம்

கும்ப ராசிக்கு 2-க்குடைய குரு 3-ல் மறைந்தாலும் 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்ப்பதன்மூலம் அந்த இடங்கள் சம்பந்தப்பட்ட நற்பலன்கள் நல்லமுறையில் நடைபெறும். கணவரால் அனுகூலம் உண்டாகும். தந்தையின் உடல்நலம் தெளிவுபெறும். தொழில் ஸ்தானாதிபதி 12-ல் உச்சம்பெறுவதால் ஏற்படும் விரயம், தொல்லை போன்றவற்றை 11-க்குடைய குரு 11-ஆமிடத்தைப் பார்ப்பதன்மூலம் சமாளிக்கலாம்; ஜெயம் பெறலாம். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்திகள் நடைபெற்றால் ஜென்மச் சனி சீரழிக்கும் என்ற மொழிக்கேற்ப அலைச்சல் ஆதாயமற்ற சூழல், ஓய்வற்ற நிலை போன்றவற்றை சந்திக்க நேரும். 2-ல் உள்ள ராகு குடும்பத்தில் குழப்பத்தைத் தந்தாலும் பார்வையால் குழப்பத்திற்கு தீர்வும் கிடைக்கும். 7-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் நிற்பதால் சுபச்செலவுகளுக்கு இடமுண்டு. 5-க்குடைய புதன் 2-ல் நீசம் பெறுகிறார். பிள்ளைகள்வகையில் மருத்துவச் செலவுக்கு இடமுண்டு. தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 8-ஆம் தேதிமுதல் சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சாரம். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தாயாரிடம் சிறு மனக்கிலேசம் ஏற்படலாம். பொறுமையையும் அமைதி யையும் கடைப்பிடிக்கவும்.

மீனம்

மீன ராசிக்கு ஏழரைச்சனி, விரயச்சனி நடைபெறுகிறது. எந்த ஒரு விஷயத்திலும் திட்டமிட்டபடி செயல்பட முடியாமல் திணறும் நிலை! 6-க்குடைய சூரியன் 12-ல் மறைவது ஒருவகையில் நல்லதென்று எடுத்துக்கொண்டாலும் 12-ல் உள்ள ஆட்சிபெற்ற விரயச்சனியின் சேர்க்கையால் சங்கடம், சஞ்சலம் தோன்றலாம். 7-க்குடைய புதன் ஜென்ம ராசியில் நீசம். எனவே, திருமண வயதையொட்டிய இளைஞர்- இளைஞிகளுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தையில் தடை, தாமதங்களைச் சந்திக்கலாம். எனினும் 2-ல் குரு நின்று 2-க்குடைய செவ்வாய் பார்வையைப் பெறுவதால் திடீர் தனவரவுக்கு இடம் ஏற்படும். ஒருசிலருக்கு சுபவிரயமும் உண்டாகும். செவ்வாய் 14-ஆம் தேதிமுதல் 12-ல் மறையும் காலகட்டம் விரயங்களைக் கட்டுப்படுத்த முடியாது. நினைத்து ஒன்று நடந்தது ஒன்றாகவும் அமையும். 10-ஆமிடத்தை 10-க்குடையவர் பார்ப்பதால் வேலை, உத்தியோகத்தில் பிரச்சினை இல்லை. சிக்கலுக்கும் இடமில்லை. ஆனாலும் வரும் வருமானம் பாதி வட்டி கட்டுவதற்கே சரியாகிவிடுகிறது. 8-க்குடைய சுக்கிரன் 12-ல் மறைவதால் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதுபோல ஒருசிலருக்கு நற்பலனும் நன்மையும் உண்டாகும்.

அலைபேசி: 99440 02365