மகப்பேறு வரமளிக்கும் மன்னார்குடி கோபாலன்! முனைவர் இரா. இராúஜ்ஸ்வரன்

/idhalgal/om/mannargudi-gopalan-who-gives-birth-dr-ira-rajaswaran

பிரபல திரைப்படத் தம்பதியர் வாடகைத்தாய் (Surrogacy)மூலம் குழந்தை பெற்றெடுத்த செய்தி பரபரப் பான பேசும்பொருளாக மாறியுள்ளது. இன்னொரு பெண்ணின் உதவியுடன் குழந்தையைப் பெறும் முறையைதான் "சரோகசி' என்று கூறுகிறார்கள். இது செயற்கை முறையில் கருத்தரித்தல் (IVF) முறையின் மற்றொரு நவீன விஞ்ஞான முறையாகும்.

ஒரு பெண்ணுக்குத் தாய்மை என்பது இறைவனின் அருளால் இயற்கையளித்த வரப்பிரசாதம். இல்வாழ்க்கைக்கு அணி கலனாக அமைவது மக்கட்பேறு. இதைதான்

"குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்

மழலைச் சொல் கேளா தவர்'

என மக்கட்பேற்றின் சிறப்பைப் பற்றி திருவள்ளுவர் நமக்கு உணர்த்துகிறார். சமீபகால இன்றைய சூழ்நிலையில் மரபணுப் பிரச்சினை, மலட்டுத்தன்மை, வாழ்வியில் முறையில் மாற்றம், உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம், சூழ்நிலை மாற்றம் என பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பலருக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இம்முறையைப் போக்க செயற்கைக் கருத்தரித்தல் ஒரு தீர்வாக அமைகிறது.

dd

இதற்காக 2010-ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல்பரிசு ராபர்ட் எட்விரட் என்பவருக்குக் கிடைத்தது. செயற்கைக் கருத் தரித்தல், வாடகைத்தாய் போன்ற நவீன தொழில்நுட்ப வளர்ச்சி குழந்தையின்மைக்கு அறிவியல்ரீதியாகவும், மருத்துவரீதியாகவும் சில காரணங்கள் சொன்னாலும், இதற்கு அடிப் படை இறைவனின் அருளா

பிரபல திரைப்படத் தம்பதியர் வாடகைத்தாய் (Surrogacy)மூலம் குழந்தை பெற்றெடுத்த செய்தி பரபரப் பான பேசும்பொருளாக மாறியுள்ளது. இன்னொரு பெண்ணின் உதவியுடன் குழந்தையைப் பெறும் முறையைதான் "சரோகசி' என்று கூறுகிறார்கள். இது செயற்கை முறையில் கருத்தரித்தல் (IVF) முறையின் மற்றொரு நவீன விஞ்ஞான முறையாகும்.

ஒரு பெண்ணுக்குத் தாய்மை என்பது இறைவனின் அருளால் இயற்கையளித்த வரப்பிரசாதம். இல்வாழ்க்கைக்கு அணி கலனாக அமைவது மக்கட்பேறு. இதைதான்

"குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்

மழலைச் சொல் கேளா தவர்'

என மக்கட்பேற்றின் சிறப்பைப் பற்றி திருவள்ளுவர் நமக்கு உணர்த்துகிறார். சமீபகால இன்றைய சூழ்நிலையில் மரபணுப் பிரச்சினை, மலட்டுத்தன்மை, வாழ்வியில் முறையில் மாற்றம், உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம், சூழ்நிலை மாற்றம் என பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பலருக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இம்முறையைப் போக்க செயற்கைக் கருத்தரித்தல் ஒரு தீர்வாக அமைகிறது.

dd

இதற்காக 2010-ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல்பரிசு ராபர்ட் எட்விரட் என்பவருக்குக் கிடைத்தது. செயற்கைக் கருத் தரித்தல், வாடகைத்தாய் போன்ற நவீன தொழில்நுட்ப வளர்ச்சி குழந்தையின்மைக்கு அறிவியல்ரீதியாகவும், மருத்துவரீதியாகவும் சில காரணங்கள் சொன்னாலும், இதற்கு அடிப் படை இறைவனின் அருளாசிதான். குழந்தை பாக்கியத்தை அருள்பவனான சந்தான கோபாலகிருஷ்ணன் என்கிற குழந்தை வடிவான பகவான் கிருஷ்ணனை, "பால முகுந்தாஷ்டகம்' எனும் துதிப்பாடலை பக்தியுடன் தம்பதியர் இருவரும் பாராய ணம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பகவான் கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த இடமான புனித துவாரகையை தேவபூமியென பக்தியுடன் பக்தர்கள் இன்றும் அழைக்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் கோமதியாறு கடலில் கூடும் இடத்திலிருக்கும் கிருஷ்ணர் கோவிலைப்பற்றி "நாச்சியார் திருமொழியில்' ஆண்டாள்-

"காலை எழுந்திருந்து கரிய

குருவிக் கணங்கள்

மாலின் வரவு சொல்லி

மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ

சோலை மலைப் பெருமான்

துவராபதி எம்பெருமான்

ஆலினிலைப் பெருமான்

அவன் வார்த்தை உரைக்கின்றதே'

என்றும்; "நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி' நூலில் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் (அழகிய மணவாள தாசர்) என்பவர்-

"கொண்டை முடிக்ககி லாப்பெண்

டுகிற்கவை கூவவந்தோன்

விண்டருங் கவ்வத்

தடமேம கூட விமானந்தளில்

எண்டரு மெட்டு மனையா

ரொடுபச் சிவத்திருத்தான்

தெண்டிரை சூழுந் துவரைக்

கல்யாணச் செழுங்கண்ணனே''

என, துவாரகையையும், கண்ணனையும் போற்றுகிறார். அதில் துவாரகையை துவரை என அழகுத் தமிழில் சொல்லியிருக்கிறார். 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றான இக் கோவிலைப் பற்றி பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் போன்றவர்கள் பாசுரங்களைப் பாடியுள்ளனர். இந்த புனிதத் தலத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் தனது நா0ன்கு மடங்களில் ஒன்றான துவாரகா ஸ்ரீ சாரதா பீடத்தை (மடம்) ஸ்தாபித்தார்.

இக்கோவிலுக்கு இணையாக சிறப்புப்பெற்ற தலம்தான் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், ராஜமன்னார்குடியில் அமைந்துள்ள செங்கமலத்தாயார் சமேத ராஜகோபால் சுவாமி திருக்கோவில். இக்கோவிலை "தட்சிண துவாரகை' என்றும் அழைப்பார்கள். "மதிள் துவாரா பதியென்றும் மதின் நாயகராக' என பெரியாழ்வார் துவாரகை நகரின் மாட கோபுரம், மாளிகையைப் பற்றி புகழ்ந்து பாடியுள்ளார். அந்தளவுக்கு துவாரகை கிருஷ்ணன் கோவில் ஒரு அரண்மனை போன்று மிகப் பெரியளவில் அமைந்திருக்கிறது. அது போல தட்சிண துவாரகையான (தென்திசை துவாரகை) ராஜகோபால சுவாமி கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில், சுமார் 155 அடி உயர ராஜகோபுரம், 16 கோபுரங்கள், ஏழு மண்டபங்கள், ஏழு பிராகாரங்கள் மற்றும் ஹரித்ரா நதி, துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தம், கோபி தீர்த்தம், ருக்மணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், கிருஷ்ண தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் என்கிற ஒன்பது தீர்த்தக் குளங்களைக் கொண்டதாக மிக விசாலமாக அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு அழகே மதில் சுவர்தான். இக்கோவில் கோபிலர், கோபிரளயர் என்கிற இரு முனிவர்களின் வேண்டுக்கோளுகிணங்கி கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய 32 திருக் கோல சேவையைக் காண்பித்து, கடைசி கோலமான இடையர் கோலத்தில் காட்சி தந்ததால் உருவாக்கப் பட்டதாக தலப் புராணம் தெரிவித்துள்ளது.

மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய், பரவாசுதேவப் பெருமாள் எனும் பெயரில் காட்சிதருகிறார். உற்சவர் ராஜகோபாலன் எனும் பெயரில் மாடு மேய்க்கும் இளம் பாலகன் வடிவில், ஒரு பசுமாடு, இரண்டு கன்றுக் குட்டிகளுடன் ஒய்யாரமாகக் காட்சிதருகிறார்.

ராஜகோபால சுவாமி திருக்கோவிலின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு அருள் புரியும் பிரார்த்தனைத் தலமாகவும், ஸ்ரீ முஷ்ணம் ஆதிவராகப் பெருமாள் கோவில், மேல்கோட்டை திருநாராயணர் கோவில் போன்று அபிமானத் தலமாகவும் விளங்குகிறது. மகப்பேற்றிக்காக வரும் தம்பதியினர் மடியில், ஐந்து தலை (ஆதிசேஷன்) பாம்பின்மீது பள்ளி கொண்டுள்ள குழந்தை வடிவான கிருஷ்ணர் தன் வலது காலின் கட்டை விரலை வாயில் வைத்தவண்ணம் பச்சிளம் குழந்தைபோல் காட்சிதரும் சிறிய விக்ரஹகத்தை வைத்துக்கொண்டு, பக்தியுடன் கோவில் தீட்சிதர்கள்-

"கராரவிந்தோ நதாரவிந்தம்

முகாரவிந்தே விநிவேசயந்தம்

வடஸ்ய பத்ரஸ்ய புடே சயாதம்

பால முகுந்தம் மநஸா ஸ்மராமி'

எனத் தொடங்கும் "பால முகுந்தாஷ்ட கம்' ஸ்லோகத்தை சொல்லும் வேளையில் குழந்தைக்காக பிரார்த்தனை செய்து கொள்ளவேண்டும். இப்படி சிறப்புப் பூஜைசெய்து வழிபடுவதுமூலம் சந்தான கோபாலகிருஷ்ணனின் அருளால் நிச்சயம் பலன் ஏற்படும் என்பது அசையாத நம்பிக்கை.

இந்தப் பிரார்த்தனைக்காக பௌர்ணமி திதி, திருவோணம், சுவாதி, ரேவதி, ரோகிணி போன்ற நட்சத்திர தினங்களில் அதிகளவு பக்தர்கள் இங்கு வருவதுண்டு.

இக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழா, உற்சவம் போன்றவை நடந்துகொண்டே இருக்கும். அதில் குறிப்பாக பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் மிகவும் சிறப் பாக நடைபெறும் திருவிழாவாகும். இதை யொட்டி பகவான் கிருஷ்ண பரமாத்மாவுக்கு உகந்த ரோகிணி நட்சத்திர நாளில் தேரோட்ட மும் நடைபெறும்.

சிறப்பும், தெய்வீகமும் நிறைந்த இக்கோவில் பற்றி திருவாய்மொழியில் 4-ஆம் பத்து பாடலில் நம்மாழ்வார் பாடியுள்ளார். சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவரான முத்து சுவாமி தீட்சிதர் (1775-1835) கீர்த்தனை பாடினார்.

அதேபோன்று ஊத்துக்காடு வெங்கடகவி (1700-1765) ராஜகோபால சுவாமிமீது பாடலைப் பாடியுள்ளார். மணவாள மாமுனிகள் சமஸ் கிருதத்திலும், தமிழிலும் துதிப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இயற்கை முறையில் கருத்தரித்து, நல்ல, ஆரோக்கியமான குழந்தையைப்பெற ராஜ மன்னார்குடி சந்தான கோபாலானை பக்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு இல் வாழ்வில் இன்புறுவோமாக!

om011222
இதையும் படியுங்கள்
Subscribe