மணப்பேறுடன் மங்கல வாழ்வருளும் மணக்குடி மணவாளநாதர்! - கோவை ஆறுமுகம்

/idhalgal/om/manakudi-manavalanathar-who-has-happy-life-marriage-coimbatore-arumugam

"அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.'

-திருவள்ளுவர்

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வரும் புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறானவழியில் வருவது புகழாகாது. இன்பமும் ஆகாது என்பதாம்.

மரியாதை ராமன் வசித்துவந்த ஊரில் சோமன் என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார்.

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்றுக் கிடைத்த ரூபாய் பத்தாயிரத்துடன், மாட்டு வண்டியில் காட்டுவழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தவறவிட்டு விட்டார். இதையறியாமல் வீட்டுக்கு வந்ததும் பணத்தைத் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால், "தொலைந்த பணப்பையைத் தேடிக்கொடுப்பவருக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன்' என்று அறிவித்தார்.

இதையறிந்த ஊர்மக்கள் பணப்பை கிடைத்தால் சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடிப்பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற் குப்பிறகு பக்கத்து ஊரிலிருந்து ஒரு வழிப் போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன்.

அவரது விவசாய நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால், சரியாக விவசாயம் செய்ய முடியவில்லை. வேறு தொழில் செய்ய பணமும் இல்லை.

தன் மனக்குறையை ஈசனிடம் முறையிட்டு விட்டு, வேறு வேலை செய்யலாமென மரியாதை ராமனின் ஊருக்குச் செல்லும் போது, வழியில் காலில் ஏதோ பை அகப் பட்டதைக் கண்டார். அதில் நிறைய பணம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு ஊருக்குள் விரைந்தார்.

அங்கிருந்த கடையில் விசாரித்த போது, கடைக்காரர் சோமனைப் பற்றிச் சொல்லி, "அவர்தான் தொலைத்தவர், நீங்கள் இதைக் கொடுத்தால் கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார்'' என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டைத் தேடிப்பிடித்து, பணப்பை கிடைத்த விவரத்தைச் சொன்னார். சோமனுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக்கொண்டார். அதேநேரம் சன்மானம் கொடுக்க விருப்பமில்லாத சோமன், "பையில் ஒரு வைரமோதிரம் இருந்தது. அதனைக் காணவில்லை' என்று ஊர்மக்களிடம் கூறினார். பூபாலனோ ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார்.

இந்தப் பிரச்சினையை மரியாதை ராமனிடம் கொண்டுசென்று தீர்ப்பு கேட்க வேண்டுமென்று ஊர்மக்கள் நினைத்தனர்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் என அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன், தான் தொலைத்த பணப்பையிலிருந்த வைரமோதிரம் காணாமல் போனதைப் பற்றியும், பூபாலன் தான் கண்டுபிடித்த பணப்பையைப் பற்றியும் சொன்னார்கள்.

ஏற்கெனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்குத் தெரியும். தண்டோரா போடும்போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் கூறவில்லை. ஆக, சோமன்தான் ஏமாற்றுகிறான் என்பதைப் புரிந்துகொண்ட மரியாதை ராமன் சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாகத் தீர்ப்பு கூறினார்.

"சோமன் தொலைத்த பையில் பணமும் வைரமோதிரமும் இருந்த தென்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.

எனவே இது சோமனின் பையே இல்லை. வேறு யாரோ தொலைத்த பையாகத்தான் இருக்கவேண்டும்.

அப்படி தொலைத்தவர்

"அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.'

-திருவள்ளுவர்

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வரும் புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறானவழியில் வருவது புகழாகாது. இன்பமும் ஆகாது என்பதாம்.

மரியாதை ராமன் வசித்துவந்த ஊரில் சோமன் என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார்.

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்றுக் கிடைத்த ரூபாய் பத்தாயிரத்துடன், மாட்டு வண்டியில் காட்டுவழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தவறவிட்டு விட்டார். இதையறியாமல் வீட்டுக்கு வந்ததும் பணத்தைத் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால், "தொலைந்த பணப்பையைத் தேடிக்கொடுப்பவருக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன்' என்று அறிவித்தார்.

இதையறிந்த ஊர்மக்கள் பணப்பை கிடைத்தால் சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடிப்பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற் குப்பிறகு பக்கத்து ஊரிலிருந்து ஒரு வழிப் போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன்.

அவரது விவசாய நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால், சரியாக விவசாயம் செய்ய முடியவில்லை. வேறு தொழில் செய்ய பணமும் இல்லை.

தன் மனக்குறையை ஈசனிடம் முறையிட்டு விட்டு, வேறு வேலை செய்யலாமென மரியாதை ராமனின் ஊருக்குச் செல்லும் போது, வழியில் காலில் ஏதோ பை அகப் பட்டதைக் கண்டார். அதில் நிறைய பணம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு ஊருக்குள் விரைந்தார்.

அங்கிருந்த கடையில் விசாரித்த போது, கடைக்காரர் சோமனைப் பற்றிச் சொல்லி, "அவர்தான் தொலைத்தவர், நீங்கள் இதைக் கொடுத்தால் கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார்'' என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டைத் தேடிப்பிடித்து, பணப்பை கிடைத்த விவரத்தைச் சொன்னார். சோமனுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக்கொண்டார். அதேநேரம் சன்மானம் கொடுக்க விருப்பமில்லாத சோமன், "பையில் ஒரு வைரமோதிரம் இருந்தது. அதனைக் காணவில்லை' என்று ஊர்மக்களிடம் கூறினார். பூபாலனோ ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார்.

இந்தப் பிரச்சினையை மரியாதை ராமனிடம் கொண்டுசென்று தீர்ப்பு கேட்க வேண்டுமென்று ஊர்மக்கள் நினைத்தனர்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் என அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன், தான் தொலைத்த பணப்பையிலிருந்த வைரமோதிரம் காணாமல் போனதைப் பற்றியும், பூபாலன் தான் கண்டுபிடித்த பணப்பையைப் பற்றியும் சொன்னார்கள்.

ஏற்கெனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்குத் தெரியும். தண்டோரா போடும்போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் கூறவில்லை. ஆக, சோமன்தான் ஏமாற்றுகிறான் என்பதைப் புரிந்துகொண்ட மரியாதை ராமன் சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாகத் தீர்ப்பு கூறினார்.

"சோமன் தொலைத்த பையில் பணமும் வைரமோதிரமும் இருந்த தென்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.

எனவே இது சோமனின் பையே இல்லை. வேறு யாரோ தொலைத்த பையாகத்தான் இருக்கவேண்டும்.

அப்படி தொலைத்தவர் இதுவரை புகார் கொடுக்கவில்லை. அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நமது ஊர் வழக்கப்படி கிடைத்த பணத்தில் பத்து சதவிகிதம் கோவில் செலவுக்குக் கொடுத்துவிட்டு, மீதியைக் கண்டெடுத்தவரே தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம். சோமனின் பணம் மற்றும் வைரமோதிரம் கொண்ட பையைக் கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார். சபை கலையலாம்.''

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்றுபோனதுபோலாகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் பத்து சதவிகிதம் அம்மன் கோவிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியைத் தன் சொந்த ஊருக்குக் கொண்டுசென்று தொழில் செய்து நலமுடன் வாழ்ந்தார்.

தெரிந்தோ அல் லது தெரியாமல் வந்த துயரோலி எதுவாக இருந்தாலும் தெய்வத்திடம் முறையிட்டால் கண்டிப்பாக குறை தீர்ந்துவிடு மென்பது பூபால னின் அசைக்க முடியாத நம்பிக்கை. கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்விலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

கம்பரின் மகனான அம்பிகாபதியும், சோழ மன்னரின் மகளான அமராவதியும் ஒருவரையொருவர் விரும்பினர். இது மன்னருக்குத் தெரிந்தது. "அரசன் மகளைப் புலவன் மகன் விரும்புவதா?' என்று கொதித்தார் அரசர். அதேசமயம் அதை சோதித் துப் பார்ப்பதற்காக அரண்மனையிலேயே ஒரு விருந்துக்கும் ஏற்பாடு செய்து, கம்பரையும் அம்பிகாபதியையும் அழைத் தார்; அவர்களும் வந்தனர்.

அனைவரும் விருந்தில் அமர்ந்தவுடன், பரிமாறுவதற்காக வந்தாள் அமராவதி.

அவளைப் பார்த்தவுடன் வர்ணித்துப் பாடத் துவங்கிவிட்டான் அம்பிகாபதி. கம்பர் உட்பட அனைவரும் திடுக்கிட்டனர்.

நிலைமையை உணர்ந்த கம்பர் குறுக் கிட்டு, சரஸ்வதிதேவியை வேண்டி காப்பாற்றுமாறு பாடினார். அதாவது அரசர் மகளை வர்ணித்து அம்பிகாபதி துவங்கிய பாடல் சரஸ்வதிதேவியை வேண்டுவதாக மாறிவிட்டது. அனைவரும் குழம்பினர்.

"தெருவில் ஒரு பெண் கொட்டிக்கிழங்கு விற்றுக்கொண்டு போகிறாள். அவளை நோக்கிதான் பாடினோம். வேண்டுமானால் வெளியே சென்று பாருங்கள்'' என்றார் கம்பர்.

அனைவரும் வெளியே சென்று பார்த்தனர். அதேசமயம் தன்னை வேண்டிய கம்பரைக் காப்பதற்காக, சரஸ்வதிதேவி கொட்டிக் கிழங்கு விற்கும் பெண்வடிவத்துடன் வந்தாள். பார்த்த அனைவரும் வியந்தனர். கம்பரோ, கொட்டிக்கிழங்கு விற்கும் பெண்ணாக வந்து தன்னைக் காப்பாற்றியது சரஸ்வதி தேவியே என்பதை உணர்ந்து, இரு கரங்களையும் கூப்பி மானசீகமாக வணங்கினார்.

"தாயே, என்னை மட்டுமல்லாமல், என் மகனையும் காப்பாற்றிய உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்?' என்று கண்ணீர் வழிய முணுமுணுத்தார். நம்பிக்கை, பொறுமை இவ்விரண்டும் வாழ்வின் வெற்றிச்சாவிகள் என்று ஆன்றோர்கள் கூறியதற்கேற்ப, பூபாலனின் பொறுமையும், கம்பரின் இறை நம்பிக்கையும் இக்கட்டான நேரத்தில் வந்து இடைஞ்சல நீக்கி இன்பமருள தெய்வம் ஒருபோதும் மறப்பதில்லை; மறுப்பதுமில்லை. இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் திருத்தலம்தான் மணக்குடியில் குடிகொண்டிருக்கும் சுந்தரேஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: சுந்தரேஸ்வரர்.

இறைவி: சௌந்தர நாயகி, ஞானாம் பிகை.

விசேஷமூர்த்தி: ஸ்ரீ நடராஜர்- சிவகாமி.

ஊர்: மணக்குடி

. தீர்த்தம்: கல்யாண தீர்த்தம்.

தலவிருட்சம்: வில்வமரம்.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும்; தேவார வைப்புத்தலமாக, காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றா கத் திகழ்வதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் மணக்குடி சுந்தரேஸ்வரர் திருக் கோவில். பிரம்மன் வழிபட்டுப்பேறு பெற்ற இத்தலம் தருமபுர ஆதீனத் திற்குச் சொந்த மானது. தருமை யாதீனத்தின் கட்டுப் பாட் டில் அனு தினமும் நான்குகால பூஜைகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

"விடையில்லா வினாக்கள் இல்லை

படையில்லா வேந்தனுமில்லை

தடையில்லா சாதனையில்லை

கடையில்லா நகரமில்லை

சடையில்லா பதின்மகுமரி இல்லை

குடையில்லா கொற்றவனில்லை

மடையில்லா வேளாண் பூமி இல்லை

ஆடையில்லா மனிதனுமில்லை

ஆடையில்லா கொதித்த பால் இல்லை

மணக்குடி மணவாளனில்லா

மகப்பேறு, மணப்பேறில்லை.''

மேற்கு நோக்கிய சிவனை தரிசித் தால், கிழக்கு நோக்கிய ஆயிரம் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்குமென்று வாமதேவர் என்ற மகான் சொல்லியுள்ளார். கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கியிருக்கும் என்பது பொது வான விதி. அதேசமயம் மேற்கு நேக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம். இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகுவிரைவில் பலன் தருகின்றன.

அத்தகைய சிறப்புமிக்கதொரு திருத்தலம்தான் மணக்குடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயம்.

sivan

புராண வரலாறு

உமாதேவி மலைமகளாக அவதரித்து மணப் பருவத்தை யடைந்தபோது, இமவானாகிய தந்தை தன்னருமை மகளின் அழகையும் தெளிவையும் பார்த்து, இவளுக்குத தக்க கணவனைத் தேர்ந்தெடுக்க வேணடுமே எனக் கவலையுற்றார். பிராட்டியார், தந்தையார் மனக்கருத்தையறிந்து "எமக்கு மணவாளன் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளே. அவரே என் கணவராவார். என் தோள் அவரை யன்றி எவரையும் சேராது'' என்றாள்.

தந்தை, "ஐயோ, இறைவனா உன்னை மணப்பார்? ஒன்றுக்கும் பற்றாத அடியேனுக்கு அவரா மருகனாவார்? முடியாத காரியத்து முனையலாமா?'' என்றார். அம்மை தாயிடம் சென்று, "தாயே, நான் தவம் செய்யப்போகிறேன். தடுக்காது உத்தரவளிக்கவேண்டும்'' என்றாள்.

இவ்வார்த்தை கேட்ட மேனை, "உனது இளமையழகு எங்கே! உனது மெல்லிய பூங்கொடி போன்ற உடலமைப்பு எங்கே! தவமெங்கே! இந்த வயதிற்கும் தவத்திற்கும் பொருத்தவே பொருந்தாது'' எனக்கூற, மீண்டும் தந்தையிடஞ் சென்று உத்தரவு பெற்று, இமயத்துச்சி சென்று சிருங்கம் என்னுமிடத்தில் தவஞ்செய்தாள். இச்செய்தியை கந்தபுராணம்-

"ஈசனே காப்பன் அல்லால் யாரையும் பிறரால் தம்மால்

ஆசறப் போற்றலாகா ததுதுணி வாகும் ஈண்டுப்

பேசிய திறனும் அன்னோன் பேரருள் மறதியென்ன

நேசமோ டியைத்திட்டன்னை நினைத்த நோன்பியற்று கென்றான்'

என குறிப்பிடுகிறது.

பல்லாண்டுகளுக்குப்பின் தாழ்சடைப் பெருமான் மணந்து கொள்வதாக வரமளித்தார்.

தாயும் தந்தையுமில்லாத் தனிப்பரமன், நெருங்கிய அன்புறவுகொண்ட அடியார்களை, முனிபுங்கர்களை மணம்பேச அனுப்பினார். மணம் முடித்துக் கொண்டார். அங்ஙணம் மணந்துகொள்ள கௌரீ மாயூரத்திற்கு வந்தபோது பெருமான் தங்கிய இடம் மணக்குடியாயிற்று. இத்தலத்தில் இறைவன், சௌந்தரநாயகி சமேத சுந்தரேசராக மணக்கோலம் காட்டியருள்கிறார்.

சிறப்பம்சங்கள்

ப் இறைவனின் திருநாமம் ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமி, மணவாளநாதர். இறைவியின் திருநாமம் அருள்மிகு சௌந்தர நாயகி.

ப் களத்திரம் என்ற சொல்லானது பெண்ணுக்குக் கணவனையும் ஆணுக்கு மனைவி யையும் குறிக்கும். முற்பிறவியில் செய்த கர்மவினைகள் காரணமாக களத்திரதோஷம் ஏற்படும். அவ்வாறு தோஷமுள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் விரைவில் கைகூடாது. இத்தகைய திருமணத்தடையை நீக்கும் தலமாக மணக்குடி திருக்கோவில் சிறந்து விளங்குகிறது.

sivan

ப் இத்தலத்தின் தீர்த்தமான கல்யாணத் தீர்த்தத்தில் பிரம்மன் நீராடி, இறைவருக்கு மணம் செய்விக்கும் பேறு பெற்றார். மேலும் இறைவன் அம்மை யைத் திருமணம் செய்வதற்காக மணவாளநாதராக எழுந்தருளியதால் இத்தலம் திருமணத்தடை நீக்கும் தலமாகப் போற்றப்படுகிறது.

ப் அனுதினமும் நான்குகால பூஜைகள் மற்றும் சிவாலயத்தின் அனைத்து விசேஷங்கள் நடக்கின்றன. குறிப்பாக பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிவபக்தர்களால் நடத்தப்படுகிறது. "விழை' என்றால் "விருப்பம்' என்றுபொருள். விழாக்கள் மகிழ்வை அடிப்படையாகக்கொண்டு மக்களால் விரும்பி நடத்தப்படுபவையாகும். பண்டைக்காலத்திலிருந்து விழாக்கள் நிகழ்ந்ததை "மடியா விழாவின் யானார் நன்னாடு' என்று புறநானூறு கூறுவது போல் ஈசன் தன்னுடைய ஆனந்தத் தாண்டவத்தைக் காட்டியருளிய ஆருத்ரா தரிசன நிகழ்வு இவ் வாலயத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. மார்கழி மாதத் திருவாதிரை தினத்தன்று விரதமிருந்து சிவபெருமானை பூசித்து வழிபட் டால் பாவங்கள் நீங்கும்.

திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களிசெய்து படைப்பார் கள். "களி' என்பது "ஆனந்தம்' என்றும் பொருள்படும்.

அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் தோன்றிய நிலையில், ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும்.

இச்சிறப்பிற்குரிய திருவாதிரை தினத் தன்று நடராஜப் பெருமான் எழுந்தருளிய வீதியுலா வருகின்றார்.

"குனிந்த புருவமுங் கொவ்வைச்

செவ்வாயிற் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போன்

மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்தமுடைய வெடுத்த பொற்

பாதமுங் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே

யித்த மாநிலத்தே'

என்று அப்பர் பாடிப்பரவிய அழகிய திருவுருவம். அவரது திருவடியின் அருகில் இருபுறமும் சிவகணங்கள் இருக்கிறார் கள். ஒருவருக்கு நான்கு கரங்கள். இரண்டு கரங்கள் பின்புறம் தூக்கி விரித்த நிலை யிலும், இரண்டு கரங்கள் பஞ்சமுக வாத்தியம் வாசிப்பதுபோலவும் அமைந் துள்ளது. பஞ்சமுக வாத்தியத்தியத்தின் அமைப்பு தத்ரூபமாக உள்ளது. தாளம் தட்டுவதற்காக வலது கையில் தாளத்தின் மேல்பகுதியைத் தூக்கிய நிலையிலும்; கீழ்ப்பகுதியை இடக்கையில் பிடித்த நிலையிலும் உள்ளார். இத்தகைய அழகிய அமைப்பான ஆடல்வல்லான் வருடம் ஒருநாள் திருவீதியுலா சென்று கோவிலை வந்தடையும் நிகழ்வானது கோலாகலமாக ஊர்மக்கள் கொண்டாடி மகிழ்வது சிறப் பம்சம் வாய்ந்தது.

ப் அஷ்டமி என்றாலே பைரவர் ஞாபகம் தான் வரும். பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது நல்லதா- வளர்பிறை அஷ்டமியில் வழிபடுவது நல்லதா என்ற குழப்பம் பெரும்பாலோருக்கு இருக்கும். பொதுவாக தேய்பிறை அஷ்டமி சிறப்பாகச் சொல்லப்படும். வளர்பிறையும் ஏற்றதே.

வளர்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடும்போது ராகு காலத்தில் செவ்வரளி பூமாலை சாற்றி, செவ்வாழைப்பழம் படைக்கவேண்டும். தேங்காயை உடைத்து அதில் நெய் அல்லது விளக்கெண்ணெயூற்றி தீபமேற்றி சொர்ணா கர்ஷண பைரவருக்குரிய மூல மந்திரத்தைக் கூறி வழிபடவேண்டும்.

மூலமந்திரர்

"ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாராணாய

ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜா மளபந்ததாய லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷண பைரவாயே

மம தாரித்ரிய வித்வேஷனாய

மஹா பைரவாய நமஹ ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்'.

மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் அஷ்டலட்சுமிகளும் தங்களின் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்காக வளர்பிறை அஷ்டமி தினத்தில் வரும் ராகு காலத்தில் பைரவரை வழிபாடு செய்து பலடைந்ததாக பைரவ புராணம் கூறுகிறது.

"வளர்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுவதால் பித்ரு சாபங்கள், குலதெய்வ சாபங்கள் போன்றவை நீங்கும். துஷ்ட சக்திகள் நீங்கி கிரகங்களின் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். போட்டி, பொறாமைகள் எதுவும் ஏற்படாமல் எதிரிகள் தொல்லை நீங்கும்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான சுந்தரேச சிவாச்சாரியார். மேலும் அவர் கூறுகையில் "மணக்குடி ஆலயத்தில் அஷ்டமியன்று பைரவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வழிபட்டு பலன் பெற்றோர் ஏராளம்'' என்கிறார்.

சுவாமி சுந்தரேஸ்வரர் மேற்கு பார்த்தும், அம்பாள் சௌந்தரநாயகி தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே தேவாரம் பாடிய மூவர் அப்பர், சுந்தரர், சம்பந்தர் திருவுருவங்கள் காட்சியளிக்கின்றன. சுற்றுப் பிராகாரத்தில் மகாவிஷ்ணு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், லட்சுமி கிழக்குப் பார்த்து அருள்பாலிக் கின்றனர். வடமேற்கு மூலையில் நடராஜர் சபை தனித்து தெற்கு நோக்கியுள்ளது. கோஷ்ட தெய்வங்கள், நவகிரகங்கள் ஆகம விதிப்படி உள்ளன.

திருக்கயிலாயப் பரம்பரை தருமபுர ஆதீனத்திற் குச் சொந்தமான மணக்குடி ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோவில் ஜீர்ணோத் தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் சுபகிருது ஆண்டு, ஆவணிமாதம் 22-ஆம் நாள் (7-9-2022) புதன்கிழமை தருமை ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்திதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. பொலிவுடன் விளங்கும் மணக்குடி சிவாலயத்தை வலம்வந்து வழிபடுவோம்; நலம்பெற்று வளமுடன் வாழ்வோம்.

காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: மேலாளர், சௌந்தர நாயகி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில், பூம்புகார் சாலை, மணக்குடி (அஞ்சல்), மயிலாடுதுறை மாவட்டம்,

அஞ்சல் குறியீடு: 609 118.

பூஜை விவரங்களுக்கு: சுந்தரேச சிவாச்சார்யார், அலைபேசி: 63832 36795.

அமைவிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் கருங்குயில்நாதன் பேட்டைக்கு கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மணக்குடி. பேருந்து வசதி உண்டு.

படங்கள்: போட்டோ கருணா

om010423
இதையும் படியுங்கள்
Subscribe