மங்களம் வழங்கும் மகாசிவராத்திரி - டி.ஆர். பரிமளரங்கன்

/idhalgal/om/mahasavarathri-offering-mangalam-dr-parimalarankan

சிவபெருமானுக்கு உகந்தது சிவராத்திரி. அதில் மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் சிவராத்திரியை மங்களகரமான சிவராத்திரி, மகாசிவராத்திரி என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

சிவராத்திரியில் நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகை உண்டு.

ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி நித்ய சிவராத்திரி எனப்படுகிறது. ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவபெருமானுக்கு நான்கு காலங்களில் ஆகமமுறைப்படி பூஜைகள் செய்ய வேண்டும். இப்படி ஒரு வருடத்தில் இருபத்து நான்கு சதுர்த்தசி இரவில் வழிபடுவதை நித்ய சிவராத்திரி என்று போற்றுவர்.

அடுத்து, தை மாதம் தேய்பிறை பிரதமை திதியன்று தொடங்கி, தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் சிவபெருமானை பூஜைசெய்து, சதுர்த்தசியில் நிறைவு செய்தல்வேண்டும். இது பட்ச சிவராத்திரி எனப்படும். இதில் நான்கு காலத்திற்கு பதில் ஒரு காலம் பூஜை செய்தல் போதுமானது என்று ஆகமங்கள் கூறுகின்றன. இதனால் நோய்கள் விலகும்; ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். இந்த வழிபாட்டினை உடல்நலம் சரியில்லாதவர்களுக்காக வேண்டிக்கொண்டும் செய்யலாம்.

மாத சிவராத்திரியானது, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி

சிவபெருமானுக்கு உகந்தது சிவராத்திரி. அதில் மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் சிவராத்திரியை மங்களகரமான சிவராத்திரி, மகாசிவராத்திரி என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

சிவராத்திரியில் நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகை உண்டு.

ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி நித்ய சிவராத்திரி எனப்படுகிறது. ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவபெருமானுக்கு நான்கு காலங்களில் ஆகமமுறைப்படி பூஜைகள் செய்ய வேண்டும். இப்படி ஒரு வருடத்தில் இருபத்து நான்கு சதுர்த்தசி இரவில் வழிபடுவதை நித்ய சிவராத்திரி என்று போற்றுவர்.

அடுத்து, தை மாதம் தேய்பிறை பிரதமை திதியன்று தொடங்கி, தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் சிவபெருமானை பூஜைசெய்து, சதுர்த்தசியில் நிறைவு செய்தல்வேண்டும். இது பட்ச சிவராத்திரி எனப்படும். இதில் நான்கு காலத்திற்கு பதில் ஒரு காலம் பூஜை செய்தல் போதுமானது என்று ஆகமங்கள் கூறுகின்றன. இதனால் நோய்கள் விலகும்; ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். இந்த வழிபாட்டினை உடல்நலம் சரியில்லாதவர்களுக்காக வேண்டிக்கொண்டும் செய்யலாம்.

மாத சிவராத்திரியானது, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய்பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திரிதியை, (மாசியில் தேய்பிறை சதுர்த்தசி- மகாசிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் விரதம் மேற்கொண்டு, சிவாலயத்திற்குச் சென்று இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் நலமுடன் வாழ்வதுடன்- இறுதிக்காலத்தில் சிவலோகப் பதவி கிட்டும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.

shiva

யோக சிவராத்திரி என்பது சிவதீட்சை பெற்றவர்களும் யோகிகளும் மேற்கொள்ளும் வழிபாடு. என்றாலும் மற்றவர்களும் இதை மேற்கொள்ளலாம். திங்கட்கிழமை அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந் தால், அந்த திதியானது தீட்சைபெற்றவர்களுக்கும், யோகிகளுக்கும், சித்தர்களுக்கும் மிகச்சிறந்ததாகக் கருதப்படு கிறது. இந்த யோக சிவராத்திரியில் இறைவனைப் பூஜித்தால் ஆத்மஜோதியில் சிவபெருமானைக் காணலாம் என்கிறது சிவபுராணம்.

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியன்று வரும் மகாசிவராத்திரியில் விரதம் மேற்கொண்டு, சிவாலயங்களில் மாலை ஆறு மணியிலிருந்து இரவு முழுவதும் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் புனிதம் சேரும்; புத்திசாலிகளான வாரிசுகள் தோன்றுவர்; செல்வ வளம் கிட்டும்; ஆரோக்கியமாக வாழலாம் என்று வேதநூல்கள் கூறுகின்றன.

மகா சிவராத்திரியன்று அதிகாலை எழுந்து நீராடிவிட்டு, பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே பூஜை செய்தல் வேண்டும். அன்று விரதம் மேற்கொண்டு, சிவாலயம் சென்று லிங்கமூர்த்தியையும் அம்பாளையும் தரிசிக்க வேண்டும். நாள் முழுவதும் "ஓம் நமசிவாய' என்னும் இறைவன் திருநாமத்தை ஜெபிக்கவேண்டும். மாலை ஆறு மணிக்குமேல் சிவாலயத்தில் லிங்கமூர்த்திக்கு நான்கு ஜாமங்களுக்குரிய அபிஷேக ஆராதனைகள் ஆரம்பமாகும். இந்த வழிபாட்டிற்கு வில்வதளங்களை அர்ச்சகரிடம் சமர்ப்பிப்பது நலம் தரும்.

சிவலிங்கத்திற்கு வில்வதளத்தால் அர்ச்சிக்கும்போது கீழ்க்கண்ட சுலோகத்தை மனதிற்குள் ஜெபித்தல் வேண்டும்.

"த்ரிகுணம் த்ரிகுணாகரம் த்ரிநேத்ரஞ்ச

த்ரயாயுஷ திரிஜன்ம பாபசம்ஹாரம்.'

இந்த சுலோகத்தை ஜெபித்தால் மூன்று ஜென்ம பாவங்கள் அழியும்; புனிதம் சேரும்.

மகா சிவராத்திரி வழிபாட்டில் முக்கிய மான ஆறு அம்சங்கள் உள்ளதாக ஞானநூல்கள் கூறுகின்றன.

சிவலிங்க அபிஷேகத்தை தரிசிப்பதால் நம் ஆன்மா தூய்மைப்படும்.

சிவலிங்கத்திற்கு அணிவிக்க குங்குமம் அளித்தால் நல்லியல்புகளையும் நல்ல பலன்களையும் வழங்கும்.

சிவ வழிபாட்டிற்கு நிவேதனத்திற்குரிய பொருளை அளிப்பதால் நீண்ட ஆயுளும் விருப்பங்களும் நிறைவேறும்.

சிவாலயத்தில் இரவு முழுவதும் தீபமேற்ற எண்ணெய் அளிப்பது செல்வத்தைப் பெருக்கும்.

அன்று கோவிலில் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைவிக்கும்.

தாம்பூலம் அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைத் தரும்.

இந்த ஆறு அம்சங்களையும் வீட்டில் வழிபடும்போதோ அல்லது சிவாலயத்தில் சிவராத்திரி வழிபாட்டின்போதோ மேற்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

மகா சிவராத்திரி யன்று சிவாலயத்தில் நடைபெறும் முதல் ஜாமப்பூஜை, படைக்கும் கடவுளான பிரம்மதேவன், சிவ பெருமானுக்குச் செய்யும் பூஜையாகும். அப்போது பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிறப் பொன்னாடை அணிவித்து, தாமரை மலர்களால் அர்ச்சனையும் அலங்காரமும் செய்வர். பாசிப்பருப்பு பொங்கல் நிவேதனம் நடைபெறும். நெய்தீபத்துடன் ரிக்வேதப் பாராயணம் நடைபெறும். இதனை தரிசிப்பதால் கர்மவினைகளிலிருந்து விடுபட்டு சுவர்க்க லோகம் செல்ல வழிகிட்டும்.

இரண்டாம்கால பூஜையானது காக்கும் கடவுளான மகாவிஷ்ணு சிவபெருமானுக்குச் செய்யும் பூஜை என்கிறது வேதம். அப்போது பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்றதும் சந்தனக்காப்பு சாற்றுவர். வெண்பட்டாடை அணிவித்து இனிப்புப் பாயசம் நிவேதனம் செய்வர். நல்லெண்ணெய் தீபத்துடன் யஜுர் வேதப் பாராயணம் நடைபெறும். இதில் கலந்துகொண்டால் பசித்த வேளைக்கு உணவு தேடிவரும். இல்லத்தில் உணவு தானியத் தட்டுப்பாடு வராது.

மூன்றாவது காலம் சக்தியின் வடிவமான அம்பாள் பூஜிப்பதாகும். இந்தக் காலத்தில் தேனாபிஷேகம் செய்வர். பச்சைக் கற்பூரம், வில்வ இலைகள் கொண்டு அலங்காரம் செய்து, சிவப்பு வஸ்திரம் அணிவிப்பார்கள். மல்லிகை மலர்கள் கொண்டு அர்ச்சித்து, எள் அன்னம் நிவேதனம் செய்வர். இலுப்பை எண்ணெய் தீபத்துடன் சாமவேதப் பாராயணம் நடைபெறும். இந்தக் காலத்திற்குரிய பூஜையை லிங்கோத்பவ காலம் என்பர். சிவபெருமானின் திருமுடி யைக்காண பிரம்மன் அன்னரூபமாக மேலேயும், திருவடியைக்காண மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்திலும் தேடிய சிறப்புடைய காலமென்று இது போற்றப்படுகிறது. இந்தக் காலப் பூஜையில் கலந்துகொள்வதால் தீய சக்திகள் நம்மை அண்டாது என்கின்றன ஞானநூல்கள்.

நான்காவது கால பூஜையானது முப்பத்துமுக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மானுடர்களும் சிவபெருமானைப் பூஜிப்பதாகக் கருதப் படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்புச்சாறு மற்றும் பாலாபிஷேகம் செய்வர். நந்தியா வட்டை மலர்களால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தபின், சுத்த அன்னம் நிவேதனமாகப் படைப்பர். அதர்வண வேதப் பாராயணத்துடன் தீபதூப ஆராதனைகளுடன், 18 வகையான சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்.

இந்த நான்கு காலப் பூஜைக்களுக்குரிய பொருட்களை சிவாலயத்திற்கு அளித்து கலந்துகொண்டால் சிவனருள் கிட்டும். வேறென்ன வேண்டும்?

இதையும் படியுங்கள்
Subscribe