அயோத்யாவில் எம்பெருமான் ஸ்ரீராமருக்கு புதிய தாக கோவில் கட்டப் பட்டு பெரு விமர்சை யான முறையில் அண்மையில் ப்ராண பிரதிஷ்டை செய்யப் பட்டது. அந்த ஸ்ரீராமர் லங்கைக்குப் போக சேது சமுத்திரத் தில் அந்த காலத்தில் பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தையும் காத்து குடிமக்களையும் காக்கும் தலைவராக சேதுபதி மன்னர் கள் இருந்தனர் என்று பெருமையாக கூறுவார்கள். சேது (கடல்) + பதி (அரசர்) என்கிற பொருளும் உண்டு.
பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய என்கிற மூவேந்தர்கள் தவிர பல்லவ மன்னர்களும் அதற்கு அடுத்து சேதுபதி மன்னர்களும் சிறந்த ஆட்சி யாளராக திகழ்ந்தனர். வீர மறவர் சீமையின் அதிபதியான சேதுபதி மன்னர்கள் அனைவரும் தலைசிறந்த மன்னர்களாகவும், இந்து மதத்தை காப்பவர்களாகவும், கொடை வள்ளல்களாகவும், தமிழ்மொழியைக் காப்பவர்களாகவும் இருந்துவந்துள்ளனர்.
இம்மன்னர்கள் குலதெய்வ மான இராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதரை வழிபட்டு வந்தனர். அதேபோல் இஷ்ட தேவதையாக ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்மனை வழிபட்டு வந்துள்ளனர். அம்மனுக்கு உகந்த நாட்களி லும், நவராத்திரி சமயத்திலும் சிறப்பாக வழிபாடுகளைச் செய்வதுண்டு. ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு தங்களின் அரண் மனையான ராமலிங்க விலாஸ் வளாகத்தில் தனிக்கோவில் கட்டி வழிபட்டனர்.
1892-ஆம் ஆண்டு நடைபெற்ற நவராத்திரி உற்சவத்தைப் பற்றி கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் சார்பில், வெளியிடப்பட்ட புத்தகத்தில் பமீலா பிரைஸ் என்பவர் சிறப்பாக எழுதி யுள்ளார்.
1895-ஆம் ஆண்டுமுதல் நவராத்திரி உற்சவத்தை கலை விழாவாக மன்னர் துரை ராஜா முத்துராமலிங்க சேதுபதி என்பவர் மாற்றினார். சேதுபதி மன்னர் வம்சத்தினர் தமிழ்மொழிமீது அதிக பற்றுள்ளவராகவும், அதில் புலமை பெற்றவர்களாகவும் திகழ்ந்தனர். தங்களது இஷ்ட தேவதையான ராஜராஜேஸ்வரி அம்மன்மீது
அயோத்யாவில் எம்பெருமான் ஸ்ரீராமருக்கு புதிய தாக கோவில் கட்டப் பட்டு பெரு விமர்சை யான முறையில் அண்மையில் ப்ராண பிரதிஷ்டை செய்யப் பட்டது. அந்த ஸ்ரீராமர் லங்கைக்குப் போக சேது சமுத்திரத் தில் அந்த காலத்தில் பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தையும் காத்து குடிமக்களையும் காக்கும் தலைவராக சேதுபதி மன்னர் கள் இருந்தனர் என்று பெருமையாக கூறுவார்கள். சேது (கடல்) + பதி (அரசர்) என்கிற பொருளும் உண்டு.
பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய என்கிற மூவேந்தர்கள் தவிர பல்லவ மன்னர்களும் அதற்கு அடுத்து சேதுபதி மன்னர்களும் சிறந்த ஆட்சி யாளராக திகழ்ந்தனர். வீர மறவர் சீமையின் அதிபதியான சேதுபதி மன்னர்கள் அனைவரும் தலைசிறந்த மன்னர்களாகவும், இந்து மதத்தை காப்பவர்களாகவும், கொடை வள்ளல்களாகவும், தமிழ்மொழியைக் காப்பவர்களாகவும் இருந்துவந்துள்ளனர்.
இம்மன்னர்கள் குலதெய்வ மான இராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதரை வழிபட்டு வந்தனர். அதேபோல் இஷ்ட தேவதையாக ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்மனை வழிபட்டு வந்துள்ளனர். அம்மனுக்கு உகந்த நாட்களி லும், நவராத்திரி சமயத்திலும் சிறப்பாக வழிபாடுகளைச் செய்வதுண்டு. ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு தங்களின் அரண் மனையான ராமலிங்க விலாஸ் வளாகத்தில் தனிக்கோவில் கட்டி வழிபட்டனர்.
1892-ஆம் ஆண்டு நடைபெற்ற நவராத்திரி உற்சவத்தைப் பற்றி கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் சார்பில், வெளியிடப்பட்ட புத்தகத்தில் பமீலா பிரைஸ் என்பவர் சிறப்பாக எழுதி யுள்ளார்.
1895-ஆம் ஆண்டுமுதல் நவராத்திரி உற்சவத்தை கலை விழாவாக மன்னர் துரை ராஜா முத்துராமலிங்க சேதுபதி என்பவர் மாற்றினார். சேதுபதி மன்னர் வம்சத்தினர் தமிழ்மொழிமீது அதிக பற்றுள்ளவராகவும், அதில் புலமை பெற்றவர்களாகவும் திகழ்ந்தனர். தங்களது இஷ்ட தேவதையான ராஜராஜேஸ்வரி அம்மன்மீது பக்தி தமிழும் பாடல்களையும், பதிகங்களையும் பாடியுள்ளனர். குறிப்பாக இரண்டாவது முத்துராமலிங்க சேதுபதி மன்னர் (1841-1873) ஏழு தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். பாண்டித்துறை தேவர் (1867-1911) பதிகம் பாடியுள்ளார். சமீபகாலத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி மன்னர் (1888-1903) ராஜராஜேஸ்வரி அம்மன்மீது அதிக பக்தியுள்ளவராகத் திகழ்ந்தார். இராமநாதபுர சமஸ்தான வழக்கப்படி நவராத்திரி சமயத்தில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்வதுமட்டுமின்றி ஆடு, மாடு, கோழி என பலவகையான உயிரினங்களை பலிகொடுக்கும் சடங்கு காலகாலமாக இருந்து வந்தது. விலங்கினங்கள், பறவைகள் போன்ற உயிரினங்கள்மீது தனி அக்கறை கொண்ட இவர் அவற்றை வளர்க்கவும், பாதுகாக்கவும் தனி குடியை அரண்மனை வளாகத்தில் ஏற்படுத்தினார்.
திருவள்ளுவர், இராமலிங்க வள்ளலார் போதித்த "கொல்லாமை' கொள்கை யில் அதிகம் ஈடுபாடு கொண்டதால் அம்மனுக்கு பலிகொடுக்கும் வழக்கத்தை உளமார விரும்பவில்லை. இருப்பினும் வழி வழியாக வரும் குலவழக்கத்தை நிறுத்தவும் முடியாமல் பல சமயங்களில் கவலையுற்று இருந்தார்.
திருமூலர் முதல் தந்திரத்தில் பாடிய,
"பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே''
என்ற திருமந்திரப் பாடலை சிறிய வயதிலேயே மனதில் உள்வாங்கிக் கொண்டதால், "கொல்லாமை' எனும் அகிம்சை எனும் ஜீவகாருண்ய உணர்வு இயற்கையாகவோ அவரிடம் குடி கொண்டிருந்தது.
அந்தக் காலக்கட்டத்தில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 33-ஆவது பீடாதிபதியாக அருளாட்சி புரிந்தவர் ஸ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதீ ஸ்வாமிகள் (1879-1912). மகாதபஸ்வீயான இம்மகானை ஸ்ரீ ஆதிசங்கரரின் மறு அவதாரம் என போற்றுவார்கள். சிருங்கேரி மடத்திற்கான க்ஷேத்ரம் (புனித ஸ்தல இராமேஸ்வரம் என்பதால், சேது சமுத்திர (தனுஷ்கோடி) தீர்த்த யாத்திரைக்காகவும், ஸ்ரீராமநாதரை பூஜை செய்வதற்காகவும் இராமேஸ்வரத்திற்கு விஜய யாத்திரையை மேற்கொள்ள தீர்மானித்து, 1891-ல் மைசூரிலிருந்து விஜய யாத்திரையைத் தொடங்கி கோபி செட்டிபாளையம், பழனி, மதுரை வழியாக வருகைதந்தார்.
பொதுவாக சேதுபதிள் மன்னர் குடும்பத்தினர்கள் சிருங்கேரி ஆச்சார்ய ஸ்வாமிகளை கலந்து ஆலோசித்து அவர்களின் ஆசீர்வாதத்துடன்தான் தங்களின் சமஸ்தானத்தில் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.
மதுரை மாநகரில் முகாமிட்டு இருந்த ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளை தரிசனம் செய்ய மன்னர் பாஸ்கர சேதுபதி, இராமநாதபுரம் அரண்மனையில் தங்கி சாதுர் மாஸ்ய விரதமும், தொடர்ந்து நவராத்திரி நடத்தவேண்டும் என முறைப் படி அழைப்புவிடுத்தார். மன்னரின் பெருந்தன்மையைப் பாராட்டி, அவரின் அழைப்பை ஏற்று இராமேஸ்வர தீர்த்த யாத்திரைக்கு பிறகு அரண்மனையில் தங்கி (சுமார் மூன்று மாதங்கள்) தினமும் ஸ்ரீ சாரதா சந்திரமௌலீஸ்வரர் பூஜையை செய்துவந்தார்.
இராமலிங்க விலாஸ் அரண்மனை வளாகத்தில் இருந்த ஸ்ரீராஜ இராஜேஸ்வரி அம்மன் சந்நிதி தரிசனத்திற்கு சென்ற சமயத் தில் கோவில் அர்ச்சகர்மூலம் நவராத்திரி உற்சவ சமயத்தில் இங்கு பல விலங்கினங்கள் பலியிடும் வழக்கத்தை தற்செயலாக அறிந்தார். குரூரமான இந்த வழக்கத்தை நிறுத்தவேண்டுமென ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் மனதளவில் நினைத்து இதற்கு வழிகாட்டுமாறு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனை வேண்டிகொண்டார். இதை நேரடியாக மன்னரிடம் உடனே சொல்ல அபிப்பிராயம் படவில்லை.
ஒருநாள் மதிய வேளையில் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளை தரிசனம் செய்ய வந்த மன்னர் தங்கள் குலவழக்கத்தைப் பற்றி பேசும்போது ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பலி பூஜை நடத்துவதைப் பற்றியும் தெரிவித்தார். உயிர்பலி கொடுப்பதில் தனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை என்பதையும் இதை தவிர்க்க வழி சொல்லுமாறு ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளிடம் வேண்டினார்.
இந்த சடங்கு பற்றி தாம் முதலிலேயே யோசித்திருந்த ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் அதை நிறுத்த இதுவே ஈஸ்வர சங்கல்பம் என நினைத்தார். காலம்காலமாக வரும் வழக்கத்தை திடீரென நிறுத்தமுடியாது. அதற்கு தகுந்த வண்ணம் இறைவனின் அருளாசி வேண்டும் என்பதால் மன்னரிடம் நாளை இதற்கு வழிசொல்லுவதாக கூறி அனுப்பிவைத்தார்.
அன்று இரவு சந்திர மௌலீஸ்வரர் சிவபூஜையில், இந்த சிக்கலான விஷயத்திற்கு தகுந்த வழியை காட்டுமாறு வேண்டிக்கொண்டார். அன்றைய இரவு தூக்கத்தில் தலைவிரித்த கோலத்தில், கந்தலான ஆடையுடன் கோர மாகக் காட்சியளித்த ஓர் பெண் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் முன்பு வந்து "நான் போகிறேன்' என்று சொல்லிவிட்டு சென்றாள். சற்று நேரத்தில் மங்களகரமான ஓர் சுமங்கலி பெண் தோன்றி "நான் வந்துவிட்டேன்' என கூறி ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள்முன்பு அமர்ந்துகொண்டதாக கனவு கண்டார். அதிகாலை வேளையில் விழித்துகொண்ட ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தார்.
மறுநாள் தன்னை தரிசனம் செய்யவந்த சேதுபதி மன்னரிடம் தான் கண்ட கனவில் சூசகமாக தனக்கு அம்மன் உத்தரவு பிறப் பித்தை விளக்கினார். பூஜைமுறையை மாற்ற அம்மன் அருள் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார். இதுவே அம்மனின் கட்டளை என நினைத்து பலி பூஜைகளை நிறுத்த ஆலோசனைகளைக் கூறிவிட்டு வேத பண்டிதர்களைக்கொண்டு சாத்வீக பூஜையை செய்யுமாறு கூறி, ஸ்ரீ சக்கர யந்திரத்தை நல்லநாளில் பிரதிஷ்டை செய்து, அன்று முதல் வைதீக முறைப்படி பூஜை முறைகளைச் செய்ய ஆலோசனை கூறினார். இந்த மாற்றத்தால் மன்னர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்தவித தொந்தரவும் இனி வராது என கூறியதால் மன்னர் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் பராமரிக்கவும், நித்திய பூஜைகள் சரிவர செய்யவும், உற்சவங் கள் சிறப்பாக நடக்கவும் பன்னிரண்டாயிரம் ரூபாய் வருமானமுள்ள ஒரு கிராமத் தையே கோவிலுக்கு தானமாக கொடுத்தார். ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் ஏற்படுத்திய புதிய ஆவரணம்படி சுமார் 130 ஆண்டுகளாக இன்றுவரை நவராத்திரி பூஜை, உற்சவத்தை மன்னர் குடும்பத்தினர் இன்றுவரை பக்தியுடன் நடத்திவருகிறார் கள்.
இதுபற்றி இன்றைய இளைய பட்ட மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்கள் கூறியதாவது, "எங்கள் மூதாதையரான பாஸ்கர சேதுபதி மன்னர் சிகாகோ நகரில் 11-9-1893-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வமத பேரவை தனக்கு கிடைத்த அழைப்பில் தன் சார்பாக சுவாமி விவேகானந்தரை அனுப்பி அதில் வெற்றிகண்டவர். தமிழ் மொழியில் சிறந்தவரான இவர் திருவாலவாய்ப் பதிகம், காமாட்சியம்மை பதிகம், ராம நாதர் பதிகம் என்கிற மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவருக்கு பின்புவந்த சண்முக இராஜேஸ்வர நாகநாத சேதுபதி மன்னர் காலத்தில்தான் ஜமீன் ஒழிப்பு சட்டம் வந்தது. என்னுடைய தந்தையார் ராஜா என். குமரன் சேதுபதி சமஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் திருப் பணிகளையும், கும்பாபிஷேகப் பெருவிழாக்களை சிறப்பாக நடத்திய ஆன்மிக செம்மல், தன் வாழ்நாள் முழுவதையும் பரோபகாரத்துக்காவே தியாகம் செய்தவர். 2022 அவரது மறைவுக்குபின்பு நான் பொறுப் பேற்றேன். எங்கள் மூதாதையர் காலத்திலிருந்து வழிவழியாக நாங்கள் சிருங்கேரி ஸ்வாமி களை குருவாக ஏற்றுக்கொண்டி ருக்கிறோம். விரைவில் சிருங் கேரிக்கு சென்று ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அருளாசியைப் பெற உள்ளேன்'' என கூறினார்.
வீரமும், தியாகமும், தர்மமும் நிறைந்த பூமியாக இன்றும் இராமநாதபுரம் விளங்கி வருகிறது.