பூமி தோன்றி பலகோடி ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பூமிப்பந்தில் வாழும் உயிரினங் களும் 84 லட்சம் வகை என்பதும் நாமறிந்ததே. இறைவனின் படைப்பில், லட்சோப லட்சம் உயிரினங்களில் மிக மகத்துவான ஆறறிவுப் படைப்பு மனித இனம் மட்டுமே! இந்த மானிடப் பிறப்பின் மகத்துவத்தை நாம் உணர்ந்துகொண்டோமா? நமது மூதாதையர்கள் மனிதப் பிறப்பினை "ஈரேழு பிறவி' என்றே குறிப்பிடுகின்றனர்.
அதாவது பதினான்கு பிறவி என்றொரு கணக்கினைச் சொல்கிறார்கள். சித்தர் பெருமக்கள் இந்த விதிக்குள் அடங்க மாட்டார்கள். அவர்கள் காலம் கடந்தவர்கள். ஏன்- யுகம் கடந்தவர்கள்; எல்லையில்லாதவர்கள். திருவள்ளுவர் தனது திருக்குறளில் "பிறவி ஏழு' என்பதை அறிதியிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.
"எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.'
பழியில்லாத நற்குணங்களையுடைய மக்களைப் பெற்றால், அம் மக்களைப் பெற்றவருக்கு ஏழு பிறவியிலும் துன்பங்கள் அணுகாது.
நாம் பல பிறவிகள் எடுத்து, நமது கர்மவிளைகளில் சிக்கி சீரழிந்த பிறவியின் பயனை நிறைவுசெய்ய கடவுள் நமக்கு இறுதியாக மானிடப் பிறவியைப் பரிசாக வழங்குகிறார். முதல் பிறவியிலேயே நமது (கர்மங்கள்) செயல்பாடுகள் சரியாகத் தூய்மையாக இருந்தால் நமக்கு அடுத்த பிறவி கிடையாது. அதில் குறைபாடுகள் இருந்தால், தொடர்ந்து அடுத்தடுத்து நாம் பிறவிகளை சந்திக்க நேரிடும் என்பது நிதர்சனமான உண்மை.
நமது பிறவியின் குறிக்கோளை உணராத வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. இப்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் மனித வாழ்க்கையின் உறவுகளை சீர்குலைப்பதோடு, ஒழுக்கம் எனும் மேலான விஷயத்தை மழுங்கச் செய்துவிடுகிறது. கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை வர
பூமி தோன்றி பலகோடி ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பூமிப்பந்தில் வாழும் உயிரினங் களும் 84 லட்சம் வகை என்பதும் நாமறிந்ததே. இறைவனின் படைப்பில், லட்சோப லட்சம் உயிரினங்களில் மிக மகத்துவான ஆறறிவுப் படைப்பு மனித இனம் மட்டுமே! இந்த மானிடப் பிறப்பின் மகத்துவத்தை நாம் உணர்ந்துகொண்டோமா? நமது மூதாதையர்கள் மனிதப் பிறப்பினை "ஈரேழு பிறவி' என்றே குறிப்பிடுகின்றனர்.
அதாவது பதினான்கு பிறவி என்றொரு கணக்கினைச் சொல்கிறார்கள். சித்தர் பெருமக்கள் இந்த விதிக்குள் அடங்க மாட்டார்கள். அவர்கள் காலம் கடந்தவர்கள். ஏன்- யுகம் கடந்தவர்கள்; எல்லையில்லாதவர்கள். திருவள்ளுவர் தனது திருக்குறளில் "பிறவி ஏழு' என்பதை அறிதியிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.
"எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.'
பழியில்லாத நற்குணங்களையுடைய மக்களைப் பெற்றால், அம் மக்களைப் பெற்றவருக்கு ஏழு பிறவியிலும் துன்பங்கள் அணுகாது.
நாம் பல பிறவிகள் எடுத்து, நமது கர்மவிளைகளில் சிக்கி சீரழிந்த பிறவியின் பயனை நிறைவுசெய்ய கடவுள் நமக்கு இறுதியாக மானிடப் பிறவியைப் பரிசாக வழங்குகிறார். முதல் பிறவியிலேயே நமது (கர்மங்கள்) செயல்பாடுகள் சரியாகத் தூய்மையாக இருந்தால் நமக்கு அடுத்த பிறவி கிடையாது. அதில் குறைபாடுகள் இருந்தால், தொடர்ந்து அடுத்தடுத்து நாம் பிறவிகளை சந்திக்க நேரிடும் என்பது நிதர்சனமான உண்மை.
நமது பிறவியின் குறிக்கோளை உணராத வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. இப்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் மனித வாழ்க்கையின் உறவுகளை சீர்குலைப்பதோடு, ஒழுக்கம் எனும் மேலான விஷயத்தை மழுங்கச் செய்துவிடுகிறது. கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை வரிசையில் இப்போது வாடகைத் தாய்ப்பண்ணை புதிதாகத் தோன்றியிருக்கிறது. வாடகைத் தாய் இருப்பது தவறில்லை. ஆனால் அது வாடகைத் தாய்ப் பண்ணையாக மாறும்போது மிக மோசமான எதிர்விளைவுகளை உண்டாக்கும். அதைப்போன்றே ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழும் முறை என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
நாம் இந்தப் பிரச்சினையை இப்போது எழுதவேண்டிய அவசியமென்ன? இருக்கிறது! அதுதான் நமது அடிப்படைக் கல்வி, தாய்மொழிக் கல்வி. வரலாறு என்பது ஆதியில் உருவானது. அது இயற்கை; சக்தியம். சத்தியம் என்றால் உண்மை என்று பொருள். இறைபக்தி, கல்வி, ஒழுக்கம் ஆகியவையே இயற்கை. அப்போது எது பொய்? அது மிக மோசமான மூடநம்பிக்கை எனும் பொய்.
கடவுள் பக்தி என்பது வேறு. அதை மறுக்கமுடியாது! மூடநம்பிக்கை என்பது கீழ்த்தரமான செயலாகும். அதனால் ஒரு பயனுமில்லை.
எனவே நாம் கடவுள் பக்திக்கும், மூடநம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும். தோராயமாக 2,000 ஆண்டுகளுக்கு முந்தையவர் மருத்துவ ஞானி திருவள்ளுவர். அவர் தாம் இயற்றிய திருக்குறளில் 133 அதிகாரங்களை அறம், பொருள், இன்பம் என்று வகைப்படுத்தி 1,330 பாடல்களை தொகுத்துச் சென்றுள்ளார். அத்தகைய திருக்குறளில் தனது முதல் அதிகாரத்தை "கடவுள் வாழ்த்து' என்று துவங்குகிறார். எனவே இங்கிருந்துதான் வாழ்க்கையின் முதல்படியே துவங்குகிறது. இங்கு மூடநம்பிக்கை புகுத்தப்படும் பொழுது தான் அது ஒழுக்கக் கேட்டிற்கு வழி வகுக்கிறது.
திருக்குறள் காற்று போன்றது; தண்ணீரைப் போன்றது; நம்மை நல்வழிப்படுத்துவதில் நெருப்பைப் போன்றது; நாம் நெறிமுறைகளோடு வாழ நமது சுவாசத்தைப் போன்றது. நமது வாழ்வியலுக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் விவரமாக அடங்கியுள்ள மனித குலத்தின் பொக்கிஷமாகும். ஏனென்றால் திருக்குறள் எல்லையற்று ஆகாயம்போல் பரந்து விரிந்து இந்த உலகையே வழிநடத்தும் ஒரு மிகச்சிறந்த, மிக உன்னதமான வாழ்வியல் வழிகாட்டி என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.
திருக்குறள் பஞ்சபூதங்களோடு தொடர்புடையது. திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்டிருப்பதை பார்க்கலாம்.
"வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.'
வஞ்சமனம் (போலியான) உடையவனின் பொய்யொழுக்கத்தை அவன் உடம்பாய்க் கலந்துள்ள ஐம்பூதங்களும் கண்டு தம்முள்ளே எள்ளிச் சிரிக்கும்.
உலகில் அதிக அளவில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள நூல் திருக்குறளாகும். மத சம்பந்தமில்லா நூல்களில் மொழிபெயர்ப்பில் திருக்குறள் முதலிடம் வகிப்பது இதன் தனிச்சிறப்பாகும். திருக்குறளை நமது பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கப்பட்ட வேண்டும். ஏனென்றால் அதில் கூறப்படாத விஷயங்களே இல்லை.
ஏழு பிறவிகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதைப்பற்றி திருக்குறள்-
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து.'
என்கிறது. ஒரு பிறப்பில் தான்கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழுபிறப்பிலும் தொடர்ந்து பாதுகாவலாக நின்று உதவும் தன்மையுடையதாகும்.
சுய ஒழுக்கமும், புலன்களின் அடக்கமும், நன்னடத்தையும், தன்னடக்கமும் மிகச் சிறந்த ஆன்மிகமாகும். ஏனென்றால் இந்த உடம்பும் அதிலுள்ள உயிரும் நிலையற்றது. இவ்வுடம்பும் உயிரும் நீடித்து செயல்பட உதவும் ஒரு வாழ்வியல் வழிகாட்டி திருக்குறள்.
நாம் சாமிக்காகவும், சாதிக்காகவும், மதத்திற்காகவும், தனிமனித விருப்பத்திற்கும், பேராசைக்காரர்களின் விருப்பத்திற்கும் அடிமையாகிவிடாமல், அறிவு, பகுத்தறிவு, பேரறிவு என்று வளர்ந்து, உயர்ந்து, இறை சிந்தனையோடு அறம்செய்து, பல்லுயிர் போற்றி பரம்பொருளின் கருணைக்கு சொந்தக்காரர்களாக மாறவேண்டும். ஏனென் றால் உயிரும் உடம்பும் நிலையானதல்ல. எனவே நாம் நம் வாழ்நாளை வீணாகக் கழிக்கக்கூடாது.
ஏழு பிறப்பையும், பஞ்சபூதங்களைப் பற்றியும் கூறிய திருவள்ளுவர் ஏழு பிறப்புகளுக்குக் காரணமான பொறிகளின் செயல்பாட்டினையும், அதனால் உண்டாகும் விளைவுகளையும் கூறியுள்ளார். அதாவது மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய ஐம்பொறிகளும் ஞானேந்திரியங்கள் (நங்ய்ள்ர்ழ்ஹ் ஞழ்ஞ்ஹய்ள்) என்றழைக்கப்படுகின்றன. "உணர்வு உறுப்புகள்' என்று பொருள். இந்த உணர்வு உறுப்புகளின் செயல்பாடு எப்படி இருக்கவேண்டும் என்று திருக்குறள் கூறிவதைப் பார்க்கலாம்.
"பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.'
ஐம்பொறிகளின் வழியாகப் பிறக்கும் ஐவகை ஆசைகளையும் விட்டு, இறைவனது பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் நெடுநாள் (நீண்ட வாழ்நாள்) பெற்று வாழ்வர்.
நீண்டநாள் வாழக்கூடிய உடம்பு மானிட உடம்பு என்றாலும், அது நிலையில்லாதது. இத்தகைய உடலின் நிலையைத் திருமந்திரம்-
"பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலம் துரிசுவர மேன்மேல்
அன்புடையார்கள் அழுது அகன்றார்களே'
என்று கூறுகிறது. உடலாகிய மேற் போர்வை, அதனுள் உயிராகி பொக்கிஷம்- இவை ஒன்பதுவழிகளை உள்ளடக்கியது.
அதாவது கண்கள் இரண்டு, காதுகள் (செவி) இரண்டு, மூக்குத்துவாரங்கள் இரண்டு, வாய் ஒன்று, சிறுநீர்ப்பாதை, மலப்பாதை என ஒன்பது வாசல்களும் ஒன்று சேர்ந்தது. முடிவுகாலம் நெருங்க, உயிரின்மேல் அமைந்த உடலாகிய பந்தல் பாழடைந்துவிட்டது. உயிர்ச்செல்வம் வறண்டுவிட்டது. ஒன்பது வாசல்கதவுகளும் ஒரே நேரத்தில் அடைபட்டுவிட்டன. உயிர்க்கு முடிவு காலம் விரைந்து வந்துவிட்டது. அன்புடைய சுற்றத்தார்கள் எல்லாம் அழுது புலம்பினார்கள். பின்பு அவர்களும் போய்விட்டார்கள். இதுதான் வாழ்க்கை.
இப்படி நிலையில்லாத வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக, ஒழுக்கமாக நாம் பயணம் செய்தோ மென்றால் பிறவித்து யர் இருக்காது.
எனவே மீண்டும் பிறவாத நிலையை அடைய வேண்டுமா னால் திருக்குறள் கூறும் வழியைப் பார்ப்போம்.
"கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார்
மற்று ஈண்டு வாரா நெறி.'
இப் பிறப்பில் மெய்ப்பொருள் நூல்களைக் கற்று மெய்ப்பொருளை (பரம்பொருள்) உணர்ந்தவர் மீண்டும் இங்கு பிறவாத வழியை (வீட்டுலகை)ப் பெறுவர்.
நாம் பெற்ற பிறவிப் பயனடைவதற்கான சிறந்த வழியை திருமந்திரம்மூலம் தெரிந்துதெளிவோம்.
"ஆம்விதி நாடி அறம்செய்யின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.'
பிறவிப் பயன், பிறப்பின் நோக்கம் பிறருக்கு உதவுவது. எனவே அந்த நல்வழியை விரும்பி ஏற்று நல்லது செய்யுங்கள். (அறம்). பேரின்ப வீட்டை அடையும் வழியறிய இறைவனை, இயற்கையுள் இருக்கும் சிவத்தைப் போற்றுங்கள். இதைவிடச் சிறப்பாக முறையாக மேற்கொண்டொழுக வேண்டிய வழிமுறைகள் கூறவேண்டுமென்று சொன்னால், மனிதராய்ப் பிறப்பெடுக்கும் பெருமை பெற்றவர்க்கு மேலும் சிறப்பாகச் சொல்ல வேறென்ன வழிமுறைகள் தேவை? எனவே பிறப்பெடுத்ததன் பயனை உணர்ந்து, ஒழுக்கத்தில் சிறந்து, அறத்தில் வளர்ந்து, அரனைத் தொழுது, சிவத்தின் அன்பில் திளைத்து மகிழ்ந்திருப்போம்.