பூமி நடுங்குகிறது. பூமியின் நரம்பு மண்டலத்தில் பிரச்சினை. ஆம். அதாவது பூமிப்பந்து நோய்வாய்ப்பட்டிருக்கிறது. பூமிக்கு ஏது நரம்பு மண்டலம்? நீர்த்தாரைகளும், நீர் ஆதாரங்களும், நீர் நிலைகளும், நீர்வீழ்ச்சிகளும், ஆறுகளும், ஏரிகளும், குளங்களுமே பூமிப் பந்தின் நரம்பு மண்டலமாகும். இத்தகைய வாழ்வியல் ஆதாரத்தை சில மானுடப் பேய்கள் பாழ்படுத்தி, சீரழித்துக்கொண்டு இருக்கின்றனர்: ஆறுகளிலும், ஏரிகளிலும், குளங்களிலும் கழிவுநீரைக் கலக்கவும், கழிவுகளை கொட்டக்கூடிய வேலைகளையும் செய்து வருகின்றனர். இத்தகைய கேடான செயலைச் செய்யும் ஆறறிவு அறிவுஜீவிக் கூட்டம் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் சிவப் பரம்பொருள் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கின்றது. அது நினைத்தால் நொடியில் அத்தனையும் தரைமட்டம்.

டாஸ்மாக்கில் சாராயம் விற்பவனும் கலப்படம் செய்கிறான். இதுகூட பரவாயில்லை. ஏனென்றால் அவன் வேலை செய்யும் இடம், பார்க்கும் தொழில் அப்படிப்பட்டது. ஆனால் கோவில் வாசலில் சுவாமிக்கு அர்ச்சனைக்கு வைத்திருக்கும் பூக்களை, அதாவது நம்பி வாங்குபவனிடம் பழைய பூக்கள், அழுகிய பூக்களை வியாபாரம் செய்வதென்பது எவ்வளவு கேவலமானது. இன்றைய சூழ்நிலை பணத்திற்காக எத்தகைய இழிசெயலையும் மனித மனம் செய்யத் துணிந்துவிட்டது. ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாகவே ஆகிறாய்! "நினைக்கும் கேடு தனக்கு'' இதுவே பிரபஞ்ச பேராற்றலின் இயற்கை விதியாகும். பூஜை செய்ய நம்மிடம் எதுவும் இல்லையே என்று கவலைப்படவேண்டியதில்லை. பூஜையைப் பற்றி திருமந்திரம் கூறுவதைப் பார்க்கலாம்.

"யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை

யாவர்க்கு மாம்பசு வுக்குஒரு வாயுறை

Advertisment

யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே'

இறைவனின் பூஜைக்கு பூக்களே வேண்டும் என்பதில்லை. எங்கும், எவர்க்கும் எளிதாகக் கிடைக்கின்ற பச்சிலை போதும். அதைப்போன்று பசுவுக்கு ஒரு கைப்பிடி புல்லைப் பறித்து உணவாக தருவது என்பது எல்லார்க்கும் எளிதான ஒன்றுதானே. தாம் உணவு உண்ணும்போது, ஒருபிடி, சோற்றை, இல்லையென்று வருபவர்களுக்கு யாரும் தரலாமே. எல்லாரிடமும் அன்பாக இருப்பது, இனியவை கூறுவதுகூட எல்லாரும் செய்யக்கூடியதுதானே. எனவே இதனைச் செய்யுங்கள். இவையும் மேலான தருமங்கள்தான். தர்மம் செய்வது என்றால் அதற்கென்று பெரிதாகப் பொருள் வசதி, ஆள் துணை இருந்தால்தான் இயலும் என்று இருக்காதீர்கள் என்பதை தீர்க்கமாக திருமந்திரம் கூறுகிறது.

Advertisment

அறம் செய்வதைப்பற்றி தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியருளியதைப் பார்ப்போம்.

"ஒன்றும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாம் செயல்'

அவரவர்க்கு இயன்றவாறு அறச்செயலைச் செய்யவேண்டும். அது நடைபெறக்கூடிய வழிகளிலெல்லாம் இடைவிடாது தொடர்ந்து செய்யவேண்டும்.

பூஜை செய்ய நம்மிடம் எதுவுமில்லை என்ற எண்ணமே வேண்டாம். பிறர் நலம் வாழ பிரார்த்தனை செய்வதுகூட ஒரு தன்னலமற்ற சிறந்த அறமாகும். அதற்கு நல்ல சிந்தனையுள்ள "மனமே' போதுமானதாகும்.

நிலம் நடுங்குகிறது?... அசாமில் நிலநடுக்கம். அந்தமானில் நிலநடுக்கம். சமீபமாக இந்தோனேசியாவில் அதிகப்படியான நிலநடுக்கம். இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இயற்கையுள் இருக்கும் இறைசக்தி இதனை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அது தனது ஆட்டத்தை ஆரம்பித்தால் இங்கே இந்தப் பூமிப்பந்தில் இயற்கையைத் தவிர வேறு எதுவும் நிற்காது. நிலைக்காது. சகலமும் அதாவது நவீன ஆறாவது கண்டுபிடித்த, உருவாக்கிய அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். பக்தி வேறு; மூடநம்பிக்கை வேறு. பூமித்தாயானவள் தன்னை சீர்படுத்தி நேராக்கிக் கொள்வாள்.

அத்தகைய அற்புதமான நிகழ்வு இந்த பிரபஞ்ச பேராற்றலின் தலைவன் தில்லை அம்பலத்தானின் மேற்பார்வையில் அரங்கேறும். மூடநம்பிக்கை இருப்பவனிடம் பக்தி இருக்காது. மனிதம் செத்துவிட்டது. ம(னி)தம்... மனிதத்திற்கு மதம் எனும் மூடநம்பிக்கை பிடித்துவிட்டது. அதன் புனிதம் கெட்டுவிட்டது. ஒருவர் தனது நிறுவன ஊழியருக்கு மிகப்பெருந்தொகையை, கோடிக்கணக்கில் விலைமதிப்புள்ள வீட்டை அளித்துள்ளார். அது தவறில்லை. அவருக்கு ஒரு 100 கோடி கொடுத்துவிட்டு மீதத்தை 10,000 ஏழை ஊழியர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருந்தால் அது மிகப்பெரிய அறமாகும். ஒருவர் கேட்கின்றார். அது அவர் பணம்... அதை எப்படி வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அது அவரோட விருப்பம் என்கிறார். கரெக்ட்தான்... அதேசமயம் இறைவனின் விருப்பம் என்று ஒன்று இருக்கிறது. சமூகநீதி, சமத்துவம், சமாதானம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, ஒன்றே குலம்... ஒருவனே தேவன் எனும் கோட்பாடு... ஏகன் அநேகன்- அவனே சிவன்... அதுவே சிவம்... தென்னாட்டுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

உடம்பையும், உயிரையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கமுடியாது. உடம்பு இல்லையேல்... அதனுள் உயிர் இல்லை... மனம் இல்லை. உயிர் இல்லையேல், உயிரைச் சுமக்கும் உடம்பு அழிந்து இல்லையென்றாகி விடும். இறைவனின் அழைப்பு வரும்வரை உயிர்நீடிக்க உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் முக்கியமாகும். இது இரண்டும் சீராக இயங்க அற ஆரோக்கியம் அவசியமாகும்.

பண்டம்பெய். கூரை பழகி விழுந்தக்கால் உண்டனப் பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநட வாதே.

நல்வினைகள், தீவினைகள் நுகர்வதற்கென்றே அதாவது- அனுபவிப்பதற்கென்றே கொடுக்கப்பட்டது இவ்வுடம்பு. அப்படிப் பெற்ற இவ் உடலானது பழதாகி வயது முதிர்ந்து தளர்ந்து விழுந்துவிட்டால் (இவ்வுடல் ஒருநாள் உயிர் பிரிந்து இறந்து பிணமாக கீழே விழுந்துவிட்டால்). உயிருடன் இருக்கும்போது அந்த உடலால் பயன் அடைந்த மனைவி, மக்கள் அந்த உடல் போன வழியே போகமாட்டார்கள். அதாவது- அந்த உடலைத் தொடர்ந்து- தாங்களும் இறந்துவிட மாட்டார்கள். ஆனால் அந்த உயிர் வாழும் போது செய்த நல்ல அறம், மேற்கொண்ட ஒழுக்கம், அறச் செயல்கள் அந்த உயிர்க்கு துணையாக, நிழலாக, நெருங்கிச் செல்லும். மற்றவை எதுவும் கூடவராது. கூடவேவருவது செய்த பாவங்களும், புண்ணியங்களுமே ஆகும்.

நம் மண்ணில் ஒழுக்கத்தை குழிதோண்டிப் புதைக்கும், சீரழிக்கும் வேலையில் இங்கே ஒரு களவாணிக் கூட்டம் முனைப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

உடம்பைப் பற்றி திருமந்திரம் உரைத்துள்ளதைப் பார்த்தோம். நமது உடம்பெனும் வீட்டில்தான் இறைவன் இருக்கி றான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். சுய ஒழுக்கத்துடனும், புலன்களின் ஒழுக்கத்துடனும் அதனை எவ்வாறு பேணிக்காக்கவேண்டும் என்பதும் மிகவும் முக்கியமாகும். இத்தகைய சூழ்நிலையில் சூடான் எனும் நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் தகராறில் இராணுவம் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இராணுவமும், துணை இராணுவமும் இரண்டாகப் பிரிந்து பொதுச் சொத்தையும் அழித்து, தங்களையும் மாறி மாறி சுட்டுக்கொண்டு மக்களையும் சுட்டுக் கொல்கின்றார்கள். இந்த நவீன உலகில் இருப்பவர்களுக்கு உயிரின் மதிப்பு புரிகிறதா என்று தெரியவில்லை. பதவியில் இருப்ப வனுக்குச் "மக்களுக்கு பணிசெய்து கிடப்பது' என்பது புரியவேண்டும். ஏனென்றால் உயிர் இறைவனுக்கு சொந்தமானது.

ss

திருமந்திரத்தில் திருமூலர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில் இழைகின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பின்றி எம்பெருமான் அடி ஏத்தார் அழைக்கின்ற போதுஅறி யார்அவர் தாமே.

மரக்கிளைகளில் அழகிய இளம் தளிர்களும், குளிர்ச்சியான மலர்களும், தழைத்து வளர்ந்து மலர்கின்றன. ஆனால் இவையெல்லாம் ஒருநாள் காய்ந்து உலர்ந்துபோக, மரம் மொட்டையாகிப் பட்டுப்போகிறது. இதைக்கண்டும், உயிர் உள்ளபோதே, உயர்ந்த தலைவனான சிவப் பரம்பொருளின் திருவடிகளை தவறாது நினைந்து பணியாதவர்கள், எமனின் அழைப்பு வந்த அந்த இறுதிநாளில் மட்டும் ஈசனை நினைக்க எண்ணுவார்களா என்ன? பிரபஞ்ச பேராற்றலான ஈசனை எப்போதும் நினைக்க வேண்டும் என்ற மாபெரும் உண்மையை அப்போதும் இவர்கள் அறியமாட்டார்கள். இப்படிப்பட்ட அறியாமையோடு இருக்கக் கூடாது என்பதே இதன் உட்பொருளாகும், இதனைப் பற்றி மருத்துவ ஞானியின் திருக்குறள் கூறுவதைப் பார்க்கலாம்.

கோள்இல் பொறியிற் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

எளிய குணங்களையுடைய கருணைக்கு சொந்தக்காரனான இறைவனின் திருவடி களை வணங்காத உடல்கள் புலன்களின் உணர்வற்ற பொறிகள்போல பயனற்றவை யாகும்.

மனிதன் ஆரோக்கியமாக, சமாதானமாக, மகிழ்ச்சியாக வாழ அவன் பற்றை ஒழிக்க கற்றுக்கொள்ளவேண்டும். பற்றது இருக்கும்போது பிறவித்துயரும் இல்லை, மறுபிறப்பும் இல்லை.

இதைப் பற்றியும். திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்.

ஒருவனுக்கு இருவகைப் பற்றும். அதாவது நான், எனது எனும் பற்றும் நீங்கியபொழுதே, அந்த நிலை அவனுக்கு பிறப்பை ஒழிக்கும் கருவியாகும். அவை நீங்காதபொழுது, அவற்றால் பிறவித்துன்பம் மாறிமாறி வந்து நிலையாமையே காணப்படும்.

இதற்கு என்ன செய்யவேண்டும்? எப்படி இருக்கவேண்டும். ஒரு அற்புதமான நிகழ்வினைப் பார்க்கலாம்.

பாலம் கல்யாண சுந்தரம்... எத்தனை பேருக்கு இவரைத் தெரியும். இவர் மிகப்பெரிய சுயநலவாதி... ஆம், பொதுநலத்தின்மீது அதி தீவிர பற்றுக்கொண்ட சாத்வீக தீவிரவாதி! பாலம் கல்யாணசுந்தரம் அய்யாவின் தந்தையைப் பற்றி குறிப்பிடவேண்டும். தந்தை பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது, கோவில் பணியாளர் ஒருவர், கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்துவந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட்டனர். அதனை மாபெரும் குற்றமாக சுருதினார் பால் வண்ணநாதன். அதற்கு பிராயச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சங்கள். இப்படி தந்தைவழியில் வளர்ந்தவர் பாலம் கல்யாணசுந்தரம். MA(Litt)., M.S(His)., M.A (G.T)., B.Lip.Sc., DCT, DRT, DMTI., FNCW, DS என பல பட்டங்களைப் பெற்றவர். இவர் பயின்ற அனைத்து பல்கலைக்கழங்களிலும் முதலிடம் பெற்றார்.

35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற ஊதியம் அனைத்தையும் ஏழைமக்களின் நலனுக்காகச் செலவிட்டு, தனது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர்.

இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் வேலைபார்த்து பெற்ற ஊதியம் ரூ.30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமை யாக பொதுநலனுக்கு ஏழை மக்களுக்கு முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தவர்தான் "பாலம் கல்யாண சுந்தரம்' எனும் பொதுநலவாதி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இன்னொருவர் பாலம் கல்யாண சுந்தரம் அய்யா.

உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால், அமெரிக்காவில் "ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்' (ஙஹய் ர்ச் ஙண்ப்ப்ண்ய்ண்ன்ம்) என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

தன் பங்கிற்கு அவர் குடும்பத்திலிருந்து கிடைத்த ரூ. 50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் ஏழை மக்களுக்கு அளித்து, "தனக்கு மிஞ்சிதான் தர்மம்' என்பதை மாற்றிக்காட்டினார் பாலம் கல்யானை சுந்தரம் அய்யா. ஏழை மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதை வாசியாகவே வாழ்ந்தார்.

அதோடுமட்டுமில்லாமல் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தானமாக எழுதிவைத்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் ஒரு சென்ட் நிலம், ஒரு ஓலைக்குடிசையோ, சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் "ஆ ஙர்ள்ற் சர்ற்ஹக்ஷப்ங் ஒய்ற்ங்ப்ப்ங்ஸ்ரீற்ன்ஹப்'' ண்ய் ற்ட்ங் ஜ்ர்ழ்ப்க் என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத் துறைக்கு நோபல்பரிசு இருந்தால், அதனைப்பெற "பாலம் கல்யாணசுந்தரம்' அய்யாவிற்கு தகுதியுண்டு என்ற குறிப்பையும் வழங்கியது. ஐ.நா.சபை விருது, 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா.சபை தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர். பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப் படம் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசுபெற்றது. கோடிக்கணக்கில் அடித்தட்டு மக்களுக்கு அள்ளிக்கொடுத்த இவர், ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன் படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலம் ஐயாவின் தாயார் தாயம்மாள் அவருக்கு வழங்கிய அறிவுரையைப் பார்ப்போம்.

1. எதற்காகவும் பேராசைப்படாதே

2. எது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தர்மம் செய்.

3. தினமும் ஒரு உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும்.

அறத்தின் மறுபெயர் பாலம் கல்யாண சுந்தரம் அய்யா.....!

இதனையே திருமந்திரம் யாவர்க்குமாம் இறைவருக்கு ஒரு பச்சிலை... யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே என்று கூறுகிறது. அறம் செய்வோம். இயற்கையை நேசிப் போம், பகுத்துண்டு பல்லுயிர் போற்றுவோம்.. பூமி நடுங்காது... பிரபஞ்சத்தின் மையப் பேராற்றலான தில்லை அம்பலத்தானின் திருவருள் நமக்கு கிடைப்பது சர்வ நிச்சயம். ஓம் நமசிவாய.