அனுமன் ஜெயந்தி ஏப்ரல் 12 2025
"அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலாலூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவனெம்மை அüத்துக் காப்பான்.'♦
-அனுமன் துதிப்பாடல் ️
ஆரோக்கியம் என்பது உடல், மனம், புத்தி ஆகிய மூன்றுக்கும் உரியது. இம் மூன்றின் ஆரோக்கியமும் இணைந்தநிலையே முழுமை பெற்ற ஆரோக்கியம். இந்த மூன்றினையும் பெற்றவர் ஆஞ்சநேயர்.
ஐம்புலனையும் அடக்கும் திறம் வாய்ந்த ஒழுக்கம் உடையவன். கேட்போர் பிணிக்கும் வகையில் பேசும் சொல்லின் செல்வன்.
அறிவும் ஆற்றலும் மிகுந்த அடக்கமுள்ள பெரியோன். தனக்கென வாழா தன்மையினன்.
ஏக பத்தினி விரதன் இராமனின் மனோசக்தி.
அஞ்சனையின் மைந்தன் என்பதால் ஆஞ்சநேயன் என பெயர் பெற்றவன்.
வற்றிய கன்னம் உடையவன் என்பதால் அனுமன் என அழைக்கப்படுபவன்.
வாசனையுடன் பிறந்ததால் கந்தவாஹாத் மஜன் எனவும், மருதத்தின் மகன் என்பதால் மாருதி யாகவும் பக்தர்களால் வணங்கப்படுபவன் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன்.
ஆஞ்சநேயனை வழிபடுபவர்கள், வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால், திருமணத் தடை நீங்கி கன்னியர் மனம் மகிழ விரைவில் மணம் நிகழும்.
?வெண்ணெய் சாற்றி வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும்.
?வடை மாலை சாற்றினால் வழக்குகüல் வெற்றி கிட்டும்.
?துளசி மாலை சாற்றினால் சகல பாவங்களும் நீங்கும்.
?ராம ஜெயம் எழுதி மாலையாகக் கட்டிப் போட்டால் காரியங்கள் வெற்றிபெறும்.
?அனுமனின் பெயரை நினைத்தாலே நல்லறிவு, உடல் வலிமை, புகழ், தைரியம், அச்சமின்மை, நோயின்மை, மனத்தெüவு, சொல்லாற்றல் ஆகிய எண் பேறுகளும் கிட்டும்.
-எம் அசோக்ராஜா