திருமலைக்கு அடுத்த இடத்தில் வராக லட்சுமிநரசிம்மர் ஆலயம்!

/idhalgal/om/lakshminarasimhar-temple-next-thirumalai

ராக லட்சுமிநரசிம்மர் ஆலயம் ஆந்திரப் பிரதேசத்தில், விசாகப்பட்டினத்திலுள்ள சிம்மாச்சல மலையின்மீது இருக்கிறது. தரைமட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

இது ஒரு புகழ்பெற்ற விஷ்ணு ஆலயம். இங்கிருக்கும் விஷ்ணுவுக்கு வராக நரசிம்மர் என்று பெயர்.

வராக நரசிம்மரின் தலை சிங்கத்தின் தலையாகவும், உடல் மனித உடலாகவும் இருக்கிறது. தன் தீவிர பக்தனான பிரகலாதனை, அவனுடைய தந்தை இரண்யகசிபுவிடமிருந்து காப்பாற்றியவர் இந்த வராக நரசிம்மர்தான்.

இந்த நரசிம்மரின் உருவத்திற்கு எப்போதும் சந்தனத்தைப் பூசிக்கொண்டேயிருப்பதை நாம் பார்க்கலாம். ஆந்திர மாநிலத்திலிருக்கும் புகழ்பெற்ற 32 நரசிம்மர் ஆலயங்களுள் இந்த ஆலயமும் ஒன்றாகும். வைணவர்களுக்கு இது சிறப்புத் தன்மைகொண்ட புனிதத் தலம்.

இந்த ஆ

ராக லட்சுமிநரசிம்மர் ஆலயம் ஆந்திரப் பிரதேசத்தில், விசாகப்பட்டினத்திலுள்ள சிம்மாச்சல மலையின்மீது இருக்கிறது. தரைமட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

இது ஒரு புகழ்பெற்ற விஷ்ணு ஆலயம். இங்கிருக்கும் விஷ்ணுவுக்கு வராக நரசிம்மர் என்று பெயர்.

வராக நரசிம்மரின் தலை சிங்கத்தின் தலையாகவும், உடல் மனித உடலாகவும் இருக்கிறது. தன் தீவிர பக்தனான பிரகலாதனை, அவனுடைய தந்தை இரண்யகசிபுவிடமிருந்து காப்பாற்றியவர் இந்த வராக நரசிம்மர்தான்.

இந்த நரசிம்மரின் உருவத்திற்கு எப்போதும் சந்தனத்தைப் பூசிக்கொண்டேயிருப்பதை நாம் பார்க்கலாம். ஆந்திர மாநிலத்திலிருக்கும் புகழ்பெற்ற 32 நரசிம்மர் ஆலயங்களுள் இந்த ஆலயமும் ஒன்றாகும். வைணவர்களுக்கு இது சிறப்புத் தன்மைகொண்ட புனிதத் தலம்.

இந்த ஆலயம் 11-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே கட்டப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன. முதலாம் குலோத்துங்க சோழ மன்னன் இந்த ஆலயத்தை புதுப்பித்துக் கட்டியிருக்கிறான். முதலாம் நரசிம்ம தேவர் என்பவரும் இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறார்.

வைணவர்களுக்கு தர்மப் பாடங்களைக் கற்றுத்தரும் இடமாக இந்த இடம் இருந்திருக்கிறது.

இவர்கள் தவிர, வேறு பல மன்னர் களும் இந்தக் கோவிலைப் புதுப்பித்துக் கட்டியிருக்கின்றனர். விஜயநகர அரசர்கள் பல ஆபத்தான கட்டங்களில் இந்த ஆலயத்தைக் காப்பாற்றியுள்ளனர்.

1949-ஆம் வருடத்திலிருந்து இந்த ஆலயத்தை "சிம்மாச்சலம் தேவஸம் போர்டு' என்னும் அமைப்பின்கீழ் அரசாங்கமே நிர்வகிக்கிறது.

திருமலைக்குப்பிறகு, ஆந்திர மாநிலத்தின் பெரிய ஆலயமே இதுதான். இந்த கோவிலின்மூலம் அரசாங்கத்திற்கு பெரிய அளவில் வருமானம் வருகிறது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் ஏராளமாக இந்த ஆலயத்தைத் தேடி வருகின்றனர்.

varaagi

நரசிம்ம ஜெயந்தியும் நவராத்திரியும் இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதைக் காணலாம். இந்தக் கோவில் அமைந்ததன் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. அது என்ன?

பிரகலாதன் ஆழ்ந்த விஷ்ணு பக்தன்.

அவன் எப்போதும் விஷ்ணுவை வழிபட்டுக் கொண்டேயிருப்பான்.

சமுகா என்பவன்தான் இரண்யகசிபுவின் மகன் பிரகலாதனாகப் பிறந்திருந்தான்.

அதனால் தன் மகனைத் தண்டிக்க நினைத் தான் இரண்யன். பிரகலாதனைக் கொல்வதற்கு அவன் பல வழிகளில் முயன்றான்.

ஆனால் அவை வெற்றிபெறவில்லை.

ஒருநாள் தன் படைவீரர்களிடம் பிரகலாதனை மலையின் உச்சியிலிருந்து உருட்டிவிடும்படி கூறினான் இரண்யன்.

அப்போது விஷ்ணு அங்கு தோன்றி பிரகலாதனைக் காப்பாற்றினார். விஷ்ணுவை வராக உருவத்தில் பார்க்க விரும்புவதாக பிரகலாதன் வேண்டினான்.

பின்னொரு நாளில் இரண்யகசிபு தன் மகன் பிரகலாதனைக் கொல்வதற்கு இன்னொரு வழியைக் கண்டுபிடித்தான். இரண்யனின் தங்கை ஹோலிகா பெரிய வரத்தைப் பெற்றவள். அவளை நெருப்பால் எதுவுமே செய்யமுடியாது. நெருப்பு அவளைத் தீண்டாது. பிரகலாதனை மடியில் வைத்துக்கொண்டு நெருப்பில் அமரும்படி இரண்யன் கூறினான். பிரகலாதன் நெருப்பில் எரிந்து மடிந்துவிடுவான் என்றும், நெருப்பு தீண்டாத ஹோலிகா பிழைத்துவிடுவாள் என்றும் அவன் நினைத்தான்.

தன் அண்ணனின் ஆணையின்படி மடியில் பிரகலாதனை வைத்தவாறு நெருப்பில் அமர்ந்தாள் ஹோலிகா. அப்போது அவள் எரிந்து சாம்பலானாள். அவள் பெற்ற வரத்தின்படி தனியாக நெருப்பில் அமர்ந்தால்தான் அவளுக்கு எதுவுமே நேராது. பிரகலாதனுடன் இருந்ததால், நெருப்பு அவளை எரித்துவிட்டது. பிரகலாதனை அவன் வழிபடும் மகாவிஷ்ணு காப்பாற்றி விட்டார்.

அதைத் தொடர்ந்து, தூணுக்குள்ளிருந்து வெளியேவந்த விஷ்ணு, நரசிம்ம அவதாரமெடுத்து இரண்யனை வதம் செய்தார். தன் பக்தனான பிரகலாதனின் விருப்பப்படி, வராக நரசிம்மர் உருவத்தில் விஷ்ணு காட்சியளித்தார். அவர் தோன்றிய இந்த இடமே சிம்மாச்சலம்.

பிரகலாதனே விஷ்ணுவுக்கு ஆலயம் எழுப்பியதாகவும் ஒரு வரலாறு இருக்கிறது. ராமானுஜர் இந்த ஆலயத்திற்கு வந்திருக் கிறார்.

பலமுறை முகலாய மன்னர்கள் இந்த ஆலயத்தை அழிக்க முயற்சி செய்திருக் கிறார்கள்.

இங்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஒரியா ஆகிய மொழிகளில் கல்வெட்டுகள் இருக்கின்றன.

சென்னையிலிருந்து விசாகப்பட்டினத் திற்குச் சென்றால், அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.

om010422
இதையும் படியுங்கள்
Subscribe