செய்யுள்-40
"வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதனோடு தெரிந்தவனே,'
பொருள்: நீரூற்று, அருவித் துறை, பசுமை யான தினைப் புனம், காவல் பரண் ஆகிய இடங்களில் வள்ளியம்மையோடு திரிந்த முருகா, கர்மவினையை ஓடச் செய்யும் ஒளி பொருந்திய உன் வேலை என்றும் மறவேன்; அதன் காரணத்தால் இந்தப் பிரபஞ்சம் என்னும் மாயையில் சிக்கிவிடமாட்டேன்.
கடந்த பாடல்களில் சாதகன் மூவேதனைகளால் அல்லலுற்றதும், அவனுடைய கர்ம வினையானது சாதகனை சமாதி நிலையிலிருந்து மீண்டும் உலக வாழ்வில் இழுத்து வந்து துயரம் தருவதையும் பார்த்தோம். இப்பொழுது சாதகன் அந்த துயரத்திலிருந்து மீண்டு இறைநிலையில் தன்னை எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்கிறான் என்று பார்க்கலாம்.
"வினையோட விடும் கதிர்வேல்'- இங்கு சாதகன் வேலை தியானம் செய்யத் தொடங்குகிறான். இங்கு வேல் என்பது ஞானசக்தியின் உருவமாக விளங்குகிறது. ஞானம் என்னும் அக்னியில் கர்மவினைகள் அழிகின்றன. அதனாலேயே வேலை தியானம்செய்யத் தொடங்குகிறான்.
தியானம் செய்ய ஆரம்பித்தவுடனேயே அவனுடைய கர்மவினைகள் ஓடத் தொடங்குவது தெரிகிறது. இங்கு வினை தம்மைவிட்டுச் செல்வதை சாதகன் உணர்வதை அருளாளர் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். இங்கு கதிர்வேல் என்று சொல்லும் பதத்திலிருந்து, எவ்வாறு சூரியனின் கதிர்கள் வந்தவுடன் இருள் அகலுமோ அவ்வாறு கதிர்வேல் தியானத்தில் கர்மவினை அகல்கிறது என்று சொல்வதும், இதனால் மேலும் என்ன கிடைக்கும் என்பதையும் அடுத்த வரியில் சொல்கிறார்.
இங்கு மனை என்று சொல்வது இரண்டு பொருட்களைக் குறிக்கிறது. ஒன்று, இந்தப் பிரபஞ்சம் என்னும் மாயையைக் குறிக்கிறது. வேலின் தியானத் தில் இந்த உலக மாயை நீங்குகிறது. அதனால் இனி மேலும் இந்த உலகத்தில் பிறக்கமாட்டோம் என்று "மயங்கிடவோ' என்னும் சொல்லால் தெரிகிறது.
இரண்டு, மனையென்பது சாதாரண மான வீட்டையும் குறிக்கிறது.ஒரு வீடானது எவ்வளவு பெரிதாக இருந்தா லும், பல அறைகளைக் கொண்டிருந்தா லும், அவ்வீடானது எப்பொழுதுமே ஒரு வரையறைக்குள் மட்டுமே இருக்க முடியும். ஆனால் இறைநிலை அல்லது இறைவனை அடைந்தவர்கள் நிலை ஒரு வரையறைக்குள் எப்போதும் கட்டுப் படாது. அதனாலேயேதான் இங்கு அருளாளர் "மனையோடு தியங்கி' என்று இரண்டு சொற்களைப் பயன்படுத்துகிறார்.
வேலின் தியானம் கர்மவினைகளை அழிக்கிறது. மேலும் உலக மாயை, கட்டுகளிலிருந்தும்
செய்யுள்-40
"வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதனோடு தெரிந்தவனே,'
பொருள்: நீரூற்று, அருவித் துறை, பசுமை யான தினைப் புனம், காவல் பரண் ஆகிய இடங்களில் வள்ளியம்மையோடு திரிந்த முருகா, கர்மவினையை ஓடச் செய்யும் ஒளி பொருந்திய உன் வேலை என்றும் மறவேன்; அதன் காரணத்தால் இந்தப் பிரபஞ்சம் என்னும் மாயையில் சிக்கிவிடமாட்டேன்.
கடந்த பாடல்களில் சாதகன் மூவேதனைகளால் அல்லலுற்றதும், அவனுடைய கர்ம வினையானது சாதகனை சமாதி நிலையிலிருந்து மீண்டும் உலக வாழ்வில் இழுத்து வந்து துயரம் தருவதையும் பார்த்தோம். இப்பொழுது சாதகன் அந்த துயரத்திலிருந்து மீண்டு இறைநிலையில் தன்னை எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்கிறான் என்று பார்க்கலாம்.
"வினையோட விடும் கதிர்வேல்'- இங்கு சாதகன் வேலை தியானம் செய்யத் தொடங்குகிறான். இங்கு வேல் என்பது ஞானசக்தியின் உருவமாக விளங்குகிறது. ஞானம் என்னும் அக்னியில் கர்மவினைகள் அழிகின்றன. அதனாலேயே வேலை தியானம்செய்யத் தொடங்குகிறான்.
தியானம் செய்ய ஆரம்பித்தவுடனேயே அவனுடைய கர்மவினைகள் ஓடத் தொடங்குவது தெரிகிறது. இங்கு வினை தம்மைவிட்டுச் செல்வதை சாதகன் உணர்வதை அருளாளர் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். இங்கு கதிர்வேல் என்று சொல்லும் பதத்திலிருந்து, எவ்வாறு சூரியனின் கதிர்கள் வந்தவுடன் இருள் அகலுமோ அவ்வாறு கதிர்வேல் தியானத்தில் கர்மவினை அகல்கிறது என்று சொல்வதும், இதனால் மேலும் என்ன கிடைக்கும் என்பதையும் அடுத்த வரியில் சொல்கிறார்.
இங்கு மனை என்று சொல்வது இரண்டு பொருட்களைக் குறிக்கிறது. ஒன்று, இந்தப் பிரபஞ்சம் என்னும் மாயையைக் குறிக்கிறது. வேலின் தியானத் தில் இந்த உலக மாயை நீங்குகிறது. அதனால் இனி மேலும் இந்த உலகத்தில் பிறக்கமாட்டோம் என்று "மயங்கிடவோ' என்னும் சொல்லால் தெரிகிறது.
இரண்டு, மனையென்பது சாதாரண மான வீட்டையும் குறிக்கிறது.ஒரு வீடானது எவ்வளவு பெரிதாக இருந்தா லும், பல அறைகளைக் கொண்டிருந்தா லும், அவ்வீடானது எப்பொழுதுமே ஒரு வரையறைக்குள் மட்டுமே இருக்க முடியும். ஆனால் இறைநிலை அல்லது இறைவனை அடைந்தவர்கள் நிலை ஒரு வரையறைக்குள் எப்போதும் கட்டுப் படாது. அதனாலேயேதான் இங்கு அருளாளர் "மனையோடு தியங்கி' என்று இரண்டு சொற்களைப் பயன்படுத்துகிறார்.
வேலின் தியானம் கர்மவினைகளை அழிக்கிறது. மேலும் உலக மாயை, கட்டுகளிலிருந்தும் விடுவிக்கிறது.
இங்கு முருகனின் தோற்றத்தை சற்று சிந்திக்க வேண்டும். சிவப்பரம்பொருள் தம்முடைய சொரூப மாக முருகனைத் தோற்றுவிக்க, அசுர வதம்செய்யச் செல்லும் முன்னர், பராசக்தி தன் சொரூபமான வேலாயுதத்தைத் தருகிறாள். இந்த வேலாயுத தியானமென்பது பராசக்தியின் தியானமே. நிர்குண பிரம்மமான சிவம் எப்பொழுதும் எக்காரியத்திலும் ஈடுபடுவதில்லை. அன்னை பராசக்தி மட்டுமே செயல்படுகிறாள். இதற்கு லலிதா சஹஸ்ரநாமத்தில் "அந்தர்முக3ஸமாராத்4யா' என்னும் நாமத்தில், மனதால் பூஜிக்கப்படுபவள் என்றும்; அவ்வாறு பூஜித்தால் அவள் உலக வாழ்விலிருந்து மக்களைக் காப்பவள் என்று "ஸம்'ஸார பங்கநிர்மக்ஸின ஸமுத்3த4ரண பண்டி3தா' என்னும் நாமத்திலும் விளங்குகிறது.
இந்தப் பாடலில் "சுனையோடு அருவித்துறையோடு' என்னும் வரிகள், முருகன் வள்ளியைத்தேடி அலைந்து திரிந்த இடங்களைக் காட்டுகிறது. ஆனால் இதற்கும் சூட்சுமமான விளக்கம் இருப்பதை அன்னை யின் நாமங்களைக் கொண்டுதான் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, "நிருபப்லவா' என்னும் நாமம், சோமச் சக்கரத்திலிருந்து உட்புறமாக ஊறும் அமிர் தத் தாரையைக் குறிக்கிறது, இந்தச் செயலே "சுனையோடு' என்னும் சொல்லல் குறிக்கபடுகிறது.
மேலும் இவ்வாறு ஊறும் அமிர்தம் ஆக்ஞா சக்கரம் தாண்டி கீழேவருவது "அருவித்துறையோடு' என்னும் சொல்லாலும், "பசும் தினை' என்ற சொல் அனாஹத சக்கரத்தையும், "இதன்' என்னும் சொல் மணிப்பூரகத்தையும் குறிக்கிறது.
மணிப்பூரகம் ஏன் பரண் என்று சொல்லப்படுகிறதென்றால், சக்தி தீக்கை முடிந்தவுடன் குண்டலினி சக்தியானது மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் ஆகிய ஆதாரங்களைக் கடந்து மணிப்பூரகம் வந்து அமர்ந்து விடுகிறது. அதற்குமேல் கீழே இறங்குவதில்லை. இவ்வாறாக மேல்வந்து அமர்வதால் பரண் என்ற சொல்லால் இங்கு குறிக்கப்படுகிறது. மேலும் இந்த ஆறு ஆதாரங்களில் வள்ளியைத்தேடி அல்லது வள்ளியோடு திரிந்து என்ற சொல்லி-ருந்து, குண்டலினி சக்தி ஒவ்வொரு ஆதாரங்களிலும், அந்த ஆதாரத்திலுள்ள சிவ அம்சங்களோடு இருப்பதையும், அதன்பின்பு சஹஸ்ரத்தில் கலப்பதையும் காட்டுகிறது. இதற்குச் சான்றாக "மூலாதாராம் புஜாரூடா' என்னும் நாமம் தொடங்கி "சுதா சாராபி வர்ஷினி' என்னும் நாமம் வரை லலிதா சஹஸ்ர நாமத்தில் விளக்கத் தைக் காணலாம். அருணகிரிநாதர் இயற்றிய அனுபூதியில் இவ்வாறாக இன்னும் பல ரகசியங் கள் ஒவ்வொரு பாடலிலும் தேடத்தேடக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
லலிதையின் நாமங்களில் 475- "விஷுத்தி சக்ர நிலயா' முதல் 534-ஆவது நாமமான "யாகின்யம்பா ஸ்வரூபிணி' வரை இந்தப் பாடலுக்கான யோகமார்க்க தியானம் விளக்கப் படுகிறது. இந்த தியானமே வேல் தியானமாகவும் கர்மவினைகளைக் களைய உதவும் மார்க்கமாக வும் இருப்பதை நாம் பார்க்கமுடிகிறது.
செய்யுள்-41
"சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகம் செயுநாள்
வாகா முருகா மயில் வாகனனே
யோகா சிவஞான உபதேசிகனே.'
பொருள்: முருகா, வெற்றிவாகை மலர் களைச் சூடியவனே, மயில்மீது வருவோனே, யோக ஞானம் அருள்பவனே, சிவஞான உபதேசம் செய்வோனே, நீ என்னை எமன் வந்து உயிர்பறிக்கும் நாளன்று சாகாது காக்க வேண்டும். அதற்காக நான் உன் திருவடிகளில் சரணாகதி அடைகிறேன்.
முந்தைய பாடல்களில் சாதகன் வேலாயுத தியானத்தினால் குண்டலினி சக்தியை மணிப்பூரகம்முதல் சகஸ்ராரம்வரை ஏற்றி சமாதிநிலையை அடைகிறான். இப்படி அடைந்தாலும் இந்த அனுபவமானது கர்மவினைகள் முழுவதையும் தாண்டிய ஒரு அனுபவமன்று. இந்த சமாதி நிலையானது சாதகனின் தியானத்தினாலும், இறைவனின் அருளினாலும், குருவின் கிருபையாலும் இந்தப் பிறவியில் அவனுக்கு வாய்க்கப்பெற்றது. ஆனால் இதனால் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டுவிடலாமென்று நினைக்க முடியாது. ஏனென்றால் சஹஸ்ராரம்வரை செல்லும் குண்டலினி சக்தியானது சாதகனுக்கு ஆத்ம அனுபவத்தைத் தருமென்றாலும், அது நெடும் பயணத்தின் பாதியை மட்டுமே குறிக்கிறது. சஹஸ்ராரம் தாண்டியும் பரவெளியில் ஒளிமயமான சிவ சொரூபத்தில் கலந்து, அதற்கு மேலும் சென்று வெளிச்சத்தையும் தாண்டி, மகா சூனியம் என்று சொல்லப்படும்- எந்த நிலையிலும் எந்த இயக்கமும் எப்பொழுதும் எதனோடும் ஒட்டாத பரப்பிரம்ம நிலையை அடைந்தால் மட்டுமே சாதகன் பிறப்பு- இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடமுடியும்.
இந்த அனுபவம் கிட்டத்தட்ட ஒரு இறப்பு நிலைதான். ஆனால் இந்த நிலைக்குச் சென்று திரும்பவும் உடலுக்குள் வந்தவர்கள் ஜீவன் முக்தர்களாக மாறிவிடுகிறார்கள். இவ்வாறான சாதகர்கள்தான் இறக்கும்பொழுது- அதாவது இந்த உடலைவிட்டு ஆன்மா நீங்கும்பொழுது மீண்டும் பிறவா நிலையை எய்தி, எப்பொழுதும் இறைநிலையிலேயே நிலைத்துவிடுகிறார்கள். மற்றவர்கள் சஹஸ்ராரம் தாண்டாமல் ஆத்ம அனுபவத்திலேயே நிலைத்துவிட்டு, இதுவே இறைநிலையென்று நினைத்து, மாயையின் பிடியில் சிக்கித் தாம் முக்திபெற்றதாக நினைத்துக்கொண்டு, அந்த நிலையிலேயே ஏமாந்துவிடுகிறார்கள். அல்லது அவர்களிடம் கர்மவினை பராசக்தியின் ஒப்புதல் இல்லாதத னால் மீண்டும் பிறப்பு- இறப்பு சுழற்சியில் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தத் திரையை விலக்கி சஹஸ்ராரம் தாண்டி சாதகனை வெளிச்சமாக இருக்கும் பரமேஸ்வரனிடம் அழைத்துச்சென்று, அதன்பின்பும் மகா சூனியம்வரை இட்டுச்சென்று, அந்த இடத்தில் சிவசக்தி கலப்பினால் சாதகனை முக்தியடையச் செய்கிறாள். அப்பொழுதுதான் இந்த ஜீவன் முக்தன் என்று சொல்லப்படும் நிலை எழுகிறது.
இந்த மகா சூனியத்தின் நிலையை அறிவதே சிவஞானமென்று சாத்திரங்களில் கூறப்படுகிறது. இதைத்தான் அருணகிரிநாதர் இந்தப் பாடலில் "சிவஞான உபதேசம் தேசிகனே' என்னும் ஒற்றை வரியில் கூறுகிறார்.
சிவஞான உபதேசம் கிடைத்தால் மட்டுமே சாதகன் எமன் பிடியில் சிக்கித் திரும்பவும் இந்த உலகத்திற்குவரத் தேவையில்லை.
யாரொருவர் எமன் பிடியில் சிக்கி உயிர் விட்டு மேலுலகம் செல்கிறாரோ அல்லது வேறொரு நிலைக்குச் செல்கிறாரோ, அவர் மாத்திரமே திரும்பவும் பிறப்பு- இறப்பென் னும் சுழற்சியில் அகப்படமுடியும். ஆனால் ஜீவன்முக்தர்கள் தங்களுடைய இறுதி நிமிடங்களில் அல்லது இறுதி நாட்களில் அவர்கள் பரவெளியில் கலப்பதற்காக சமாதி நிலையில் தங்களைத் தாங்களே இறுதிசெய்துகொள்கிறார்கள். எமன் இவர்களுடைய ஆன்மாவைக் கொள்வதற்காக வருவதில்லை. அதனால் இவர்களுக்குப் பிறப்போ- இறப்போ என்றும் இருப்பதில்லை. இவர்கள் நினைத்தால் வேண்டும்பொழுது பிறக்கவும் முடியும்; சென்றுவிடவும் முடியும்.
சில நேரங்களில் இப்படியான ஜீவன் முக்தர்களைப் பராசக்தியானவள் மற்றைய ஆன்மாக்களை கரையேற்றுவதற்காக மீண்டும் பிறக்கச் செய்கிறாள். இவர்கள் தங்களுடைய அளவற்ற கருணையினால் பராசக்தி நினைக் கவும் பிறந்து, சில ஆன்மாக்களைத் தேர்ந்தெடுத்து- சில நேரங்களில் இந்த ஆன்மாக்களைத் தாங்கள் பிறக்கும் முன்பே தேர்ந்தெடுத்துவிட்டுப் பிறந்து ஒரு குருவாக அமர்ந்து, தாங்கள் இறைவனையடைந்த அந்த மார்க்கத்தை இந்த ஆன்மாக்களுக்குக் காட்டி பராசக்தியிடம் சேர்த்து, அதன்மூலம் சிவஞான உபதேசத்தைக் கொடுத்து, அந்த ஆன்மாக்களையும் ஜீவன்முக்தர்களாக மாற்றுகிறார்கள்.
இந்த ஜீவன்முக்தி நிலையே சாகாநிலை யென்று கூறப்படுகிறது. இந்த நிலையைத்தான் அருணகிரிநாதர் இந்தப் பாடலில் "சாகாது எனையே சரணங்களிலே' என்னும் வரியில் குறிப்பிடுகிறார். இந்த நிலையில் இருப்பவர்களை எமன் துன்பப்படுத்து வதில்லை. "இவ்வாறான நிலையை எமக்கும் தருவாயாக' என்று முருகப் பெருமானது திருவடிகளில் விழுந்து சரணாகதி செய்யும் நிலையையே "காகா' என்று இரண்டு முறை "காப்பாற்று காப்பாற்று' என்பதைக் குறிக்கும் வண்ணம் இந்தப் பாடலிலே பயன்படுத்துகி றார்.
இங்கு முதல்முறை காப்பாற்று என்பது, "இங்கு இப்பொழுதே' என்பதையும், இரண்டாவது முறை காப்பாற்று என்பது எமன் கலகம் செய்யும் நாள் அல்லது தாம் இந்த உடலைவிட்டுச் செல்லும் தருணத்தையும் குறிக்கிறது.
இந்தப் பதம், வாழும்பொழுது தம்மை மீண்டும் பிரபஞ்ச சேற்றில் சிக்காமல் காப்பாற்றும் என்பதையும், தாம் இந்த உடலைவிட்டுச் செல்லும்பொழுது மீண்டும் இப்பிரபஞ்ச சேற்றில் அனுப்பிவிடாதே என்று இறைஞ்சும் ஒரு கோரிக்கையையும் குறிக்கிறது.
சுருக்கமாக, அருணகிரிநாதர் முருகனிடம் "எனக்கு இங்கே இப்பொழுதே முக்தியை அருள்வாயாக' என்று கேட்கும் வண்ணம் இந்தப் பாடல் அமைந்துள்ளது. லலிதா சஹஸ்ரநாமத்தில் "காளஹந்த்ரீ' என்னும் நாமமும், "மிருத்யு மதனீ' என்னும் நாமமும் காலசம்ஹாரத்தைக் குறிக்கின்றன. இங்கு காலன் என்று குறிப்பிடப்படுவது எமனையல்ல. எமனின் வேலையான உயிரைப் பறித்து மீண்டும் பிறக்கச் செய்வதைக் குறிக்கிறது. இந்தச் செயலை அழிப்பதன்மூலம் லலிதை தம்முடைய பக்தர்களுக்கு முக்தியைக் கொடுக்கிறாள் என்று சகஸ்ரநாமம் கூறுகிறது.
அதேபோல் இந்த முக்தியை எவ்வாறு கொடுக்கிறாரென்று பார்த்தால், சஹஸ்ரநாமம் "சிவஞான ப்ரதாயினி' என்று கூறுவதுபோல, இந்தப் பாடலில் முருகன் சிவஞான உபதேசம் செய்து குருவாக அமர்ந்து முக்தியளிக்கிறான் எனப்படுகிறது. அவ்வாறே லலிதாவும் சிவஞான உபதேசம் தந்து அந்த சாதகனுக்கு சாயுஜ்ய பதவியையளித்து முக்தியுமளிக்கிறாள்.
இந்த இரண்டு ஆன்மிக கிரந்தங்களும் ஒரு சாதகனை எவ்வாறு இறைவன் தம்முடன் சேர்த்துக்கொள்கிறான்- அதற்கான மார்க்கங்கள் என்னென்ன- அதை எப்படி யெல்லாம் செய்யவேண்டும் என்னும் ஒரு முழுமையான வழிமுறைப் புத்தகம்போல அமைந்துள்ளன என்பது இந்தப் பாடல்களின் விளக்கத்தினாலும், சஹஸ்ரநாம விளக்கத்தினாலும் தெரிகிறது. அதேபோல் முருகப்பெருமானும் அம்பிகையும் வெவ்வேறு உருவங்கள் அல்ல அல்லது வெவ்வேறு தெய்வங்கள் அல்ல என்பதை நாம் இதுவரை பார்த்துவந்தாலும், இந்தப் பாடலில் மிகவும் தெளிவாக அருணகிரிநாதர் எடுத்து வைக்கிறார்.
இவ்வாறாக லலிதா சஹஸ்ரநாமமும் கந்தரனுபூதியும் ஓர் இறைவனை ஒரே மாதிரியான வழியில் சாதகன் சென்றடைய உதவுகிறது.
(அனுபூதி தொடரும்)