குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதில-சக்தி வழிபாடு!(19) -அருண் ராதாகிருஷ்ணன்

/idhalgal/om/kumara-wisdom-kandaranupoodila-shakti-worship-19-arun-radhakrishnan

செய்யுள்-36    

"நாதா குமரா நமவென்று அரனார்

ஓதாய் எனஓதியது எப்பொருள் தான்

வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்

பாதா குறமின் பதசேகரனே.'

பொருள்: பிரம்மன் மற்றும் ஏனைய தேவர்கள் ஆகியோர் உன் பாதத்தை சிரசில் சூடிக்கொண்டுள்ளனர். அத்தகைய நீ வள்ளியின் பாதத்தை உன் சிரசில் சூடிக் கொண்டுள்ளாய்! "குருநாதா, குமரா உனக்கு நமஸ்காரம்' என்று சிவனார் வணங்கி, "எனக்கு உபதேசித்தருளாய்' என்று கேட்க, அவருக்கு நீ உபதேசம் செய்தது என்ன? அதை எனக்கும் உபதேசித்தருள்வாயாக.

இந்தப் பாடலில் இரண்டு முக்கியமான தத்துவங்கள் உள்ளன. ஒன்று முருகனின் பஞ்சாக்ஷர மந்திரம் மற்றும் சக்தி வழி பாடான ஸ்ரீவித்யையின் குரு பாதுகை வழிபாடு. அதை நாம் ஒன்றன்பின் ஒன்றாக இனி காணலாம். அதற்கு முன்னர் இந்தப் பாடலின் சூழ்நிலையை சற்று ஆராய்ந்து, பின்னர் சூட்சுமமான விளக்கத்திற்குச் செல்லலாம்.

பிரம்மா, சிவனைக்காண கயிலாயம் செல்லும்பொழுது, முருகன் அவரை மறித்து பிரணவமான ஓங்காரத்திற்கு விளக்கம் கேட்க, அதற்கு போதிய விளக்கமளிக்க முடியாமல் முருகனால் பிரம்மா சிறைபிடிக் கப்பட்டார். சிறைப்பட்ட காலத்தில் முருகனே பிரம்மாவின் படைப்புத் தொழிலை நடத்தினார். இதைக் கேள்வியுற்ற சிவபெரு மான், பிரம்மனை விடுவிக்குமாறு முருகனி டம் கூற, "பிரணவத்தின் விளக்கம் கூறமுடியாத பிரம்மனை விடுவிக்கமுடியாது' என்று முருகன் மறுக்க, அவ்வாறாயின் பிரண வத்தின் விளக்கத்தைக் கூறுமாறு முருகனை சிவ பெருமான் பணித்தார். ஆனால் முருகனோ, "பிரணவம் என்பது குருமுகமாகக் கேட்கப்படுவது. ஆதலால் எவ்வாறு குருவிடம் கேட்கவேண்டுமோ அவ்வாறு கேட்பின் விளக்கம் கூறுகிறேன்' என்று சொன்னார்.

சிவபெருமான் முருகனிடம் குருவிடம் கேட்கும் முறையில் பணிந்துகேட்க, முருகன் கூறிய பிரணவத்தின் விளக்கத்தைக் கேட்டு மகிழ்ந்தார்.

இங்கு சிவபெருமான் உலகிற்கு எடுத்துக் காட்டிய தத்துவங்கள் இரண்டு. ஒன்று, முருகனின் மந்திரமான "குமரா நம' என்னும் மந்திரத்தைக் கொண்டு முருகனை குருவாக சரணடைய, அவரே வந்து உண்மை விளக்கத்தைக் கொடுப்பார் என்பது. அடுத்து, குருவானவரை சிறியவர்- பெரியவர் என்று நோக்கக்கூடாது என்பதை பொதுவில் காட்டினாலும், குரு என்பவர் வயது என்னும் வரைமுறையை தாண்டியவர் என்பதையும், ஒருவரின் வயதைக்கொண்டு குருவின் நிலையயை எடைபோடக்கூடாது என்பதையும் எடுத்துகாட்டுகிறார்.

குருவானவர் எவ்வாறு வேண்டுமானாலும் வரலாம். சாதக

செய்யுள்-36    

"நாதா குமரா நமவென்று அரனார்

ஓதாய் எனஓதியது எப்பொருள் தான்

வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்

பாதா குறமின் பதசேகரனே.'

பொருள்: பிரம்மன் மற்றும் ஏனைய தேவர்கள் ஆகியோர் உன் பாதத்தை சிரசில் சூடிக்கொண்டுள்ளனர். அத்தகைய நீ வள்ளியின் பாதத்தை உன் சிரசில் சூடிக் கொண்டுள்ளாய்! "குருநாதா, குமரா உனக்கு நமஸ்காரம்' என்று சிவனார் வணங்கி, "எனக்கு உபதேசித்தருளாய்' என்று கேட்க, அவருக்கு நீ உபதேசம் செய்தது என்ன? அதை எனக்கும் உபதேசித்தருள்வாயாக.

இந்தப் பாடலில் இரண்டு முக்கியமான தத்துவங்கள் உள்ளன. ஒன்று முருகனின் பஞ்சாக்ஷர மந்திரம் மற்றும் சக்தி வழி பாடான ஸ்ரீவித்யையின் குரு பாதுகை வழிபாடு. அதை நாம் ஒன்றன்பின் ஒன்றாக இனி காணலாம். அதற்கு முன்னர் இந்தப் பாடலின் சூழ்நிலையை சற்று ஆராய்ந்து, பின்னர் சூட்சுமமான விளக்கத்திற்குச் செல்லலாம்.

பிரம்மா, சிவனைக்காண கயிலாயம் செல்லும்பொழுது, முருகன் அவரை மறித்து பிரணவமான ஓங்காரத்திற்கு விளக்கம் கேட்க, அதற்கு போதிய விளக்கமளிக்க முடியாமல் முருகனால் பிரம்மா சிறைபிடிக் கப்பட்டார். சிறைப்பட்ட காலத்தில் முருகனே பிரம்மாவின் படைப்புத் தொழிலை நடத்தினார். இதைக் கேள்வியுற்ற சிவபெரு மான், பிரம்மனை விடுவிக்குமாறு முருகனி டம் கூற, "பிரணவத்தின் விளக்கம் கூறமுடியாத பிரம்மனை விடுவிக்கமுடியாது' என்று முருகன் மறுக்க, அவ்வாறாயின் பிரண வத்தின் விளக்கத்தைக் கூறுமாறு முருகனை சிவ பெருமான் பணித்தார். ஆனால் முருகனோ, "பிரணவம் என்பது குருமுகமாகக் கேட்கப்படுவது. ஆதலால் எவ்வாறு குருவிடம் கேட்கவேண்டுமோ அவ்வாறு கேட்பின் விளக்கம் கூறுகிறேன்' என்று சொன்னார்.

சிவபெருமான் முருகனிடம் குருவிடம் கேட்கும் முறையில் பணிந்துகேட்க, முருகன் கூறிய பிரணவத்தின் விளக்கத்தைக் கேட்டு மகிழ்ந்தார்.

இங்கு சிவபெருமான் உலகிற்கு எடுத்துக் காட்டிய தத்துவங்கள் இரண்டு. ஒன்று, முருகனின் மந்திரமான "குமரா நம' என்னும் மந்திரத்தைக் கொண்டு முருகனை குருவாக சரணடைய, அவரே வந்து உண்மை விளக்கத்தைக் கொடுப்பார் என்பது. அடுத்து, குருவானவரை சிறியவர்- பெரியவர் என்று நோக்கக்கூடாது என்பதை பொதுவில் காட்டினாலும், குரு என்பவர் வயது என்னும் வரைமுறையை தாண்டியவர் என்பதையும், ஒருவரின் வயதைக்கொண்டு குருவின் நிலையயை எடைபோடக்கூடாது என்பதையும் எடுத்துகாட்டுகிறார்.

குருவானவர் எவ்வாறு வேண்டுமானாலும் வரலாம். சாதகன் விழிப்போடு இருந்தால் மட்டுமே அவரைக் கண்டுகொள்ள முடியும். மேலும் குருவின் லட்சணம் இதுதான் என்று பௌதீகமான ஒரு வரையறைக்குள் அவரைக்கொண்டு அடைக்க முடியாது. இந்த நிகழ்ச்சியிலும் முருகன் இளையவர்- பிரம்மன் மற்றும் சிவபெருமான் பெரியவர்கள் என்பதில்லை. அதேபோல் தட்சிணாமூர்த்தி உருவகத்திலும் சனகாதி முனிவர்கள் வயதானவர்களாக இருப்பார்கள். சிவன் இளையவராக இருப்பார். ஆதலின் குரு என்னும் தத்துவம், என்றும் பாலனாக இருப்பது எப்படியென்பதை வாழ்ந்துகாட்டியே விளக்கும். இங்கு சிவபெருமான் எவ்வாறு குருவை அடையவேண்டும் என்பதையும், அத்து டன் தாமும் அறுமுகனும் ஒருவரே என்றும் காட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சியையும் நடத்தினார்.

பிரணவ உபதேசத்தை இந்தப் பாடலில் அருண கிரிநாதர் நாடுகிறார். சந்நியாச ஆஸ்ரமம் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே பிரணவத்தை தனியாக ஜெபம் செய்ய விதி வகுக்கப்பட்டுள்ளது. இல்லறத் தில் உள்ளோர் பிரணவத்தோடு மற்றைய மந்திரங்களை சேர்த்தே ஜெபம் செய்ய சமயங்கள் கூறுகின்றன. இந்த பிரணவத்தின் பொருளாக வேதங்களின் முடிவில் 'ஸுப்ரஹ்மண்ய ஓம்' என்று, "சதாசிவ ஓம்' என்னும் மறைபொருளாகத் தாமே இருப்பதை விளக்கவும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் இந்த ஞானத்தை உணர்வுப்பூர்வமாகப் பெறுவது இறைவனின் கருணையால் மட்டுமே நடக்கிறது. யாரொருவர் இந்த ஞானத்தை அடைகிறாரோ அவர் சிவசாயுஜ்யம் அடைந்து சிவ பரம்பொருளாகவே வாழ்கிறார். இந்த ஞானமடைய சாதகனின் முயற்சி எதுவும் கை கொடுக்காது என்பதை அறிந்துதான் இறைவனின் கிருபையை அருணகிரிநாதர் இங்கு முன்னிருத்துகிறார்.

ff

சக்தி வழிபாட்டிலும் பூர்ணதீக்ஷை என்று கூறப்படும் மஹா சோடஷி தீக்ஷையானது சந்நியாச தீக்ஷைக்கு சமமாக இருப்பதும், அந்த மகாமந்திரத்தின் உட்பொருளைத் தமக்கு விளக்கவேண்டுமாறு சாதகன் கேட்பது போலவும் இப்பாடல் அமைந்துள்ளது.

இங்கு முருகன் வள்ளியின் பாதங்களை சிரசில் சூடுவது இரண்டு நெறிமுறைகளை எடுத்துக்காட்டுகிறது.

சக்தி வழிபாட்டில், குருவின் பாதங்களை சிரசில் தியானிக்கும் வழக்கமும், அம்பிகையின் பாதங்களை சிரிசில் தியானிக்கும் வழக்கமும் உண்டு. அபிராமி அந்தாதியில் பட்டர் "திருவடித் தாமரை சென்னியதே' என்று சொல்லும் பாடலிலும், முந்தைய பாடல்களில் அருளாளர் திருவடி தீக்ஷை வேண்டியதையும் தொடர்புபடுத்தினால் இது தெரியவரும். சக்தி வழிபாட்டில் பிரணவ மந்திரத்தை சில இடங்களில் பிரயோகப்படுத்துவதன்மூலமும், மாற்றியமைப்பதன்மூலமும் சாதகனின் கர்மவினைகளை அழித்து இறைநிலை எய்த குரு அவனுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொடுப்பார். அதனால்தான் இங்கு அப்படி ஒரு மந்திரத்தையும், அதேபோல் விளக்கத்தை யும் குரு சாதகனுக்கு அளித்து, அவனை இறைநிலையில் எப்போதும் இருத்துவதற்குத் தயார் செய்கிறார்.

உதாரணமாக, அகத்திய முனிவருக்கு அவருடைய மனைவியான லோபமுத்திரா, சக்தி வழிபாட்டிற்கு உபதேசம் செய்கிறார். இங்கு குருவின் பாதம் சிரசில் சூடுவதென்று பார்க்கும்பொழுது, "முருகன் குறமின் பத சேகரன்' என்ற பதம், முருகன்கூட ஒருமுறை சக்தி வழிபாடு செய்ததைக் குறிக்கிறது. இதற்கு ஆதாரமாக துவாதச உபாசகர்கள் வரிசையில் முருகன் அம்பிகையை வழிபட்ட முறை மற்றும் மந்திரங்களை சாக்த ஆகமங்களில் காணலாம். இங்கு சந்நியாச தீட்சையென்று ஒரு தீட்சைமுறையோடு, இல்லறத்தார்க்கு சந்நி யாச தீட்சைக்கு சமமான வழிகள் இருப்பதை யும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அருளாளர்.

லலிதையின் நாமங்களில் "உமா' என்னும் நாமமே பிரணவத்திற்கு ஈடாக இருக்கிறது. பிரணவத்தின் அகார உகார மகார சப்தங்கள், உமா என்னும் நாமத்தில் உகார மகார அகாரமாக மாறிவருகிறது, இதுவே அம்பிகை நம்மைக் காத்து, லயமாக்கி, பிறவிப் பிணியை முடித்துவைப்பதைக் காட்டுகிறது.

செய்யுள்-37

"கிரிவாய்விடு விக்ரம வேல் இறையோன்

பரிவாரம் எனும் பதம் மேவலையே

புரிவாய் மனனே பொறையாம் அறிவால்

அரிவாய் அடியொடும் அகந்தையையே.'

பொருள்: க்ரௌஞ்ச மலையானது பிளந்து அழியுமாறு வேல்விடுத்த இறைவனாகிய முருகனை அடைந்த அடியார்களுள் ஒருவராகும் நிலை இன்னும் வரவில்லையே! அதனால் மனமே, அந்த நிலையை அடைய ஞானமெனும் வாளால் அகந்தையை அடியோடு வெட்டிவிடுவாயாக.

இந்தப் பாடலில் சாதகனை நோக்கி நேராகவே அருணகிரிநாதர் அடுத்து என்ன செய்யவேண்டுமென்று கூறுகிறார். இவ்வளவு நாட்கள் மந்திர யோகம், சந்நியாச தர்மம் என்று படிப்படியாக வந்த சாதகன், இப்பொழுது இறைவன் ஒருவனே கதியென்று வந்தபிறகுதான் அவனுடைய மிகப்பெரிய எதிரியாக அவனது அகந்தை இருப்பது தெரிய வருகிறது. இந்த உண்மையை, சந்நியாசம் மேற்கொண்டபிறகுதான் சாதகனால் அறிய முடிகிறது. குருவிடம் ஆத்மஞான உபதேசம், மந்திர உபதேசம், சமாதி அனுபவம் மற்றும் தியானம் அறியப்பெற்றும், அகந்தை என்னும் தடையிருப்பதை இப்போதுதான் தெளிவாக உணரமுடிகிறது. இந்த அகந்தை அழியவேண்டுமென நினைத்தால், ஞானத் தைக்கொண்டு, "நான் இந்த உடல், மனம் மற்றும் புத்தி இல்லை' என்று தெளியவேண்டும்.

இந்தப் பாடலில் "இறையோன் பரிவாரம்' என்னும் பதம், இறைவனும் தாமும் வெவ்வேறல்ல என்பதை உணரும் நிலையைக் குறிக்கிறது. இந்தப் பாடலின் உட்கருத்தானது அத்வைத சித்தாந்தத்தைச் சார்ந்து நிற்பது இதிலிருந்து தெரியும். இறையோன் பரிவாரம் என்னும் சொல்லே இறைவனின் பாதங்களில் எப்போதும் இருக்கும் அடியாரைக் குறிக்கும். இவ்வாறாக இறைவனின் திருவடி நிழலில் எப்போதுமிருக்கும் பேற்றைப் பெறமுடிய வில்லையே என்பது அருளாளரின் ஏக்கமாக இருக்கிறது. உதாரணமாக, சிவபெருமானின் அருகில் எப்போதுமிருக்கும் நந்தீஸ்வரைப் போலவோ, நாயன்மார்களைப் போலவோ, விஷ்ணுவிடம் எப்போதுமிருக்கும் சேஷனைப் போலவோ தம்மால் இரண்டறக் கலந்திருக்க முடியவில்லையே என்ற வருத்தம் இங்கு தெரிகிறது. கடல், கடலலை ஆகிய இரண்டும் ஒன்றுதான் என்றாலும், அலையானது தான் "அலை' என்னும் தனித்துவத்தை இழக்கும் போதுதான் தான் கடல் என்பதே தெரிகிறது. அலையென்பது கடலின் ஒரு பகுதிதான். தன் வேலை முடிந்தவுடன் கடலுக்கும் தனக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லையென்பதை உணர்கிறது. அதுபோல்தான் இங்கு இறையோன் பரிவாரமும். இவ்வாறான நிலயை அடைய தமக்குப் பேறு இருக்கிறதா என்று நினைத்து உருகும் நிலையே இந்தப் பாடல்.

"இறையோன் பரிவாரம்' என்பதை இன்னொரு கோணத்திலும் ஆராயலாம். இறைவனின் அடியார்கள் என்று கூறும் யோகிகள், முனிவர்கள் போன்ற நிலை கிடைக்கவில்லையென்று ஏக்கம் கொண்டாலும், இவர்களைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளும் முடிவினை இறைவன்தான் எடுக்கிறான். அவ்வாறான கருணைக்கு தாம் இன்னும் ஆளாகவில்லையே என்று ஏங்குவதும், இறையோன் பரிவாரம் கிடைக்கவில்லையென்று சொல்வதும் ஒன்றுதான்.

ஒரு சாதகன் சந்நியாசம் எடுத்துக் கொண்டவுடன், நாம் இறையனுபவம் பெற்றுவிட்டோம்; இறைவனை அடைந்துவிட்டோம்; கர்மா நீங்கிவிட்டது என்னும் எண்ணம் கொள்ளலாகாது. தற்காலத்தில் சந்நியாச ஆஸ்ரமம் என்பது வாழ்வின் தோல்விகளாலேயே பலராலும் தழுவப்படுகிறது. அது சந்நியாசம் ஆகாது. சந்நியாசம் கொண்ட பின்பும் அகங்காரம் கொண்டு, ஆஸ்ரம வாழ்விலும் தாம் பெரிய விரக்திகொண்ட சந்நியாசி என்ற நினைப் பும், மற்றவர்கள் தம்மை ஒரு பெரிய ஆன்மிகவாதி, தம்மை எல்லாரும் தம் சந்நியாச ஆஸ்ரமத்திற்காக வணங்கவேண்டும் என்றெல் லாம் நினைக்கும் நபர்கள் சந்நியாசம் கொள்வதும், அகங்காரம் அழியாமலிருப்பதும் ஒன்றுதான். இங்கு சந்நியாச யோகத்தினால் எந்தப் பயனும் விளையாமல் போய்விடுகிறது.

குருவின் வாக்கினால் உண்மை விளக்கம் கொண்டபிறகு, இறைவனின் பரிவாரங்களில் ஒருவனாக, தன்னுடைய அறிவைக்கொண்டு அகங்காரம் எழும்பொழுது அதைக் களையவேண்டும். இங்கு "புரிவாய்' என்னும் சொல், சாதகனை கர்ம யோகத்தையும் செய்யச் சொல்கிறது. கர்ம யோகத்தில் சாதகன் ஈடுபடும்பொழுது அவமானங்களை நிறைய சந்திக்க நேரிடும். அந்த அனுபவங்கள் அவனது அகந்தையைக் களைய உதவும்.

சக்தி வழிபாட்டிலும், பூர்ண தீக்ஷை என்ற நிலைக்குப்பின்பு, சாதகன் உடனே மறுபிறவியற்ற நிலையை அடைந்துவிட்டான் என்று கூறமுடியாது. பூர்ண தீக்ஷை அவனை அந்த நிலைக்குச் செல்ல உதவிபுரியும். ஆனால் தந்திர சாத்திரங்கள் கூறும்படி அவன் மந்திர யோகத்தைப் புரிந்தால், சில சக்திகள் மற்றும் சித்திகள் கிடைக்கப்பெறும். இங்கு இந்த சக்திகளை உலக வாழ்க்கைக்கும், தன்னைப் பெரியோனாகக் காட்டவும் பயன்படுத்துவது மிகவும் அதிகமாக நடக்கிறது. ஆனால் இவ்வாறு பயன்படுத்துபவர்கள் மோட்சநிலை எய்தமாட்டார்கள் என்று கந்தர்வ தந்திரம் தெளிவாக எடுத்துரைக்கிறது. எவனொருவன் எந்தவொரு எதிர்ப்பார்ப்புமின்றி இறைவனை நோக்கி நகர்கிறானோ, அவனருகிலேயே நின்று அவனுக்குத் தேவையானதை அம்பிகை செய்துவைக்கிறாள் என்றும் தந்திரங்கள் கூறும்.

சக்தி வழிபாட்டிலும், பூர்ண தீக்ஷை எடுக்கும் வரையிலும் அதன்பின்பும் அகந்தை அழிய பல்வேறு சோதனைகளை அம்பிகை செய்கிறாள். எப்பொழுது சாதகன் தன் ஞானத் தால் தானும் அவளும் வெவ்வேறல்ல என்று உணர்கிறானோ, அப்பொழுதே அகந்தை அழிந்து சிவஞானம் சித்திக்கிறது.

இந்தப் பாடலில் அருணகிரிநாதர், மேற்கூறியவாறான ஞானம் எய்தி, இறைவனை அடையவேண்டும் என்று சாதகனுக்கு உணர்த்துகிறார். லலிதையின் நாமங்களில் "அனர்க்4யகைவல்யபத3தா3யினீ' என்னும் நாமம், அவளே முடிவான மோக்ஷத்தைத் தருபவள் என்றும்; "நிரஹங்காரா' என்னும் நாமம் அகங்காரம் அற்றவள் என்றும் கூறும். அகங்காரம் களைந்து மோக்ஷநிலை எய்தவேண்டுமென்ற விதத்தில் நாமங்களின் அமைப்பும் இருக்கும்.

சக்தி வழிபாட்டில் அகங்காரம் களையவே பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கிறார் கள். குரு பாதுகை தியானம், ஆவரண பூஜையின்பொழுது செய்யும் தத்துவ சோதனம் என்ற தியானம், இறுதியாக அம்பிகையை குண்டலினி வடிவினளாக தியானித்து சக்கரங்களில் நிறுத்தும் யோகமுறை என்று சாதகன் இறைநிலையை அடைய முறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

(அனுபூதி தொடரும்)

om010422
இதையும் படியுங்கள்
Subscribe