குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதில-சக்தி வழிபாடு!(23) -அருண் ராதாகிருஷ்ணன்

/idhalgal/om/kumara-wisdom-gandharanuboothila-shakti-worship23-arun-radhakrishnan

செய்யுள்-45

"கரவாகிய கல்வியுளார் கடைசென்று

இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ

குரவா குமரா குலிசாயுத குஞ்லி

சரவா சிவயோக தயாபரனே.'

பொருள்: மிகுந்த கல்வியறிவு உள்ளவர் கள், அதனை மற்றவர்களுக்குப் பயன்படாத வாறு மறைத்துவைத்து, அந்த ஞானத்தை அடையவிடாது தடுப்பவர்களின் பின்சென்று இரக்கும்வகையில் விடாமல், மேலான மெய்ப்பொருளை நீ எனக்கு ஈகுவையோ. குருமூர்த்தியே, குமரா, குலிசாயுதத்தை உடையவனே, சிவயோகத்தை அருள்பவனே!'

அருணகிரிநாதர் முந்தைய பாடல்களில் ஏற்கெனவே அனுபூதியடைந்த நிலையைக் குறித்துவிட்டார். அதன்பின்பு ஏன் இன்னும் சில பாடல்கள் இயற்றப்பட்டன என்று நாம் ஆராயவேண்டும். இறைநிலையை அடைந்த ஒரு சாதகன், தான் இறைவனை அடைந்த தோடு நிற்பதில்லை. மற்றைய மக்களுக்கும் அந்தநிலை கிடைக்கவேண்டுமென்று சேவைபுரிய சென்றுவிடுகிறான்.

அப்படிப் பார்க்கும்பொழுதுதான், இறைவனைப் பற்றிய ஞானம், அவனைச் சென்றடையவேண்டிய மார்க்கம் போன்றவற்றை சிலர் மற்றவர்கள் அறியாமல் ரகசியமாக பாதுகாத்துவருகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பாதுகாத்துவருபவர்கள் ஒன்றும் இறைநிலை அடைந்தவர்களல்ல. இறைவனைப் பற்றிய வேத, சாஸ்திர, வேதாந்த ஞானம் உள்ளவர்கள் என்றாலும், அகங்காரம் மட்டுமே மேலோங்கி, இறைவனைப் பற்றிப் பேசியும் எழுதியும், கவிகள் பல புனைந்திருந்தாலும் இறைநிலையை அடைய அவர்களை மாயையானவள் அகங் காரத்தின் காரணமாக நிறுத்தி வைத்திருக்கி றாள்.

முருகனின் சக்தி களான வள்ளியம்மை மற்றும் தேவசேனையைப் பொருத்தமட்டில், வள்ளியம்மை இக சௌபாக்கியத்தையும், தேவசேனை பர சௌபாக்கியத்தையும் அளிக் கின்றனர். பரமபதம் செல்லவேண்டும் என்றா லும், இவ்வுலக வாழ்வில் வள்ளியம்மையின் கிருபையினால் தவம் முயன்றுதான் செல்ல வேண்டும். இந்த வள்ளியம்மையே தேவ சேனையாக பரமபதம் அளிக்கிறாள். ஒரு ஜீவான்மா குறமகளாகப் பிறந்து முருகனின் சக்தியாக உயர்வதைக் காட்டுவதும், அவள் தேவர்குல மகளாம் தேவசேனைக்கு இணை யாக மாறுவதையும் சொல்வது, சாதகன் இறை நிலையை அடைவதைக் குறிக்கிறது.

இந்தப் பாடலைப் பொருத்தவரை இங்கு முதன்முதலில் தேவசேனையின் குறிப்பு வருகிறது. வேறெங்கும் அனுபூதியில் இந்தக் குறிப்பு கிடையாது. வள்ளியம்மையை பன்னிரண்டு இடங்களில் சுட்டும் அருளாளர், அனுபூதி பிறந்தபின்னேதான் தேவசேனையைக் கூறுகிறார். "தூசா மணியும் துகிலும்' என்னும் பாடலில் வள்ளியம்மை சுத்த சத்துவரூபமாக காட்சி தந்தபின், வள்ளியின் உருவக் குறிப்போ அல்லது குலம், தொழில் முதலிய பொருள்படுமாறோ பாடல் இயற்றப் படவே இல்லை. ஆனால் இங்கு அந்த சுத்த சத்துவ நிலைதாண்டி தேவசேனையாக வள்ளியம்மை தெரிவதை உணர்த்தவும், பராசக்தி ஒன்றுதான் என்றும், முருகனை பரப்பிரம்ம வடிவினனாக்கி, இரு சக்தியும் சேர்ந்து ஒரு சக்தியாக விளங்குவதையும் காட்ட வுமே இந்தப் பாடலில் தேவசேனையின் குறிப்பு வருகிறது.

சூசகமாக, பரஞானம் வேண்டின் பராசக்தியைப் பின்பற்றவும், அவ்வாறாகப் பின்பற்றினால் முருகன் சிவயோகத்தைத் தருவான் என்றும் இந்தப் பாடலின் பொருள் அமையுமாறு, இறைநிலை அடைந்த சாதகன் மற்றவர்களுக்கு உரைக்கும்படியாக அமைத் திருக்கிறார் அருணகிரிநாதர்.

முருகன் பிணிமுகம் என்னும் யானையை யும், குலிசாயுதம் கொண்டதையும் குறிக்கும் அருணகிரியார், இவ்வாறாக இருக்கும் முருகனே குருமூர்த்தி என்று பொருள் கொள்ளுமாறு "குரவா' என்னும் பதத்தைச் செய்கிறார். எவ்வாறு தந்திர சாத்திரங்களில் சதாசிவன் குருவாக அமர்ந்து சக்தி உபாசனைக்கு வழி காட்டுகிறாரோ, அவ்வாறே இங்கு முருகன் குலிசாயுதனாக அமர்ந்து பராசக்தி வடிவான தேவசேனைமூலமாக தம்மை- பரப்பிரம்மத்தை அடைய முடியும்

செய்யுள்-45

"கரவாகிய கல்வியுளார் கடைசென்று

இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ

குரவா குமரா குலிசாயுத குஞ்லி

சரவா சிவயோக தயாபரனே.'

பொருள்: மிகுந்த கல்வியறிவு உள்ளவர் கள், அதனை மற்றவர்களுக்குப் பயன்படாத வாறு மறைத்துவைத்து, அந்த ஞானத்தை அடையவிடாது தடுப்பவர்களின் பின்சென்று இரக்கும்வகையில் விடாமல், மேலான மெய்ப்பொருளை நீ எனக்கு ஈகுவையோ. குருமூர்த்தியே, குமரா, குலிசாயுதத்தை உடையவனே, சிவயோகத்தை அருள்பவனே!'

அருணகிரிநாதர் முந்தைய பாடல்களில் ஏற்கெனவே அனுபூதியடைந்த நிலையைக் குறித்துவிட்டார். அதன்பின்பு ஏன் இன்னும் சில பாடல்கள் இயற்றப்பட்டன என்று நாம் ஆராயவேண்டும். இறைநிலையை அடைந்த ஒரு சாதகன், தான் இறைவனை அடைந்த தோடு நிற்பதில்லை. மற்றைய மக்களுக்கும் அந்தநிலை கிடைக்கவேண்டுமென்று சேவைபுரிய சென்றுவிடுகிறான்.

அப்படிப் பார்க்கும்பொழுதுதான், இறைவனைப் பற்றிய ஞானம், அவனைச் சென்றடையவேண்டிய மார்க்கம் போன்றவற்றை சிலர் மற்றவர்கள் அறியாமல் ரகசியமாக பாதுகாத்துவருகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பாதுகாத்துவருபவர்கள் ஒன்றும் இறைநிலை அடைந்தவர்களல்ல. இறைவனைப் பற்றிய வேத, சாஸ்திர, வேதாந்த ஞானம் உள்ளவர்கள் என்றாலும், அகங்காரம் மட்டுமே மேலோங்கி, இறைவனைப் பற்றிப் பேசியும் எழுதியும், கவிகள் பல புனைந்திருந்தாலும் இறைநிலையை அடைய அவர்களை மாயையானவள் அகங் காரத்தின் காரணமாக நிறுத்தி வைத்திருக்கி றாள்.

முருகனின் சக்தி களான வள்ளியம்மை மற்றும் தேவசேனையைப் பொருத்தமட்டில், வள்ளியம்மை இக சௌபாக்கியத்தையும், தேவசேனை பர சௌபாக்கியத்தையும் அளிக் கின்றனர். பரமபதம் செல்லவேண்டும் என்றா லும், இவ்வுலக வாழ்வில் வள்ளியம்மையின் கிருபையினால் தவம் முயன்றுதான் செல்ல வேண்டும். இந்த வள்ளியம்மையே தேவ சேனையாக பரமபதம் அளிக்கிறாள். ஒரு ஜீவான்மா குறமகளாகப் பிறந்து முருகனின் சக்தியாக உயர்வதைக் காட்டுவதும், அவள் தேவர்குல மகளாம் தேவசேனைக்கு இணை யாக மாறுவதையும் சொல்வது, சாதகன் இறை நிலையை அடைவதைக் குறிக்கிறது.

இந்தப் பாடலைப் பொருத்தவரை இங்கு முதன்முதலில் தேவசேனையின் குறிப்பு வருகிறது. வேறெங்கும் அனுபூதியில் இந்தக் குறிப்பு கிடையாது. வள்ளியம்மையை பன்னிரண்டு இடங்களில் சுட்டும் அருளாளர், அனுபூதி பிறந்தபின்னேதான் தேவசேனையைக் கூறுகிறார். "தூசா மணியும் துகிலும்' என்னும் பாடலில் வள்ளியம்மை சுத்த சத்துவரூபமாக காட்சி தந்தபின், வள்ளியின் உருவக் குறிப்போ அல்லது குலம், தொழில் முதலிய பொருள்படுமாறோ பாடல் இயற்றப் படவே இல்லை. ஆனால் இங்கு அந்த சுத்த சத்துவ நிலைதாண்டி தேவசேனையாக வள்ளியம்மை தெரிவதை உணர்த்தவும், பராசக்தி ஒன்றுதான் என்றும், முருகனை பரப்பிரம்ம வடிவினனாக்கி, இரு சக்தியும் சேர்ந்து ஒரு சக்தியாக விளங்குவதையும் காட்ட வுமே இந்தப் பாடலில் தேவசேனையின் குறிப்பு வருகிறது.

சூசகமாக, பரஞானம் வேண்டின் பராசக்தியைப் பின்பற்றவும், அவ்வாறாகப் பின்பற்றினால் முருகன் சிவயோகத்தைத் தருவான் என்றும் இந்தப் பாடலின் பொருள் அமையுமாறு, இறைநிலை அடைந்த சாதகன் மற்றவர்களுக்கு உரைக்கும்படியாக அமைத் திருக்கிறார் அருணகிரிநாதர்.

முருகன் பிணிமுகம் என்னும் யானையை யும், குலிசாயுதம் கொண்டதையும் குறிக்கும் அருணகிரியார், இவ்வாறாக இருக்கும் முருகனே குருமூர்த்தி என்று பொருள் கொள்ளுமாறு "குரவா' என்னும் பதத்தைச் செய்கிறார். எவ்வாறு தந்திர சாத்திரங்களில் சதாசிவன் குருவாக அமர்ந்து சக்தி உபாசனைக்கு வழி காட்டுகிறாரோ, அவ்வாறே இங்கு முருகன் குலிசாயுதனாக அமர்ந்து பராசக்தி வடிவான தேவசேனைமூலமாக தம்மை- பரப்பிரம்மத்தை அடைய முடியும் என்று காட்டுகிறார்.

இந்தப் பாடல் சக்தி வழிபாடு மிகவும் தெளிவாகத் தெரியுமாறு அமைந்துள்ளது.

செய்யுள்-46

"எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ

சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்

கந்தா கதிர்வேலவனே உமையாள்

மைந்தா குமரா மறைநாயகனே.'

பொருள்: என் தாயும் தந்தையுமாக இருப்பவன் நீ. என் கவலைகளைத் தீர்த்து என்னை நீ ஆட்கொள்ளவேண்டும். கந்தப் பெருமானே, கதிர்வேலை உடையவனே, உமையம்மையின் மகனே, குமரா, வேத நாயகனே!'

இந்தப் பாடலில் பிரார்த்தனை மிகவும் எளிதாக நேரடியாக வைக்கப்படுகிறது. இறைநிலை அடைந்த ஒருவன் இறைவனை எவ்வாறு தியானிக்கவேண்டுமென்று கூறுவ தாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. எந்த சாதனை செய்யமுயன்றாலும் அந்த சாதனை முடியாமல் போவதற்குப் பல தடங்கல்கள் வரத் தான் செய்யும். மனக்கவலைகள் கர்மாவால் நம்மை விடாது துரத்திக்கொண்டுதான் இருக் கின்றன. இவ்வாறான கவலைகள் தீரவும், ஆன்மிக வாழ்வு உயரவும் இறைவனை அம்மை யப்பனாக ஆராதிப்பதன்மூலம் கவலைகள் தீர்ந்து, முன்னேறுவதற்கு வழிபிறக்கும்.

இத்துணைப் பாடல்களில் இறைவனை அம்மையப்பனாகப் பார்க்காத அருணகிரி நாதர், இறைநிலை அடைந்தபிறகு கூறும் இப்பாடலில் இறைவனைத் தந்தை- தாயாக வணங்குவோர்க்கு அவனை அடைவது எளிதாம் என்று காட்டுகிறார்.

பராசக்தியைச் சொல்லும்போது மணி வாசகர், "அவளே இறைவனின் துணையாக, மகளாக, தாயாகவும் இருக்கிறாள்' என்று சொல்வார். அதேபோல் பட்டர் அபிராமி அந்தாதியில் அம்பிகையை, "கரைகண்டனுக்கு மூத்தவள், முகுந்தற்கு இளையவள்' என்று கூறிப்போற்றுவார். இங்கும் முருகனை பராசக்தியின் மைந்தன் என்று கூறுவதும், சென்ற பாடலில் தேவயானையே பராசக்தி; முருகன் பரப்பிரம்மம் என்று சொல்வதிலிருந்தும், அருளாளர்கள் அனைவரும் குறிப்பிடும் தெய்வம் ஒன்றேயென்று பறைசாற்றும்.

சாதகனைப் பொருத்தமட்டில் அவன் வணங்கும் இறையே அவனின் தந்தையாகவும் தாயாகவும் இருக்கிறது. மணிவாசகர், "யாவர்க்கும் தந்தை தாய்' என்றும், தேவராம் "அத்தா உனக்கு ஆளாய்', "ஆயா உனக்கு ஆளாய்', "அன்னே உனக்கு ஆளாய்' என்றும் போற்றுவதிலிருந்தும் இந்த பாவத்தின் முக்கியத்துவம் புரிகிறது.

லலிதா சஹஸ்ரநாமம் "ஸ்ரீ மாதா' என்று தொடங்கி "லலிதாம்பா' என்று முடியும். இங்கும் "அம்பா' என்னும் பதத்திற்கு அன்னை என்னும் ஒரு பொருள் வரும். இறைவியை அன்னையாக பாவித்துதான் வாக் தேவிகள் சஹஸ்ரநாமம் சொல்கிறார்கள். இப்படிக் கூறும் ஸ்தோத்திரமானது சாதகனை இறைவனிடம் வெகுசீக்கிரம் அழைத்துச்செல்லும். அதனால்தான் இங்கு அருளாளர் இறைநிலை அடைந்தபின், அந்தநிலையை சீக்கிரம் அடையும் வழியாக, அதிகம் அவதிப்படாமல் அன்னையாக- தந்தையாக பாவித்து இறைவனை அடைந்துவிடுங்கள் என்று இந்தப் பாடலில் கூறுகிறார்.

mm

செய்யுள்-47

"ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்

பேறா அடியேன் பெறுமாறு உளதோ

சீறா வருசூர் சிதைவித்து இமையோர்

கூறா உலகம் குளிர்வித்தவனே.'

பொருள்: சீறிவரும் அசுரர்களின் கோபத் தையும் அவர்களையும் அழித்து, தேவர்களை மீண்டும் தேவலோகத்தில் குடியேற்றி, அவர் களைக் குளிர்வித்தவரே, முப்பத்தாறு தத்துவங் களைக் கடந்து அதற்கு மேலான நிலையை நான் அடையும் நிலை உளதோ.

இந்தப் பாடலில் அருணகிரிநாதர் அனுபூதி பெற்ற நிலையிலும், 36 தத்துவங்களைத் தாம் இன்னும் கடக்கவில்லையென்று கூறுவது, இறைநிலையை அடைந்த சாதகன் மீண்டும் மனித உடலி-ருந்து மீத வாழ்வைக் கழிக்கும் ஜீவன்முக்த நிலையில் இருப்பதை உணர்த்துகி றார். இந்தநிலையை அறிவதற்குமுன், இந்த தத்துவங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

1. அசுத்த தத்துவங்கள்- 24

2. சுத்தாசுத்த தத்துவங்கள்- 7

3. சுத்த தத்துவங்கள்- 5

அசுத்த தத்துவங்களானது- பஞ்ச பூதங்கள்- 5 (நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி); ஞானேந்திரியங்கள்- 5 (மெய், வாய், கண், மூக்கு, செவி); கர்மேந்திரியங்கள்- 5 (வாக்கு, பாதம், பாணி, பாயுலி ஆசனவாய், உபத்தம்- பெண்குறி); தன்மாத்திரைகள்- 5 (சத்தம், ஸ்பரிசம், உருவம், ரசம், கந்தம்); அந்தக்கரணம்- 4 (மனம், புத்தி, அகங்காரம், சித்தம்).

சுத்தாசுத்த தத்துவங்கள்- கால தத்துவம், நியதி தத்துவம், கலா தத்துவம், வித்யா தத்துவம், அராக தத்துவம், புருஷ தத்துவம், மூல தத்துவம்.

காலதத்துவம்- ஒரு ஆன்மாவின் கால அளவுகளைக் குறிப்பது. அது பிறவிகளாக இருக் கலாம்; யோனி பேதங்களாகவும் இருக்கலாம்.

நியதி தத்துவம்- கர்மா அல்லது விதியைக் குறிப்பது.

கலா தத்துவம்- அகங்காரத்தின் அளவைக் குறைக்கும் தத்துவம்.

வித்யா தத்துவம்- ஆன்மாக்களுக்கு அறிவைக் கொடுக்கும் தத்துவம்.

அராக தத்துவம்- ஆன்மாக்களுக்கு முக்தியடையும் ஆசையைத் தூண்டியெழச் செய்வது.

புருஷ தத்துவம்- ஆணவம், கன்மம், மாயை மூன்றும் சேர்ந்த தத்துவம்.

மூல தத்துவம்- முக்குணங்களும் சமநிலையில் இருப்பது. இதுவே மூல ப்ரக்ருதி என்றும், மாயை என்றும் வழங்கப்படுவது.

சுத்த தத்துவம்- சிவ தத்துவம், சக்தி தத்துவம், சதாசிவ தத்துவம், ஈஸ்வர தத்துவம், சுத்த வித்தை என்று ஐந்து வகைப்படுகிறது.

சிவ தத்துவம்- நாதமாக இருக்கிறது.

சக்தி தத்துவம்- விந்தாக இருந்து நாதத்தோடு கலந்து மற்றைய தத்துவங்களைப் பிரசவிக்கிறது.

சதாசிவ தத்துவம்- அனுக்கிரகத்தைக் குறிக்கும்.

சுத்த வித்தை- ருத்திரம் என்றும், பைரவ என்றும், திரிபுரை என்றும் பிரம்ம ஸ்வரூபத்தை அறியும் கடைசி தத்துவமாக விளங்குகிறது.

இந்த 36 தத்துவங்களைக் கடந்தபின்தான் ஜீவ- பிரம்ம ஐக்கியம் ஏற்படுகிறது, அதனால்தான் இறைநிலையை எய்தினாலும் ஜீவன்முக்தராக வாழும் மகான்கள் இந்த 36 தத்துவங்களுக்கு அடங்கி, வேளை வரும்பொழுது நிரந்தரமாக இறையோடு கலந்துவிடுகிறார்கள்.

இந்த 36 தத்துவங்களையும் ஆசனமாக இருத்தி, அதன்மேலமர்ந்து இருப்பதாக லலிதையை "மஹாசனா' என்னும் அவள் நாமம் கூறும்.

இங்கும் லலிதையை பரப்பிரம்மம் என்று நாமங்கள் கூறுவதைப் பார்க்கும்பொழுதும், இந்தப் பாடலில் அருணகிரிநாதர் கூறுவதும் ஒரு பொருளைத்தான் என்று அறியமுடிகிறது.

செய்யுள்-48

அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில்

பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ

செறிவொன்று அறவந்து இருளே சிதைய

வெறிவென்றவரோடு உறும் வேலவனே.'

பொருள்: உலக பந்தங்கள் அற்றுப்போய், அஞ்ஞானம் எனும் இருள் விலகி, மயக்கத்தை வென்ற ஞானியரோடு இருக்கும் வேலவனே, ஜீவநிலையற்று அதன் மேல்நிலையை அறிவார் அறிவில் நிற்கும் பெருமானே.

இந்தப் பாடல் கடந்த பாடலின் தொடர்ச்சியாகத்தான் கொள்ளவேண்டும். 36 தத்துவங்களையும் கடந்து, தான் அனுபூதி அல்லது சமாதிநிலையை அடைவதையும், அங்கு நிலைத்திருப்பதையும் குறிக்கிறது. இந்த ஜீவநிலையை அறிவென்றும், இந்தநிலை அற்றுப்போய் அதன் மேல்நிலையை அறிபவர்களின் அறிவில்- சித்தத்தில் எப்போதும் உறைபவன் முருகன் என்றும் அருளாளர் கூறுகிறார். மகான்கள் இருக்கும் தியான நிலை எல்லாமே இந்த அறிவோடு கலந்திருக்கும் நிலைதான். இவ்வாறு இருப்பவர்களுக்கு உலகபந்தம் அற்றுப்போவதும், மாயை விலகுவதும் இயல்பாகவே நடக்கிறது.

லலிதையின் நாமங்களில் "சைதன்யா அர்க்கிய சமராத்யா' என்பது, ஞானிகள் அம்பிகையை ஆராதிக்கும் மேற்கூறிய நிலையைத்தான் குறிக்கிறது.

செய்யுள்-49

"தன்னந்தனி நின்றது தான் அறிய

இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ

மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்

கின்னம் களையும் கிருபைசூழ் சுடரே.'

பொருள்: மின்னும் மின்னல்போன்ற வேலையுடைய முருகா, உன்னை நினைப் போரின் இன்னல்களை எல்லாம் போகச்செய்யும் கருணைகொண்ட ஜோதி ரூபமானவரே, தன்னந்தனியாக நான் (தான்) மட்டும் நின்ற நிலையை இன்னொருவருக்கு எவ்வாறு இசைவிப்பது!

இந்தப் பாடல் மீண்டும் தியான நிலையில் இறைவனை அடைந்த அந்தத் தருணத்தைக் குறிக்கிறது. பேசா அனுபூதி பெற்றபின்பும் ஏன் அருணகிரிநாதர் இவ்வளவு பாடல்களை எழுதியுள்ளார் என்ற கேள்வி வரலாம். இங்கு சமாதிநிலை என்பது சாதகன் வாழ்நாள் வரையிலும் தியானம் செய்து அந்த நிலையிலேயே இருப்பதை வலியுறுத்துகிறது. இறைநிலை அடைதல் என்பது ஒரு முடிவல்ல. அது நீண்டநெடிய சுகமான பயணம். இவ்வாறு எப்பொழுதும் இறைதியானத் திலேயே இருக்கவேண்டும் என்பதும், ஜீவன்முக்த நிலையென்பது, அதன்பின் தத்துவங்கள் கடந்த வாழ்வு கிடையாது; மோட்சம் உறுதியென்றாலும், இறைவனின் விதிக்கிணங்க இந்த வாழ்விலிருந்து கர்ம கணக்குகளை முடிக்கவேண்டும். எனினும் அவை ஆன்மாவில் சேராதவாறு இந்த தியானம் தொடர்ந்து சாதகனை இறை நிலையிலேயே வைக்கிறது. அதனால்தான் வேலாயுத தியானம் மீண்டும் இந்தப் பாடலில் வலியுறுத்தப்படுகிறது. இந்த "தான் தனியாக' நிற்கும் குண்டலினி தியானத்தை லலிதா சஹஸ்ரநாமம் விவரிக்கிறது.

இந்தப் பாடலிலுள்ள "விகிர்தன்' என்னும் பதம் மாறுபாடு உடையவன் என்னும் பொருள்கொண்டு வரும். வேலாயுதம் கொண்டதனால் முருகன் தனியாகத் தெரிகி றான். இங்கு வேலாயுதம் பராசக்தியாக இருப்பதும், முருகன் பிரம்மநிலையில் இருப்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறது. எவ்வாறு வேலால் முருகன் வேறுபட்டுத் தெரிகிறானோ, அவ்வாறு பராசக்தி அருகில் இருப்பதனால்தான் சிவப் பரம்பொருளைப் பார்க்கமுடிகிறது. அதாவது பராசக்தியின் கருணையால் சிவனைக் காணமுடிகிறது. அதனால் அவளே சிவஞானம் அருள்கிறாள் என்று சஹஸ்ரநாமம் கூறும். சைவமும் சக்தியை சிவனின் அருளென்று கூறும். சிவனின் அருளை சக்தியைக்கொண்டே பெறடியும்; தனியாக பிரம்மத்தை அறிய முடியாது. அதனால் இந்தப் பாடலிலுள்ள விகிர்தன் என்ற பதம் மிகவும் முக்கியமான பொருள்கொண்டு சக்தி வழிபாட்டை நிலைநிறுத்தும் அனுபூதியாக விளங்குகிறது.

செய்யுள்-50

"மதிகெட்டு அறவாடி மயங்கி அறக்

கதிகெட்டு அவமே கெடவோ கடவேன்

நதிபுத்திர ஞான சுகாதிப அத்

திதிபுத்திரர் வீறடு சேவகனே.'

பொருள்: கங்கை நதியின் புதல்வனே, ஞானசுகம் அருளும் தலைவனே, திதி என்பவள் பெற்ற அசுரர்களை அழித்து தேவர் களைக் காத்து சேவை புரிந்தவரே, நான் மதியிழந்து உணர்ச்சி மேலிட மாயையில் அகப்பட்டு நற்கதி அடையாமல் கெடுவேனோ?

இந்தப் பாடலும் அனுபூதியின் கடைசிப் பாடலும் தொடர்புகொண்டவை. இரு பாடல் களை சேர்த்துப் பார்த்தால்தான் உண்மைப் பொருள் புரியும். இல்லையென்றால் ஏதோ அருணகிரிநாதர் பல்வேறு மனநிலையில் பாடியதாக அனுபூதியைத் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும். இந்தப் பாடலில் அருளாளர், இறைநிலை எய்தவில்லையென் றால் என்ன நடந்திருக்குமென்று கூறி, அந்த நிலை மாறியதற்கான காரணத்தையும் அடுத்த பாடலில் கூறுகிறார்.

ஒரு சாதகன் இறைநிலையை அடைவதற் குக் காரணம் அவனது குரு ஒருவரே. அந்த இறைவனே குருவாக வந்ததை அடுத்த பாடல் குறிப்பிடும். ஒருவேளை குருவை அடையாமல் இருந்திருந்தால் எவ்வாறு இந்த உலக வாழ்வில் ஒரு சாதகன் அலைந்து திரிந்து மீண்டும் பிறவிச் சுழற்சியில் சிக்கியிருப்பான் என்று கூறவே இந்தப் பாடலை அமைத்திருக் கிறார். மேலும் இந்த நிலையிலிருந்து குரு வும் இறைவனும் எவ்வாறு அவனைக் காப்பாற்றினார்கள் என்று கூறுவதும், நன்றி உரைப்பதுமாகவும் இந்தப் பாடல் அமைகிறது.

செய்யுள்-51

"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.'

பொருள்: உருவாகவும், உரு இல்லாம லும், உள்ள பொருளாகவும், இல்லாத பொருளாகவும், நறுமணமாகவும், மலராக வும், மணியாகவும், அதன் ஒளியாகவும், உயிருள்ள கருவாகவும், அந்த கரு தாங்கும் உயிராகவும், நல்ல கதி கொடுக்கும் விதியாக வும், குருவாகவும் வந்து அருள்புரிவாய் குகனே.

இந்தப் பாடல் குருவின் தத்துவத்தை முன்னிருத்தி, இறைவனே குருவின் ரூபமொடு வந்து, இந்த வாழ்வையும் அவனை அடையும் விதியையும் அவனே அமைத்துக் கொடுத்ததைக் காட்டுகிறது. முருகனின் முக்கியமான வடிவங்கள் பதினாறு வகைப் படும். அந்த பதினாறு உருவ வேறுபாடு களைத்தான் பல கோவில்களில் நாம் தரிசிக்க முடிகிறது. இறைவன் வேண்டிய நேரத்தில் வேண்டிய உருக்கொண்டு வருவதும், அருவாய் இருந்தும் சாதகனை வழிநடத்து வதும் (இறைவன் அருவ நிலையிலும் சாதகனை வழிநடத்துவதை ஆன்மிக வாழ்வில் பக்குவப்பட்டவர்களால் உணர முடியும்) அவனே மலராகவும், அதன் குணமாகவும், மணியின் ஒளியாகவும் இருப்பதைக் கூறுவது எல்லா இடங்களிலும் இறைவனைக் காண்பதைக் குறிக்கிறது.

மேலும் அந்த இறைவனே இந்த உடல் தாங்கி அந்த ஆன்மாவாகி, அதற்க்கு விதி ஏற்பாடுசெய்து நல்ல கதிக்கு அழைத்துச் செல்லும் அத்துணை செயல்களையும் செய்வதை "கருவாய் உயிராய் கதியாய் விதியாய்' என்னும் வரி சொல்லும்.

இங்கு "குருவாய் வருவாய்' என்னும் பதத்திற்குப் பொருள் தெரியவேண்டுமென் றால், முருகன் ஏற்கெனவே குருவாக இருந்து என்ன செயல் செய்தானென்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு உதவுவது "கள்ளக் குவால் பை' எனும் திருப் புகழ். இந்தத் திருப்புகழில் சிவனார் என்ன உபதேசம் கேட்டார்; அதற்கு முருகன் என்ன உபதேசம் நல்கினார் என்று நாம் தெரிந்துகொள்ளலாம். கீழ்க்கண்ட வரி அதற் குச் சான்று.

"வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று... மிளையோனே

வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு... வள்ளி

அனுஷ்டித்த நன்னெறி'

என்னும் உபதேசத்தைத் தமக்கும் சொல்லுக என்று கேட்ட தந்தையாகிய சிவபெருமானுக்கு, "நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே... கண்ணிமைக்கும் ஒரு க்ஷணப் பொழுதில் அவருடைய செவியில் ஏற்றிய இளையவனே' எனகிறார்.

இங்கு வள்ளி சன்மார்க்கம் என்பதே சக்தி வழிபாடுதான். அதுவே ஸ்ரீவித்யை, தசமகா வித்யை, லட்சுமி தந்திரம் கூறும் வைஷ்ணவ சக்தி வழிபாடு. (இதற்குச் சான்று வள்ளியை வனச குறமகள் என்று கூறும் திருப்புகழ்).

முருகனிடம் இந்த வள்ளியைப் பற்றிய சன்மார்க்கம் எனப்படும் சக்தி வழிபாட்டை தான் சிவனார் கேட்க, அதனை இமைப் பொழுதில் அவருக்கு உபதேசித்தான் முருகன் என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.

அதனால் குருவாக வந்து சக்தி வழி பாட்டை உணர்த்திய தம் குருவே இறைவனாக வும் உள்ளதை உணர்வதும், குரு இல்லாதவர் களுக்கு இறைவன் இவ்வழிபாட்டை உணர்த்துவதை வேண்டுதலாக வைப்பதாக வும் அமைந்துள்ளதுதான் இந்தப் பாடல்.

மேலும் முருகனுக்கு 16 உருவ வேறுபாடு கள் என்று குமார தந்திரம் கூறும். சக்தி வழிபாட்டில் 16 அட்சரங்கள்கொண்ட சோடஷி மந்திரம்தான் மிகவும் மேன்மை யானது. அதனால் இந்த 16 அட்சரங்கள் கொண்ட உருவாக, குருவாக வருவாய் குகனே என்று முடிக்கிறார் அருணகிரிநாதர். இங்கு குகன் என்னும் பதத்திற்கு ரகசியம் என்னும் பொருளும் கொள்ளவேண்டும். சக்தி வழிபாட்டை ரகசியமாக- ஏகாந்தமாக செய்யவேண்டும். அதனால்தான் குகன் என்னும் பதத்தில் முடிக்கிறார் அருளாளர்.

இவ்வாறு கந்தரனுபூதியில் காணும் இடமெல்லாம் சக்தியின் அருளாற்றலைப் பதிவுசெய்கிறார் அருணகிரிநாதர். ஆதலால் கந்தரனுபூதி ஒரு சாக்த நூலாக இருப்பது திண்ணம்.

முற்றும்

om010822
இதையும் படியுங்கள்
Subscribe