முருகப் பெருமானுக்குரிய குக்கே சுப்பிரமணியர் ஆலயம் தெற்கு கர்னாடக மாநிலத்தில், சல்லியா தாலுகாவில், மங்களூருக்கு அருகிலுள்ள சுப்ரமண்யா என்னும் கிராமத்தில் இருக்கிறது.

இந்தியாவிலுள்ள பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு குடி கொண்டிருக்கும் சுப்பிரமணியரை நாகர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.

ss

கருடன்மீதான அச்சத்தின் காரணமாக வாசுகி என்ற சர்ப்பமும், வேறு பல சர்ப்பங்களும் தங்களைக் காப்பாற்றி யருளும்படி சுப்பிரமணியரை வேண்டிக் கொண்டன. அவர்களை சுப்பிரமணியர் கருணை மனதுடன் காப்பாற்றினார். அதன்விளைவாக அவர் நாகர் குலத்த வரின் குலதெய்வமானார்.

இந்த ஆலயத்தில் நுழைவதற்குமுன்பு, இங்கிருக்கும் குமாரதாரா என்னும் நதியில் பக்தர்கள் நீராடுவார்கள். அதற்குப் பிறகு கோவிலைப் பிரதட்சிணம் செய்வார் கள். இந்த ஆலயத்தில் உயரமான ஒரு கருட ஸ்தம்பம் இருக்கிறது. அந்த ஸ்தம் பத்தை வெள்ளியால் மூடி வைத்திருக்கிறார் கள். ஏனென்றால் அதற்குள் வாசுகி என்னும் சர்ப்பம் இருப்பதாகவும், அதன் மூச்சுக்காற்றில் விஷம் கலந்திருக் கும் என்பதும் நம்பிக்கை. அந்த விஷத்திலிருந்து இங்கு வரும் பக்தர்களைக் காப்பாற்றுவதற்காகவே அந்த ஸ்தம்பத்தை வெள்ளியால் மூடிவைத்திருக்கிறார்கள்.

கர்ப்பக் கிரகத்திற்குள் சுப்பிரமணியர் நின்றுகொண்டிருக்கும் கோலத்தில் காட்சியளிக்கிறார். அவருக்கு அருகில் வாசுகி என்னும் சர்ப்பத்தின் சிலை உள்ளது. சேஷநாதரின் சிலையும் அதற்கருகில் இருக்கிறது. இங்குவரும் முருக பக்தர்கள் சுப்பிரமணியருடன் சேஷநாதர், வாசுகி சிலைகளையும் பக்திப் பரவத்துடன் வழிபடுவதைப் பார்க்கலாம்.

Advertisment

ss

இந்த ஆலயத்தில் நடைபெறும் சர்ப்பதோஷ பூஜை குறிப்பிடத்தக்கது.

ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் உரிய காலத்தில் திருமணம் நடக்காது. அந்தக் குறை நீங்குவதற்கு இந்த ஆலயத்திற்குச் செல்லுமாறு பொதுவாக ஜோதிடர்கள் கூறுவார்கள்.

இங்கு நடைபெறும் பூஜையில் கலந்துகொள்பவர்கள் இங்கு இரண்டு நாட்கள் இருக்கவேண்டிய திருக்கும். இங்கு நடைபெறும் சர்ப்ப பூஜை காலை 7.00 மணிக்கும், பின்னர் காலை 9.15 மணிக் கும் நடக்கும். இந்த பூஜைக்கு "ஆசலேசா பலி' என்று பெயர். இந்த பூஜையைச் செய்தால் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுதலை பெறலாம் என்பது நம்பிக்கை.

5,000 வருட பாரம்பரியம் கொண்டது இந்த ஆலயம்.

சுப்பிரமணியருக்கு கார்த்திகேயன் என்னும் பெயரும் உண்டு. அவரும் அவரது அண்ணன் கணேசரும் சேர்ந்து அரக்கர்களை அழித்தனர்.

தாரகன் என்னும் அரக்கனை அவர்கள் இருவரும் இணைந்து அழித்ததாகப் புராணம் கூறுகிறது.

அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த தேவர்களின் அரசரான இந்திரன், தன் மகளை சுப்பிரமணியர் என்னும் கார்த்திகேயனுக்கு மணம்செய்து தந்தான். அந்த கார்த்திகேயனை நினைத்து, சிவன்மீது அளவற்ற பக்தி வைத்திருக்கும் வாசுகி என்னும் சர்ப்பம் தவமிருக்க, மகிழ்ச்சியடைந்த சுப்பிரமணியர், "என்னிடம் நீ சரணடைந்துவிடு. உன்னை நான் காப்பாற்றுகிறேன்'' என்று கூறினார். அதைத் தொடர்ந்து சுப்ரமணியருடனே இருந்துவிடும் அரிய வாய்ப்பு வாசுகிக்குக் கிடைத்தது.

இந்த ஆலயத்தில் நடைபெறும் சர்ப்ப தோஷப் பூஜைக்குப் பின்னணியிலிருக்கும் கதை இதுதான்.

சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்பவர்கள் மங்களூருக்குப் பயணிக்க வேண்டும். பயண தூரம் 890 கிலோமீட்டர். பயண நேரம் 16 மணி. மங்களூரிலிருந்து 115 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.