மதுரை அருகிலுள்ள திருமங்கலத்திலிருந்து பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவில், புதுப்பட்டியை அடுத்து காடுபோன்ற இடத்தில் அமைந்துள்ளது கிருஷ்ண பிரம்ம முகேஸ்வரர் திருக்கோவில்.
பதினெட்டு சித்தர்கள், தியானபீடமுள்ள இங்கே 41 திருமேனிகள் இருக்கின்றன. இதில் பிரதானமாக கிருஷ்ண பிரம்ம முகேஸ்வரர் எனும் மூன்று முகங்கள்கொண்ட சிவபெருமான் அருள்புரிகிறார். முப்பெரும் சக்திகள் ஒன்றாகச் சேர்ந்த சர்வேஸ்வரர் ஆலயமாக கீதாலயா நகரில் கீர்த்தியுடன் திகழ்கிறது.
அன்னை அங்காள பரமேஸ்வரி கல்யாணக் கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
இங்கே சக்தி தேவதையாக வாராஹி அம்மனும், சித்தி தேவதையாக பாலாம்பிகை அம்மனும், ருத்ர தேவதையாக பிரத்தியங்கரா தேவியும், சாந்த தேவதையாக கருமாரி அம்மனும் தனித்தனி சந்நிதிகளில் அமர்ந்து நாடிவரும் பக்தர்களின் குறைகள் தீர்த்து பல அற்புதங்களை நிக
மதுரை அருகிலுள்ள திருமங்கலத்திலிருந்து பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவில், புதுப்பட்டியை அடுத்து காடுபோன்ற இடத்தில் அமைந்துள்ளது கிருஷ்ண பிரம்ம முகேஸ்வரர் திருக்கோவில்.
பதினெட்டு சித்தர்கள், தியானபீடமுள்ள இங்கே 41 திருமேனிகள் இருக்கின்றன. இதில் பிரதானமாக கிருஷ்ண பிரம்ம முகேஸ்வரர் எனும் மூன்று முகங்கள்கொண்ட சிவபெருமான் அருள்புரிகிறார். முப்பெரும் சக்திகள் ஒன்றாகச் சேர்ந்த சர்வேஸ்வரர் ஆலயமாக கீதாலயா நகரில் கீர்த்தியுடன் திகழ்கிறது.
அன்னை அங்காள பரமேஸ்வரி கல்யாணக் கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
இங்கே சக்தி தேவதையாக வாராஹி அம்மனும், சித்தி தேவதையாக பாலாம்பிகை அம்மனும், ருத்ர தேவதையாக பிரத்தியங்கரா தேவியும், சாந்த தேவதையாக கருமாரி அம்மனும் தனித்தனி சந்நிதிகளில் அமர்ந்து நாடிவரும் பக்தர்களின் குறைகள் தீர்த்து பல அற்புதங்களை நிகழ்த்திவருவது குறிப்பிடத்தக்கது.
பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும்- மனமுருக ஆழ்ந்த பக்தி யில் ஈடுபடவைக்கும் இந்தத் திருக் கோவில் சுமார் பத்து ஆண்டு களுக்குமுன் உருவாக்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி இடம் வாங்கப்பட்டு, மே ஐந்தாம் தேதி பூமி பூஜை போடப் பட்டு, ஜூன் ஐந்தாம் தேதி வாஸ்து பூஜை செய்யப்பட்டு, ஜூலை ஐந்தாம் தேதி முதல் செங்கல் வைத்து கட்டத் துவங்கப் பட்டு, அதிலிருந்து ஏழு மாத காலத்திற்குள் 41 சந்நிதிகளையும், 41 சுவாமி விக்ரகங்களையும் வைத்து, 2013, ஏப்ரல் 14-ஆம் தேதி கும்பாபிஷேக மானது ஆயிரக்கணக்கில் பக்தர்கள்கூட சிறப் பாக, கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவுபெற்று பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து, அனைவரும் வந்து வணங்கும் திருக்கோவிலாகப் புகழ்பெற்றுள்ளது.
இந்தத் திருக்கோவிலின் தனிசிறப்பு, சித்தர்கள் வாழ்ந்த பூமி என்பதாகும். முன்பு சித்தர் ராமதேவர் இங்கே வாழ்ந்ததாகவும் அவருடைய அதிஷ்டானம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்தத் திருக்கோவிலின் சிறப்புகளைக் கேள்விப்பட்டு, சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமன்றி வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும்கூட தற்போது பக்தர்கள் வரத் துவங்கியுள்ளனர்.
பில்லி, சூனியம், ஏவலில் பாதிக்கப்பட்ட பக்தர்கள் பிரத்தியங்கராவை வணங்கிச் சரணடைந்தால் தீயசக்திகள் விலகி நிம்மதி பெறுகிறார்கள்.
தவம் போன்ற சித்திகளை அடைய பாலாம்பிகையையும், வாராஹி அம்மனையும் வணங்கி நலம்பெறலாம்.
இங்குள்ள தெய்வங்கள் அமர்ந்த கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களின் பிரச்சினைகள், நோய்கள், சங்கடங்கள், எதிரி தொல்லைகள், உறவுப் பிரிவுகள் சரியாக நித்திய பூஜைகள் அனைத்து தெய்வ சந்நிதிகளிலும் தினமும் நடத்தப்படு கின்றன. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. பிரதோஷ பூஜைகள் பிரமாதமாக நடக்கிறது. ஆடிப்பூரத் திருவிழா, சித்தர் இராமதேவர் குருபூஜைப் பெருவிழா மற்றும் வளையல் சாற்று விழாவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இங்கு ஸ்வர்ணாகர்ஷண பைரவர் சந்நிதி, கல்யாண தட்சிணாமூர்த்தி சந்நிதி, பாலாம்பிகை நடுவிலிருக்க பதினெட்டு சித்தர்களும் தவக்கோலத்தில் சுற்றியிருக்கும் சந்நிதிகள் உள்ளன.
பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி காவல் தெய்வமாக இருக்கிறார்.
ஒவ்வொரு சுவாமியின் பீடத்தின்கீழ் அந்தந்த சுவாமியின் பிறப்பிட பிடிமண் எடுத்து வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.
இங்குள்ள சுவாமிகள் பக்தர்களுடன் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் தனிசிறப்பாகும்.
இந்த ஆலய நிர்வாகி மணி அம்மா என்று பக்தர்களால் வணங்கப்படும் 55 வயதான மணிமேகலை அம்மாள், திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்க்கையை இறைப் பணிக்கு அர்ப்பணித்துவருகிறார். ஆலய நிர்வாகக்குழு அறங்காவலர்களாக வினோத் குமார், திருநாவுக்கரசர், ஸ்ரீசாந்தி சிவராம கிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இந்த அற்புதமான திருக்கோவிலை சிறப்பாக நிர்வகித்து பக்தர்களின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்கள்.
இத்திருக்கோவிலின் பெருவிழாக்களுக் கும், சிறுமிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி களுக்கும், அன்னதானத்திற்கும் பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகளை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 5.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய திறந்திருக்கும்.
சிறப்புப் பூஜைகள், அர்ச்சனைகள், ஹோமங் கள், யாகங்கள் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்: 70106 06094.