மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.'
-திருவள்ளுவர்
நல்ல எண்ணங்கள்கொண்ட மனத்தூய்மையும்,
சிறந்த செயல்கள் செய்யும் செய்வினைத் தூய்மையும் ஆகிய இரண்டும்; தான் இருக்கும் இனத்தின் தூய்மை யால் சிந்தாமல் வரும் என்பதாம்.
இருமை என்றால் பகல்- இரவு, நன்மை- தீமை, இன்பம்- துன்பம் ஆகியவை போன்ற இருவகை நிலை. ஒரு சூழல் அல்லது ஒரு அம்சத்திலேயே இந்த இரட்டை நிலை கலந்திருக்கும். வெற்றியாகத் தோன்றுவது சட்டென்று தோல்வியாக மாறும். தோல்வியாகத் தோன்றுவது சட்டென்று வெற்றியாக மாறும். இன்பமாகத் தோன்றுவது சட்டென்று துன்பமாக மாறும். துன்பமாகத் தோன்றுவது சட்டென்று இன்பமாக மாறும். எனவே மாற்றங்களால் நிலை குலையத் தேவையில்லை.
அயோத்தியில் ஸ்ரீராமர் ஆட்சி நடந்தவேளை.
அரசவைக்கு வந்தார் சியவன முனிவர். "மதுராபுரி பகுதியில் லவணாசுரனின் அட்டூழியம் தாங்கமுடிய வில்லை. அவனை அழித்தருள வேண்டும்'' என்று இராமரிடம் வேண்டினார்.
"ஸ்ரீராமரால் இராவணன் அழிந்தபிறகும் அசுரர்களின் அட்ட காசம் ஓயவில்லை! நான் இப்போதே சென்று லவனா சுரனை அழித்து வருகிறேன்'' என்று ஆவேசப்பட்டார் சத்ருக்னன்.
சிரித்தார் ஸ்ரீராமர். "தம்பி, எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் திடீரென்று அதர்மம் தலை தூக்குவதும் அதை தர்மம் வீழ்த்துவதும் சகஜமாக நடக்கும்! உன் தர்ம ஆவேசம் சரியானது தான். ஆனால் லவனாசுரனை அழிப்பேன் என்கிறாயே- அது தவறு! அதர்மத்தை அழிக்கப்போவது நீ அல்ல. தர்மத்தை நிலைநிறுத்ததும் தெய்வீக விதி! பூர்வஜென்ம நல் வினைப் பயனால்தான் அதர்மிகளிடம் பலம் இருந்துகொண்டிருக்கிறது. நல்வினைப் பயன் தீரும்போது அவர்களின் பலம் நீங்கி பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து, அழிவார்கள். இதைச் செயல்படுத்தும் கருவியாக தர்மவான்களை தெய்வம் பயன்படுத்திக்கொள்ளும்'' என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து "லவணாசுரனின் நல்வினைப்பயன், இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.
அதனால்தான் அவனை அழிக்குமாறு சியவன முனிவர் இப்போது வேண்டுகிறார். அவன் தந்தைக்கு சிவபெருமான் அருளிய சக்திவாய்ந்த சூலாயுதம் அவனிடம் இருக்கிறது. ஆனால் அவனது அழிவுக்காலம் நெருங்கிவிட்டதால், அதை அவனால் இப்போது பயன்படுத்த முடியாது. அதே வேளையில் அவனிடம் கொஞ்ச நஞ்சம் எஞ்சியுள்ள பூர்வஜென்ம நல் வினைப் பயனால், முன்பு இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்துக்கு அனுமன் சிறிதுநேரம் கட்டுப்பட்டதுபோல, சிறிது நேரம் லவணாசுரனிடம் நீ சிறைப்பட வேண்டியிருக்கும். நான் தரும் விஷ்ணுபாணத்தைப் பயன்படுத்தி அவனை அழித்துவா!'' என்று ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்.
விரைந்தான் சத்ருக்கனன். லவணாசுரனிடம் கடும்போர். மாயாஜாலத்தினால் சத்ருக்னன்மீது கல்மழை பொழிய வைத்தான் லவணாசுரன். அவன் அம்புகளால் கூறை அமைத்துத் தடுத்தான். பிரம்மாண்ட மரங்களை வேரோடு பெயர்த்து வீசினான். அவை பலமாகத் தாக்கியதில் சத்ருக்னன் மயங்கி சாய்ந்தான். சில அசுரர்கள் அவனைத் தூக்கி அரண்மனைக் குள் கொண்டுசென்று தரையில் போட்டனர். அவனை எள்ளி நகையாடி வெற்றி ஆரவாரம் செய்து கொண்டிருந்தான் லவணாசுரன்.
சிறிது நேரத்தில் சத்ருக்னனுக்கு நினைவு திரும்பியது. சட்டென்று மாறியது சூழல். விஷ்ணுபாணத்தால் சத்ருக் னன் தாக்கினான். பட்டென்று வீழ்ந்தான் லவணாசுரன்.
விஷ்ணு (கிருஷ்ணர்) நீலநிறம், அவரது சகோதரியான அம்பாளும் நீலநிறம். திருப்பதி வேங்கடாசலபதிக்கு அம்பாள்போலவே பட்டுப்புடவை உடுத்தப்படுகிறது. அம்பாள் கோவில்கள்போலவே, திருப்பதியில் வெள்ளிக்கிழமையில்தான் விசேஷ அபிஷேகம் நடக்கிறது. இதில் இணைந்துள்ள ஆன்மிக விஷயம் என்னவென்றால் தெய்வ வடிவங்களில் ஆண்- பெண் என்ற இருமை உண்டு. ஆனால் தெய்வீகத் தன்மையில் இருமை கிடையாது!
எல்லாவற்றிலும் இருமை இருக்கும். இன்பம்- துன்பம் போன்ற இருமைகள் நிலையற்றவை. இவற்றின் மாயவலைகளில் சிக்கிவிடாமல், நிலை குலைந்து விடாமல், இருமை உணர்ந்தால் பெருமை என்பதை உணர்த்தி, உன்னதமான வாழ்வருளும் அற்புதமானதொரு திருத்தலம்தான் கிடாத்தலைமேடு ஸ்ரீதுர்க்க
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.'
-திருவள்ளுவர்
நல்ல எண்ணங்கள்கொண்ட மனத்தூய்மையும்,
சிறந்த செயல்கள் செய்யும் செய்வினைத் தூய்மையும் ஆகிய இரண்டும்; தான் இருக்கும் இனத்தின் தூய்மை யால் சிந்தாமல் வரும் என்பதாம்.
இருமை என்றால் பகல்- இரவு, நன்மை- தீமை, இன்பம்- துன்பம் ஆகியவை போன்ற இருவகை நிலை. ஒரு சூழல் அல்லது ஒரு அம்சத்திலேயே இந்த இரட்டை நிலை கலந்திருக்கும். வெற்றியாகத் தோன்றுவது சட்டென்று தோல்வியாக மாறும். தோல்வியாகத் தோன்றுவது சட்டென்று வெற்றியாக மாறும். இன்பமாகத் தோன்றுவது சட்டென்று துன்பமாக மாறும். துன்பமாகத் தோன்றுவது சட்டென்று இன்பமாக மாறும். எனவே மாற்றங்களால் நிலை குலையத் தேவையில்லை.
அயோத்தியில் ஸ்ரீராமர் ஆட்சி நடந்தவேளை.
அரசவைக்கு வந்தார் சியவன முனிவர். "மதுராபுரி பகுதியில் லவணாசுரனின் அட்டூழியம் தாங்கமுடிய வில்லை. அவனை அழித்தருள வேண்டும்'' என்று இராமரிடம் வேண்டினார்.
"ஸ்ரீராமரால் இராவணன் அழிந்தபிறகும் அசுரர்களின் அட்ட காசம் ஓயவில்லை! நான் இப்போதே சென்று லவனா சுரனை அழித்து வருகிறேன்'' என்று ஆவேசப்பட்டார் சத்ருக்னன்.
சிரித்தார் ஸ்ரீராமர். "தம்பி, எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் திடீரென்று அதர்மம் தலை தூக்குவதும் அதை தர்மம் வீழ்த்துவதும் சகஜமாக நடக்கும்! உன் தர்ம ஆவேசம் சரியானது தான். ஆனால் லவனாசுரனை அழிப்பேன் என்கிறாயே- அது தவறு! அதர்மத்தை அழிக்கப்போவது நீ அல்ல. தர்மத்தை நிலைநிறுத்ததும் தெய்வீக விதி! பூர்வஜென்ம நல் வினைப் பயனால்தான் அதர்மிகளிடம் பலம் இருந்துகொண்டிருக்கிறது. நல்வினைப் பயன் தீரும்போது அவர்களின் பலம் நீங்கி பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து, அழிவார்கள். இதைச் செயல்படுத்தும் கருவியாக தர்மவான்களை தெய்வம் பயன்படுத்திக்கொள்ளும்'' என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து "லவணாசுரனின் நல்வினைப்பயன், இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.
அதனால்தான் அவனை அழிக்குமாறு சியவன முனிவர் இப்போது வேண்டுகிறார். அவன் தந்தைக்கு சிவபெருமான் அருளிய சக்திவாய்ந்த சூலாயுதம் அவனிடம் இருக்கிறது. ஆனால் அவனது அழிவுக்காலம் நெருங்கிவிட்டதால், அதை அவனால் இப்போது பயன்படுத்த முடியாது. அதே வேளையில் அவனிடம் கொஞ்ச நஞ்சம் எஞ்சியுள்ள பூர்வஜென்ம நல் வினைப் பயனால், முன்பு இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்துக்கு அனுமன் சிறிதுநேரம் கட்டுப்பட்டதுபோல, சிறிது நேரம் லவணாசுரனிடம் நீ சிறைப்பட வேண்டியிருக்கும். நான் தரும் விஷ்ணுபாணத்தைப் பயன்படுத்தி அவனை அழித்துவா!'' என்று ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்.
விரைந்தான் சத்ருக்கனன். லவணாசுரனிடம் கடும்போர். மாயாஜாலத்தினால் சத்ருக்னன்மீது கல்மழை பொழிய வைத்தான் லவணாசுரன். அவன் அம்புகளால் கூறை அமைத்துத் தடுத்தான். பிரம்மாண்ட மரங்களை வேரோடு பெயர்த்து வீசினான். அவை பலமாகத் தாக்கியதில் சத்ருக்னன் மயங்கி சாய்ந்தான். சில அசுரர்கள் அவனைத் தூக்கி அரண்மனைக் குள் கொண்டுசென்று தரையில் போட்டனர். அவனை எள்ளி நகையாடி வெற்றி ஆரவாரம் செய்து கொண்டிருந்தான் லவணாசுரன்.
சிறிது நேரத்தில் சத்ருக்னனுக்கு நினைவு திரும்பியது. சட்டென்று மாறியது சூழல். விஷ்ணுபாணத்தால் சத்ருக் னன் தாக்கினான். பட்டென்று வீழ்ந்தான் லவணாசுரன்.
விஷ்ணு (கிருஷ்ணர்) நீலநிறம், அவரது சகோதரியான அம்பாளும் நீலநிறம். திருப்பதி வேங்கடாசலபதிக்கு அம்பாள்போலவே பட்டுப்புடவை உடுத்தப்படுகிறது. அம்பாள் கோவில்கள்போலவே, திருப்பதியில் வெள்ளிக்கிழமையில்தான் விசேஷ அபிஷேகம் நடக்கிறது. இதில் இணைந்துள்ள ஆன்மிக விஷயம் என்னவென்றால் தெய்வ வடிவங்களில் ஆண்- பெண் என்ற இருமை உண்டு. ஆனால் தெய்வீகத் தன்மையில் இருமை கிடையாது!
எல்லாவற்றிலும் இருமை இருக்கும். இன்பம்- துன்பம் போன்ற இருமைகள் நிலையற்றவை. இவற்றின் மாயவலைகளில் சிக்கிவிடாமல், நிலை குலைந்து விடாமல், இருமை உணர்ந்தால் பெருமை என்பதை உணர்த்தி, உன்னதமான வாழ்வருளும் அற்புதமானதொரு திருத்தலம்தான் கிடாத்தலைமேடு ஸ்ரீதுர்க்காபுரீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: துர்க்காபுரீஸ்வரர்.
இறைவி: காமுகாம்பாள்.
விசேஷமூர்த்தி: துர்க்காம்பாள்.
ஊர்: கிடாத்தலைமேடு.
தலவிருட்சம்: வில்வமரம்.
தீர்த்தம்: காவிரி தீர்த்தம்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமையுடன் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றானதும், தேவார வைப்புத் தலங்களில் ஒன்றானதும், அக்னி புராணத்துக்குத் தொடர்புடையதுமான இத்திருக்கோவிலில் அனுதினமும் நான்குகால பூஜைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் கிடாத்தலைமேடு துர்க்காபுரீஸ்வரர் திருக்கோவில்.
"அடலுடைச் சூலமேந்தி யழல்விழி மடங்கலூர்ந்து
குழல்குழம்பிய வெந்தீயோர் குலமெலாஞ் சவட்டுந்தேவி
மிடலுடை மகிடன் சென்னி வெட்டிவீழ்த் தியவிடத்தைக்
கடல்வளை யுலகத்துள்ளார் கடாத்தலை மேடென்பரால்.'
-திருவாழ்கொளிப்புத்தூர் புராணம்.
தல வரலாறு
ஆசை இருக்கும்வரையில் செயல்பாடுகள் இருந்துகொண்டேதானிருக்கும். ஆசைகள் நிறைவேறும்போது மகிழ்ச்சி உண்டாகிறது. நிறைவேறாதபோது துன்பம் உண்டாகிறது. இந்து சமயங்களில் ஆசையைத் தூண்டு பவனாக "மன்மதன்' குறிக்கப்படுகிறான்! அவனுடைய செயலாலேயே இவ்வுலகம் நடைபெறுகிறதென்று சமய நூல்கள் கூறுகின்றன.
எனவே உலக வளர்ச்சிக்கு அவன் இன்றியமையாதவனே. மன்மதன் என்பதற்கு "மனதில் சிற்றின்ப ஆசைகளைத் தோற்றுவித்து, அலை அலையாய் அவை வளரும்படி செய்பவன்' என்று பொருள். புராணங்களில் காதலின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் இவன் திருமாலின் மானச புத்திரன். இவனது மனைவி ரதிதேவியாவாள்.
காசிபமுனிவர்- மாயை இவ்விருவருக்கும் புதல்வர்களாய்த் தோன்றியவர்கள் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன். இவ்வசுரர் கள் பிரம்மனைக் குறித்து தவமியற்றி பல அரிய வரங்களைப் பெற்றதோடு கடல் நடுவே வீரமகேந்திரபுரம் எனும் பட்டினத் தையும் நிர்மாணித்து அதிலிருந்து 108 அண்டங்களையும் அடக்கியாண்டனர்.
அதுமட்டுமன்றி அவர்கள் தேவர்களையும் பதவியிலிருந்து நீக்கி அந்த பட்டினங்களையும் தங்கள் உரிமையாக்கிக்கொண்டனர்.
இதனால் நாடிழந்த இந்திரன் மற்றும் தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி பிரம்மனிடம் முறையிட... அவரோ சிவனும் உமையும் சேர்ந்து தோன்றும் குமாரனால் மட்டுமே அவர்களே அழிக்கமுடியும் என்கிற வரத்தை தான் அவர்களுக்கு வழங்கியதாகக் கூற... அப்போது யோகநிலையில் மன அடக்கத்துடன் தவமியற்றிக்கொண்டிருக்கும் சிவபெருமானுக்கும், அவருக்கு பணிவிட செய்துகொண்டிருக்கும் உமையவளுக்கும் இச்சை தோன்றினாலொழிய அவர்களுக்கு புத்திரன் பிறக்க வாய்ப்பில்லை என்பதை கருத்தில்கொண்டு, அனைவரும் மன்மதனின் உதவியை நாட.... அவர்களின் வற்புறுத்தலி னால் தனது மனைவி ரதிதேவியுடன் கயிலை மலைக்குச் சென்று பெருமான் தவமியற்றும் சோலையை அடைந்து, தருணம் பார்த்து மலர்க்கணைகளை எய்தான்!
ஒரு கணம் மனம் தடுமாறிய இருவரும் பின் இயல்பு நிலையை அடைந்த னர். யோக நிலையை மறந்து மோகம் கொள்ள செய்தவன் யார் என்று கோபம் கொண்டபோது, புன்னை மரத்தின் பின்னே மறைந்து நின்றுகொண்டிருந்த மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்துவிட, அக்கணமே சாம்பலாகிப் போனான் மன்மதன். இந்த நிகழ்வு கொற்கையில் நடந்தது. ரதிதேவி பெருமானின் பாதங்களில் கதறியழுது கணவனை மீட்டுத் தருமாறு வேண்ட... பெருமானும் அவளுக்கு உறுதியளித்தார்.
பின்னர் பெருமானுக்கும் உமையவளுக்கும் திருமணம் நடைபெற, பெருமானும், ரதிதேவிக்கு வாக்கு அளித்தபடியே, "உன் கணவன் உயிர் பெற்றுவிட்டான். ஆனால் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்' என்ற வரத்தினை பொன்னூரில் தந்தார். "பின்னாளில் திருமால் கண்ணனாக அவதரிக்கும்போது மன்மதன் அவருக்கு மகனாகப் பிறப்பான்- பிரத்யும்னன் என்ற பெயரில்! நீ மாயாவதி என்கிற பெயருடன் அவனை மணப்பாய்!' என்று வரமளித்தார்.
பின்னர் சிவ- பார்வதியரின் மகனாக குமரன் அவதரித்ததும், அந்தக் குமரக் கடவுள் சூரபத்மனையும், மற்ற அசுரர் களையும் அழித்ததும் அனைவரும் அழிந்த கதை. (மேற்சொன்ன இந்த நிகழ்ச்சி காளி தாசனின் குமார சம்பவம் மற்றும் கந்தபுராணம், மகா ஸ்காந்தம் போன்ற நூல்களில் சொல்லப் பட்டுள்ளது) தன் நாயகனுக்கு ஏற்பட்ட சோக நிகழ்வைப் பார்த்து வருந்திய ரதிதேவி பொன்னூர் என்னும் இடத்தில் தவச்சாலை அமைத்து தவமிருந்ததன் பலனாக மன்மதனை மீண்டும் பெற்றாள். அத்தகைய மன்மதன் கிடாத்தலைமேடு என்ற தலத்தில் உறையும் அம்மையப்பனை மெய்யுணர்வோடு வழிபட்டான். அவனது பக்திக்கு மனமிரங்கி அம்பாள் அவனுக்கு கரும்புவில்லையும், புஷ்ப பாணங்களையும் மீண்டும் தந்தருளினார். காமனுக்கு அருள்புரிந்ததால் அம்பாள் காமுகாம்பாள் என பெயர்பெற்றாள்.
தல வரலாறு
அரக்கர்களின் ராஜா தான் ரம்பன். அவனுக்கு பிரம்மனின் பூரண ஆசிர்வாதம் இருந்ததால் எல்லா மக்களையும் அடக்கி ஆள ஆரம்பித்தான். ஒருநாள் அவன் அழகான ஒரு பெண்ணைக் கண்டு காதலில் வீழ்ந்தான். அந்த பெண் ஒரு எருமை உருவம் உடையவள்.
அவள் மகிஷினி என்ற பெயரைப் பெற்றாள். ரம்பனும் ஓர் ஆண் எருமையாக மாறி அவளையே மணந்துகொண்டான். ஆனால் அவன் விலங்காக இருக்கும்போதே மற்றொரு எருமை தாக்கி அவன் இறந்து போனான்.
மகிஷினி தன் கணவர் இறந்தபிறகு தானும் இறந்துவிட வேண்டும் என்ற முடிவை எடுத்தாள். அச்சமயம் அவள் கர்ப்பமாக இருந்ததால் நெருப்பில் குதித்து மாய்த்துக்கொள்ளவெடுத்தாள்.
அப்பொழுதுதான் நெருப்பிலிருந்து எருமைத் தலையும் மனித உடலும்கொண்ட அறக்கன் மகிஷாசுரன் என்ற மகனாக எழுந்துவந்தான். அவன் அரக்கர் குலத்திற்கு தலைமை ஏற்றான்.
மகிஷாசுரன் தன்னுடைய சக்தியை அதிகரிக்க பிரம்மதேவனை நோக்கி பதினாயிரம் ஆண்டுகள் கடும் தவம்புரிந்தான். தவக் காலத்தில் உணவு ஏதும் அருந்தாமல் ஒற்றைக் காலில் நின்றே தவம் செய்துவந்தான். ஒரே இடத்தில் அசையாமல் தவம்புரிய, அவனை சுற்றி ஒரு எறும்புப் புற்றே உருவாகி இருந்தது. ஆனால் மகிஷாசுரன் அதை சிறிதளவும் பொருட் படுத்தவில்லை. அவனுடைய கடுந்தவத்தைப் பார்த்து மூன்று உலகமும் வியந்து இருந்தது.
அவனுடைய தவத்தில் மெய் மறந்த பிரம்மதேவர் அவன் முன் தோன்றி கேட்ட வரத்தைக் கொடுத்து அருள்புரிந்தார். கடவுள், இவ்வுலக ஆண்கள் இப்படி யாராலும் தன்னை அழிக்கமுடியாத ஒரு பயங்கரமான வரத்தைப் பெற்றுவிட்டான் மகிஷாசுரன்.
அதன்பிறகு அவன் ஆட்டம் அதிகமாக ஆரம்பித்தது. அவனுடைய வரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் அழிவுப்பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கினான். மூன்றுலக மக்களையும் அடிமைப்படுத்திப் கொடுமைப்படுத்த அவனுடைய அட்டகாசம் எல்லை தாண்டிப் போயிற்று.
எருமைக்கிடாவின் தலையைக்கொண்ட மகிஷாசுரன் என்ற அரக்கனது தொல்லை யிலிருந்து தங்களைக் காத்தருள வேண்டும் என அம்பிகையைச் சரணடைய; அம்பாள் கடும் கோபத்துடன் போருக்கு புறப் பட்டாள். அசுரனின் தலையை வெட்டினாள்.
அது பூலோகத்தில் விழுந்த இடம் "கிடாத்தலைமேடு' என்றழைக்கப்பட்டது.
அசுரனானாலும் ஒரு உயிரைக் கொன்ற பழி தீர பூலோகம் வந்து சிவபூஜை செய்தாள். அவள் வழிபட்ட லிங்கத்திற்கு "துர்க்காபுரீஸ்வரர்' என்றும், அந்த இடம் "கிடாத்தலைமேடு' என்றும் பெயர்பெற்றது.
சிறப்பம்சங்கள்
ப் இத்தலத்திலுள்ள துர்க்காம்பாள் மிகுந்த வரப்ரசாதியாக அருள்புரிகிறாள். கிடா ரூபத்தில் காணப்படும் மகிஷனின் தலைமேல் நின்ற கோலத்தில் வடக்கு திசை நோக்கி துர்க்காதேவி சிம்ம வாகனம் மற்றும் எட்டுகரங்களுடன் காட்சிதருகிறாள்.
இரண்டு கரங்களில் அபய, வரத முத்திரை தாங்கியும், ஐந்து கரங்களில் சக்கரம், பாணம், கத்தி உள்ளிட்டவற்றை கேடயமாகத் தரித்தும் ஓர் இடக்கரத்தை தொடையில் பதித்தும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கி றாள். இத்தகைய துர்க்கையின் மகிமைகளை என்னென்று சொல்வது...
சிற்பியிடம் மூக்குத்தி கேட்ட துர்க்கை இத்தலத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கையம்மன் சிறிய மூக்குத்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். அம்பாள் சிலையில் மூக்குத்தி அணிவிக்கப்பட்ட புராண வரலாறு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இக்கோவில் புதியதாக கட்டப்பட்ட சமயத்தில் அம்மனுக்கு புதிய சிலை வடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அற்புதமான தொழில் நுணுக்கத்துடன் சிற்பி துர்க்கை அம்மன் சிலையை வடிவமைத்தார். சிலையை நன்கு முடித்த மகிழ்ச்சியில் இரவு சிற்பி அயர்ந்து தூங்கினார். கனவில் தோன்றிய அம்மன், "சிலையில் மூக்குத்தி அணிவிக்கப்படவில்லையே!' என்று சிற்பியிடம் கேட்டு மூக்குத்தி அணிவிக்க வேண்டுமென தெரிவித்தாள்.
அதிர்ச்சியுடன் தூக்கத்திலிருந்து எழுந்த சிற்பி செய்வதறியாமல் திகைத்துப் போனார். கருங்கல்லால் செதுக்கப்பட்ட அம்மன் சிலையின் மூக்குப் பகுதியில், இப்போது துளையிட முற்பட்டால், அந்தப் பகுதி முழுவதும் சிதைந்துவிடுமே என்பதை நினைத்து வேதனையடைந்தார். சிறிது நேரத்தில் தன்னை அறியாமல் கண்ணயர்ந்தார். அப்போது மீண்டும் சிற்பியின் கனவில் தோன்றிய அம்மன் கவலைப்பட வேண்டாம் எனவும், சிலையின் மூக்குப் பகுதியில் சிற்பி உளிமை வைத்தவுடனே மூக்குத்தி போட மெல்லிய துவாரம் அமையும் என்றும் கூறினாள்.
அம்மனின் கருணையை நினைத்து மகிழ்ச்சியடைந்த சிற்பி எப்போது பொழுது விடியும் என்று ஆவலோடு காத்திருந்து, விடிந்ததுமே சிறிய உளியை எடுத்து, செதுக்கப்பட்ட அம்மன் சிலையின் மூக்குப்பகுதியில் வைத்தவுடனேயே முடியளவில் மெல்லிய துவாரம் அமைந்தது. சிலையின் மூக்குப்பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆச்சரியத்தில் மூழ்கிய சிற்பி சிலையில் சிறிய மூக்குத்தியை அணிவித்து பேரானந்தம் அடைந்தார். சிற்பியால் அப்போது அணிவிக்கப்பட்ட மூக்குத்தியுடன் அம்மன் இன்றும் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
அக்னி புராணத்தோடு தொடர்புடைய இத்தலத்தில் அகத்திய மாமுனிவர் வழிபட்டதாக அக்னி புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பல தெய்வீகத் திருவிளையாடல்கள் புரிந்த இத்தல துர்க்கை அம்மன் சுமங்க- பூஜையில் பங்கேற்ற நிகழ்வும் மெய்சிலிர்க்க வைக்கிறது. பௌர்ணமியன்று துர்க்கா ஹோமம் நடத்தி சுமங்கலிகளுக்கு சேலை வழங்குவது வழக்கம். 30 ஆண்டுகளுக்குமுன் 1990-ல் ஒருமுறை சிறப்பு வழிபாடாக 300 சுமங்கலிகள் பூஜையில் கலந்துகொள்ள ஏற்பாடாகி இருந்தது. ஆனால் 299 சுமங்கலிகள் மட்டுமே பூஜைக்கு வந்திருந்தனர். அதனால் துர்க்கையை சுமங்கலியாக பாவித்து ஒரு ரவிக்கையும் புடவையும் பாதத்தில் வைத்து பூஜையைத் தொடங்கினர். பூஜை முடியும் நேரத்தில் ஒரு வயதான சுமங்கலி வந்தார். திருப்தியாக சாப்பிட்டதோடு புடவையும் வாங்கியபிறகு மறைந்துவிட்டார். சிறிது நேரம் கழித்து அவரை எங்கும் காணமுடியவில்லை. பின்னர் மாலையில் ஒரு சிறுமியின் வழியாக குறி சொல்லிய அம்மன், அந்த வயதான பெண்ணாக வந்தது தான்தான் என்று தெரிவித்ததாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். துர்க்கையே இவ்வாறு வந்து பெற்றுச் சென்றதாக ஐதீகம்.
துர்க்கை சந்நிதிக்கு எதிரே 20 அடி உயர திரிசூலம் உள்ளது. இதனை சாமுண்டீஸ்வரியாக எண்ணி வழிபடுகின் றனர். விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்கள் தொழிலுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி இந்த சூலசாமுண்டீஸ்வரியை வழிபடுகின்றனர்.
விசேஷகாலங்களில் துர்க்கையின் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புவதாக ஆலயத்தின் முக்கியஸ்தர் சேதுராமன் கூறுகிறார். துர்க்கையம்மனை எந்த தினத்தில் எப்படி வழிபடலாம் என்பதை ஆலய சிவாச்சாரியார் சந்திரசேகர சிவம் கூறுகையில்;
துன்பங்களுக்குத் தீர்வுகாணும் துர்க்கை வழிபாடு
ஞாயிறு: ஆலயங்களில் காட்சிதரும் துர்க்கைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் புதிய வெள்ளைத் துணியில் திரிசெய்து நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடவேண்டும்.
அப்போது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கவேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகுவதோடு அனைத்து வகையிலும் நன்மை உண்டாகும்.
திங்கள்: திங்கட்கிழமை காலை 7.30 மணிமுதல் 9.00 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடவேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும். மேலும் வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும்.
செவ்வாய்: ராகு காலமான 3.00 மணிமுதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்தியம் படைத்து துர்க்கையை வழிபட மாங்கல்ய பலமும் குழந்தை பாக்கியமும் கிட்டும்.
புதன்கிழமை: மதியம் 12.00 மணிமுதல் 1.30 மணிக்குள் பஞ்சுத்திரி செய்து விளக்கேற்றி புளியோதரை நைவேத்தியம் படைத்து துர்க்கையை வழிபடவேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும். மேலும் ரத்த சம்பந்தமான நோய் நீங்கும்.
வியாழக்கிழமை: மதியம் 1.30 மணிமுதல் 3.00 மணிக்குள் விளக்கேற்றி எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைப் பதோடு, இதய சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமை விரதமிருந்து ராகு காலமான காலை 10.30 மணிமுதல் 12.00 மணிக்குள் துர்க்கையை நான்கு எலுமிச்சை தீபமேற்றி தேங்காய் சாதம் மற்றும் பாயசம் நைவேத்தியமாக படைக்கவேண்டும். இதனால தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும். இது மற்ற நாட்களை விட மிகவும் ஏற்றம் தரும் காலம் ஆகும்.
சனிக்கிழமை: காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்து வழிபடவேண்டும். இதனால் வேலைவாய்ப்பு கிட்டும். அரசியல் வாதிகள் ஏற்றம் பெறுவர். சிறுநீரகக் கோளாறு பிரச்சினை நீங்கும்.
இத்தலத்தில் ராகுகால வழிபாடு, மாசிமாதம் ரதி மன்மதனுக்கு அம்பாள் காட்சிதந்தது, நவராத்திரி, ஆடிவெள்ளி, கார்த்திகை சோமவாரம் மற்றும் சிவராத்திரி யன்று 1008 சங்காபிக்ஷேகம், பிரதோஷ வழிபாடுகள் முறையாக நடக்கும்.
"திருமணம் தடைப்படுகிறதா? தம்பதி களுக்குள் கருத்து வேறுபாடா? மழலைச் செல்வம் கிடைக்கவில்லையா? எளியோரை வலியோர் தாக்கி பாதித்தவரா? செய்வினை ஏவல்களுக்கு அகப்பட்டவரா? விவசாயம் செழிக்கவேண்டுமா? கால்நடை வளர்ப்பு சரியில்லையா? பெற்றோரின் கட்டாய ஆசீர்வாதம் வாங்கி காதல் திருமணம் செய்தவரா? எதுவாயினும் கிடாத்தலைமேடு காமுகாம்பாள் சமேத துர்க்காபுரீஸ்வரரை வணங்கி துர்க்கையிடம் விண்ணப்பம் வையுங்கள். தோல்வி முகம் காணாமல் வெற்றி முகத்துடன் வீடு திரும்புங்கள்'' என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார் ஆலய அர்ச்சகரான சந்திரசேகர சிவாச் சாரியார்.
துன்பங்களைத் துடைத்து குலம்
தழைத்திட வழிவகை செய்யும் கிடாத்தலை மேடு கிருபாகரியாம் துர்க்காம்பாள் பாதம் பணிவோம், பன்மடங்கு பலன் பெற்று சிறப் புடன் வாழ்வோம்.
திருக்கோவில் அமைப்பு: காவிரி வடகரையில் வைப்புதலமாக, சிறிய ஊரின் மையத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் முகப்புவாயில் நம்மை வரவேற்கும் வண்ணம் நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று அமைந்துள்ளது.
பிரதோஷ நந்தி, விநாயகரை வழிபட்டபின் உள்நுழைவாயில் மகாமண்டபத்தை கடந்தவுடன் கிழக்கு நோக்கிய வண்ணம் அர்த்தமண்டபத்திற்கப்பால் கம்பீரமாக துர்க்காபுரீஸ்வரரும், தெற்கு நோக்கியபடி காமுகாம்பாள் சந்நிதியும் உள்ளன.
கடந்த கர வருடம் சித்திரை மாதம் 8-ஆம் நாள் (21-4-2011) அன்று கும்பாபிஷே கம் நடைபெற்று 12 ஆண்டுகள் பூர்த்தி யான நிலையில் கூடிய விரைவில் கும்பாபிஷேத்திருப்பணி தொடங்க உள்ளதாக ஆலய முக்கியப் பொறுப்பாளர் எம். சேதுராமன் தெரிவித்தார்.
காலை 6.30 மணிமுதல் 12.00 மணிவரை; 5.00 மணிமுதல் 7.30 மணிவரை ஆலயம் திறந் திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், ஸ்ரீ துர்க்காபுரீஸ்வரர் திருக்கோவில், கிடாத்தலைமேடு, காளி (அஞ்சல்) மயிலாடுதுறை மாவட்டம்- 609 811. சந்திரசேகர சிவாச்சாரியார். செல்: 94438 77040. முக்கியப் பொறுப்பாளர் எம். சேதுராமன், செல்: 99528 44467.
மெய் காவலர், ஆர். ராஜகுமாரி, செல்: 93451 47325.
அமைவிடம்: மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், திருமணஞ்சேரிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து காளி என்ற ஊருக்கும், திருமணஞ்சேரிக்கு நகர பேருந்து கள் உள்ளன. இரண்டு ஊர்களிலிருந்தும் ஆட்டோ வசதி உள்ளது.
படங்கள்: போட்டோ கருணா