கேட்பதை அருளும் கீழப்பழுவூர் ஆலந்துறையார்! - நெய்வாசல் நெடுஞ்செழியன்

/idhalgal/om/keezapavuur-alanthuraiyar-who-blessed-listen-neivasal-nedunchezhiyan

ல்லால மரத்தின் கீழிருந்து அருள்பா-க்கும் யோகக்கடவுளாம் ஞானகுரு திருவடிவத்தை, ஞானமும் வித்தைகளில் பாண்டித்யமும் வேண்டுவோர் வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு சிவாலயத்திலும் கருவறைக் கோட்டத்தின் வெளியில் தென்முகமாக அமர்ந்து அருள்பாலிக் கும் இவரை தட்சிணாமூர்த்தி என்பர். இவ்வுருவுடன் குடும்ப ஒற்றுமை மற்றும் தாம்பத்திய பாக்கியத்தையளிக்கும் அர்த்த நாரீஸ்வரர், எமபயம் நீக்கி எதிரிகளை சம்ஹாரம் செய்யும் காலசம்ஹார மூர்த்தி, அம்பிகை தவம்செய்து இறைவனை மணந்துகொண்டதால் திருமண பாக்கியமளிக்கும் கல்யாண சுந்தரர், யானையின் தோலுரித்த கஜசம்ஹாரர் போன்ற சிவ வடிவங் களுடனும், பரசுராமரின் வேண்டு தலுக்கேற்ப சகல தேவர்களும் சூட்சும ரூபமாக உறைந்து, வழிபடுவோருக்கு சகல செல்வங்களை அளிக்கும் தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது கீழப்பழுவூர் அருள்மிகு அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையார் திருக்கோவில்.

ss

ஊர் மற்றும் தலச்சிறப்பு

இவ்வாலயத்தின் தலவிருட்சமான ஆலமரத்திற்கு "பழு' என்று மற்றொரு பெயருமுண்டு. ஒரு காலத்தில் பெரும் ஆலமரக்காடுகளாக இவ்வூர் இருந்தமை யாலும், பழுவேட்டரை யர்கள் என்ற பட்டம் பெற்ற ஒரு சமூகத்தினர் பெருமளவில் வசித்த தாலும், மாமன்னன் இராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் மன்னனின் நம்பிக்கைக் குரியவராய்த் திகழ்ந்து தஞ்சை அரண்மனை தனாதிகாரிகளாகவும், ஆலோசகர்களாகவும், கோவில் நிர்வாகி களாகவும் பணியாற் றிய பெரிய பழுவேட்ட ரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் சிற்றரசர்களாக இருந்து ஆட்சிபுரிந்த பகுதியாதலாலும், ஊருக்குப் பழுவூர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும். மன்னராட்சிக் காலத்தில் மிகப்பெரிய நிலப்பரப்புடன் திகழ்ந்த இவ்வூர் காலப் போக்கில் கீழப்பழுவூர், மேலப்பழுவூர் என இரண்டு ஊர்களாகப் பிரிந்தது.

மூவர், முனிவர், முக்கோடி தேவர்கள் அனைவரும் இருக்குமிடமாக இந்த கீழப்பழுவூர் போற்றப்படுகிறது. உமையம்மை தவம் மேற்கொண்ட பதி. பிரம்மன், திருமால், அகத்தியர், இந்திரன், சந்திரன், சூரியன், வசிட்டர், காசியபர், வியாசர், பரசுராமர் முதலியோர் வழிபட்ட பெருமையுடைய தலம். மாத்ருஹத்தி தோஷம் மற்றும் திருமணத்தடை நீக்கும் தலமாகவும், பிரிந்த தம்பதியினரை சேர்க்கும் தலமாகவும் விளங்குகிறது. புராணப் பெயர் திருப்பழுவூர்; வழக்கில் கீழப்பழுவூர் மற்றும் சிறு பழுவூர். அம்பிகை ஆதியில் தவம்செய்த தலமாதலால் யோகவனம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இறைவன் ஆலமரத்தின் கீழிருந்து அருள் பாலித்தமையால் ஆலந்துறையாரானார்.

வடமூலேஸ்வரர், யோகவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இ

ல்லால மரத்தின் கீழிருந்து அருள்பா-க்கும் யோகக்கடவுளாம் ஞானகுரு திருவடிவத்தை, ஞானமும் வித்தைகளில் பாண்டித்யமும் வேண்டுவோர் வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு சிவாலயத்திலும் கருவறைக் கோட்டத்தின் வெளியில் தென்முகமாக அமர்ந்து அருள்பாலிக் கும் இவரை தட்சிணாமூர்த்தி என்பர். இவ்வுருவுடன் குடும்ப ஒற்றுமை மற்றும் தாம்பத்திய பாக்கியத்தையளிக்கும் அர்த்த நாரீஸ்வரர், எமபயம் நீக்கி எதிரிகளை சம்ஹாரம் செய்யும் காலசம்ஹார மூர்த்தி, அம்பிகை தவம்செய்து இறைவனை மணந்துகொண்டதால் திருமண பாக்கியமளிக்கும் கல்யாண சுந்தரர், யானையின் தோலுரித்த கஜசம்ஹாரர் போன்ற சிவ வடிவங் களுடனும், பரசுராமரின் வேண்டு தலுக்கேற்ப சகல தேவர்களும் சூட்சும ரூபமாக உறைந்து, வழிபடுவோருக்கு சகல செல்வங்களை அளிக்கும் தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது கீழப்பழுவூர் அருள்மிகு அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையார் திருக்கோவில்.

ss

ஊர் மற்றும் தலச்சிறப்பு

இவ்வாலயத்தின் தலவிருட்சமான ஆலமரத்திற்கு "பழு' என்று மற்றொரு பெயருமுண்டு. ஒரு காலத்தில் பெரும் ஆலமரக்காடுகளாக இவ்வூர் இருந்தமை யாலும், பழுவேட்டரை யர்கள் என்ற பட்டம் பெற்ற ஒரு சமூகத்தினர் பெருமளவில் வசித்த தாலும், மாமன்னன் இராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் மன்னனின் நம்பிக்கைக் குரியவராய்த் திகழ்ந்து தஞ்சை அரண்மனை தனாதிகாரிகளாகவும், ஆலோசகர்களாகவும், கோவில் நிர்வாகி களாகவும் பணியாற் றிய பெரிய பழுவேட்ட ரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் சிற்றரசர்களாக இருந்து ஆட்சிபுரிந்த பகுதியாதலாலும், ஊருக்குப் பழுவூர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும். மன்னராட்சிக் காலத்தில் மிகப்பெரிய நிலப்பரப்புடன் திகழ்ந்த இவ்வூர் காலப் போக்கில் கீழப்பழுவூர், மேலப்பழுவூர் என இரண்டு ஊர்களாகப் பிரிந்தது.

மூவர், முனிவர், முக்கோடி தேவர்கள் அனைவரும் இருக்குமிடமாக இந்த கீழப்பழுவூர் போற்றப்படுகிறது. உமையம்மை தவம் மேற்கொண்ட பதி. பிரம்மன், திருமால், அகத்தியர், இந்திரன், சந்திரன், சூரியன், வசிட்டர், காசியபர், வியாசர், பரசுராமர் முதலியோர் வழிபட்ட பெருமையுடைய தலம். மாத்ருஹத்தி தோஷம் மற்றும் திருமணத்தடை நீக்கும் தலமாகவும், பிரிந்த தம்பதியினரை சேர்க்கும் தலமாகவும் விளங்குகிறது. புராணப் பெயர் திருப்பழுவூர்; வழக்கில் கீழப்பழுவூர் மற்றும் சிறு பழுவூர். அம்பிகை ஆதியில் தவம்செய்த தலமாதலால் யோகவனம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இறைவன் ஆலமரத்தின் கீழிருந்து அருள் பாலித்தமையால் ஆலந்துறையாரானார்.

வடமூலேஸ்வரர், யோகவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி அருந் தவநாயகி யோக தபஸ்வினி என்றும் அழைக்கப்படுகிறாள். தல விருட்சம்: ஆலமரம்; தலதீர்த்தம்: பிரம்ம தீர்த்தம். (கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.) சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமையப்பெற்றுள்ள 63 தேவாரத் தலங்களுள் 55-ஆவது தலமாகப் போற்றப்படுகிறது. ஆகமம்: சிவாகமம். மருத்துவக்குடி பஞ்சாங்கம் இத்தலத்தை ஆதிகுலத் தலமென்று கூறுகிறது. இங்கு அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிப்பவர் கல்வியும், செல்வமும் பெறுவர்.

ss

தல வரலாறு

கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களைப் பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவ பெருமான் தனது தேவி யிடம், "விளையாட்டாக செய்தாலும் மற்றவர் களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால் அது பாவமேயாகும். இந்தப் பாவத்திற்குப் பிராயச்சித்தமாக நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம்செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்குவந்து உன்னுடன் சேர்வேன்'' என்றார்.

அதன்படி பார்வதி தேவியார் யோகவனத் தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்துத் தவம்செய்தாள். தவமிருந்த அம்பிகைக்கு உறுதுணையாக சப்தமாதர் களும், வீரபத்திரரும் உடனிருந்தனர். தவம் முற்றுப்பெற்றவுடன் இறைவன் தோன்றி உமையுடன் இணைந்தார். உமையம்மை தவம்செய்த அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம்செய்த அம்பிகை என்பதால் அம்பாள் அருந்தவநாயகி எனப் படுகிறாள்.

தாய் செய்த தவறுக்காக தந்தையின் சொற்படி மகனான பரசுராமன் தாய் ரேணுகா தேவியைக் கொன்றதால் மாத்ருஹத்தி தோஷம் பீடித்தது. தந்தை ஜமதக்னி முனிவரின் வரத்தின்படி தாய் ரேணூகாதேவி மீண்டும் உயிர்பெற்றார். இருப்பினும் மாத்ருஹத்தி தோஷம் பீடித்ததால் பல தலங்களுக்குச் சென்று இறைவனை வணங்கியும் தோஷம் நீங்கப்படவில்லை. பின் இத்தலத்திற்கு வந்து ஆலமரத்தின் கீழிருந்த புற்று லிங்கத்தை வணங்கியதும் மாத்ருதோஷம் விலகியதை உணர்ந்தார். பரசுராமர் இத்தல இறைவனை வழி பட்டதன் அடையாள மாக கருவறை முன்னா லுள்ள மேல் உத்திரத்தில் பரசுராமரின் உருவம் பொறிக்கப்பட்டிருப்ப தைக் காணலாம்.

காலமும் கட்டுமானமும்

இத்தலம் முதலாம் பராந்தகன் காலத்தி லேயே கற்றளியாக எடுக்கப்பட்டது. இக் கோவிலுக்கு வெளியே தெற்கில் சற்று தூரத்தில் இடிந்த நிலையிலான ஒரு சிறிய கோவில் காணப் படுகிறது. அக்கோவிலினுள்ளே ஒரு லிங்கத் திருமேனி உள்ளது. வழிபாட்டில் இல்லாத நிலையிலும் உள்ளே விளக்கு எரிந்துகொண்டி ருப்பதைக் காணமுடிந்தது. உள்ளே போக முடியாத அளவு வௌவால்கள் காணப் படுகின்றன. அந்த சிறிய கோவில் அமைப் பிற்கு முன்பாக இரு நந்திகள் தரையில் பதிந்தவகையில் காணப்படுகின்றன.

அந்தக் கோவிலைச் சுற்றி வரும்போது பல சிற்பங்களைக் காணமுடிந்தது. பசுபதீஸ்வரம் எனப்படும் இதன் பழைய பெயர் மறவனீசம். இச்சிவாலயம் பழுவேட்டரைய மன்னன்- மறவன் என்பவன் மகன் கண்டன் என்பவன் கட்டியதாகும்.

ss

கல்வெட்டு செய்திகள்

ஆலயத்தின் நெடிதுயர்ந்த பிராகாரச் சுவற்றின் வெளிப்பகுதியில் ஏராளமான கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஒரு கல்வெட்டில் இடம்பெற்றுள்ள பெரும் பழுவூர் பழுவேட்டரையர் என்ற தொடர், சோழ மன்னர்களுடைய தனாதிபதிகளாக இருந்து கோவில் காரியங்கள் மற்றும் நடவடிக்கைகளை கவனித்துவந்த பழுவேட்டரையர் என்ற பட்டம்பெற்ற சமூகத்தினர் சிலர், அக்காலத்தில் இப்பகுதி யில் வசித்ததைக் குறிப்பிடுகிறது. மற்றொரு கல்வெட்டில் சிறு பழுவூர் என்ற இவ்வூர், ஆலந்துறையார் எனப்படும் ஆலந்துறை மகாதேவ சுவாமிக்கு பிரம்மதேயமாக விடப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இவைதவிர குலோத்துங்கன், ராஜராஜன், ராஜேந்திர சோழன் காலத்திய பெரும்பான்மையான கல்வெட்டுகளில், இம்மன்னர்கள் இக்கோவிலுக்கு நிவந்தங்களாக நிலங்களை விட்டதையும், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் பொன்னாபரணங்களை வழங்கிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

முற்காலக் கல்வெட்டுக்களுடன், ஏப்ரல் 5, 1974; ஜூன் 18, 2003 மற்றும் டிசம்பர் 10, 2014 ஆகிய நாட்களில் குடமுழுக்கு ஆனதற் கான தற்காலக் கல்வெட்டுகளும் இக்கோவி லில் காணப்படுகின்றன.

இத்தலத்தை சம்பந்தர் தனது தேவாரத்தில் ஒரேயொரு பதிகத்தில் மட்டும் பாடியுள்ளார். அப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மலையாள அந்தணர்களான நம்பூதிரிகள் பழுவூரில் வாழ்ந்துவந்தனர் என்பதைத் தனது பதிகத்தின் 4-ஆவது மற்றும் 11-ஆவது பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

ஆலய அமைப்பும் தரிசனமும்

மருதுடையார் ஆற்றின் தென்பகுதியில், சிறிய வளைவுடன்கூடிய வாயிலுடன், கிழக்கு நோக்கிய மூன்றுநிலை ராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. கோவிலுக்கு வெளியே தல விருட்சமான ஆலமரம் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. தல தீர்த்தங்களில் ஒன்றான பிரம்மதீர்த்தம் அமையப்பெற்றுள்ளது. ஆலய நுழை வாயிலைக் கடந்து முதல் பிராகாரம் செல்ல கொடிமர விநாயகர், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இடப்புறத்தில் கிணறும், மடப்பள்ளியும், முன்மண்டபத்தின் வலப்புறத்தில்-

அதாவது சுவாமிக்கு இடப்புறமாக தென்முகம் நோக்கியவாறு அருந்தவநாயகி அம்மன் சந்நிதியும் இடம்பெற்றுள்ளன. அம்பாள் சந்நிதி ஒரு சுற்றைக் கொண்டு தனிக் கோவிலாகவே காணப்பெறுகிறது. அம்பாள் கருவறைக்கு முன்னுள்ள அர்த்த மண்டபத்தின் வாயிலில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் துவாரபாலகிகளாக இருந்து காவல்புரிகின்றனர். இச்சா சக்தியின் அருகே விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

அதனைத்தொடர்ந்து வாகன மண்டபம் அமைந்துள்ளது.

முதல் பிராகாரச் சுற்றை முடித்து, தண்டியும் முண்டியும் காவல்புரியும் இரண்டாவது பிராகாரத்திற்குள் சென்றால் 28 தூண்களைக்கொண்ட அழகிய மண்டபம் இடம்பெற்றுள்ளது. இப்பிராகாரத்தில் தெற்கு திருமாளப்பத்தியில் விநாயகர், உமை மங்கைபாகன், கார்த்தியாயினி, சண்டிகேசுவரர், வீரபத்திரர், மாணிக்க வாசகர், ஞானசம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், கிருது மகரிஷி, அத்திரி மகரிஷி, ஆங்கீரஸ மகரிஷி, ஞான தட்சிணாமூர்த்தி, பிருகு மகரிஷி, பரீஷி மகரிஷி, புலஸ்திய மகரிஷி, வசிட்ட மகரிஷி, விநாயகர், பிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து மேற்கு திருமாளப்பத்தியில் விநாயகர், சோமாஸ்கந்தர், கோடி விநாயகர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, வள்ளி- தெய்வானையுடன்கூடிய சுப்பிரமணியர் தனித்தனி சந்நிதிகளில் உள்ளனர். அடுத்து அப்பு லிங்கம், வாயு லிங்கம், ஆகாய லிங்கம்; அதற்கடுத்து கஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன. வடப்புறத்தில் சபாபதி நடராசர், சண்டிகேசுவரர் சந்நிதிகள் மற்றும் தீர்த்தக் கிணறும் அமைந்துள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக கஜசம்ஹாரமூர்த்தி, சபாபதி நடராசர், கமலக் கணபதி, தென்முகப் பரமன், அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை, காலசம்ஹாரர், அர்த்தநாரீசுவரர் ஆகியோர் உள்ளனர். கயமுகாசுரனை அழித்தபின்னர் இங்குவந்த விநாயகர் நிருத்த விநாயகர் என அழைக்கப் படுகிறார்.

இரண்டாம் பிராகாரச் சுற்றை முடித்து மகாமண்டபம் வர, அர்த்தமண்டபம் செல்லும் வழியில் இருபுறமும் கங்காதரர், கல்யாணசுந்தரர் திருவுருவங்கள் கவினுற செதுக்கப்பட்டுள்ளன. அடுத்து இடை மண்டபம்; அதனையொட்டி கருவறையும் அமைந்துள்ளது. கருவறை வாயிலின்மேல் சயனக்கோலத்தில் திருமாலின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. கருவறையுள் கருணாமூர்த்தியாய் மூலவர் ஸ்ரீ வடமூலநாதர் அருள்பாலிக்கிறார். புற்றுவடிவாய், மண் லிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வத் தோற்றத் துடன் அருட்காட்சி தருகிறார். புற்று மண்ணாலான சிவலிங்கமானதால் இவருக்கு அபிஷேகத்தின்போது குவளை சாற்றப்படுகின்றது. அரிய லிங்கத்தின் அற்புத தரிசனம் ஆன்ம அமைதியைப் பெருக்குகிறது.

அம்பிகை தவமிருந்து யோகம் செய்ததைக் குறிக்கும் விதமாக இடை மண்டபத்தின் வலப்புறத்தில், அன்னை தவக்கோலத்தில் இருக்கும் தவசம்மன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளாள்.

மூலவர் பிருத்திவி வடிவமாக விளங்கு கிறார். ஆதலால் மூலவருக்குச் சாம்பிராணி தைலமே சாற்றப்படுகின்றது. லிங்கம் மிகச்சிறியது என்பதால், அடையாளம் காண்பதற்காக, உயர்வுக்குக் குவளை சாற்றி அபிஷேகம் செய்யப் படுகின்றது. கருவறையின் முன்பாக நந்தி உள்ளது.

உற்சவங்களும் திருவிழாக்களும்

தினசரி சிவாகம முறையில் நான்குகால பூஜை நடத்தப்பெறுவதுடன், சிவாலயங்களுக்கே உரித்தான பட்ச மற்றும் மாதாந்திர உற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி 18-ல் சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். பங்குனி மாத பெருந்திருவிழாவின் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சிவாலயத்திற்குச் சென்று, அங்கு சிலாரூபத்தில் இருக்கும் ஜமதக்னி முனிவருக்குக் காட்சிதரும் ஐதீக விழா நடைபெறுகிறது.

பிரார்த்தனையும் நேர்த்திக்கடனும்

தாம்பத்திய சங்கரர், அர்த்தநாரீஸ்வரர் இருவரும் இத்தலத்திலிருந்து அருள்பாலிப் பதால் குடும்ப ஒற்றுமைக்குப் பிரார்த்தனை செய்துகொள்ளும் தலமாகவும், திருக்கடையூருக்கு நிகராக காலசம்ஹார மூர்த்தியைக் கொண்டிருப்பதால் எமபயம் போக்கும் தலமாகவும், அம்பிகை தவம்செய்து இறைவனை மணந்துகொண்டமையால் திருமணத்தடை நீக்கும் தலமாகவும், பரசுராமரின் வேண்டுதலுக்கேற்ப சகல தேவர்களும் சூட்சும ரூபமாக இத்தலத்தில் உறைவதால் வழிபடுவோருக்கு சகல செல்வங்களை அளிக்கும் தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாகவும் இத்தலம் விளங்குவதால் ஏராள மானோர் வருகைதந்து தங்களது குறைகளுக் குப் பிரார்த்தனை செய்துக்கொள்வதுடன், அது நிறைவேறிய பின்னர் மீண்டும் வந்து இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின் றனர். மகா தபஸ்வினி என்று அம்பிகை துதிக்கப்படுகிறாள். யோகக் கலையையும் திருமண வரத்தையும் ஒருசேர அளிப்பவள் இவள். அகிலாண்ட நாயகியாம் அன்னை பார்வதிதேவி ஆதியில் தவம்புரிந்த புண்ணிய திருத்தலம் திருப்பழுவூர்.

அமைவிடம்: இவ்வாலயம் அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டம், கீழப்பழுவூரில், திருமானூர்- அரியலூர், திருச்சி- ஜெயங்கொண்டம் சாலை சந்திப்பில், பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களிலிருந்து கீழப்பழுவூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.

தினசரி காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

om011022
இதையும் படியுங்கள்
Subscribe