16-11-2024 முதல் 15-12-2024 வரை

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் பிரகாசமான சூரியன். அதுபோலவே இந்த கார்த்திகை மாதத்தில் உங்கள் வாழ்க்கையும் பிரகாசமாகவே அமையும். பணவரவு செழிப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட் சம்பந்தம் கொண்டவர் கள் பரபரப்பு காண்பர். கட்டிய வீடுகள் மளமளவென்று விற்கும். மேலும் புதிய மனையில் வீடுகட்ட வேலைகளை ஆரம்பித்து, அதற்குரிய முதலீடுகளை விரைவாகத் திரட்ட ஆரம்பித்துவிடுவர். மனை வாங்கும் திட்டம் உள்ளவர்கள், இந்த கார்த்திகை 18-ஆம் தேதிக்குமேல் முயற்சி செய்தால் எளிதாகக் கைகூடும். அரசியலில் ஈடுபாடு உடையவர்கள் அரசியலில், தங்கள் பிறந்த ஊரில் பிள்ளையார் சுழி போட்டு, மைக் பிடித்து அரசியல் நீரோட்டத்தில் இணைய இம்மாதம் ஏற்புடையது. கடைகளில் இதுவரை வேலை செய்துகொண்டிருந்த, பணியாளர்களில் சிலர், முதலாளியாக மாறும்பொருட்டு முதலீடு செய்வர். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் தடைகள் நீங்கிவிடும். உங்களில் சிலர் புத்தகக் கடை அல்லது ஸ்டேஷனரி ஷாப் தொடங்குவீர்கள். இந்த மாதம், இந்த எண்ணில் பிறந்தவர்களில் பலர் கலைத் தொழிலில் ஈடுபட இயலும். இந்த கலைப்பயணம் பிறந்த இடத்திலிருந்து நகரச் செய்யும். ஏற்கெனவே கலைத்தொழிலில் உள்ளவர்கள் சற்று இடர்ப்பாடுடன் மேன்மை காண்பர். சிலர் சீருடைப் பணி கிடைக்கப்பெறுவர். வெட்டி நபர்களால் தம்பதிகளுக்குள் கலகமும் குழப்பமும் ஏற்படும். பெரும்பாலான வாழ்க்கைத் துணை, அரசுப்பதவி பெறுவார் கள். அனேகமாக அது கல்வி, கணக்கியல் சம்பந்தமாக அமையும். சிலர் சினிமா, டி.வி படம் தயாரிப்பர். அதில் கறுப்புப் பணம் நிறைந்திருக் கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

Advertisment

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: சூரிய பகவானுக்கும், சிவனுக்கும் அபிஷேகப் பொருட்களை வாங்கிக்கொடுத்து வணங்கவும். சனீஸ்வரருக்கு தீபமேற்றவும். அரசுப் பள்ளிகளுக்கு, எமர்ஜென்சி லைட் அல்லது பணம் கொடுங்கள். ஐயப்பன் கோவிலுக்குச் செல்பவர்களுக்கு நெய் மற்றும் சந்தணம் வாங்கிக் கொடுங்கள்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

Advertisment

உங்கள் எண்ணின் நாயகன் குளுமையான சந்திரன் ஆவார். அதுபோலவே இந்த மாதம் உங்கள் நாட்கள் சற்று குளிர்ச்சியாக, தண்மையாகச் செல்லும். அது சரி; ஒரு மனிதனுக்கு நாட்கள் அருமையாக ஓடுகிறதெனில் என்ன அர்த்தம்? அவருக்கு கையில் பணம் செழிப்பாக இருக்கிறது என்றாகும். பணம் புழங்க ஏது காரணம்? வேறென்ன... நல்ல வேலை கிடைத்துவிட்டது என்றாகும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைப்பதால் உண்டாகும் சந்துஷ்டியாக அமையும். நல்ல ஏஜென்சி கிடைக்கும். அரசு சார்ந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நல்ல பணம் முதலீடு செய்வீர்கள். சிலர் வாரிசுகளின் பெயரில் இதனைச் செய்வர். கலையுலகினர் நல்ல வேலை வாய்ப்பும், வெகு முன்னேற்றமும் பெறுவர். சில அரசியல்வாதிகள் இப்போது வகிக்கும் மந்திரி பதவியைவிட்டு, வேறு இலாகா மந்திரி ஆவார்கள். சிலருக்கு லேசாக காதல் எட்டிப்பார்க்கும். கார்த்திகை மாத மத்தியில், உங்கள் சுய முயற்சியால் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். திருமணத்தில் சற்று கலப்பிருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் சற்று இடையூறு தரும். சிலரை, நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் வெளி நாட்டுக்கு அனுப்பிவைக்கும். சிலர் பெண் எடுத்து, பெண் கொடுக்கும் விதத்தில் மருமகன்- மருமகள் வருவார். சிலரின் வாரிசுகள் வெளிநாடு செல்வதால் சற்று பணச் செலவுண்டு. சிலரின் வாழ்க்கைத்துணை வேலை மாற்றம் பெறுவர். வாடகைக்கு இருக்கும் வீட்டையே சொந்தமாக வாங்க இயலும். சிலரின் தாயார் மருமகன் வீட்டில் சென்று தங்குவர். எவ்வளவு பொல்லாத மாமியாராக இருப்பினும், மாத மத்தியில் அமைதியாகி, உங்களுடன் தங்கும் சூழ்நிலை உருவாகும். சிலருக்கு நல்ல கனவுகள் வரும். வேலையாட்கள் மாற்றமுண்டு. மாமனாரால் வருமானமும், செலவும் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 8, 17, 26.

பரிகாரம்: ஐயப்பன் (தர்ம சாஸ்தா) கோவிலுக்கு விரதமிருப்பவர்களுக்கு, பணமும் பயணச் சீட்டும் வாங்கிக்கொடுப்பது நல்லது. உங்கள் குலதெய்வக் கோவிலின் தேவையைக் கேட்டு, தீபமேற்றும் பொருட்களைக் காணிக்கை செலுத்தவும். குலதெய்வ வழிபாடு நன்று.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் தர்மமிகு குரு ஆவார். ஆனால், இந்த மாதத்தின் நாட்கள் மிக சுமாராகவே அமையும். உங்களில் பலர் வெளிநாட்டுப் பணம் புழங்குவீர்கள். பலருக்கு வேலை கிடைக்கும். பலர் பதவி உயர்வு பெறுவீர்கள். எனினும், இந்தப் பதவி உயர்வு, சற்று மன நெருடலைத் தரும். வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடம், அதுவும் பிற தேசத்து ஆட்களிடம் சற்று கவனமாக இருங்கள்; வீட்டில் திருட்டுப்போக வாய்ப்புண்டு. அல்லது பழுதுபார்க்கும் செலவுண்டு. பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. இந்த மாதத்தின் பாதி நாட்கள்வரை வாரிசுகளால் அவமானம் நேரும். அல்லது எங்காவது அடிபட்டுக்கொள்வர். சில சினிமா கலைஞர்கள் வழக்குகளை சந்தித்து பின் மீள்வர். பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்து பின் சரியாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடநிலையில் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம். திருமணமாகி, வெளியூர், வெளிநாடு செல்வர். சிலருக்கு கடையை மாற்றவேண்டிய நிர்பந்தம் உண்டாகும். முதலில் மனக்கஷ்டம் ஏற்பட்டாலும் பின் அதில் ஒரு நன்மை ஒளிந்திருக்கும். அரசு வகையில் செலவுண்டு. அரசியல்வாதிகள் இலாகா மாற்றம் பெறுவர். வேலைப்பளு அதிகரிக்கும். சில அரசியல் வாதிகள் சிறிது கெட்டபெயர் எடுக்குக்கூடும். மூத்த சகோதரி வேலையில் இடமாற்றம் பெறுவதால், உங்களுடன் சிறிதுகாலம் தங்கியிருப்பார். மாமியார், வெளியூர், வெளிநாடு செல்வார். சிலரது வாழ்க்கைத் துணை வேலை மாறுவார்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: ஐயப்பன் கோவில் செல்பவர்களுக்கு பூஜைக்காக மஞ்சள்பொடி வாங்கிக்கொடுங்கள். குலதெய்வக் கோவிலுக்கு பித்தளை சம்பந்தமான காணிக்கை அளிக்கவும். மடப்பள்ளியில் உதவி செய்யும் அந்தணருக்கு மருந்து வாங்க உதவவும்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகர் பெரும்போக்கு குணம்கொண்ட ராகு ஆவார். இந்த குணம் இந்த மாதம் வீண் ஆடம்பரத்துக்காக பணத்தை செலவழிக்கச் செய்யும். உங்கள் திரைப்படம் அல்லது டி.வி. சீரியல் பிரபலமடைய, விளம்பரத்துணையை நாடுவீர்கள். பிறகு சற்று உட்கார்ந்து சிந்தித்து, "எதற்கு வீணாக வெளியாட்களிடம் விளம்பரத்திற்குப் பணம் கொடுக்கவேண்டும்? நாமே சொந்தமாக, ஒரு விளம்பரக் கம்பெனி ஆரம்பித்துவிடலாம்' என புதிய கம்பெனி தொடங்கிவிடுவீர்கள். இதைத்தான். இதைத்தான் ராகுபகவானின் எதிர்மறைப் பெரும்போக்கு குணம் என்பர். உங்களில் சிலருக்கு, தந்தை சார்ந்த வேலை கிடைக்கும். சிலரின் வாழ்க்கைத்துணை அரசுப் பதவி பெறுவார். சிலரின் தந்தை அதிகமாகக் குடிக்க ஆரம்பித்துவிடுவார். சில பெண்கள் வீட்டு விலக்கின்போது அதீத ரத்தப் போக்கால் அவதிப்படுவர். பலருக்கு, வெகுநாட்களாகத் தடைப்பட்ட திருமணம் அழகாகக் கூடிவரும். உங்கள் தொழிலில் ஏற்படும் தொய்வை, சிலபல திறமையான தொழிலாளர்மூலம் சரிக்கட்டி விடுவீர்கள். சினிமா கலைஞர்களுக்கு சற்று பிரச்சினைகளால் பின்னடைவு ஏற்பட்டாலும், ஒருமாதிரி காசைக் கொடுத்து சரிக்கட்டி விடுவீர்கள். சிலருக்கு தொழிலில், இளம் பெண்களால் ஏதேனும் பிரச்சினை வரக்கூடும்; கவனம் தேவை. சில அரசியல்வாதிகள் மிக இறுமாப்புடன் அலைவர். "இவர்களால் அரசியல் குட்டிச் சுவராகப் போய்விட்டதா அல்லது இவர் குட்டிச் சுவராகிக் கெட்டுப்போனாரா' என பட்டிமன்றம் நடத்துமளவுக்கு, சிலரது நடவடிக்கைகள் இருக்கும். உங்கள் இளைய சகோதரியால் ஏற்படும் தொழில் சரிவை பின்னர் அவரே சரிசெய்தும்விடுவார். சிலரது மாமனாரும் மாமியாரும் பரஸ்பரம் இடம்மாற்றிக் கொள்வர்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: ஐயப்பன் கோவிலுக்குச் செல்வோரின் பயண டிக்கெட் தொகையைக் கொஞ்சமாவது கொடுக்கவும். அங்குள்ள முகம்மதியரின் சந்நிதிக்கு, உண்டியலில் போட காணிக்கை கொடுக்கவும். பக்தர் களின் அன்னதானத்துக்கு முடிந்த உதவி செய்யவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் புதன், புத்திக்கும் அறிவுக்கும், சமயோசித சிந்தனைக்கும், வியாபார நுணுக்கத்திற்கும் காரணகர்த்தர் ஆவார். இந்த மாதம் மேற்கண்ட குணங்கள் பல்கிப் பெருகும். அரசுத் துறையில் குத்தகை, ஒப்பந்தம் எடுத்துவிடுவீர்கள். வேலைக்குப் பணியாளர்களைத் திரட்டி, வேலைவாங்கும் ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் அரசு கட்டடங்களை இடிக்கும் பணியைப் பெறுவர். இந்தப் பணியின் விளைவாக புது அடுக்குமாடி கட்டும் ஒப்பந்தமும் கிடைக்கும். இந்த ஒப்பந்தப் பணிகளின் ஆரம்பத்தில் முட்டுக்கட்டையும், சற்று சுணக்கமும் இருந்தாலும், பின் வேலை சுறுசுறுப்படைந்துவிடும். உங்களில் சிலர் தந்தையின் வீட்டை மறுகட்டமைப்பு செய்வீர்கள். வாரிசுடன் சற்று மனத்தாங்கல் ஏற்படும். சில சினிமா கலைஞர்களுக்கு வேறு மொழிப் படங்களில், பிறருக்கு பதிலாக நடிக்கும் வாய்ப்பு வரும். வெளிநாடு சார்ந்த வேலை கிடைத்து அதனை வீட்டிலிருந்தே செய்வீர்கள். இப்போது நடக்கும் திருமணத்தில் சற்று அரசியலும், கலப்பும் இருக்கும். மாத முற்பகுதியில் உங்கள் இளைய சகோதரனிடம் பிணக்கு ஏற்பட்டு மன வருத்தம் கொள்ளும் சூழல் ஏற்படலாம். உங்கள் பெற்றோர், பேரன்- பேத்தியின் பொருட்டு, வெளியூர், வெளிநாடு செல்வர். உங்கள் தொழிலில் கிடைக்கும் வெற்றியும் புகழும், முதலீட்டை அதிகமாக்கச் செய்யும். அரசியல்வாதிகள் முதலில் திண்டாடி, பின் "பிக்கப்' ஆகி, அதோடு ஒரு எதிர்பாராத பதவியையும் பெற்று விடுவர். உங்களில் பலருக்கு அரசு சார்ந்த வீட்டிற்கு மாறும் யோகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர் களுக்கு, கைபேசிக் கட்டணம் கொடுங்கள். அவர் களுக்கு அவசரத் தேவைக்குப் பணம் மட்டுமல்ல; குறிப்பிட்ட கைபேசி எண்களைக் கொடுத்து உதவுங்கள்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன் அழகு ணர்ச்சிக்கும், திருமணத்திற்கும் உரியவர். ஆனால் இந்த மாத முற்பகுதி, உங்கள் திருமண விஷயத்தை மோசமாக்கிவிட்டு, பின்பாதியில் சரிபடுத்திக்கொடுக்கும். காது பிரச்சினை கண்டிப்பாக உண்டு. பணவரவு அமோகமாக இருக்கும். செலவும் அதற்கு ஈடாக அமையும். உங்கள் பணியாளர்களை மாற்றுவதால் பிரச்சினை வரக்கூடும். முன்பு கையெழுத்திட்ட ஒப்பந்தங்களிலிருந்து பிரச்சினை கிளம்பும். சிலரின் வாரிசுகள், வெளிநாட்டு வேலை கிடைக்கப் பெறுவர். பங்கு வர்த்தகம் ஓரளவு பலன் தரும். சினிமா, டி.வி. கலைஞர்கள் சில வில்லங்கங்களை சந்திப்பர். உங்களில் சிலர் தேமல் போன்ற அரிப்பு நோய்களை சந்திப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை, அவரின் தாயாரின் உடல்நலக் குறைவால் வெகு விசனப்படுவார். இளைய சகோதரி ஒரு துன்பத்துக்கு உட்பட்டு, பின் மீள்வார். உங்கள் முதலாளி, பண உயர்வைக் கொடுப்பார். அரசுப் பணியாளர்கள், பதவி உயர்வு, பண உயர்வு, இடமாற்றம் பெறுவர். அரசியல்வாதிகள் இலாகா மாறுதலும், மதிப்பும் பெறுவர். கனவுத் தொல்லையுண்டு. உங்கள் வாரிசுகள் சிலர் திருட்டை சந்திக்கும் நிலையுண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: ஐயப்ப பக்தர்களுக்கு உணவுக்கான பணம் கொடுங்கள். பூஜைப்பொருட்கள் வாங்க உதவும் தொகை கொடுக்கவும். கூடவே அவசரத்திற்கு உதவும் சில மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொடுங்கள்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்களின் நாயகன் கேது ஞானகாரகன் ஆவார். இந்த மாதம் இந்த எண்ணில் பிறந்த சில பெண்கள், தங்கள் தாயார்மூலம் நகை பெறுவார்கள். அல்லது பழைய நகையைக் கொடுத்து, புது நகை வாங்குவர். திருமணத்திற்காக நிறைய பேர் நகை வாங்கும் சுபச் சூழ்நிலை உண்டாகும். இந்த மாதம் நிறைய வித்தியாசமான சிந்தனைகள் கொடிகட்டிப் பறக்கும். சில யோசனைகள் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும். முதலீட்டைப் பெருக்க உதவும். சில சிந்தனைகள் வேண்டாத செலவை இழுத்துவிடும். உங்கள் பெற்றோர் உங்கள் திருமணத்தை வெகு செலவுசெய்து, சிறப்பாக நடத்துவர். சில தாய்- தந்தையர், அவர்களின் வாரிசு வெளிநாடு செல்ல பணம் கொடுத்து உதவுவர். சிலர், வியாபாரத்திற்கு முதலீட்டுப் பணம் கொடுத்து உதவுவர். எது எப்படியாயினும், இந்த எண்ணில் பிறந்த ஜாதகர்களின் பெற்றோர் உங்களுக்காக எவ்வித செலவையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு செய்வர். இந்த எண் மாணவர்கள் உயர்கல்வியில் பாடப்பிரிவை மாற்றிக்கொள்வர். வேறு சிலர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வேறு வீட்டை எடுத்துக்கொள்வர். அரசியல்வாதிகள் நன்மையும் தீமையும் கலந்து பெறுவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: ஐயப்பன் கோவில் செல்வோருக்கு துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலை வாங்கிக் கொடுங்கள். அல்லது அதற்கு ஈடான பணம் கொடுங்கள்.

ss

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சனி. இவர் உழைப்புக் குரியவர். இந்த மாதம் உங்கள் உழைப்பு நிறைய மாறுதல் களைக் கொடுக்கும். வெளிநாட்டு சம்பாத்தியம் சம்பந்த மான தகவல் கிடைக்கும். வெளிநாட்டுத் தகவல் தொடர்பு நல்ல ஆதாயம் கொண்டுவரும். வீட்டிலிருந்தே கம்ப்யூட்டர் அல்லது கைபேசிமூலம் உங்கள் திறமைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி பணமாக மாற்றிக்கொள்வீர்கள். உங்கள் வீடு, வாகனம் சற்று சேதாரமாகி பின் சரிசெய்யப்படும். வாழ்க்கைத் துணையின் வேலை சற்று பின்னடைவைக் கண்டு பின் சீராகும். தாயார், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபம் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். வாரிசு இடம்மாறுவார் அல்லது தொழிலை மாற்றுவார். பங்கு வர்த்தக விஷயத்தை முற்றிலுமாக மாற்றி யமைப்பீர்கள். சினிமா கலைஞர்கள் தங்களது மேனேஜர் களை மாற்றுவர். சில சினிமா நடிகர்- நடிகைகள் டிவி.யில் தோன்றுவர். விளையாட்டு வீரர்கள் வேறு கோச்சிடம் சேர்வர். உங்களில் சிலர் குறுக்குவழியில் அரசுப்பதவி பெறுவீர்கள். அரசியல்வாதிகள் ஏதேனும் குயுக்தி யான வேலைசெய்து, மிகப்பெரிய பதவியைப் பிடித்து விடுவார்கள். அரசுப் பதவியில் இருப்போர் லட்டுகளை வாரி வழங்கி பதவி உயர்வு பெற்று, மிகப்பெரிய பதவியில் அமர்ந்து மகிழ்வர். திருமண விஷயங்களை இந்த மாதம் பிற்பகுதி நாட்களில் முடிவெடுக்கவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: ஐயப்பன் கோவிலுக்குச் செல்வோருக்கு கறுப்புநிற உடைகள், துண்டு, பை போன்றவை வாங்கிக்கொடுக்கவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய், சுறுசுறுப்பும் வீரமும் ஒருங்கே கொண்டவர். ஆயினும் இந்த மாத முற்பாதியில் செவ்வாய் மிக பாதிப்புக்கு உள்ளாவார். எனவே உங்கள் சுறுசுறுப்பு எங்கோபோய் ஒளிந்துகொண்டதுபோல் ஒரு உணர்வு வரும். மனை விஷயங்களில் கவனம் தேவை. அரசு சார்ந்த வில்லங்கத்தை மனை தந்துவிடும். உங்கள் பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். சிலசமயம் உங்களை எதிர்த்து நடக்கக்கூடும். ஒப்பந்தங்கள், குத்தகைகளில் கையெழுத்திடுவதை இந்த மாதம் தவிர்த்துவிடவும். வாரிசுகளுடன் கண்டிப்பாக பிணக்கு ஏற்படும். இந்தப் பிணக்கு காவல்துறைவரை செல்லவும் கூடும். பங்கு வர்த்தகத்தில் மிக கவனமாக இருத்தல் அவசியம். சினிமா கலைஞர்கள் தங்கள் பெயருக்குக் களங்கம் ஏற்படும் சூழ்நிலை வருவதால், சட்டென்று இடம்மாறி விடுவர். சிலரின் திருமண வாழ்வு மாற்றம் பெறும். அரசு வேலைக்குப் பணம் கொடுத்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என கலங்கும் நிலை ஏற்படும். பயணங்களில் கவனம் தேவை. இவ்வளவு களேபரத்திலும் நீங்கள் எப்போதோ முதலீடு செய்த பணம் உங்களுக்கு வந்துசேரும். வேறு சிலருக்கு வெளிநாட்டிலிருக்கும் மூத்த சகோதரர் பணம் அனுப்பி உதவுவார். உங்கள் தொழிலில் வெளிநாட்டு சம்பந்தம் உண்டாகும். ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகம் செய்பவர்கள் மாதப் பிற்பகுதியில் நல்ல மேன்மை காண்பர். அரசியல்வாதிகள் பிற மத, இன மக்கள்மூலம் நல்ல ஏற்றம் பெறுவர். நல்ல அலைச்சலும், வெளிநாட்டில் முதலீடும் செய்வர். உங்கள் மாமியார் சமையல் செய்யும்போது நெருப்பு காயம் பட்டுக்கொள்வார். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: ஐயப்பன் கோவிலுக்குச் செல்பவர்களின் தேவையறிந்து, செம்புப் பாத்திரம் அல்லது துவரம் பருப்பு, குங்குமம் வாங்கிக் கொடுங்கள்.

செல்: 94449 61845

_____________

கார்த்திகை மாத கிரக நிலைகள்!

ss

சூரியன்

இந்த மாதத்தில் சூரியன் எப்போதும் விருச்சிக ராசியில் இருப்பார். இப்போது, சூரியன், குருபகவான் பார்வையைப் பெறுகிறார். காலபுருஷ தத்துவப்படி சூரியன் 5-ஆம் அதிபதி; குரு 9-ஆம் அதிபதி. எனவே ஒரு அருமையான கிரக சம்பந்தம் எனக் கூறினாலும், பலன்கள் என்னவோ சுமாராகத்தான் இருக்கும். சூரியன் காலபுருஷனின் 8-ஆம் வீட்டில் அமர்ந்து, தனது நிலையில் சற்று மறைவுத்தன்மையைப் பெறுகிறார்.

மேலும் இடம்கொடுத்த, செவ்வாய் நீசம். எனவே இந்த மாதம் அரசு இயந்திரம் குரு பார்வையால் முழு சுறுசுறுப்புடன் இயங்கினாலும், பலன் அதற்கேற்றவாறு கிடைக்கும் என சொல்லமுடியாது. அரசும், அரசியல் சார்ந்தோரும் நிறைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவர். அரசாங்கம் நிறைய செலவு செய்தும், அதைவிட அதிகமாக வசவுகளும் வாங்கும். அரசு சார்ந்த அனைத்து நபர்களும் வாய்மூடி மௌனித்து, சற்றே மறைந்து வாழும் நிலை உண்டாகும். 8-ஆமிடத்தில் அமர்ந்த சூரியன் இவ்வித சூழலை உண்டாக்கினாலும், குரு சிறைக்குப் போகுமளவிற்கு விடமாட்டார். குருபார்வை காப்பாற்றும்.

சந்திரன்

சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும்போது வக்ர குருவுடன் சேர்ந்து, குருச்சந்திர யோகம் பெறுவார். இதனால் தங்கத்தின் விலையில் ஏற்ற- இறக்கம் அதிகமாகும்.

சந்திரன் கடக ராசியில் அமரும்போது அங்குள்ள செவ்வாயின் நீசத்தைப் போக்குகிறார். வீடு, மனை விலை உயரும். காவல்துறையின் களங்கம் நீங்கும்.

சந்திரன் கன்னி ராசியில் கேதுவுடன் செல்லும்போது மக்களின் மனங்களில் மிக சந்தேக விஷயங்களைப் பரப்புவார்.

சந்திரன், விருச்சிகத்தில் சூரியன், புதனுடன் சேர்ந்து செல்லும் நாட்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் குழப்பத்தைத் தெளிவுபடுத்துவார்.

சந்திரன் தனுசு ராசியில் சுக்கிரனோடு பயணிக்கும் போது, பணப்புழக்கத்தை மிக அதிகரிக்கச் செய்வார்.

சந்திரன் கும்பத்தில் சனியோடு ஓடும்போது மிகக் குழப்பம் ஏற்பட்டு, செய்த செயல்களை மறுபடியும் மறுபடியும் செய்வர்.

சந்திரன் மீனத்தில், ராகுவுடன் உட்காரும்போது நிறைய எதிர்மறை செயல்களும், தீவிரவாதிகளின் அட்டூழியமும் அதிகரிக்கும்.

செவ்வாய்

இந்த மாதத்தில் செவ்வாய் கடகத்தில் நீசமாக உள்ளார். இதனால் மனை விஷயங்கள் சற்று அல்லாடும். காவல்துறை கலவரம் கொள்ளும். காலபுருஷ தத்தவப்படி செவ்வாய் 1-ஆம் அதிபதியாக, ஆளும் கட்சியாக அமைவார். எனவே ஆளும் கட்சிகளின் நிலைமை கலவரமாகவும், பின்னடைவாகவும் அமையும்.

எனினும், கார்த்திகை 18-ஆம் தேதி செவ்வாய் வக்ரநிலை பெறுவார். ஒரு நீச கிரகம் வக்ரம் பெறும்போது, அது உச்சமாகிவிடும். எனவே செவ்வாயின் வக்ரம் ஆரம்பித்தபிறகு, ஆளுங்கட்சியின் நிலை அமோகமாக அமையும். காவல்துறை சீரடையும். மனைகளின் விலை விர்ரென்று எகிறும். தீ விபத்தும் அதிகரிக்கும்.

புதன்

புதன் இம்மாதத்தில் விருச்சிக ராசியில் சூரியனுடன் உள்ளார்; குரு பார்வையைப் பெறுகிறார். காலபுருஷ தத்துவப்படி புதன் எதிர்கட்சிகளைக் குறிக்கிறார். இவர் 8-ஆமிடத்தில் மறைவது விசேஷமில்லை. எதிர்கட்சியில் ஒரு முன்னாள் மந்திரி சம்பந்த மாபெரும் ஊழல் வெளிவருவதால் எதிர்கட்சியினர் சத்தம் காட்டாமல் அமைதியாக இருப்பர். எனினும், மௌனமாகவே இருந்து, கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்து, சாமர்த்தியமாகத் தப்பிவிடுவர். இந்த வேலைக்கே இந்த மாதம் சரியாகப் போய்விடும். குரு பார்ப்பதால், எல்லாம் சுமுகமாக முடிந்துவிடும். பணியாளர்கள், தொழிலாளர்கள், ஒப்பந்த வேலையாட்கள் உரிமைப் போராட்டம் நடத்துவர்.

குரு

இவர் ரிஷபத்தில், ரோகிணி நட்சத்திரத்தில் வக்ரமாக செல்கிறார். இதனால் தங்கத்தின் விலை தாறுமாறாகும். இந்த மாதம் குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுகிறார்கள். அதாவது தங்கமும் வெள்ளியும் தங்கள் தங்கள் இடத்தை மாற்றி அமர்ந்துகொள்கிறார்கள். இதனால் பொதுமக்கள், தங்கத்தால் செய்யவேண்டிய நகைகளைத் தற்போதைய காலத்தில் வெள்ளியால் டிசைன் டிசைனாக செய்து, அதற்குத் தங்க முலாம் பூசிக்கொள்வர். தங்கத்தின் இடத்தை வெள்ளி பிடித்துக்கொள்ளும். எனவே வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவில் உயரும்.

சுக்கிரன்

இவர் இம்மாதம் 18-ஆம் தேதிவரை தனுசில் இருந்து, குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். எனவே இந்நாட்களில் நிறைய திருமணம் மற்றும் அது சார்ந்த சுப நிகழ்வுகள் கோவிலில் வைத்து நடக்கும். கோவில்களில் அதற்கேற்றாற்போல் வசதிகள் பெருகும். சில பிரபலமான கவர்ச்சி நடிகைகள் தெய்வம் சார்ந்த திரைப்படத்தில் நடிப்பர். உயர்கல்வி மாணவிகள் திருமணம் செய்துகொள்வர். உயர்கல்வி படிக்கும்போதே, பணம் சம்பாதிக்கவும் தொடங்கிவிடுவர். திருமணம்மூலம் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். அழகுக்கலை சார்ந்த கல்வி பரவலாகும். மலர் ஏற்றுமதி அதிகரிக்கும்.

சனி

இந்த மாதம் சனிபகவான் கும்ப ராசியில் ராகுவின் சாரத்தில் நகர்கிறார். வெளிநாட்டு வர்த்தகம் நிறைய நடைபெறும். இதனால் வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை சிறக்கும்; பெருகும். அரசியல் வாதிகள், தங்களின் பண முதலீட்டுக்காக அடிக்கடி, வெளிநாட்டிற்குச் சென்றுவருவர்.

ராகு

இவர் மீன ராசியில் சனி சாரம் பெற்று சென்றுகொண்டிருக்கிறார். இவர், தீவிரவாதம் நடத்துதற்குரிய பணத்தை வெளிநாட்டிலிருந்து, நம் நாட்டிற்கு திசைதிருப்பும் வேலையைச் செய்வார். இது அனேகமாக மாணவர்களை குறிவைத்து, போதைப் பொருள் கடத்தலாக அமையும். போதை வியாபாரத்துக்கு கடல் பகுதியைப் பயன்படுத்துவர். ராகு, கடல் ராசியில் செல்வதால், கடல், இயற்கை, காற்று, மழை சார்ந்த இடர்ப்பாடுகள் அதிகரிக்கும்.

கேது

இவர் கன்னி ராசியில், சூரிய சார நட்சத்திரம் பெற்றுள்ளார். இதுவொரு கிரகண நிலையாகும். எனினும் கேது பகவான் குரு பார்வையைப் பெறுவதால் நிறைய கோவில், மடங்கள், பசு மடம் பொலிவுபெறும். பழமையான, இதுவரை கண்ணில்படாத ஒரு சித்தர் சமாதி வெளியுலகிற்குத் தெரியவரும். இது அனேகமாக கடல் அல்லது நீர்நிலை அருகில் தென்படும்.

வானிலை

கார்த்திகை 1, 2, 3-ஆம் தேதிகளில் சந்திரன் ரிஷப ராசியில் குருவுடன் செல்லும்போது, காற்று அதிகமாகவும், மழை குறைவாகவும் இருக்கும்.

கார்த்திகை 5, 6, 7-ஆம் தேதிகளில், கடக ராசியில் செல்லும்போது வெப்பம் குறைந்தது, நல்லமழை பெய்யும்.

கார்த்திகை 15, 16, 17-ஆம் தேதியினில் குரு பார்வையைப் பெற்று, நீர் ராசியில் செல்வதால், கனமழையும் காற்றும் அதிகரிக்கும்.

தொடர்ந்து 18, 19, 20-களில் தனுசு ராசியில் சுக்கிரனுடன் சுற்றும்போது மழையைத் தொடர்வார். சிலசமயம் ஆகாய வெடிப்பும் ஏற்படும்.

கார்த்திகை 24, 25, 26-ஆம் தேதிகளில் ராகுவுடன் மீன ராசியில் செல்வதால் இயற்கை மாற்றம், கடல் உள்வாங்குவது, கடல் சீற்றம் போன்றவை இருக்கும்.

இம்மாதம் நெருப்பு கிரகங்களான செவ்வாய், சூரியன் பலமிழந்துள்ளனர். நீர் ராசியான விருச்சிகத்திற்கு குரு பார்வை கிடைக்கிறது. மற்றொரு நெருப்பு ராசியான தனுசில், நீர்க்காரக கிரகம் சுக்கிரன் அமர்ந்து, அதோடு குருவின் பரிவர்த்தனையும் பெறுகிறது. இன்னொரு நீர் ராசியான மீனத்தில் பெரும்போக்கு கிரகம் ராகு அமர்ந்து கடல் அலைகளைப் பெருக்கும் வேலைகளைச் செய்கிறது.

ஆக, இந்த மாதம் நெருப்பு கிரகங்களின் பலம் குன்றியுள்ளது. நீர்த்தன்மை அதிகம் உள்ளதால், இந்த கார்த்திகை மாதம் கனமழையை எதிர்பார்க்கலாம்.

இந்த மழையின் அளவைத் தீவிரமாகத் தீர்மானிக்காத அரசாங்கமும், அரசு அதிகாரிகளும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாவார்கள் என்பதை, 8-ல் அமர்ந்த சூரியன் உணர்த்துகிறார்.

-ஆர்.மகா