வணி 3 (ஆகஸ்ட் 19) ஆவணி அவிட்டம்.

ஆவணி 4 (ஆகஸ்ட் 20) காயத்ரி ஜெபம்.

மேற்கண்ட இரு விசேஷங்களும் அந்தணர் களுக்குரியது. ஆவணி அவிட்டம் அன்று அந்தணர்கள் தங்களது பூணூல் மாற்றும் சடங்கைச் செய்வர்.

காயத்ரி ஜெபம் அன்று, 108 காயத்ரி செய்வர். காயத்ரி மந்திரம் முதன்மையான, பலமான, புனிதமான மந்திரமாகும்.) இதை உச்சரிப்பது மிகப் புண்ணியமாகும்.

Advertisment

ஆவணி 10 (ஆகஸ்ட் 26) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ணரின் பிறப்பு எல்லாருக்கும் தெரிந்ததுதான். கம்சன் எனும் அரக்கனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணமாகிச் செல்கிறார்கள். அப்போது தெய்வத்தின் ஆக்ஞையால் ஒரு அசரீரி, "கம்சா, இவளது கருவில் உருவாகும் எட்டாவது குழந்தையால் உனக்கு மரணம் ஏற்படப் போகிறது'' என்கிறது.

அதுவரையில், உண்மையில் தன் தங்கை தேவகியின்மீது அதிக பாசம் வைத்திருந்தான் கம்சன். இதனைக் கேட்டபிறகு வெல வெலத்துப் போய்விட்டான். அதன்பின்தான் அவர்களை சிறையிலடைத்தான். அவர்களுக் குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் கம்சன் கொன்றான் என்பது புராண வரலாறு. தேவகிக்கு எட்டாவது குழந்தை உண்டான நேரம், ஆயர்பாடியில் நந்தகோபரின் மனைவி யசோதையும் கருவுற்றாள். தேவகி வயிற்றில் கிருஷ்ணரும், யசோதையின் வயிற்றில் காளியும் தரித்தனர்.

Advertisment

dsdf

கிருஷ்ணர் பிறந்தவுடன், தேவகிக்கு தனது தெய்வீக வடிவுடன் சங்கு, சக்கரதாரியாகக் காட்சி கொடுத்தார். பின் சில நொடிகளில் அதை மறக்கவும் வைத்தார்.

வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் தூக்கிக்கொண்டு ஆயர்பாடி சென்றபோது, அங்கிருந்த மகாகாளி, அனைவரையும் மகா மாயையில் ஆழ்த்திவிட்டாளாம். எனவே அனைவரும் நன்றாகத் தூங்கிவிட்டார்கள். அதனால்தான் வசுதேவரால் குழந்தைகளை எளிதாக மாற்றிவைக்க முடிந்தது.

பின் கம்சன், அந்த எட்டாவது குழந்தை யைத் தூக்கி விண்ணில் வீசிக் கொல்லமுயன்றபோது, காளி ஆகாயத்தில் தனது அனேக கரங்களுடன், கிரீடம், சூலம் இவற் றோடு மகாகாளியாகக் காட்சியளித்தாள்.

அவள், "உன்னையழிக்க எட்டாவது புத்திரன் பிறந்துவிட்டான். அவனால் நீ அழியப் போகிறாய்'' என கூறிவிட்டு மறைந்தாள்.

இதன்மூலம் கிருஷ்ணர் பிறந்தநாளைக் கொண்டாடும்போது, காளிக்கும் பிறந்த நாளை சேர்த்தே கொண்டாடுகிறோம் என அறியவும்.

இது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் அன்றே கொண்டாடப்படுகிறது.

ஒன்றை கவனியுங்கள். கிருஷ்ண ஜெயந் திக்கு நட்சத்திர முக்கியத்துவத்தைவிட திதியின் முக்கியமே முதன்மையாகும். கிருஷ்ணர் அஷ்டமி திதியை இதன்மூலம் பெருமைக்குரியதாக மாற்றுகிறார்.

கிருஷ்ண ஜெயந்தியன்று, பூஜையறையைத் தூய்மை செய்வர். கிருஷ்ணர் விக்ரகம் அல்லது படத்திற்கு அலங்காரம் செய்வர். கூடியமட்டும் அன்று விரதமிருப்பர். அன்று கிருஷ்ணருக்கு லட்டு, முறுக்கு, வெல்லச் சீடை, உப்புச் சீடை, சீப்பு சீடை, அதிரசம், மனோகரம், எள்ளுருண்டை, தேங்காய் பர்பி, பால்கோவா, அவல், பால், தயிர், வெண்ணெய் என விதவிதமாக பட்சணங்களைப் படைப்பர். கிருஷ்ணர் குழந்தையாதலால், சிலர் சிறுசிறு அளவில், சின்ன வடிவில் பலகாரம் செய்வதுண்டு.

எது எப்படியிருப்பினும் கிருஷ்ணர் இலை, பழம், தண்ணீரே தனக்குப் போதும் என்று கீதையில் பகிர்கிறார்.

கிருஷ்ண ஜெயந்தியன்று மாவால் சிறு பாதமிட்டு அவரை அழைத்து, முடிந்த பட்சணங்களால் அவரை மகிழ்விப்போம்.

இவ்வாறு கொண்டாடும் வீட்டில் குழந்தைகள் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். வம்சம் வாழையடி வாழையாக வளரும்.

கிருஷ்ணாஷ்டகம் கூறி வணங்கலாம். பொதுவாக மாலை சந்தி நேரத்தில் வணங்கப் படுகிறது. மிகச் சிலர், கிருஷ்ணர் இரவில் பிறந்ததால், இரவில் வணங்குகின்றனர்.

ஆவணி 22 (செப்டம்பர் 7) விநாயகர் சதுர்த்தி

ஆவணி மாத சுக்ல சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தியாகும். இது விநாயகர் பிறந்தநாள் விசேஷமாகும்.

இருப்பவர்களிலேயே மிக எளிய தெய்வ மென்றால் அவர் விநாயகர்தான். அதனால் தான் அவர் ஆற்றங்கரை, வாய்க்கால் ஓரம், மரத்தடி என எந்த இடத்திலும் வழிபடக் கூடியவர். பல இடங்களில் பிள்ளையார் வானமே எல்லை என, கூரைகூட இல்லாமல் அமர்ந்திருப்பார். விநாயகர் கோவில் இல்லாத ஊரோ இடமோ கிடையாது.

போக, வர ஒரு தோப்புக்கரணம் போட்டு, ஒரு கும்பிடும் போட்டால் விநாயக வழிபாடு நிறைவாகும்.

எந்த பூஜையானாலும், சிறிது மஞ்சள் பொடியை உள்ளங்கையில் வைத்து உருட்டி, இரண்டு குங்குமப் பொட்டுவைத்து, துளி அறுகம்புல்லை வைத்துவிட்டால், பிள்ளையார் வீட்டுக்கு வந்துவிட்டார் எனலாம்.

வீட்டின் எந்த பூஜையானாலும் முத-ல் மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து, சுக்லாம் பரதரம் எனக்கூறி தலையில் இரண்டு குட்டு குட்டினால் பூஜை ஆரம்பித்தாயிற்று எனலாம்.

ஆக, இந்த எளிய விநாயகரை, ஆவணி மாத சதுர்த்தியில் மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடுகிறோம். விநாயகரை வணங்க நேரம் காலம் பார்க்கவேண்டாம். எப்போது முடிகிறதோ அப்போது கும்பிட்டுக் கொள்ளலாம்.

விநாயகர் சதுர்த்தியின் முக்கிய பிரசாதம் கொழுக்கட்டை, சுண்டல், தேங்காய், அவல், சர்க்கரைப் பொங்கல், சித்ரான்னம், அதிரசம், அப்பம் என முடிந்தளவு பிரசாதம் செய்து படைத்து வணங்கலாம்.

எல்லா மலர்களையும் கலந்து பூஜைக்குப் பயன்படுத்தலாம். அறுகம்புல், எருக்கன் மாலை விசேஷம்.

கணபதியின் வடிவங்கள்

பால கணபதி, தருண கணபதி, பக்தி கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, த்விஜ கணபதி, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, விக்ன கணபதி, க்ஷிப்ர கணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மகா கணபதி, விஜய கணபதி, நிருத்ய கணபதி, ஊர்த்துவ கணபதி, ஏகாக்ஷர கணபதி, வரத கணபதி, த்ரயக்ஷர கணபதி, க்ஷிப்ர பிரசாத கணபதி, ஹரித்ரா கணபதி, ஏகதந்த கணபதி, சிருஷ்டி கணபதி, உத்தண்ட கணபதி, ரிண மோசன கணபதி, துண்டி கணபதி, த்விமுக கணபதி, திரிமுக கணபதி, சிங்க கணபதி, யோக கணபதி, துர்க்கா கணபதி, சங்கடஹர கணபதி.

விநாயகரை வடிவமைப்பதும் பலனும்

மஞ்சள் பிள்ளையார்- வெற்றி கிடைக்கும்.

குங்குமப் பிள்ளையார்- செவ்வாய் தோஷம் மட்டுப்படும்.

புற்றுமண் பிள்ளையார்- விவசாயம் பெருகும்.

வெல்லப் பிள்ளையார்- கட்டிகள், கொப்புளம் கரையும்; ஆரோக்கியமாகும்.

உப்புப் பிள்ளையார்- எதிரிகள் தொல்லை நீங்கும்.

வெள்ளெருக்குப் பிள்ளையார்- பில்-, சூனியம் விலகும்.

விபூதி பிள்ளையார்- ஞானம், பதவி உயர்வு கிடைக்கும்.

சந்தனப் பிள்ளையார்- சந்ததி சிறந்து விளங்கும்.

சாணப் பிள்ளையார்- சுப நிகழ்ச்சி நடக்கும்; வீடு, மனை யோகம் வரும்.

வாழைப் பிள்ளையார்- வம்ச விருத்தி யுண்டு; தம்பதி ஒற்றுமை மிகும்.

வெண்ணெய்ப் பிள்ளையார்- கடன் நீங்கும்; நகை வாங்க முடியும்.

சர்க்கரைப் பிள்ளையார்- நோயின் வீரியம் குறையும்.

பசுஞ்சாணப் பிள்ளையார்- நோய் நீங்கும்.

கல்- விநாயகர்- எடுத்த காரியம் வெற்றி.

மண் விநாயகர்- கௌரவம் உயரும்; தொழில் விருத்தியாகும்.

ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும், புதிதாகக் களிமண் பிள்ளையார் வாங்கும் வழக்கம் உள்ளது. அவரை அருமையாகப் பூஜை செய்வது சரிதான்; சிறப்புத்தான்.

ஆனால் அவரை விசர்ஜனம் செய்வதில் கொஞ்சம் அக்கறை காட்டாமல் இருக்கி றார்கள். அதாவது அந்த பூஜிக்கப்பட்ட பிள்ளையாரை கரைப்பதிலும் சிரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்.

பக்கத்திலுள்ள வாய்க்கால், குளம், ஆறு, நதி, கடல் என தண்ணீர் உள்ள இடமாகப் பார்த்துக் கரைத்துவிடுங்கள். இதனால் அந்த ஏரி, குளத்தில் இந்த பிள்ளையாரின் மண் படித்துவிடும். பிறகு வரும் மழைக்காலத்தில், அங்கு தண்ணீர் சேகரிப்பு இயல்பாக நடக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, பூஜை செய்த பிள்ளையாரை, யார் கா-லும் படாதவண்ணம், கண்ட இடத்திலும் வைக்காமல் நீரில் கரையுங்கள். பூஜைசெய்த புண்ணியம் நிறைவாகும்.

ஔவைப்பாட்டியின் விநாயகர்

அகவலைப் பாராயணம் செய்யுங்கள்; சிறப்பு மிகச் சிறப்பு.

ஆவணி 30 (செப்டம்பர் 15) ஓணம் பண்டிகை

ஆவணி மாத திருவோண நட்சத்திரம் கேரளாவில் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. திருமால் தனது வாமன அவதாரத்தில், மகாப- மன்னனைத் தனது திருவடியால் அளந்து ஆட்கொண்ட தைக் குறிக்கும் பண்டிகையாகும். ஓணம் பண்டிகையன்று, மகாப- சக்கரவர்த்தி தனது மக்களைக் காண்பதற்காக, பாதாள லோகத்திலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் வருவதாக ஐதீகம். அவரை வரவேற்க விதவிதமான பூக்களால் அலங்கரிப்பர். இது ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி பத்து நாள் விழாவாக நடக்கிறது.

ஓணம் அன்று, வகைவகையான பாயசம், பிரதமன், மிளகுப்பிரட்டி, வாழைக்காய் கறி. உப்பரை, சர்க்கரை உப்பரை, இஞ்சி தயிர், தயிர் பச்சடி, எரிசேரி, புளிசேரி, பூசணி எரிசேரி, மோர்க்கறி, நேந்திரன் சிப்ஸ், காலான், இஞ்சிபுளி, பப்படம், அவியல் என தயாரிப் பார்கள். இது ஓணம் சத்யா என அழைக்கப் படுகிறது.

இது குருவாயூர் போன்ற கிருஷ்ணர் கோவில்களில் மிக விமரிசையாக, விதவித மான அத்தப்பூக் கோலத்துடன் கொண்டா டப்படுகிறது.