பல்தேவ்ஜி மந்திர்... இந்த ஆலயம் உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறது. இங்கு பலராமர் குடி கொண்டிருக்கிறார். மதுரா விலிருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது. இவ்வாலயம் இருக்கும் ஊரின் பெயர் தாவூஜி. அதனால் இந்தக் கோவிலுக்கு "தாவூஜி மந்திர்' என்றொரு பெயரும் உண்டு. "ஈட்டா- மதுரா சாலை'யில் இந்தக் கோவில் உள்ளது.
இங்குள்ள பலராமருக்கு விதுமாவன் என்றொரு பெயரும் உண்டு. பொதுவாக பலராமர் பிரம்மச்சாரி என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் இங்கு பலராமரின் மனைவியான ஜோதிமதி ரேவதியின் சிலையும் உள்ளது. அவள் கக்கு என்னும் மன்னரின் மகள்.
இந்த ஆலயம் ஒரு பிரம் மாண்டமான கோட்டை யைப்போல காட்சியளிக்கிறது. வல்லப வம்சத்தைச் சேர்ந்தவர்களின் மிகப் பழமையான ஆலயமிது.
இந்தக் கோவிலுக்குப் பின்புறம் ஒரு குளமிருக் கிறது. பரந்துகிடக்கும் அந்தக் குளத்தை "ஷிர் சாகர்' என்றழைக்கிறார்கள். "பலபத்ர குண்ட்' என்றொரு பெயரும் உள்ளது.
ஆலயத்திற்கு நான்கு வாசல்கள் இருக்கின்றன. இரண்டடி உயரம்கொண்ட பீடத்தில், பகவான் கிருஷ்ண ரின் அண்ணனான பல ராமரின் சிலை இருக்கிறது. சிலையின் உயரம் எட்டடிகள். அகலம் மூன்றடிகள். சிலை கருப்பு நிறத்தில் இருக்கிறது.
கிருஷ்ணரின் பேரனான வஜ்ரநாப், தன் முன்னோர்களான நான்கு ஆண் கடவுள்களுக்கும், நான்கு பெண் கடவுள் களுக்கும் இங்கு சிலைகள் அமைத்து வைத்தாராம். துவாபர யுகத்தில் அந்தச் சிலைகள் வைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. காலவெள்ளத்தின் ஓட்டத்தில் அந்தச் சிலைகள் மண்ணுக்குக் கீழே புதைந்துவிட்டன.
பலராமரின் சிலை அளவுக்கு உயரமான சிலை அந்தப் பகுதி யிலிருக்கும் எந்த ஆலயத்திலுமே இல்லை. பலராமருக்குப் பின்னால் தன் ஏழு தலைகளையும் விர்த்துப் படமெடுக்கும் கோலத்தில் காட்சியளிக்கி றார் சேஷநாதர். பலராமருக்கு அவர் நிழலளிப்பதைப்போல, பார்ப்பதற்குத் தோன்றும். பலராமர் நடனமாடும் கோலத்திலிருக்கிறார்.
பலராமருக்கு எதிரே, தென்திசையில் ரேவதியின் சிலை இருக்கிறது. பலராமரை அவள் பார்த்துக்கொண்டிருப்பதைப்போல தோன்றும். அந்தச் சிலையின் உயரம் ஐந்தடிகள். பல கல்வெட்டுகளிலும் இந்த ஆலயத்தைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.
இஸ்லாமிய மன்னர் அக்பர் காலத்தில் கல்யாண தேவாச்சாரியர் என்ற இந்துத் துறவி வட இந்தியாவில் தவமிருந்திருக்கிறார். தான் புனிதப் பயணங்கள் மேற்கொள்வதைப்போல கனவு கண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே அவர் புனிதப் பயணத்தைத் தொடங்கி விட்டார். அவர் மதுராவுக்குச் சென்று யமுனை நதியில் நீராடினார். இப்போது பலராமருக்கு ஆலயமிருக்கும் பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு ஆலமரத்திற்கடியில் அமர்ந்து தவம்செய்ய ஆரம்பித்தார். ஒருநாள் அவர் தவத்தில் மூழ்கியிருக்க, அவருக்கு எதிரே பகவான் பலராமர் கலப்பையுடன் வந்தார்.
"உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?'' என்று துறவியைப் பார்த்து அவர் கேட்க, "உங்களை நான் தினமும் காணவேண்டும்'' என்று கூறினார் துறவி. அதற்கு ஒப்புக் கொண்ட பகவான் அங்கிருந்து மறைந்தார். அதற்குமுன் அவர், "நீ என்ன நோக்கத்திற்காக உன் புனிதப் பயணத்தை ஆரம்பித்தாயோ, அதற்கான பலன் உனக்கு இங்கு கிடைக்கும். இந்த ஆலமரத்திற்குக் கீழே நான் என் மனைவியுடன் இருக்கிறேன். நீ எங்களை வெளியே கொண்டுவா'' என்று கூறினார்.
அதேநாளில் கோகுலத்திலுள்ள வல்ல பாச்சாரியர் என்பவரின் பேரனான கோஸ் வாமி கோகுல்நாத்ஜியின் கனவிலும் பகவான் பலராமர் தோன்றினார்.
ஆலமரத்திற்குக் கீழே இருக்கும் பலராமருக்கு பசு பால் தருவதைப்போல அவர் கனவுகண்டார்.
"உடனடியாக நீ அந்த இடத்திற்குச் சென்று என்னை வெளியே கொண்டு வா' என்றொரு கட்டளையும் பிறப்பிக்கப்படுகிறது. அவர் ஆலமரம் இருக்குமிடத்திற்குச் சென்றார். அங்கிருக்கும் கல்யாண தேவாச்சாரியரிடம் தான் கண்ட கனவைக் கூறினார். இருவரும் சேர்ந்து கனவுகளில் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றினார்கள்.
சிலைகள் வெளியே தோண்டி எடுக்கப் பட்டன. அவற்றை கோகுலத்தில் கொண்டு போய் வைக்கலாமென அவர்கள் தீர்மானித் தார்கள். அந்தக் காலத்தில் ஆலமரம் இருந்த பகுதி ஒரு அடர்த்தியான காட்டுப் பகுதியாக இருந்தது. வெளியே எடுக்கப்பட்ட சிலை களைக் கொண்டுசெல்வதற்காக நூற்றுக் கும் மேற்பட்ட மனிதர்களையும், 24 காளை களையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். எவ்வளவு பலமாக இழுத்தும் சிலைகள் நகர மறுத்தன. அதைத் தொடர்ந்து அந்த சிலைகளை அந்த இடத்திலேயே வைத்துவிடுவதென்ற முடிவிற்கு அவர்கள் இருவரும் வந்தனர். கல்யாண தேவாச்சாரியர் கனவுகண்ட இடத்திலேயே சிலைகள் வைக்கப் பட்டு, அது ஆலயமாக மாறியது. அதுதான் இப்போதிருக்கும் "தாவூஜி பல்தேவ் மந்திர்'.
ஆரம்பத்தில் பகவான் பலராமருக்கு பாயசம் பிரசாதமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதுவே இப்போதும் தொடர்கிறது. 1618-ஆம் வருடத்தில் இந்த ஆலயம் உண்டாக்கப்பட்டதாக வரலாறு.
மன்னர் ஔரங்கஸீப் இந்த ஆலயத்தைத் தாக்குவதற்காக தன் படைகளை அனுப்பி யிருக்கிறார். மதுராவிலிருந்த பல ஆலயங் களைச் சேதப்படுத்திய அவரின் அடுத்த முயற்சி இது. ஔரங்கஸீப்பின் படை ஆலயத்தை நெருங்க நெருங்க... ஆலயம் அவர்களைவிட்டு விலகிச் சென்றுகொண்டே யிருக்கிறது. அப்போது குளவிகளும், வண்டுகளும் அந்தப் படைவீரர்களைத் தாக்க ஆரம்பிக்கின்றன. பயந்து நடுங்கிய அவர்கள் அங்கிருந்து பாய்ந்தோடி தப்பிக்கின்றனர்.
அந்த ஆலயத்தின் மகத்துவத்தை உணர்ந்துகொண்ட ஔரங்கஸீப் "இனிமேல் இந்த ஆலயம் இருக்கும் பகுதியிலுள்ள ஐந்து ஊர்களில் நான் வரி வசூலிக்க மாட்டேன்'' என்ற உத்தரவைப் பிறப்பிக்கிறார்.
இதிலிருந்தே தாவூஜியிலிருக்கும் பல்தேவ்ஜி மந்திரின் பெருமையை நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும்.
ஒவ்வொரு வருடமும் ஹோலி பண்டிகை இந்த ஆலயத்தில் மிகவும் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று பலராமரின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற ஆசைப்படுகிறீர்களா?
சென்னையிலிருந்து தில்லிக்குச் செல்லும் ரயிலில் பயணம் செய்யுங்கள். மதுராவில் இறங்கிக்கொள்ள வேண்டும். பயண தூரம் 2,047 கிலோமீட்டர். நேரம் 33 மணிகள். தினமும் சென்னையிலிருந்து பல ரயில்கள் இருக்கின்றன.