தைப்பூசம்- 5-2-2023
12 ஜோதிர்லிங்கத் தலங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. தமிழகத்திலுள்ள இராமேஸ்வரம் இதனுடன் சேர்ந்ததே. எனினும் பஞ்சபூத அக்னித்தலமான அருணா சலமே சிவன் ஜோதிமயமாக நின்ற தலம்.
தமிழ்நாட்டில் ஜோதி ராமலிங் கம் என்னும் பெருந்தகை வடலூர்- மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் ஜோதியின்முன் அமர்ந்து ஜோதி யிலேயே கரைந்தார். அவரது பூதவுடல் காணப்படவில்லை. அந்த நாள் தைப்பூசம், 30-1-1874 என்பர். தைப்பூசத்திற்கு என்ன சிறப்பு? ஸ்கந்தபுராணம் இதை விளக்கமாகக் கூறாவிட்டாலும், அன்றைய தினமே வள்ளி உதித்த நாள்; வள்ளி திருமணமான நாள். முருகன் பராசக்தியிடம் சூர பத்மாதியரை சம்ஹாரம் செய்ய வேல்பெற்ற நாள். எனவே எல்லா முருகன் கோவில்களிலும் முருகனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரங்கள், புறப்பாடு என ஜொலிக்கும். பக்தர்கள் வித விதமாக காவடி எடுப்பார்கள். திருச் செந்தூரில் கந்தசஷ்டி மிகவும் விசேஷமென்றால், பழனியில் தைப்பூசம்தான் மிகவும் விசேஷம்.
வள்ளலார் பிறந்தது 5-10-1823 அன்று. ஆக, இந்த 2023-ஆம் ஆண்டு அவரது இரண்டாம் நூற்றாண்டு விழாவாகிறது. எனவே ஒரு குழு அமைத்து ஆண்டு முழுவதும் எங்கும் கொண்டாடவுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை ஆமோதித்துள்ளார். சென்னை ஏழுகிணறு வள்ளலார் வாழ்ந்த பகுதி. எனவே அது வள்ளலார் நகர் என அழைக்கப்படுகிறது. தங்கசாலை பேருந்து நிலையம் வள்ளலார் பேருந்து நிலையமென அழைக்கப்படும். வள்ளலாரைப் பற்றி சற்று சிந்திப்போமா...
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலமாகப் போற்றப்படுவது சிதம்பரம். சிதம்பரம் நடராஜரை தரிசித்தாலே மோட்சம் என்கிறது ஒரு துதி. சிதம்பரம் அருகே 16 கிலோமீட்டர் தூரத்தில் மருதூர் என்னும் கிராமம் உள்ளது. அங்கு கருணீகர் குலத்தைச் சேர்ந்த ராமையா பிள்ளை என்பவர் வசித்துவந்தார். அவர் தமிழாசிரியராகவும் கணக்கராகவும் பணிசெய்தார். அவர் ஐந்துமுறை திருமணம் புரிந்து மனைவியை இழந்தவர். சில விஷயங்களில் ஏனிப்படி துன்பங்கள் நேர்கின்றன என்பது நமக்குப் புரியாது. முன்வினைப் பயனென்று சமாதானம் செய்துகொள்ளதான் முடியும். இவரது குற்றமா- மணந்த மனைவியின் விதியா என்பதை எவர் அறிவார்? எனவே சென்னைக்கருகே பொன்னேரி யைச் சேர்ந்த சின்னம்மா என்பவரை ஆறாவதாக மணம்புரிந்தார். தம்பதிகள் இறைபக்தியில் ஆழ்ந்து ஈடுபட்டனர். அவர் களுக்கு சபாபதி, பரசுராமன், சுந்தரி, உண்ணாமுலை என்று இரண்டு ஆண் குழந்தை களும், இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். ராமையாவின் மனமும் மகிழ்ந்தது.
ராமலிங்கர் பிறப்பு
தர்மம் பெண்களின் கையில் என்பர். ஒரு நாள் சிவயோகி ஒருவர் ராமையா பிள்ளை இல்லம் வந்தார். அப்போது ராமையா வீட்டிலில்லை. வந்தவரைப் பார்த்தாலே சிவப்பழம்போல், விபூதி, ருத்ராட்சம் அணிந்து, யோக தண்டத்துடன் இருந்தார். பஞ்சாட்சரம் ஓதி வந்தபடி ராமையா வீட்டு வாசலில் நிற்க, ஆடை அணிந்த சிவன் பிச்சாடனர்தான் வந்துள்ளாரோ என்று பணிந்த சின்னம்மையார், வீட்டுக்குள் வரவேண்டுமென வேண்டினார்.
'உணவு உண்ணலாமே' என வேண்ட, அவரும் இசைந்தார்; உண்டார். வந்த சிவயோகி, அன்னபூரணிபோல பண்புடன் அன்னமளித்ததற்கு மகிழ்ந்தார். திருநீறு அளித்து, "இதை சிறிது காலம் தரிக்கவும்; சிறிது உண்ணவும். இறையருள் பெற்ற பிள்ளை பிறப்பான்' என்றார். திடீரென மறைந்தார். ஆக, வந்தது சிவபெருமானா, பழனியாண்டியா? யார் அறிவார்!
பார்வதிதேவி பால்தந்த மூன்று வயது குழந்தையின் தந்தை, "உனக்கு யார் பால் தந்தது?' என கேட்க, "தோடுடைய செவியன்' என்று தேவார
தைப்பூசம்- 5-2-2023
12 ஜோதிர்லிங்கத் தலங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. தமிழகத்திலுள்ள இராமேஸ்வரம் இதனுடன் சேர்ந்ததே. எனினும் பஞ்சபூத அக்னித்தலமான அருணா சலமே சிவன் ஜோதிமயமாக நின்ற தலம்.
தமிழ்நாட்டில் ஜோதி ராமலிங் கம் என்னும் பெருந்தகை வடலூர்- மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் ஜோதியின்முன் அமர்ந்து ஜோதி யிலேயே கரைந்தார். அவரது பூதவுடல் காணப்படவில்லை. அந்த நாள் தைப்பூசம், 30-1-1874 என்பர். தைப்பூசத்திற்கு என்ன சிறப்பு? ஸ்கந்தபுராணம் இதை விளக்கமாகக் கூறாவிட்டாலும், அன்றைய தினமே வள்ளி உதித்த நாள்; வள்ளி திருமணமான நாள். முருகன் பராசக்தியிடம் சூர பத்மாதியரை சம்ஹாரம் செய்ய வேல்பெற்ற நாள். எனவே எல்லா முருகன் கோவில்களிலும் முருகனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரங்கள், புறப்பாடு என ஜொலிக்கும். பக்தர்கள் வித விதமாக காவடி எடுப்பார்கள். திருச் செந்தூரில் கந்தசஷ்டி மிகவும் விசேஷமென்றால், பழனியில் தைப்பூசம்தான் மிகவும் விசேஷம்.
வள்ளலார் பிறந்தது 5-10-1823 அன்று. ஆக, இந்த 2023-ஆம் ஆண்டு அவரது இரண்டாம் நூற்றாண்டு விழாவாகிறது. எனவே ஒரு குழு அமைத்து ஆண்டு முழுவதும் எங்கும் கொண்டாடவுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை ஆமோதித்துள்ளார். சென்னை ஏழுகிணறு வள்ளலார் வாழ்ந்த பகுதி. எனவே அது வள்ளலார் நகர் என அழைக்கப்படுகிறது. தங்கசாலை பேருந்து நிலையம் வள்ளலார் பேருந்து நிலையமென அழைக்கப்படும். வள்ளலாரைப் பற்றி சற்று சிந்திப்போமா...
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலமாகப் போற்றப்படுவது சிதம்பரம். சிதம்பரம் நடராஜரை தரிசித்தாலே மோட்சம் என்கிறது ஒரு துதி. சிதம்பரம் அருகே 16 கிலோமீட்டர் தூரத்தில் மருதூர் என்னும் கிராமம் உள்ளது. அங்கு கருணீகர் குலத்தைச் சேர்ந்த ராமையா பிள்ளை என்பவர் வசித்துவந்தார். அவர் தமிழாசிரியராகவும் கணக்கராகவும் பணிசெய்தார். அவர் ஐந்துமுறை திருமணம் புரிந்து மனைவியை இழந்தவர். சில விஷயங்களில் ஏனிப்படி துன்பங்கள் நேர்கின்றன என்பது நமக்குப் புரியாது. முன்வினைப் பயனென்று சமாதானம் செய்துகொள்ளதான் முடியும். இவரது குற்றமா- மணந்த மனைவியின் விதியா என்பதை எவர் அறிவார்? எனவே சென்னைக்கருகே பொன்னேரி யைச் சேர்ந்த சின்னம்மா என்பவரை ஆறாவதாக மணம்புரிந்தார். தம்பதிகள் இறைபக்தியில் ஆழ்ந்து ஈடுபட்டனர். அவர் களுக்கு சபாபதி, பரசுராமன், சுந்தரி, உண்ணாமுலை என்று இரண்டு ஆண் குழந்தை களும், இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். ராமையாவின் மனமும் மகிழ்ந்தது.
ராமலிங்கர் பிறப்பு
தர்மம் பெண்களின் கையில் என்பர். ஒரு நாள் சிவயோகி ஒருவர் ராமையா பிள்ளை இல்லம் வந்தார். அப்போது ராமையா வீட்டிலில்லை. வந்தவரைப் பார்த்தாலே சிவப்பழம்போல், விபூதி, ருத்ராட்சம் அணிந்து, யோக தண்டத்துடன் இருந்தார். பஞ்சாட்சரம் ஓதி வந்தபடி ராமையா வீட்டு வாசலில் நிற்க, ஆடை அணிந்த சிவன் பிச்சாடனர்தான் வந்துள்ளாரோ என்று பணிந்த சின்னம்மையார், வீட்டுக்குள் வரவேண்டுமென வேண்டினார்.
'உணவு உண்ணலாமே' என வேண்ட, அவரும் இசைந்தார்; உண்டார். வந்த சிவயோகி, அன்னபூரணிபோல பண்புடன் அன்னமளித்ததற்கு மகிழ்ந்தார். திருநீறு அளித்து, "இதை சிறிது காலம் தரிக்கவும்; சிறிது உண்ணவும். இறையருள் பெற்ற பிள்ளை பிறப்பான்' என்றார். திடீரென மறைந்தார். ஆக, வந்தது சிவபெருமானா, பழனியாண்டியா? யார் அறிவார்!
பார்வதிதேவி பால்தந்த மூன்று வயது குழந்தையின் தந்தை, "உனக்கு யார் பால் தந்தது?' என கேட்க, "தோடுடைய செவியன்' என்று தேவாரம் பாடியது அந்தக் குழந்தை. பின்னர் சிவனைத் தலம் தலமாகப் பாடி, தனது 18 வயதில் ஆச்சாள்புர சிவனுள் கலந்தார். சேக்கிழாரின் பெரியபுராணத்தில் பாதி ஞானசம்பந்தருடையதே.
சின்னம்மை நினைத்தாரா- குழந்தை பிறக்கும்; முருகன், சிவன், அம்பாளையே பாடும். அந்தப் பாடல்கள் 6,000-க்கும்மேல் இருக்கும் என! இல்லையே... சுமார் 200 ஆண்டுகளுக்குமுன் 5-10-1823-ல் குழந்தை பிறந்தது. ராமையா சிவராம பக்தர் என்பதால், ராமலிங்கம் என்று பெயர் சூட்டினார்.
குழந்தைக்கு ஐந்து மாதங்கள் நடக்கும்போது ராமையா, குடும்பம் சகிதமாய் சிதம்பரம் ஆலயம் சென்று தரிசித்தார். தீட்சிதர் நடராஜருக்குப்பின் ரகசிய தரிசன தீபாராதனை காட்ட, குழந்தை சிரித்தது. நடராஜரைப் பூஜைசெய்ய சிவனே மூவாயிரம் தீட்சிதர்களைக் கொண்டுவந்து நியமித்தார் என்பர். தீட்சிதர்களும் சிவப்பழமாகவே தென்படுவார்கள். குழந்தை சிரித்ததைக் கண்ட தீட்சிதர், "இவன் ஞானச்செல்வமானவன்' என்றார். இது இரண்டாவதாக நடந்தது.
சிவனடியார் வாக்கு பலிக்காமல் போகுமா?
சென்னை வருகை
ராமையா பிள்ளை திடீரென காலமானார். எனவே சின்னம்மையார் தன் குழந்தைகளுடன் பொன்னேரி சென்றார். அங்கு நீண்டநாட்கள் தங்க இயலவில்லை. ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்தை எவ்வளவு நாட்கள் காப்பாற்றமுடியும்? எனவே மூத்த மகன் சபாபதி குடும்பத்தைக் காப்பாற்றவேண்டி நேர்ந்தது. எனவே சென்னை ஏழுகிணறு பகுதியில், 1826-ல் குடியேறினர். அச்சமயம் சென்னை யில் காஞ்சி சபாபதி என்பவரிடம் தமிழ் கற்றுத் தேர்ச்சிபெற்று, தமிழாசிரியராகப் பணிபுரிந்தார் சபாபதி. புராணங்களையும் கற்று சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி னார்.
கந்தசாமி கோவில் வழிபாடு
ராமலிங்கத்திற்கு ஐந்து வயதானதும், சபாபதி தன் தம்பிக்கு படிப்பு சொல்லித்தர ஆரம்பித்தார். ராமலிங்கம் படிப்பில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. "படிக்காமல் பொருளீட்ட முடியாது; பொருளீட்டாவிட்டால் உண்ண முடியாதே' என்று வற்புறுத்தினார் அண்ணன். தம்பியோ இசையவில்லை. எனவே தம்பியை ஒரு ஆசிரியரிடம் பள்ளியில் படிக்கவைத்தார். சில நாட்கள் ராமலிங்கம் பள்ளிக்குச் செல்வதில்லை. ஆசிரியர் மற்ற சிறுவர் களிடம் இதுபற்றி விசாரிக்க, சிலரோ கந்தசாமி கோவிலில் பாடுகிறான் என்றனர். படிக்காத ஒருவன் பாடுவதா என, ஆசிரியரே ஒருநாள் கந்தசுவாமி கோவிலுக்குப் போய் மறைவாக இருந்து பார்த்தார். முட்டாள் என்று தான் நினைத்தவன் பழகு தமிழில் உள்ளம் உருகும்படி பாடுகிறானே என்று வியந்தார். மறுநாள் ராமலிங்கம் பள்ளிக்கு வர ஆசிரியர் அவனிடம், "நாங்கள் சொல்லிக்கொடுப்பது வயிற்றுப் பிழைப்புக்கு. நீயோ ஞானிபோல் ஆண்டவனைப் பாடுகிறாய். (அதுவே தெய்வ மணிமாலை என முப்பது துதிகள்- 16 வரி துதிகள்.) எனவே இந்த பள்ளிப்படிப்பு உனக்கு உதவாது' என்றார்.
சபாபதி தன் தம்பி பள்ளிக்கு சரியாகச் செல்வதில்லையே என்று நொந்து தன் மனைவியிடம், "அவனுக்கு உண்ண உணவு தராதே; பசித்து வாடட்டும். அப்போதாவது அறிவு வருமா என பார்ப்போம்' என்றார். அண்ணிக்கோ ராமலிங்கத்திடம் பாசம்.
எனவே ராமலிங்கத்தை கொல்லைப் பக்கமாக வரச்செய்து, கணவர் இல்லாதபோது அன்னம் தருவாராம்.
ஒருசமயம் சபாபதியின் தகப்பனாரின் வருட திதி. காரியங்கள் முடிந்து அனைவரும் உணவருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது தன் தம்பி கூட இருந்து உணவுண்ண இயலவில்லையே என்று சபாபதி மனம் வருந்தினர். ஆனால் அந்த சமயம் கொல்லையில் சபாபதியின் மனைவி அன்னமிட, ராமலிங்கம் அவசர அவசரமாக உண்டார். இதைக்கண்ட அண்ணன், "மனம் தணிந்து வீட்டுக்கு வா. மாடியில் ஒரு அறை தருகிறேன். அங்கு தங்கி உன் வேண்டுதல் நடக்கட்டும்' என்று கேட்டார். எனவே மீண்டும் வீடு சென்றார்.
தணிகேசன் அருள் மாடியறையில் ஒரு விளக்கேற்றி, அதன் முன்னமர்ந்து தியானம் செய்தார்.
அங்கொரு கண்ணாடி இருந்தது. (இன்றும் அதைக் காணலாம்.) அந்தக் கண்ணாடியில் தன் முகத்தைக் கண்டாரா? அல்ல! திருத் தணிகேசன் உருவம்- ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக! (திருத் தணிகையில் கருவறையில் முருகனுக்கு ஒரு முகமே. வள்ளி, தெய்வானைக்கு தனிச் சந்நிதிகள் உள்ளன.) அப்போது எழுந்த பாடல்-
'சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்ப
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும் நற்கோழிக் கொடியும் அருள்
கார்கொண்ட வண்மை தணிகாசலமும் என் கண்ணுற்றதே.'
வள்ளலாரின் பாடல்கள் நக்கீரனின் திருமுருகாற்றுப்படை போன்று, பொருளை அறிந்துகொள்ள சிரமமான செந்தமிழ்ப் பாடல்களல்ல. தேவார, திருவாசக, திவ்யப் பிரபந்தம்போன்ற தமிழுமல்ல. பேசும் தமிழ்போன்று மிக எளிமையானவை.
தம்பியை அண்ணன் மதித்தல் சபாபதி, முத்தியாலுப்பேட்டை சோமு செட்டியார் வீட்டில் பெரியபுராணம் உபன் யாசம் செய்வார். அச்சமயங்களில் பாடுவதற் காக ஒரு பெண்மணி வருவார். ஒருநாள் அவரால் வர இயலவில்லை. அப்போது சபாபதியின் மனைவி, "ராமலிங்கத்தை அழைத்துச்சென்று பாடவையுங்கள்' என்று கூறினார். சபாபதியும் அவ்வாறு செய்ய, தம்பி பாடும் விதத்தைக்கண்டு வியந்தார்.
மற்றொரு சமயம் சபாபதிக்கு உடல்நலம் சரியில்லை. எனவே உபன்யாசம் செய்ய ராமலிங்கத்தை அனுப்பினார். ராமலிங்கம் ஒரு வரிக்குப் பல மணிநேரம் உபன்யாசம் செய்தாராம். கேட்டவர்கள் இந்த சிறுவயதில் இவ்வளவு ஞானமா என்று வியந்தனர்;
நெகிழ்ந்தனர். பள்ளிக்குச் செல்லாத இவன் இந்த அளவுக்குப் பிரசங்கம் செய்ய வேண்டுமாயின் அது இறைவனின் அருளே என்று வியந்தார் சபாபதி. அன்றிலிருந்து தம்பிமீதிருந்த கோபதாபம் அகன்று பரிவு, மரியாதை அதிகமாயிற்றாம். கடவுள் அருள் எவரிடம் ஏன் பெருகுகிறதென்று நிர்ணயிக்க முடியாது.
சிவனும் அம்பிகையும் உணவிடுதல்
திருவொற்றியூர் ஆலயம் ராமலிங்கத் திற்குப் பிடித்தமான தலம். ஆதிசங்கரரே வந்த தலமாயிற்றே. கோவில் அருகே சங்கர மடத்தைக் காணலாம். திருவொற்றியூரில் வட்டப்பாறை அம்மன் உக்கிரமாக இருந்ததால், எதிரே ஸ்ரீ சக்கரம் பதித்துள்ளார். ராமலிங்கர் மடமும் கோவில் அருகே உள்ளது. சிவன்மீதும் வடிவுடையம்மன்மீதும் பல துதிகள் செய்துள்ளார் ராமலிங்கர். சிலசமயம் கோவிலிலேயே தங்கிவிடுவார்.
அர்ச்சகர் பூஜை முடிந்து தரும் பிரசாதத்தை மட்டுமே உண்பார். ஒருசமயம் கோவிலின் மூலையில் தியானத் தில் ஆழ்ந்துவிட்டார். நேரமாகவே அர்ச்சகர் கோவிலைப் பூட்டி விட்டுச் சென்றுவிட்டார். நள்ளிரவில் தியானத்திலிருந்து கண் விழித்தார் ராமலிங்கர். அவருக்குப் பசியெடுத் தது. அப்போது அங்குவந்த அர்ச்சகர் பிரசாதம் தர, அதை வாங்கி உண்டுவிட்டுப் படுத்து விட்டார்.
காலை ஆலயக் கதவைத் திறந்துவந்த அர்ச்சகர் ராமலிங்கத்தைப் பார்த்து, "நேற்று நீ வரவில்லையே... பிரசாதத்தை நான் வீட்டுக்குக் கொண்டுசென்று விட்டேன்'' என்றார், ராமலிங்கரோ, "நள்ளிரவு நேரம் தியானத்தி லிருந்து நான் கண்விழிக்க, நீங்கள்தானே பிரசாதம் தந்தீர்கள்?'' என்றார். அர்ச்சகரோ, "இல்லையே... நான் கோவில் கதவு பூட்டியபிறகு இங்கு வரவில்லையே. இப்போதுதானே வருகிறேன்'' என்றார். ஆக, அர்ச்சகர் உருவத்தில் சிவபெருமானே வந்து கொடுத்தார்போலும்.
இன்னொரு சம்பவத்தையும் சிந்திப்போம். ஏழுகிணறு வீட்டிலிருந்து திருவொற்றியூருக்கு நடந்தே செல்வார்; திரும்ப வருவார். ஒரு சமயம் வீடு திரும்ப வெகுநேரம் ஆகிவிட்டது. வீடு தாளிட்டிருக்க, வாயில் திண்ணையிலேயே படுத்து உறங்கிவிட்டார். பசி மயக்கம் வேறு. சிறிதுநேரத்தில் அவரது அண்ணியார் வந்து எழுப்பி உணவு தந்தார். ராமலிங்கரும் உண்டார். சற்று நேரம் கழித்து மீண்டும் அண்ணி வந்து எழுப்பி, "கதவைத் தட்டக்கூடாதா? இந்தா சாப்பிடு'' என்று உணவு தந்தார். ராமலிங் கரோ, "சற்று நேரத்துக்குமுன் நீங்கள்தானே உணவு தந்தீர்கள்? சாப்பிட்டேனே. தூக்க மயக்கத்தில் நான் கையைக்கூட கழுவ வில்லை; பாருங்கள்'' என்றார். அண்ணியோ, "இல்லையே, இப்போதுதானே நான் வருகிறேன்'' என்றார். அப்படியாயின் முன்னர் அண்ணி வடிவில் வந்தது யார்? திருவொற்றியூர் வடிவுடையம்மன்தானோ!
23 ஆண்டுகள் திருவொற்றியூர் தலத்தை ஆழ்ந்து வணங்கியுள்ளார் எனில், அவர் ஈடுபாடு என்னவென்று சொல்வது!
(பசிக் கொடுமையை- பசியால் துன்பப் படுவதை உணர்ந்த அவர், 23-5-1867-ல் வடலூர் தர்மசாலையில் பசிநீக்க மூட்டிய அடுப்பு இன்றுவரை எரிந்துகொண்டு இருக்கிறது. தினமும் பலநூறு பேர் உணவருந்துகிறார்கள்.
அவ்வூரார் 100 ஏக்கர் நிலத்தை தர்மசாலைக்கு ஈந்தனராம்.)
தர்மசாலை
ஒருசமயம் தர்மசாலையில் அனைவரும் உணவருந்திப் படுத்துறங்கி விட்டனர்.
அப்போது திடீரென நூறுபேர் வண்டிகளில் வந்திறங்கினர். அங்கு நான்கு பேருக்கு அளிக்கவே உணவிருந்தது. பணியாளர்கள் ராமலிங்கரிடம் இதைச்சொல்லி வருந்தினர். அவரோ, "கவலைவேண்டாம்; இலையைப் போடுங்கள். நான் பரிமாறுகிறேன்'' என்றார்.
நான்கு பேருக்கு இருந்த உணவை நூறு பேருக்குப் பரிமாறினாராம். அன்னபூரணி அருளல்லவா அது!
மற்றொரு சமயம் உணவு சமைக்கும் பண்டங்கள் மிகக் குறைவாக இருந்தன. நிர்வாகிகள் வருத்தத்துடன் சுவாமிகளிடம் முறையிட்டனர். அவரோ ஒரு நிமிடம் தியானம் செய்தார். பின்னர், "கவலை வேண்டாம்; பொருட்கள் வந்துசேரும்" என்றார். சற்று நேரத்தில் மூன்று வண்டிகள் வந்தன. அதில் சமையல் பொருட்களும் காய்கறிகளும் இருந்தன. "எங்கே இறக்கி வைக்கவேண்டும்?'' என்று அவர்கள் கேட்டனர். நிர்வாகிகளோ, "நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்று கேட்க, "நாங்கள் திருத்துறையிலிருந்து வருகி றோம். கனவில் சுவாமிகள் கூறியபடி சமையல் பொருட்களைக் கொண்டுவந்துள்ளோம்'' என்றனர். கண்ணன் பகவத் கீதையில் கூறுவார், "மா சுச'- கவலைப்படாதே என்று.
வைரமும் துச்சமே!
ஞானிகளுக்கு பணமோ நகைகளோ துச்சம் என்பர். இவர் ஒருசமயம் திருவொற்றியூர் தரிசனம் செய்து இரவு நேரமாகிவிட்டதால் ஒரு சத்திரத்தில் தங்கினார். அப்போது யாரோ ஒருவன் அவரது காது கடுக்கனைத் திருடினான். அவரோ அறியாததுபோல திரும்பிப் படுக்க, மற்றொரு கடுக்கனையும் எடுத்துக்கொண்டு அவன் கிளம்பினான். அப்போது ராமலிங்கர் அவனைக் கூப்பிட்டு, "அது வைரக் கடுக்கன். குறைந்த விலைக்கு விற்றுவிடாதே'' என்றா ராம். ஞானிகளுக்கு அவை துச்சமே.
ஒருசமயம் செல்வந்தர் ஒருவர் தன் மகள் திருமணத்திற்கு அவசியம் வரவேண்டுமென ராமலிங்கரை வேண்டினார். அவரும் வந்தார்.
வாயிலில் இருந்த காப்பாளன் அவரது எளிய உடையைக்கண்டு உள்ளே அனுமதிக்க வில்லை. ராமலிங்கர் திரும்பிச் செல்வதைத் தற்செயலாக கவனித்துவிட்ட தனவந்தர் ஓடிவந்து மன்னிப்புகேட்டு வரவேற்றார்.
உடலுக்கு உடை; ஞானத்திற்கு உடை இல்லையே! அவையும் அவர்களுக்கு துச்சம்.
ஜீவகாருண்யம்
உக்ர காளி கோவில்கள், ஊர்க் காவல் அம்மன் கோவில்களில் பலி கொடுக்கப் படுவதுண்டு. சென்னை ஏழுகிணறு பகுதியில் வள்ளலார் வசித்த சமயம். அருகே துலுக்கானத் தம்மன் கோவில் இருந்தது. அங்கு கோழி, ஆடு போன்றவை பலியிடப்படுவதுண்டு. கோவிலில் திருவிழா சமயம், தர்மகர்த்தாக்கள் சுவாமிகளிடம் கோவிலுக்கு வந்து பாட வேண்டுமென அழைத்தனர். அவரோ, "நீங்கள் பலியிடுவதை நிறுத்தினால், இனி பலியிட மாட்டோம் என்று சத்தியம் செய்தால் வந்து பாடுகிறேன்'' என்றார். அவர்கள் சம்மதிக்க, ஆலயம் வந்து ஐந்து பாடல்கள் பாடினார்.
தீய குணங்களை பலியிடச் சொன்னார். ஜீவ காருண்யத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் அவர். புலால் உண்பதை வெறுத்தவர்; தடுத்தவர். அவரது ஆழ்ந்த பக்தர்கள் புலால் உண்ணமாட்டார்கள்.
கருங்குழி
சுவாமிகள் பிறந்த மருதூர் அருகேயுள்ள தலம் கருங்குழி. அங்கிருந்த பெருஞ்செல்வர் வெங்கட ரெட்டியார், ராமகிருஷ்ண ரெட்டி யார் ஆகியோர் வேண்டுதலுக்கு இணங்கி, ஒன்பது வருடங்கள் அங்கு தங்கினார். பகல் முழுவதும் தம்மைக் காணவரும் அன்பர் களுடன் உரையாடுவார். அன்பர்களுக்கு அன்னதானம் தருவது முக்கியம் என்பார். அன்னத்தில்தான் போதும் என்னும் மனப் பான்மை வரும்; வேறெதிலும் மனம் நிறைவு கொள்ளாது என்பார். சுவாமிகள் தண்ணீரில் விளக்கெரித்தது இங்குதான். இதுபோல மேலும் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.
சீடர் வேலாயுத முதலியார்
இவர் தமிழ் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 1849-ஆம் வருடம், அவர் "ஒன்றுமறியாத ராமலிங்கர் பாடல்கள் புனைகிறாரா' என்று அகங்காரம் கொண்டு, தானே 100 பாடல்களை எழுதி, அவற்றை எடுத்துக்கொண்டு ராமலிங்கரிடம் சென்று, "இவை சங்ககாலப் பாடல்கள். இந்த சுவடிகள் எனது மூதாதையர் தந்தது'' என்று சொல்லிக்கொடுத்து, அவற்றைப் பார்வை யிடச் சொன்னார். சுவாமிகள் ஒரு பார்வை யிட்டு, "பிழைகள் நிறைந்த இப்பாடல்கள் சங்ககாலப் பாடல்கள் அல்ல'' என்றவுடனே, வேலாயுதம் சுவாமிகளின் பாதம் பணிந்து, "தங்களை சோதிக்கவே வந்தேன்; இது என் அறியாமை'' என்றார். அவரே சீடரானார்.
சுவாமிகளிடம் இலக்கிய, இலக்கண நுட்பங்களைக் கற்றார்.
நாம் இன்று வள்ளலாரின் வாழ்க்கையை அறிகிறோமென்றால், அது வேலாயுதனாரின் குறிப்புகளே. சுவாமிகளின் பாடல்களை திருவருட்பா என ஆறு திருமுறைகளாக வகுத்தார். ஐந்து திருமுறைகள் 1867-ல் வெளியிடப்பட்டன. சுவாமிகள் ஜோதியில் கலந்தபிறகு, 1880-ல் ஆறாவது திருமுறையை வெளியிட்டார்.
ஜோதியில் கலந்தது
கருங்குழியில் ராமகிருஷ்ண ரெட்டியாரின் இல்லத்தில் இருந்தபோது, சுவாமிகள் 23-5-1867-ல் வடலூரில் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்று ஸ்தாபித்தார். அதன் பெயர் 1872-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் என மாற்றப்பட்டது. 22-10-1873-ல் மேட்டுக் குப்பத்தில் சித்தி விளாகம் என்று ஸ்தாபித்தார்.
30-10-1874 அன்று தீபத்தை வைத்து அறைக் குள் புகுந்தார். "திறந்து பார்த்தால் நான் தென்பட மாட்டேன்'' என்று கூறி கதவைத் தாழிட்டுக் கொண்டார். அன்றைய ஆங்கில அரசு பலாத்காரமாக கதவைத் திறந்தனர்.
அங்கு அவரது உடல் காணப்படவில்லை. 1906-ல் சென்னை- கடலூர் கெஜட்டில் "அவரது விவரம் தெரியவில்லை' என்று கூறினர்.
சுவாமிகள் ஜோதியில் கலந்ததால் ஜோதி ராமலிங்கம் என்றும், அன்னம் வழங்கியதால் வள்ளலார் என்றும், சுவாமிகள் என்பதால் ராமலிங்க சுவாமிகள் என்றும் அழைக்கப் படுகிறார்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணைக் கடலான வள்ளலாரை நினைத்து மனம் நெகிழ்ந்து கசிவோம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை!