மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் 4-ல் நீசம். இம்மாதம் முழுவதும் 4-ல் நீசமாக உள்ளார். தேகநலனில் திடீர் வைத்தியச் செலவுகள் ஏற்பட்டு விலகும். 2-க்குடைய சுக்கிரனும் செவ்வாயுடன் சேர்க்கை. தனவரவுக்கும் இடம் உண்டு. அதேசமயம் செலவுக்கும் பஞ்சமில்லை. ஜென்ம குருவும் அவருடன் இணைந்த ஜென்ம ராகுவும் அலைச்சல்களையும், அசதிகளையும் தருவார்கள். மாத பிற்பாதியில் 3-க்குடைய புதன் 3-ல் ஆட்சி. புதனுக்கு 3-ஆமிட மறைவு தோஷம் பாதிக்காது. உடன்பிறப்புகள்வழியில் நன்மைகளுக்கு இடமுண்டு. ராசிநாதன் நீசம்பெற்றாலும் அவரின் உச்ச வீடான 10-ஆமிடத்தை (மகரம்) பார்க்கிறார். உத்தியோகத்தில் நன்மதிப்பைப் பெறலாம். தொழில் துறையினருக்கு தடைகள் எதுவும் ஏற்படாது. 11-ஆமிடத்துச் சனி காரிய அனுகூலத்தைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம். திட்டங்கள் செயல்வடிவம் பெறும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இம்மாதம் 2-ல் சஞ்சாரம். 12-க்குடைய செவ்வாயுடன் சம்பந்தம். செவ்வாய் அங்கு நீசம். 11-க்குடைய குருவும் 12-ல் மறைவு. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யுமாறு அமைப்புகள் ஏற்படும். ஒட்டிக்கு ரெட்டி என்று சொல்வார்களே! அதுமாதிரி. நேரமும் விரயம், பொருளாதாரமும் விரயம். ஒரு ஆறுதல் சனி அதிசாரமாக 10-ல் ஆட்சி. தொழில் ஓட்டங்கள் நிற்காது. உடல்நலத்தில் ஆரோக்கியம் தென்படும். 6-ஆமிடத்தைக் குரு பார்ப்பதால் கடன் வாங்கும் சூழலும் உருவாகும். கேட்ட இடத்திலும் கடன் உதவிகள் கிடைக்கும். 12-ல் உள்ள ராகு வேலை விஷயமாக வெளியூர் முயற்சிப்பவர்களுக்கு பலன் தரும். ஒரு சிலர் வெளிநாடு செல்லவும் வாய்ப்புண்டு. ராஜயோகாதிபதியான சனி 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அலைச்சலுடன்கூடிய ஆதாயம் உண்டு.

Advertisment

மிதுனம்

மாத முற்பாதிவரை மிதுன ராசிநாதன் புதன் 12-ல் இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 2-ல் சஞ்சாரம். 3-க்குடைய சூரியன் 12-ல் மறைவு. பலமுறை கூறியதுபோல் மற்ற கிரகங்களுக்கு மறைவு தோஷம் பாதித்தாலும் புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதுபோல வருமான வழிகளுக்கு எந்தத் தடையும் இருக்காது. தாராளமான வரவு- செலவுகளுக்கு இடமுண்டு. 12-க்குடையவர் 2-ல் இருப்பதால் அந்நிய தனமும் உங்கள்வசம் புரளும். கொடுக்கல்- வாங்கல் செயல்பாடுகளிலும் பிரச்சினைக்கு இடமில்லை. 11-க்குடைய செவ்வாய் 2-ல் நீசம் பெற்றாலும் (அவர் சகோதர காரகன்), குரு சகோதர ஸ்தானத் தைப் பார்ப்பதால் விசேஷம், சுபநிகழ்வு போன்றவற்றால் விட்டுப்போன உறவை மீண்டும் புதுப்பிக்கலாம். சகோதர சகாயம் ஏற்படும்.

கடகம்

Advertisment

கடக ராசிக்கு அதிசார சனிப்பெயர்ச்சியாக 8-க்குடைய சனி 8-ல் ஆட்சியாக அமர்வதால் அட்டமத்துச்சனி அமைப்பு நடைபெறுகிறது. 10-க்குடைய செவ்வாயும், 11-க்குடைய சுக்கிரனும் ஜென்ம ராசியில் சேர்க்கை. ஆதாயமற்ற அலைச்சல், திரிச்சல்கள் உண்டாகலாம். ஒருசிலருக்கு கால், பாதம் சம்பந்தப்பட்ட உபாதைகள் தொல்லை தரும். வருமானம் சற்று குறைவாகக் காணப்படலாம். செலவும் தாராளமாக அமைவதால் அதைச் சரிக்கட்ட கடன் வாங்கும் யோகம் உண்டாகும். 10-ல் உள்ள ராகுவும் குருவும் மேற்படி கடன் அமைப்பை தொழில்துறைக்காக ஏற்படுத்துவார். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்கலாம். 2-க்குடைய சூரியன் 11-ல் இருப்பதால் வெற்றிக்கு இடமுண்டு. 7-ஆமிடத்தை செவ்வாய் நீசம் பெற்று பார்ப்பதால் கணவன் அல்லது மனைவிக்கு உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகளுக்கு இடமில்லை.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை 10-ல் திக்பலம் பெறுகிறார். வியாபார முயற்சிகளில் புதிய யுக்திகளைக் கையாளலாம். 8-க்குடைய குரு 9-ல் இருப்பது திடீர் யோகத்தையும் தரும். குரு 9-ல் நின்று ராசியையும் பார்ப்பதால் எடுத்த காரியத்தை சிறப்பாகவே செய்துமுடிக்கும் தருணங்களும் உதவிகளும் கிடைக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. நீண்ட நாட்களாக கிணற்றில் போட்ட கல்மாதிரி எவ்வளவோ முயற்சிசெய்தும் நடைபெறாமல் இருந்த செயல்பாடுகளை இந்த குரு ராசியைப் பார்க்கும் பெருமையால் சாதிக்கலாம். அதற்குண்டான தைரியமும் தன்னம் பிக்கையும் சகாயமும் உண்டாகும். 7-ல் சனி ஆட்சிபெற்ற காரணத்தால் ஒற்றுமைக்கு இடமிருந்தாலும் நீசம்பெற்ற செவ்வாய் பார்ப்பதால் பிரச்சினைகளும் நேரும். வாக்குவாதங்கள் உண்டாகும். அனுசரித்துச் செல்லவேண்டும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். குரு 8-ல் மறைவுபெற்ற தோஷத்தை ராசிநாதனின் தர்மகர்மாதிபதி யோகம் ஓரளவு சரி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலவினாலும் செலவுகளைச் சமாளிக்கலாம். 12-க்குடைய சூரியன் பாக்கிய ஸ்தானத் தில் இருப்பதால் தகப்பனார்வழியே சில ஆதாயங்கள் உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச்செல்வது நன்மை தரும். 2-ல் கேது 8-ல் ராகு. குடும்பத்தில் எவ்வளவு உண்மையாக பாடுபட்டாலும் அதற்குண்டான மதிப்பும், மரியாதையும் கிடைக்காமலிருப்பதால் மனதில் கவலையும் சங்கடமும் ஏற்படும். கணவருக்கு தேக ஆரோக்கியப் பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய தொந்தரவுகள் உண்டாகாது. உணவு சம்பந்தப்பட்டவகையில் கட்டுப்பாடு அவசியம்!

துலாம்

துலா ராசிநாதன் 10-ல் சஞ்சாரம். 7-க்குடைய செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை. நீசம். உத்தியோகத்தில் சக ஊழியரிடம் அனுசரித்துச்செல்வது நன்மை தரும். ஒருசில நேரம் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகலாம். குரு 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் குழப்பங்களுக்குத் தீர்வு ஏற்படும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும். 11-க்குடைய மாத முற்பாதிவரை 8-ல் இருப்பதால் அலைந்து திரிந்துதான் காரியத்தைச் சாதிக்கவேண்டும். 7-ல் குரு நின்று ராசியைப் பார்ப்பதால் எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் சமாளித்துவிடலாம். அதற்கு மனைவிவழியிலும் ஒத்துழைப்பு உண்டாகும். திருமணமாகாத ஆண்- பெண்களுக்கு 7-ஆமிடத்து குரு திருமண யோகத்தை ஏற்படுத்தித் தருவார். 5-ல் சனி ஆட்சி. எந்தச் செய-லும் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. அது வெற்றியும் தரும்.

விருச்சிகம்

ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீசம் பெறுகிறார். 7-க்குடைய சுக்கிரன் சேர்க்கை. கணவன் அல்லது மனைவிவழியில் ஏற்படும் உதவி ஒத்தாசையும் குடும்பப் பொருளாதார அமைப்புக்கு ஒரு வழிவகைகளை உண்டுசெய்யும். உங்களது முயற்சிகளில் தடை அல்லது தாமதங்களைச் சந்திக்க நேரும். குரு 5-ல் இருந்தபோது பெரிதாக நன்மைகளை அனுபவிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்போது 6-ல் வந்திருக்கும் குரு கல்விக்கடன், தொழில் கடன் போன்றவற்றை ஏற்படுத்துவார். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் பிரச்சினைக்கு இடமில்லை. 2-ஆமிடத்தை 2-க்குடையவரே பார்ப்பதால் தனவரவு ஏற்பட்டாலும் செலவுகளும் கை மீறியே அமையும். மாணவ- மாணவியருக்கு கல்வியில் முன்னேற்றமும் அக்கறையும் உண்டாகும். உயர்கல்வி யோகத்திற்கும் இடமுண்டு.

தனுசு

தனுசு ராசிக்கு அதிசாரமாக ஏழரைச்சனி நிவர்த்தி. அது மனதுக்கு ஒரு ஆறுதல் தரும். ராசிநாதன் குரு ராசியைப் பார்ப்பது மேலும் ஒரு பலம். கடந்த ஏப்ரல் 22-ல் குருப்பெயர்ச்சி நடைபெற்றது. எனினும் ஒருசிலருக்கு தேகநலனில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நேர்ந்தது. மே மாதம் 1-ஆம் தேதிமுதல் குரு அஸ்தமன நிவர்த்தியான பிறகுதான் குருவினால் நன்மைகளை அனுபவிக்க முடிந்தது. 5-க்குடைய செவ்வாய் 8-ல் நீசம். அவர் 12-க்கும் உடையவர் என்ற அடிப்படையில் "கெட்டவன் கெட்டிடில் கிட்டும் யோகம்' என்பதுபோல ஒருசில நன்மைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் உறவும் இல்லை பகையும் இல்லை என்ற நிலையைத்தான் சந்திக்கவேண்டி உள்ளது. 11-ஆமிடத்துக் கேது அவரைப் பார்க்கும் குருவும் தேயைற்ற அலைச்சலைக் குறைப்பார்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 2-ல் ஆட்சி. ஏழரைச்சனியில் பாதச்சனி. (அதிசாரம்). குரு 4-ல். 3-ஆமிடத்துக்கு 2-ஆமிடம் என்பதால் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் உங்களது செயல்பாடுகள் அமையும். சகோதர- சகோதரிகளால் நன்மையும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம். ஒருசில நேரம் உங்கள் திட்டங்களில் தாமதம் அல்லது தேக்கம் ஏற்படலாம். என்றாலும் 10-ஆமிடத்தைப் பார்க்கும் குரு வாழ்க்கை, தொழில் இரண்டிலும் அந்தத் தடைகளை தகர்ந்து காரிய அனுகூலத்தைத் தருவார். 8-க்குடைய சூரியன் 5-ல் இருக்கிறார். பிள்ளைகள்வகையில் உயர்கல்வி சம்பந்தமாக செலவுகள் ஏற்படலாம். 4-ஆமிடத்துக்கு குரு பூமி, மனை அல்லது வீடு வாங்கும் சம்பந்தமான செயல்களில் ஜெயம் உண்டாகும். அல்லது வாகன பரிவர்த்தனை யோகத்திற்கும் இடமுண்டு. அது விஷயமாக கடனுதவிகளும் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் அதிசாரமாக ஜென்மச்சனி நடக்கிறது. சனி ஆட்சிபெற்ற காரணத்தால் ஏழரைச்சனியில் பெரிதளவு பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது என்று நம்பலாம். 2-க்குடைய குரு 3-ல் மறைவு. பொருளாதாரத்தில் பிரச்சினைக்கு இடமில்லை. தாராள வரவு- செலவுகளுக்கு இடமுண்டு. 3-க்குடைய செவ்வாய் 6-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருடன் சுக்கிரன் சேர்க்கை. ஆடம்பரச் செலவுகள் உண்டாகும். 3-ஆமிடத்துக் குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் கணவர்வழியில் நன்மையும் யோகமும் ஏற்பட்டாலும் தேக ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட உபாதைகளும் உண்டாகும். 9-ல் கேது தகப்பனாருக்கு வைத்தியச் செலவுகள் ஏற்படலாம். குருபார்வையால் ஆயுள் குற்றத்திற்கு இடமில்லை. ஆன்மிக பயணம் உண்டாகும். உல்லாச பயணமும் ஏற்படும். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளால் சில சங்கடங்கள் நேரலாம்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 2-ல் சஞ்சாரம். ராகுவுடன் சேர்க்கை. குடும்பத்தினருக்காக மாடாய் உழைத்தாலும் உங்களுக்கு மதிப்பு, மரியாதை இருக்காது. பொருளாதாரத்திலும் சிலநேரம் சிக்கல், சிரமங்கள் உண்டாகும். 2-க்குடைய செவ்வாய் 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் மேற்கண்ட செலவுகள் ஏற்படலாம். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவதன்மூலம் கடன்கள் உண்டாகும். 2-ல் உள்ள குரு 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் அமைப்புக்காக கடன் ஏற்படும். 6-ஆமிடத்தைப் பார்க்கும் காரணத்தால்தான் கடன் உருவாகிறது. 6-க்குடைய சூரியன் மாதத் தொடக்கத்தில் 3-லும் பிற்பாதியில் 4-லும் சஞ்சாரம். புதன் சேர்க்கை. உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. 8-ஆமிடத்தை ராசிநாதன் பார்ப்பதால் அவர் சுபகிரகம் அசுப இடத்தைப் பார்ப்பதால் அந்த இடம் சம்பந்தப்பட்ட பலன்களை பெருக்குவார். கவனமும் தேவை. வாகனத்தில் எச்சரிக்கை அவசியம்.

அலைபேசி: 99440 02365