மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாத இறுதிவரை விரய ஸ்தானமான 12-ல் இருக்கி றார். அவருடன் குருவும் 12-ல் ஆட்சியாக இருக்கிறார். விரயமும் செலவும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும். அதேசமயம் வரவும் உண்டு என்றாலும் சேமிப்புக்கு இடமில்லை என்பது மனதைக் கவலைப்படுத்தும். 5-க்குடைய சூரியன் 2-ல் 15-ஆம் தேதிவரை சஞ்சாரம் செய்கி றார். குடும்பவகையில சில முக்கிய நிகழ்வுகளில் முடிவுகள் எடுக்கும் சூழ்நிலை அமையும். அது உங்களுக்கு சாதகமானதாகவும் அமையும். ஜென்ம ராகு சில நேரம் அலைச்சல்களையும் அசதிகளையும் தந்தாலும் ஆதாயமும் உண்டாகும். 7-ல் உள்ள கேது கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளையும் வாக்குவாதத்தையும் ஏற்படுத்தினாலும் ஒற்றுமையில் பாதிப்புகள் நேராது. ராகு 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் மன தைரியம் அதிகரிக்கும். பகீரதப் பிரயத்தனம்போல் விடாமுயற்சியாக செயல்படலாம். தேக சுகத்தில் தெளிவு பிறக்கும். 10-ல் சனி ஆட்சி. தொழில், உத்தியோகத்தில் பாதிப்புகளுக்கு இடமில்லை.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் 18-ஆம் தேதிவரை 12-ல் இருக்கிறார். மாத முற்பாதிவரை காரியத்தில் தாமதம், வீண் செலவு போன்றவற்றை சந்திக்கலாம். என்றாலும் 11-க்குடைய குரு 11-ல் ஆட்சியென்பதால் காரிய தாமதமானாலும் தடையாகாது. முடிவில் சாதகமே நிலவும். அதற்கு 10-க்குடைய சனி 9-ல் நிற்பதும் (தர்மகர்மாதிபதி யோகம் என்பது நீங்கள் அறிந்ததே) ஒரு காரணமாக அமையும். 12-க்குடைய செவ்வாய் 11-ல் இருப்பது தொழில்வகையில் சில முதலீட்டுச் செலவுகளை உண்டாக்கும். 2-க்குடைய புதன் மாத ஆரம்பத்திலேயே ஜென்ம ராசியில் மாறுவதால் குடும்பச் சூழ்நிலையில் குழப்பங்கள் விலகும். ஒருசிலருக்கு சகோதரவகையில் தாமரை இலை தண்ணீர்போல உறவுகள் செயல்படலாம். அன்பும் பாசமும் வெளியில் தெரியாத வண்ணம் நீங்களும் நடந்துகொள்வீர்கள். இன்னொரு ஜென்மம் இணைந்தா பிறக்கப் போகிறோம் என்று சிலர் விட்டுக்கொடுத்துச் செல்லலாம். அது அவரவர் மனப்பக்குவத்தைப் பொருத்தது. 6-ஆமிடத்துக் கேது சத்ருக்களை விலக்கிவிடும். கடன் அடைபட வழிகள் பிறக்கும். நோய்கள் ஒழியும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு அட்டமத்துச்சனி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. அட்டமத்துச்சனியில் தொட்டது துலங்காது
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாத இறுதிவரை விரய ஸ்தானமான 12-ல் இருக்கி றார். அவருடன் குருவும் 12-ல் ஆட்சியாக இருக்கிறார். விரயமும் செலவும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும். அதேசமயம் வரவும் உண்டு என்றாலும் சேமிப்புக்கு இடமில்லை என்பது மனதைக் கவலைப்படுத்தும். 5-க்குடைய சூரியன் 2-ல் 15-ஆம் தேதிவரை சஞ்சாரம் செய்கி றார். குடும்பவகையில சில முக்கிய நிகழ்வுகளில் முடிவுகள் எடுக்கும் சூழ்நிலை அமையும். அது உங்களுக்கு சாதகமானதாகவும் அமையும். ஜென்ம ராகு சில நேரம் அலைச்சல்களையும் அசதிகளையும் தந்தாலும் ஆதாயமும் உண்டாகும். 7-ல் உள்ள கேது கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளையும் வாக்குவாதத்தையும் ஏற்படுத்தினாலும் ஒற்றுமையில் பாதிப்புகள் நேராது. ராகு 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் மன தைரியம் அதிகரிக்கும். பகீரதப் பிரயத்தனம்போல் விடாமுயற்சியாக செயல்படலாம். தேக சுகத்தில் தெளிவு பிறக்கும். 10-ல் சனி ஆட்சி. தொழில், உத்தியோகத்தில் பாதிப்புகளுக்கு இடமில்லை.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் 18-ஆம் தேதிவரை 12-ல் இருக்கிறார். மாத முற்பாதிவரை காரியத்தில் தாமதம், வீண் செலவு போன்றவற்றை சந்திக்கலாம். என்றாலும் 11-க்குடைய குரு 11-ல் ஆட்சியென்பதால் காரிய தாமதமானாலும் தடையாகாது. முடிவில் சாதகமே நிலவும். அதற்கு 10-க்குடைய சனி 9-ல் நிற்பதும் (தர்மகர்மாதிபதி யோகம் என்பது நீங்கள் அறிந்ததே) ஒரு காரணமாக அமையும். 12-க்குடைய செவ்வாய் 11-ல் இருப்பது தொழில்வகையில் சில முதலீட்டுச் செலவுகளை உண்டாக்கும். 2-க்குடைய புதன் மாத ஆரம்பத்திலேயே ஜென்ம ராசியில் மாறுவதால் குடும்பச் சூழ்நிலையில் குழப்பங்கள் விலகும். ஒருசிலருக்கு சகோதரவகையில் தாமரை இலை தண்ணீர்போல உறவுகள் செயல்படலாம். அன்பும் பாசமும் வெளியில் தெரியாத வண்ணம் நீங்களும் நடந்துகொள்வீர்கள். இன்னொரு ஜென்மம் இணைந்தா பிறக்கப் போகிறோம் என்று சிலர் விட்டுக்கொடுத்துச் செல்லலாம். அது அவரவர் மனப்பக்குவத்தைப் பொருத்தது. 6-ஆமிடத்துக் கேது சத்ருக்களை விலக்கிவிடும். கடன் அடைபட வழிகள் பிறக்கும். நோய்கள் ஒழியும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு அட்டமத்துச்சனி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. அட்டமத்துச்சனியில் தொட்டது துலங்காது என்று ஒரு ஜோதிட மொழி உண்டு. என்றாலும் 11-ல் ராகு நின்று சில விஷயங்களில் ஜெயத்தைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம். 3-க்குடைய சூரியன் 12-ல் மறைகிறார். தகப்பனாருக்கு வைத்தியச் செலவுகள் ஏற்படலாம். அட்டமச்சனியில் ஜனன ஜாதகத்தில் சந்திர தசையோ அல்லது சந்திர புக்தியோ நடந்துகொண்டிருந்தால் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். கண்டங்களோ அல்லது பொருட் சேதங்களோ ஏற்பட இடமுண்டு. அப்படிபட்டவர்கள் திங்கட்கிழமை தோறும் சிவலிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும். வசதியுள்ளவர்கள் ஒருமுறை சிவாலயத்தில் ருத்ர பாராயணமும் ஹோமமும் செய்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தால் உயிர்ச்சேதம் தடுக்கப்படலாம். 10-ஆமிடத்து குரு உத்தியோகத்தில் நற்பலனைத் தருவார்.
கடகம்
கடக ராசிக்கு 9-க்குடைய குரு 9-ல் ஆட்சி. அது ஒருவகையில் ப்ளஸ்பாயின்ட். ஓடிப்போனவனுக்கு 9-ஆமிடத்து குரு என்பார்கள். 10-க்குடைய செவ்வாய் 9-ல் குருவுடன் சேர்க்கை. தர்மகர்மாதிபதி யோகம். அது இன்னொருவகையில் ப்ளஸ்பாயின்ட். வாழ்க்கை, தொழில் இரண்டிலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தடைகளும் தாமதங்களும் விலகும். செயல்பாடுகள் வேகமெடுக்கும். ஜென்ம ராசியைப் பார்க்கும் குரு உங்களைத் திறம்பட செயல்படவைப்பார் என்பதில் சந்தேகமில்லை. 2-க்குடைய சூரியன் 11-ல் இருக்கிறார். பொதுவாக ஒரு நற்காரியம் நடைபெற 11-ல் சூரியன் இருக்குமாறு லக்னம் அமைத்துக்கொடுத்தால் அது வெற்றிகரமாக முடியும் என்பது ஜோதிட அனுபவம். அதுபோல 11-ல் சூரியன் இருக்கும் காலம் அரசு சம்பந்தப்பட்ட காரியத்திலும் வெற்றி காணலாம். சகோதர- சகோதரிவகையில் சாதகமான பதில்கள் ஏற்படும். மூத்த சகோதரவகையில் உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் 10-ல் இருக்கி றார். தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் குறையேதும் ஏற்படாது. என்றாலும் மனத் தளவில் குறைகள் உண்டாகும். ஒருவித சஞ்சலம், சலனம் போன்றவற்றை சந்திக்க நேரும். 3-ஆமிடத்து குரு அவற்றை பாரபட்சம் இல்லாமல் செய்வார். 10-க்குடைய குரு 9-ல் இருப்பதால், ரயில் பயண ரிசர்வேஷன் டிக்கெட்டில் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து கடைசி நேரத்தில் கன்பர்ம் ஆவதுபோல, அலைக்கழிப்பும் அலைச்சல்களையும் சந்தித்து இறுதியில் சாதகமான முடிவு அமையும். கணவன்- மனைவிக்கிடையே சிறுசிறு பூசல்கள் உண்டாகி விலகும். பிள்ளைகள்வகையில் எதிர்பார்த்த நல்லவை இழுபறியாகலாம். ஒரு சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். 9-ல் உள்ள ராகு ஆன்மிக நாட்டத்தை அதிகப்படுத்துவார். பிரார்த்தனைகள் நிறைவே றும். உடன்பிறப்புகளால் தொல்லைகளும் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 1, 10-க்குடையவர் ஆவார். இம்மாதம் 6-ஆம் தேதிமுதல் அவர் 9-ல் மாறுகிறார். உத்தியோகத்தில் உயர்வு அல்லது ஊதிய உயர்வு போன்ற நற்பலன்கள் உண்டாகும். 7-ல் நின்று குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் திறமை, செல்வாக்கு, புகழ், கீர்த்தி திறம்பட செயல்படும். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். கணவருக்கும் மனைவிக்கும் இடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையும் புரிதலும் பிறக்கும். முன்பு தடைப்பட்ட காரியங்கள் தடையின்றி நிகழும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். சூரியனுடன் புதன் இணைந்து சஞ்சாரம் செய்வதால் மனதளவில் தெளிவும் தன்னம்பிக்கையும் உருவாகும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை நிலை மாறும். பிள்ளைகள்வகையில் மகிழ்ச்சிகரமான நன்மைகள் நடைபெறும். குருபார்வை கோடி நன்மையைத் தரும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 7-ல் நின்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது ஒரு பலம். ஜென்ம கேது காரிய தாமதம், திருப்தியற்ற நிலையை ஏற்படுத்தினாலும் ராசிநாதனின் பார்வை அதை சமாளித்து நிறைவை சந்திக்கவைக்கும். சில நேரம் உங்களையறியாமலேயே ஒருவித சோம்பேறித்தனம் உங்களை செயல்பட விடாமல் வைக்கும். 11-க்குடைய சூரியன் 8-ல் மறைவதும் குரு 6-ல் மறைவதும் அதற்கொரு காரணமாகும். என்றாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால்தான் சில காரியங்களில் வாகை சூடமுடியும். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தத் கூலிதரும்' என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். தெய்வம் சோம்பேறிக்கும் நம்பிக்கைத் துரோகிக்கும் துணை புரியமாட்டார். குரு 12-ஆமிடத்தையும், 2-ஆமிடத்தையும் பார்ப்பதால் செலவுகளையும் வரவுகளையும் நிகராகவே சந்திக்க நேரும். தேகநலனில் சற்று அக்கறை தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுகிறார். குருவும் 5-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி, உங்களுக்கு எல்லாம் சாதகமும் வெற்றியுமாக அமையும். உங்கள் எண்ணங்கள், திட்டங்கள் மகிழ்ச்சிகரமாக நிறைவேறும். நீண்டநாள் கனவுகளும் நனவாகும். நண்பர்களால் உதவியும் ஒத்தாசையும் அமையும். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்திகள் நடந்தால் மட்டும் கவனமுடன் செயல்படவேண்டும். கடன் பிரச்சினை, தொழில் முடக்கம் போன்ற பலன்கள் ஏற்படலாம். ஒருசிலருக்கு கடன் பிரச்சினையால் வெளியூர் ஓடும் நிலையும் உண்டாகலாம். தேவைக்கு மிகையாகவோ ஆடம்பரத்திற்காகவோ சிலர் வாங்கும் கடன் நிம்மதியற்ற நிலையை உருவாக்கிவிடும். சமயோசிதமாக செயல்படுவது அவசியம். குரு 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில் துறையில் லாபமும் முன்னேற்றமும் நடைபெறும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 4-ல் ஆட்சி. தேகசுகம் தெளிவுபெறும். வீடு, வாகனவகையில் நன்மைகளும் அனுகூலங்களும் உண்டாகும். 4-க்குடைய குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் குடியிருப்புவழியில் செலவுகள் ஏற்படலாம். வாகனப் பரிமாற்றம் உண்டாகலாம். புதிய வீட்டு கிரகப் பிரவேசத்திற்கும் இடமுண்டு. 2-ல் சனி ஆட்சியென்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஒருசிலருக்கு உடன்பிறப்புகள்வகையில் ஒற்றுமைக் குறைவு கள் ஏற்படலாம். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்ற கருத்தின் அடிப்படையில் நீங்கள் பெருந்தன்மையாக நடந்துகொண்டால் உறவு பலப்படுவதற்கான வழிமுறையாக அமையும். ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெறுவதால் சில விஷயங்களை நன்கு ஆராய்ந்து செயல்படுவது நல்லது. தீவிர முயற்சிக்குப்பின் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பிள்ளைகளால் நன்மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுகிறது. முதல் சுற்றாக இருந்தால் மங்குசனியும், இரண்டாவது சுற்றாக இருந்தால் பொங்குசனியும், மூன்றாவது சுற்றாக இருந்தால் மரணச்சனியுமாகும். இங்கு சனி ராசிநாதன் என்பதால் பெரிதளவு பாதிப்பை ஏற்படுத்தமாட்டார் என்று நம்பலாம். இரண்டாம் சுற்று சனி நடப்பவர் களுக்கு- முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு சனி நல்ல மாற்றங்களைத் தரும். நீண்டநாள் இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவடையும். அதன்மூலம் தன்வரவும் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் அமைப்பும் ஏற்படும். 3-ஆமிடத்தில் ஆட்சிபெற்ற குரு மன தைரியத்தையும் சகோதர சகாயத்தையும் தருவார். 8-க்குடைய சூரியன் 5-ல் திரிகோணம் பெறுவதால் சஞ்சலமும் சங்கடமும் விலகும். மனதிலும் தெளிவான நிலை பிறக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பூர்வபுண்ணியம் சிறப்பாக விளங்கும்.
கும்பம்
கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அவர் ஆட்சியென்பதால் மறைவு ஸ்தானத் தைப் பற்றிய பயம் தேவையில்லை. என்றா லும் 12-ஆமிடம் விரயஸ்தானம். அங்கு அவர் வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். வரவும் தாராளமாக அமையும். செலவும் தாராளமாக செயல்படும். ஆடம்பரத்தைக் குறைத்து அத்தியாவசியத்திற்கு முக்கியத்துவம் தருவது மிக முக்கியம். 2-ல் குரு ஆட்சி பெறுவதால் குடும்பத்தில் குழப்ப நிலைகள் விலகி ஒரு நல்ல முடிவு தென்படும். 3-ஆமிடத்து ராகுவும் தைரியமான சில முடிவுகளைத் தருவார். 5-க்குடைய புதன் 4-ல் கேந்திரம் பெறுகிறார். உங்கள் திட்டங்கள் செயல்பாடாக மாற 7-க்குடைய சூரியனும் உதவுவார். பிள்ளைகளால் நிலவிய மனக்குழப்பம் அகலும். கல்விரீதியாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். அரசுத் துறையினருக்கு திடீர் இடமாற்றம் அலைச்சலைத் தரும். 9-ல் கேது- குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வைப்பார்.
மீனம்
மீன ராசிக்கு ஜென்மத்தில் குரு. "ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்தது' என்பது பாடல். இங்கு குரு ஆட்சிபெறுகிறார். 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடங்களைப் பார்த்தாலும் ஒரு சிலருக்கு அலைச்சல், காரியத்தடை, தாமதம், நிம்மதியற்ற சூழ்நிலைகளைச் சந்தித்தல் போன்ற பலன்கள் ஏற்படலாம். நினைத்த காரியங்கள் நினைத்த படி நடக்கவில்லையே என்ற மனக்கவலை சிலருக்கு. அது பிரஷர், மன அழுத்தம் போன்ற வியாதிகளையும் ஏற்படுத்தியது. குரு நின்ற இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கு பெருமை என்பதால் திட்டங்கள் செயல் வடிவம்பெற மனைவிவழியில் உதவியும் ஒத்தாசையும் அமையும். 11-ல் சனி வக்ரத்தில் உக்ர பலன்களைச் செய்வார். ஜனன ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து பரிகாரங்களைச் செய்து காரியத் தடைகளை வெல்லலாம். குடும்பத்தில் சில நேரம் குழப்பம் ஏற்பட்டாலும் முடிவில் தெளிவான சூழலும் அமைதியும் நிலவும்.