ஜூலை மாத எண்ணியல் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

/idhalgal/om/july-month-number-palans

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும் ஓய்வில்லாமல் வேலைசெய்ய நேரும். ஒருசிலர் புனிதப் பயணமாக தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வருவார்கள். நிதிச்சுமை குறைந்து, சேமிப்பு உயரும் மாதம். பிள்ளைகளால் நல்ல வருமானம் கிட்டும். பெற்றோர் கவலை தீரும். வரன் தேடும் ஆண்- பெண் இருபாலருக்கும் நல்ல வரன் அமையும். விலகிச்சென்ற சொந்தங்கள் ஒன்றுசேரும். வியாபாரிகள் கடும் போட்டியைச் சந்தித்தபோதும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். விலையேற்றம் காரணமாக பொதுமக்களின் வசவுக்கு ஆளாக நேரும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் பிரச்சினையை நேரடியாகக் கண்காணித்து தீர்வு காணவேண்டும். மற்றவர் களை நம்பினால் தொழிலாளர் பற்றாக் குறை ஏற்பட்டுவிடும். அரசு ஊழியர்களின் பணிச்சுமை கூடும். அதிகாரிகளின் ஆதரவு மாதம்முழுவதும் கிட்டும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். மாணவர்கள் திட்டமிட்டபடி படித்து பெற்றோர்களுக்குப் பாராட்டைப் பெற்றுத் தருவார்கள். இளைஞர் களுக்கு வேலை கிட்டும். அரசியல்வாதிகள் திட்டமிட்டபடி எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

காலங்காலமாய் போட்ட திட்டங்கள் நிறைவேறவில்லையே என்று ஏங்குவோரின் கவலைகள் தீரும் மாதம். நீங்கள் செயல்படுத்த நினைத்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். உடன்பிறப்புகள் வகையில் இழுபறியாக இருக்கும் சொத்துப்பிரச்சினை சுமுகமாக முடியும். பொருளாதாரம் உயரும். பிள்ளைகளின் உயர்கல்வி திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் அளவோடு கொள்முதல் செய்ய வேண்டும். நல்ல விற்பனையை அடைவார்கள். ஸ்பெகுலேஷன், தரகுத் தொழில் செய்வோருக்கு திடீர் லாபங்கள் வரும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். திருமணத்தடைகள் திடீரென விலகி பிள்ளைகளின் திருமணம் இனிதே நடைபெறும். காணாமல்போன பொருட்கள் உங்கள் வீட்டு பீரோவிலேயே காட்சி தரும். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். தொழிலாளர்கள் ஒற்றுமை புதிய உற்சாகத்தைத் தரும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து ஆசிரியரின் பாராட்டைப் பெறுவார்கள். வேலை தேடி அலுத்துப்போன இளைஞர்களுக்கு வேலை கிட்டும். சிலர் வெளிநாடு செல்வார்கள். அரசியல்வாதிகள் நினைத்தபடி மேல் மட்டத்தில் காரியத்தை சாதிக்கும் மாதம்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும் ஓய்வில்லாமல் வேலைசெய்ய நேரும். ஒருசிலர் புனிதப் பயணமாக தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வருவார்கள். நிதிச்சுமை குறைந்து, சேமிப்பு உயரும் மாதம். பிள்ளைகளால் நல்ல வருமானம் கிட்டும். பெற்றோர் கவலை தீரும். வரன் தேடும் ஆண்- பெண் இருபாலருக்கும் நல்ல வரன் அமையும். விலகிச்சென்ற சொந்தங்கள் ஒன்றுசேரும். வியாபாரிகள் கடும் போட்டியைச் சந்தித்தபோதும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். விலையேற்றம் காரணமாக பொதுமக்களின் வசவுக்கு ஆளாக நேரும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் பிரச்சினையை நேரடியாகக் கண்காணித்து தீர்வு காணவேண்டும். மற்றவர் களை நம்பினால் தொழிலாளர் பற்றாக் குறை ஏற்பட்டுவிடும். அரசு ஊழியர்களின் பணிச்சுமை கூடும். அதிகாரிகளின் ஆதரவு மாதம்முழுவதும் கிட்டும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். மாணவர்கள் திட்டமிட்டபடி படித்து பெற்றோர்களுக்குப் பாராட்டைப் பெற்றுத் தருவார்கள். இளைஞர் களுக்கு வேலை கிட்டும். அரசியல்வாதிகள் திட்டமிட்டபடி எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 13, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

காலங்காலமாய் போட்ட திட்டங்கள் நிறைவேறவில்லையே என்று ஏங்குவோரின் கவலைகள் தீரும் மாதம். நீங்கள் செயல்படுத்த நினைத்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். உடன்பிறப்புகள் வகையில் இழுபறியாக இருக்கும் சொத்துப்பிரச்சினை சுமுகமாக முடியும். பொருளாதாரம் உயரும். பிள்ளைகளின் உயர்கல்வி திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் அளவோடு கொள்முதல் செய்ய வேண்டும். நல்ல விற்பனையை அடைவார்கள். ஸ்பெகுலேஷன், தரகுத் தொழில் செய்வோருக்கு திடீர் லாபங்கள் வரும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். திருமணத்தடைகள் திடீரென விலகி பிள்ளைகளின் திருமணம் இனிதே நடைபெறும். காணாமல்போன பொருட்கள் உங்கள் வீட்டு பீரோவிலேயே காட்சி தரும். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். தொழிலாளர்கள் ஒற்றுமை புதிய உற்சாகத்தைத் தரும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து ஆசிரியரின் பாராட்டைப் பெறுவார்கள். வேலை தேடி அலுத்துப்போன இளைஞர்களுக்கு வேலை கிட்டும். சிலர் வெளிநாடு செல்வார்கள். அரசியல்வாதிகள் நினைத்தபடி மேல் மட்டத்தில் காரியத்தை சாதிக்கும் மாதம்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும் டென்ஷன் இல்லாமல் இருந்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி காணலாம். பிள்ளைகள் முன்வந்து உதவுவார்கள். பால்ய நண்பர்களை திடீரென காணும் சந்தர்ப்பம் வரும். புதிய வீடு, இடம் வாங்கும் திட்டம் நிறைவேறும். நல்ல வரன் வீடு தேடிவரும். வயதான பெற்றோர்களுக்காக மருத்துவச்செலவு செய்யநேரும். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். வெளிநாட்டு ஆர்டர்கள் கிட்டும். தங்கள் அலுவலகத்திலுள்ள பணியாளர்களை எச்சரிக்கையாகக் கண்காணிக்க வேண்டிவரும். அரசு ஊழியர்கள் அதிக பணிச்சுமையைக் காண்பார்கள். சிலர் கேட்ட இடத்திற்கு மாறுதலும் கிட்டும். வியாபாரிகள் எதிர்ப்புகள் விலகி, நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு மகான்களின் தரிசனம் கிட்டும். அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைக்கான உத்தரவு வந்துசேரும். சகோதரர்கள் ஒற்றுமை கூடும். கோள்மூட்டிய மனைவியர் திருந்துவார்கள். பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக்கேட்டு திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கடல்வாணிபம் செய்வோர் நல்ல லாபம் பெறுவார்கள். அரசியல் வாதிகள் தலைமையின் பாராட்டைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்:அங்காள பரமேஸ்வரி, அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

dd

இந்த மாதத் துவக்கம் சுணக்கமாக இருந்தாலும், மாதப் பிற்பகுதியில் எதிர் பாராதவிதமாக நல்ல வருவாய் வந்துசேரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வர வேண்டிய இனங்கள் வந்துசேரும். வழக்குகள் சாதகமாக முடிவாகும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். நீண்டகாலமாகப் பிரிந்திருக்கும் தம்பதியர் வழக்குகளைமீறி, நேரடித் தொடர்பில் ஒன்றுகூடி பிரிக்க நினைத்தவர்களை ஆச்சரியப்பட வைப்பார்கள். குழந்தையில்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபம் பெறுவார்கள். மொத்தக் கொள்முதல் வியாபாரிகள் கூடுதல் லாபம் பெறுவார்கள். வசூலாகாமலி−ருக்கும் தொகைகள் கேட்காமலே வசூலாகும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்செய்வோர் நல்ல வருவாயைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் பணியில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிலருக்கு தற்காலிலிகப் பணிநீக்க உத்தரவு வரலாம். வேலை தேடுவோர் நல்ல வாய்ப்பைப் பெறுவார்கள். சிலருக்கு இரண்டாவது மனைவி வரும் வாய்ப்புள்ளது. அதனால் லாபம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். கலைஞர்கள் நல்ல ஒப்பந்தங்களைப் பெறுவர். மாணவர்கள் அதிக அக்கறை செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெறமுடியும். அரசியல்வாதிகள் எல்லா காரியத்தையும் ஒத்திவைத்தால் தலைமையில் நல்ல பெயரை எடுக்கமுடியும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்கு பொன்னான மாதம். பொன், பொருள் வாங்கும் பெண்களின் திட்டம், எண்ணம் ஈடேறும். குடும்பத் தலைவர்கள் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். பாகப்பிரிவினைமூலம் சொத்துகள் நல்ல விலைக்குச் செல்லும். வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டில் நீண்டநாட்களாகத் தங்கிவிட்ட பிள்ளைகள் பெற்றோர்களைக் காணவருவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை நல்ல நிலைமையில் இருக்கும். குழந்தை யில்லாத தம்பதியர் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம்மூலம் நல்ல லாபம் பெறுவார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்ததைவிட விற்பனை கூடுதலாக இருக்கும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்துக்கு மாறுதலை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். வேலையிழந்தவர்கள் மீண்டும் வேலையைப் பெறுவார்கள். வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் சென்றால் விபத்தைத் தடுக்கலாம். அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அதற்கான உத்தரவு வந்துசேரும். பிள்ளைகள் விருப்பப்படி பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். மாணவர்கள் படிப்பில் உயர்வைக் காண்பார்கள். பங்காளிகள் சண்டை நீங்கி ஒன்றுகூடுவார்கள். நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் விலகிச் செல்வார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு .

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இதுவரை வாட்டிவதைத்த கடன் தொல்லைகளி−ருந்து இந்த மாதம் அநேகம்பேர் விடுபடுவார்கள். அன்றாடப் பணிகளைத் தவறாமல் செய்வதால், அனைத்து தரப்புப் பணியாளர்களும் நல்ல மதிப்பு, மரியாதையைப் பெறுவார்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். காலங்காலமாய் இருந்துவரும் சொத்துப் பிரிவினை சுமுகமாக தீர்வுக்கு வரும். தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருகும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் வெளிமாநிலத்தில் மொத்தக் கொள்முதல் செய்யும் திட்டம் நிறைவேறும். நல்ல லாபத்தைத் தரும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியத்தையும் அடைவார்கள். சிலரது குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியப் பேச்சுகள் திடீரென கைகூடும். வீட்டில் பெண்பிள்ளை பருவ வயத்தைக் கடந்தும் ருதுவாகவில்லையே என்று ஏங்கிய பெற்றோர் களின் கவலை தீரும். மகள் நல்ல நேரத்தில் ருதுவாகும் மாதம். ஆசிரியர் பணிபுரிவோருக்கு சற்று போதாத காலம். மாணவர்களால் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அரசு ஊழியர்கள் கேட்ட இடமாற்றம் தாமதமாகும். அதுவும் நன்மைக்கே. இளைஞர்களுக்கு வேலைக்கான உத்தரவுகள் வீடு தேடிவந்து மகிழ்ச்சிக் கடலிலில் ஆழ்த்தும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலருக்கு மகான்களின் தரிசனம் கிட்டும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல அந்தஸ் தைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் எடுத்த காரியங்கள் அனைத் தும் நல்லபடியாக முடியும். நீண்டநாட்களாக இழுபறியாக இருந்துவரும் வழக்குகள் சாதகமாகும். பெண்கள் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் மாதம். நீண்டகாலமாக வீட்டிற்கு வராம−ருக்கும் மகளும் மருமகனும் இந்த ஆண்டு வந்து பெற்றோர்களை மகிழ்ச்சிக் கட−ல் ஆழ்த்துவார்கள். பிள்ளைகளின் ஒத்துழைப்பும் பொருளாதார உதவியும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவார்கள். தொழிலாளர்கள் ஒற்றுமையும் கூடும். வியாபாரிகள் அதிக லாபத்தையும், வாடிக்கையாளர்களின் ஆதரவையும் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், இடமாறுதலும் கிடைக்கப் பெறுவார்கள். அதிகாரிகள் ஆதரவும் கூடும். காவல்துறையில் பணிபுரிவோர் வேலைப்பளுவை சந்திப்பார்கள். மகான்களின் தரிசனம் மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியப் பேச்சுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருக்கவேண்டும். எல்லா தரப்பு மக்களிடமும் மனதில் குதூகலமும் மகிழ்ச்சியும் இருக்கும். தெய்வ பக்தியும், தன்னம்பிக்கையும் அதிக பலனைத் தரும். அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழிலதிபர்கள் நல்ல தொழிலாளர்களை அடைவார்கள். உற்பத்தி இரட்டிப்பாகப் பெருகும். விற்பனையும் கூடும். பணவரவு ஏதேனும் ஒருவகையில் வந்துகொண்டே இருக்கும். இதுவரை வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் அமையும். தூரதேச புனித யாத் திரை செல்லும் வாய்ப்பு சிலருக்குக் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். வேலையிழந்த அரசுப் பணியாளர்கள் மீண்டும் வேலை பெறுவார்கள். பழைய நிலுவைகளையும் பெறுவார்கள். அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கூடும். அதிகாரிகளாக இருப்பவர்கள். சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். சக ஊழியர்கள் தொல்லைதரக்கூடும். வியாபாரிகள் கையிருப்பு சரக்குகளை நல்ல முறையில் விற்றுத் தீர்ப்பார்கள். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். குழந்தை பாக்கியமில்லாத சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். மாணவர்கள் மந்தநிலை மாற கூடுதல் கவனம் செலுத்திப் படிக்கவேண்டிய மாதம். வழக்குகள் உள்ளோருக்கு சாதகமான தீர்ப்பு வரும். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடா சலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்து, உயர்பதவியில் உள்ள சிலர் பதவி ஓய்வி−ருந்து கூடுதல் காலக்கெடு பெறுவார்கள். பணிச்சுமை கூடும். ஓய்வுக்காலம் தள்ளிச் செல்லும். மக்களால் நன்மையை அடையும் மாதம். மாதர்கள் கணவர் பேச்சைக் கேட்டு, சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமிப்பை உயர்த்திடுவார்கள். மகள், மருமகன் சண்டை விலகி தம்பதியரின் ஒற்றுமை கூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தொழிலதிபர்கள் கூடுதல் உற்பத்தியைப் பெறுவார்கள்; பணியாளர்களின் நலனில் கவனம் செலுத்துவார்கள். வியாபாரிகள் மறைமுகமான போட்டிகளால் சற்று லாபத்தை விட்டுக்கொடுத்து, விற்பனையைப் பெருக்கு வார்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை (அதாவது குழந்தை பாக்கியம்) புதிய மகிழ்ச்சியைக் கொடுக்கும். பெண்கள் தங்கள் பெயரில் சொத்து வாங்கிச் சேர்ப்பார்கள். அரசு ஊழியர்கள் பணிச்சுமை கூடியபோதிலும் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். சொத்துப் பிரிவினை சுமுகமாக இருக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு மகான்களின் தரிசனம் கிட்டும். உடல்நிலையில் இருந்துவரும் சோர்வு நீங்கும். மரியாதை நிமித்தமாக பெரிய மனிதர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கூடிவரும். அரசியல் பிரமுகர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.

செல்: 94871 68174

om010719
இதையும் படியுங்கள்
Subscribe