மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் 2-ஆம் தேதிமுதல் 5-ல் திரிகோணம் பெறுகிறார். ஜென்ம குருவின் பார்வை ராசிநாதனுக்கு கிடைக்கிறது. கடந்த மாதம் உங்கள் முயற்சியில் தொய்வும், செயல்பாடுகளில் தடையும் சந்தித்த நிலை மாறி எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் அமைப்புகளும் வழிவகைகளும் உண்டாகும். 2-க்குடைய சுக்கிரனும் ராசிநாதனோடு இணைகிறார். பொருளாதாரத் தேவைகள் நிறைவேறினாலும் செலவுகளையும் கட்டுப்படுத்த முடியாதபடி சூழ்நிலை அமைவது மனதை சற்று வருத்தும். 5-க்குடைய சூரியன் மாத முற்பாதிவரை 3-ஆமிடமான மறைவு ஸ்தானத்தில் இருக்கிறார். குருவின் சாரத்திலும் பிறகு சனியின் சாரத்திலும் சஞ்சாரம். சனி 11-ல் வக்ரம் பெறுகிறார். வக்ரத்தில் உக்ர பலம். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். அந்த மாற்றம் முன்னேற்ற மாக இருக்கும். சகோதரவழியில் ஒற்றுமைக்கு இடமுண்டு. மாதக் கடைசியில் சுக்கிரன் வக்ரம் பெறுகிறார். விரயங்கள் கட்டுப்படும். கருதியவை கைகூடும். மனக்கவலையும் குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ஆம் தேதிமுதல் 4-ஆமிடமான சிம்மத்திற்கு மாறுகிறார். 12-க்குடைய செவ்வாயும் இணைகிறார். 11-க்குடைய குரு 12-ல் மறைவு. வீண்விரயம். வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வராமல் இழுபறி, எடுத்த காரியங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் பாதியிலேயே நிற்கும் சூழ்நிலை போன்றவற்றை சந்திக்கநேரும். வெளியூர் பயணங்களால் செலவும் அலைச்சலும்தான் மிச்சமே தவிர ஆதாயம் எதுவும் ஏற்படவில்லை. என்றாலும் இவற்றை எல்லாம் எதிர்த்து சமாளிக்கக்கூடிய ஆற்றலும் திறனும் உண்டாகும். ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி (9-க்குடையவர் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம்) 10-ல் வக்ரத்தில் உக்ரபலம் பெறுகிறார். வேலை, உத்தியோகம், தொழில் இவற்றில் இயக்கங்கள் தடைப்படாது. 2-க்குடைய புதன் 3-ல் மறைகிறார். அதனால் சற்று பொருளாதாரச் சங்கடத்தை சந்திக்கும் நிலை! மாதக்கடைசியில் ராசிநாதன் சுக்கிரன் வக்ரம் பெறுகிறார். சனியின் பார்வையையும் பெறுகிறார். இருவரும் வக்ரம். தாயார் சுகம் பாதிக்கப்படலாம். அல்லது தன் சுகத்தில் வைத்தியச் செலவு ஏற்படலாம்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 4-ஆம் தேதிமுதல் 2-ஆமிடமான கடகத்திற்கு மாறுகிறார். 3-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சாரம். 10-க்குடைய குரு 11-ல். ராகு சேர்க்கை. தொழில், வேலை இவற்றில் எந்த பாதிப்புக்கும் இடமில்லை. ஒருசிலருக்கு இடமாற்றம் ஏற்பட்டாலும் அது நன்மையான மாற்றமாகவே நிகழும். 11-க்குடைய செவ்வ
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் 2-ஆம் தேதிமுதல் 5-ல் திரிகோணம் பெறுகிறார். ஜென்ம குருவின் பார்வை ராசிநாதனுக்கு கிடைக்கிறது. கடந்த மாதம் உங்கள் முயற்சியில் தொய்வும், செயல்பாடுகளில் தடையும் சந்தித்த நிலை மாறி எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் அமைப்புகளும் வழிவகைகளும் உண்டாகும். 2-க்குடைய சுக்கிரனும் ராசிநாதனோடு இணைகிறார். பொருளாதாரத் தேவைகள் நிறைவேறினாலும் செலவுகளையும் கட்டுப்படுத்த முடியாதபடி சூழ்நிலை அமைவது மனதை சற்று வருத்தும். 5-க்குடைய சூரியன் மாத முற்பாதிவரை 3-ஆமிடமான மறைவு ஸ்தானத்தில் இருக்கிறார். குருவின் சாரத்திலும் பிறகு சனியின் சாரத்திலும் சஞ்சாரம். சனி 11-ல் வக்ரம் பெறுகிறார். வக்ரத்தில் உக்ர பலம். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். அந்த மாற்றம் முன்னேற்ற மாக இருக்கும். சகோதரவழியில் ஒற்றுமைக்கு இடமுண்டு. மாதக் கடைசியில் சுக்கிரன் வக்ரம் பெறுகிறார். விரயங்கள் கட்டுப்படும். கருதியவை கைகூடும். மனக்கவலையும் குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 3-ஆம் தேதிமுதல் 4-ஆமிடமான சிம்மத்திற்கு மாறுகிறார். 12-க்குடைய செவ்வாயும் இணைகிறார். 11-க்குடைய குரு 12-ல் மறைவு. வீண்விரயம். வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வராமல் இழுபறி, எடுத்த காரியங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் பாதியிலேயே நிற்கும் சூழ்நிலை போன்றவற்றை சந்திக்கநேரும். வெளியூர் பயணங்களால் செலவும் அலைச்சலும்தான் மிச்சமே தவிர ஆதாயம் எதுவும் ஏற்படவில்லை. என்றாலும் இவற்றை எல்லாம் எதிர்த்து சமாளிக்கக்கூடிய ஆற்றலும் திறனும் உண்டாகும். ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி (9-க்குடையவர் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம்) 10-ல் வக்ரத்தில் உக்ரபலம் பெறுகிறார். வேலை, உத்தியோகம், தொழில் இவற்றில் இயக்கங்கள் தடைப்படாது. 2-க்குடைய புதன் 3-ல் மறைகிறார். அதனால் சற்று பொருளாதாரச் சங்கடத்தை சந்திக்கும் நிலை! மாதக்கடைசியில் ராசிநாதன் சுக்கிரன் வக்ரம் பெறுகிறார். சனியின் பார்வையையும் பெறுகிறார். இருவரும் வக்ரம். தாயார் சுகம் பாதிக்கப்படலாம். அல்லது தன் சுகத்தில் வைத்தியச் செலவு ஏற்படலாம்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் 4-ஆம் தேதிமுதல் 2-ஆமிடமான கடகத்திற்கு மாறுகிறார். 3-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சாரம். 10-க்குடைய குரு 11-ல். ராகு சேர்க்கை. தொழில், வேலை இவற்றில் எந்த பாதிப்புக்கும் இடமில்லை. ஒருசிலருக்கு இடமாற்றம் ஏற்பட்டாலும் அது நன்மையான மாற்றமாகவே நிகழும். 11-க்குடைய செவ்வாயும் 12-க்குடைய சுக்கிரனும் 3-ல் ஒன்றுகூடி இருக்கின்றனர். அவர்களுக்கு குருபார்வை. சகோதர- சகோதரி வகையில் இணக்கம், கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை உண்டாகும். உறவும் பலப்படும். விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்ற அடிப்படையில் உங்கள் மனமும் மாறும். எந்த ஒரு செயல்பாட்டையும் துணிவுடனும் ஆற்றலுடனும் செயல்பட்டு நிறைவேற்றலாம். 9-ல் சனி வக்ரம் பெறுகிறார். பூர்வீக சொத்து சம்பந்தமாக ஒருசில விவகாரங்கள் தலை தூக்கலாம். என்றாலும் தற்கா-க அட்டமச்சனியின் நிவர்த்தியும், 11-ல் குரு ராகுவும் காரிய வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். மாதக்கடைசியில் செலவுகள் சற்று அதிகம் ஏற்படலாம்.
கடகம்
கடக ராசிக்கு தற்கா-கமான அதிசார அட்டமத்துச்சனி நடைபெறுகிறது. ஒரு செயலை தொடங்கி அது முடியும் தருவாயில் இழுபறியாக மீண்டும் முத--ருந்து தொடங்கும் நிலைகளைச் சந்திக்கும் நிலை! வேலைப்பளுவும் அதிகமாகக் காணப்படும். அதேசமயம் உழைப்புக்கேற்ற ஊதியம் தடைப்படும். தொழில் இயக்கம் தடைப்படாது. ஆனால் வரவுக்கு நிகர் செலவு அமைவதால் சேமிக்கமுடியாத நிலையையும் சந்திக்க நேரும். 10-க்குடைய செவ்வாய் 2-ல் நிற்பது குரு அவரைப் பார்ப்பதாலும் தனவரவுக்கு இடமுண்டு. என்றாலும் மேற்கூறிய கிரக அமைப்புகளால் கையில் காசு புரண்டாலும் தேவைகளை சுருக்கி அனுபவிக்க வேண்டிய நிலை. மாதக்கடைசியில் தடைப்பட்ட தொழில் அமைப்புகளை மீண்டும் பொறுப்பேற்று நடத்தலாம். அதற்குண்டான வழிவகைகளும் அமையும். வீண் விரயங்களும் மாத பிற்பாதியில் கட்டுப்படும். 2-க்குடைய சூரியன் 12-ல் இருந்து ஜென்ம ராசிக்கு 17-ஆம் தேதிமுதல் மாறுகிறார். எல்லாவற்றையும் சமாளிக்கும்படியான சந்தர்ப்ப சூழல்கள் உருவாகும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை 11-ஆமிடத்தில் இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த புதன் 12-ல் மறைவு. என்றாலும் மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதுபோல- தனவரவுக்கும் இடமுண்டு. ராசிநாதன் 11-ல் இருப்பது பலம். அரசுசார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். 9-க்குடைய செவ்வாயும் 10-க்குடைய சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் 12-ல் மறைந்தாலும் 3-ஆம் தேதிமுதல் இருவரும். ஜென்ம ராசியில் இணைந்து சஞ்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு குருபார்வையும் கிடைப்பது மேலும் ப்ளஸ் பாயின்ட்டாக அமைகிறது. தர்மகர்மாதிபதி யோகம் வழி நடத்தும். 7-ல் சனி வக்ரமாக இருப்பதால் கணவன் அல்லது மனைவிக்கு உடல்நலரீதியாக மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு விலகும். சனியும் செவ்வாயும் ஒருவரையொருவர் பரஸ்பரம் பார்த்துக்கொள்வதால் ஒருசில வகையில் காரிய தாமதம் ஏற்படலாம். திருமண வயதையொட்டிய ஆண் பெண்களுக்குத் திருமணத்தில் தடையைச் சந்திக்கநேரும். ஜெனன ஜாதகத்தில் சனி செவ்வாயும், பார்வை இருந்தால் காதல் திருமணம் கலப்புத் திருமணம் ஏற்பட இடமுண்டு.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்திலேயே 11-ஆமிடத்தில் சஞ்சாரம். 12-க்குடைய சூரியன் மாத முற்பாதிவரை 10-லும் பிறகு 11-லும் சஞ்சாரம். வேலையில் சில நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஒருசிலர் தற்போது பார்க்கும் வேலையைவிட்டு வேறு ஒரு வேலைக்கு இடமாற்றமும் ஏற்படலாம். 7-க்குடைய குரு 8-ல் மறைவதால் கணவருக்கோ அல்லது கணவர் வழி உறவினர்களுக்கோ நோய். அதனால் வைத்தியச் செலவும் ஏற்படும். 2-ல் உள்ள கேது குடும்பத்தில் சிலநேரம் குழப்பத்தை உண்டாக்கினாலும் குருபார்வையால் அதற்கு தீர்வும் கிடைக்கும். காரண காரியமற்ற வீண்விரய செலவுகள் உண்டாகும். வாகனத்தில் சில விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் அவசியம். குரு நின்ற இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கு சிறப்பு அதிகம் என்பதால் அவர் 12-ஆமிடத் தைப் பார்க்கும் பலனாக மேற்கூறிய பலன்கள் நடைபெறும். ஒரு சிலர் குடியிருப்பு மாற்றங் களையும் சந்திக்க நேரும். 6-ல் சனி வக்ரம். சத்ருவகையில் தொல்லைகள் குறையும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ஆம் தேதிமுதல் சிம்ம ராசியான 11-ஆமிடத்துக்கு மாறுகிறார். 2, 7-க்குடைய செவ்வாயும் சுக்கிரனுடன் சேர்க்கை. ராசிக்கும், ராசிநாதன் சுக்கிரனுக்கும் குருவின் பார்வை. குரு பார்க்கக் கோடி நன்மை என்பதுபோல துலா ராசிக்கு நன்மைகள் உண்டாகும். வேலை, உத்தியோகத்திலும் பொறுப்புகள் கூடும். 5-ல் சனி வக்ரம் பெற்று ஆட்சியாக இருப்பதால் எண்ணிய எண்ணங்களை செயல்படுத்தலாம். கருதிய காரியங்களும் கைகூடும். பிள்ளைகள்வகையில் செலவினங்கள் ஏற்பட்டாலும் அது சுபச்செலவாகவும் அமையும். 7-ல் குரு இருப்பது திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்கு திருமண வாய்ப்பு உண்டாகும். ராகுவும் அங்கிருப்பதால் தாமதமாகலாமே தவிர தடையாகாது. சில நேரம் ஜென்ம கேது அலைச்சல்களைத் தரலாம். 3-ஆமிடத்தை 3-க்குடைய குருவே பார்ப்பதால் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தொழி-ல் புதுமுயற்சிகளை மேற்கொள்ளலாம். நண்பர்களால் சகாயம் உண்டாகும். சகோதரவழியில் கருத்து வேறுபாடு தோன்றினாலும் ஒற்றுமை பாதிக்காது.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் மாதத் தொடக்கத்திலேயே 10-ல் சஞ்சாரம் பெறுகிறார். மேலும் 2, 5-க்குடைய குருவின் பார்வையைப் பெறுகிறார். வேலை, உத்தியோகம், தொழில் இவற்றில் எவ்வித தடைகளுக்கும் இடமில்லை. அதேசமயம் 12-ஆமிடத்தையும், 12-க்குடைய சுக்கிரனையும் குரு பார்ப்பதால் விரயம், அலைச்சல், அலைக்கழிப்புகளையும் சந்திக்க நேரலாம். 10-க்குடைய சூரியன் மாத முற்பாதி வரை 8-ல் மறைகிறார். மேற்கூறிய மனச் சஞ்சலத்திற்கும் அதுவும் ஒரு காரணம். 17-ஆம் தேதிமுதல் 10-க்குடைய சூரியன் 9-ல் மாறுவது தர்மகர்மாதிபதி யோகத்தைத் தரும். அது ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம். 4-ல் சனி வக்ரம் பெறுவதால் தாய்சுகம் அல்லது தன்சுகம் பாதிக்கப்படலாம். பொருளாதாரத்திலும் சிலநேரம் தேக்கம் ஏற்படலாம். தேவைகளை கடைசி நேரத்தில்தான் நிறைவேற்றும் அமைப்புகள் உண்டாகும். 6-ஆமிடத்து ராகு போட்டி, பொறாமைகளை சமாளிக்கும் யுக்திகளைத் தருவார். 23-ஆம் தேதிமுதல் 8-க்குடைய புதன் 10-ல் மாறுகிறார். செய்தொழி-ல் இடமாற்றம் ஏற்படலாம்.
தனுசு
தனுசு ராசிக்கு ஏழரைச்சனியி-ருந்து தற்கா-க விடுதலை. (அதிசார கும்ப சனி). அது ஒரு ப்ளஸ் பாயின்ட். ராசிநாதன் குரு 5-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்ப்பது மேலும் ஒரு ப்ளஸ் பாயின்ட். ப்ளஸ் ல ப்ளஸ் = ப்ளஸ் என்பதுபோல உங்கள் திறமை செயல்பாடு, கீர்த்தி, செல்வாக்கு எல்லாம் சிறப்பாக விளங்கும். 12-க்குடைய செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுகிறார். பூர்வீக சொத்து சம்பந்தமாக சில விரயங்களைச் சந்தித்தாலும் குரு பார்வையால் முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். 3-ல் சனி ஆட்சிபெற்று வக்ரமாக அமைவதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாக அமையும். சனியும் செவ்வாயும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது நல்லதல்ல என்றாலும் சனி ஆட்சி பெறுவதால் தோஷம் பாதிக்காது. 11-ஆமிடத்துக்கும் குரு பார்வை கிடைப்பதால் காரிய அனுகூலம் உண்டாகும். டிசம்பர் 20-க்குப் பிறகு ஏழரைச்சனி முழுமையாக நிவர்த்தியாகும்; எதிலும் வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. அதிசாரமாக சனி 2-ல் சஞ்சாரம் வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். பொருளாதாரத்தில் நிறைவுக்கு இடமில்லை என்றாலும் குறைவுக்கும் இடமில்லை. அதாவது வரவு- செலவு சரிசமமாக நிகழும். 4-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்தாலும், 4-ல் நிற்கும் குருவின் பார்வையைப் பெறுகிறார். குடியிருப்புவகையில் இடமாற்றம் உண்டாகும். ஒருசிலர் புதிய வீடு அல்லது மனைக்கு ஒப்பந்தம் போடலாம். சனி ராசிநாதன் என்ற அடிப்படை யில் செவ்வாயைப் பார்ப்பதால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கலாம். 4-ல் உள்ள குரு வாகன பரிமாற்றத்தையும் தருவார். பழையதை விற்று புதிய வாகனமும் வாங்கலாம். 8-க்குடைய சூரியன் 6-ல் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்ற அடிப்படையில் திடீர் ராஜயோகத்திற்கும் இடம் ஏற்படும். 5-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைந்தாலும் குரு பார்வையால் சுக்கிரனுக்கு மறைவு தோஷம் விலகுகிறது. கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும்.
கும்பம்
கும்ப ராசிக்கு 2-க்குடைய குரு 3-ல் மறைவு. ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் வக்ரம். ஏழரைச்சனியும் நடைபெறுகிறது. சனி ராசிநாதன் மட்டுமல்லாமல் விரயாதிபதியும்கூட எனவே ஒரு வேலையை இருதரம் செய்வதால் நேரவிரயம், பண விரயம் போன்றவற்றை சந்திக்க நேரும். 7-ல் செவ்வாயும், சுக்கிரனும் இருப்பது களஸ்திர தோஷமாகும். திருமணத் தடை, கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையில் பிரச்சினை ஆகிய பலன்கள் உண்டாகலாம். குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிரச்சினைக்குத் தீர்வு உண்டாகும். 9-ல் கேது நிற்பதால் ஆன்மிகப் பயணம் அல்லது தீட்சை ஞான உபதேசம் போன்றவை கிடைக்க வாய்ப்பு உண்டு. உடன்பிறந்த சகோதர- சகோதரிவகையில் நன்மைகள் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் விலகும். சுபநிகழ்வுகள் உண்டாகும். அதன்மூலம் உங்களுக்கு செலவுகளும் கூடும். 4-ஆம் தேதிமுதல் 5-க்குடைய புதன் 6-ல் மறைவு. உங்கள் திட்டம் செயல்பாட்டில் சிறிது தொய்வுகள் உண்டாகலாம்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 2-ல் இருப்பது நன்மை என்றாலும், அதிசாரமாக ஏழரைச்சனி நடைபெறுவதால் தொழி-லும் உத்தியோகத்திலும் அலைச்சல், திரிச்சல்கள் நிகழும். உடற்சோர்வும் இனம்புரியாத கவலையும் உண்டாகும். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மொழிக்கேற்ப குழப்பங்களும் உண்டாகும். 12-க்குடைய சனி 12-ல் ஆட்சி. வக்ரம். சனி செவ்வாயின் சாரமான அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம். தேவையற்ற விரயம், திடீர் செலவு, அதனை சமாளிக்க முடியாமல் திணறும் நிலை போன்றவை உண்டாகலாம். ஜெனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்திகள் நடைபெற்றால் இவையனைத்தையும் சமாளிக்கும்வகையில் அமையும். 2-க்குடைய செவ்வாய் 6-ல் மறைவதும் அவரை 12-ல் உள்ள சனி பார்ப்பதும் தேவையற்ற விரயத்திற்கு காரணமாக அமைகிறது. எனவே 2-ல் குரு இருந்தும் நற்பலனை அனுபவிக்க முடியவில்லை. 10-ஆமிடத்தை 10-க்குடைய குருவே பார்ப்பதால் வேலையிலோ தொழில் அமைப்பிலோ பாதிப்பில்லாமல் வேலை ஓடுகிறது. அது ஒரு ஆறுதல்.
அலைபேசி: 99440 02365