ஜூலை மாத ராசி பலன்கள்

/idhalgal/om/july-horoscope-benefits

மேஷம்

மேஷ ராசிநாதன் மாதத்தின் முதல் வாரத்தில் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 4, 7, 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். வீடு, மனை சம்பந்தப்பட்ட முயற்சியில் ஈடுபடுவோராக இருந்தாலும் சரி, ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் சரி- அது சாதகமான பலனைத் தரும். புதிய வீடு கட்டும் பணியிலிருப்போருக்கு வங்கிக்கடன் உதவியும் கிடைக்கும். 2-ல் இருக்கும் குரு அதை நிறைவேற்றியும் வைப்பார். கடந்த மாதம் சனி வக்ரகதியில் இயங்க ஆரம்பித்தார். 11-ல் பலம் பெற்று வக்ரமாக இருப்பது நல்லதுதான். முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் குரு, குருச் சந்திர யோகத்தைத் தருவார். வாகனவகையில் மட்டும் சற்று கவனமுடன் செயல்படுவது அவசியம். 5-க்குடைய சூரியன் தொடக்கத்தில் ராகு சாரத்தில் (திருவாதிரை) சஞ்சரித்தாலும் பிறகு குரு சாரம் பெறுவதால் நன்மைகளை எதிர்பார்க்கலாம். பொன்னமராவதி அருகில் செம்பூதியில் சிவந்திலிங்க ஏகம்மை ஜீவசமாதி சென்று வழிபடவும்.

aa

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாத முதல் வாரத்தில் 3-ஆமிடத்துக்கு மாறுகிறார். மேலும் அஸ்தமனமாகவும் இருக்கிறார். ஜூலை 7-ஆம் தேதி உதய மாகிறார். ஜென்மத்தில் குரு நின்று 5, 7, 9-ஆமிடங்களைப் பார்த்தும் நன்மைகளை அனுபவிக்கமுடியாத நிலைமாறி நன்மைகளை உண்டாகும். பிள்ளைகளால் நிலவிய மனக் கவலைக்கு அவர்களுக்கு நடக்கும் நன்மைகள் உங்களுக்கு ஆறுதலாக அமையும். திருமண வயதை யொட்டிய ஆண்- பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். 12-ல் செவ்வாய் ஆட்சியாக இருப்பது ஒருவகையில் செலவுகளைக் காரணமில்லாமல் தரும். 5-ல் உள்ள கேதுவும் அவரைப் பார்க்கும் குருவும் உங்கள் எண்ணம் மற்றும் திட்டங்களில் ஏற்றத்தையும் இறக்கத் தையும் மாறிமாறிச் செய்வார். 9-க்குடைய சனி 10-ல் வக்ரம் பெறுகிறார். ஒருசிலருக்கு உத்தியோக இடமாற்றம் ஏற்படும். வேறு சிலருக்கு உத்தியோக உயர்வுடன்கூடிய இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். மாதக்கடைசியில் 2-க்குடைய புதன் வக்ரம். தனவரவு தாராளமாக அமையும். திருப்பரங்குன்றம் அருகில் திருக்கூடல் மலையில் ஸ்ரீ சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் இம்மாதம் 2-ஆமிடத்தில் சஞ்சாரம். எனவே தனவரவுக்கு இடமுண்டு. 12-க்குடைய சுக்கிரன் 7-ஆம் தேதிமுதல் 2-ல் சஞ்சாரம். வரவும் செலவும் கலந்து நடைபெறும் சூழல். அதாவது வரும் செலவுகளை சமாளிக்கும்படியான வரவு வந்துசேரும். 10-க்குடைய குரு 12-ல் இருப்பதால் எதிர்பாராமல் திடீர் செலவுகள் ஏற்படவும் இடமுண்டு. தொழில்ரீதியாக சில சங்கடங்களையும் அரசு சார்ந்தவகையில் பிரச்சினைகளையும் சந்திக்கலாம். 11-ஆம் தேதிமுதல் 11-க்குடைய செவ்வாய் 12-ஆமிடமான ரிஷபத்திற்கு மாறுகிறார். உடன்பிறந்தவர்களினால் தொந்தரவுகள் ஏற்படலாம். உறவுகளுக்குள் வீண் பிரச்சி

மேஷம்

மேஷ ராசிநாதன் மாதத்தின் முதல் வாரத்தில் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 4, 7, 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். வீடு, மனை சம்பந்தப்பட்ட முயற்சியில் ஈடுபடுவோராக இருந்தாலும் சரி, ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் சரி- அது சாதகமான பலனைத் தரும். புதிய வீடு கட்டும் பணியிலிருப்போருக்கு வங்கிக்கடன் உதவியும் கிடைக்கும். 2-ல் இருக்கும் குரு அதை நிறைவேற்றியும் வைப்பார். கடந்த மாதம் சனி வக்ரகதியில் இயங்க ஆரம்பித்தார். 11-ல் பலம் பெற்று வக்ரமாக இருப்பது நல்லதுதான். முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் குரு, குருச் சந்திர யோகத்தைத் தருவார். வாகனவகையில் மட்டும் சற்று கவனமுடன் செயல்படுவது அவசியம். 5-க்குடைய சூரியன் தொடக்கத்தில் ராகு சாரத்தில் (திருவாதிரை) சஞ்சரித்தாலும் பிறகு குரு சாரம் பெறுவதால் நன்மைகளை எதிர்பார்க்கலாம். பொன்னமராவதி அருகில் செம்பூதியில் சிவந்திலிங்க ஏகம்மை ஜீவசமாதி சென்று வழிபடவும்.

aa

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் மாத முதல் வாரத்தில் 3-ஆமிடத்துக்கு மாறுகிறார். மேலும் அஸ்தமனமாகவும் இருக்கிறார். ஜூலை 7-ஆம் தேதி உதய மாகிறார். ஜென்மத்தில் குரு நின்று 5, 7, 9-ஆமிடங்களைப் பார்த்தும் நன்மைகளை அனுபவிக்கமுடியாத நிலைமாறி நன்மைகளை உண்டாகும். பிள்ளைகளால் நிலவிய மனக் கவலைக்கு அவர்களுக்கு நடக்கும் நன்மைகள் உங்களுக்கு ஆறுதலாக அமையும். திருமண வயதை யொட்டிய ஆண்- பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். 12-ல் செவ்வாய் ஆட்சியாக இருப்பது ஒருவகையில் செலவுகளைக் காரணமில்லாமல் தரும். 5-ல் உள்ள கேதுவும் அவரைப் பார்க்கும் குருவும் உங்கள் எண்ணம் மற்றும் திட்டங்களில் ஏற்றத்தையும் இறக்கத் தையும் மாறிமாறிச் செய்வார். 9-க்குடைய சனி 10-ல் வக்ரம் பெறுகிறார். ஒருசிலருக்கு உத்தியோக இடமாற்றம் ஏற்படும். வேறு சிலருக்கு உத்தியோக உயர்வுடன்கூடிய இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். மாதக்கடைசியில் 2-க்குடைய புதன் வக்ரம். தனவரவு தாராளமாக அமையும். திருப்பரங்குன்றம் அருகில் திருக்கூடல் மலையில் ஸ்ரீ சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் இம்மாதம் 2-ஆமிடத்தில் சஞ்சாரம். எனவே தனவரவுக்கு இடமுண்டு. 12-க்குடைய சுக்கிரன் 7-ஆம் தேதிமுதல் 2-ல் சஞ்சாரம். வரவும் செலவும் கலந்து நடைபெறும் சூழல். அதாவது வரும் செலவுகளை சமாளிக்கும்படியான வரவு வந்துசேரும். 10-க்குடைய குரு 12-ல் இருப்பதால் எதிர்பாராமல் திடீர் செலவுகள் ஏற்படவும் இடமுண்டு. தொழில்ரீதியாக சில சங்கடங்களையும் அரசு சார்ந்தவகையில் பிரச்சினைகளையும் சந்திக்கலாம். 11-ஆம் தேதிமுதல் 11-க்குடைய செவ்வாய் 12-ஆமிடமான ரிஷபத்திற்கு மாறுகிறார். உடன்பிறந்தவர்களினால் தொந்தரவுகள் ஏற்படலாம். உறவுகளுக்குள் வீண் பிரச்சினை உண்டாகும். 9-ல் சனியும் வக்ரம். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்க விவகாரங்களை எதிர்கொள்ளலாம். வேலையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் ஏற்பட்டாலும் அதில் ஒரு ஆதாயமும் உண்டாகும். 12-க்குடை சுக்கிரன் 2-ல் இருப்பதால் அந்நிய தனம் உங்கள் கையில் புரளும். கரூர் அருகில் நெரூர் சென்று சதாசிவப் பிரம்மேந்திராள் ஜீவசமாதியை வழிபடவும். கர்மவினைகளை மாற்றக்கூடிய சக்தி சித்தர்களுக்கு உண்டு.

கடகம்

கடக ராசிக்கு 2-க்குடைய சூரியன் ஜூலை 17-ஆம் தேதிவரை 12-ல் மறைவு. 12-க்குடையவர் 2-ல் இருந்தால் அடுத்தவர் பணம் நம்மிடம் புரளும். 2-க்குடையவர் 12-ல் இருந்தால் நம் பணம் அடுத்தவரிடம் புரளும். திடீர் திடீரென செலவுகள் வருவதால் சமாளிக்க முடியாமல் திணறக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். என்றாலும் 11-ல் இருக்கும் குருவும், அவருடன் இணையும் செவ்வாயும் (10-க்குடையவர்) சமாளிக்கும் ஆற்றலைத் தருவார்கள். 3-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஒரு மனிதனுக்கு இந்த இரண்டும்தானே மூலதனம். 8-ல் சனி வக்ரமாக இருப்பது நல்லதுதான். கெட்டவர் கெட்ட இடத்தில் வக்ரம் பெறுவதால் கெடுபலன்கள் குறையும். 9-ல் உள்ள ராகு தந்தைக்கு சங்கடம் அல்லது தந்தை வழியில் இழப்பு ஏதேனும் ஏற்படலாம். 3-ல் கேது. உடன் பிறந்தவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். நீங்கள் நல்லதே நினைத்தாலும் அவர்கள் உங்களைத் தவறாக புரிந்துகொண்டு விலகி நிற்பார்கள். காலம் தான் எதற்கும் பதில் சொல்லுமல்லவா! 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு பிள்ளைகளால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு ஆறுதல் தரும். 17-ஆம் தேதிமுதல் விரயங்கள் சற்று கட்டுப்படும். திருநெல்வேலி- தூத்துக்குடி பாதையில் வல்லநாடு உள்ளது. சாது சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் ஜூலை 17-ஆம் தேதிவரை 11-ல் சஞ்சாரம். தொடக்கத்தில் ராகு சாரத்திலும் பிறகு குரு சாரத்திலும் சஞ்சாரம். அது ஒருவகையில் நன்மையே! காரிய அனு கூலங்கள் ஏற்படும். எதிர்பாராத நற்பலன்களும் உண்டாகும். 10-ல் குரு நின்று 2-ஆமிடத்தைப் பார்த்தாலும் அவர் 8-க்கும் உடையவர் என்பதால் வாகனவகையில் விரயங்கள் ஏற்படும். 11-ஆம் தேதி முதல் 9-க்குடைய செவ்வாய் 10-ல் மாறுவது தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும் என்பதால் வாழ்க்கை, தொழிலில் இரண்டிலும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். இறைக்கிற கிணறுதான் ஊறும் என்பதுபோல செலவு ஏற்பட்டாலும் வரவும் வந்து சமாளிக்கலாம். 17-ஆம் தேதிக்கு பிறகு ராசிநாதன் சூரியன் மறைவதும், 11-க்குடைய புதன் அவருடன் இணைந்து சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், திடீர் பிரயாணம் ஏற்பட்டு தேக ஆரோக் கியத் தொல்லைகளை உருவாக்கும். 5-க்குடைய குரு 10-ல் கேந்திரம் பெறுவதால் பிள்ளைகளுக்கு ஏற்படும் நற்காரியங்களை நல்லமுறையில் நிறைவேற்றலாம். 7-ல் சனி வக்ரம். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு சச்சரவு உண்டாகும். சிங்கம்புணரியில் முத்து வடுக சித்தர் என்ற வாத்தியாரய்யா ஜீவசமாதி சென்று வழிபடவும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 11-ல் சஞ்சாரம். 1, 10-க்குடையவர். அவர் 11-ல் இருப்பதால் வேலை, உத்தியோகம் இவற்றில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக உயர்வுடன்கூடிய முன்னேற்றமாகவும் அமையும். ஜூலை 20-ஆம் தேதி புதன் வக்ரம் பெறுவதால் இடமாற்றம் அல்லது ஊர் மாற்றமும் ஏற்படும். அது விரும்பிய மாற்றமாகவும் அமையும். 7-ஆம் தேதிமுதல் 9-க்குடைய சுக்கிரன் 11-ல் சஞ்சாரம் பெறுகிறார். குரு சாரத்திலும் பிறகு சனி- புதன் சாரத்திலும் சஞ்சரிக்கிறார். கணவர் அல்லது மனைவிவகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். ஒருசில நேரம் கணவரிடத்தில் சச்சரவுகள் வந்தாலும் பிரிவினைக்கு இடமில்லை. ஜென்ம கேது சப்தம ராகு சிலசமயம் உங்கள்மீதே உங்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தும். 17-ஆம் தேதிவரை 10-ல் சஞ்சரிக்கும் சூரியன் அரசு சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்து நன்மைகளைத் தருவார். அனுகூலம் உண்டாகும். ஜென்ம ராசியை பார்க்கும் குரு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார். 6-ல் சனி வக்ரம். போட்டி, பொறாமைகள் மற்றும் சத்ரு தொல்லைகள் விலகும். நோய் நொடி நிவர்த்தியாகும். திருவாரூர்- மடப்புரத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் இருக்கிறார். 7-ஆம் தேதிமுதல் 10-ஆம் இடமான கடக ராசிக்கு மாறுகிறார். 9-க்குடைய புதன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். ராசிநாதன் சுக்கிரன் அஸ்தமனமாக இருக்கிறார். 7-ஆம் தேதிமுதல் அஸ்தமன உதயம். எனவே கடந்த மாதம் நிலவிய மனக் குழப்பம், தெளிவற்றநிலை இவையெல்லாம் இம்மாதம் மாறி ஒரு தெளிவான சூழ்நிலைகளைச் சந்திக்கலாம். உத்தியோகத்தில் கடந்த மாதத்தைவிட இம்மாதம் வேலைக்கும் குறைவிருக்காது. வரவுக்கும் பஞ்ச மிருக்காது. செலவுக்கும் குறைவிருக்காது. 8-ல் குரு நின்று 12-ஆமிடம் 2-ஆமிடத்தைப் பார்ப்பதுதான் மேற்கூறிய பலன். 7-க்குடைய செவ்வாய் 11-ஆம் தேதிமுதல் 8-ல் மறைவு. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகலாம். 5-ல் உள்ள சனி வக்ரகதியில் இருப்பதால் உங்கள் திட்டங்களில் ஒருசில நேரம் தாமதப் பலனை சந்திக்கநேரும். வீண் அலைச்சலும், திடீர் பயணமும் ஏற்படலாம். மாதக் கடைசியில் புதன் வக்ரம் பெறுகிறார். சூரியனும் அங்கு இணைவதால் அரசு காரியங்கள் அனுகூலமற்ற நிலைகள் ஏற்படும். தொல்லைகளும் உருவாகலாம். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று ஸ்ரீ ஸ்வயம் ப்ரகாச சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந் தாலும் ஆட்சியாக இருக்கிறார். எனவே மறைவு தோஷம் பாதிக்காது. போட்டி, பொறாமைகள் விலகும். 11-ஆம் தேதிமுதல் 7-ஆமிடத்துக்கு மாறுகிறார். ராசியைப் பார்க்கிறார். குருவும் ராசியைப் பார்க்கிறார். இதுவரை வில்லங்கம் விவகாரத்தை சந்தித்தவர் களுக்கு இனி நல்ல தீர்வு உண்டாகும். உங்கள் செயல் பாட்டிலும் முன்னேற்றம் ஏற்படும். 17-ஆம் தேதிவரை 10-க்குடைய சூரியன் 8-ல் மறைவதால் ஒருசில சஞ்சலம் உண்டாகினாலும் 17-ஆம் தேதிமுதல் 9-ல் சூரியன் சஞ்சாரம் பண்ணுவது தர்மகர்மாதிபதி யோகத்தைத் தரும். அது வாழ்க்கையிலும் தொழிலும் நன்மைகளைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஸ்திர ராசிக்கு 7-க்குடையவர் பாதகாதிபதி இல்லை என்பதாலும் 7-ல் குரு இருப்பதாலும் திருமண முயற்சிகள் கைகூடும். நீண்டநாள் வரன் அல்லது வதூ தேடியும் அமையாதவர்களுக்கு இக்கால கட்டம் குரு திருமண யோகத்தைத் தருவார். 4-ல் சனி வக்ரம் என்பதால் தேகநலனில் சற்று அக்கறை காட்டுவது அவசியம். திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். ரமண மகரிஷிக்கு ஆன்மிக வழிகாட்டியவர்.

தனுசு

தனுசு ராசிக்கு 5-ல் செவ்வாய் ஆட்சி. 6-ல் குரு மறைவு. உங்கள் எண்ணங்கள் திட்டங்கள் இவற்றை சரியாக செயல்படுத்த முயற்சித்தாலும் ஏதோ ஒருவகையில் தடை, தாமதம் போன்ற வற்றை சந்திக்க நேரும். 6-ல் இருக்கும் குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் திடீர் விரயம், இடமாற்றம், வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் ஏற்படலாம். செலவு களைச் சமாளிக்கும் அளவு வரவும் ஏற்படும். தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். 7-ல் உள்ள சூரியனும் சுக்கிரனும் கணவன்- மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாட்டை உண்டாக்கும். திருமண முயற்சியில் இழுபறி நிலைகளையும் ஏற்படுத்தும். 3-ல் சனி வக்ரம். உடன்பிறப்புகள்வகையில் எதிர்பாராதவிதமாக சங்கடங் கள் தோன்றலாம். தேக ஆரோக்கியத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஒருசிலருக்கு கால் சம்பந்தப் பட்ட பிரச்சினைகளும் அல்லது நரம்பு பிரச்சினைகளும் ஏற்படலாம். 10-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தொழிலில் சீரான நிலை உண்டாகும். உத்தியோகத்திற்கும் பிரச்சினை வராது. உத்தியோக உயர்வுக்கு வாய்ப்புண்டு. திண்டுக்கல் அருகில் கசவனம் பட்டி சென்று ஸ்ரீமௌனகுரு ஜோதி நிர்வாண சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

மகரம்

மகர ராசிக்கு ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடக்கிறது. 2-ல் உள்ள சனி வக்ரகதியில் செயல்படுகிறார். குடும்பத்தில் குழப்பம், வீண் சச்சரவு போன்ற சங்கடங்களைச் சந்திக்க லாம். பூமி, மனை சம்பந்தமாக விற்பனை முயற்சிகள் கைகூடும். திடீர்செலவுகள் உண்டாகும். என்றாலும் குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் பல நாட்களாக முடங்கிக்கிடந்த விஷயங்களைச் செயல் படுத்தி முடித்துக் காட்டலாம். 3-ல் உள்ள ராகு அதற்குண்டான துணிச்சலைத் தருவார். 5-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைந்தாலும் 7-ஆம் தேதிமுதல் கடகத்திற்கு மாறி உதயமும் பெறுகிறார். பிள்ளைகள்வகையில் நல்லவைகள் ஏற்படும். காரிய அனுகூலமும் உண்டாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக கருத்து வேறுபாட்டுடன் இருப்பவர்களுக்கு சாதகமான தீர்வுகளை எதிர்பார்க்கலாம். தனவரவுக்கு வழிவகை உண்டாகும். 9-ல் உள்ள கேது தகப்பனாரிடையே வாக்கு வாதத்தை ஏற்படுத்தினாலும் பிரிவினைக்கு இடமில்லை. மாதக்கடைசியில் புதன் வக்ரம் அடைவதால் போட்டிகள் அதிகரிக்கும் திண்டுக்கல்- பழனி பாதையில் கணக்கன்பட்டியில் மூட்டை சுவாமி என்ற பழனி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். மாபெரும் மகான்.

கும்பம்

கும்ப ராசிக்கு ராசிநாதன் சனியே விரயாதிபதி என்பதால் கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்திற் குரியவர்கள் என்று கூறப்படுகிறார்கள். ஜென்ம ராசியில் சனி வக்ரமும் பெற்று இயங்குகிறார். ஆக, தேகநலனில் பாதிப்பு, குடும்பத்தில் சச்சரவு, உறவு களுக்குள் சங்கடம், வேலையில் அல்லது குடியிருப்பில் இடமாற்றம், உத்தியோகத்தில் பிரச்சினை போன்ற பாதிப்புகளையெல்லாம் சந்திக்கவேண்டிய நிலை. மேலும் 2-க்குடைய குரு 4-ல் அமர்ந்து 12-ஆமிடத்தைப் பார்ப்பதை சொல்லவே வேண்டாம்! வரவு 500 செலவு 1000 என்ற கதையாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் உத்தியோகம் இயங்கிக் கொண்டிருப்பது ஒரு ஆறுதல். 3-ல் செவ்வாய் ஆட்சிபெற்றாலும் சனி பார்ப்பது நல்லதல்ல! தேவையற்ற வீண் விவகாரங்கள் தலைதூக்கும். முடிந்தவரை பொறுமை, நிதானம், அமைதி இவற்றைக் கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் சொல்லப்போகும் நல்ல விஷயங்கள்கூட பாதகமாக அமையும் வாய்ப்புள்ளது. திருமணத்தில் தாமதம் ஏற்படலாம். பொன்னமராவதி- புதுக்கோட்டை பாதையில் குழிபிறை அருகில் பனையூர் ஒடுக்கத்தில் ஞானி சாதுபுல்லான் சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

மீனம்

மீன ராசிக்கு நடக்கும் ஏழரைச்சனி முதல் சுற்று மங்கு சனியை சந்திப்பவர்கள் தொழிலில் மந்தம், உத்தியோகத்தில் சிக்கல், குடும்பத்தில் நிம்மதியின்மை, வீண் விரயம், அலைச்சல் போன்ற பலன்களைச் சந்திக்க நேரும். இரண்டாம் சுற்று பொங்கு சனியை சந்திப்பவர்கள் காரிய அனுகூலம், சுபவிரயம், திருமணம் கைகூடுதல், உத்தியோக உயர்வு போன்ற பலன்களைச் சந்திக்கலாம். மூன்றாம் சுற்றான மரணச் சனியை சந்திப்பவர் கள் மரணத்திற்கு நிகரான வேதனை, பொருள் இழப்பு அல்லது அறுவை சிகிச்சை மருத்துவச் செலவு போன்ற சங்கடங்கள் ஏற்படலாம். இதில் மூன்று தரமாக பிரித்தாலும் சந்திர தசையோ அல்லது சந்திர புக்தியோ நடப்பவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சனி நொந்து நூலாக்குவார். உயிரிழப்பு போன்ற நிகழ்வுகளையும் சந்திக்க நேரும். ஜென்ம ராகுவும் இவ்வித அலைச்சல்களுக்கு ஒரு காரணமாக அமைவார். 7-ல் கேது திருமண வாழ்வில் குழப்பங்களைத் தருவார். 5-ல் புதன் 20-ஆம் தேதிமுதல் வக்ரம். ஆக, எச்சரிக்கையுடன் எந்த விஷயத்தையும் கையாளுவது அவசியம். இறைவழிபாடு எப்போதும் உங்களுக்குத் துணை நின்று வழிநடத்தும். மதுரை திருப்பரங்குன்றத் தில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

அலைபேசி: 99440 02365

om010724
இதையும் படியுங்கள்
Subscribe