மிளகை உளுந்தாக மாற்றிய ஈஸ்வரன்! எஸ்.பி. சேகர்

/idhalgal/om/iswaran-who-turned-chili-urad-sb-shekhar

றைவன் சிவ பெருமான் நடத்தும் திருவிளையாடல்கள் ஏராளம். இந்த திருவிளை யாடல் கள்மூலமே 63 நாயன்மார்களையும் ஆட் கொண்டவர். அப்படி ஒரு அற்புதம் நிகழ்த்திய ஆலயம் சேலம் மாவட்டம் பேளூரில் அமைந்துள்ளது. இங்கு கோவில்கொண்டுள்ள ஈஸ்வரர் தான் தோன்றீஸ் வரர். இவர் எப்படி தானே தோன்றினார். இந்த ஆலயம் மிக மிகப்பழமையானது என்பதை காசி விஸ்வேஸ்வர சதகம் கூறுகின்றது. அதன் படி பஞ்சபாண்டவர்கள் 5,000 வருடங்களுக்குமேல் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. பாண்டவர்களில் மூன்றாமவரான வில்வித்தை வீரன் அர்ஜுனன் தன் 35 வயதில் இப்பகுதிக்கு தீர்த்த யாத்திரையாக வந்ததாகவும். இங்கு தவமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்றததாகவும் கூறப் படுகிறது.

அர்ஜுனன் மகாவிஷ்ணுவான கிருஷ்ணரின் ஆலோசனையின்படி இவ்வாலயம் அமைந்த காட்டுப் பகுதியில் தவமிருப்பதற்காக தண்ணீர் தேடியபோது தண்ணீர் கிடைக்கவில்லை.

அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் வில்லிலிருந்து அம்பை பூமியில் செலுத்துமாறு கூற அவன் இந்த மலை அடிவாரத்தில் பாணத்தை செலுத்தி னான். இதனைகண்டு மகிழ்ந்த சிவபெருமான் தனது தலைமுடியில் இருந்த கங்கையின் ஒரு பகுதியை நதியாக இங்கே ஓடச்செய்தார். அந்த நதியில் இருந்து நீர் எடுத்து சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்து தவமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்றதாக கூறப்படுகிறது. அப்போது அரியும் அறனும் அர்ஜுனனுக்கு ஒன்றாக காட்சி கொடுத்தனர்.

மேலும் இறைவனின் திருவருளின் படி வதிர்ஷ்ட மகாமுனிவர் இங்குவந்து இந்த நதிக்கரையில் தம்பதிகளாக தங்கி மிகப்பெரிய வேள்வி நடத்தினார். அவர் நடத்திய வேள்வியில் குவிந்த சாம்பல் பெரும் குன்றாக குவிந்துநின்றது.

அதனால் இப்பகுதிக்கு கோட்டைமேடு என்ற பெயர் உருவானதாக கூறப் படுகிறது. அந்தக் குன்றில் இருக்கும் மண்ணை எடுத்து இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தற்போதும் பிரசாதமாக வழங்கப்பட்டுவருகிறது. (அக்காலத்தில் அது மலையாக மாறியது. அதில் மக்கள் குடியேறினர்.

அந்த மக்களை கல்வராயர் என்ற மன்னன் ஆட்சி செய்துள்ளார். அதனால் அப்பகுதிக்கு கல்வராயன் மலை என்ற பெயர் தற்போது விளங்கிவருகிறது அந்த மலையின் அடிவாரப் பகுதியில் தான் இவ்வாலயம் அமைந்துள்ளது) வதிர்ஷ்ட மகா முனிவர் இங்கு வேள்வி நடத்தியதால் ஊருக்கு திருவேள்வியூர், வேளூர் என்று அழைக்கப்பட்டு அது காலப்போக்கில் மருவி மக்கள் பேச்சு வழக்கில் மாறி தற்போது பேளூர் என்று அழைக்கப்படுகிறது.

ss

வதிர்ஷ்ட முனிவர் தமது மனைவியுடன் இங்கே தங்கி இறைவனை வேண்டி யாகம் செய்ததால் இந்த நதிக்கு வசிஷ்டாநதி என்றும் அர்ஜுனன் தனது வில்லினால் இந்த நதியை உருவாக்கியபோது அதிலிருந்து வெளிவந்த தண்ணீர் வெள்ளை நிறமாக பெருக்கெடுத்து ஓடியதால் இது வெள்ளாறு என்றும் அழைக்கப்படுகிறது. குபேரன் சிவபெருமானை இங்குவந்து தாமரை மலர்மீது வைத்து வணங்கினார்.

மகிழ்ந்

றைவன் சிவ பெருமான் நடத்தும் திருவிளையாடல்கள் ஏராளம். இந்த திருவிளை யாடல் கள்மூலமே 63 நாயன்மார்களையும் ஆட் கொண்டவர். அப்படி ஒரு அற்புதம் நிகழ்த்திய ஆலயம் சேலம் மாவட்டம் பேளூரில் அமைந்துள்ளது. இங்கு கோவில்கொண்டுள்ள ஈஸ்வரர் தான் தோன்றீஸ் வரர். இவர் எப்படி தானே தோன்றினார். இந்த ஆலயம் மிக மிகப்பழமையானது என்பதை காசி விஸ்வேஸ்வர சதகம் கூறுகின்றது. அதன் படி பஞ்சபாண்டவர்கள் 5,000 வருடங்களுக்குமேல் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. பாண்டவர்களில் மூன்றாமவரான வில்வித்தை வீரன் அர்ஜுனன் தன் 35 வயதில் இப்பகுதிக்கு தீர்த்த யாத்திரையாக வந்ததாகவும். இங்கு தவமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்றததாகவும் கூறப் படுகிறது.

அர்ஜுனன் மகாவிஷ்ணுவான கிருஷ்ணரின் ஆலோசனையின்படி இவ்வாலயம் அமைந்த காட்டுப் பகுதியில் தவமிருப்பதற்காக தண்ணீர் தேடியபோது தண்ணீர் கிடைக்கவில்லை.

அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் வில்லிலிருந்து அம்பை பூமியில் செலுத்துமாறு கூற அவன் இந்த மலை அடிவாரத்தில் பாணத்தை செலுத்தி னான். இதனைகண்டு மகிழ்ந்த சிவபெருமான் தனது தலைமுடியில் இருந்த கங்கையின் ஒரு பகுதியை நதியாக இங்கே ஓடச்செய்தார். அந்த நதியில் இருந்து நீர் எடுத்து சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்து தவமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்றதாக கூறப்படுகிறது. அப்போது அரியும் அறனும் அர்ஜுனனுக்கு ஒன்றாக காட்சி கொடுத்தனர்.

மேலும் இறைவனின் திருவருளின் படி வதிர்ஷ்ட மகாமுனிவர் இங்குவந்து இந்த நதிக்கரையில் தம்பதிகளாக தங்கி மிகப்பெரிய வேள்வி நடத்தினார். அவர் நடத்திய வேள்வியில் குவிந்த சாம்பல் பெரும் குன்றாக குவிந்துநின்றது.

அதனால் இப்பகுதிக்கு கோட்டைமேடு என்ற பெயர் உருவானதாக கூறப் படுகிறது. அந்தக் குன்றில் இருக்கும் மண்ணை எடுத்து இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தற்போதும் பிரசாதமாக வழங்கப்பட்டுவருகிறது. (அக்காலத்தில் அது மலையாக மாறியது. அதில் மக்கள் குடியேறினர்.

அந்த மக்களை கல்வராயர் என்ற மன்னன் ஆட்சி செய்துள்ளார். அதனால் அப்பகுதிக்கு கல்வராயன் மலை என்ற பெயர் தற்போது விளங்கிவருகிறது அந்த மலையின் அடிவாரப் பகுதியில் தான் இவ்வாலயம் அமைந்துள்ளது) வதிர்ஷ்ட மகா முனிவர் இங்கு வேள்வி நடத்தியதால் ஊருக்கு திருவேள்வியூர், வேளூர் என்று அழைக்கப்பட்டு அது காலப்போக்கில் மருவி மக்கள் பேச்சு வழக்கில் மாறி தற்போது பேளூர் என்று அழைக்கப்படுகிறது.

ss

வதிர்ஷ்ட முனிவர் தமது மனைவியுடன் இங்கே தங்கி இறைவனை வேண்டி யாகம் செய்ததால் இந்த நதிக்கு வசிஷ்டாநதி என்றும் அர்ஜுனன் தனது வில்லினால் இந்த நதியை உருவாக்கியபோது அதிலிருந்து வெளிவந்த தண்ணீர் வெள்ளை நிறமாக பெருக்கெடுத்து ஓடியதால் இது வெள்ளாறு என்றும் அழைக்கப்படுகிறது. குபேரன் சிவபெருமானை இங்குவந்து தாமரை மலர்மீது வைத்து வணங்கினார்.

மகிழ்ந்த சிவபெருமான் குபேரனுக்கு பொன்மாரி பொழிந்தார். அதனை உறுதிசெய்யும் வகையில் தாமரையின்மீதுள்ள சிவலிங்கத்தை இங்கு தரிசனம் செய்யலாம், இந்த ஆலயம் தோன்றியதற்கு ஒரு வித்தியாசமான சம்பவம் ஒன்று உள்ளது. இப்பகுதியில் வசித்துவந்தவர் மாணிக்கம் செட்டியார். இவர் ஒரு மிளகு வியாபாரி. இவர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மிளகு களை விலைக்கு வாங்கி அதை மூட்டைகளாக கட்டி அந்த மிளகு மூட்டைகளை வண்டி களில் ஏற்றி கட்டுப்பட்டு பகுதிகளில் நடைபெறும் சந்தைகளுக்கு கொண்டுசென்று விற்பனை செய்வது வழக்கம்.

ஒருமுறை மிளகு மூட்டைகளுடன் சந்தைக்கு செல்வதற் காக வண்டியில் வந்த மாணிக்கம் செட்டி யார் அடர்ந்து காடாக இருந்த இப்பகுதி வழியாக வரும்போது இரவு நேரம் ஆகி விட்டது. இங்கேயே அன்று இரவை கழிக்க எண்ணி இங்கு தங்கிய மாணிக்கம் செட்டியார் சமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது சாம்பார் வைப்பதற்காக தான் கொண்டுவந்த சுண்டைக்காய்களை ஒரு கல்லில் வைத்து நசுக்கி கொண்டிருந்தார். அப்போது அசரீரீயாக ஒரு குரல் ஒலித்தது. என் தலையில் கல்லடி பட்டதால் வலிக்கிறது. நீ வைத்திருக்கும் மிளகு மூட்டையில் இருந்து ஒரு பிடி மிளகை எடுத்து அரைத்து என் தலையில் பத்துபோடு என்றது குரல். செட்டியார் திகைத்துப் போனார்.

குரல் மட்டுமே கேட்டது. உருவம் தெரிய வில்லை. உடனே செட்டியார் காட்டிலுள்ள திருடர்கள் குரலோ தன் மிளகு மூட்டைகளை களவாடுவதற்காக வந்திருக்கிறார்களோ என்று பயந்து என்னிடம் இருப்பது மிளகு மூட்டைகள் இல்லை. அதன் உள்ளே உளுந்துதான் வைத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

அதன்பிறகு இரவை கழித்து காலையில் மூட்டைகளுடன் சந்தைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கே வண்டியிலிருந்த மிளகு மூட்டைகளை இறக்கி வைத்து அவிழ்த்து பார்த்தபோது மூட்டையில் இருந்த மிளகு அனைத்தும் உளுந்தாக மாறி இருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்த மாணிக்கம் செட்டியார் இதற்கு காரணம் வனத்தில் இரவு தங்கியபோது இறைவன் நடத்திய திருவிளையாடல் என்று உணர்ந்த அவர் மீண்டும் இந்த காட்டுப் பகுதிக்கு வந்தார்.

அங்கே இறைவனை வேண்டி வணங்கி ஐயனே காட்டிலே உள்ள கள்வர்கள் குரலோ என்ற பயத்தில் மிளகு மூட்டைகளில் உளுந்து இருப்பதாக பொய் கூறிவிட்டேன். என் தவறை மன்னித்து மீண்டும் மிளகாக இருந்து உளுந்தாக மாறிய மூட்டைகள் மீண்டும் மிளகாக மாற்றி தர வேண்டும் என்று வேண்டினார்.

s

அப்போது இரவு கேட்ட அதே குரல் செட்டியாரே இங்குள்ள மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து உமது மிளகு மூட்டை களின்மேல் தூவு என்று கூறியது. அதன் படி செட்டியார் பிடி மண்ணை எடுத்து உளுந்து மூட்டைகள் மீது தூவினார்.

என்னே அதிசயம் உளுந்தாக இருந்த மூட்டைகள் அனைத்தும் மிளகாக மாறியன. மேலும் அவர் இரவு ஒரு கல்லின் மீது வைத்து சுண்டைக்காய் நசுக்கிய அந்த கல்லை பார்த்தார். அது சுயம்புலிங்கமாக எழுந்து நின்றது. இதைக்கண்டு மெய்சிலர்த்த செட்டியார் அதே இடத்தில் இறைவனுக்கு கருவறையை சுற்றி சிறிய அளவில் ஆலயம் எழுப்பினார். அந்த இறைவனே தான் தோன்றீஸ்வராக (தானே பூமியில் இருந்து எழுந்ததால்)தற்போதும் காட்சியளிக்கி றார்.

மேலும் இறைவனின் அருளைப் பெற்றவர்கள் 63 நாயன்மார்கள். அவர்களில் ஒருவரான கண்ணம்புல் நாயனார் பிறந்த ஊரும் இதுவே. இவ்வூரில் பிறந்த கண்ணம்புல் நாயனார் பெரும் செல்வந்தர். அவர் இவ்வாலய இறைவனுக்கு தினசரி விளக்கேற்றும் பணியை தவ றாது செய்துவந்தார். அவரது அபரிமிதமான பக்தியை சோதிக்க எண்ணி னார் இறைவன். அதன்படி கண்ணம் புல்லருக்கு வறுமையை கொடுத்தார். கோவி லில் விளக்கேற்ற எண்ணெய் வாங்கு வதற்குகூட அவரால் முடியவில்லை. இந்த நிலையில் வனத்தில் முளைத்திருந்த கண்ணம் புல்லை அறுத்து அதைவிற்று அதில் கிடைக் கும் வருமானத்தை கொண்டு எண்ணெய் வாங்கி விளக்கேற்றி தினசரி வழிபட்டு வந்தார். ஒருநாள் தினசரி அவர் அறுத்துச் சென்று விற்பனை செய்யும் கண்ணம்புல்லை யாருமே வாங்க முன்வரவில்லை. கையில் காசு இல்லை. எப்படியும் இறைவனுக்கு விளக்கேற்றியே ஆகவேண்டும். தன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தன் தலைமுடியை பிடுங்கி அதை திரியாக்கி இறைவனே உனது அருளால் இன்று ஆலயத்தில் விளக்கு எரிய வேண்டும் என்று வேண்டினார்.

அவரது பக்தியை கண்டு மனம் கனிந்த இறைவன் அவர்முன் தோன்றி காட்சி கொடுத்து கண்ணம்புல் நாயனாரை தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டார். இதை மெய்ப் பிக்கும் வகையில் இவ்வாலயத்தில் நந்தி அருகே கண்ணம் புல் நாயனாருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தங்கியிருந்த வதிர்ஷ்ட மகாமுனிவர் இறைவனின் பூஜைக்கு அங்குள்ள ஒரு பலாமரத்திலிருந்து பழுக்கும் பலா கனிகளை இறைவனுக்கு பிரசாதமாக வைத்து பூஜை செய்துவந்தார். அந்தப் பலாமரக்கனியை அரக்கன் ஒருவன் திருடி சென்றான். கோபம் அடைந்த முனிவர் அந்த அரக்கனுக்கு சாபம் அளித்தார். அந்த சாபத்தின் பலனாக இவ்வாலயத்தின் பின்பகுதியில் உள்ள மலை யாக மாறினான் அரக்கன் என்கிறது இவ்வாலய தல புராணம். இதன்காரணமாக இவ்வாலயத்தில் தலவிருட்சமாக மா, பலா, இலுப்பை, ஆகிய மூன்று மரங்களும் இணைந்து ஒரே மரமாக காட்சியளிக்கிறது. இது அதிசயத்திலும் அதிசயம் என்கிறார் கள் இவ்வாலய அர்ச்சகர்கள். இறைவன் தான் தோன்றீஸ்வரர் இங்குள்ள அம்பாள் தர்மசமவர்த்தினி என்ற பெயரில் அருள்ஆசி வழங்குகிறார்கள். திருவையாறு ஐயாரப்பர் ஆலயத்திலுள்ள அம்மனுக்கு இதே பெயர். அதன்பிறகு இவ்வாலயத்திலுள்ள அம்மனுக்கு அதே பெயர்.

ஒருமுறை நீல நிறமாக இருந்துள்ளார் பார்வதி. இறைவனின் கட்டளைப்படி இங்குள்ள வெள்ளாற்றில் குளித்ததும் அவரது உடல் பொன்னிறமாக மாறியது. அதன்காரணமாக அவருக்கு கௌரி என்ற பெயர் உருவானது என்றும் அம்மன் குளித்த இடம் பொன் கதிரோடை என தற்போதும் அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். இவ்வளவு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தை மாணிக்கம் செட்டியார், அதன்பிறகு சோழ மன்னன் பராந்தகன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆலயத்தை புதுப்பித்து கட்டியுள்ளார். பிறகு 2002-ஆம் ஆண்டு ஆன்றோர், சான்றோர், சிவனடியார்கள், இவ்வூர் பக்தர்கள் ஒத்துழைப்புடன் 197 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்பட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. கருவறையிலுள்ள இறைவன் உளிப்படாத சிவலிங்கமாக நீள வடிவில் காட்சிதருகிறார். அம்பாள் தர்மசமவர்த்தினி நான்கு கரங்களுடன் கருணை பொங்கும் முகத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். சிவபெருமானால் உருவான இந்த வெள்ளாட்டற்றங்கரையில் 12 ராசி களுக்கு உரிய 12, சிவாலயங்கள் அமைந்துள் ளன. முதல் ஆலயம் பேளூர், அடுத்து ஏத்தாப் பூர், ஆத்தூர், ஆறகளூர், கூகையூர், காரியானூர், திருவாலந்துறை, திருமாந்துறை, ஆடுதுறை, திருவதிட்டர்குடி எனும் திட்டக்குடி, திருநெல்வாயில் அறத்துரை எனும் திருவட்டத்துறை, முடவன்துறை, கரந்தைத்துறை எனும் கோட்டைக்காடு, இப்படி 12 சிவாலயங்கள் ஒரே நதியின் கரையில் அமைந்துள்ளது மிகச்சிறப்பானது.

இவ்வாலயங்கள் அனைத்தும் வதிர்ஷ்ட முனிவராலும் அகத்திய முனிவராலும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாலயங் களை ஒரேநாளில் தரிசிப்பதற்காக ஆன்மிக அன்பர்கள் வந்து செல்கிறார்கள். இவ்வாலயம் குறித்து பல்வேறு தகவல்களை திரட்டி அதை ஒரு பெரும்நூலாக வெளியிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறேன் என்கிறார் திட்டக்குடி அருகே உள்ள பெருமுளை கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தனபால். ஆலயத்தில் கணபதி, பிரம்மன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், கஜலட்சுமி, முருகன், மற்றும் 63 நாயன்மார்களும் ஆலயத்தின் சுற்றுப் பிராகாரத்தில் அமைந்துள்ளனர். ஆலயத்திலுள்ள தூண்களில் சிவன், சக்தி, நடன காட்சிகளும் இங்குள்ள வன்னி மரத்தடியில் நவகிரகங்களும், அங்கே சனீஸ்வர பகவான் காக வாகனத்தில் ஒற்றைக்காலுடன் பரிகார சனீஸ்வரராக காட்சிதருகிறார். இங்குள்ள கல்யாண விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளனர். இவர் திருமணத்தடை நீக்குபவர். சங்கடஹர சதுர்த்தியன்று கல்யாண விநாயகருக்கு அருகம்புல் அல்லது வெள்ளருக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்தால் திருமணத் தடை உள்ளவர்களுக்கு தடை நீங்கி திருமணம் நடைபெறுகிறது. முகூர்த்த தினங் களில் இவ்வாலயத்தில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் இங்கு நடைபெறுகின்றன. இங்கு நடைபெறும் திருமண வைபவத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு கிடையாது. காரணம் இங்கு வதிர்ஷ்டரும் அருந்ததியும் தங்கி இறைவனை வழிபட்ட தால் அவர்களின் தவபலன் ஆசீர்வாதமாக தம்பதிகளுக்கு நேரடியாக கிடைக்கிறது. அதேபோல் குபேரன், மகாலட்சுமி, எழுந்தருளியதால் இங்கு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு செல்வ கடாட்சம் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள்.

நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எது வாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நிலத்தில் இருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்துவந்து இறைவன்முன்பு வைத்து வழிபட்டால் அது சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

இங்கு ஒற்றைக்காலில் நிர்க்கும் சனி பகவான் தோஷங்களை நீக்குபவர். இவ் வாலயத்தில் சேஷ்டா தேவி, பிரிங்கி மகரிஷி முனிவர், ஆகியோர்களுக்கு சிலைகள் உள்ளன.

ஒரே கல்லில் உருவான தூணில் அமைக்கப் பட்டுள்ள யாளியின் வாயில் உருளும் பந்து போன்ற கல் பொருத்தப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல் சிவபெருமான் நரியை பரியாக்கி குதிரையில் சவாரி செய்யும் அழகு காட்சிகளும் சிற்பங்களாக தூண்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திரன், உரோமச முனிவர் என பலரும் இங்குவந்து இவ்வாலய இறைவனை பூஜை செய்து பெரும் பேரு பெற்றுள்ளனர். இவ்வூரில் ஒரு நாள் தங்கினால் சிவலோகத்திலுள்ள சிவக்கணங்களில் ஒருவராக ஆகலாம். 15 நாட்கள் தங்கினால் சிவனுக்கு அருகில் இருக்கலாம். ஒரு மாதம் தங்கியிருப்போர் தூய சந்திரரை சூடிகொள்வார்கள். பல காலம் இங்கே தங்கி இறைவனை வணங்கி உபவாசம் இருப்போர் மோட்சம் அடைவார்கள் என்கிறது இவ்வாலய தல வரலாறு. ஆலயத்தில் பிரதோஷ நாட்களில் மிகச்சிறப்பாக நந்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. அதேபோல் சங்கடகர சதுர்த்தி, ஆடி 18. நவராத்திரி, சிவராத்திரி, திருவாதிரை, அன்னாபிஷேகம், முதலிய அனைத்து முக்கிய திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. கண்ணம்புல் நாயனார் பிறந்தநாளான கார்த்திகை மாதத்தில் வரு கார்த்திகை நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் நடைபெறுகிறது.

இங்குள்ள கல்யாண விநாயகருக்கு மாலை, தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனைசெய்து அருகம்புல் எருக்கு மாலைகளை அணிவித்து பூஜைசெய்தால் கல்யாண பாக்கியம் கை கூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர் களுக்கு குழந்தை பேரு கிடைக்கும். மற்றும் வேலை தேடிவருபவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், விவசாய செழிக்க, கல்வி, செல்வம், ஞானம் பெருக இங்குள்ள இறைவனுக்கு பால், நல்லெண்ணெய், இளநீர் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

அம்பாளுக்கு சேலை வைத்து படைத்து விரதமிருப்பது தானதர்மம் செய்வது ஆகியவற்றை இவ்வலயத்தில் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். இப்படி பல விதங்களில் பக்தர்களின் துயர் தீர்க்கும் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது வந்து தரிசித்து இறைவனின் அருளைப்பெற வேண்டும்.

ஆலய அமைவிடம்: சேலத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் வாழப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந் துள்ளது. அனைத்து போக்குவரத்து வசதி களும் உள்ளன.

om010124
இதையும் படியுங்கள்
Subscribe