மது கண் ணுக்கு ஒரு பொருள் தெரியவில்லையென் பதால், அது இல்லை என்றாகிவிடாது!

அதேசமயம் ஒரு பொருள் நம் கண்ணுக்குத் தெரிகிறதென்பதால் அது இருக்கிறது என்றும் ஆகிவிடாது. நாம் கண்ணால் காண்பது எதுவும் உண்மையுமில்லை; கண் ணால் காண்பது எதுவும் பொய்யுமில்லை.

உதாரணமாக, பூமியிலிருந்து சூரியனை நமது வெறும் கண்ணால் காண முடிகிறது. பூமியிலிருந்து சூரியன் இருக்கும் தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர்கள் என்று விஞ்ஞானம் கூறுகிறது. சரி; நாம் இப்போது சூரியன் இருக்குமிடத்தில் இல்லை. அதற்கு இணையான ஒரு இடத்தில் இருந்து நாம் கீழே பார்த்தால் நம் கண்ணுக்கு பூமி தெரியுமா என்று கேட்டால், ஒருவர் "தெரியும்' என்பார். மற்றொருவர் தெரியாது என்பார்.

இப்படி ஒவ்வொருவரும் தமது கருத்தை அறிவைப் பயன்படுத்தாமல் கூறுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் வெறும் கண்ணால் நம்மால் பூமியைப் பார்க்கமுடியாது. பூமியின் சுற்றளவு சுமார் நாற்பது லட்சத்து ஏழு ஆயிரத்து 502 கிலோமீட்டர் ஆகும். குறுக்களவு சுமார் 12,756 கோடி கிலோமீட்டர் என்று கணக்கிடப்படுகிறது. இதனை நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இவ்வளவு பெரிய பூமி, சூரியன் இருக்குமிடத்திலிருந்து பார்க்கும் போது நமது கண்ணுக்குத் தெரிவதில்லை. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென் றால், பூமிப்பந்தில் 84 லட்சம் ஜீவராசிகள்- அதாவது உயிரினங்கள் உள்ளன. இப்போது யோசியுங்கள். இத்தகைய அதிசயங்களை உள்ளடக்கிய பூமியே நம் கண்ணுக்குத் தெரியாதபோது அதிலுள்ள ஆறறிவு படைத்த மனித உருவம் கண்ணுக்குத் தெரியுமா?

Advertisment

பூமியே தெரியவில்லை எனும்போது பூமியில் வாழும் மனிதன் மறைந்தே போகிறான். இப்படிப் பார்க்கலாம். பூமி அணுவாக மாறிவிடுகிறது. பூமியில் இருக்கும் மனிதன் அணுவுக்குள் அணுவாக மாறிவிடுகி றான். இதைத்தான் திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே "அணுவில் அணுவை ஆதிப் பிராணனை' என்து திருமந்திரமாக அருளியுள்ளார். மனித உடலில் கண் மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ள அவயமாகும். கண் எப்படிப்பட்டது என்பதை மருத்துவ ஞானி திருவள்ளுவர் அருளிச் செய்துள்ளதைப் பார்க்கலாம். கண் என்பது இரக்கத்தைப் பற்றி வெளிப்படுத்துவதாகும். கண் பன்முகத் தன்மை கொண்ட ஞான உறுப்பாகும்.

"கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்

அஃதின்றேல்

Advertisment

புண்ணென்று உணரப் படும்.'

ஒருவருடைய கண்ணுக்கு அணிகலம் போல் அழகு செய்வது அவரது கண்ணோட் டமே. அந்த அணிகலம் இல்லையேல் அது புண் என்றே கருதப்படும்.

கண்ணைப் பற்றிய பழைய திரைப்பாடல் ஒன்றைப் பார்க்கலாம்.

"கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது...

அறிவை நீ நம்பு

உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும்....

பொய்யே இல்லாதது...'

கண்ணின் அறியாமையைப் போக்கும் அறிவே உயர்ந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

s

திருமந்திரச் சிற்பி திருமூலர் சொல்லி அருளிச் செய்தது "அறிவே கடவுள்' என்பதே.

அத்தகைய அறிவைக்கொண்டு ஆரோக் கியமாகவும், ஆனந்தமாகவும், சமாதானமாகவும் வாழமுடியும் என்பதே ஆகச்சிறந்த உண்மை. "கொரோனா' எனும் கிருமி மீண்டும் வருகிறது என்று கூறுகிறார்கள்.

அந்தக் கிருமியை நமது வெறும் கண்ணால் பார்க்கமுடியுமா? நுண்ணோக்கி (ஙண்ஸ்ரீழ்ர்ள்ஸ்ரீர்ல்ங்) மூலம் அக்கிருமியை கண்டறியமுடியும். நுண்ணோக்கி இல்லா மல் அந்தத் கிருமியைக் காணமுடியாது. அப்படியென்றால் அக்கிருமி இருக்கிறதா-

இல்லையா என்ற கேள்வி எழுகிறது. பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியாமல் பல லட்சம் கிருமிகள் மனித வாழ்க்கையோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன.

"கிருமி' என்று கூறுவதால் யாரும் பயப் படவேண்டாம். ஏனென்றால், எந்த கொடிய கிருமியையும் அழிக்கக்கூடிய மாபெரும் நேர்மறை (ல்ர்ள்ண்ற்ற்ண்ஸ்ங்) ஆற்றல்கொண்டதே, ஆறறிவைப் பெற்ற மனித கிருமியாகும். மனித அறிவு, திருமந்திரம் சொல்லும் அறிவைப் பயன்படுத்தினால் எந்தக் கிருமியையும் கொல்லும், வெல்லும் ஆற்றல் படைத்தது.

கண்ணுக்குத் தெரியாத கிருமியைக் கண்டு பிடிக்க நுண்ணோக்கி தேவைப்படுகிறது. "கடவுள் ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை?' என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களது மூடக் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் கடவுள் இல்லையென்றாகி விடுமா? அகக் கண்ணைத் திறக்க வேண்டாமா? அகக் கண் என்றால் என்ன? அதுதான் கடவுள் கொடுத்த நுண்ணறிவு (ஒய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ள்ங்) எனும் மிக உயர்ந்த கருவி. அந்தக் கருவிதான் நுண்ணோக்கியையே (ஙண்ஸ்ரீழ்ர்ள்ஸ்ரீர்ல்ங்) கண்டுபிடித்தது. அதற்குமுன் அந்தக் கருவி இல்லை. எந்த நவீனக் கருவியும் இல்லாமல்தான் இந்த பிரபஞ்ச இயக்கத்தை தீர்மாணித்து அறிந்து உலகிற்கு வழங்கி அருளியவர்கள் 18 சித்தர்கள் என்றால் மிகை யாகாது. என்வே மனிதனின் "நுண்ணறிவு எனும் கருவி மிக முக்கியமானது. கேள்வி இதுதான்... நுண்ணோக்கி இருக்கிறதா- இல்லையா? கிருமி இருக்கிறதா- இல்லையா? கடவுள் இருக்கிறாரா- இல்லையா? கேள்விகளுக்குப் பஞ்சமும் இல்லை; முடிவும் இல்லை. சில கேள்விகளுக்கு விடையும் இல்லை. அனைத்திற்கும் பதில்- இயற்கையுள் இருக்கும் இறைவன் உனக்கு கொடையாகக் கொடுத்த உனது மானிட உடல்... அதனுள் அதனை இயக்கும் உயிர்.

அனைத்தையும் உணர்ந்து, புரிந்து, அறிந்து, தெளிந்து மகிழ்ந்து வாழ, அவற்றுள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் நுண்ணறிவே காரணம். நுண்ணறிவு செயல் பட கல்வியறிவு மிக அவசியம்.

கல்வியறிவின் அவசியத்தைப் பற்றி திருக்குறள் கூறுவதைப் பார்ப்போம்.

"யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.'

நிரம்பக் கற்றவனுக்கு எந்நாடும் தன் நாடாம், எவ்வூரும் தன் ஊராம். அங்ஙனமிருக்கவும், ஒருவன் தான் சாகும்வரை கல்லாது காலத்தை வீணாகக் கழிப்பது ஏன்?

எனவே கல்வியறிவு மிக முக்கியம். இதனை ஒவ்வொரு பெற்றோரும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். நம் குழந்தைகள் ஒவ்வொருவரும் மாபெரும் அறிவுக்கு சொந்தக்காரர்கள். ஆனால் இந்த வருட பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் நமது மனதை மிகவும் வருத்தமடையச் செய்தது. இதற்குக் காரணம் குழந்தைகளிடமுள்ள பயம் ஒருபுறம்; மறுபுறம் அவர்களது குடும்பச் சூழ்நிலை.

இன்னொருபுறம் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லையென்பது. இன்றைய காலகட்டத்திலுள்ள குழந்தை கள் அனைவரும் திறமைசாலிகள் மட்டு மல்ல; அதிபுத்திசாலிகளும்கூட; ஆனால் தங்களுக்கான அறிவை எப்படி பயன்படுத்து வது, எவ்வாறு செயல்படுத்துவது என்பது தான் அவர்களுக்குத் தெரியாத விஷயமாக இருக்கிறது. அதனை சிறு வயது முதலே அவர் களுக்கு சரியான வகையில் கற்பித்தால் போதும்; அவர்கள் மாபெரும் உயரத்தைத் தொடமுடியும்.

உதாரணமாக, தாமஸ் ஆல்வா எடிசன். பள்ளி நிர்வாகத்தாலும், ஆசிரியர்களாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு குழந்தை. தாமஸ் ஆல்வா எடிசனுக்கு பள்ளிக் கூடமோ, கல்லூரியோ, பேராசிரியர்களோ வழிகாட்ட வில்லை. அவரது தாயாரே மிகப்பெரிய பல்கலைக்கழகமாக- வழிகாட்டியாக விளங்கினார். அவர்தான் மின்சார பல்பைக் கண்டுபிடித்ததோடு நில்லாமல் பல நூறு பொருட்களைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாகப் போற்றப்படுகிறார். திருவள்ளுவர் கூறியுள்ளதைப் பார்க்கலாம்.

"செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.'

ஒரு செயலைச் செய்கின்றவனுடைய தன்மையை முதலில் ஆராய்ந்து, பின்பு அவனால் செய்யப்படும் செயலின் தன்மையை ஆராய்ந்து, அதன்பிறகு அவன் தன்மையை யும், அவன் செயலின் தன்மைமையும் காலத் தோடு பொருந்துமாறு அறிந்து, அவை பொருந்துமானால் அவனை அச்செயலில் ஆளவேண்டும்.

இங்கே நமது குழந்தைகளின் திறமையைக் கண்டறிவதை விட்டுவிட்டு, மார்க் நிறைய எடுக்கவேண்டும் என்று மட்டுமே போதிக்கப் படுகிறது. 40, 50, 60, 100 என்ற எண்களோ எண்ணிக்கையோ என்றுமே குழந்தைகளின் வாழ்க்கையை முடிவு செய்வதில்லை. நல்ல சிந்தனையும், நல்ல எண்ணங்களுமே, நல் ஒழுக்கமும் நமது குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தையும், மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் தீர்மானிக்கும். அதற்கு இன்றைய சூழலில் அடிப்படைக் கல்வி மிக அவசியமாகும்.

கல்வியறிவு என்பது ஒரு மனிதனுக்கு காசையும் (பொருள்) காட்டும்; கடவுளையும் காட்டும். அத்தகைய கல்வியின் மாண்பையும், சிறப்பையும் திருமந்திரம் கூறுவதைப் பார்ப்போம்.

"நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்

கற்கின்ற செய்மின் கழிந்ததும் பாவங்கள்

சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்

மற்றொன் நிலாத மணிவிளக்(கு) ஆமே.'

உயிர் உடலில் இருக்கும்போதே, உலகில் உயிரோடும், உணர்வோடும் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, அழிவற்ற, என்றும் நிலையாய் இருக்கின்ற இறைவனை உணர்ந்தறியும் கல்வியைத் கற்க முயற்சி செய்யுங்கள். அப்படி செய்தால் பாவங்கள் பறந்தோடிப் போய்விடும். மனம் ஒன்றி வழிபடுங்கள் சிவப்பரம்பொருளை. இப்படி வழிபாடு செய்வோர் ஒப்பற்ற சோதி ஒளி யாகிய ஞான விளக்கொளி காணப் பெறுவர்.

கடந்த வாரம் அமெரிக்காவின் மிசிசிபி நகரத்தில் புழுதிப்புயல் மொத்த நகரையும் புரட்டிப் போட்டுவிட்டது. மாகாணம் முழுவதும் அவசரநிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. கடந்தவாரம் சீனாவில் புழுதிப் புயல். அன்பு மக்களே, நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.

உலகில் பண்பில், ஒழுக்கத்தில், அறிவில் ஆகச் சிறந்தவர்கள் நாம்தான். நாம் மூடநம்பிக்கையில் இருந்து முற்றிலுமாக விடுபட, பகுத்தறிவு பெற்று பண்பில் உயர்ந்து சிறந்து விளங்க, இறைக் கல்வியான ஞானக் கல்வியை நமது குழந்தைகளுக்கு வழங்கவேண்டும். இயற்கையை நேசித்தால், அதனுள் மறைபொருளாக இருக்கும் இறையாற்றல் எத்தகைய சூழ்நிலையிலும் நம்மை அரவணைத்துப் பாதுகாக்கும். அதற்கு எதிராக செயல்பட்டால் அதன்விளைவை பணத்தால், அதிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியாது. நம் பக்தி உதட்டளவில், பேச்சளவில் இருப்பின் அது உதவாது. நாம் செய்யும் பக்தி உளமார இருப்பின், அது ஆரோக்கிய ஆனந்த உச்சத்திற்கு நம்மை அழைத்துச்செல்லும்.

இயற்கையே இறைவன்- இறைவனே இயற்கை! இறைவனையும் இயற்கையையும் நேசிக்கவும், உணரவும்கூடிய நற்கல்வியை நாம் நமது குழந்தைகளுக்கு வழங்கவேண்டும். அப்படி வழங்கினால் நம் குழந்தைகள் ஞானக் கல்வியில் சிறந்து, இறைசிந்தனையில் உயர்ந்து, பகுத்தறிவில் தெளிந்து சமாதானமும், சமத்துவமும், அனைத்து உயிர்களின்மீது அன்பும்கொண்டு, கருணையில் சிறந்து உயர்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கிருமிகளைப் பற்றி பயம் வேண்டாம். நாம் ஏற்கெனவே இயற்கை உணவைப் பற்றி- அதாவது கிருமிகளை விரட்டக் கூடியது பற்றி எழுதியுள்ளோம். ஒரு நாளைக்கு "கபசுர குடிநீர்' உணவுக்குப்பின்பு. ஒருவேளையும், இரண்டாம் நாள் "நிலவேம்புக் குடிநீர்' உணவுக்குப்பின்பு ஒரு வேளையும் தொடர்ந்து மூன்று நாட்கள் எடுத்திக்கொள்ள நோய் எதிர்ப்பாற்றம் கூடும். கிருமிகளால் உண்டாகும் தொற்றும் குணமாகும். பயம் தேவையில்லை. அரசாங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்போம். இயற்கையுள் இருக்கும் இறைசக்தி, அசுத்த சக்திகளை அழித்தொழிக்கும். பக்தி செய்வோம்; பரம்பொருளின் சக்தியைப் பெறுவோம்.