அக்னி நட்சத்திரம் 2025 மே 4 முதல் மே 28 வரை
சித்திரை ஆரம்பிப்பதற்கு முன்னால் கடும் வெயில் அடித்தால், இன்னும் சித்திரை மாசம் ஆரம்பிக்க வில்லை. அதற்குள் அக்னி நட்சத்திரம் மாதிரி வெப்பம் கொளுத்துகிறதே என்று அங்கலாய்ப்பர்.
சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் உச்சமாவார்.
அப்படியானால் சித்திரை மாதம் முழுவதும் அக்னி நட்சத்திர காலம் அல்லது கத்தரி வெயில் காலம் என்று அமைத்திருக்க வேண்டுமே. ஆனால் நடைமுறையில் அப்படியல்ல.
சூரியன் சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் தொடங்கி, கார்த்திகை நட்சத்திரத்தில் பயணித்து, ரோகிணி 2-ஆம் பாதத்தில் முடியும்போது, அக்னி நட்சத்திர பயணம் பூர்த்தியாகும்.
சித்திரை மாதம் சூரியன், மேஷ ராசியில் உச்சமாவார். கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியன் சார நட்சத்திரம். அப்படி எனில், இந்த கார்த்திகை நட்சத்திரத்தில் செல்லும்போது மட்டும் தானே, வெயில் கொளுத்தவேண்டும்.
சித்திரை 21-ல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
அன்று பரணி, 3-ஆம் பாதம் ஆரம்பிக்கிறது. பரணி நட்சத்திரம் என்பது சுக்கிர சார நட்சத்திரம். பரணி 3-ஆம் பாதம் எனில் சூரியன் அம்சத்தில் நீசமடையும் கால கட்டம் ஆகும். நீசமடையும் சூரியன் வெகு கோபப்படுகிறாரோ என்னவோ,
உடனே வெப்பத்தால் ஜனங்களை சுட்டெரிக்க ஆரம்பித்துவிடுகி றார். அடுத்து பரணி 4-ஆம் பாதம் எனில் அது செவ்வாய் அம்சம். அங்கும் கோபம் தனிய வாய்ப்பில்லை.
அடுத்த தனது சொந்த நட்சத் திரத்தின் கார்த்திகையில் பிரவேசம். விடுவாரா சூரியன். இருப்பதோ உச்ச வீடு. சும்மா கொளுத்தி தள்ளிவிடுவார்.
அடுத்து ரோகிணி நட்சத்திரத்திரம் 1-ஆம் பாதம் நுழைந்துவிடுவார். அது மேஷ ராசியின் செவ்வாய் அம்சம். அடுத்து ரோகிணியின் 2-ஆம் வீடு. அப்போது சூரியன் ராசி, அம்சம் இரண்டிலும் வர்க்கோத்தமம் பெறுவார். அப்பாடா, ஒருவழியாக நம்ம சூரியன் 24 நாட்கள், தமிழ்நாட்டு மகா ஜனங்களை காய வைத்துவிட்டு பின் ஓய்வார்.
அது சரி, இதென்ன 24 நாள் கணக்கு என்கிறார் களா? சூரியன் ஒரு நட்சத்திர பாதத்தை கடக்க மூன்று நாட்கள் எடுத்துக்கொள்கிறார். அப்படி பார்க்கும்போது,
பரணி, 3, 4-ஆம் பாதம்- 6 நாட்கள்
கார்த்திகை 4 பாதம்- 12 நாட்கள்
ரோகிணி 1, 2 பாதம் 6 நாட்கள்
மொத்தம் 24 நாட்கள்
அக்னி நட்சத்திர காலத்தில் சுப விஷயங்களை விலக்கும்படி கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ராஜ கிரகமான சூரியன் மிக கடுமையாக இருக்கும்போது, சுப விஷயம் நடத்துவது நல்லதில்லை என்பர்.
இக்காலங்களில் சிவ-ங்கத்துக்கு நீர் தாரை கலசம்மூலம், எப்போதும் தண்ணீர் விழும்படி செய்வார்கள்.
உங்கள் ஜாதகத்தில் சூரியன் நீசமாகி இருந்தாலும், 6, 8, 12-ல் மறைந்திருந்தாலும், பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும், இந்த அக்னி நட்சத்திர நாட்களில் குடிக்க தண்ணீர் தானம் செய்வது, வெட்டிவேர் வாங்கிக்கொடுப்பது, பானைகளில் தண்ணீர் நிரப்புவது, பறவைகள், மிருகங்களுக்கு குடிக்க, நீர் வைப்பது, பசுக்களுக்கு நீர் வசதி செய்து கொடுப்பது, நீர் சத்து பழங்களான தர்பூசணி, நுங்கு போன்றவையை வாங்கி பிறருக்கு கொடுப்பது, தர்பூசணி விளைவிக்கும் விவசாயிகளுக்கு உதவு வது என உங்களால் முடிந்த நீர் ஆதாரம் சார்ந்த உதவிகளைச் செய்யுங்கள்.
இந்த உதவிகளால் சூரிய பகவான் மிக மகிழ்வார். சூரியன் மகிழ்ந்தால் ஈசனே மகிழ்ந்த மாதிரி அல்லவா! 2025 சித்திரை 21 மே 4-ஆம் தேதி ஆரம்பித்து வைகாசி 14 மே 28-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் முடியும்.
-ஆர். மகா