மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஆட்சியாக இருக்கிறார். அவர் 4, 7, 8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். பூமி, வீடு, வாகனவகையில் முன்னேற் றங்கள் உண்டாகும். கணவன்- மனைவிக்கிடையே வாக்கு வாதம் வந்தாலும் ஒற்றுமை யிலும் குறைவு ஏற்படாது. ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் தம்பதிகளுக் கிடையே கருத்து வேறு பாடு உருவாவதற்குக் காரண மாக அமையும். மனதில் எதிர்காலம் பற்றிய கற்பனை பயத்தை ராகு ஏற்படுத்து வார். 12-ல் குரு ஆட்சிபெற்று அவரும் 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். மனசஞ்சலம் உண்டாகும். 22-ஆம் தேதி முதல் குரு வக்ரமாகிறார். செலவுகளும் சற்று அதிக மாகக் காணப்படும். தகப்ப னார்வழியில் சச்சரவுகள் தோன்றி மறையும். முருகப்பெருமானின் வேலுக்குப் பாலாபிஷேகம் செய்யவும். சண்முக பதிகம் பாராயணம் செய்யவும்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். (13-ஆம் தேதிவரை). 11-ல் குரு ஆட்சி. 12-ல் செவ்வாய் ஆட்சி. 2-ல் புதன் ஆட்சி. 9-ல் சனி ஆட்சி. இத்தனை கிரகங்கள் ஆட்சிபெற்றும் காரிய சித்திகளை சந்திக்க முடியவில்லையே என்ற வருத்தமும் கவலை யும் மனதில் இருந்துகொண்டிருக்கிறது. என்றாலும் 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்துகிறது. வண்டி பழுதானாலும் ஓட்டம் நிற்காமல் ஓடுவதுபோல செயல்பாடுகள் இயங்கிக் கொண்டு இருக்கும். 11-க்குடைய குரு 3-ஆமிடத்தைப் பார்க்கிறார். எதையும் சமாளிக்கும் ஆற்றலும் தைரியமும் உண்டா கும். சகோதர சகாயம் ஒருபுறம் ஒத்துழைப்பு தரும். 22-ஆம் தேதிமுதல் குரு வக்ரத்தில் உக்ரபலம். தொழிலில் லாபம் ஏற்படும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் லட்சுமி நாராயணரை நெய்தீமேற்றி வழிபடவும்.

Advertisment

மிதுனம்

இம்மாதம் 12-ஆம் தேதிவரை மிதுன ராசிநாதன் புதன் ஆட்சி. அட்டமத்துச்சனி நடந்துகொண்டிருப்பதால் கிணற்றில் போட்ட கல்மாதிரிதான் ஒவ்வொரு செயல் பாடும் அமைகிறது. 10-ல் குரு ஆட்சிபெற்று 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். தொழிலிலும் வருமானத்திலும் குறையில்லை என்றாலும் நிறைவும் ஏற்படாது. அதாவது வரவும் உண்டு. வரவைவிட செலவும் அதிகமாகக் காணப்படும். 22-ஆம் தேதிக்குப்பிறகு குரு வக்ரமாவதால் வேலை உத்தியோகம், தொழில் இவற்றில் முன்னேற்றம் காணலாம். 5-ஆமிடத்துக் கேது மனதில் வகுத்த திட்டங்களை செயல்படுத்துவதில் சற்று தாமதத்தை ஏற்படுத்துவார். உடன்பிறந்த சகோதர- சகோதரிவகையில் கருத்து வேறுபாடு, சொத்துத் தகராறு முதலியவற்றை சந்திக்கநேரும். பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமி யையும் ஆரணவல்- அம்மனையும் வழிபடவும்.

கடகம்

Advertisment

கடக ராசிக்கு 11-க்குடைய சுக்கிரனும் ஆட்சி. 10-ல் செவ்வாயும் ஆட்சி. வாழ்க்கை, தொழில் இரண்டிலும் திருப்தியான சூழல் உருவாகும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஒருசில நேரங்களில் சிப்பந்திகள் பிரச்சினை மனதில் கலக்கத்தை ஏற்படுத்தினாலும், 9-ல் குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்ப்பதால் அவற்றை சமாளித்து வெற்றி பெறலாம். எதுவும் சுலபமாக கிடைத்துவிட்டால் அதனருமை புரியாதல்லவா! சற்று போராடி பிறகுதான் வெற்றி என்ற அடிப்படையில் செயல்பாடுகள் அமையும். பூர்வீக சொத்து சம்பந்தமாக உடன்பிறப்புகளோடு பனிப் போர் நிலவலாம். ஒரு முடிவற்ற நிலையாக ஓடிக்கொண்டிருக்கும். இந்த மாதக் கடைசியில் ஒன்றுகூடிப் பேசி நல்ல தீர்வு அமைவதற்கான வழிவகைகள் ஏற்படும். மதுரை- திருப்பரங்குன்றத்தில் திருக்கூடல் மலையில் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியை வழிபடவும்.

rasipalan

சிம்மம்

இம்மாதம் முற்பாதிவரை சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் இருக்கிறார். தொட்டது துலங்கும். பட்டது துளிர்க்கும். காரிய ஜெயம் உண்டாகும். தொழிலில் அனுகூலமும் தென்படும். 8-ல் குரு மறைந் தாலும் ஆட்சியென்பதால் மறைவு தோஷம் பாதிக்காது என்பது நீங்கள் அறிந்ததே! எனினும் அவர் 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் விரயங்கள் ஏற்படுவதையும் தவிர்க்கமுடியாது. அதேசமயம் குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தனவரவும் இருக்கும். இறைக்கிற கிணறு ஊறும் என்பது போல! 5-க்குடையவர் 8-ல் இருப்பதால் பிள்ளைகள்வகையில் நடைபெறவேண்டிய நல்லவை தள்ளிப்போகும். அது மனதில் கவலையை உண்டுபண்ணும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையில் பாதிப்பு ஏற்படாது. காரிய நிவர்த்திக்கு லட்சுமி நரசிம்மருக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சி. அவருடன் சூரியனும் இணைந்திருக்கிறார். அரசு சம்பந்தப்பட்டவகையில் அனுகூலம் உண்டாகும். அரசுவகையில் எதிர்பார்த்துக் காத்திருந்த உதவிகள் தற்போது கிடைக்கும். ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் திறமை, ஆற்றல் நன்றாக செயல்படும். என்றாலும் 2-ஆமிடத்துக் கேது குடும்பத்தில் ஒருவித குழப்பத்தை உண்டு செய்யலாம். கணவன்- மனைவிக்குள் வாக்கு வாதம், பொருளாதார சிரமங்களை ஏற்படுத் தலாம். 7-ல் குரு ஆட்சி. திருமண வயதை எட்டிய ஆண்- பெண் களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். தாய்மாமன்வகையில் அனுகூலம் உண்டாகும். ஜனன ஜாதகத்தில் ராகு- கேது சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடைபெற்றால் காரிய தாமதம் ஏற்படலாம். புதன்கிழமைதோறும் சக்கரத்தாழ்வாரை வழிபடவும்; ஜெயம் உண்டாகும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந்தா லும் ஆட்சிபெறுகிறார். 13-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 9-ல் திரிகோணம் பெறுகிறார். மாத முற்பாதிவரை எந்த ஒரு முயற்சியும் முழுமைபெறாத நிலையாக இருந்தாலும் ராசிநாதன் 9-ல் திரிகோணம் பெற்று சூரியனுடன் சம்பந்தம் பெறுகிறார். எனவே, நிலுவையில் இருந்த செயல்பாடுகள் நிறைவு பெறும். எனினும் உங்களது முயற்சியில் இருக்கும் ஆர்வம்தான் அவற்றைத் தீர்மானிக் கும். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். முயற்சிப்பவருக்கே இறைவனும் துணை நிற்பார். சூரியன் 10-ல் மாறியபிறகு வாழ்க்கை, தொழிலில் நல்ல ஒரு திருப்பம் உண்டாகும். 9-க்குடைய புதன் 10-ல் மாறி தர்மகர்மாதிபதி யோகத்துடன் நல்லனவற்றை நடத்தித் தருவார். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் லட்சுமி நரசிம்மருக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் ஆட்சி. ராசியையும் பார்க்கிறார். 7-ல் குரு ஆட்சிபெற்று அவரும் ராசியைப் பார்க்கிறார். இவையெல்லாம் ஒரு ப்ளஸ் பாயின்ட்டாக அமைந்தாலும் கிணற்றில் போட்ட கல்மாதிரி எந்த ஒரு "மூவ்மென்ட்டு'ம் இல்லாத மாதிரியான நிலையை சந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். 10-க்குடைய சூரியன் 17-ஆம் தேதிமுதல் 9-ல் மாறி தர்மகர்மாதிபதி யோகம் பெறுகிறார். வாழ்க்கை, தொழில் இரண்டிலும் ஒரு முன்னேற்றகரமான மாற்றத்தை சந்திக்கலாம். குருவும் சூரியனைப் பார்ப்பார். ஜனன ஜாதகத் தில் பாதகமான தசாபுக்திகள் நடைபெற்றால் சிலர் தொழிலையும் ஊரையும் விட்டு வேறொரு இடத்துக்கு மாறும் சூழல் உருவாகும். சாதகமான தசாபுக்திகள் நடைபெற்றால் உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஏற்படலாம். செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு அரளிமாலை சாற்றி வழிபடவும்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 4-ல் ஆட்சி; கேந்திரபலம். வீடு, வாகனம், மனைவகையில் நற்பலனும் முன்னேற்றமும் காணப்பட்டாலும் நடந்துகொண்டிருக்கும் ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி (2-ஆமிடத்தில் சனி)- குடும்பத்தில் ஒரு நிம்மதியற்ற சூழ்நிலையையும் மனதில் தன்பயத்தையும் ஏற்படுத்தி மனக்கவலை களை உண்டுபண்ணலாம். அவற்றை விலக்க தன்னம்பிக்கையும் தைரியமும் தேவை. அதை வரவழைத்து வெற்றிபெறும் முயற்சியில் இறங்குங்கள். உங்களுக்கு நல்லது செய்தாலும் அதை சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் நம்பிக்கை வையுங்கள். 5-ஆமிடத்து ராகு மனக்குழப்பத்தை ஏற்படுத் துவதோடு செவ்வாயும் அங்கு அமர்வதும் இதற்கு ஒரு காரணம். தேகநலனில் அக்கறை காட்டுவது அவசியம். சனியின் தாக்கம் குறைய காலபைரவருக்கு மிளகுதீபமேற்றி வழிபடவும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி ஜென்மத்தில் ஆட்சி, வக்ரம். வக்ரத்தில் உக்ரபலம். 3-ல் குரு ஆட்சி. 4-ல் செவ்வாய் ஆட்சி. ராகுவும் சேர்க்கை. ஏழரைச்சனி நடந்துகொண்டிருந்தாலும் ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்திகள் நடந்தால் உத்தியோகத்தில் உயர்வு, விரும்பிய இடமாற்றம், ஊதிய உயர்வு போன்ற பலன் களை சந்திக்கலாம். செவ்வாய் ஆட்சி பெறுவதால் மனை அல்லது வீடுவகையில் விற்பனைக்கான திட்டங்கள் நிறைவுபெறலாம். நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் இழுபறியாக இருந்த வீடு, மனை விற்று கணிச மான தொகை கைக்கு வரலாம். அதைத் தொழில் முதலீட்டுக்காகவும் செயல்படுத்த லாம். உடன்பிறந்தவகையிலோ அல்லது பங்காளிவகையிலோ உதவியும் ஒத்தாசை யும் அமையும். ஒற்றுமையும் பலப்படும். சனிக் கிழமை ஆஞ்சனேயருக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச் சனி- வக்ரம். வக்ரத்தில் உக்ர பலம். என்றா லும் 2-ல் குரு ஆட்சிபெறுவதால் பொருளா தாரத்தடை விலகும். தாராள வரவு- செலவுகள் அமையும். 3-ல் செவ்வாய் ஆட்சி. சகோதர- சகோதரி வழியில் நன்மைகளும் சுபகாரியச் செலவுகளும் ஏற்படும். 17-ஆம் தேதிமுதல் 7-க்குடைய சூரியன் 6-ல் மறைவு. தகப்பனாருக்கு தேகநலனில் வைத்தியச் செலவுகள் உண்டாகலாம். எனினும் குரு 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் பாதிப்புக்கு இடம் நேராது. கடன் அதிகமாகும். 5-க்குடைய புதன் 6-ல் மறைகிறார். (12-ஆம் தேதிமுதல்). வீண் அலைச்சல், மனக்குழப்பம் போன்றவையும் உருவாகும். வேலை அல்லது உத்தியோகத்தில் முன்னேற்றத்தை எதிர் பார்க்கலாம். ஒருசிலருக்கு பதவி உயர்வு தள்ளிப்போகலாம். காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

மீனம்

ஜென்ம ராசியில் குரு ஆட்சி. 2-ல் செவ்வாய் ஆட்சி. 3-ல் சுக்கிரன் ஆட்சி. 4-ல் புதன் ஆட்சி. ஆக, இத்தனை ஆட்சிபெற்ற கிரகங்கள் இருந்தும் பெரிய நன்மையை எதிர்பார்க்க முடியவில்லை. நடக்கவும் இல்லை என்பது மனதில் பெரிய வருத்தமாக இருக்கிறது. 11-ல் சனி ஆட்சி, வக்ரம் என்ப தால் ஒரு சிலருக்கு தொழிலில் முன்னேற்றம், உயர்வு ஏற்பட்டது என்று சொல்லலாம். ஆனால் ஒருசிலருக்கு தொழிலில் கெட்ட பெயரையும், வாக்கு நாணயத்தைக் காப்பாற்றமுடியாத சூழ்நிலைகளையும் சந்திக்கவைத்து ஓடி ஒளிய வைக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. 2-ஆமிடத்து ராகு குடும்பக் குழப்பங்களைத் தருகிறார். என்றா லும் குரு நல்ல இடங்களைப் பார்ப்பதால் தலைக்கு வந்ததை தலைப்பாகையோடு போன மாதிரியான நிலையும் அமையும். சித்தர்களின் ஜீவசமாதியை வழிபடவும்.