மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதத் தொடக்கத்திலேயே 10-ஆம் வீடான மகர ராசியில் உச்சம்பெறுகிறார். 10-க்குடைய சனி 11-ஆம் வீட்டில் ஆட்சி. 13-ஆம் தேதிவரை 5-க்குடைய சூரியன் 10-ல் சஞ்சாரம். எனவே கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி என்று சொல்வதுபோல உங்கள் காரியங்களிலும் முயற்சிகளிலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தென்படும். அரசு ஊழியர்களுக்கு சங்கடங்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். செய்தொழிலிலும் வெற்றி ஏற்படும். 13-ஆம் தேதிக்குப்பிறகு சூரியனும் 11-ல் லாபஸ்தானத்தில் மாறுகிறார். வீண் கற்பனை பயம் அகலும். 3-க்குடைய புதன் சூரியனுடன் இணைவதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஜென்ம ராசியில் குரு நின்றாலும் 5, 7, 9-யைப் பார்ப்பதால் ஒரு அனுகூலம் ஏற்படும். ஒரு சிலநேரம் குரு அதிக புலம்பல்களையும் தருவார். எல்லாமிருந்தும் எதுவுமில்லாத நிலைபோல வெற்றிடமாகத் தோன்றும். எனினும் 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு சங்கடத்தைத் தந்தாலும் முடிவில் சலனத்தைப் போக்குவார் என்று எதிர்பார்க்கலாம். ராகு தசாபுக்தி நடப்பவர்களுக்கு காரியங்கள் தாமதமாகும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கையம்மன் தரிசனம் பலன்தரும். நெய்தீபமேற்றி வழிபடவும்.

ரிஷபம்

Advertisment

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் இம்மாத முற்பாதிவரை 8-ல் மறைவு. 12-ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 8-ஆமிடத்திற்கும் அங்கு நிற்கும் சுக்கிரனுக்கும் கிடைக்கிறது. எந்த ஒரு செயலையும் முழுமையாக முடிக்கமுடியாத நிலைகளை சந்திக்க நேரும். உப்பு விற்க போனால் மழை பெய்வதும், மாவு விற்க போனால் பலமான காற்று வீசுவதும் என்ற பழமொழிக்கிணங்க சங்கடத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சூழல்! 9-க்குடைய சனி 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் என்று ஒரு புறம் ஆறுதல் அடைந்தாலும் 10-ல் சனி பதிமாறச் செய்யுமல்லவா! ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்தி நடப்பவர்களுக்கு நிலையில்லாத வேலையும் நிரந்தரமற்ற வருமானமுமாக பொழுது ஓடுகிறது. மாத பிற்பாதியில் சுக்கிரன் 9-ல் சஞ்சாரம் பெறுகிறார். அங்கு 12-க்குடைய செவ்வாய் 9-ல் உச்சம். பூமி, மனைரீதியாக சில விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுபவிரயமாக மாற்றும் திறனை மேற்கொள்வது அவசியம். 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு புதிய வீடு கட்டும் முயற்சியில் இறங்குபவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். கடன்மூலம் புதிய மனை வாங்கும் அமைப்புகளையும் உருவாக்கிக் கொள்ளலாம். வாழ்க்கைமீது ஒரு வெறுப்பாக உணர்ந்தாலும் 11-ல் உள்ள ராகு கடைசி நேரத்தில் பாதிக்கும்மேல் தேவைகளை நிறைவேற்றுவது ஒரு ஆறுதல்!

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்

Advertisment

மிதுன ராசிநாதன் புதன் மாத முற்பாதிவரை 8-ல் மறைகிறார். அவர் 4-க்குடைய வரும் என்பதால் மறைவு பெரிய பாதிப்புகளைத் தராது என்று எதிர்பார்க்கலாம். உடல்நலத்தில் அவ்வப்போது ஆரோக்கியத் தொல்லைகள் வந்து விலகும். 11-ல் உள்ள குரு காரிய ஜெயத்தைத் தருவார். அதேசமயம் போராடித்தான் செயல்பட நேரிடும். 11-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவு. உச்சமும் பெறுகிறார். வாகனவகையில் திடீர்செலவுகள் உண்டாகும். 13-ஆம் தேதிவரை சுக்கிரன் 7-ல் சஞ்சாரம். பொதுவாக களஸ்திர காரகன் களஸ்திர ஸ்தானத்தில் இருப்பது தோஷம் என்றாலும் இங்கு 7-க்குடைய குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பது பலம்தான். திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு நீங்கள் எடுக்கும் கல்யாண முயற்சிகள் கைகூடும். 5-ஆமிடத்தை குரு பார்ப்பதால் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, பிள்ளைகளால் ஆனந்தம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். 10-ல் ராகு தொழில், உத்தியோகம் போன்றவற்றில் நன்மைகளைத் தருவார். 3-க்குடைய சூரியன் 13-ஆம் தேதிவரை 8-ல் மறைவு. தகப்பனாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அல்லது கருத்து பூசல்கள் உண்டாகலாம். 3-ஆமிடத்தை குரு பார்ப்பதால் உடன் பிறந்தவர்களிடையே நிலவிய தொல்லைகள் குறையும்; செலவுகளும் ஏற்படும்.

பரிகாரம்: புதன்கிழமைதோறும் சக்கரத்தாழ்வாரை நெய்தீபமேற்றி வழிபடவும்.

கடகம்

கடக ராசிக்கு அட்டமத்துச்சனி நடந்துகொண்டிருக் கிறது. தேவையற்ற வீண் கற்பனை, மனபயம், மனச்சங்கடம் போன்றவற்றை நினைத்து மனதில் கவலைகளை சுமந்துகொள்ள நேரலாம். இங்கு சனி அவரது சொந்த வீடான கும்பத்தில் ஆட்சியாக இருப்பதால் மேற்படி உள்ள விஷயங்களில் பெரிய பாதிப்புகளைத் தரமாட்டார் என்று நம்பலாம். இயற்கையில் சனி பாவகிரகம்தான் என்றாலும் அவர் நியாயவாதி. நாம் செய்யும் நன்மை- தீமைகளுக்குத்தான் அவர் பலன்களைத் தருவாரே தவிர காரண காரியமில்லாமல் யாரையும் தண்டிக்கமாட்டார். அதுதான் காரணமில்லாமல் காரியமில்லை; காரியமில்லாமல் காரணமில்லை என்று சொல்வார்கள். இம்மாதம் 4-ஆம் தேதிமுதல் 10-க்குடைய செவ்வாய் 7-ல் உச்சம்பெற்று 10-ஆமிடத்தையேப் பார்ப்பதால் உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகை உண்டு. செய்தொழில் முயற்சிகளிலும் நன்மைகள் ஏற்படும். வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்போருக்கு ஜனன ஜாதகத்தில் சாதகமான தசாபுக்தி நிலவினால் முயற்சி கைகூடும். அல்லது இருக்கும் வேலையைவிட்டு வேறு வேலைக்கு மாற்றம் உண்டாகும். ஒருசிலருக்கு குடியிருப்பு வகையில் இடமாற்றம் ஏற்படலாம். 13-ஆம் தேதிமுதல் 2-க்குடைய சூரியன் 8-ல் மறைந்தாலும் குரு 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் ஓரளவு பணப்புழக்கத்திற்கு இடமுண்டு.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபாடு செய்யவும்.

rasipalan

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் 13-ஆம் தேதிவரை 6-ஆமிடத்தில் சஞ்சரிக்கிறார். 6-ஆமிடம் மறைவு ஸ்தானம். 2-க்குடைய புதனும் சூரியனுடன் இணைந்து மறைந்தாலும் மறைந்த புதன் நிறைந்த தனம் என்பதுபோல வரவுக்கும் செலவுக்கும் குறைவிருக்காது. ஆனால் சேமிப்பு என்பதற்கும் வழிவகை அமையாது. வருவாய் எல்லாம் செலவுகளுக்கே சரியாகிவிடும். குரு ராசியைப் பார்க்கும் காரணத்தால் உங்கள் முயற்சியில் தொய்விருக் காது என்றாலும் பலன் தாமதப்படலாம்; தடையாகாது. பாக்கியாதிபதி செவ்வாய் 6-ல் உச்சம்பெறுகிறார். அவர் 4-ஆமிடத்துக்கும் உரியவர். பூமி, மனை சம்பந்தப்பட்ட தொழில்துறையினருக்கும், கட்டடம் கட்டும் தொழில்துறையினருக்கும் நற்பலன்கள் ஏற்படும். 3-க்குடைய சுக்கிரன் 5-ல் நின்று குருவின் பார்வையைப் பெறுகிறார். புதிய வாகனம் வாங்க முனைவோருக்கு பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். உடன்பிறந்தவர்களினால் மனக்கசப்பு விலகி ஒற்றுமை ஏற்படும். எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்வதன்மூலம் வெற்றிகாணலாம். 7-ல் சனி கண்டகச் சனி. ராசிக்கு சனியின் பார்வை. வீடு மாற்றம் ஏற்பட இடமுண்டு. கணவன் அல்லது மனைவிக்கு தேக சுகம் பாதிக்கப்படலாம். வைத்தியச்செலவு ஏற்பட்டு விலகும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு செம்பருத்தி பூ மாலை சாற்றி வழிபடவும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 13-ஆம் தேதிவரை 5-ஆமிடமான மகர ராசியில் சஞ்சாரம். அவருடன் 3, 8-க்குடைய செவ்வாயும் இணைந்து சஞ்சாரம். திரிகோணமும் பெறுகிறார்கள்.

மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். அதேசமயம் உடல்நலத்தில் அலைச்சல்கள் அதிகமாகக் காணப்படும். அதனால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். ஜென்ம கேது சப்தம ராகு ஒரு நேரம் சுறுசுறுப்புடன் செயல்பட்டாலும் ஒரு நேரம் மந்தமாகக் காணப்படுவீர்கள். ஜென்ம கேதுவும் அதற்கு ஒரு காரணம். 2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தனவரவைத் தந்தாலும் 12-ஆமிடத்தைப் பார்ப்பதன்மூலம் விரயத்தையும் தருவார். சனி 6-ல் ஆட்சி என்பது ஒரு பலம். மறைமுக போட்டி, பொறாமைகள் விலகும். கடன் ஏற்பட்டாலும் அது சுபக்கடனாகவும் அமையும். 2-க்குடைய சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதோடு 4-க்குடைய குருவின் பார்வையைப் பெறுகிறார். தாய்சுகம் நன்றாக விளங்கும். பூமி, மனைவகையில் முதலீடுகள் ஏற்படும். மேற்கூறிய கடன் யோகமும் அதற்கான முறையில் அமைவதால் மனபயம் அகலும். கடன் பற்றிய கவலை விலகும். 7-ல் ராகு நிற்பதால் திருமண வயதையொட்டிய ஆண்- பெண்களுக்குத் திருமணத் தாமதம் ஏற்படலாம். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.

பரிகாரம்: ஜென்ம கேது என்பதால் தினந்தோறும் விநாயகரை வழிபட்டு, விநாயகர் அகவல் பாராயணம் செய்யவும்.

துலாம்

துலா ராசிக்கு குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் சுக்கிரன் 3-ல் நின்று குருவின் பார்வையைப் பெறுகிறார். எந்த ஒரு ஜாதகத்திலும் குரு ராசியைவோ அல்லது ராசிநாதனையோ பார்ப்பது ஒரு பலம். எனவே இங்கு அந்தப்பலம் கிடைக்கிறது. சகோதரவகையில் சகாய நன்மைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு ஏற்படும். சொல்லுக்கும் மரியாதை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளினால் பாராட்டும் ஏற்படும். தற்கா-கப் பணியில் உள்ளவர்களுக்கு இடமாற்றத்தினால் பணி நியமனம் உண்டாகும். புதிய நண்பர்கள் தொழி-ல் இணைந்து செயல்படுவார்கள். கூட்டு முயற்சிகள் கைகொடுக்கும். 7-ல் உள்ள குரு வாழ்க்கைத் துணைவகையில் வேலைக்காக எடுத்த முயற்சிகள் அனுகூலம் தரும். 2-க்குடைய செவ்வாய் 4-ல் உச்சம்பெறுகிறார். புதிய வாகனம் வாங்கும் அமைப்புகள் பலன்தரும். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூ- தரும்' என்ற குறளுக்கேற்ப உங்கள் விடாமுயற்சியினால் வெற்றிவாகை சூடலாம். 12-ல் உள்ள கேது வெளிநாட்டு வர்த்தகத் தொடர்புக்கு துணைபுரிவார். 5-ல் சனி ஆட்சி திட்டங்களை சரியாக செய்தால் பலனும் சரியாக அமையும்.

பரிகாரம்: சேலம் மற்றும் மேட்டூர் பாதையில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் 4-ஆம் தேதிமுதல் 3-ல் உச்சம்பெறுகிறார். செவ்வாய்க்கு வீடுகொடுத்த சனி 4-ல் ஆட்சி. ராசிநாதன் உச்சம்பெறுவதால் தொட்ட காரியத்தில் வெற்றி எதிர்பார்க்கலாம். 10-க்குடைய சூரியனும் அங்கு நிற்பதால் தொழில்ரீதியாக எடுத்த முயற்சி லாபம் தரும். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். என்றாலும் செவ்வாய் 6-க்குடையவர் என்பதால் ஒருசில விஷயங்களில் கடன் வாங்கி செயல்பட நேரிடும். 7-க்குடைய சுக்கிரன் 2-ல் குருபார்வையைப் பெறுவதால் கணவன்- மனைவிவழியில் உதவி, ஒத்தாசைகள் ஏற்படும். இன்னும் ஒருசில கணவன்களுக்கு மனைவியின் மூலம்தான் தனவரவும் ஏற்படும். 2-க்குடைய குரு 6-ல் மறைவதால் பொருளாதாரத்தில் அவ்வப்போது தட்டுப்பாடு சூழ்நிலைகளையும் சந்திக்கலாம். 11-க்குடைய புதன் 3-ல் ராசிநாதனோடு இணைகிறார். மூத்த சகோதரர்களாலும் அனுகூல நன்மைகள் உண்டாகும். 13-ஆம் தேதிமுதல் புதன், சூரியன், சனியுடன் சேர்க்கை. அக்காலகட்டம் தொழில், வேலை இவற்றில் மத்திமப் பலன்களைச் சந்திக்க நேரும். உயரதிகாரிகளுக்கு பொறுப்புகளும் கூடுதலாக அமையும். 12-க்குடைய சுக்கிரன் 2-ல் இருக்கும் காலம், அந்நிய தனம் உங்கள் கையில் புரளும்.

பரிகாரம்: பொன்னமராவதி, புதுக்கோட்டை பாதையில் செவலூர் பூமிநாத சுவாமியையும், ஆரணவல்-யம்மனையும் வழிபடவும்.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு 5-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனே ராசியைப் பார்ப்பது சிறப்பு. பத்து பதினைந்து பேர் கொண்ட குழுவில் உங்கள் செயல்பாடும், நுண்ணறிவும் தனித்துவமாகத் தெரியும். உங்களுக்கென்று தனி மரியாதை உண்டாகும். 12-க்குடைய செவ்வாய் 2-ல் உச்சம் பெறுகிறார். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். தாராள வரவு- செலவு உண்டாகும். சேமிப்புக்கும் இடமுண்டு. 4-ல் உள்ள ராகு அவ்வப்போது தேகநலனில் சிறுசிறு வைத்தியச் செலவுகளை உண்டு செய்வார். தாயார் நலனிலும் அக்கறை காட்டுவது அவசியம். 13-ஆம் தேதிமுதல் 9-க்குடைய சூரியனும், 10-க்குடைய புதனும் ஒன்றுகூடி 3-ல் இணைவது தர்மகர்மாதிபதி யோகமாகும். யாரையும் எதிர்பாராமல் தனியாக நின்று காரியத்தை சாதிப்பீர்கள். ஏழரைச்சனி நிவர்த்திக்குப் பிறகு உங்கள் காட்டில் மழை பெய்யும். 3-ல் சனி ஆட்சி என்பதால் தைரியம் தன்னம்பிக்கைகளைத் தருவார். 10-ல் உள்ள கேதுவும் அவரைப் பார்க்கும் ராகுவும் மருத்துவத்துறையினருக்கு அனுகூலமான அமைப்பைத் தருவார்கள். உடன் பிறந்தவகையிலும் அனுகூலம் ஆதரவை எதிர்பார்க்கலாம். 11-ஆமிடத்தை குரு பார்ப்பதால் காரிய ஜெயம் ஏற்படும்.

பரிகாரம்: வியாழக்கிழமைத்தோறும் நவகிரகத்திலுள்ள குருபகவானை வழிபடவும்.

மகரம்

மகர ராசிக்கு 2-ல் சனி. ஏழரைச்சனியில் பாதச்சனி நடக்கிறது. 12-க்குடைய குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் விரயங்களைத் தவிர்க்க இயலாது. என்னதான் கணக்குப்போட்டு செலவழித்தாலும் எதிர்பாராத திடீர் செலவுகளை சமாளிப்பது கடினமாகும். 2-க்குடையவர் 2-ல் ஆட்சி. இருந்தாலும் அதற்கேற்றவகையில் தனவரவில் பற்றாக்குறை நிலவுகிறது. 4-ல் சஞ்சரிக்கும் குரு வீடு மாற்றத்தை உண்டு செய்யலாம். அல்லது பூமி, வீடு சம்பந்தமான முயற்சிகளில் கிரய அனுகூலம் ஏற்படலாம். கடந்த மாதம் தடைப்பட்ட சில காரியங்கள் இம்மாதம் நன்மை தரும்விதமாக அமையும். 10-க்குடைய சுக்கிரன் 12-ல் மறைவு. ஒருசிலருக்கு உத்தியோக மாற்றம் நிகழும். ஒருசிலருக்கு வெளியூர் அல்லது வெளிமாநில வேலைகளுக்கு வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டு முயற்சியும் கைகூடும். இந்த ஏழரைச்சனியில் சந்திர தசை அல்லது சந்திர புக்தி நடப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனமுடனும் இருப்பது அவசியம். பொருட்சேதங்கள் அல்லது இழப்புகள் உண்டாக நேரலாம்.

பரிகாரம்: அப்படிப்பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவ-ங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்து வழிபடவேண்டும். ஏழரைச்சனி நடப்பதால் சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. பொதுவாக ஜென்மச்சனி சீரழிக்கும் என்பது ஜோதிடவிதி. ஆனால் இங்கு ராசிநாதன் என்பதால் மற்ற ராசிகளைப்போல் உங்களை வாட்டி வதைக்க மாட்டார். கொஞ்சமாவது கருணை காட்டுவார். எனவே எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. 2-ல் ராகு. குடும்பத்தில் எப்போதும் ஒரு படபடப்பு. அவசரத்துடன் செயல்படநேரிடும். அதனால் தேகம் நலத்தில் சௌகரியக்குறைவு ஏற்படலாம். எனவே தேவையற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தாமலும் எண்ணாமலும் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். 3-ல் குரு நின்று 7-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் 7-க்குடைய சூரியன் 13-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசிக்கு மாறி அவரும் 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் திருமண யோகம் உண்டாகும். அதன்மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். 10-க்குடைய செவ்வாய் 12-ல் உச்சம்பெறும் காலகட்டம் விரயம் அதிகரிக்கலாம். தொழில்ரீதியாக சில முதலீடுகள் ஏற்படும். அதற்கு கடன் வாங்கும் அவசியமும் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் தொல்லைகளுக்கு இடமிருக்காது என்றா லும் மனதில் ஒரு குறைபாடு இருந்துகொண்டு இருக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சனேயருக்கு நெய்தீபமேற்றவும். காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

மீனம்

மீன ராசிக்கு ஏழரைச்சனி நடக்கிறது. முதல் கட்டமாக ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. சனி 12-ல் நின்று 2-ஆமிடத்தையும் 2-ல் நிற்கும் குருவையும் பார்க்கிறார். எனவே பொருளாதாரத்தில் ஓஹோவென்று இல்லாவிட்டாலும் ஓரளவு நிலை திருப்தி தரும். விரயங்கள் ஏற்படும் என்றாலும் அதை சமாளிக்கும் ஆற்றலும் உருவாகும். 2-க்குடைய செவ்வாய் 11-ல் உச்சம்பெறுகிறார். 10-க்குடைய குருவையும் பார்க்கிறார். தொழி-ல் இருந்து வந்த தடைகள் அகலும். சமூகத்திலும் உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் கூடும். 6-ஆமிடத்தை ராசிநாதன் குரு பார்ப்பதால் கடன் உருவாகும். 4-க்குடைய புதன் சூரியனுடன் சேர்க்கை. எனவே வீட்டை சீர்த்திருத்தம் செய்வது அல்லது புதிய வீடு கட்டுவதுபோன்ற செயல்கள் உருவாகும். அதற்கு கடனும் கிடைக்கும். சகோதர- சகோதரிவகையிலும் ஒத்துழைப்பு உண்டாகும். 8-ஆமிடத்தையும் 8-க்குடையவரையும் குரு பார்ப்பதால் திடீர் யோகத்திற்கும் இடமுண்டு. உத்தியோகத்தினருக்கு இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்து வேறு ஊர் சென்று வேலை பார்க்கும் அமைப்பும் ஏற்படும்.

பரிகாரம்: சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

அலைபேசி: 99440 02365