ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் - சி.எஸ். ஞானமூர்த்தி

/idhalgal/om/horoscopes-august-cs-gnanamurthy

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் மாத ஆரம்பத்தில் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். உங்கள் முயற்சிகளில் வெற்றி காணலாம். தேவையற்ற சிந்தனைகளும் வீண் கற்பனை பயமும் அகலும். சிலநேரம் தன்னம்பிக்கைக் குறைபாடு காணப்படலாம். அது ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் ஏற்படுத்தும் சந்தேகங்கள்தான். 2-க்குடைய சுக்கிரன் 3-ல் மறைந்தாலும் மாதத்தின் முதல் வாரத்தில் 4-ல் கேந்திரம் பெறுகிறார். பொருளாதாரத்தில் வரவுகள் ஒருபுறமிருந்தாலும் செலவுகளும் தாராளமாக வந்துகொண்டிருக்கும். 12-ல் குரு ஆட்சிபெறுவதோடு வக்ரமாகவும் இருக்கிறார். விரயங்களைத் தவிர்க்க முடியாது. 10-ல் ஆட்சிபெறும் சனி வக்ரகதியில் இயங்குகிறார். தொழில் முயற்சிகள், உத்தியோக வளர்ச்சிகள் தடைப்படாது.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் இருக்கிறார். 11-க்குடைய குரு 11-ல் ஆட்சி, வக்ரம். தொழில்துறையில் மேன்மை உண்டாகும். ஒருசிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் காணப்படும். 10-க்குடைய சனி 9-ல் ஆட்சி. தர்மகர்மாதிபதி யோகம். எனவே, வாழ்க்கை, தொழில் இரண்டிலும் முன்னேற்றம் தெரியும். 10-ஆம் தேதிமுதல் 12-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசி யில் மாறுகிறார். செலவுகள் சற்று கட்டுக்குள் வரும். ஜனன ஜாதகத்தில் ராகு தசை நடந்து கொண்டி ருந்தால் வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். அட்டமத்துச்சனியில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் 9-ல் சனி ஆட்சிபெற்றபிறகு படிப்படியாகக் குறைந்து வாழ்வில் நிம்மதி உண்டாகும். 6-ல் கேது- நோய்நிவர்த்தி காணலாம்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 3-ல் மறைகிறார். பொதுவாக மற்ற கிரகங்களைப்போல் புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. அட்டமத்துச்சனி ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும் 11-ஆமிடத்து ராகு காரிய வெற்றிகளைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம். குரு 10-ல் ஆட்சிபெறுவதால் தொழில் இயக்கம் பாதிக்காது. வேலையில் அவ்வப்போது சங்கடங்கள் தோன்றினாலும் அது நிரந்தர மில்லை; நன்மைகள் உண்டாகும். வீண் கற்ப

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் மாத ஆரம்பத்தில் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். உங்கள் முயற்சிகளில் வெற்றி காணலாம். தேவையற்ற சிந்தனைகளும் வீண் கற்பனை பயமும் அகலும். சிலநேரம் தன்னம்பிக்கைக் குறைபாடு காணப்படலாம். அது ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் ஏற்படுத்தும் சந்தேகங்கள்தான். 2-க்குடைய சுக்கிரன் 3-ல் மறைந்தாலும் மாதத்தின் முதல் வாரத்தில் 4-ல் கேந்திரம் பெறுகிறார். பொருளாதாரத்தில் வரவுகள் ஒருபுறமிருந்தாலும் செலவுகளும் தாராளமாக வந்துகொண்டிருக்கும். 12-ல் குரு ஆட்சிபெறுவதோடு வக்ரமாகவும் இருக்கிறார். விரயங்களைத் தவிர்க்க முடியாது. 10-ல் ஆட்சிபெறும் சனி வக்ரகதியில் இயங்குகிறார். தொழில் முயற்சிகள், உத்தியோக வளர்ச்சிகள் தடைப்படாது.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் இருக்கிறார். 11-க்குடைய குரு 11-ல் ஆட்சி, வக்ரம். தொழில்துறையில் மேன்மை உண்டாகும். ஒருசிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் காணப்படும். 10-க்குடைய சனி 9-ல் ஆட்சி. தர்மகர்மாதிபதி யோகம். எனவே, வாழ்க்கை, தொழில் இரண்டிலும் முன்னேற்றம் தெரியும். 10-ஆம் தேதிமுதல் 12-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசி யில் மாறுகிறார். செலவுகள் சற்று கட்டுக்குள் வரும். ஜனன ஜாதகத்தில் ராகு தசை நடந்து கொண்டி ருந்தால் வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். அட்டமத்துச்சனியில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் 9-ல் சனி ஆட்சிபெற்றபிறகு படிப்படியாகக் குறைந்து வாழ்வில் நிம்மதி உண்டாகும். 6-ல் கேது- நோய்நிவர்த்தி காணலாம்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 3-ல் மறைகிறார். பொதுவாக மற்ற கிரகங்களைப்போல் புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. அட்டமத்துச்சனி ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும் 11-ஆமிடத்து ராகு காரிய வெற்றிகளைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம். குரு 10-ல் ஆட்சிபெறுவதால் தொழில் இயக்கம் பாதிக்காது. வேலையில் அவ்வப்போது சங்கடங்கள் தோன்றினாலும் அது நிரந்தர மில்லை; நன்மைகள் உண்டாகும். வீண் கற்பனை பயம்தான் மனதை வாட்டும். அதற்கு இடம் தராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். 2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தாராள வரவு- செலவுகளைத் தருவார். 3-க்குடைய சூரியன் 2-ல் இருக்கிறார். சகோதர- சகோதரிகள்வழியில் சில சுபச்செலவுகள் ஏற்படலாம். 5-ஆமி டத்துக் கேது எண்ணங்களையும் திட்டங் களையும் செயல்வடிவம் பெறவைப்பார். குடியிருப்புவகையில் இடப்பெயர்ச்சி உண்டாகும்.

mm

கடகம்

கடக ராசியில் 2-க்குடைய சூரியன் சஞ்சாரம். அவருக்கு குரு பார்வை. ஜென்ம ராசியையும் பார்க்கிறார். உங்கள் திறமைகள் பளிச்சிடும். செயல்பாடுகள் வெற்றியாகும். வரவு- செலவுகள் தாராளமாக நடைபெறும். 12-க்குடைய புதன் 2-ல் இருக்கிறார். அந்நியர் பணம் உங்கள்வசம் புரளும். உங்கள் தேவைகளும் விருப்பங்களும் நிறைவேறும். புதிய முயற்சிகள் ஒப்பந்தமாகும். 4-ல் உள்ள கேது சில நேரம் தாய்வழியில் அல்லது தன் சுகத்தில் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தலாம். அதனால் அலைச்சலும் வைத்தியச் செலவும் தவிர்க்க முடியாதவையாக அமையும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகள், எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் நன்மை தரும். நீண்டநாள் இழுபறியாக இருந்த நிலைமைகளும் ஒரு முடிவுக்கு வரும். 10-ல் செவ்வாய் ஆட்சி. பூமி சம்பந்தமாக தொழில் நடத்துபவர்களுக்கு ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும்.

சிம்மம்

மாத முற்பாதிவரை சிம்ம ராசிநாதன் சூரியன் 12-ல் விரயத்தில் இருக்கிறார். எதிலும் ஒரு திருப்தியற்ற நிலை உண்டாகும். தேவையற்ற மனக்குழப்பம், வீண் விரயம் போன்றவற்றையும் சந்திக்கநேரும். 17-ஆம் தேதிமுதல் ஜென்ம ராசியில் ஆட்சி யான பிறகு செலவுகள் கட்டுக்குள் வரும். 10-ஆம் தேதிமுதல் 9-க்குடைய செவ்வாய் 10-ல் சஞ்சரிக்கிறார். அது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். அக்காலகட்டத்தில் தொழில்துறையிலும் முன்னேற்றம் தென்படும். குரு 12-ஆமிடத்தையும், 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். வரவும் செலவும் மாறிமாறி வந்துகொண்டுதான் இருக்கும். பிள்ளைகள்வகையில் நல்லவை நடக்கும். சகோதரவழியில் சங்கடங்களும் சச்சரவுகளும் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து அனுசரித்துச்செல்வது நல்லது. தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 11-க்குடைய புதன் ஜென்ம ராசியில் மாதக்கடைசியில் வக்ரமடைகி றார். வியாபாரவகையில் லாபம் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசிநாதன் புதன் 12-ல் இருக்கி றார். 2-ல் கேது. குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, மனச் சங்கடங்கள் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம் நிலவினாலும் பிரிவுக்கு இடமில்லை. குரு 7-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கி றார். எனவே, தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு வருமே தவிர பிரிவினை நேராது. 7-ஆமிடம் களஸ்திர ஸ்தானம். அதனால் ஏதோ ஒருவகையில் கணவரால் மனைவிக்கு ஆதாயம் ஏற்படும். சுயதொழில் புரிகிறவர்களுக்கு 11-ஆமிடத்தைப் பார்க்கும் குரு லாபத்தையும் அனுகூலத்தையும் தருவார். 5-ஆமிடம் எண்ணம், திட்டம், மகிழ்ச்சி, பிள்ளைகள் ஸ்தானம். அங்கு 5-க்குடைய சனி ஆட்சிபெற்று புத்திரகாரகன் குருவைப் பார்ப்பது ஒருவகையில் பலம்தான். பொதுவாக குரு, சனி சண்டாள யோகம் எனப்பட்டாலும், இருவரும் ஆட்சி பெற்று குருவை சனி பார்ப்பதால் பிள்ளைகள் வகையில் நன்மைகள் உண்டாகும்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் கேந்திர பலம்பெறுகிறார். அவரை 6-க்குடைய குரு பார்க்கிறார். எனவே, குரு, சுக்கிரன் பார்வை அனுகூலத்தைத் தரும். தொழிலில் இருந்துவந்த காரிய தாமதம், இழுபறி நிலை மாறும். 6-ல் ஆட்சிபெறும் குரு எதிரி, கடன், போட்டி, பொறாமை போன்றவற்றை ஏற்படுத்தினாலும் குரு நின்ற இடத்தைவிட பார்க்கும் இடத்துக்கே பலன் அதிகம். ஆகையால்தான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உண்டு. 4-ல் சனி ஆட்சிபெற்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். துலா ராசிக்கு சனி ராஜயோகாதிபதி. எனவே, எதையும் தைரியத்துடனும் தன்னம் பிக்கையுடனும் எதிர்கொள்ளலாம். அதேநேரம் தயக்கத்தையும் முயற்சியற்ற நிலையையும் மாற்றி காரியத்தை கையாளும் திறனை வளர்ப்பது மிக அவசியமான ஒன்றா கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ஆம் தேதிமுதல் 7-ல் கேந்திரம் பெறுகிறார். ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது ஒரு பலம்தான். அத்துடன் குருவும் 5-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்க்கிறார். இத்தனை ப்ளஸ் பாயின்ட்டுகள் இருந்தும் நல்லது நடக்கவில்லையே என்ற கேள்வியும் சந்தேகமும் அநேக விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்படலாம். எல்லா செயல்பாட்டிலும் கிணற்றில் போட்ட கல் போன்ற நிலையே இருக்கிறதே என்ற ஆதங்கம் உண்டாகலாம். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்திகள் நடந்தால் முயற்சியில் தோல்வியும் இழுபறி நிலையும் ஏற்படலாம். சாதகமான தசாபுக்தி நிலவினால் வெற்றி உண்டாகும். 3-ஆமிடத்து சனி துணிச்சலை வரவழைத்து எதிர்கொள்ளும் தன்மையைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

தனுசு

தனுசு ராசிக்கு 4-ல் குரு ஆட்சி. 2-ல் சனி ஆட்சி. 5-ல் செவ்வாய் ஆட்சி. என்றாலும் ஏழரைச்சனி நடந்துகொண்டிருப்பதால் தேக சுகக்குறைவு, வீண் கற்பனைக் கவலை, தன்பயம் எல்லாம் ஒருபுறம் வாட்டி வதைக்கிறது! 2023 டிசம்பரில் ஏழரைச்சனி முடியும். 9-க்குடைய சூரியன் 8-ல் மறைவு. தந்தைவழியில் வரவேண்டிய பங்கு பாகங்கள் இழுபறி. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றமுடியாமல் சங்கடங்களை சந்தித்தல் ஆகிய பலன்கள் நடந்துகொண்டிருக்கிறது. 4-ஆமிடத்து குரு வீடு, வாகனவகையில் நற்பலன்களைத் தருவார். எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவ தில் கால தாமதமானாலும் இறுதியில் சாதக மான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அவ்வப்போது பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்தாலும், 10-ஆமிடத்தை குரு பார்ப்பதால் சங்கடங்கள் விலகும்; சுமூகமான தீர்வுகள் ஏற்படும்.

மகரம்

மகர ராசிநாதன் சனி ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கிறது. இதில் சந்திர தசையோ அல்லது சந்திர புக்தியோ நடந்தால் பிரச்சினைகளும் சிக்கல்களும் சிரமங் களும் ஏற்படலாம். இழப்பு, ஏமாற்றம், விரயம் ஆகியவற்றைச் சந்திக்க நேரலாம். சாதகமான தசாபுக்திகள்- 1, 5, 9 சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடைபெற்றால் பாதகம் ஏற்படாது. என்றாலும் ஏழரைச்சனி நடப்பதால் முற்கூறில் சந்தோஷத்தை சந்தித்தவர்கள் பிற்கூறில் பாதிப்புகளை சந்திக்கநேரும். பொதுவாக சனி நல்லவர். அவரவர் கர்மவினைக்கேற்ப நற்பலனையும் துர்ப்பலனையும் தரவல்லவர். 4-ஆமிடத்திலுள்ள ராகுவால், நீண்டநாள் விற்பனையாகாமல் இருந்த மனை அல்லது வீடு போன்றவற்றை விற்பதன்மூலம் ஆதாயம் ஏற்படும். உத்தியோகரீதியாக உயர்வும் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்கு 2-ல் குரு ஆட்சி. 12-ல் சனி ஆட்சி. பொருளாதாரத்தில் பிரச்சினைக்கு இடமில்லை. தாராள வரவு- செலவுகள் நிலவும். ஆடம்பரத் தேவைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளும் நிறைவேறும். என்றாலும் சேமிப்புக்கு இடமிருக்காது. வீண்விரயங்களும் அவ்வப்போது இருந்து கொண்டிருக்கும். 3-ஆமிடத்து ராகு உடன்பிறப்புகளுக்கு நற்பலன்களைத் தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். குடியிருப்புவகையில் சிலர் இடப்பெயர்ச்சி செய்யலாம். சிலர் சொந்த வீடுகட்டிக் குடியேறலாம். 9-ல் கேது- அவரை ராசிநாதன் சனி பார்க்கிறார். தகப்பனார் அல்லது தகப்பனார் வர்க்கத்தினருக்கு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். சூரியன் 6-ல் மறைவதும் அதற்கொரு காரணமாகும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையில் குறைவு ஏற்படாது.

மீனம்

மீன ராசிநாதன் குரு ஆட்சி, வக்ரம். 2-ல் ராகு. ஒருசிலர் குடும்பத்தைவிட்டு விலகியிருக்கவேண்டிய சூழல், ஒருசிலர் கடன் ஏற்பட்டு பதுங்கி இருக்கவேண்டிய நிலை போன்றவற்றை சந்திக்கும் நிலை. 5-ஆமிடத்தை குரு பார்ப்பதால் ஒருசிலருக்கு பிள்ளைகளால் நன்மையும் அனுகூலமும் ஏற்படும். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசாபுக்திகள் நடைபெற்றால் மேற்கூறிய கெட்டபலன்களை சந்திக்கநேரும். சாதகமான தசாபுக்திகள் நடந்தால் அவற்றிலிருந்து தப்பிக்கலாம். திருமண வயதை ஒட்டிய ஆண்- பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். 2, 9-க்குடைய செவ்வாய் 3-ல் மறைந்தாலும் 9-ஆமிடத்தை குரு பார்ப்பதால் பூர்வபுண்ணியம் பலமாக இருந்தால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனமாதிரி கண்டங்களிலிருந்து தப்பிக்கலாம். இறை பிரார்த்தனையை நிறைவேற்ற முயற்சிக்கவும்.

om010822
இதையும் படியுங்கள்
Subscribe