1. தினமும் காலையும் மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினமும் காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை: கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல மலர்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

hh

Advertisment

3. நம் வீட்டின் கிழக் குப் பக்கம் துளசிச்செடி, வேப்பமரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜையறை என்று தனியாக இருந்தால், அங்கு தேவையில்லாத உடைந்த பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். இது இறைசக்தியைக் குறைக் கும். அங்கு ஆன்மிக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த- பூஜைக்கான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகன் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டிவைத்தால், அது வீட்டிலுள்ள வாஸ்துக் குறைபாடுகளை சிறிதுசிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் பூஜையறையை தண்ணீர் ஊற்றிக் கழுவவேண்டும். மார்பிள், கிரானைட் தரையாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்கவேண்டும்.

hh

Advertisment

அமாவாசை, பௌர்ணமி, வருடப்பிறப்பு போன்ற நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்யவேண்டும்.

7. நமது வலது உள்ளங் கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்த வுடன் வலது உள்ளங்கை யைப் பார்க்கவேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, ஜென்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.

10. பொதுவாக நெற்றிக்குத் திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையைச் சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணிப் பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்குமிடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனையில்லாத பூக்களை சூட்டக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்கவேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

hh

15. வீட்டுப் பூஜையில் கற்பூரதீபம் தானே குளிர்ந்துவிடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நான்கரை மணிமுதல் ஆறு மணிக்குள்ளும், மாலை ஐந்தரை மணிமுதல் ஆறு மணிக்குள்ளும் தீபமேற்றுவதால் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜையறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்தும் கலந்து, 48 நாட்கள் விளக்கேற்றிப் பூஜை செய்தால் தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கிலிருந்து கற்பூரத்தையோ ஊது வத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும்போது மற்றவர்கள் ஏற்றிவைத்த விளக்கின்மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாகதான் விளக்கேற்ற வேண்டும்.

20. "ஓம்' என்னும் மந்திரத்தை, பூஜையறையில் பத்மாசனத் தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால், அவரை எப்பேற்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜையறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தைச் சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக்கூடாது.

23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும் போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடிதான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக்கொண்டிருக்கும் போது காலை- மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்தபிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்துப் பூசக்கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்துப் பூசலாம்.

27. பூஜையறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

hh

28. பூஜையறையில் தெய்வப் படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், குடுமியை முடியாமலும், தலையிலும் தோளிலும் துணியைப் போட்டுக் கொண்டோ, கட்டிக்கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால், ஈர உடையை, "ஓம் அஸ்த்ராய பட்' என்று ஏழு முறை கூறி உதறி உடுத்தலாம்.

32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்கவேண்டும். அவ்வாறு கேட்கமுடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதல்ல எனப்படுகிறது.

33. பகவானின் மந்திரத்தைச் சொல்லி பிரார்த்திக்கத் தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்த வுடன் நாராயணனையும், இரவு தூங்கும்முன் சிவபெருமானையும் நினைக்கவேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபமேற்றுவதுதான். தீபவொளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந் திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபமேற்றி வைக்கலாம்.

35. தீபத்திலுள்ள எண்ணெய்தான் எரியவேண்டுமே தவிர திரியல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின்வாசல் இருந்தால் அதன் கதவை சாற்றிவிட வேண்டும்.

37. காலையில் நின்றுகொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்துகொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்துகொண்டிருக்கும்போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியைத் தூண்டுவதோ கூடாது.

39. எரிந்துகொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக்கூடாது.

41. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் வத்தியை செருகி வைக்கக்கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மாவிலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மாவிலைத் தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்துவிளக்குளில் மின் ஒயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடிவரும் தெளிந்த ஆறு போன்றது. யாரொருவர் அதில் தன்னை சுத்தி செய்துகொள்கிறாரோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

48. "வீட்டில் பூஜைசெய்து முடித்ததும் துளசியைக் கையில் வைத்துக்கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப் பின்தொடர்ந்து செல்வேன்' என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும்வரை விஷ்ணுவின் துணை அவருக்குண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்கவேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை, அனைத்துவகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், சமித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக்கூடாது. தட்டுபோன்ற பொருட்களின்மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்துசேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல்நாள் போட்டு வாடிய புஷ்பங்களைக் குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக்கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விடவேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெண்ணெய் உருக்கக்கூடாது. காரணம், மேற்படி கிழமைகள் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும், வெண்ணெய்யில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணெய் உருக்கக்கூடாது என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பியபிறகு பூஜை முதலியவற்றை செய்யக்கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டு தினமும் படிக்கவேண்டும். வாய்விட்டுப் படிப்ப தால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு அணியாது, குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும்.

57. பெண்கள் நெற்றி வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்கவேண்டும். மகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில் தான் நிரந்தர வாசம் செய்வதால், சுமங்கலிகளுக்கு சகல சௌபாக் கியங்களையும் மங்களத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்துவிளக்கிற்கு குங்குமம், சந்தனப் பொட்டிட்டு, பூ சாற்றி, குங்குமம், புஷ்பம், மஞ்சள், அட்சதையால் குத்துவிளக்குப் பூஜைசெய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச்சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியை தரிசிப்பதால் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்கவேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.

60. பூஜையறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்கவேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக்கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்ணிக்கையில்தான் வைக்கவேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில், எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்கவேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பைக் கிள்ளிவிட்டு வெற்றிலையைக் கழுவியபின் பூஜைக்கு வைக்கவேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகமானது சுவாமிக்கு இடப்புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப்பகுதி சுவாமிக்கு வலப்புறம் இருக்கும்.

63. சுவாமிக்குப் படைக்கும்போது வாழையிலை போட்டுப் படைக்கிறோம். அப்படி இலை போடும்போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலப்பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கேற்று வதற்கு முன் தான தர்மம் செய்வதென் றால் செய்துவிடுங்கள். விளக்கேற்றிய பின் தான தர்மம் செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் சுலோகங்களையும், நமது நீதி நூல்களிலுள்ள நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுத்தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சுப் போட்டுக்கொள்ள வேண்டும். தலையை விரித்துப் போட்டிருந்தால் லட்சுமிதேவி தங்கமாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்துவிடக் கூடாது. முகமும் பாதங்களும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வேங்கடாசலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்திருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜையறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்குநோக்கி வைக்கவேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்கு திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்குநோக்கி தெய்வப் படங்களை வைக்கக்கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால், தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்துப் படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்த வண்ணம் அமர்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜையறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக, அவற்றை நெருக்கமாக வைக்கக்கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம்விட்டு வைக்கவேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலைவைத்து, அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்குத் திரியைக் கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்குச் செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கிலுள்ள எண்ணெய் அல்லது நெய்யைக் கையால் தொடுவதும், அதன்பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

77. சுவாமி படங்களில் உலர்ந்த பூக்களை அப்படியே விட்டுவைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது, லட்சுமிதேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலி-ருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீசக்கரம், ஓம் மற்றும் திரிசூல சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டிவைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக்கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் அளிக்க வல்லது.